இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

பறவையைக் கண்டு விமானம் படைத்த முதல் மனிதர்!


 'பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்' என்பது பாடலாக இருந்தாலும் உண்மை என்னவோ அதுதான். மனிதனுக்கு தானும் வானில் பறக்கவேண்டும் என்ற ஆசை இயல்பாகவே எழுவதுதானே! புராணங்களில் மனிதர்கள் வானில் பறந்து புரிந்த சாகசங்களின் கதைகளுக்கு பஞ்சமில்லை. ஆனால் நிஜ உலகில் மனிதன் வானில் பறப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதை அறிவோம்.  அப்படிப்பட்ட ஒரு முயற்சியை ஒருவர் மேற்கொள்வது என்பது - அதுவும் ஒன்பதாம் நூற்றாண்டில் – எவ்வளவு சவால் நிறைந்த ஒன்றாக இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

ரைட் சகோதரர்களால் மோட்டார் பொருத்தப்பட்ட விமானம் உருவாக்கப்படுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காற்றை விட கனமான இயந்திர விமானத்தை 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பலதுறை அறிஞரும் பொறியிலாளரும் ஆன ஒருவர் செய்யத் துணிந்தார் என்பது ஆச்சரியமான செய்தி அல்லவா?

உலகத்திலேயே முதன் முதலில் விமானத்தின் மூலம் பறந்த மனிதர் என்று வரும்போது அது அப்பாஸ் இப்ன் ஃபிர்னாஸ்தான்!  இந்த 9 ஆம் நூற்றாண்டின் பொறியாளர்தான் மரம், பட்டு, பறவை இறகுகள் இவற்றால் கட்டமைக்கப்பட்ட இறக்கைகளாகக் கொண்ட வானுர்தியை வடிவமைத்து பறந்து காட்டிய முதல் மனிதர். ஆனால் இந்த உண்மை பிற்கால ஐரோப்பிய காலனி ஆதிக்கவாதிகளால் மறைக்கப்பட்டது.

அப்பாஸ் இப்னு ஃபிர்னாஸ் கி.பி 810 ஆம் ஆண்டு ஸ்பெயினில் பிறந்துள்ளார்.

சிறு வயதிலேயே விஞ்ஞானத் துறையில் ஆர்வமுடன் செயல்பட்ட இப்னு ஃபிர்னாஸ் தனது 42 ஆவது வயதில் உலகின் முதல் விமான வடிவை ஒத்த சிறகை வடிவமைத்து முடித்தார்.

பின்னர் கார்டோபா நகரில் உள்ள ஒரு பெரிய மசூதியின் உச்சியில் இருந்து தான் வடிவமத்த விமான கருவியோடு குதித்து பறக்க முயற்சித்துள்ளார்.

ஆனால் அவரின் இந்த முதல் முயற்ச்சி தோல்வியில் முடிந்தது. அந்த விமானம் பறப்பதற்கு ஏதுவாக இல்லாததால் விமானத்தோடு இப்னு ஃபிர்னாஸ் கீழே விழுந்து சில காயங்களோடு உயிர் தப்பினார்.

ஆனாலும் தனது முயற்சியை இடைவிடாது தொடர்ந்துள்ளார் இப்னு ஃபிர்னாஸ்.

முதல் விமானம் தோல்வியடைந்ததற்கான காரணத்தை கண்டுபிடித்தார்.

பின்னர் அக்காரணங்களையெல்லாம் சரி செய்து தனது இரண்டாவது விமானத்த தயார் செய்ய ஆரம்பித்தார்.

பறவைகளைப் போல வால் மற்றும் இறக்கைகளுக்கு இடையிலான முறையான ஒத்துழைப்பு இருந்தால்தான்  மெதுவான  தரையிறக்கம் (smooth landing) சாத்தியம் என்பதை அவர் உணர்ந்தார்.  
இந்த முறை மரக்கட்டைகளுடன் "சில்க்" துணியையும், கழுகின் "இறகுகளையும்" இணைத்து விமானத்தை வடிவமைத்து முடித்தார்.


