இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 29 மார்ச், 2014

அரசியல் சூதாட்டத்தில் இருந்து பாரதத்தைக் காப்போம்!


நம்நாடு ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைந்த பின் இன்று வரை இதைத்தான் மாறி மாறி அனுபவித்து வருகிறது. ஜனநாயகம் என்ற பெயரில் நம் மனதுக்கு விருப்பமானவர்களை ஆட்சித்தலைவர்களாகத்  தேர்ந்தெடுக்கிறோம். சுயநலம் அற்றவர்கள், நாட்டுக்காக அனைத்தையும் தியாகம் செய்பவர்கள்,  பொறுப்புணர்வு மிக்க தொண்டர்கள் என்றெல்லாம் அவர்கள் கூறும் வாய்வார்த்தைகளை நம்பி அவர்களுக்கு வாக்களிக்கிறோம். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்றபின் அனைத்தும் பொய் என்பது புலனாகிறது.
இவ்வாறு ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்கள் நமக்களித்த வாக்குறுதிகளை மீறுவதோடு மட்டுமல்லாமல் தாங்கள் ஏற்றெடுத்த பொறுப்பை நிறைவேற்றாததோடு நமக்குப் பலவிதத்திலும் மோசடி செய்கிறார்கள். அவர்களின் முழு நோக்கமும் பணமும் பதவியும்தான் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதை அவர்கள் நிரூபிக்கிறார்கள். தங்களின் மற்றும் தங்கள் வாரிசுகளின் பொருளாதார மேம்பாடு மற்றும் புகழ் என்பவை மட்டுமே இவர்களின் குறிக்கோளாக இருந்து வருகிறது 
இது நமது கண்முன்னே காலாகாலமாக நடைபெற்று வரும் நாடகம். எந்த ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த நடைமுறையில் மாறுதல் இல்லை என்பதை நாம் பல காலமாகக் கண்டு வருகிறோம். ஆட்சிக் கட்டிலை அடைவதற்காக எல்லா குறுக்கு வழிகளையும் அக்கிரமங்களையும் எவ்வித தயக்கமும் இன்றி கைகொள்கின்றனர். மதம், இனம் ஜாதி, மொழி, இடம் இவற்றின் அடிப்படையில் கட்சிகள் அமைத்துக் கொண்டும் மக்களின் இன உணர்வுகளையும் மத உணர்வுகளையும் தூண்டி கலவரங்களும் கலகங்களும் உண்டாக்கி அவற்றால் தங்கள் வாக்கு வங்கிகளை வலுப்படுத்திக் கொள்கிறார்கள். சட்டம் ஒழுங்கு நீதி இவற்றை கட்டிக்காக்க வேண்டிய இவர்கள் தங்கள் சுயநல நோக்கங்களுக்காக இவற்றை அப்பட்டமாக மீறுகிறார்கள். இவற்றை வைத்துக்கொண்டே அப்பாவி குடிமக்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள். இவர்கள் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர்களின் போக்கு இதுதான். நாட்டு மக்கள் இவர்களின் அராஜகங்களுக்கு பயந்தே வாழவேண்டிய சூழ்நிலையில் உள்ளார்கள். வேறு வழிகள் ஏதும் இல்லாத காரணத்தால் இக்கொடுமைகளை நாம் சகித்தே வாழவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
ஒரு கொடுங்கோலனிடம் இருந்து விடுதலை பெற இன்னொரு கொடுங்கோலனிடம் அபயம் தேடும் அவலம்! ஆளுவதற்கு அறவே தகுதி இல்லாத திரைப்படக் கலைஞர்களிடமும் கொள்ளைக்காரர்களிடமும் கொலைகாரர்களிடமும் நாடு மாறி மாறி ஒப்படைக்கப் படும் அவலம்!  மக்களின் உழைப்பின் கனிகளை எல்லாம் வரிகளாகக் கறந்து அவற்றை வைத்துக் கொண்டே அவர்களை அடக்கியாளும் கொடுமை!
செழிப்பான நாட்டு வளங்களும் மனித வளங்களும் அறிவு வளமும் பாரெங்கும் காணாத அளவு நம் நாட்டில் இருந்த போதும் இவை அனைத்தும் இன்று நடக்கும் அரசியல் சூதாட்டத்துக்கு பலியாகும் நிலை. தொடர்ந்து மக்கள் வறுமையிலும் அச்சத்திலும் நீடிக்கும் நிலை. கொலை கொள்ளை விபச்சாரம் சூதாட்டம் மது போதைப்பொருள் போன்ற தீமைகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது மட்டுமல்ல, இவற்றை சட்டபூர்வமாக்கி இவற்றைக் கொண்டே நாட்டின் வருவாயையும் ஆளுபவர்களின் வருவாயையும் பெருக்கிக்கொள்ளும் அவலம். அவலங்களின் பட்டியல் இன்னும் நீளும் என்பது யாரும் அறிந்த உண்மை!
ஏன் இந்த அவலங்கள்? ஏன் இவ்வாறு தொடர்ந்து ஏமாற்றப் படுகிறோம்?
இந்த அவலங்களை நாடு தொடர்ந்து அனுபவிப்பதற்குக் அடிப்படைக் காரணங்களில் சிலவற்றை முதலில் காண்போம்...
அ) தனிநபர் ஒழுக்கம் இல்லாமை
நாட்டில் குற்றங்களும் பாவசெயல்களும் மோசடிகளும் நாளுக்கு நாள் பெருகுவதற்குக் காரணம் மக்களிடையே பாவங்களைப் பற்றிய குற்ற உணர்வும் வெட்க உணர்வும் இல்லாமையே. தனி நபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் அமைதி கெடுவதற்கு முக்கிய காரணம் தன் செயல்களுக்கு இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வு இல்லாமல் போவதும் அதுபற்றி மக்களுக்கு போதிக்கப் படாமையுமே. இதன் காரணமாக மக்களிடையே சுயநலமும் வெட்கமின்மையும் வரம்புமீறி வளர்கின்றன.
ஆ) சரியும் தவறும் வரையறுக்கப்படாமை
மக்களின் செயல்பாடுகளில் சரி எவை தவறு எவை நல்லவை எவை தீயவை எவை என்றோ நாட்டில் நியாயம் எது அநீதி எது என்பதையோ தீர்மானிக்க தெளிவான உறுதியான எந்த அளவுகோலும் இல்லாதது நாட்டில் சட்டம் ஒழுங்கு பேணப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாகும். சட்டத்தை எப்படியும் வளைக்கலாம் என்ற நிலையும் என்பது ஆளுக்கு ஒரு நீதி, நாளுக்கு ஒரு நீதி என்று சட்டம் கேலிக்குள்ளாக்கப்படுவது இதன் காரணத்தினால்தான்!  
இ) மிக பலவீனமான தொலைநோக்கு இல்லாத சட்டங்கள்
= பலவீனமானவையும்  சிறிதும் தொலை நோக்கில்லாதவையும் ஆன சட்டங்கள் நடைமுறையில் இருப்பதன் காரணமாக விபச்சாரம், மது, சூதாட்டம், ஓரினச்சேர்க்கை போன்ற சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் குற்றங்கள் கூட சட்ட அங்கீகாரத்தோடு நடைபெறவும் நாளுக்கு நாள் பெருகவும் செய்கின்றன. இவற்றைத் தொடர்ந்து திருட்டும் கொள்ளையும் கற்பழிப்புகளும் கூட எதிர்காலத்தில் சட்ட அங்கீகாரம் பெறக்கூடிய அபாயமும் நாட்டில் உள்ளது.
ஈ) கற்பனைப் பாத்திரங்களின் ஆதிக்கம்
= நாட்டின் சுமார் நாற்பது சதவீத மக்கள் வறுமைக் கோட்டின் கீழே வாழ்ந்துவரும் நிலையில் நாட்டுக்கு அறவே பயனில்லாத பல கற்பனைப் பாத்திரங்களுக்காக நாட்டின் செல்வங்கள் கொள்ளை போகின்றன. தலைவர்களின் சிலைகளுக்கும் மொழித்தாய்களுக்கும் நினைவிடங்களுக்கும் இவற்றைத் தொடரும் மூடநம்பிக்கைகளுக்கும் வீண்சடங்குகளுக்கும் பெருவாரியான செல்வம் அரசால் செலவிடப்படுகிறது. இவற்றின் பெயரால் மூளும் கலவரங்களும் உயிர் மற்றும் உடமை சேதங்களும் பாமரர்களை  தொடர்ந்து வறுமையிலும் வாட்டத்திலும் நீடிக்க வைக்கின்றன.
உ) தகுதியற்றவர்களிடம் ஆட்சிப் பொறுப்பு
= நாட்டின் உற்பத்திக்கோ மேம்பாட்டுக்கோ எந்தவித பங்களிப்பும் செய்யாததும் நாட்டு மக்களை சோம்பேறிகளாக்கவும் செய்கின்ற திரைப்படம் மற்றும் கிரிக்கெட் போன்ற கேளிக்கைகளுக்கு ஊடகங்களும் அரசும் வீண் முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிப்பதால் நாட்டு மக்கள் இதன் பெயரால் வெகுவாக கொள்ளை அடிக்கப் படுகிறார்கள். இவர்கள் நாட்டு மக்களின் உழைப்பின் கனிகளை சுரண்டி வாழ்கிறார்கள். அவர்களின் நேரங்களை பாழ்படுத்துகிறார்கள். ஆனால் மக்களின் அறியாமையால் நாட்டை ஆள்வதற்கு அறவே தகுதி இல்லாத நடிக நடிகையர்களின் காலடிகளில் நாட்டின் ஆட்சி பீடமும் ஒப்படைக்கப் படுகிறது.
ஊ) ஆன்மீகத்தின் பெயரால் கொள்ளை
 இறைவழிபாடு என்ற பெயரில் எல்லா மதங்களையும் சார்ந்த இடைத்தரகர்கள் நாட்டு மக்களிடையே மூடநம்பிக்கைகள் பலவற்றைப் பரப்பி இவற்றின் பெயரால் நாட்டின் செல்வங்களை கொள்ளையடிக்கிறார்கள். இதன்மூலம் பொருட்செலவு இல்லாத எளிமையான வழிபாடு வியாபாரமாக்கப்படுகிறது. நாட்டுமக்களின் சேமிப்பும் உழைப்பும் இவர்களால் கறக்கப்பட்டு இவர்கள் நடத்தும் நிறுவனங்களிலும் ஆசிரமங்களிலும் பதுக்கப்படுகிறது.
) கடவுளின் பெயரால் மனிதகுலத்தில் பிரிவினைகள்
= மதங்களின் பெயரால் திணிக்கப்படும் மூடநம்பிக்கைகளின் விளைவாக  மனித இனம் கூறுபோடப்பட்டு மனித சகோதரத்துவமும் சமத்துவமும் மறுக்கப்படுகிறது.  அதனால் மனிதகுலத்தில் தீண்டாமையும் வெறுப்பும் விதைக்கப்படுகிறது. இவற்றைக் கொண்டு சுயநலமிகள் அரசியல் ஆதாயங்கள் தேடுவதால் இனக் கலவரங்களும் மதக்கலவரங்களும் கற்பழிப்புகளும் படுகொலைகளும் தொடர்கதைகளாகின்றன. 
ஐ) முறையற்ற பொருளாதாரக் கொள்கை:
முறையற்ற வரிவிதிப்பு, வட்டி சார்ந்த வங்கி முறை, அரசியல் வாதிகளின் குறுக்கீடு போன்றவற்றின் காரணமாக நாட்டின் தொழில் வளர்ச்சியும் வணிகமுறைகளும் விபரீதமான முறையில் பாதிக்கப்படுகின்றன. அதனால் கறுப்புப்பணம், பதுக்கல், வரி ஏய்ப்பு இலஞ்ச ஊழல்கள் மலிந்து நாட்டை குட்டிச்சுவராக்குகின்றன.
ஒ) குறைபாடுகள் மலிந்த கல்வித் திட்டம்
கல்வியின் முதல் நோக்கம் மனிதனை பண்புள்ளவனாக ஆக்குவதே. அதற்கான எந்த பாடத்திட்டங்களும் நமது கல்வி முறையில் இல்லை. பொருள் சம்பாதிப்பது ஒன்று மட்டுமே குறிக்கோளாக கொண்டு கல்வி கற்பிக்கப்படுவதால் தங்களுக்காக உழைத்த பெற்றோர்களைப் புறக்கணிக்கவும் முதியோர் இல்லங்களில் சேர்க்கவும் செய்கிறார்கள் அவர்களின் மக்கள். மேலும் வாழ்க்கையில் எந்தவகையிலும் பயன்படாத பலவற்றையும் பாடத்திட்டத்தில் உட்படுத்தி மாணவர்களின் நேரங்கள் கணிசமான அளவில் வீணடிக்கப்படுகிறது.
இந்த தொடரும் கொடுமைகளில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவது எவ்வாறு? இனியோர் விடுதலை என்று பிறக்கும்? ஏங்காத உள்ளங்கள் கிடையாது என்பதை அறிவோம்.
சரி.... இந்நிலை மாற வழியுண்டா?
கண்டிப்பாக உண்டு! ஆம் அன்பர்களே இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் இதற்கோர் தீர்வை கூறாமல் இருப்பானா?
வாருங்கள் அதை அறிய முற்படுவோம்....
நாம் இவ்வுலகில் அமைதியாக வாழ நம்மைப் படைத்தவன் வழங்கிய வாழ்க்கைத் திட்டம்தான் இஸ்லாம் என்று அரபு மொழியில். அறியப்படுகிறது. இவ்வார்த்தைக்கு அமைதி என்றும் கீழ்படிதல் என்றும் இரண்டு பொருள்கள் உண்டு.இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதியைக் காண முடியும். மறுமையிலும் அமைதியை –மோட்சத்தை- அடைய முடியும் என்பது இஸ்லாம் முன்வைக்கும் தத்துவமாகும்.
பாரதத்தைக் காப்போம்!
இறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆன் மற்றும் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை முன்மாதிரி இவ்விரண்டையும் அடிப்படையாகக்கொண்டு மேற்படி அவலங்களில் இருந்து பாரதத்தைக் காப்பாற்ற நாம் மேற்கொள்ளவேண்டிய சீர்திருத்தங்களைப் பற்றி அறிவோம்.
இஸ்லாம் முன்வைக்கும் சில அடிப்படை சீர்திருத்தங்கள்
= தனிநபர் நல்லொழுக்கம்- இதை அடிப்படையாகக் கொண்டுதான் எந்த ஒரு சீர்திருத்தத்தையும் கொண்டு வர முடியும். அதற்கு ஒன்றே மனித குலம் ஒருவனே நம் இறைவன் என்ற உண்மையை ஆழமாக மனித உள்ளங்களில் விதைத்து அந்த இறைவனிடம் இவ்வாழ்க்கைக்குப் பிறகு மீளுதல் உள்ளது, அவனிடம் நம் வினைகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வை எல்லோரிடமும் வளர்க்க வேண்டும். இறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆனும் இறுதி இறைதூதர் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளும் மனிதனை பகுத்தறிவு பூர்வமாக இந்த நம்பிக்கையை விதைத்து நல்லொழுக்கம் வளர்க்க துணை செய்கின்றன. நபிகள் நாயகத்துக்கு முன்னர் வந்த இறைதூதர்களும் இதே அடிப்படைகளைத் தான் மனித மனங்களில் விதைத்து தத்தமது சமூகங்களை சீர்திருத்தி தர்மத்தை நிலைநாட்டிச் சென்றார்கள். இனத்தின், நிறத்தின், குலத்தின், மொழியின் பெயரால் பிரிந்து கிடக்கும் மக்களை இஸ்லாம் இவ்வாறுதான் இணைத்து முதலில் மனித சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுகிறது. இந்த அடிப்படையைத்தான் மற்றெல்லா சீர்திருத்தங்களுக்கும் முதல்படியாக இஸ்லாம் முன்வைக்கிறது. நமது நாட்டிலேயே இக்கொள்கை பெருவாரியான மக்களை ஜாதிக் கொடுமைகளில் இருந்தும் தீண்டாமையில் இருந்தும் காப்பாற்றியுள்ளதை நாம் அறிவோம். அவர்கள் இன்று தோளோடுதோள் நின்று தொழுகை நடத்துவதில் இருந்தும் ஒரே தட்டில் தீண்டாமை மறந்து பகிர்ந்து உண்ணுவதில் இருந்தும் இது ஒரு வேற்று கோஷம் அல்ல என்பது புலனாகும்.
= நன்மை தீமைகளைப் பிரித்தறியும் அளவுகோல்
மனிதனுக்கும் மற்ற ஜீவிகளுக்கும் எது நல்லது எது தீயது என்பதை முழுமையாக அறிந்தவன் அவர்களைப் படைத்த இறைவன் மட்டுமே. அவன் மட்டுமே அனைத்தின் உரிமைகளையும் தேவைகளையும் மிக நுண்ணியமாக ஒருசேர அறிந்தவன். அவன் மட்டுமே அவற்றை மிகப் பக்குவமாக பங்கீடு செய்யத் தெரிந்தவன். நன்மை தீமையைப் பிரித்தறிய அவன் தரும் அளவுகோலே நீதிமிக்கது. மற்றவை அனைத்தும் மாறுபடக்கூடிய மனித இச்சைகளை அடிப்படையாகக் கொண்டவை ஆதலால் குறைபாடுள்ளவை ஆகும். நாட்டை ஆளும் சட்டங்கள் இந்த அடிப்படையை கொண்டு வடிவமைக்கப் படுமானால் நாட்டில் அமைதியையும் நீதியையும் அனைவரும் பெற முடியும். மேலும் அந்த இறைவன்தான் இறுதித்தீர்ப்பு நாளின் அதிபதியும் ஆக இருக்கிறான். அவன் எவுவதை செய்வதே புண்ணியம் அவன் தடுத்ததை செய்தால் அதுவே பாவம்.
=சட்டங்கள் சாசனங்கள் திருத்தம்  
மனிதனுக்கு தனிநபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் அந்த இறைவன் பரிந்துரைக்கும் சட்டங்களே குறைகள் அற்றவையாகும். தொலைநோக்கும் நீதியும் நிறைந்ததாகும். அவை இறைத்தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் வழங்கப்பட்டு தூதர்களின் முன்மாதிரி வாழ்க்கை மூலமாக நிரூபிக்கப்பட்டவை ஆகும். ஆகவே அவற்றை அடிப்படையாகக் கொண்ட வாழ்வியல் சட்டங்கள்,  குடும்பவியல் சட்டங்கள், குற்றவியல் சட்டங்கள் போன்றவை நிர்ணயிக்கப்பட்டு நாட்டின் நீதித்துறையும் அரசியல் சாசனங்களும் திருத்தப்பட்டு அவை  பேணப்பட்டால் இவ்வுலகிலும் அமைதியான வாழ்க்கை அமையும். மறுமையிலும் அமைதியின் இருப்பிடமான சொர்க்கத்தை அடையலாம்.
= ஆட்சிப்பொறுப்பு என்பது அமானிதம்
ஆட்சிப் பொறுப்பு என்பது இறைவன் வழங்கும் அமானிதம் ஆகையால் அவர்கள் இறைவனால் விசாரிக்கப்படுவார்கள் என்ற பொறுப்புணர்வோடு ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும். குடிமக்களின் குறைகள் நியாயமானதாக இருக்கும்பட்சம் அவை நிவர்த்தி செய்யப் படாமல் இருந்தால் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்கள் இறைவன் முன் குற்றவாளிகளே. இந்த அச்சம் ஆட்சியாளர்களை பொறுப்புணர்வு மிக்கவர்களாக ஆக்குகிறது. அதனால் சரித்திரத்தில் பல இஸ்லாமிய ஜனாதிபதிகள் இரவுபகலாக கண்விழித்து மக்கள் சேவையாற்றினார்கள். காந்தியடிகள் கலீபா உமரின் ஆட்சி போன்று இந்தியாவில் வரவேண்டும் என்று ஆசைப்பட்டது இதனால்தான்.
= பொருளாதாரக் கொள்கை
செல்வம் என்பது இறைவனுக்கு சொந்தமானது என்பதும் அது இந்த வாழ்க்கையில் இறைவனால் மனிதனுக்கு தற்காலிகமாக வழங்கப்படும் ஒரு அமானிதப் பொருள் என்பதும் இஸ்லாம் மனிதனுக்கு உணர்த்தும் உண்மைகளாகும். அந்த அடிப்படையில் இஸ்லாமிய முறையில் செல்வந்தர்கள் பொருளீட்டுவதற்கு சுதந்திரம் வழங்கப்படும் அதேவேளையில் அவர்கள் ஈட்டும் செல்வத்தின் ஒரு பகுதி அரசால் வசூலிக்கப்பட்டு அது ஏழைகளிடையே பங்கிடப்படும். இஸ்லாம் பரிந்துரைக்கும் ஜக்காத் என்ற கட்டாய தானம் ஒரு மிதமான வரிவிதிப்பு போன்றது சமூகத்தில் தகுதி உள்ளவர்களுக்கு வறியோர்க்கு அது பகிர்ந்து அளிக்கப்படுவதால் வறுமை நடைமுறையில் ஒழிக்கப் படுகிறது. அதேவேளையில் இன்று நம்நாட்டில் காணப்படும் வரம்புக்கு மீறிய வரிவிதிப்பால் (உதாரணமாக 40%) உண்டாகும்  கருப்புப்பணம், வெளிநாடுகளில் பணம் பதுக்குதல் போன்ற விபரீதங்களையும் மோசடிகளையும் இலஞ்ச நடைமுறையையும் தவிர்த்து உள்நாட்டிலேயே அப்பணம் சுதந்திரமாகப் புழங்க வழிவகை செய்கிறது இஸ்லாம்.
மேலும் வட்டியை இஸ்லாம் அடியோடு தடை செய்வதால் அங்கு போலியான பொருளீட்டலும் ஊகவணிகங்களும் அதைத் தொடர்ந்த பொருளாதார மோசடிகளும் பணவீக்கம் போன்றவைகளும் இல்லாமல் போகின்றன.
= கல்வி முறை
நாட்டின் வளர்ச்சிக்கும் அமைதிக்கும் வளரும் தலைமுறைகளுக்கு கொடுக்கப்படும் கல்வியும் பயிற்சியும் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது.
குழந்தைகளுக்குக் கல்வியைக் கற்பிப்பதன் தலையாய நோக்கம் மனிதனை சீர்படுத்தி அவனை பண்புள்ளவனாக ஆக்கவேண்டும் என்பதாக இருக்கவேண்டும். மாறாக  உணவை சம்பாதிப்பதற்கான வழிகளைத் தேடுவது இரண்டாவது இடத்தில்தான் இருக்க வேண்டும். உண்மையில் அதற்குக் கல்வி கற்பதன் அவசியமும் இல்லை. காரணம் மனிதனை விட அறிவு குறைந்த விலங்கினங்களும் பறவைகளும் மீன்களும் எல்லாம் தங்களின் உணவை எளிதாகவே அடைவதைப் பார்க்கிறோம்.
 மனிதன் தன் பகுத்தறிவை முறைப்படி பயன்படுத்தவும் அதைக்கொண்டு இவ்வுலகை ஆராயவும் அதன் விளைவாக இவ்வுலக வளங்களை மனிதகுலத்துக்கு பயன்படும் வண்ணம் ஆக்கபூர்வமான செயல்களுக்கு தூண்டுகோலாக பாடத் திட்டங்கள் அமைய வேண்டும். அத்துடன்
படைத்த இறைவனைப் பற்றியும் இந்தத் தற்காலிக உலகில் மனித வாழ்வின் நோக்கம் பற்றியும் அறிவூட்டும் கட்டாயப் பாடங்கள் மனிதனின் பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளும் வண்ணம் போதிக்கப் படவேண்டும். அப்போதுதான் மனிதன் தன் செயல்களுக்கு இறைவனிடம் விசாரணை உண்டு என்பதையும் மரணத்திற்குப் பிறகு தனக்கு சொர்க்கம் அல்லது நரகம் உண்டு என்பதையும் 
அறிந்து பொறுப்புணர்வோடு வாழ்வான். அதேவேளையில் நீதிபோதனைகள் என்ற பெயரில் மூடநம்பிக்கைகளை போதித்தால் குழந்தைகளிடம் கடவுள் நம்பிக்கை வளராது. நாத்திகமும் போலி பக்தியும்தான் வளரும். நன்னடத்தை வளராது, சுயநலம்தான் வளரும், நாட்டில் பாவங்கள் மலியும்!
= உண்மையான இறையச்சத்தைப் வளர்ப்பதற்கு அடுத்தபடியாக குழந்தைகளுக்கு போதிக்கப் படவேண்டியது நன்மை எது தீமை எது என்பது பற்றிய கல்வியாகும்.. அதாவது இறைவனின் பார்வையில் எது பாவம் எது புண்ணியம் என்பதை அறிந்தால்தான் மனிதனால் இறைவனின் ஏவல் விலக்கல்களை அறிந்து கொண்டு செயல்படமுடியும்.  இப்படிப்பட்ட நீதிபோதனைகளை கட்டாயப் பாடமாக்கி அத்துடன் மற்ற பாடங்களை போதிக்கும்போதுதான் மனிதன் தான் பெற்ற கல்வியை ஆக்கபூர்வமான செயல்களுக்கு பயன்படுத்துவான். இல்லையேல் அது அழிவுக்குத்தான் பயன்படும். அதைத்தான் இன்று வல்லரசுநாடுகளின் செயல்பாட்டில் காண்கிறோம்.
= தன் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும் ஒரு மாணவனுக்கு  தன் வாழ்வாதாரங்களை தேடும் திறமை மட்டும் இருந்தால் போதாது. அவன் தன் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் ஆற்றவேண்டிய கடமைகள் குறித்தும் சமூகத்தை பாதிக்கக் தீமைகள் குறித்தும் அறிவும் விழிப்புணர்வும் அவனுக்கு மிகமிக அவசியம். மேலும் அரசாங்க அலுவலகங்களின் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள் பற்றியும் அறிவும் தேவை அப்போதுதான் சமூகத்தில் நன்மைகளை ஏவி தீமைகளைத் தடுக்கும் பொறுப்புணர்வுள்ள குடிமக்கள் உருவாகுவார்கள்.
= ஒரு ஆரோக்கியமான சமூகம் அமையவேண்டுமானால் அதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவரவர் உடல் இயற்கைக்கும் சக்திக்கும் ஏற்றவாறு கடமைகளும் உரிமைகளும் வேறு வேறு என்பதை நாம் இனியாவது உணர்ந்து திருந்த வேண்டும். இறைவன் எவற்றை ஆண்களுக்கு கடமையாக்கி இருக்கிறானோ அதற்கேற்ற படிப்பை ஆண்களுக்கும் எவற்றை பெண்களுக்குக் கடமையாக்கி இருக்கிறானோ அதற்கேற்ற படிப்பை பெண்களுக்கும் புகட்ட வேண்டும். இன்று பள்ளிகளில் நாம் கண்டுவரும் அவலங்கள் – அதாவது கர்ப்பிணிக் குழந்தைகளும் கள்ளக்காதல்களும் கொலைக் கலாசாரமும் - ஒழிய வேண்டுமானால் இனிமேலாவது இறைவன் நமக்கு விதித்த வரம்புகளை மீறக்கூடாது. பத்து வயதுக்கு மேறப்பட்ட ஆண்களும் பெண்களும் தனித்தனி பள்ளிகளில்தான் பயிற்றுவிக்கப் படவேண்டும். சிரமங்கள் பல இருந்தாலும் இதை மேற்கொண்டால் சமூகமும் நாடும் சமூகச் சீர்கேடுகளில் இருந்தும் இன்னபிற நாசங்களிலிருந்தும் இறைவனின் தண்டனைகளில் இருந்தும் காப்பாற்றப் படும்.
===================
சுருக்கமாக கூறுவதென்றால் இஸ்லாம் முன்வைக்கும் சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வருமானால் கீழ்கண்டவை இங்கே நடைபெறும்....
மனித இதயங்களில் இறைவனைப் பற்றியும் மறுமை வாழ்வு பற்றியும் முறையான நம்பிக்கை விதைக்கப் படுவதால் பாவங்கள் விலகும். மனிதனை சுயக்கட்டுப்பாடு மிக்கவனாக கடமை உணர்வு மிக்கவனாக அது வார்த்தெடுக்கும்.  அநீதியும், அக்கிரமங்களும் மோசடிகளும் அழிந்து அங்கே தர்மங்களும், நல்லறங்களும் நீதியும் நேர்மையும் பரஸ்பரம் விட்டுக்கொடுக்கும் பண்பும் நாட்டுவளங்களை நெறியோடு பங்கிட்டுக் கொள்ளும் மனப்பாங்கும் மக்களிடையே வளர்ந்து வரும்.
மனித உள்ளங்களில் உண்மையான இறை உணர்வும் பக்தியும் மறுமை உணர்வும் விதைக்கப் படுவதாலும் அவனோடு நேரடித் தொடர்பு ஏற்படுவதாலும் தனி நபர் வாழ்வில் தன்னம்பிக்கை, சுயமரியாதை உணர்வு, வீரம்,   பாவங்களில் இருந்து விலகியிருத்தல், தியாகமனப்பான்மை, பொறுமை, பிற உயிர்களிடம் அன்பு, பணிவு போன்ற நற்பண்புகள் மக்களின் வாழ்வில் தழைக்கும். 
பொய்க் கடவுளர்களும் போலி தெய்வங்களும் இடைத்தரகர்களும் ஒழிந்தால் கடவுளின் பெயரால் சுரண்டப்படுதலும் கொள்ளைகளும் மூடநம்பிக்கைகளும் மூடப்பழக்கவழக்கங்களும் வீண்சடங்குகளும் ஒழியும். பொருட்செலவின்றி நேரடியாக இறைவனை வழிபடுவார்கள். இந்த நிமிடம் வரையும் அயராமல் நடைபெறும் பகல் கொள்ளைகள் முடிவுக்கு வரும்.  தொடர்ந்து நாட்டில் செல்வ வளம் செழித்தோங்கும், ஆக்கபூர்வமான வழிகளில் நாட்டின் செல்வம் செலவிடப்படும்.
 ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற கொள்கை மேலோங்க ஜாதிகளும்  தீண்டாமையும் ஏற்றதாழ்வுகளும் இனவெறியும் நிறவெறியும் ஒழியும். இனத்துக்கு ஒரு நீதி, நாட்டுக்கு ஒரு நீதி மாநிலத்துக்கு ஒரு நீதி என்னும் நிலைமாறி அனைத்து மக்களுக்கும் ஒரே நீதி என்பது நடைமுறைக்கு வரும். மனித சமத்துவமும் சகோதரத்துவமும் சுயமரியாதையும் பரஸ்பர அன்பும் மலரும்.
. பகுத்தறியும் பண்பு தூண்டப்படுவதால் அங்கு அறியாமை அகன்று மனிதகுலத்துக்கு பயனுள்ள கல்வியும் அறிவியலும் வளரும். இறையச்சத்துடன் இணைந்து கற்கப்படும் கல்வியும் அறிவியலும் மனித இனத்தை அழிக்கவோ அதன்மேல் ஆதிக்கம் செலுத்தவோ பயன்படுத்தப்பட மாட்டாது. மாறாக ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்தப்படும். இறைவனின் வல்லமையையும் மறுமையின் உள்ளமையையும் உணரவும் இறையச்சத்தை வளர்க்கவும் பயன்படும். 
 பகைமைகளும் மோசடிகளும் அகன்று போவதால் பாதுகாப்பும் அமைதியும் சூழ ஒரு புத்துலகு பூத்து வரும். யாதும் ஊரே யாவரும் கேளிர்என்ற கோட்பாடு உண்மையாகப் பின்பற்றப்படும். நாடுகளைப் பிரித்து நிற்கும் எல்லைகள் மறையும், நாடுகளின் மூன்றில் ஒரு பங்கு பொருளாதாரத்தை விழுங்கி நிற்கும் இராணுவங்கள் மறையும்.

