இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 25 ஜூலை, 2024

உறவுகளைப் பேணுதல் என்ற வழிபாடு


இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் இறைவனின் பொருத்தம் கருதி உண்டாகும் அனைத்து நல்லெண்ணங்களும் செய்யப்படும் நற்செயல்களும் வழிபாடாகவே கருதப்படும். அவை அனைத்துமே புண்ணியங்களாக கணக்கிடப்படும். இவை எவையுமே வீண்போவதில்லை. இவை அனைத்தும் இறைவனிடம் பதிவு செய்யப்பட்டு இறுதித்தீர்ப்பு நாளன்று இவற்றுக்கான நற்கூலியை நமக்குப் பெற்றுத்தரும்.
  

எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவர் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவர் கண்டு கொள்வார். (திருக்குர்ஆன் 99:7,8) 

அந்த வகையில் இறைவனின் கட்டளைப்படி நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் வழிபாடு ஆகிறது. ஆக இந்த  இறைமார்க்கம்  வலியுறுத்தும் சமூக உறவு சம்பந்தப்பட்ட வழிபாடுகளில்  குடும்ப உறவைப் பேணுவது மிக முக்கியமானதாகும்.

சுயநல தனிநபர் கலாச்சாரம்

முக்கியமாக இன்றைய நவீன  கலாச்சாரத்தின் மத்தியில் ஆணும் பெண்ணும் போட்டிபோட்டுக் கொண்டு செல்வம் திரட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளதால் நெருங்கிய உறவுகளுக்குக்கூட  அறவே மதிப்பும் இல்லை மரியாதையும் இல்லை. அதற்கு நேரமும் இல்லை. ஒவ்வொருவரும் உறவுகளைப் புறக்கணித்துவிட்டு தனிக்கட்டைகளாக வாழ்ந்து வருவதை நாம் காணமுடிகிறது. உணவும் பாலியல் தேவைகளும் தன்னிச்சையாக நிறைவேற்றுதல்...  திருமணம் அல்லது பிள்ளைப்பேறு இவற்றில் அறவே நாட்டமின்மை...  இந்நிலை தொடருமானால் இன்றைய இளைஞர்கள் நாளை முதியவர்களாகும்போதும் நோய்வாய்ப்ப்படும்போதும் இதே தனிக்கட்டைகளாய் ஐசியுவில் இருக்கும் போதும் துணைக்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்ற விழிப்புணர்வும் இவர்களுக்கு இல்லை.

இதை ஒருகால் பேஸ்புக்கிலோ வாட்சாப்பிலோ இன்ஸ்டாவிலோ படித்தால் கூட லைக் போட்டுவிட்டு இவர்கள் கடந்து போய் விடுவார்கள். அப்படி மாறியுள்ளது நவீன கலாச்சாரம்!

சம்பந்தப்பட்டவர்கள் விழிப்புணர்வு பெறுகிறார்களோ இல்லையோ, சமூகத்தை விழிப்புணர்வு ஊட்டி சீர்திருத்த வேண்டியது நம் கடமை. எனவே கவனியுங்கள்...

உறுதிமிக்க சமூக உருவாக்கம் எனும் இலட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் இன்றியமையாததாகும். நட்பும் ஏனைய உறவுகளும், நாமாகத் தேர்வு செய்பவையாகும். இரத்த உறவு இறைவனின் தேர்வாகும். இந்தத் தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நமது கடமையாகும்.

இறைநம்பிக்கையின் அம்சம் :

 “யார் இறைவனையும்மறுமை நாளையும்நம்பிக்கை  கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) நூல்: புகாரிமுஸ்லிம்

(அல்லாஹ் என்றால் வணங்குவதற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)

படைத்தவனோடு தொடர்பு :

இரத்த உறவு என்பது இறைவனின் தெரிவு என்பதால் இந்தத் தெரிவை ஏற்று மதிப்பதன் மூலமாக நமக்கு அவனுடன் தொடர்பு உண்டாகின்றது.

இறைவன்  இரத்த உறவைப் பார்த்து “யார் உன்னைச் சேர்ந்து நடக்கிறானோ நான் அவனைச் சேர்த்துக் கொள்வேன். யார் உறவைத் துண்டித்துக் கொள்கின்றானோ நான் அவனுடன் தொடர்பைத் துண்டித்து விடுவேன்” என்று கூறினான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி

சுவனத்தில் நுழைவிக்கும்:

இரத்த உறவுகளுடன் இங்கிதமாகவும்இதமாகவும் நடந்து கொள்வதும் சுவனத்தில் நுழைவிக்கத்தக்க சிறந்த செயல்பாடாகப் போற்றப்படுகின்றது.

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “இறைவனின் தூதரே! என்னைச் சுவனத்தில் நுழைவித்து நரகத்தை விட்டும் தூரமாக்கக் கூடிய ஒரு செயலை எனக்குச் சொல்லித் தாருங்கள் என்றார் அதற்கு நபி(ஸல்) அவர்கள், “நீ அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணைவைத்து விடாதே! தொழுகையை நிலை நிறுத்துஜகாத்தும் கொடுத்துவாகுடும்ப உறவைப் பேணிக்கொள்” என்றார்கள்.

 அறிவிப்பவர் : ஹாலித் இப்னு ஸைத் அல் அன்ஸாரி(ரலி)

ஆதாரம் : புகாரிமுஸ்லிம்

இரண விஸ்தீரனம் :

இரத்த உறவைப் பேணுவதால்மறுமைப் பேறுகள் மட்டுமன்றி இம்மையிலும் இனிய பயன்களுள்ளதாக இஸ்லாம் கூறுகின்றது.

யார் தனக்கு வாழ்வாதாரங்களில் விஸ்தீரணத்தையும் நீண்ட ஆயுளையும் விரும்புகின்றாரோ அவர் தன் இரத்த உறவைப் பேணிக்கொள்ளட்டும்.