கி.பி. 875 ஆம் ஆண்டு. ஜபல் - ல் - அருஸ் மலை மேல் ஏறி தனது விமானத்தோடு நின்றார். அவரது இந்த முயற்சியைக் காண மிகப்பெரிய மக்கள் கூட்டம் குழுமியிருந்தது. காரணம் அன்றைய தினம் ஒருவர் வானில் பறப்பதை அனைவரும் அதிசயமாக காண வந்தனர்.

இப்னு ஃபிர்னாஸ் தனது விமானத்தோடு பறப்பதற்கு தயாரானார்.

"
எல்லாம் நலமாகவே உள்ளது. நான் எனது விமானத்தின் இறக்கைகளை பறவைகளைப் போலவே மேலும் கீழுமாக அடிக்கிறேன். நான் இப்போது என்னை ஒரு பறவையாகவே உணருகிறேன். வானில் பறந்து விட்டு பத்திரமாக உங்களிடம் திரும்ப வருகிறேன்" என்று கூறிவிட்டு தனது விமானத்தோடு மலையில் இருந்து கீழே குதித்தார்.

வெற்றிகரமாக பறக்க ஆறம்பித்தார். அவர் வானில் பறந்ததை கண்ட அந்த மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.

நீண்ட நேரம் பறந்து தனது கனவை நிறைவேற்றிக் கொண்ட இப்னு ஃபிர்னாஸ் தரையிறங்க முயற்சிக்கும் போது அவரது விமானம் விபத்துக்குள்ளானது. வேகமாக வந்து தரையில் மோதியதால் அவரது முதுகுத்தண்டு உடைந்தது.

முதுகு தண்டு உடைந்ததால் இனி அவரால் வானில் பறக்க முடியாத ஒரு சுழல் உருவாகியது. ஆனால் அவர் சோர்ந்து விடவில்லை.

வெற்றிகரமாக பறந்து விட்டு தரையில் இறங்கும் போது விபத்து ஏற்படுவதை தவிற்க என்ன வழி என்று சிந்தித்தார்.

"
பறவைகள் வானத்தில் பறக்கும் போதும், தரையிறங்கும் போதும் தனது வால் பகுதியைக் கொண்டு தன்னை கட்டுப்படுத்தி கொள்வதை கண்டு பிடித்தார்."

ஆதலால் விமானத்திற்கு வால் பகுதி அவசியமான ஒன்று. அதை கொண்டே விமானத்தின் இயங்குதல் தீர்மானிக்க படுகிறது என்பதை கூறி அதை ஒரு புத்தகமாகவும் எழுதி எதிர் காலத் தலைமுறையினருக்கு விட்டுச் சென்றுள்ளார்.

விமான வடிவமைப்பிற்கான அவரின் அந்த புத்தகம் பின் வந்த பல விஞ்ஞானிகளுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தது. டா வின்சிக்கு உட்பட.

பறவைகளைப் பிரதிபலிக்கும் - அதாவது பறவைகள் போல சிறகடித்துப் பறக்கும் - விமானமான ஆர்னிதோப்டரை (ornithopter) உருவாக்கும் கோட்பாட்டிற்கு சொந்தக்காரர் ஃபிர்னாஸ்தான். அவரது பறக்கும் இயந்திர வரைபடங்கள் (flying machine diagrams) 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விமானப் பொறியியலின் (aviation engineering)  திருப்பு முனைகளாக மாறியது.

விமானத்தின் முதல் வடிவமைப்பாளரான இப்னு ஃபிர்னாஸ் தனது 77 ஆவது வயதில் கி.பி. 887 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.

அப்பாஸ் இப்னு ஃபிர்னாஸ் விமான வடிவமைப்பில் மட்டுமில்லாத பவேறு துறைகளில் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

மருத்துவத்துறை, தற்காப்பு, எழுத்தாற்றல் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியுள்ளார் அப்பாஸ் இப்னு ஃபிர்னாஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக