இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 23 செப்டம்பர், 2022

தீண்டாமை கற்பிப்போருக்கு நரகமே புகலிடம்!


பொதுவாக சமூகத்திற்கு கேடு விளைவிப்பவர்களை, சமூகத்தில் குழப்பம் உண்டாக்குபவர்களை தண்டிப்பதும் அவர்கள் திருந்துவதற்காக வேண்டி பொது சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைப்பதும்  சரியான மற்றும்  அவசியமான நடவடிக்கை ஆகும். உதாரணமாக திருடர்களை சிறையில் அடைப்பது இந்த வகையைச் சார்ந்த நடவடிக்கையே. ஆனால் எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவிகளை எந்தவித காரணமும் இன்றி இன்ன குடும்பத்தில் பிறந்தார் அல்லது இன்ன நிறத்தை உடையவர் அல்லது இன்ன மொழியைப் பேசுபவர் என்றெல்லாம் காரணங்களைக் கூறி அவர்களை தீண்டத்தகாதவர்கள் என்று முத்திரை குத்துவதும் அவர்களின் உரிமைகளை மறுப்பதும் கடுமையான குற்றமாகும்.

காரணம் ஒரு மனிதன் சக மனிதனிடம் பிறப்பின், நிறத்தின் அல்லது மொழியின் அடிப்படையில் மேன்மை பாராட்ட எந்தவித முகாந்திரமும் இல்லை. நம்மைப் படைத்தவன் திருக்குர்ஆனில் மனித சமத்துவத்துக்கான அடிப்படையை தெளிவுற அறிவிக்கிறான்:

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்கு த் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)

அனைத்துலக மக்களும் ஒரே ஒரு ஆண்-பெண் ஜோடியிலிருந்து உருவாகிப் பல்கிப் பெருகியவர்களே என்ற உண்மையை பறைசாற்றி மனிதர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வை கற்பிப்பதற்கு எந்த முகாந்திரமும் கிடையாது என்று தெளிவாகக் கூறுகிறது இந்த வசனம். அத்துடன் மானுட சகோதரத்துவத்துக்கான அடிப்படையும் இங்கே கூறப்படுவதை நாம் கவனிக்கலாம்.

மேன்மையுடையோர் யார்?

அதையும் இறைவன் தெளிவு படுத்துகிறான்:

  “மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில்உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்தாம்.” (குர்ஆன் 49: 13) 

அதாவது இறையச்சம் என்பதும் வெளிப்படையாக அறிய முடியாத ஒன்று. அதைக் கூறியும் மற்றவர்களின் மீது ஆதிக்கம் செலுத்தமுடியாது என்பது தெளிவு!

கடவுளின் பெயரால் தீண்டாமை!

அனைத்து மனிதர்களும் ஆதித் தந்தை மற்றும் ஆதித் தாயின் வழித்தோன்றல்களே என்று மனிதகுலத்தைப் படைத்தவனான இறைவனே கூறியிருக்க அந்த இறைவனின் பெயராலேயே தங்களுக்கு இனமேன்மை உண்டு என்று வாதிடுவதும் அதன் அடிப்படையில் மனிதர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வு மற்றும் தீண்டாமை கற்பிப்பதும் அதைக் கடைபிடிப்பதும் ஆதரிப்பதும் எல்லாம் இறைவனிடம் பெரும் தண்டனைக்குரிய பாவங்களே!

 = அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனையைச் சொல்பவனைவிடப் பெரும் அநியாயக்காரன் யார்? அத்தகையோர் (மறுமையில்) தங்கள் இறைவன் முன் நிறுத்தப்படுவார்கள்; “இவர்கள்தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள்என்று சாட்சி கூறுவோர் சொல்வார்கள்; இத்தகைய அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். (திருக்குர்ஆன் 11:18)

= எனவே, அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்து தன்னிடம் உண்மை வந்த போது அதனைப் பொய்ப்பிப்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார்? (அத்தகைய) சத்திய மறுப்பாளர்களுக்கு நரகில் தங்குமிடம் இல்லையா? (திருக்குர்ஆன் 39:32)

இனமேன்மை உண்டு என்று வாதிடுவோருக்கு இறைவன் விடுக்கும் சவால்:

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருவதற்கு முன்னால் அங்கு வாழ்ந்த யூதர்கள் அவர்கள்தான் மற்ற மக்களை விட இறைவனுக்கு நெருங்கியவர்கள் என்று கூறிக்கொண்டு மற்ற மக்களை தாழ்ந்த பிறவிகளாகவும் தீண்டத் தகாதவர்களாகவும் நடத்தை வந்தார்கள்.  அவர்கள் கூறுவது போல இறைவனுக்கு நெருங்கியவர்கள், அவர்கள்தான் மற்றவர்களை விட  சொர்க்கத்திற்குத் தகுதியானவர்கள் என்பது அவர்களின் வாதமாக இருந்தால் ஏன் இந்த பூமியில் கஷ்டப்பட வேண்டும்? உடனே மரணத்தைக் கேட்டு ஏன் பிரார்த்திக்கக் கூடாது? என்ற கேள்வியை அவர்களிடம் கேட்கச் சொல்கிறான் இறைவன்.

= அவர்களிடம் நீர் சொல்வீராக: “இறைவனிடம் இருக்கும் மறுமை வீடு மற்ற மனிதர்களுக்கன்றி உங்களுக்கு மட்டுமே சொந்தமானதாய் இருக்குமானால், (உங்களின் இந்த நம்பிக்கையில்) நீங்கள் உண்மையானவர்களாய் இருந்தால்நீங்கள் மரணத்தை விரும்புங்கள் (பார்ப்போம்!)(திருக்குர்ஆன் 2: 94) 

====================== 

இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
https://www.quranmalar.com/2012/10/blog-post_25.html
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?

சனி, 10 செப்டம்பர், 2022

போதை ஒழிப்போம் பெண்ணினம் காப்போம்!

மதுபானம்புகையிலை, அபின், ஹெராயின் கஞ்சா, பான் மசாலா, பெத்தனால் ஊசி, போதை தரும் இன்ஹேலர்கள் என பலதும் இன்று போதைப் பொருட்களில்  அடங்கும். இந்த போதைக்கு மனிதன் அடிமையாகும் போது இவர்களை நம்பி வாழும் வாழ்க்கைத் துணைகள், குழந்தைகள், பெற்றோர் போன்றவர்கள் கைவிடப்படுவர். தொடர்ந்து உறவினர், நண்பர்கள், தொழில், வணிகத் தொடர்புகள் என எல்லா வட்டங்களிலும் விரிசல் உண்டாகிறது. சிதையும் பொருளாதாரம்மங்கும் உழைப்புத் திறன்பெருகும் சாலை விபத்துகள்,  குடிநோய்கள்அதிகரிக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள்தற்கொலைகள்குற்றச்செயல்கள்...  என போதைப்பொருட்களின் தீய விளைவுகள் நீள்கின்றன. பெண்களுக்கு எதிரான  85% குற்றங்களுக்குக் காரணமாக அமைவது மதுவே என்கிறது தேசிய குற்றவியல் ஆவணக்காப்பக (NCRB) அறிக்கை!

இன்று கட்டுக்கடங்காமல் பூதாகரமாக உருவெடுத்து நிற்கும் இந்த  போதை அரக்கனிடமிருந்து மக்களை காப்பாற்றுவது சாத்தியமா?

ஆம், சாத்தியமே என்கிறது இஸ்லாம்!

இது ஒரு வெற்று வாய்ச்சொல் அல்ல. நூற்றாண்டுகளாக நடந்து வரும் புரட்சி! இன்றும் கூட உலகின் ஏறக்குறைய நான்கில் ஒரு பங்கு மக்களையும் அவர்கள் சார்ந்த குடும்பங்களையும் போதைப்பொருள் ஆதிக்கத்தில் இருந்து காப்பாற்றி வருகிறது. எவ்வாறு என்பதைத்தான் இங்கு காண இருக்கிறோம். அதற்கு முன்..

போதைப்பொருள் என்றால் என்ன?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

“அதிகமாகவும் குறைவாகவும் போதையை ஏற்படுத்தக் கூடிய ஒவ்வொன்றும் ஹராமாகும் தடுக்கப்பட்டதாகும்” (நூல்கள்: அபூதாவூத், நஸஈ) இவ்வாறு சந்தேகத்திற்கு இடமில்லாத தெளிவான வரையறையை வழங்குகிறது இஸ்லாம்.

இஸ்லாம் என்றால் என்ன?

இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவன் கற்பிக்கும் எவல்- விலக்கல்களை அல்லது கட்டுப்பாடுகளைப் (discipline) பேணி வாழ்வதால் தனிநபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் பெறப்படும் அமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம்! இவ்வாறு கட்டுப்பாடு மிக்க வாழ்வை வாழ்ந்ததற்கு இறைவன் புறத்திலிருந்து மறுமையில் நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்கம் பரிசாக வழங்கப்படும் என்கிறது இஸ்லாம். அதேவேளையில் இறைவனையும் இறைவழிகாட்டுதலையும் புறக்கணித்து வாழ்வோருக்கு மறுமையில் நரகம் உண்டு என்றும் கூறுகிறது இஸ்லாம்.

மனமாற்றம் ஒன்றே மாற்றத்திற்கான வழி!

சில முக்கியமான உண்மைகளை தெளிவான முறையில் கற்பித்து அவற்றை அனுதினமும் பேணி வாழும் வகையில் வழிபாட்டு முறைகளை அமைத்து இஸ்லாம் அதனை வாழ்வியலாக ஏற்றுக் கொண்டோரை ஒழுக்கம் பேணுபவர்களாக்குகிறது:

1.    தெளிவான கடவுள் கொள்கை:

சொல்வீராக: இறைவன் ஒருவனேஅவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112:1-4)

இறைவனின் தன்மைகளை இவ்வாறு புரிந்து கொண்டு இடைத்தரகர்களுக்கோ மூடநம்பிக்கைகளுக்கோ வீண் சடங்கு சம்பிரதாயங்களுக்கோ இடம் கொடாமல் அவனை நேரடியாக வணங்க வேண்டும் என்று கற்பிக்கிறது இஸ்லாம். படைத்தவனைத் தவிர மற்றவை அனைத்தும் படைப்பினங்களே. எனவே அந்த இறைவனுக்கு பதிலாக படைப்பினங்களை - அவை உயிருள்ளவை ஆயினும் சரி உயிரும் உணர்வுமற்ற உருவங்களாயினும் சரி - அவற்றை வணங்குவதோ அல்லது கடவுள் என்று கற்பிப்பதோ மோசடியும் பாவமும் ஆகும் என்கிறது இஸ்லாம்.

2.  தெளிவான வாழ்க்கைக் கண்ணோட்டம்:

இந்தக் குறுகிய தற்காலிக வாழ்வு ஒரு பரீட்சை என்றும் இவ்வுலகம் அதற்கான பரீட்சைக் கூடம் என்றும் கூறுகிறது இஸ்லாம். இவ்வுலக வாழ்க்கையில் மனிதனால் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் இறைவனால் பதிவு செய்யப்பட்டு அதுபற்றி மறுமையில் விசாரிக்கப்பட்டு அந்த அடிப்படையில் சொர்க்கமோ அல்லது நரகமோ அவனுக்கு வாய்க்க இருக்கிறது என்கிறது இஸ்லாம்.

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்;. அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான்உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)

3.  தொடர்ச்சியான இறை உணர்வு:

மேற்கண்ட நம்பிக்கைகளை பகுத்தறிவு பூர்வமாக விதைத்து படைத்த இறைவனை நேரடியாக வணங்கும் பண்பு சிறுவயதில் இருந்து கற்பிக்கப்படுவதால் அவனைப் பற்றிய மதிப்பும் மரியாதை உணர்வும் நம் செயல்களுக்கு அவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வும் மனித உள்ளங்களில் விதைக்கப் படுகிறது. இந்த உணர்வை தொடர்ச்சியாக வலுவூட்டும் வண்ணம் அமைந்துள்ளது இஸ்லாம் கற்பிக்கும் தொழுகை. அங்கத் தூய்மை பேணி தினசரி ஐந்து வேளைகள் இறைவன் முன்னால் பயபக்தியோடு நின்று தொழும்போது இறை உணர்வு அவ்வப்போது புதுப்பிக்கப்படுவதால் மது போதை மட்டுமல்லமற்றெந்த பாவங்களின் பக்கமும் மனம் ஈர்க்கப்படுவதில்லை. மேலும் இந்தத் தொழுகைகளை அவ்வப்போது பள்ளிவாசல்களில் ஒன்று கூடி நிறைவேற்றும்போது எனைய மக்களோடு ஏற்படும் சகோதரத்துவ உணர்வும் தொடர்ச்சியான நல்லோர் சகவாசமும் பாவங்களில் இருந்து பாதுகாக்கும் வலுவான அரணாக அமைகின்றன.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குளிப்பதையும் அன்று மதியம் பள்ளிவாசல்களில் ஜும்ஆ எனப்படும் கூட்டுதொழுகையில் கலந்து கொள்வதையும் கட்டாயமாக்கி உள்ளது இஸ்லாம். தொழுகைக்கு முன் நடத்தப்படும் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழி போதனையும் மனிதனை நல்வழிப்படுத்துபவையாக உள்ளன.

4.   பாவங்கள் பதிவு பற்றிய விழிப்புணர்வு:

இன்று எங்கும் கண்காணிப்புக்காக பொருத்தப்படும் CCTV கேமராக்கள் அவற்றின் பார்வையில் படும் நிகழ்வுகளை பதிவு செய்வதை நாம் அறிவோம். அதைப்போலவே நம் ஒவ்வொருவரது கண்களும் நமது நடவடிக்கைகளை இயற்கையாகவே பதிவு செய்து கொண்டிருக்கின்றன. அவை மட்டுமல்லநமது காதுகளும் தோல்களும் அதுபோலவே பதிவு செய்கின்றன என்றும் அவை மறுமையில் மனிதனுக்கெதிராக சாட்சி கூறும் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது:

தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையாமேலும் நாவையும்இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)? (திருக்குர்ஆன் 90:7-9 )

5.  பாவமன்னிப்பு பற்றிய தெளிவு:

இறைவனை மாபெரும் கருணையாளன் என்று அறிமுகப்படுத்தும் அதேவேளையில் இடைத்தரகர்கள் கற்பிக்கக்கூடிய வீண் சடங்குகள் அல்லது மூடமான நம்பிக்கைகள் மூலம் பாவங்கள் மன்னிக்கப் படுவதில்லை என்கிறது இஸ்லாம். ஒருவர் செய்த பாவத்திற்கு அவரே பொறுப்பாவார் என்றும் மனம்வருந்தி இறைவனிடம் முறையிட்டு மன்றாடுதல் மூலமே பாவங்கள் மன்னிக்கப்பட வாய்ப்புண்டு என்று தெளிவுபட கூறுகிறது. பாவம் செய்தபின் குற்ற உணர்வில் இருந்து தப்பிக்க குறுக்குவழிகள் ஏதும் இங்கு இல்லை.

6.   புண்ணியம் எது பாவம் எது என்பதற்கான அளவுகோல்:

மனிதர்கள் மனோஇச்சைக்கு ஏற்ப பாவ புண்ணியங்களைத் தீர்மானிப்பது பாவங்கள் பெருகுவதற்கு மற்றொரு காரணம் ஆகும். உண்மையில் இவ்வுலகின் சொந்தக்காரனான இறைவன் எதைச் செய் என்று எவுகிறானோ அதுவே புண்ணியம். அவன் தடுக்கும் செயலே பாவம். அந்த வகையில் இன்று இறைவனின் இறுதிவேதமான திருக்குர்ஆனும் முஹம்மது நபி அவர்களின் நடைமுறைகளும் பாவபுண்ணியங்களை தீர்மானிக்கும் தெளிவான அளவுகோலைத் தருகின்றன.

7.   மது மற்றும் போதைக்கு தெளிவான தடை:

இறைவனது கட்டளைப்படி மது உட்பட அனைத்து போதைப் பொருட்களும் என்பது முழுக்க தடை செய்யப்பட்டவையாகும்.

இறைநம்பிக்கை கொண்டோரே மதுபானமும்சூதாட்டமும்கற்சிலைகளை வழிபடுதலும்அம்புகள் எறிந்து குறி கேட்பதும்ஷத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும்ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். (திருக்குர்ஆன் 5:90 )

இறைகட்டளையை மீறி அதை அருந்துவதும் உற்பத்தி செய்வதும் விற்பதும் வாங்குவதும் உதவுவதும் சுமப்பதும் என அனைத்தும் தடை செய்யப் பட்டதாகும். இறைவனின் சாபத்திற்கு உரிய பாவமாகும் என்றும் அவர்களுக்கு மறுமையில் நரக வேதனை காத்திருக்கிறது என்றும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எச்ச்சரித்துள்ளதை நபிமொழி நூல்களில் காண்கிறோம்.

8.   குடும்ப உறவும் பொறுப்பும் வலியுறுத்தல்:

= போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் ஒரு காரணி தனிமையும் பொறுப்புணர்வில்லா வாழ்க்கை முறையும் ஆகும். இஸ்லாம் பிரம்மச்சரியத்தையும் துறவறத்தையும் தடை செய்து திருமணத்தையும் குடும்ப உறவு பேணுவதையும் வலியுறுத்துகிறது. குடும்பப் பொறுப்புகள் பற்றி இறைவனிடம் விசாரணை உண்டு என்று கூறுகிறது. ‘’ஆண்தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன்தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான்.என்று நபிகளார் கூறியுள்ளார்கள். (நூல்:புகாரி)

9.  ஆட்சியாளர்களின் பொறுப்பு:

சட்டம் ஒழுங்கைப் பேணுவதும் மது மற்றும் போதைப்பொருட்களுக்கு முழுமையான தடை விதிப்பதும் மீறுவோரைக் கடுமையான முறையில் தண்டிப்பதும் அரசின் பொறுப்பாகும் என்கிறது இஸ்லாம். இப்பொறுப்பை நிறைவேற்றாத ஆட்சியாளர்கள் இறைவனின் தண்டனைக்கு ஆளாவார்கள் என்றும் நபிகள் நாயகம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்:

'உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார்.....' (நூல்: புகாரீ)

10. மது மற்றும் போதை பொருட்களை பயன்படுத்தவோருக்கு தண்டனை:

= மதுவின் தீமைகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க ஒரு நடைமுறை சாத்தியமான தீர்வையும் நபிகள் நாயகம் காட்டிவிட்டுச் சென்றார்கள். அதை மதீனாவில் அரசாட்சி கைவந்தபோது நடைமுறைப்படுத்தவும் செய்தார்கள். நம்மாலும் இன்று அதை நடைமுறைப்படுத்த முடியும். அது என்ன?

மது குடித்த நிலையில் பொதுவெளியில் வெளிப்படும் நபர்களை தண்டிக்கும் உரிமையை பொதுமக்களுக்குக் கொடுத்தார்கள் நபிகளார். அவ்வாறு மதுவருந்தி போதையேறிய நபர் ஒருவரை மக்கள் கைகளாலும் பேரித்த மர மட்டையாலும்செருப்புகளாலும் அடித்த சம்பவத்தை நபிமொழித் தொகுப்பில் காண்கிறோம் (நூல்: அஹ்மத்)

இவ்வாறு மதுவிலக்கை அமுல்ப்படுத்துவதோடு பொதுமக்களுக்கு முன் குடித்த நிலையில் வருபவர்களுக்கு உடனடி தண்டனை வழங்க ஏற்பாடு செய்தால் யாராவது அதற்குத் துணிவார்களாபாதிக்கப்படும் மக்களுக்கு 'குடிமகன்களைதண்டிக்கும் அதிகாரத்தைக் கொடுத்து அதை சட்டபூர்வமாக்கலாம். இதை தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பினால் நாடே இதுகுறித்து விழிப்புணர்வு பெறும் என்பதில் ஐயம் இல்லை.

ஆகஇறை உணர்வையும் மறுமை உணர்வையும் உரிய முறையில் விதைப்பதன் மூலம் மனித மனங்களைப் பண்படுத்தி மது மற்றும் போதை பொருட்களிலிருந்து விலகி வாழும் நல்லோர்கள் நிறைந்த சமூகத்தை உருவாக்க உழைப்போம் வாரீர்.

வியாழன், 8 செப்டம்பர், 2022

திருக்குர்ஆன் முதல் அத்தியாயம்!

 #திருக்குர்ஆன்_முதல்_அத்தியாயம்:

திருக்குர்ஆனின் ஆரம்ப அத்தியாயத்தின் பெயர் பாத்திஹா என்பது. இது ஏழு வசனங்களைக் கொண்டது. இதற்குப் பல சிறப்புகள் உள்ளன .
= உலகெங்கும் இவ்வேழு வசனங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. தொழுகையிலும் வெளியிலும் முஸ்லிம்கள் இதை ஓதிக்கொண்டே இருப்பார்கள்.
= இந்த ஏழு வசனங்கள் முஸ்லிம்களின் ஐவேளைத் தொழுகைகளிலும் பலமுறை ஓதப்படுகின்றன. ஒவ்வொரு தொழுகையாளியும் குறைந்தது ஒருநாளைக்குப் பதினேழு முறையாவது ஓதுகிறார்.
= இதை பொருளுணர்ந்து ஓதி நோய்வாய்ப்பட்டவர் மேல் ஓதி ஊதலாம். இறைவன் நாடினால் நோய் குணமாகும்.
அந்த வசனங்களை அவற்றின் பொருள் சகிதம் கீழே தருகிறோம்:
. 1. (B)பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
. 2. அல்ஹம்து லில்லாஹி ர(B)ப்பில் ஆலமீன்.
. 3. அர்ரஹ்மானிர் ரஹீம்.
. 4. மாலிகி யவ்மித் தீன்
. 5. இய்யாக்க நஉ(B)புது வஇய்யாக்க நஸ்தஈன்.
. 6. இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்த்தகீம்
. 7. ஸிராத்தல்லதீன அன் அம்த அலைஹீம் அய்ரில் மக்லூ(B)பி அலைஹீம் வலழ்ழால்லீன் – ஆமீன்
பொருள்:
. (1. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் (இதை ஒதுகிறேன்)
. 2. அனைத்துப் புகழும் அனைத்து உலகையும் படைத்து பரிபாலித்து வரும் அல்லாஹ்வுக்கே உரியது.
. 3. அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.
. 4. இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதி.
. 5. உன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
. 6. எங்களை நேரான வழியில் நடத்துவாயாக
. 7. நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்களின் வழியில் நடத்துவாயாக,. அது உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியும் அல்ல.
. அமீன்- எங்கள் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக)
முக்கிய குறிப்பு இந்த அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் இறைவனே நமக்கு கற்றுத்தரும் பிரார்த்தனைகள். இங்கு நான்காவது வசனத்தை மிக ஆத்மார்த்தமாக கூற வேண்டும் “இறைவா படைத்தவனாகிய உன்னை மட்டுமே வணங்குவோம். உன்னையல்லாது வேறு யாரையும் தெய்வமாக பாவிக்க மாட்டோம்.அவைகளிடம் பிரார்த்திக்கவோ உதவி கோரவோ மாட்டோம்” என்ற உறுதி மொழியை இதன் மூலம் நாம் இறைவனுக்கு கொடுக்கிறோம் என்பதை உணர்க! நம் பிராத்தனை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இது ஒரு நிபந்தனை என்பதை அறிக!
இந்த பாத்திஹா அத்தியாயத்தின் பொருள் இதோ கவிதை வடிவில்......
வெளிச்ச வாசல்
அளவே இல்லா அருளாளன்
நிகரே இல்லா அன்பாளன்
நலமே செய்யும் பண்பாளன்
நாயன் அல்லாஹ் திருப்பெயரால்...
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
இலங்கும் உலகம் பற்பலவாம்
வல்லான் அவனே படைப்பவனாம்
வாழச் செய்திடும் ரட்சகனாம்
அளவே இல்லா அருளாளன்
நிகரே இல்லா அன்பாளன்
நலமே செய்யும் பண்பாளன்
நாளைய தீர்ப்பின் அதிபதியாம்!
அதிபதி உனையே வணங்குகிறோம்
அடிமைகள்,உதவியும் தேடுகிறோம்
எதுநேர் வழியோ அதில் செலுத்து...
இன்னருள் பெற்றோர் வழியதுவே!
நீசினந் தோரின் வழிவேண்டாம்
நெறிகெட் டோரின் வழிவேண்டாம்
மாசில் லாஉன் அருள்பொழியும்
மார்க்கப் படியே எமைநடத்து
வேதம் எதிலும் இல்லாத
வெளிச்ச வாசல் ஃபாத்திஹா
போதம் குர்-ஆன் சாரமிது!
புரிந்தோர் உணரும் ஞானமிது!!
ஆமீன்,ஆமீன் அவ்வாறே
ஆகுக,ஆகுக,ஆகுகவே
(கவிதை -ஏம்பல் தஜம்முல் முஹம்மது)
May be an image of one or more people, monument and text
Like
Comment
Share