அறிவிப்பவர் : அனஸ்(ரலி) நூல் : புகாரிமுஸ்லிம்

 வெட்டுபவரோடும் ஒட்டி வாழ வேண்டும்

 தன்னுடன் இணைந்து இருப்போருடன் சேர்ந்து நடப்பவன் இரத்த உறவைப் பேணுபவனல்ல. உண்மையில் தன்னுடன் உறவைத் துண்டித்தாலும் உறவு பேணுபவனே இரத்த உறவைச் சேர்ந்து நடப்பவனாவான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ்(ரலி),

ஆதாரம் : புகாரி

இதே நிலையை ஒரு தோழர் நபி(ஸல்) அவர்களிடம் இவ்வாறு முறையிட்டார்.

 “எனக்கு சில உறவினர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் ஒட்டி நடந்தால் அவர்கள் வெட்டிச் செல்கின்றனர். நான் அவர்களுக்கு நன்மை செய்கின்றேன். அவர்களோ எனக்குத் தீமை செய்கின்றனர். நான் அவர்களுடன் கருணையுடன் நடந்து கொள்கின்றேன். அவர்கள் என்னுடன் கடுமையாக நடந்து கொள்கின்றனர் என்றார். அதற்கு நபியவாகள்நீ கூறுவது போல் நீ நடந்து கொண்டால் அல்லாஹ்விடமிருந்து ஒரு உதவியாளர் உனக்கு நியமிக்கப்பட்டிருப்பார்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல் : முஸ்லிம்

-------------------------- 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

நாம் ஏன் பிறந்தோம்?

புதன், 10 ஜூலை, 2024

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூலை 24 இதழ்

 


திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூலை 24 இதழ் 

பொருளடக்கம்:

மனித வாழ்வை பயனுள்ளதாக ஆக்கும் நூல்! - 2

சபரிமாலா இஸ்லாத்திற்கு மாறியது ஏன்? -5

மதுவிலிருந்து மக்களைக் காக்கும் இஸ்லாம்! -7

ஹாஜிகளை இறைவன் கைவிட்டு விட்டானா? - 12

வாழ்க்கைக்குப் பின் ஏதேனும் நோக்கம் உள்ளதா? -14

மௌத்தையே நீ மறந்து வாழலாகுமா? -16

யார் குழந்தையை ஓநாய் தின்றது? -19

கிராமப்புற வளர்ச்சியை ஊக்குவிக்கும் பண்டிகை! -21

திமிங்கலம் பாலூட்டும் அற்புதம் -24

========== 

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் சந்தா செலுத்தி சந்தாதாரராக விரும்புபவர்கள் கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://tayyib-hope.in/product/30713872/Thiru-Quran-Narcheithi-Malar-1-Year-Subscription.

ஆண்டு சந்தா ரூ. 180- 


புதன், 3 ஜூலை, 2024

அரைகுறை ஆடை- பாலியல் விருந்துக்கான அழைப்பு


ஒரு ஆய்வின் முடிவு:

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த  கிளினிக்கல் மனோதத்துவ நிபுணரும் டெல்ஹாய் கல்லூரியின்  பெண்  கல்வித்துறைத் தலைவருமான அவிகைல் மூர் (Avigail Moor, Clinical psychologist and head of the Women Studies program at Tel Hai College in Israel.) 

என்பவர் “பெண்ணின் ஆடைக்கும், பாலியல்வன்முறைகளுக்கும் இடையிலான தொடர்பைக்
குறித்து ஓர் ஆய்வை நடத்தினார்.

 உடல் பாகங்கள் வெளியில் தெரியும்படி ஆடை அணியும் பெண்களைக் காணும் போது ஆண்களுக்கு உண்டாகும்
பாலியல் உணர்வு எவ்வளவு என்று கண்டுபிடிப்பதுதான் அந்த ஆய்வின் பிரதான நோக்கமாகும். அவர் ஆய்வை நடத்தி முடித்த பின்னர் மக்கள் மன்றத்தில் தம்  ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார். ஆய்வறிக்கையின் தலைப்பு: அவள் கவரவே ஆடை அணிகிறாள்.. அவன் காமத்திற்கு தூண்டப்படுகிறான்’

= ஆய்வில் பங்கெடுத்த ஆண்களில் 29.8 சதவீதம்  பேருக்கு பெண்களை அரைகுறை  ஆடைகளில்  பார்க்கும் போதெல்லாம் பாலியல் தூண்டல் உணர்வு ஏற்பட்டதாகக் கூறினர்.

= 58.1 சதவீதம் பேருக்கு பெரும்பாலான சமயங்களில் உடல் பாகங்கள்  வெளியில்  தெரியும்படி  ஆடை  அணியும் பெண்களைக்  கண்டால் பாலியல் தூண்டல் உணர்வு ஏற்பட்டதாகக் கூறினர்.  (Journal Of International Women`s Studies, Vol. II 4 May 2010) 

அதாவது, அரைகுறை ஆடைகளை  அணியும் பெண்களைக் காண்கிற 88 சதவீத  ஆண்களுக்கு  பாலியல் தூண்டல் (காம உணர்வு) உணர்வு  ஏற்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.

( தகவல்: https://vc.bridgew.edu/jiws/vol11/iss4/8 )

 பெண்கள் தங்கள் உடலின் மறைக்கப் பட வேண்டிய  பாகங்களை அந்நிய ஆண்களுக்கு காட்சிப் பொருளாக  வைக்கும்போது பொது  இடங்களில் பாலுணர்வு தூண்டப்படுகிறது என்பது எந்த ஒரு ஆய்வும் தேவை இல்லாமலேயே அனைவரும் அறிந்த உறுதியான உண்மை இது. 

இச்செயல்  சமூகத்தில் பல சீர்கேடுகள் நிகழ இச்செயல் ஏதுவாகின்றதுதேசிய குற்றவியல் ஆவணக்காப்பக (NRCB) அறிக்கைப்படி நாட்டில் நாளொன்றுக்கு 90 பெண்கள் கற்பழிக்கப்படுவதாக இந்திய காவல் நிலையங்களில் பதிவாகின்றன. (பதிவாகாதவை இன்னும் ஆறு மடங்கு என்கிறது இன்னொரு புள்ளிவிவரம்.  இந்தக் கற்பழிப்பு மட்டுமல்லாமல் காதல்கள்ளக்காதல் விபச்சாரம்,   அநியாயமாக அந்நியனின் கற்பம் சுமத்தல் பெற்று வளர்த்தவர்களுக்கு  நன்றிகேடு,  குடும்பத்தில் டென்ஷன், கருக்கொலைசிசுக்கொலை, கொலைதற்கொலைகுடும்ப அங்கத்தினர்  மத்தியில்  கலகம் போன்ற பலதும்  இதைத்  தொடருகின்றன.

இவ்வளவுக்கும் காரணமாகும் இந்த பாவச் செயல் முற்போக்குத்தனம் என்ற போர்வையில் எவ்வளவு முரட்டுத்தனமாக முன்னேறுகிறது பாருங்கள். பெரும்பான்மையினர் செய்கிறார்கள் என்பதற்காக கண்டிக்கப்படுவதேயில்லை! என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள். 

 விருந்துக்கான அழைப்பு 

பெண்களின்  ஆடைகளில் அமைந்துள்ள ஜன்னல்கள் அவை சிறிதாயினும் சரி பெரிதாயினும் சரி அவை அந்தப் பெண்களின் உடல் அழகை அந்நிய ஆண்களின் கண்களுக்கு விருந்தாகப் படைக்கின்றன. ஆண்களின் கழுகுக் கண்களை அந்த ஜன்னல்கள் கவரும்போது அவர்களில் சிலர் அதை ஒரு விருந்துக்கான அழைப்பாக எடுத்துக் கொள்கின்றனர். இனிப்புக் கடைகளில் வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக அவை ஷோ கேஸ்களில் கவர்ச்சிகரமான வெளிச்சம் போட்டு வைக்கப் படுவதுபோல் பெண்களின் அங்க அழகு அவர்களை ஈர்ப்பதற்காகப் பிரதர்சனம் செய்யப்படுகிறது என்பதாக அவர்கள் உணர்கிறார்கள். இந்த விருந்து அழைப்பு விபரீதமாக மாறுவதை நாம் அன்றாடம் கண்டு வருகிறோம். கடந்த இதழ்களில் கொடுக்கப்பட்ட தகவல்களின் படி நாளொன்றுக்கு  600 கற்பழிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதை அறிந்தோம்.

 இந்த விபரீதத்தைத் தடுக்கவே இஸ்லாம் ஹிஜாப் எனும் ஆடை ஒழுக்கத்தை கற்பிக்கிறது. இதைப் புரிந்து கொள்ளாத சமூகம் ‘இஸ்லாம் பெண்ணடிமைத்தனத்தை போதிக்கிறது’ என்ற தவறான விமர்சனத்தை முன்வைக்கிறது.

=================== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?

செவ்வாய், 18 ஜூன், 2024

சிலையில்லாமலே நினைவு கூரப்படும் மகான்

 

வீணடிக்கப்படும் வரிப்பணம்

தங்கள் வாழ்நாளில் செய்த சில சாதனைகளுக்காக சிலை வைத்து நினைவு கூரப்படுகிறார்கள் சிலர். இந்திய மாகாணங்களை இணைத்தார் என்றும் சொல்லப்படும் சர்தார் வல்லபபாய் பட்டேல் அவர்களுக்காக சமீபத்தில் வைக்கப்பட்ட சிலைக்கு சுமார் 9000 கோடி மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டதை நாம் அறிவோம். நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்காக – நாட்டில் ஏழை மக்களின் நலனுக்காக- நலிந்தவர்களின் மருத்துவ வசதிக்காக – தொழில், வேலைவாய்ப்பு போன்றவற்றை உருவாக்குவதற்காக – மக்கள் பிரதிநிதிகளிடம் நம்பி ஒப்படைக்கப்படும் பணம் மக்களின் வரிப்பணம். தொடர்ந்து தங்களால் போற்றப்படும் சில புண்ணிய புருஷர்களுக்காக பலகோடி செலவில் மேலும் சிலைகள் உருவாக்கப்படும் என்றும் அரசாள்வோர் முன்னறிவிப்பு செய்திருப்பதையும் நாமறிவோம்.

இவற்றுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் எதிர் கட்சியினரும் சிலை வைப்பில் சளைத்தவர்கள் அல்ல என்பதை அவர்களின் சரித்திரம் நமக்கு எடுத்துரைக்கிறது. சிலைவணக்கத்தை எதிர்த்த பகுத்தறிவுத் தலைவர்களுக்குக் கூட அவர்களின் தொண்டர்கள் சிலைகளை ஏற்படுத்தி அதற்கு மாலையிட்டு மரியாதை செய்து கொள்வதை நவீன உலகில் கூட நாம் கண்டு வருகிறோம். கல்லுக்கு மரியாதை கூடாது என்றவர்களே கல்லுக்கு மாலை இட்டு மரியாதை வழங்கும் அவலம் தொடர்வதை நாம் காண்கிறோம். இச்செயல் பகுத்தறிவுக்கு எதிரானது என்று தெரிந்தும் அவர்களில் யாரும் இதைக் கண்டிப்பதையும் நம்மால் காண முடிவதில்லை!
உருவச்சிலையில்லா உத்தமர்
இந்த வேளையில் உருவச்சிலையோ அல்லது படமோ எதுவுமே இல்லாமல் உலகெங்கும் மக்களால் போற்றப்படும் அந்த மகானைப் பற்றி நாம் நினைவு கூருவோம் வாருங்கள். இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி அவர்கள் ‘இவ்வுலகைப் படைத்த இறைவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்தவர் எவருமில்லை’ எனும் கொள்கை முழக்கத்தோடு தன் பொது வாழ்க்கையைத் துவங்கினார்கள். அந்தக் கொள்கையை மிகமிக உறுதியாக தன்னைப் பின்பற்றும் மக்களிடையே விதைத்து பூமியில் தர்மத்தை நிலைநாட்டும் பணியை மேற்கொண்டார்கள்.
அவர் வந்து சென்ற பின் 14 நூற்றாண்டுகள் ஆகியும் இப்பூமியின் மேற்பரப்பின் மீது எங்காவது அவருடைய உருவப்படத்தையோ சிலையையோ நாம் பார்க்க முடியவில்லை. இன்று அவரை உயிருக்குயிராக நேசித்து அவரை முன்மாதிரியாக பின்பற்றுவோர் கோடிக்கணக்கில் உலகெங்கும் இருந்தும் எங்குமே அவரது உருவப்படத்தைக் காணமுடியவில்லை என்பது அவர் போதித்த ஓரிறைக் கொள்கையின் உறுதியான தாக்கத்தைக் காட்டுகிறது. படைத்தவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் என்ற அவரது கொள்கை முழக்கம் இன்றும் ஓங்கி ஒலிக்கிறது.
தடுப்பு நடவடிக்கைகள்
சிலை வழிபாடு அல்லது உருவ வழிபாடு என்பது மக்களை உண்மை இறைவனை விட்டும் திசைதிருப்பி மக்களை வழிகெடுக்கும் ஷைத்தானின் செயல் என்பதால் நபிகளார் மிகமிகக் கடினமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். தன் வாழ்நாளில் எதற்காக பாடுபட்டாரோ அந்த ஏக இறை வழிபாடு பிற்காலத்திலும் தடையின்றித் தொடர ஆவன செய்தார்கள்.
அவர் தனது மரணப் படுக்கையில் இருக்கும் போதும் மக்களை நோக்கி “மக்களே ! எனது மரணத்துக்குப் பின் எனது சமாதியை விழா நடக்கும் இடமாக மாற்றி விடாதீர்கள். ஏனெனில் முந்தைய இறைத்தூதர்கள் விஷயத்தில் மக்கள் அவ்வாறு செய்து அவர்களை கடவுள்களாக்கி விட்டது போல் என்னைக் கடவுளாக்கி விடாதீர்கள்என்று எச்சரித்தார்கள்.
இன்றும் அவரது சமாதி சவுதி அராபியாவில் மதீனா நகரில் உள்ளதை அறிவீர்கள். ஆனால் யாரும் அங்கு சென்று “நபிகள் நாயகமேஎனக்கு இதைக் கொடுங்கள் அல்லது அதைக் கொடுங்கள்” என்று பிரார்த்திப்பதை நீங்கள் பார்க்க முடியாது.
அவரது வாழ்நாளில் கூட அவருக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக காலில் விழப் போனவர்களை மட்டுமல்ல தனக்காக பிறர்  எழுந்து நிற்பதைக் கூட அவர்கள் தடை செய்தார்கள். “யாருக்கேனும் தனக்காக பிறர் எழுந்து நின்று மரியாத செய்வது சந்தோஷத்தை அளிக்குமானால் அவர் செல்லுமிடம் நரகம் என்பதை அறிந்து கொள்ளட்டும்” என்று மக்களுக்கு உபதேசித்து சுயமரியாதைக்கு இலக்கணமும் வகுத்துச் சென்றார்கள்.
--------------------------- 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

ஞாயிறு, 16 ஜூன், 2024

திருக்குர்ஆன் நற்செய்திமலர் ஜூன் 24 இதழ்


திருக்குர்ஆன் நற்செய்திமலர் ஜூன்  24 இதழ் 

பொருளடக்கம் 

பன்மை சமூகத்தில் தர்மத்தை நிலைநாட்டல் -2

அக்காட்சியில் நீங்கள்தான் கதாநாயகன்! -77

நன்றி மறந்த மலைப்பாறை வாசிகள்!-10

வாசகர் எண்ணம் -12

அவசரத் தேவை இறையச்சம் பற்றிய கல்வி -13

வாழ்க்கைப் பரீட்சையில் சோதனைகள் சகஜம்! -16

தற்கொலைக்கு தண்டனை -17

கடவுளைக் காண வேண்டுமா?-18

சமத்துவத்தை மறுத்த ஆதிக்க சக்திகள் -20

பொறுமை என்ற இறை அருட்கொடை! -23

பாதிரியாரின் சத்தியத் தேடல் -24


================ 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

திருக்குர்ஆன் நற்செய்திமலர் மே 24 இதழ்

 


திருக்குர்ஆன் நற்செய்திமலர் மே 24 இதழ்

பொருளடக்கம் :

மீண்டும் மீண்டும் ஏமாறும் நாடு!- 2

நமது நாட்டின் அடிப்படைக் குறைபாடுகள் -3

பாரதத்தைக் காக்க என்ன வழி? -7

நாம் திருந்தாமல் நாடு திருந்தாது! -10

இறையச்சமே மாற்றத்திற்கான வழி!-113

ஆள்வோரிடம்  இறையச்சம் வந்தால்..?-15

மன்னரின் வறுமை கண்டு அழுத தோழர்!-16

வறியோருக்காக வருந்திய ஜனாதிபதி ! -18

ஊதியக் குறைவு கோரிய ஜனாதிபதி!-22

வேட்பாளர் பெருமக்களின் கட்டாய கவனத்திற்கு.. -23

========= 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

உலகை மாற்றிய இறுதி உபதேசங்கள்

 

 அந்த ஹஜ்ஜின்போது பெருமானார் (ஸல்)அவர்கள் ஆற்றிய உரை உன்னதமானது. உணர்ச்சி மயமானது... இது போல சிறந்த உரையை.. சாதனை உரையை.. நிறைவேற்றப்பட்ட பிரகடனங்களின் தொகுப்பை  மிகச்சிறந்த வாழ்வியல் அறிவுரையை.. வரலாற்றில் எவரும் நிகழ்த்தியது கிடையாது. அன்று அவரது வாயில் இருந்து உதிர்ந்த முத்துக்கள் உலகெங்கும் சிதறிப் பரந்தன. மனித மனங்களைக் கொள்ளை கொண்டன. உலக வரலாற்றை மாற்றி அமைக்க எதுவாக அமைந்தன.

மற்ற தலைவர்களுக்கும் இவருக்கும் உள்ள வேறுபாடு  
= இறந்து போவதற்கு முன் வெறும் தத்துவம் பேசி மரித்தார் சாக்ரடீஸ்!
= தன் இனத்திற்கு இல்லாத பெருமையைஇருப்பதாகக் கூறி மக்களை கவர முயன்றார் ஹிட்லர்!
= தீண்டாமை ஒழியவும் ஜாதிக் கொடுமைகள் ஒழியவும் வாழ்நாள் முழுக்கப் பிரச்சாரம் செய்து அவற்றுக்கான தீர்வு காணாமலேயே மறைந்து போன பெரியார் அல்லது அம்பேத்கர் போன்ற சீர்திருத்த வாதிகளையும் நாமறிவோம்.
ஆனால் பெருமானாரின் அந்தப் பேருரை உலகெங்கும் மனித குலத்தின் மாண்பைப் போற்றுகின்ற புரட்சியை துவங்கி வைத்தது. மனித உரிமைகளை மீட்கும் உந்துகோலாக அமைந்தது.
குல வெறியும்மொழி வெறியும் கொண்ட மக்களைப் பண்படுத்தி அவர்களிடையே மனித சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பிரகடனப்படுத்தி அதை அங்கீகரிக்க செய்த சாதனை வெற்று அரசியல் பேசி கைதட்டல்கள் வாங்கி பெருமை பாராட்டும் அரசியல் தலைவர்களின் செயல் போன்றதல்ல. தொடரும் சமூகப் புரட்சிக்காக ஊன்றப்பட்ட வேர் அது.
ஒவ்வொரு அசைவிலும் தனது சமூகத்தை வழிநடத்தும் ஒரு மகத்தான தலைவரின் அன்பும்கருணையும்அக்கறையும்கவனிப்பும்கண்காணிப்பும் எச்சரிக்கை உணர்வும் பொங்கி வழிந்த உரை அது.
சமூக அமைதியை நடைமுறைப்படுத்த விழையும் எவருக்கும் இந்த உரையின் ஒவ்வொரு அம்சமும் முக்கியத்துவம் வாய்ந்தது...  பின்பற்றப்பட வேண்டியது...
இதில் முக்கிய கவனத்திற்குரியவை.
= ஒன்றே குலம்!
= ஒருவனே இறைவன்!
= அக்கிரமம் கூடாது.
= வட்டி கூடாது.
= பழிவாங்கும் வஞ்ச உணர்ச்சி வேண்டாம்.                
= பெண்மையைப் போற்றுவோம்.
= இறைவாக்கும் நபி மொழியுமே நேர்வழிக்கான அடிச்சுவடிகள்.
= உலக சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்.
= இனமொழி நிற அடிப்படையில் பேதமில்லை.
அழியாத வரலாற்று சாதனை
இது போல உன்னதமான உண்மையான இலட்சியப் பிரகடனங்களைக் கொண்ட உரையை உலக வரலாறு அதுவரையும் கேட்டதில்லை. இனி கேட்கப் போவதுமில்லை. இந்த உரை மூலம் அன்று பிறப்பிக்கப்பட்ட கட்டளைகள் இன்றளவும் உலகெங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மற்ற தலைவர்களின் உரைகளைப் போல காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்கின்றன.
நபிகளாரைப் பின்பற்றுவோரின் சிறப்பு பற்றி இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:

"அந்த அருளுக்குரியவர்கள் எத்தகையவர்களெனில்அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய இந்தத் தூதரைப் பின்பற்றுவார்கள்இவரைக் குறித்து அவர்களிடமுள்ள தவ்ராத்திலும்இன்ஜீலிலும் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். இவர் நன்மை செய்யுமாறு அவர்களை ஏவுகின்றார்தீமைகளிலிருந்து அவர்களைத் தடுக்கின்றார். மேலும்அவர்களுக்குத் தூய்மையானவற்றை அனுமதிக்கின்றார்தூய்மையில்லாதவற்றைத் தடை செய்கின்றார். மேலும்அவர்களின் மீதுள்ள சுமையை இறக்குகின்றார்அவர்களைப் பிணைத்திருந்த விலங்குகளையும் உடைத்தெறிகின்றார். எனவே எவர்கள் இந்நபி மீது நம்பிக்கை கொண்டு இவரைக் கண்ணியப்படுத்திஉதவியும் புரிகின்றார்களோமேலும் இவருடன் இறக்கியருளப்பட்ட ஒளியினைப் பின்பற்றுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாவர்." ( திருக்குர்ஆன் 7:157. 

நபிகள் நாயகம் அவர்களின் இறுதிப்பேருரை

ஹிஜ்ரி பத்தாவது ஆண்டு (கி.பி. ஏழாம் நூற்றாண்டில்) இறைத்தூதரின் வாழ்க்கை இறுதி நாள்களை நோக்கி நகர்ந்தது. இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக இறைத்தூதர்(ஸல்) மக்காவிற்கு வந்தார்கள். மக்காவின் அரஃபா மற்றும் மினா மைதானங்களில் மக்களிடையே உரை நிகழ்த்தினார்கள். மனித குலம் முழுமைக்கும் உலகின் இறுதிநாள் வரை மாற்றியமைக்க முடியாத உரிமைப் பிரகடனமாய் அவ்வுரை அமைந்தது. இதை அரஃபா உரை எனக் குறிப்பிடுகிறார்கள்.

இந்த உரை நிகழ்த்தப்பட்ட போது அதை கேட்கத் திரண்டிருந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 1,40,000. ஒலி பெருக்கி எதுவும் இல்லாத காலகட்டத்தில் அத்தனை பேருக்கும் அவ்வுரை எவ்வாறு எட்டியிருக்கும் என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள். நபிகளாரின் உரையை செவியுற்றவர்கள் அடுத்தடுத்து பின்னால் நிற்பவர்களுக்கு எட்டச் செய்தார்கள். பிற்காலங்களில் அவற்றை ஏடுகளில் பதிவு செய்தவர்கள் ஏனைய நபிமொழிகள் எவ்வாறு அறிவிப்பாளர்களின் தரம் ஆராய்ந்து பதிவு செய்தார்களோ அதேமுறையில் இந்த இறுதி உரையின் முக்கிய பாகங்களையும் பதிவு செய்தார்கள். அவற்றின் தொகுப்பை நீங்கள் கீழே வாசிக்கலாம்:

வரலாற்று சிறப்புமிக்க அரஃபா உரை:

= புகழனைத்தும் ஏக இறைவனுக்கே! அவனைப் புகழ்கிறோம்; அவனிடமே உதவி தேடுகிறோம்; அவனிடமே பாவமன்னிப்புக் கோருகிறோம். நம் மனோ இச்சைகளின் கெடுதியைவிட்டும், நம் செயல்களின் தீங்கைவிட்டும் அவனிடமே காவல் தேடுகிறோம். யாருக்கு ஏக இறைவன் நேர்வழிகாட்டியுள்ளானோ அவரை வழிகெடுப்பவர் எவருமிலர்; யாரை அவன் வழிகெடுத்துவிட்டானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் எவருமிலர். ஏக இறைவனைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை ஏதுமில்லை என நான் சாட்சியளிக்கிறேன். முஹம்மத் அவனுடைய அடியாரும் தூதருமாய் இருக்கிறார் என்றும் நான் சாட்சியளிக்கிறேன். (அல் பிதாயா - இப்னு கஸீர் 5/189)

= மக்களே! என் பேச்சைக் கவனமாகக் கேளுங்கள்! இவ்வாண்டிற்குப் பின்பு மீண்டும் உங்களை இவ்விடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது. ( இப்னு மாஜா 1892, 1893)

சமத்துவப் பிரகடனம்:

= மக்களே உங்களின் இறைவன் ஒருவனே! ஓர் அரபிக்கு அரபி அல்லாத ஒருவரை விடவோ, அரபி அல்லாத ஒருவருக்கு ஓர் அரபியை விடவோ மேன்மையோ சிறப்போ இல்லை. ஒரு வெள்ளையருக்கு ஒரு கருப்பரை விடவோ, ஒரு கருப்பருக்கு வெள்ளையரை விடவோ சிறப்பேதும் இல்லை. இறையச்சமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக ஏக இறைவனிடம் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் இறையச்சம் அதிகமாய் உள்ளவரே. (பைஹகீ)

= மக்களே ஏக இறைவனை அஞ்சுங்கள்! அடிமையான கருப்பர் ஒருவர் உங்களுக்கு தலைவராய் ஆக்கப்பட்டாலும், அவர் இறைவேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் அவருக்கு செவி சாயுங்கள்; கீழ்படியுங்கள். (நஸாயீ 4192, திர்மிதி 1706 1706)

சக உயிர்களை மதியுங்கள்:

= மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதமும், இந்த நாளும் (துல் ஹஜ் 9ஆம் நாளும்) இந்த நகரமும் (மக்கா நகரமும்) எந்த அளவிற்குப் புனிதமானவையோ அதே அளவிற்கு உங்கள் உயிர்களும், உடமையும், மானமும், மரியாதையும் உங்களுக்குப் புனிதமானவையே. (புகாரீ 1741, 1742, முஸ்லிம் 2334)

= அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பின்பு ஒருவரையொருவர் கழுத்தை வெட்டிக் கொண்டு வழிகெட்டவர்களாக இறைமறுப்பாளர்களாக மாறிவிடாதீர்கள்.

அமானிதம் பேணுங்கள்:

= உங்களின் இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (நீதியில் நிலைத்திருங்கள்). நீங்கள் அனைவரும் இறைவனின் முன்னிலையில் ஒன்று சேர்க்கப்படுவீர்கள். அப்போது உங்களின் செயல்கள் குறித்து இறைவன் விசாரிப்பான். மார்க்கத்தைத் தெளிவாக உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டேன். உங்களில் ஒருவர் பிறரின் பொருளுக்குப் பொறுப்பேற்றிருந்தால் அதன் உரிமையாளரிடம் உரிய முறையில் ஒப்படைத்து விடட்டும். (புகாரீ 4406)

பணியாட்களும் சகோதரர்களே:

= மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே! உங்களின் அடிமைகள் விஷயத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். அவர்களைச் சீராகப் பராமரியுங்கள். நீங்கள் உண்பதுபோல அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்நீங்கள் உடுத்துவது போல அவர்களுக்கும் உடுத்தக் கொடுங்கள்.

மோசடி வேண்டாம்:

= குறைஷிகளே! மறுமைக்கான தயாரிப்புடன் நாளை மக்கள் வரும்போது, உலகச் சுமைகளை உங்களின் பிடரியின் மீது சுமந்தவர்களாய் வராதீர்கள். அப்போது எந்த விஷயத்திலும் இறைவன் புறத்திலிருந்து உங்களுக்கு பாதுகாப்பு அளிப்பவனாக நான் இருக்கமாட்டேன்.

பழிக்குப்பழி மற்றும் வட்டிக்கு முற்றுப்புள்ளி:

= அறியாமைக் கால விவகாரங்கள் அனைத்தும் என்  கால்களுக்குக் கீழே புதைக்கப் பட்டுவிட்டன. அறியாமைக் காலத்தில் நிகழ்ந்த கொலைகளுக்குப் பழிவாங்குதல் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுவிட்டன. நம்மிடையே நடந்த கொலைகளில் ரபீஆ இப்னு ஹாரிஸின் மகன் கொலை செய்யப்பட்டதற்கான பழிவாங்குதலை முதலில் நான் தள்ளுபடி செய்கிறேன். - பனூ ஸஅத் குலத்தாரிடம் அவன் பால்குடிச் சிறுவனாக இருந்துவந்தான். அவனை ஹுதைல் குலத்தார் கொன்றுவிட்டனர். அறியாமைக் காலத்தில் இருந்த வட்டியும் என் பாதங்களுக்குக் கீழே புதைக்கப் படுகிறது. நம்மவர் கொடுத்திருந்த வட்டியில் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப்புக் குரிய வட்டியை முதலாவதாக நான் தள்ளுபடி செய்கிறேன். அவருக்குரிய வட்டி அனைத்தும் அசலுடன் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ( முஸ்லிம் 2334)

சொத்துரிமை மற்றும் விபச்சாரம் பற்றிய தீர்ப்புகள்:

= மக்களே! சொத்தில் ஒவ்வொருவருக்கும் அவரவரின் உரிமையை இறைவன் வழங்கியுள்ளான். இனி எவரும் தன் வாரிசுகளுக்கு உயில் எழுதக்கூடாது.

= அறிந்து கெள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது.

= திருமணத்திற்குப் பின்பு ஒரு பெண் விபச்சாரம் செய்து அதன் மூலம் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தை திருமணம் முடித்துள்ள ஆணுக்கே உரியதாகும்.

= திருமணத்திற்குப் பிறகும் விபச்சாரத்தில் ஈடுபடுபவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்.

= தந்தை அல்லாத ஒருவரை தம் தந்தையாக அழைப்பவரின் மீதும், தம் எஜமானனுடன் தன்னை இணைத்துக் கொண்டவரின் மீதும் ஏக இறைவன், வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் உண்டாகட்டும். அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது. (நஸாயி 3642, அபூ தாவூத் 2870)

குடும்பத் தலைமைக்கு கட்டுப்படுதல்:

= “ஒரு பெண் கணவனின் வீட்டிலிருந்து அவனுடைய அனுமதி இல்லாமல் எதையும் செலவிடக்கூடாது.”

"உணவையுமா?” என அப்போது கேட்கப்பட்டது.

"ஆம்! அதுதான் நம்முடைய செல்வங்களில் மிகச் சிறந்ததுஎன்று இறைத்தூதர் (ஸல்) பதிலளித்தார்கள். (அபூ தாவூத் 3665)

இரவல் கொடுத்தோர் உரிமைகள்:

= இரவலாக வாங்கப்பட்ட பொருள் உரியவரிடமே ஒப்படைக்கப்பட வேண்டும். பாலைக் கொண்டு பயன்பெற அளிக்கப்பட்ட கால்நடைகள் (பயன்பெற்ற பின்னர்) உரிமையாளரிடமே திருப்பிக் கொடுக்கப்படவேண்டும். இழப்பீடு நிறைவேற்றும் பொறுப்பு தலைவனையே சாரும். (அபூ தாவூத் 3665)

கணவன்மார்களின் உரிமையும் கடமைகளும்:

= மக்களே கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் ஏக இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள். அவர்களுக்கு நன்மையே நாடுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள்! ஏக இறைவனின் அமானிதமாக அவர்களைப் பெற்றுள்ளீர்கள். உங்களின் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருப்பதுபோலவே உங்கள் மீதும் அவர்களுக்கு உரிமைகள் உள்ளன. நீங்கள் விரும்பாதவர்களை அவர்கள் உங்களின் வீடுகளுக்குள் அனுமதிக்காதிருப்பது அவர்களின் கடமையாகும். மானக்கேடான காரியங்கள் செய்யாமல் இருக்கவேண்டும். அவர்கள் குற்றம் இழைத்தால் அவர்களைத் தண்டிக்கிற உரிமை உங்களுக்கு உண்டு. அதாவது அவர்களை உங்களின் படுக்கையைவிட்டு ஒதுக்கிவையுங்கள்! காயம் ஏற்படாத வகையில் இலேசாக அடியுங்கள்; அவர்கள் தங்களின் தவறிலிருந்து விலகிக் கொண்டால் அவர்களுக்கு முறையாக உணவும் உடையும் அளியுங்கள்! அவர்களுக்கு நன்மையையே நாடுங்கள்! ஏனெனில் உங்களிடம் உங்களின் உதவியாளர்களாகவும், உங்களையே சார்ந்தவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து அதைத் தவிர (பாலுறவு கொள்வதைத் தவிர) வேறுஎதையும் உரிமையாகக் கொள்ளமாட்டீர்கள். ஏக இறைவனின் பெயரை முன்மொழிந்து அவர்களுடன் மணவாழ்க்கை ஒப்பந்தம் செய்துள்ளதை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். (முஸ்லிம்  2334, திர்மிதீ 1163, 3087)

ஷைத்தான் மற்றும் தஜ்ஜால் பற்றிய எச்சரிக்கை:

= மக்களே! உங்களின் இந்நகரத்தில், தான் வணங்கப்படுவது குறித்து ஷைத்தான் நம்பிக்கை இழந்துவிட்டான். இருப்பினும் அவன் மகிழும் விதமாக அற்பமாக நீங்கள் கருதும் சில விஷயங்களில் அவனுக்குக் கீழ்ப்படிவீர்கள். எனவே உங்களின் மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாய் இருங்கள். (முஸ்த்தரகுல் ஹாகிம்)

= (பிற்காலத்தில் தோன்றும் பெரும் பொய்யன்) அல் மஸீஹுத் தஜ்ஜால் குறித்து எச்சரிக்கிறேன். இறைவன் அனுப்பிய இறைத் தூதர்களில் எவரும் தம் சமுதாயத் தாரை தஜ்ஜால் குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. இறைத்தூதர் நூஹ்(அலை) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வந்த இறைத்தூதர்களும் (அவனைக் குறித்து) எச்சரித்தார்கள்.

அவன் (இறுதிகாலத்தில்) தோன்றுவான். அவன்  தன்மைகளில் ஏதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், உங்களின் இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்ல என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். இதை மும்முறை கூறினார்கள். உங்களின் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்ல. அவனோ (தஜ்ஜாலோ) வலக்கண் குருடானவன். அவன் கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப்போல இருக்கும். ( புகாரீ 4402)

மாதத்தின் நாட்களை முன்பின் ஆக்குதல்:

= (மாதத்தின் நாள்களை ஒவ்வொருவரும் தங்களின் விருப்பத்திற்கு) முன்பின் ஆக்குதல் இறைமறுப்பை அதிகரிக்கும் செயலாகும். இதனால் இறைமறுப்பாளர்களே வழிகெடுக்கப்படுகிறார்கள். அவர்களே ஒரு மாதத்தின் நாள்களை முன்பின் ஆக்கி ஓர் ஆண்டில் அம்மாதங்களில் போரிடுவதை ஆகுமாக்கிக் கொள்கிறார்கள். மற்றோர் ஆண்டில் அதே மாதத்தில் போரிடுவது கூடாது என தடுத்துக் கொள்கிறார்கள். தாங்கள் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கையை இறைவன் தடுத்துள்ள மாதங்களின் எண்ணிக்கைக்கு சரியாய் ஆக்கி இறைவன் தடுத்திருக்கும் மாதங்களையும் தாங்கள் ஆகுமானதாய் ஆக்கிக் கொள்வதற்காகத்தான் இவ்வாறு செய்கிறார்கள். (இப்னு மாஜா 3055)

= அறிந்து கொள்ளுங்கள்! வானங்களையும் பூமியையும் இறைவன் படைத்த நாளிலிருந்தே அதன் அமைப்புப்படி இப்போதும் காலம் சுற்றிவருகிறது. ஏக இறைவனிடம் மாதங்களின் எண்ணிக்கை பனிரெண்டாகும். வானங்களையும் பூமியையும் இறைவன் படைத்த அன்று இவ்வாறுதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. அவை துல் கஅதா, துல் ஹஜ் மற்றும் முஹர்ரம். நான்காவது ரஜப் மாதமாகும். (புகாரீ 4662, அபூ தாவூத் 1942)

சகோதரத்துவம் பேணுதல்:

=ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரர் ஆவார். முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே! மனமுவந்து கொடுத்தால் தவிர, ஒரு முஸ்லிமின் பொருள் மற்றொரு முஸ்லிமுக்கு ஆகுமானதன்று. உங்களுக்கே நீங்கள் அநீதி இழைத்துக் கொள்ளாதீர்கள். (திர்மிதீ 3078)

இஸ்லாமிய கடமைகள் பேணுதல்:

= மக்களே! உங்களின் இறைவனை வணங்குங்கள்! அவனையே அஞ்சுங்கள்! கடமையான ஐவேளைத் தொழுகையைத் தவறாது பேணுங்கள்! நோன்பு நோற்றுவாருங்கள்! மனமுவந்து ஸகாத் கொடுத்துவாருங்கள்! இறைஇல்லத்தை (கஅபாவை) ஹஜ் செய்யுங்கள்! உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்குக் கட்டுப் படுங்கள்! (அப்போதுதான்) நீங்கள் சுவர்க்கம் செல்வீர்கள். (திர்மிதீ 616)

= ஒருவர் குற்றமிழைத்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுக்கப்படும். மகனின் குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார். (இப்னு மாஜா 1015)

இறுதி வேண்டுகோள்கள்:

= என் பிரார்த்தனையைத் தவிர இறைத்தூதர் ஒவ்வொருவரின் பிரார்த்தனையும் (உலகிலேயே) முடிந்துவிட்டது. மறுமை நாளுக்கு அதை நான் என் இறைவனிடம் சேமித்து வைத்துள்ளேன். அறிந்து கொள்ளுங்கள்! மறுமையில் இறைத்தூதர்கள் தங்களின் சமுதாயத்தினர் அதிகமாக இருப்பதைக் கண்டு மகிழ்வார்கள். அப்போது என்னைக் கேவலப்படுத்திவிடாதீர்கள்! நான் உங்களுக்காக கவ்ஸர் எனும் நீர்தடாகத்தின் அருகில் அமர்ந்திருப்பேன்.

= மக்களே! எனக்குப் பின்னர் எந்த இறைத்தூதருமிலர். உங்களுக்குப் பின்னர் எந்தச் சமுதாயமும் இல்லை. இங்கு வந்திருப்பவர்கள் வராதிருப்பவர்களுக்கு (இச்செய்தியை) எட்டச் செய்யுங்கள்! செய்தி சென்று சேர்பவர்களில் சிலர் நேரடியாகக் கேட்பவரை விட நன்றாய் ஆராயும் தன்மை கொண்டவராய் இருக்கலாம். (புகாரீ 67, 105, 1741)

= மக்களே! நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். என் பேச்சைக் கவனமாகக் கேளுங்கள். என்னுடைய பிரச்சாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டேன். உங்களிடையே இறைவேதத்தையும், அவனுடைய தூதரின் வழிமுறையையும் விட்டுச் செல்கிறேன். அவற்றை நீங்கள் பின்பற்றினால் வழிதவறமாட்டீர்கள். (முஸ்லிம்  2334, இப்னு மாஜா 3074)

 இவ்வாறு இறைத்தூதர்(ஸல்) உரை நிகழ்த்திவிட்டு மக்களை நோக்கி,

"மறுமை நாளில் என்னைப் பற்றி உங்களிடம் விசாரிக்கப்படும் போது என்ன சொல்வீர்கள்?” எனக் கேட்டார்கள்.

“(இறைச்செய்திகள்) அனைத்தையும் தெரிவித்துவிட்டீர்கள்; தங்களின் பொறுப்பை தாங்கள் நிறைவேற்றிவிட்டீர்கள்; நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியளிப்போம்என மக்கள் கூறினார்கள்.

அப்போது இறைத்தூதர்(ஸல்) தம் ஆட்காட்டி விரலை வானத்தின் பால் உயர்த்தி சைகை செய்துவிட்டு பின்னர் மக்களின் பால் தாழ்த்தி, "இறைவா இதற்கு நீயே சாட்சிஎனக்கூறி தங்களின் அரஃபா உரையை நிறைவு செய்தார்கள். (முஸ்லிம் 2334)

இவ்வாறு அவர்கள் உரை நிகழ்த்திய இடத்தில் திருக்குர்ஆனின் 5:3 வசனம் அருளப்பட்டது.

இன்று உங்களுக்காக உங்களின் மார்க்கத்தைப் பூர்த்தியாக்கிவிட்டேன். உங்கள்மீது என் அருட்கொடையையும் பூர்த்தி ஆக்கி விட்டேன். இன்னும், உங்களுக்காக இஸ்லாத்தை உங்களின் மார்க்கமாகத் தேர்ந்தெடுத்துள்ளேன். (திருக் குர்ஆனின் 5:3)