 இறை நேசத்துக்காகவும் மறுமை இன்பங்களுக்காகவும் வேண்டி எதையும் தியாகம் செய்யும் தன்னலமில்லாத சான்றோர்களால் அவ்வுலகு நிறைந்திருக்கும்!   

வியாழன், 27 மார்ச், 2014

விண்வெளியில் ஒரு பரீட்சைக்கூடம்!


விமானத்தில் பறந்து செல்ல ஆசை நம் அனைவருக்கும் உண்டுதானே..
 நீங்கள் ஒரு கம்பெனியில் ஒரு வேலைக்காக விண்ணப்பித்து இருந்தீர்கள்... அதற்கு பதிலாக அந்த கம்பெனி உங்களை ஒரு தேர்வுக்காக அழைக்கிறது... அது ஒரு வித்தியாசமான அழைப்பு... அந்த தேர்வு இம்முறை விண்வெளியில் என்கிறது அந்த அழைப்பு! ... ஒரு விண்கலத்தில் அமர்ந்து அந்த தேர்வை எழுதி வர வேண்டும்... போவீர்களா, மாட்டீர்களா?
விண்வெளியில் பறக்க வாய்ப்பு கிடைத்தால் அதை நழுவவிடுவோமா? அதுவும் இலவசமாக கிடைப்பது என்றால்...?

நீங்கள் நழுவவிட்டாலும் உங்களைப் படைத்தவன் விடுவதாக இல்லை. ஆம்... உங்களைப் படைத்த பின் உங்களை ஒரு விண்கலத்தின் மீது தான் விட்டுள்ளான்.  ஆம் அதுவே பூமி என்ற பிரமாண்டமான விண்கலம்!
ஆம் அன்பர்களே, நம்மில் பலரும் வாழ்க்கைக்காக உழைப்பதிலும் உழைத்து சம்பாதித்ததை செலவு செய்வதிலும் ரொம்பவும் பிசியாக இருப்பதால் இந்த உண்மைகளின் பக்கம் கவனம் செலுத்த நேரம் கிடைப்பதில்லை என்பது உண்மைதான்...
உங்கள் முகவரி என்ன என்று கேட்டால், கதவு எண், தெருப்பெயர், ஊர், மாவட்டம், மாநிலம், நாடு இவற்றோடு நிறுத்திக் கொள்கிறோம். ஆனால் அதற்கப்பாலும் உள்ள முகவரியை நாம் அறிந்து கொள்ளவேண்டாமா?
வாருங்கள்.... அவற்றைப் பற்றியும் சிறிது அறிந்து கொள்வோம்...
இதோ நம்மைப் படைத்த இறைவனே நம்மை இவற்றைப்பற்றி ஆராயுமாறு அழைக்கிறான்....
= பூமி எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் (ஆராய்ந்து) பார்க்க வேண்டாமா? (அல்குர்ஆன் 88: 20)

= வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதில் இரவு பகல் மாறிமாறி வருவதிலும் அறிவுடையோருக்கு சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 3:190)

இரவும் பகலும் நம் மீது மாறி மாறி வருவதைப் பற்றியும் வானில் கண்சிமிட்டும் விண்மீன்களைப் பற்றியும் நமக்கு அருகாமையில் உள்ள சந்திரன் மற்றும் சூரியன் இவற்றின் சலனங்களையும் பற்றி கவனமாக சிந்தித்தாலே நாம் ஓரிடத்தில் நிற்கவில்லை என்பதை அறியலாம். நாம் நமது அறைக்குள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும் நம்மை சுமக்கும் பூமி என்ற விண்கலம் தன் பயணத்தை நிறுத்துவதில்லை. பூமியானது தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வருகிறது. அறிவியல் நமக்கு இன்று கற்றுத்தரும் உண்மைகள் இவை:
=. பூமி சூரியனைச் சுற்றும் தூரம் 68 கோடியே 39 இலட்சம் மைல்கள்.
=. பூமியோடு சேர்ந்து நாமும் ஒரு வினாடிக்கு 18.5 மைல்கள் பிரயாணம் செய்கிறோம்.
=  பூமி தன்னைத் தானே சுற்றுவதில் நாம் வினாடிக்கு 1525 அடி நகர்ந்து போகிறோம்.
=. பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிவர ஒரு முழு நாள் ஆகும். (அதாவது 23 மணி நேரமும், 56 நிமிடங்களுமாகும்.)
= பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஒரு வருடம் ஆகும்..(அதாவது 365 நாட்களும் 6 மணி நேரமும், 46 நிமிடங்களும். 48 வினாடிகளுமாகும்.)
=  சந்திரனோ பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கிறது.
=  பூமியும் ஏனைய கிரகங்களும், அதற்கென நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பிறழாமல் சுற்றிக்கொண்டே இருக்கின்றன.
=  பூமியிலிருந்து சற்திரன் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிம் மைல்களுக்கு அப்பால்இருக்கிறது.
ஆக,  நாம் செய்து கொண்டிருக்கும் விண்வெளிப்பயணம் எப்படிப்பட்டது? எத்தனை விதமான பயணங்கள் பாருங்கள்...
= தன்னைத்தானே சுற்றும் பயணம்!
= சூரியனை சுற்றும் பயணம்!
=  சூரியன், சதிரன், நட்சத்திரங்கள், மற்றும் கிரகங்கள் இவற்றோடு சேர்ந்து செய்யும் பிரபஞ்சப் பயணம்.! இங்கேயும் முடியவில்லை.
= பிரபஞ்சம் முழுமையாக சேர்ந்து அண்ட வெளியில் வெளிநோக்கி வளையமடித்துக்கொண்டு போகும் பயணம்!

இவ்வாறு நான்கு விதமான பயணங்கள் செய்து கொண்டே இருக்கிறோம். அத்தனையும் இலவசம்! அதே நேரம் நாம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வீட்டிலே நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறோம்.

36:37. இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும்; அதிலிருந்து பகலை கழற்றி விடுகிறோம்; அதனால் இவர்கள் ஆழ்ந்த இருளிலாகிவிடுகிறார்கள்.
36:38. இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும்.
36:39. இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம்.
36:40.சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.

இவையெல்லாம் எதற்காக? இப்பயணங்கள் எதை இலக்காகக்கொண்டு நடைபெறுகின்றன? நாம் கண்டும் காணாமல் இப்படியே இருந்துவிட்டால் இதை நடத்திக்கொண்டு இருப்பவன் சும்மா விடுவானா? அவன் வீணுக்காக இதை செய்கிறானா? நாம் சிந்திக்க வேண்டாமா அன்பர்களே?
23:115. ''நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?''
இறைவனின் இக்கேள்விக்கான பதிலை சிந்திக்கும்போதுதான் இறைத்தூதர்களும் இறைவேதங்களும் நமக்கு எடுத்துச் சொல்வது உண்மை என்று புலப்படும். அந்த உண்மை என்னவெனில் இவ்வுலகை இறைவன் ஒரு பரீட்சைக் கூடமாகப் படைத்துள்ளான் என்பதெ!.

ஆம், இந்த பூமியென்ற விண்கலத்தின் மீதமர்ந்து நாம் செய்யும் இந்த குறுகிய சவாரியின் நோக்கம் மறுமை வாழ்வில் நம் இருப்பிடத்தை முடிவு செய்வதற்காகவே! இறைவனுக்கு கீழ்படிந்து வாழ்வோர் இப்பயணத்தின் இறுதியில் சொர்க்கத்தை சென்றடைகிறார்கள். அல்லாதோர் நரகத்தை சென்றடைகிறார்கள்.

வெள்ளி, 21 மார்ச், 2014

திருக்குர்ஆன் மலர்கள்: பாங்கோசையும் நாய்கள் ஊளையிடுதலும்!

திருக்குர்ஆன் மலர்கள்: பாங்கோசையும் நாய்கள் ஊளையிடுதலும்!: தொழுகைக்கான அழைப்புக்கு பாங்கு என்று சொல்லப்படும். நீங்கள் காலை வேளையில் பள்ளிவாசல்களில் இருந்து இந்த அழைப்பு விடப்படும்போது சுற்றி...

பாங்கோசையும் நாய்கள் ஊளையிடுதலும்!



தொழுகைக்கான அழைப்புக்கு பாங்கு என்று சொல்லப்படும். நீங்கள் காலை வேளையில் பள்ளிவாசல்களில் இருந்து இந்த அழைப்பு விடப்படும்போது சுற்றிலும் உள்ள நாய்களும் கூடவே ஊளையிட்டுக் கதற ஆரம்பிப்பதைக் கண்டிருப்பீர்கள். இது ஏன்?
தொழுகைக்கான பாங்கு சப்தம் எழும்போது அங்கு என்ன நடக்கிறது?
நாம் கண்ணால் காணாத பலவிடயங்கள் நம்மைச் சுற்றி நடக்கின்றன என்பதை இறைவனின் தூதருக்கு இறைவன் அறிவித்துக் கொடுத்த செய்திகளில் இருந்து அறிகிறோம். இதோ நபிகளார் கூறுகிறார்கள்:
தொழுகைக்காக (பாங்கு என்ற) அழைப்புக் கொடுக்கப்படும்போது, பாங்கு சப்தத்தைக் கேட்கக் கூடாது என்பதற்காகச் சப்தமாகக் காற்றுப் பிரிந்தவனாக ஷைத்தான் புறமுதுகு காட்டி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடிந்ததும் திரும்பி வருகிறான். தொழுகைக்கு இகாமத்’ (தொழுகைக்கு அணிவகுத்து நின்றதும் விடப்படும் மறு அழைப்பு) கூறும் போதும் ஓடுகிறான். இகாமத் சொல்லி முடிந்ததும் முன்னோக்கி வந்து தொழுகையாளிக்கும் அவரின் மனதிற்குமிடையில் இருந்து கொண்டு தொழுகையாளி அவரின் மனதிற்குமிடையில் இருந்து கொண்டு தொழுகையாளி அதற்கு முன்பு வரை நினைத்திராத விஷயங்களையெல்லாம் அவருக்கு நினைவூட்டி, “இதை நீ நினைத்துப் பார்; அதை நீ நினைத்துப் பார்,“ என்று சொல்லிக் கொண்டு இருப்பான். தொழுகையாளி தாம் எத்தனை ரக்அத்கள்(சுற்றுக்கள்) தொழுதோம் என்று சந்தேகம் ஏற்படும் அளவிற்கு ஷைத்தான் அவ்வாறு செய்து கொண்டிருப்பான். 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  (நூல் - ஷஹீஹ் புகாரி 608)
 ஆக ஷைத்தான் என்னும் நம் கண்களுக்குப் புலப்படாத ஜீவராசி பாங்கு கொடுக்கப்படும் சத்தத்தைக் கேட்டதும் அங்கிருந்து ஓட்டமெடுக்கிறான் என்பதை அறிகிறோம். சரி, அதற்கும் நாய் ஊளையிடுவதற்கும் என்ன தொடர்பு? அதையும் மற்றொரு நபிமொழியில் இருந்தே அறிகிறோம்....
= நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இரவு நிசப்தமாக அமைதியுறும்போது வீட்டை விட்டு வெளியில் செல்வதைத் குறைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் படைத்த பல ஜீவராசிகளை பரவவிடுகிறான். யாராவது நாய் குரைப்பதையோ கழுதை கத்துவதையோ கேட்க நேரிட்டால் அவர் சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக் கொள்ளட்டும், காரணம் நீங்கள் பார்க்காத ஒன்றை அவை பார்க்கின்றன.” (அறிவிப்பவர்: ஜாபிர் அப்துல்லாஹ் (ரலி) நூல்கள்: அஹ்மத், ஹாகிம், அபுதாவுது)
= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் சேவல் கூவுகின்ற சப்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனது அரு ளைக் கேளுங்கள். ஏனெனில், அது வானவரைப் பார்த்திருக்கிறது. கழுதை சப்தத்தைக் கேட்டால் ஷைத்தானிடமிருந்து காக்குமாறு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கின்றது
(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி), (நூல்: முஸ்லிம்-5275)
இவ்வாறு ஷைத்தான் வெருண்டோடுவதை நாய்கள் காண்பதால்தான் அவை குரைக்கவும் ஊளையிடவும் செய்கின்றன என்பதை மேற்கண்ட நபிமொழிகளில் இருந்து அறியலாம். அப்படியென்றால் மற்ற தொழுகை வேளைகளில் இது நடைபெறுவதில்லையா? ... இந்த சந்தேகம் எழுவது இயல்பே. காலை வேளைகளில் ஊரடங்கி இருப்பதாலும் நாய்கள் தெளிவாக ஷைத்தானை கவனிக்கும் வாய்ப்புகள் அதிகம். நாமும் நாய்கள்  சப்தமிடுவதை தெளிவாகக் கேட்கவும் முடிகிறது. மற்ற வேளைகளில் இது குறைவு. இறைவனே மிக அறிந்தவன்.

இந்த விளக்கம் நபிமொழிகள் என்பவை இறைவன் தனது தூதருக்கு அறிவித்துக் கொடுத்த செய்திகளே என்பதை உறுதிப் படுத்துகின்றன.

வியாழன், 20 மார்ச், 2014

திருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நிவாரணமும்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய ஏக இறைவனின் திருப்பெயரால்.......

திருக்குர்ஆன் என்பது என்ன?
திருக்குர்ஆன் என்பது இந்த அகிலத்தைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவனால் அவனது இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் அருளப்பட்ட இறை வசனங்களின் தொகுப்பாகும். இது ஒரு குறிப்பிட்ட நாட்டினருக்கோ மொழியினருக்கோ சமூகத்துக்கோ அல்லது முஸ்லிம்களுக்கு   மாத்திரமோ அருளப்பட்டது அல்ல. மாறாக அகில உலக மக்களுக்கும் பொதுவாக அவர்களைப் படைத்தவனால் அருளப்பட்ட வழிகாட்டி நூலாகும்.   
இது இறைவனின் திருவேதமாகும், இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை.பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (திருக்குர்ஆன் 2:2)
இது இவ்வுலகின் உரிமையாளனான இறைவனின் அறிவுரைகள் என்பதாலும் அவனது இறுதி வேதம் என்பதாலும்   இன்று வாழும் மக்கள் யாவரும் இதன் படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள கடமைப் பட்டுள்ளார்கள்.
வாருங்கள், அந்த வேதத்தின் அடிப்படையில் நோய் பற்றியும், அதன் நிவாரணம் பற்றியும் பாவ நிவாரணம் பற்றியும் அறிந்து செயல்படுவோம்.
நோய் வந்தால்.......
நமக்கோ குழந்தைகளுக்கோ நமக்கு வேண்டியவர்களுக்கோ திடீரென நோய் வந்து விட்டால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது.. நிம்மதியை இழந்து விடுகிறோம். சில அடிப்படையான விஷயங்களைப் புரிந்து கொண்டு அவற்றை மனதில் இருத்தி அதன்படி செயல்பட்டால் நோயும் குணமாகும், அந்த நோய் கொண்டுவரும் உடல்ரீதியான, மனரீதியான, மற்றும் பொருள்ரீதியான இழப்புகளில் இருந்தும்  நாம் நம்மை சுதாரித்துக் கொள்ளலாம்.
நோய் ஏன் வருகிறது?
முதலில் நோய் ஏன் வருகிறது? பல பதில்களை நாம் அறிந்திருந்தாலும் அது நம்மைப் படைத்தவன் புறத்திலிருந்து எச்சரிக்கை என்பதை அதிமுக்கியமாக நாம் உணர வேண்டும்! கண்களை மூடிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் குதிரையை அதன் மேலுள்ள குதிரைஒட்டி மெதுவாக கடிவாளம் கொண்டு இழுக்கும் போது அக்குதிரை நிதானத்தை அடைகிறது. அதுபோன்ற ஒரு செயலே நோய் என்பதும்!
மனிதன் அன்றாட வாழ்க்கையில் ஈடுபடும்போது இறைவனைப் பற்றியோ, இறைவன் புறத்திலிருந்து அனுபவித்துக் கொண்டு வரும் எண்ணற்ற அருட்கொடைகளைப் பற்றியோ சிறிதும் பொருட்படுத்துவதில்லை. தன்னிலை மறந்து கண்ணை மூடியவனாக ஓடிக்கொண்டிருக்கும் அவன் அவனது உடல், பொருள் ஆவி என அனைத்துக்கும் சொந்தக்காரன் தன்னைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன்தான் என்பதை மறந்து விடுகிறான். அவனது கருணை இல்லாமல் தன்னால் இங்கு வாழ முடியாது என்பதையும் அவன் கொடுத்துவரும் எண்ணற்ற அருட்கொடைகளுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறான் என்பதையும் எளிதாக மறந்து விடுகிறான். அப்படிப்பட்ட மனிதனை நிதானப் படுத்த இறைவன் விடுக்கும் எச்சரிக்கையே நோய் என்பது! நோய் வரும் முன் வரை தனது உடல் இயக்கங்களை சமநிலையில் இயக்கிவந்த இறைவனின் கருணையை நினைவூட்ட வருகிறது நோய்! அவ்வாறு இறைவனை நினைவூட்டி மனிதனை பாவங்களில் இருந்து மீட்டு நல்லவனாக மாற்ற வருகிறது நோய்!
எனவே நோய் வரும்போது நாம் மிக மிக முக்கியமாக உணர வேண்டியவை :
படைத்தவனை உணர்வோம்
·  நம்மைப் படைத்து பரிபாலித்து வரும் கருணை மிக்க இறைவன் ஒருவன் இருக்கிறான்.
·  நாம் இதுவரை தங்கு தடையின்றி அனுபவித்து அருட்கொடைகளுக்கு நம் இறைவனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
·  அந்த ஒருவன் மட்டுமே நம் அனைவருக்கும் இறைவன். அவனை மட்டுமே நாம் வணங்க வேண்டும். அவன் மட்டுமே நம் பிரார்த்தனைகளுக்கு பதில் அளிக்க முடியும். அவன் எப்படிப்பட்டவன்?
திருக்குர்ஆனில் இறைவன் தன்னைப் பற்றிக் கூறுகிறான் :
நபியே நீர் கூறுவீராக! அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.  (திருக்குர்ஆன் 112: 1-4)
 (அல்லாஹ் என்றால் அரபு நாட்டுக் கடவுள் என்றோ முஸ்லிம்களின் குலதெய்வம் என்றோ கருதி விடாதீர்கள். இவ்வுலகைப் படத்துப் பரிபாலித்து வரும் ஏக இறைவனுக்கு அரபு மொழியில் அல்லாஹ் என்று கூறப்படும். திருக்குரான் இறைவனைக் குறிக்க அந்த வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறது.)
அப்படிப்பட்ட இறைவனை நேரடியாக விளித்துப் பிரார்த்திக்க வேண்டும். நமக்கு வாய்த்துள்ள கஷ்டங்களையும் குறைகளையும் நீக்குமாறு முறையிட வேண்டும். நோயிலிருந்து விரைவில் நிவாரணம் நல்குமாறு கோர வேண்டும். நமது குறைகளை நமது இறைவனிடம் முறையிட எந்த இடைத்தரகர்களையும் நாடக்கூடாது. அவனுக்கு இணையாக வேறு யாரையும் தெய்வங்கள் என்று கருதி வணங்கக்கூடாது. உயிரும் உணர்வும் அற்ற உருவங்களை நோக்கி கடவுளே என்று அழைத்து அவனை இழிவு படுத்தக் கூடாது.
30:40 'அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.'
திருக்குர்ஆனில் இறைவன் நமக்கு இவ்வாறு பிரார்த்திக்குமாறு கற்றுத்தருகிறான். இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம் (குர் ஆன் 1 : 4)
·  படைத்தவனை விட்டு விட்டு அவனது படைப்பிங்களை வணங்குவதோ அவைகளிடம் பிரார்த்திப்பதோ நமக்கு எந்த பயனையும் தராது. அது பாவமாகும். அதனால் நோயும் குணமாகாது மாறாக இறைவனது கோபத்தை அது தூண்டும். திருமறை மூலம் இறைவன் கற்றுத்தருவதைப் பாருங்கள்
;'அவனே என்னைப் படைத்தான்; பின்னும், அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான்.அவனே எனக்கு உணவளிக்கின்றான்; அவனே எனக்குக் குடிப்பாட்டுகிறான். நான் நோயுற்ற கால்த்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான். மேலும் அவனே என்னை மரிக்கச் செய்கிறான்; பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான்.' (குர்ஆன் 26:78-81)
மேற்கண்டவற்றை உணர்ந்து நம்மைப் படைத்தவன்பால் திரும்பி  பாவ மன்னிப்பு கோர வேண்டும்.
அடுத்ததாக நாம் உணரவேண்டியது:
இவ்வாழ்க்கை என்பது ஓர் பரீட்சை
·  இவ்வுலக வாழ்க்கை என்பது தற்காலிகமானது. அழியக்கூடியது. இதை இறைவன் ஒரு பரீட்சைக் கூடமாக ஏற்படுத்தியுள்ளான்.
67:2 உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்¢ மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்,  மிக மன்னிப்பவன்.
·  ஒருநாள் இவ்வுலகம் முற்றாக அழிக்கப் படும். மீண்டும் இறைவனிடமிருந்து கட்டளை வரும்போது இவ்வுலகில் வாழ்ந்து மறைந்த அனைவரும்- அதாவது இப்பூமியின் மீது தோன்றிய முதல் மனிதனில் இருந்து கடைசி மனிதன்வரை அனைவரும்- மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பபடுவார்கள். அந்த நாள் தான் இறுதித்தீர்ப்பு நாள் எனப்படும்
·  எனவே இங்கு வாழும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சூழ்நிலைகளும் வசதிகளும் கொடுக்கப் படுகின்றன. சிலருக்கு செல்வமும் சிலருக்கு வறுமையும் சிலருக்கு ஆரோக்கியமான உடல்கட்டும் சிலருக்கு உடல் ஊனமும் என மாறி மாறி கொடுக்கப்பட்டு இங்கு மனிதர்கள் பரிசோதிக்கப்படுகிறார்கள். அது மட்டுமல்ல, இங்கு அமைதி, அட்டூழியம் அக்கிரமம், நியாயம், அநியாயம் என பல சூழ்நிலைகளையும் கடந்து செல்ல வேண்டி வரும், இது ஒரு தற்காலிகமான சோதனைக்கூடம் என்பதால்!
மறுமை வாழ்க்கையே உண்மையானது   
21:35 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது¢ பரீட்சைக்காக கெடுதியையும் நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர் நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
இங்கு இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்பவர்களுக்கு மறுமையில் சொர்க்கத்தைப் பரிசாக வழங்குகிறான். கட்டுப்படாமல் தான்தோன்றித் தனமாக வாழபவர்களுக்கு தண்டனையாக நரகத்தை வழங்குகிறான்.
·  நமது உண்மையான மற்றும் நிலையான முடிவில்லாத வாழ்க்கை என்பது மரணத்துக்குப் பிறகு உள்ள வாழ்க்கைதான். அது ஒன்று சொர்க்கத்தில் அமையும் அல்லது நரகத்தில் அமையும். இவை இரண்டும் அல்லாத வேறு ஒரு வாழ்க்கை கிடையாது.
·  இன்று நமக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கை என்ற வாய்ப்பு ஒரே ஒரு முறை கிடைப்பது. மீண்டும் மீண்டும் பிறப்பது என்பது கிடையாது. அதுவும் அவரவரது மரணம் வரை மட்டுமே இவ்வாய்ப்பு நீடிக்கும்.
3:185 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்¢ அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான் உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்¢ எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்¢ இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.
·  எனவே இவ்வாழ்க்கை என்ற பரீட்சையில் சஞ்சலங்களுக்கு இடம் கொடாமல் உன்னிப்பாக, கவனமாக  ஒழுங்குற செயல்பட்டால் நாம் நிரந்தர இன்பங்கள் நிறைந்த மற்றும் சொர்க்கத்தை சென்றடைவோம். ஆனால் இப்பரீட்சையை உதாசீனமாக எடுத்துக்கொண்டு தான்தோன்றித்தனமாக செலவிட்டால் நாம் சென்று வீழ்வது நரகப்படுகுழியில்தான் அதுவோ முடிவில்லாத நிரந்தரமான இருப்பிடமாகும்.
மறுமை சாத்தியமா?
·  சொர்க்கம் நரகம் என்பது கற்பனையோ மாயையோ அல்ல என்பதை  சற்று சிந்தித்தால் உணரலாம். சாதாரண ஒரு இந்திரியத் துளியில் இருந்து உருவாகி இன்று பூமியில் நடமாடிக்கொண்டிருக்கிறோம். இது எப்படி வாஸ்தவமோ அதைவிட வாஸ்தவம் அது, இதை நடத்திக்கொண்டிருக்கும் இறைவனுக்கு நம்மை மீண்டும் படைப்பது என்பது கடினமானது அல்ல.
36: 77-79 ''மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; ''எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?'' என்று. (நபியே!) நீர் கூறுவீராக! ''முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்'' என்று'
·  இறுதித்தீர்ப்பு நாளின்போது ஒவ்வொரு மனிதனும் இப்பூமியின் மீது செய்த புண்ணியங்களும் பாவங்களும்  எடுத்துக்காட்டப் படும். புண்ணியங்களை அதிகமாக சம்பாதித்தவர்களுக்கு சொர்க்கம் விதிக்கப்படும் பாவங்களை அதிகமாக சம்பாதித்தவர்களுக்கு நரகம் விதிக்கப்படும்.
சொர்க்கம் என்பது எப்படி இருக்கும்?
·  அது ஓர் சாந்தியும் சமாதனமுமான இருப்பிடம். அங்கு கவலை, தீமை, பகை, சோர்வு, நோய், முதுமை, பஞ்சம், போன்ற எதற்குமே இடம் இல்லை. திகட்டாத இன்பங்களில் ஊறித் திளைக்கும் இடம் அது.. தோட்டங்களும் பூங்காவனங்களும் மாசற்ற நீரூற்றுகளும் உயர் மாளிகைகளும் சுவைமிக்க கனிகளும் உணவுகளும் பானங்களும் அளவின்றி அனுபவிக்க இறைவன் ஏற்பாடு செய்த இடம்! என்றும் இளமையோடு இருக்கும் இடம்! காரணம் மரணம் என்பது இனி இல்லையல்லவா?
இதோ தனது திருமறையில் இறைவன் கூறுகிறான்:
10:9 நிச்சயமாக எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் இறைநம்பிக்கை கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான்¢ இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும்.
43:71 பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும் இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன.  இன்னும், 'நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!' (என அவர்களிடம் சொல்லப்படும்.)
47:15 பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன. இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?
29:58 எவர்கள் இறைநம்பிக்கை; கொண்டு, நற்காரியங்கள் செய்கிறார்களோ அவர்களை, சதா கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில், நிச்சயமாக நாம் அமர்த்துவோம். அவற்றில் அவர்கள்நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள். (இவ்வாறாக நற்)செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது.
நரகமும் காத்திருக்கிறது
·  சொர்க்கத்தைப் போலவே நரகமும் மறுபுறம் காத்திருக்கிறது. அது இறைவனின் அருட்கொடைகளுக்கு நன்றி மறந்து தான்தோன்றித்தனமாக வாழ்ந்த கொடியோருக்காகவும் இறைவனையும் அவன் தூதர்களையும் வேதங்களையும் நிராகரித்தோருக்காகவும் காத்திருக்கிறது. கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் நடுவே மரணமற்ற வாழ்வும் அகோர பசியும் தாகமும் அதைத்தீர்க்க உணவாக முட்செடிகளும் கொதிநிலை அடைந்த பானங்களும் என்று தொடர் வேதனைகளின் இருப்பிடமாக இருக்கும். நரக வேதனைகள் பற்றி திருக்குர் ஆன் எச்சரிக்கிறது:
20:74 நிச்சயமாக எவன் தன் இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோ, அவனுக்கு நரகம் நிச்சயமாக இருக்கிறது¢ அதில் அவன் மரிக்கவும் மாட்டான் வாழவும் மாட்டான்.
7:41 அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
4:56 யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்¢ அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.
23:104 (நரக) நெருப்பு அவர்களுடைய முகங்களை கரிக்கும்¢ இன்னும் அதில் அவர்கள் உதடு சுருண்டு (முகம் விகாரமானவர்களாக) இருப்பார்கள்.
32:20 ஆனால் எவர்கள் (வரம்பு மீறிப்) பாவம் செய்தார்களோ, அவர்கள் தங்குமிடம் (நரக) நெருப்புத்தான் - அவர்கள் அதை விட்டு வெளியேற நாடும் போதெல்லாம் அதிலேயே மீண்டும் தள்ளப்பட்டு: 'எதனை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களோ அந்த (நரக) நெருப்பின் வேதனையை அனுபவியுங்கள்'' என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.
78:21  நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.  வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக!  அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்!...... கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.!
18:29  (நபியே!) இன்னும் நீர் கூறுவீராக: 'இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது¢' ஆகவே, விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்¢ (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்¢ அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்¢ மிகக் கேடான பானமாகும் அது! இன்னும் இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்.
ஆக, நரக வேதனை என்பது தாங்க முடியாதது. அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் நாம் மரணத்திற்கு முன்பாக இறைவனிடம் மன்னிப்பு கோரி திருந்திய வாழ்க்கை வாழவேண்டும். இறைவன் நம் அனைவரையும் நரகிலிருந்து காப்பானாக! சொர்க்கம் செல்லும் நன்மக்களில் நம்மை சேர்த்து வைப்பானாக!
வாழ்க்கைப் பரீட்சையில் சோதனைகள் சகஜம்
அடுத்ததாக நாம் உணரவேண்டியது., இவ்வாழ்க்கை என்பது ஓர் பரீட்சை என்பதால் இதில் நோய் உட்பட பல சோதனைகளும் சகஜமாக வந்து செல்லும் என்பதே! இதை இறைவனே எடுத்துக் கூறுகிறான்:
2:155  'நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
அவ்வாறு சோதனைகள் வரும்போது நாம் பதறாமல் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். வாழ்க்கையின் உண்மை நிலையை மனதில் இருத்தி நம்மை நாமே நிதானப் படுத்திக் கொள்ள வேண்டும். இதோ இறைவனே வழிகாட்டுகிறான்:
2:156-157    '(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன. இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.'
அதாவது நாம் இறைவனுக்கு உரியவர்கள், அவனிடமே திரும்பிச்செல்ல உள்ளவர்கள்  என்ற பேருண்மையை நினைவு கூர்ந்து பொறுமை காத்து ஆக வேண்டியவற்றை கவனித்தால் நமக்கு மன நிம்மதியும் ஏற்படும், இழப்பையும் இலாபகரமானதாக மாற்ற முடியும்! .....எப்படி? 
இறுதி இறைத்தூதர் முஹம்மது நபியவர்கள் கூறினார்கள்: சோதனைக்கு உள்ளான ஒருவர் இறைவன் இட்ட  கட்டளைப்படி இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நிச்சயமாக நாம் இறைவனுக்கு உரியவர்கள், அவனிடமே திரும்பிச்செல்ல உள்ளவர்கள்) என்று கூறியபின் இறைவா, நான் படும் துன்பத்திற்கு கூலி வழங்குவாயாக, நான் இழந்ததை விட மேலானதைக் கொண்டு இதற்க்கு பகரம் வழங்குவாயாக! என்று பிரார்த்தித்தால் அவருக்கு இறைவன் மேலானதை வழங்குவான் (நூல்: முஸ்லிம்)  
நோய் வரும்போது பொறுமையைக் கடைப்பிடித்து இறைவனை நினைவுகூர்ந்து துதித்தால் நமது ஆரோக்கியத்தை முன்பிருந்ததைவிட இறைவனே செம்மைப் படுத்துகிறான்! இதோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
ஒரு அடியான் நோய்வாய்ப்பட்டு அவனை விசாரிக்க வருவோரிடம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பானாயின், இறைவன் என் அடியான் மீது எனக்கு கடமை இருக்கிறது. அவனை நான் இறக்க வைப்பின் அவனை சொர்க்கத்தில் நுழைய வைப்பேன். அவனை நான் குணப்படுத்தினால் அவனுடைய சதையை விட சிறந்த சதையையும் அவனுடைய இரத்தத்தை விட சிறந்த இரத்தத்தையும் மாற்றி அவனுடைய தீமைகளை அவனை விட்டும் அப்புறப்படுத்தி விடுவேன் என்று கூறுவான். (நூல் : முஅத்தா)
மருத்துவம் மேற்கொள்ள வேண்டும்:
  • மேற்கண்ட வாழ்வின் அடிப்படை உண்மைகளை நினைத்து மனதை உறுதிப்படுத்தி மேற்கொண்டு நோய்க்கான சிகிச்சைகளை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும். நோயை வாழ்வின் சோதனையாக ஏற்படுத்திய இறைவனே அதற்கு மருத்துவம் மேற்கொள்ளவும் பணிக்கிறான்.
மருத்துவம் செய்யுங்கள்! ஏனெனில் மரணம் என்ற நோயைத் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் அல்லாஹ் மருந்தை உருவாக்கியுள்ளான் என்று நபி(ஸல்) கூறினார்கள். (நூல்: அபூதாவூத்)
ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு: மருந்து நோயை அடைந்தால் அல்லாஹ்வின் அனுமதியுடன் நோய் நீங்கிவிடுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)
ஆனால் இறைவன் உண்ணக்கூடாது என்று தடுத்த பொருட்கள் மூலம் வைத்தியம் பார்க்கக்கூடாது.  
அல்லாஹ் நோயையும் அதற்குரிய மருந்தையும் உருவாக்கியுள்ளான். ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு. எனவே நீங்கள் மருத்துவம் செய்யுங்கள்! ஆனால், இறைவனால் தடை செய்யப்ட்ட பொருளின் மூலம் மருந்துவம் செய்யாதீர்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: அபூதாவூத்
·  நம்மைப் படைத்த இறைவனிடம் மனப்பூர்வமாக நேரான சிகிச்சைக்கு வழிகாட்டுமாறு பிரார்த்த்தித்து விட்டு மருத்துவர்களை அணுக வேண்டும். எந்த மருத்துவத்தை மேற்கொண்டாலும் நோய் நிவாரணம் அவன் தருவதே என்பதை பரிபூரணமாக நம்ப வேண்டும். மருத்துவம் மேற்கொள்ளும்போது வரும் சோதனைகளையும் வேதனைகளையும் பொறுமையோடு எதிர் கொள்ள வேண்டும். அதில்தான் வாழ்கையின் வெற்றியே அமைந்துள்ளது.
மனத்தூய்மை பெறுவதைப் போலவே முக்கியமானது உடல் தூய்மையும் உடை, உணவு, இடம் போன்றவற்றின் தூய்மையும்! முக்கியமாக இவற்றை மலம, மூத்திரம் போன்ற அசுத்தங்களில் இருந்து தூய்மையாக வைத்திருத்தல் மிக மிக அவசியம். இறைபொருத்தத்திற்க்கும் நெருக்கத்திற்கும் தூய்மை ஒரு படிக்கல்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்: அல்லாஹ் தூயவன், அவன் தூய்மையான பொருட்களையே ஏற்றுக் கொள்கிறான். அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டவற்றையே இறைநம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிடுகின்றான். மேலும் அல்லாஹ் கூறினான் : 'தூதர்களே! தூய ஆகாரத்தையே புசித்து நற்செயல் புரியுங்கள்!' (23 : 53)
2:172 நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்¢ நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்
நோயும் பாவ நிவாரணமும்:
நமது பாவங்களைக் கழுவி தூய்மையானவர்களாக ஆக்க கருணையாளனான இறைவன் ஏற்படுத்தித் தரும் ஒரு வாய்ப்பே நோய் என்பதை நாம் உணர வேண்டும். எனவே நோய் வரும்போது நாம் செய்து போன பாவங்களைப் பற்றியும் செய்து கொண்டிருக்கும் பாவங்கள் பற்றியும் நினைத்துப் பார்த்து இறைவனிடம் பாவங்களை மன்னிக்குமாறு மன்றாட வேண்டும். நமது பாவங்கள் இறைவனால் மன்னிக்கப்பட வேண்டுமானால் கீழ்கண்ட நிபந்தனைகளை நாம் பேண வேண்டும்.
·  பாவத்தை` பாவம் என்று உணர வேண்டும்.
·  மனம் வருந்தி உண்மை இதயத்தோடு இறைவனிடம் பாவ மன்னிப்பு கோர வேண்டும்.
·  மீண்டும் அதே பாவத்துக்குத் திரும்பக்கூடாது.
அதே வேளையில் .....
பிறருக்கு பாதிப்பு ஏற்படும் தீங்குகள் செய்திருந்தால் அவ்வாறு  பாதிக்கப் பட்டவர்களிடம்  மன்னிப்பு கோரி அவர்கள் மன்னிக்காத வரை இறைவன் அப்பாவங்களை மன்னிக்க மாட்டான் என்பதையும் நாம் அறியவேண்டும்.
நோய் நிவாரணத்துக்காக இறைவனிடம் பிரார்த்திப்பதற்க்கு முன்பாக நமது செயல்பாடுகளையும் நமது உடைமைகளையும் சம்பாத்தியங்களையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நமது பிரார்த்தனைகள் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால்  நமது உணவும் உடையும் உடைமைகளும் தூய்மையான முறையில் சம்பாதிக்கப் பட்டதாக இருக்க வேண்டும். உதாரணமாக நமது உணவு, உடை, உறைவிடம் போன்றவை களவு, மோசடி, விபசாரம், வட்டி போன்ற பாவமான  வழிகளில் சம்பாதிக்கப் பட்டதாக இருக்குமானால் நமது பிரார்த்தனைகள் இறைவனால் அங்கீகரிக்கப் படுவதில்லை.  
பெருமானார் நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதனைப் பற்றி குறிப்பிட்டார்கள். “அவன் நெடிய பயணம் மேற்கொண்டு புழுதி படிந்து அழுக்கடைந்த நிலையில் புண்ணியத்தலத்துக்கு வருகின்றான். தனது இரு கரங்களையும் வானத்தை நோக்கி உயர்த்தி 'என் இறைவனே!'(என்று இறைஞ்சுகிறான்). ஆயினும் அவன் உண்ணும் உணவு பருகும் நீர் உடுத்தியிருக்கும் ஆடை அனைத்துமே ஹராமானவை - தடுக்கப்பட்ட வழியில் வந்தவை. அவன் முழுமையான ஹராமிலேயே வளர்ந்துள்ளான். அவ்வாறெனில் இத்தகையோனின் இறைஞ்சுதல் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்? (முஸ்லிம்)
அவ்வாறு நம்மிடம் இருக்கும் சம்பாத்தியம் தடுக்கப்பட்ட வழிகள் மூலம் பெறப்பட்டதாக இருந்தாலோ, அல்லது நாம் யாருக்காவது வேறு விதமான மோசடிகளோ அநியாயமோ செய்து இருந்தாலோ, அல்லது  பிறர் பொருட்களையோ உடமைகளையோ அநியாயமான முறையில் அபகரித்து இருந்தாலோ உடனடியாக இறைவனுக்கு பயந்து அவற்றிலிருந்து மீண்டு விட வேண்டும். காரணம் நாம் செய்த அநியாயத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் நம்மை மன்னிக்காதவரை இறைவன் நம் பாவத்தை மன்னிப்பதில்லை.

நோய் நிவாரணம் தாமதமானால்.....?
இவ்வாழ்க்கை என்பது பரீட்சை என்பதால் சில வேளைகளில் நோய் நிவாரணம் தாமதமாகும். அப்போதும் நாம் பொறுமையை இழக்காமல் புரிந்து கொள்ளவேண்டிய உண்மை என்னவென்றால் அதுவும் நமக்கு நன்மையை தாங்கி வருகிறது என்பதே! எப்படி? நம்மை இறைவன் மேலும் மேலும் நம் பாவங்களை விட்டு  தூயமைப்படுத்த விரும்புகிறான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: காய்ச்சலை நீங்கள் ஏசாதீர்கள், காரணம், நெருப்பு இரும்பை தூய்மைப் படுத்துவது போல அது உங்கள் பாவங்களை போக்கிவிடும்.
முறைப்படி மருத்துவம் மேற்கொண்ட பிறகும் பொறுமை மேற்கொண்ட பிறகும் போகப் போக நோய் நம்மை மரணத்தின் விளிம்புக்கும் கொண்டு செல்லலாம். அப்போதும் நாம் பொறுமையையும் நம்பிக்கையையும் கைவிடக்கூடாது. ஆனால் சோதனைகள் எவ்வளவுதான் அதிகமானாலும் பொறுமையை இழந்து மரணத்தைத் தா என்று இறைவனிடம் அவசரப்பட்டு பிரார்த்திக்கக் கூடாது. தற்கொலை அல்லது கருணைக்கொலை என்று எதையும் நாடக்கூடாது. மரணத்துக்கு முன்னதாக சோதனைகள் அதிகரித்தால் இறைவன் தன் அடியானை அவனது பாவங்கள் முழுமையாக கழுவப்பட்ட நிலையில் அவனது உயிரைக் கைப்பற்ற விரும்புகிறான் என்று பொருள். இதுவும் நபிகளாரின் கூற்றே!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் உங்களுக்கு ஏற்படும் சோதனை காரணமாக மரணத்தை விரும்பி பிரார்த்திக்க வேண்டாம். அவ்வாறு நிர்பந்தம் ஏற்பட்டால் இவ்வாறு கேளுங்கள்: இறைவா எனக்கு வாழ்வு நல்லதாக இருக்கும் வரை என்னை வாழ வை. மரணம்  நல்லதென்றால் என்னை மரணிக்கச் செய்வாயாக!’”( நூல் : புஹாரி)
ஆக, எந்நிலையிலும் நிதானம் இழக்காமல் இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்டு செயல் பட்டால் சோதனைகளை உண்மையான சாதனைகளாக மாற்றலாம்!
நோயின்போது ஒதிப்பார்க்க கூடிய திருக்குர்ஆன் வசனங்களும் நபிகளார் கற்றுத் தந்த பிரார்த்தனைகளும்:
நோயின்போது மருத்துவம் பார்ப்பதோடு திருக்குர்ஆன் வசனங்களையும் ஓதிப் பார்க்கலாம். திருக்குர் ஆன் பற்றி இறைவனே கூறுகிறான்:
இது (திருக்குர்ஆன்) நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியாகவும், நிவாரணியகவும் இருக்கும் என்று (நபியே!) நீர் கூறுவீராக…” (திருக்குர்ஆன் 41:44)
மேலும் கூறுகின்றான்:
மேலும் நம்பிக்கையாளர்களுக்கு நிவாரணியாகவும் அருளாகவும் உள்ளவற்றையே இக்குர்ஆனில் நாம் இறக்கியுள்ளோம். அது அநியாயக்காரர்களுக்கு நஷ்டத்தை தவிர வேறெதையும் அதிகரிக்காது (திருக்குர்ஆன் 17:82)
மனிதர்களே! உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நல்லுபதேசமும் உள்ளங்களில் உள்ளவற்றிற்கு நிவாரணியாகவும் நம்பிக்கையாளர்களுக்கு நேர்வழியும், கருணையும் நிச்சயமாக வந்துவிடும் (திருக்குர்ஆன் 10:57)
 எனவே நீங்கள் பயன்படுத்திக் கொள்வதற்காக சில முக்கியமான திருக்குர்ஆன் வசனங்களை கீழே தருகிறோம். நம்மைப் படைத்தவனிடம் கலப்படம் அற்ற தூய்மையான நம்பிக்கை கொண்டு இவ்வசனங்களின் பொருளுணர்ந்து நீங்களாகவே ஓதிப் பார்த்துக் கொள்ளலாம். முக்கிய நிபந்தனை என்னவென்றால் இறைவனுக்கு இணைவைக்காதவர்களாக நாம் இருக்கவேண்டும்.
அதற்கு கீழ்காணும் உறுதி மொழியை மனதார ஒப்புக்கொண்டு வாயால் மொழிய வேண்டும். பின்னர் அதில் நிலைத்திருக்க வேண்டும்.
அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (வணக்கத்துக்கு உரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாருமே இல்லையென்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்றும் நான் ஏற்றுக்கொண்டு சாட்சி கூறுகிறேன்) 

திருக்குர்ஆன் முதல் அத்தியாயம்:

திருக்குர்ஆனின் ஆரம்ப அத்தியாயத்தின் பெயர் பாத்திஹா என்பது. இது ஏழு வசனங்களைக் கொண்டது.  இதை பொருளுணர்ந்து ஓதி நோய்வாய்ப்பட்டவர் மேல் ஓதி ஊதலாம். அந்த வசனங்களை அவற்றின் பொருள் சகிதம் கீழே தருகிறோம்:
.          1. (B)பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
.          2. அல்ஹம்து லில்லாஹி ர(B)ப்பில் ஆலமீன்.
.          3. அர்ரஹ்மானிர் ரஹீம்.
.          4. மாலிகி யவ்மித் தீன்
.          5. இய்யாக்க நஉ(B)புது வஇய்யாக்க நஸ்தஈன்.
.          6. இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்த்தகீம்
.          7. ஸிராத்தல்லதீன அன் அம்த அலைஹீம் அய்ரில் மக்லூ(B)பி அலைஹீம் வலழ்ழால்லீன் ஆமீன்

பொருள்:
.          (1. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் (இதை ஒதுகிறேன்)
.          2. அனைத்துப் புகழும் அனைத்து உலகையும் படைத்து பரிபாலித்து வரும்  அல்லாஹ்வுக்கே உரியது.
.          3. அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.
.          4. இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதி.
.          5. உன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
.          6. எங்களை நேரான வழியில் நடத்துவாயாக
.          7. நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்களின் வழியில் நடத்துவாயாக,. அது உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியும் அல்ல.
.          அமீன்- எங்கள் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக)

முக்கிய குறிப்பு இந்த அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் இறைவனே நமக்கு கற்றுத்தரும் பிரார்த்தனைகள். இங்கு நான்காவது வசனத்தை மிக ஆத்மார்த்தமாக கூற வேண்டும் இறைவா படைத்தவனாகிய உன்னை மட்டுமே வணங்குவோம். உன்னையல்லாது வேறு யாரையும் தெய்வமாக பாவிக்க மாட்டோம்.அவைகளிடம் பிரார்த்திக்கவோ உதவி கோரவோ மாட்டோம் என்ற உறுதி மொழியை இதன் மூலம் நாம் இறைவனுக்கு கொடுக்கிறோம் என்பதை உணர்க! நம் பிராத்தனை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இது ஒரு நிபந்தனை என்பதை அறிக!
ஆயத்துல் குர்ஸி எனப்படும் சிறப்பு வசனம் :
திருக்குர்ஆனின் கீழ்கண்ட வசனம் மறைமுகமான தீமைகளில் இருந்து பாதுகாப்பு தரக்கூடியது. இவ்வுலகில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நம் கண்களுக்குப் புலப்படாத ஓர் இனம் ஜின் இனம் என்பது. இவர்களும் நம்மப் போலவே சமூகங்களாக வாழ்பவர்கள். நம்மில் உள்ளது போலவே இவர்களிலும் ஆண், பெண் என்றும் நல்லவர்கள், கெட்டவர்கள் என்றும் சத்தியத்தை ஏற்றுக் கொண்டவர்கள், மறுப்பவர்கள் என்றெல்லாம் உண்டு. ஷைத்தான் ஜின் இனத்தைச் சேர்ந்தவனே. யாராவது காலையிலும் மாலையிலும் இந்த ஆயத்துல் குர்ஸியைப் படித்தால் ஜின்களின் தீமையில் இருந்து பாதுகாக்கப் படுவார். என்பது நபி மொழி. (நூல்: ஹாகிம்)
அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம். லா தஉஹுதுஹு சினத்துன் வலா நவ்ம். லஹு மா(F)பிஸ் ஸமாவாதி வாமா (F)பில் அர்ழ். மன் தல்லதீ யஷ்(F)பஹு இன்தஹு இல்லா (B)பிஇதினிஹீ. யலமு மா (B)பய்ன அய்தீஹீம் வமா ஹல்(F)பஹும் வலா யுஹீதூன (B)பி ஷைஇன் மின் இல்மிஹீ இல்லா (B)பீமா ஷாஅ வசிஹ குர்ஸியுஹுஸ் ஸமாவாதி வல் அர்ழி. வலா யஊதுஹு ஹி(F)ப்ளுஹுமா வஹுவல் அலியுல் அழீம்.
(பொருள் :வணக்கத்துக்கு உரிய இறைவன் அல்லாஹுவைத் தவிர யாருமில்லை. அவன் என்றென்றும் உயிர்வாழ்பவன். நிலையானவன்., சிறு துயிலோ உறக்கமோ அவனை பீடிக்காது.. வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே சொந்தம். அவனுடைய அனுமதியின்றி அவனிடம் பரிந்து பேசுவோர் யார் இருக்கிறார்கள்? அவர்களுக்கு முன்னால் இருப்பவற்றையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவனுடைய நாட்டமின்றி அவனுடைய அறிவில் உள்ளவற்றிலிருந்து யாதொன்றையும் அவர்கள் அறிந்து கொள்ள மாட்டார்கள். அவனது குர்ஸிய்யு  வானங்களிலும் பூமியிலும் விசாலமாக (பரவி) இருக்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்காது. மேலும் அவன் மிக்க உயர்ந்தவன், மகத்துவமிக்கவன்..)
கீழே தரப்பட்டுள்ள திருக்குர்ஆனின் இறுதி அத்தியாயங்களும் பொருளுணர்ந்து ஓதி ஊதத் தக்கவை. கீழ்கண்ட செய்தியில் கண்டவாறு தினமும் இதை நீங்கள் செய்யலாம்.
நபிகளாரின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்: 
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் படுக்கைக்குச் சென்றால் குல்ஹுவல்லாஹு அஹத்,  குல்அஊது பிரப்பில் ஃபலக்  குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய பாதுகாப்புக் கோரும் (112, 113, 114) அத்தியாயங்கள் மூன்றையும் ஓதித் தம் உள்ளங்கைகளில் ஊதி அவற்றால் தம் முகத்தையும், தம் இரண்டு கரங்கள் உடலில் எங்கெல்லாம் படுமோ அந்த இடங்களையும் தடவிக் கொள்வார்கள். அவர்கள் நோயுற்றபோது நான் அவர்களுக்கு அதைச் செய்து விடும்படி என்னைப் பணிப்பார்கள். (புஹாரி)
இதில் முதலாவது அத்தியாயம் இறைவனின் குணாதிசயங்களை நமக்கு கூறுகிறது. எப்படிப்பட்ட வல்லமை வாய்ந்த இறைவனிடம் நமது பிரார்த்தனைகளை முன்வைக்கிறோம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. பின்னர் வரக்கூடிய அத்தியாயங்களில் நமது கண்களுக்கு புலப்படும் மற்றும் புலப்படாத இருள், பில்லி, சூனியம், செய்வினை, கண்ணேறு போன்ற  தீமைகளிளிருந்தும் தீய சக்திகளில் இருந்தும் பாதுகாவல் பெற நாம் என்ன கூறவேண்டும் என்பதை இறைவன் கற்றுத் தருகிறான். இப்படிப்பட்ட தீமைகளில் இருந்து பாதுகாவல் பெற ஒரே வழி இறைவனிடம் நேரடியாக முறையிடுவதே என்பதை உணர வேண்டும். மாறாக, இடைத்தரகர்களை அணுகுவதோ குறுக்கு வழிகளைத் தேடுவதோ எந்த பயனையும் தராது. எல்லா மறைவான மற்றும் வெளிப்படையான சக்திகள் மீதும் ஆதிக்கம் பெற்ற ஒரே ஒருவன் படைத்தவன் மட்டுமே, அவனது அனுமதியின்றி எந்த சக்தியும் நம்மை எதுவும் செய்துவிட முடியாது என்பதை ஆணித்தரமாக நம்ப வேண்டும்.
திருக்குர்ஆன்  அத்தியாயம் 112
(B)பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
1.      குல் ஹுவல்லாஹு அஹத்
2.      அல்லாஹுஸ் சமத்.
3.      லம் யலித் வலம் யூலத்.
4.      வலம் யகுன் லஹு கு(F)புவன் அஹத்
பொருள் :
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் (இதை ஒதுகிறேன்)
1.      சொல்வீராக அவனே அல்லாஹ் அவன் ஒருவனே.
2.      அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன்.
3.      அவன் யாரையும் பெறவும் இல்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை.
4.      அவனுக்கு நிகராக யாருமே இல்லை.
திருக்குர்ஆன்  அத்தியாயம் 113
(B)பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
1.      குல் அஊது (B)பி ர(B)ப்பில் (F)பலக்.
2.      மின் ஷர்ரி மா ஹலக்
3.      வமின் ஷர்ரி ஆசிகின் இதா வகப்
4.      வமின் ஷர்ரின் ன(F)பாசாத்தி (F)பில் உகத்
5.      வமின் ஷர்ரி ஹாசிதின் இதா ஹசத்.
பொருள் :
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் (இதை ஒதுகிறேன்)
1.      சொல்வீராக: “விடியலின் இறைவனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
2.      அவன் படைத்த வற்றின் தீங்குகளில் இருந்து.
3.      இருள் பரவிய நேரத்தில் அந்த இருளின் தீங்கை விட்டு.
4.      முடிச்சுக்களில் மந்திரித்து ஊதும பெண்களின் தீங்கை விட்டும்.
5.      பொறாமைக்காரன் பொறாமை கொண்ட நேரத்தில் அவனது தீங்கை விட்டும் (நான் காவல் தேடுகிறேன்)

