படைத்தவன்
மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் –
படைப்பினங்கள் வணக்கத்துக்கு உரியவை அல்ல – என்ற
ஏக இறைக்கொள்கையை பூமியில் நிலைநாட்ட இறைவனால் இறுதியாக அனுப்பப்பட்டவர் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள். முந்தைய இறைத்தூதர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில்
குறிப்பிட்ட மக்களுக்காக அனுபப்பட்டார்கள். ஆனால் அவர்களைப் போலல்லாமல் முஹம்மது
நபி(ஸல்) அவர்கள் அனைத்து உலக மக்களுக்காகவும் பொதுவாக அனுப்பபட்டவர் ஆவார்கள்.
இந்த உண்மையை பலவழிகளிலும் நாம் உறுதியாக அறிந்து கொள்ள முடியும்.
1. இறுதி இறைத்தூதராக வந்திருப்பது.
2. அவர் மூலம் அருளப்பட்ட வேதம் மூல மொழியிலேயே எந்தவிட சிதைவுக்கும் உட்படாமல் பாதுகாக்கப்படுவது. #ஒப்பிலா_இறைமறை_திருக்குர்ஆன்
3. இவரது போதனைகளும் நடைமுறை வாழ்க்கையும் அட்சரம்பிசகாமல் பாதுகாக்கப்பட்டு வருவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு முன்மாதிரியாக இருந்து வருவது. #அண்ணல்_நபி_அழகிய_முன்மாதிரி
4. முந்தைய இறைத்தூதர்கள் கடவுளாக்கப் பட்டதைப்
போல் இவரை யாரும் வணங்காமல் இருப்பது.
என
பல உண்மைகளும் அவர்தான் இன்று வாழும் மக்களுக்கான மோட்சத்துக்குரிய வழி என்பதை
உணர்த்துகின்றன.
வணங்கப்படாத
ஒரே தலைவர்
நபிகளார்
உயிரோடு இருந்தபோது மக்கள் தன்னை வணங்குவதற்கோ தன் காலில் விழுவதற்கோ சற்றும் அனுமதிக்கவில்லை. ஏன், தனக்காக எழுந்து
நிற்பதையும் தன்னை அளவுக்குமீறி மக்கள் புகழ்வதையும் கூட தடைசெய்தார்கள்.
தனது
மரணத் தருவாயிலும் மக்களை இதுகுறித்து எச்சரித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) நூல்: முஸ்லிம்
இன்று
வாழும் மக்களுக்கு மோட்சத்திற்கு உரிய வழியும் இவரே என்பதை இறைவன் கூறுவதைக்
காணுங்கள்:
= (நபியே!)
நீர் கூறுவீராக: “மனிதர்களே! மெய்யாக நான் உங்கள்
அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி
ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது,
அவனைத்தவிர
(வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே
மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே,
அல்லாஹ்வின்
மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன்
தூதரின் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்,
அவரும்
அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் நம்பிக்கை கொள்கிறார் - அவரையே
பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.” (திருக்குர்ஆன் 7:158)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்
என்பது பொருள்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக