இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 ஏப்ரல், 2021

இறைவன் பணியமர்த்திய டாக்டர்!

நம் ஒவ்வொருவர் உடலுக்குள்ளும் அயராது ஓய்வின்றி பணியாற்றிவரும்  கண்ணுக்குத்தெரியாத பல்துறை மருத்துவரைப்  (multi specialist) பற்றி நீங்கள் சிந்தித்ததுண்டா? நீங்கள் உறங்கினாலும் அவர் உறங்குவதில்லை. அவ்வளவு விழிப்புணர்வோடு பொறுப்புணர்வோடு பணியாற்றுபவர் அவர். கருவறையில் உங்கள் உடலுக்குள் உயிர் ஊதப்பட்டது முதல் இறுதியாக நீங்கள் இறுதி மூச்சு விடும் வரை உங்களுக்காகவே நியமிக்கப்பட்ட அந்த டாக்டர் அயராது பணியாற்றுகிறார். அவரைப் பற்றி நீங்கள் எப்போதேனும் சிந்தித்தது உண்டா? 

உங்களைப் படைத்து பரிபாலித்து வரும் கருணையாளனான இறைவனால் உங்களைப் பாதுகாக்கும் பணிக்காகவே நியமிக்கப்பட்ட கைதேர்ந்த பல்துறை வல்லுநர் அவர் என்பதை உங்கள் உடலில் நடக்கும் சில பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தால் விளங்கும். 
ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை. (திருக்குர்ஆன் 86:4) என்று அவன்  வெறுமனே கூறினானா? சிந்திக்க வேண்டிய விஷயம் அது. 

காய்ச்சல்: 
சிறுவயதில் நீங்கள் செய்த சேட்டைக்காக உங்கள் ஆசிரியர் குச்சியால் உங்கள் உள்ளங்கையில் அடித்து இருக்கலாம். அவ்வாறு அடிவாங்கிய இடத்தில் உடனே என்ன நேருகிறது? அந்த இடம் உடனே சிவப்பு நிறமாக மாறுவதை கவனித்திருப்பீர்கள். என்ன காரணம்?
Image result for feverஆம், நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி உடனடியாக அங்கே செயல்படுகிறது. உடனே அந்த இடத்துக்கு இரத்தத்தை அனுப்புகிறது. இது போலவே உடலில் எங்கே பாதிப்பு ஏற்பட்டாலும் அதை சரிக்கட்ட போதுமான ஏற்பாடுகளை அந்த டாக்டர் ஏற்பாடு செய்கிறார்.  அதுபோன்ற ஒரு பாதுகாப்பு ஏற்பாடுதான் காய்ச்சல் என்பதும். மேற்கூறப்பட்ட உதாரணத்தில் கையில் அடிவாங்கிய இடத்தில் சூடு பரவியிருப்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அதுபோன்றே நமது உடலில் நோய் எதிர்ப்புக்கான சக்தி உடலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு எதிராக வேலைசெய்யும் போது ஏற்படும் வெப்ப அதிகரிப்பையே காய்ச்சல் என்கிறோம்.

இன்ன பிற பாதுகாப்பு ஏற்பாடுகள்:
வாந்தி:
இதேபோல நமது உடலில் பல பாதுகாப்பு ஏற்பாடுகளையும் இறைவன் அமைத்திருப்பதை நாம் காணலாம். நாம் உண்ணும் உணவு உண்ணத் தகுந்ததா என்பதை கை, மூக்கு, மூளை என்பவை பார்த்துத் தேர்ந்தெடுக்கின்றன. தொடர்ந்து அது தகுதியில்லாததாக இருந்தால் நாக்கு, வாய், போன்றவை அதைத் துப்பி விடுகின்றன. உண்ட உணவு செரிமானத்திற்குத் தகுதி இல்லாததாக இருந்தால் அதை வெளியேற்ற வாந்தி என்ற ஏற்பாடு உள்ளது. 
வயிற்றுப்போக்கு:
அதேபோன்ற இன்னொரு ஏற்பாடுதான் வயிற்றுப்போக்கு. ஜீரணத்திற்கு தகுதி இல்லாத உடலுக்கு பயனற்ற ஒன்று அத்துமீறி உள்ளே சென்றுவிட்டால் அதை கீழுள்ள பாதை வழியாக வெளியேற்றுவதில் வயிற்றுப்போக்கு பங்களிக்கிறது.
தும்மல், சளி, இருமல்  
நாம் உயிர்வாழத் தேவையான பிராணவாயுவை காற்றில் இருந்து நாசித்துவாரங்கள் வழியாக இழுக்கிறோம். அதைத் தூய்மைப்படுத்தும் விதமாக நாசித்துவாரங்களின் உட்சுவர்களில் ஒட்டி உள்ள சளி மற்றும் முடி போன்றவை பணியாற்றுகின்றன. இக்காவலை மீறி அசுத்தங்கள் உள்ளே சென்று நுரையீரலை அடையும்போது அவற்றை  
அதேபோல நுரையீரலில் தூசு அல்லது ஒவ்வாத ஏதேனும் சேரும்போது அதை வெளியேற்ற தும்மல் உண்டாகிறது. அதிகமான கழிவுகள் அங்கு சேரும்போது அதை சளி திரண்டு அவற்றை வெளியேற்றுகிறது. 
காயம் 
உடலில் எங்காவது அடிபட்டு சிறு காயம் ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.. அங்கு இரத்தத்தின் வெளியேற்றமே அந்த காயம் ஏற்பட்ட இடத்தில் சேர்ந்த நச்சுப்பொருட்களை இரத்தத்தோடு வெளியேற்றி விடுகிறது. சற்று நேரத்தில் இரத்தம் அந்த இடத்தில் உறைகிறது. பற்று போல படிந்தும் விடுகிறது. இதுவும் ஒரு சிகிச்சையே.
வலி 
உடலில் அடி விழும்போதும் காயம் ஏற்படும்போதும் உண்டாகும் வலியும் உங்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுதான். வலி என்ற ஒன்று இல்லாமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதை ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள். போக்குவரத்து நெரிசல் நிறைந்த ஒரு வீதியில் உங்கள் டூ வீலரில் பயணித்து விட்டு வீடு வந்து சேர்ந்திருப்பீர்கள். வீடு வந்து சேர்ந்ததும்தான் காண்பீர்கள், உங்கள் காலின் ஒரு சுண்டு விரல் மிஸ்ஸிங் என்பதை! வழியில் எவ்வளவு இரத்தம் வழியில் கொட்டிப் போயுள்ளது என்பதையும் அறிந்திருக்க மாட்டீர்கள்!  
அவ்வளவு ஏன்? வலி என்ற ஒன்று இல்லாவிட்டால் சாலைப் போக்குவரத்து தாறுமாறாகப் போய்விடும். சட்டம், நீதி, நியாயம் என்பவை மட்டுமல்ல, மனிதவாழ்வே  அர்த்தமற்றாதாகிப் போய்விடும். அனைத்தும் வலி என்ற உணர்வையே மையம்கொண்டுள்ளன. ஆம், அந்த வலி மையம்கொண்டு இருப்பது இந்தத் தோலில்தான்! வலி உணரும் நரம்புகளைத் (pain receptors)  தாங்கி நிற்பது இந்தத் தோல்தான்!
இவை அனைத்தும் நம் உடல் தானாகவே தனக்கு செய்துகொள்ளும் சிகிச்சைகளாகும்.
அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்இன்னும்அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான். (திருக்குர்ஆன் 39:62)

அவ்வாறு கய்ச்ச்சல் ஏற்படும்போது பலரும் அதை ஒரு நோயாக நினைத்து உடனே சிகிச்சைக்காக மருத்துவரிடம் விரைகின்றனர். வெப்பத்தைத் தணிப்பதற்கான மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் தற்காலிகமாக காய்ச்சல் தணியலாம். ஆனால் இயற்கையாக உடல் தனக்குத்தானே செய்துகொள்ளும் சிகிச்சை தடைபடுகிறது.
எனவே காய்ச்சல் வரும்பொழுது வெப்பநிலை அதிகரிப்பதால் உடலுக்கு நன்மை மட்டுமே ஏற்படுமே தவிர நாம் அதைப்பார்த்து பயப்பட அவசியமில்லை. காய்ச்சல் என்பது உடல் தனக்குத்தானே பார்த்துக் கொள்ளும் வைத்தியம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
காய்ச்சல் வரும்பொழுது நாம் என்ன செய்யவேண்டும்?
 காய்ச்சலின் போது நமது உடல் என்ன கேட்கிறதோ அதைக் கொடுத்துக்கொண்டு இருப்பதுதான் நாம் செய்யவேண்டிய அறிவார்ந்த செயலாகும். காய்ச்சலின் போது உடல் சோர்வாக இருக்கும். அப்போது நாம் கொடுக்கவேண்டியது ஒய்வு. படுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல தாகம் எடுத்தால் தண்ணீர் கொடுப்பதும் பசி எடுத்தால் உணவு கொடுப்பதும்தான் நாம் உடலுக்குச் செய்யவேண்டியது. இவற்றை உடல் கேட்காதபோது நாம் வலியசென்று திணிக்கக் கூடாது.
எப்பொழுது காய்ச்சல் வந்து நாக்கு கசக்கிறதோ அப்பொழுது உணவு தேவையில்லை என்று பொருள். எனவே அந்த நேரங்களில் சாப்பிடாமல் இருப்பது நலம். படுத்து ஓய்வு எடுக்க வேண்டும். தாகம் எடுத்தால் லேசாக சூடு செய்த நீரை மட்டுமே குடிக்க வேண்டும். பசி எடுத்தால் அரிசி கஞ்சி கோதுமை கஞ்சி மற்றும் இயற்கையான பழ வகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். தேன் கலந்த நீரை அருந்துவதும் கருஞ்சீரகத்தை வாயில் இட்டு மெல்லுவதும்  சிகிச்சையை மேலும் தீவிரப்படுத்தும்.
 உங்களது இறைவன் தேனீக்கு மலைகளிலும்மரங்களிலும்மக்கள் கட்டும் கட்டிடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள்ளும்படி அறிவூட்டினான். அன்றி "நீ ஒவ்வொரு புஷ்பத்திலிருந்தும் புசித்துஉனதிறைவன் உனக்கு அறிவித்த எளிதான வழியில் (உன்னுடைய கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல் (எனக் கட்டளையிட்டான்.) இதனால் அதன் வயிற்றிலிருந்து பல நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகின்றது. அதில் மனிதர்களுக்கு நிவாரணமுண்டு. நிச்சயமாக இதிலும் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (திருக்குர்ஆன்16:68,69)
''கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது'' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். (நூல்கள்: புகாரிமுஸ்லிம்)

காய்ச்சலும் பாவநிவாரணமும்
இவ்வாறு மூன்று நாட்கள் வரை உடலின் தேவையறிந்து கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டால் காய்ச்சலும் குணமாகும். அது எதற்காக வந்ததோ அந்த நோக்கமும் – அதாவது சிகிச்சையும் – நிறைவேறும் இறைவன் நாடினால். மட்டுமல்ல, நம் பாவங்களும் மன்னிக்கப்படும்.
= நபித்தோழர் ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''உம்மு ஸாயிப் (ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்த நபி(ஸல்) அவர்கள், ''உம்மு ஸாயிபே! உமக்கு என்னஏன் துடிக்கிறீர்'' என்று கேட்டார்கள். ''காய்ச்சல்தான். அதிலே அல்லாஹ் பரக்கத்(அபிவிருத்தி) செய்யாதிருப்பானாக'' என்று உம்மு ஸாயிப் (ரலி) கூறினார். ''காய்ச்சலைத் திட்டாதே! நெருப்பு உலைஇரும்பின் துருவை நீக்குவது போல்காய்ச்சல் மனிதனின் குற்றங்களை நீக்கி விடும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)
 (மருத்துவ தகவல்கள் மாற்று மருத்துவ அறிஞர்களின் கருத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது)

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மே 2021 இதழ்

 

பொருளடக்கம் பொருளடக்கம்

நேற்று கருவறை! நாளை கல்லறை! நடுவிலே ஏனிந்த சிறை?-2
மனிதகுலத்தை ஒருங்கிணைக்கும் ரமலான்! -5
குடும்பங்களில் குதூகலம் பொங்கும் ரமலான்! -7
பசித்திருப்பது மட்டுமல்ல நோன்பு! -8
நோன்பின் மாண்புகள் -9
போதுமென்ற மனமே சிறந்தது -10
ரமலான் மாதத்தின் சிறப்புகள் -11
வான்மறை தேன்மழையாகப் பொழிந்தபோது..! -13
யாசகம் தவிர்ப்போம் -14
மனித வரலாற்றை மாற்றியமைத்த பெருநிகழ்வு -15
திருக்குர்ஆன் வந்திருக்கா விட்டால்.. என்ன நடந்திருக்கும்?-18
திருக்குர்ஆன் வரவால் உயிர்வாழும் பெண்ணினம்! -19
பசியாறும்போது நிதானம் தேவை! -20
கருக்கொலையிலிருந்து தப்பித்த மகளிர் குரல்!-21
திருக்குர்ஆன் வரவால் மகிழும் முதியோர்! -22
உண்ணும் ஒழுங்கு முறைகள் -23
உலகெங்கும் ஒலிக்கும் திருக்குர்ஆன் பயனர்களின் குரல் -24


திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மே 2021 இதழ் கீழ்கண்ட லின்கிலும் இதை வாசிக்கலாம் 

https://drive.google.com/file/d/1Q3-CJnVh2xEQ2F195TsVYFWyfnoxMdje/view?usp=sharing