திருக்குர்ஆன்  அத்தியாயம் 114
(B)பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
1.      குல் அஊது (B)பி ர(B)ப்பின் நாஸ்
2.      மாலிக்கின் நாஸ்
3.      இலாஹின் நாஸ்.
4.      மின் ஷர்ரில் வஸ்வாஸில் ஹன்னாஸ்
5.      அல்லதீ யுவஸ்விஸு (F)பீ சுதூரின்னாஸ்
6.      மினல் ஜின்னத்தி வன்னாஸ்
பொருள் :
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் (இதை ஒதுகிறேன்)
1.      சொல்வீராக: மனிதர்களின் இறைவனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்,
2.      அவன் மனிதர்களின் அரசன்.
3.      மனிதர்களின் வணக்கத்துக்கு உரியவன்.
4.      பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (நான் காவல் தேடுகிறேன்.)
5.      அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
6.      (இத்தகையோர்) ஜின் மற்றும் மனித வர்க்கங்களில் இருக்கின்றனர்.

நபிகளார் கற்றுத்தரும் பிரார்த்தனைகள்:
நம் உடலில் எங்காவது வேதனையை உணர்ந்தால்:
வேதனை ஏற்பட்ட இடத்தின் மீது கையை வைத்து பிஸ்மில்லாஹி (அல்லாஹ்வின் பெயரால்) என்று மூன்று முறை கூறவேண்டும். தொடர்ந்து அ ஊது (B)பில்லாஹி வ குத்ரத்திஹி மின் ஷர்ரி  மா அஜிது வ உஹாதிரு என்று ஏழு முறை கூற வேண்டும்.
(பொருள்: எனக்கு வந்திருக்கின்ற மற்றும் நான் பயந்து கொண்டிருக்கின்ற தீமையில் இருந்து நான் அல்லாஹ் மற்றும் அவனது ஆற்றலைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன்) (நூல்: முஸ்லிம்)
நோய் நிவாரணம் பெற நபிகளார் கற்றுத்தரும் பிரார்த்தனை:
'நோயாளி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டால்' அவர்கள், 'அத்ஹிபில் பாஸ் ரப்பந் நாஸ் இஷ்ஃபி, வ அன்த்தஷ் ஷாஃபி, லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்' என்று பிரார்த்திப்பார்கள். 

(
பொருள்: மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தை தவிர வேறு நிவாரணம் இல்லை.
குழந்தைகளுக்கான பிரார்த்தனை:
உஈதுகுமா (B)பி கலிமாத்தில்லாஹித் தாம்மத்தி மின் குல்லி ஷைத்தானின் வ ஹாம்மத்தின் வமின் குல்லி அயனின் லாம்மத்தின் 
(பொருள் : ஒவ்வொரு ஷைத்தான் மற்றும் விஷ ஜந்துக்களின் (தீமையி)லிருந்து இன்னும் பட்டுவிடக்கூடிய ஒவ்வொரு கண்ணி(ன் பார்வையி)லிருந்து அல்லாஹ்வின் நிறைவான வாக்குகளைக் கொண்டு உங்களிருவருக்கும் நான் பாதுகாவல் தேடுகிறேன்.)
மேற்கண்ட பிரார்த்தனையை நபிகளார் அவரது பேரன்களான ஹசன் மற்றும் ஹுசைன் அவர்களுக்காக செய்தார்கள்.
நோயாளிக்கு நலம் விசாரிக்கையில் பிரார்த்தனை:
அஸ்அலுல்லாஹல் அழீம். ர(B)ப்பில் அர்ஷில் அழீமி அன் யஷ்(F)பியக (7 முறை)
(பொருள் : பிரமண்டாமான சிம்மாசனத்தை உடையவனாகிய மகத்துவமிக்க  அல்லாஹ்விடம் உமக்கு ஆரோக்கியத்தை நல்குமாறு நான் கேட்கிறேன்)
விஷ ஜந்துக்களின் தீங்கிலிருந்து பாதுகாப்பு பெற:
அஊது (B)பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா ஹலக்
(பொருள்: அவன் படைத்தவற்றின் தீங்குகளை விட்டு அல்லாஹ்வின் முழுமையான வார்த்தைகளின் துணைகொண்டு நான் காவல் தேடுகிறேன்.)  
நோயிலிருந்து நிவாரணம் பெற்றால்.......?
இறையருளால் நாம் நோய் நிவாராணம் பெற்றுவிட்டோமானால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?
தொடர்ந்து பாவ மன்னிப்பு கோரியவர்களாகவும்  நன்றிக்கடன் செலுத்தியவர்களாகவும் வாழ வேண்டும். இறைவன் நமக்கருளியுள்ள பொருளாதாரத்திளிருந்து அதிகமாக ஏழைகளுக்கு தான தர்மங்கள் செய்ய வேண்டும். ஒருபோதும் அவன் கருணையை மறந்து விட்டு நாம் முன்னர் செய்து கொண்டிருந்த பா.வங்களுக்கு மீண்டும்  திரும்பி விடக் கூடாது. குறிப்பாக மீண்டும் படைப்பினங்களையோ உருவங்களையோ சமாதிகளையோ வணங்கக் கூடாது. காரணம் இறைவனுக்கு இணைவைத்தல் என்பது மிகப் பெரிய பாவமாகும்.  யார் இப்பாவம் செய்கிறார்களோ அவர்களுக்கு நிரந்தர நரகம்தான்!
30:33 மனிதர்களுக்கு (பசி, நோய், வறுமை, பஞ்சம் போன்ற ஏதேனும்) சங்கடம் ஏற்பட்டால் அவர்கள் தங்கள் இறைவனிடம் முகம் திருப்பி, (அதை நீக்கியருள) அவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்¢ பிறகு அவன் அவர்களுக்கு தன்னிடமிருந்து அருளை  சுவைக்கச் செய்தால், அவர்களில் ஒரு பிரிவினர் தம் இறைவனுக்கு இணை வைக்கின்றனர்.

அப்படி மீண்டும் இணைவைப்பு போன்ற பாவங்களுக்கு மீண்டும் திரும்புவோரை கீழ்கண்ட வசனங்கள் மூலம் எச்சரிக்கிறான். கடலில் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றப் பட்ட கப்பல் பயணிகளின்  உதாரணம் மூலம் விளக்குகிறான், பாருங்கள்:
17:67 இன்னும், கடலில் உங்களை ஏதேனும் தங்கடம் (துன்பம்) தீண்டினால் அவனையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) எவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவையாவும் மறைந்து விடும். எனினும் (அல்லாஹ்) உங்களை ஈடேற்றிக் கரையளவில் கொண்டு வந்து சேர்க்கும் பொழுது நீங்கள் (அவனைப்) புறக்கணித்து விடுகிறீர்கள் – இன்னும், மனிதன் மகா நன்றி மறப்பவனாகவே இருக்கின்றான்.
17:68 (கரை சேர்ந்த) பின் அவன் உங்களை பூமியின் ஒரு புறத்தில் புதையும்படி செய்து விடமாட்டான் என்றோ, அல்லது உங்கள் மீது கல்மாரியை அனுப்பமாட்டான் என்றோ அச்சந் தீர்ந்து இருக்கிறீர்களா? பின்னர் நீங்கள் உங்களைப் பாதுகாப்போர் எவரையும் காண மாட்டீர்கள்.
17:69 அல்லது, அவன் மீண்டும் ஒரு தடவை அக்கடலில் உங்களை மீளச் செய்து, (எல்லாவற்றையும்) முறித்துத் தள்ளும் புயல் காற்றை உங்கள் மீதனுப்பி நீங்கள் நிராகரித்ததற்காக உங்களை மூழ்கடித்து விடமாட்டான் என்றும் நீங்கள் அச்சந்தீர்ந்து இருக்கிறீர்களா?

;.எக்காரணத்தைக் கொண்டும் நாம் நமது உண்மை நிலையை மறந்து விடக் கூடாது. நாம் நம்மைப் படைத்து பரிபாலிக்கக் கூடிய இறைவனை மட்டுமே வணங்க வேண்டியவர்கள். அவனிடமே நாம் மரணத்திற்குப் பிறகு மீளவேண்டியுள்ளது, நமது பாவ புண்ணியங்களுக்கு பதில் சொல்ல வேண்டியுள்ளது. முடிவில்லாத மறுமை வாழ்க்கை காத்திருக்கிறது என்ற அடிப்படை உண்மைகளை ஒருக்காலும் மறந்து விடக்கூடாது! அதை நினைவூட்ட வந்ததுதான் நோய்! 
 ஆம் அன்பர்களே,
ஒரு கல்லூரியில் ஆத்மார்த்தமாக சிரமங்கள் மேற்கொண்டு படிப்பவனுக்கு சிறந்த வாழ்கையும் தான்தோன்றியாக கல்வியை உதாசீனம் செய்பவனுக்கு மோசமான  வாழ்கையும் அமைவது நியதி. அதைப்போல இவ்வாழ்க்கை என்ற பரீட்சைக்களத்தில் இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்வோருக்கு அவர்களின் உழைப்புக்காக சொர்க்கத்தையும் கீழ்படியாதோருக்கு தண்டனையாக நரகத்தையும் வழங்கவிருப்பது படைத்தவனின் தீர்மானம். அதைப் புரிந்துகொண்டு அதன்படி வாழ்வதே அறிவுடைமை.
   நம்மைக் காத்து வரும் அளவிலாக் கருணையாளனான இறைவன் நம்  மீது பேரன்பு கொண்டவன். அவன் வைத்துள்ள இபரீட்சையில் நாம் தேர்வு பெற்று சொர்க்கத்தை அடையவேண்டும் என்பதற்காக பல வழிகளை ஏற்படுத்தியுள்ளான். அவற்றில் ஒன்றுதான் நோய்!
     
  எனவே நோய் வரும்போது நம்மிடம் உடனடியாக வரவேண்டியது இறைவனுக்குப் பணிதல் என்ற பண்பு. அதன் மூலம் மட்டுமே இத்தேர்வில் வெற்றி பெற முடியும். இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்.
6:42. (நபியே!) உமக்கு முன்னர் இருந்த சமூகத்தாருக்கும் நாம் (நம்) தூதர்களை அனுப்பினோம்; அச்சமூகத்தாரை நோயைக் கொண்டும்வறுமையைக் கொண்டும் பிடித்தோம் அவர்கள் பணிந்து வரும் பொருட்டு.
  எவ்வாறு இறைவனுக்குப் பணிவது? அவன் தன் வேதம் மூலமும் தூதர் மூலமும் நமக்குக் கற்றுத்தரும் ஏவல்-விலக்கல்களை அறிந்து அதன்படி வாழ வேண்டும். அவ்வாறு செய்தால் நாம் மட்டுமே நமக்கு வெற்றி!