இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

ரோபோட்டிக்ஸின் தந்தை: இஸ்மெயில் அல்-ஜசாரி

 

FATHER OF ROBOTICS: ISMAIL AL-JAZARI (1136–1206)

Ismail Al-Jazari was a polymath: a scholar, inventor, mechanical engineer, artisan, artist, and mathematician from the Artuqid Dynasty of Jazira in Mesopotamia. ‘The Book of Knowledge of Ingenious Mechanical Devices’ is a medieval Arabic book written by Ismail al-Jazari in the 12th century. It describes over fifty mechanical devices and automata, including clocks, water-raising machines, musical automatons, and humanoid robots. Al-Jazari provides detailed instructions for constructing each device and includes anecdotes and historical references. The book had a significant influence on the development of European clockmaking and automata, offering insights into daily life and technological innovations in the Islamic world during the medieval period. It’s his book that influenced key concepts of modern-day robotics.

ரோபோட்டிக்ஸின் தந்தை: இஸ்மெயில் அல்-ஜசாரி (1136–1206)

இஸ்மாயில் அல்-ஜசாரி ஒரு பாலிமாத்: மெசொபொடாமியாவில் உள்ள ஜஸிராவின் ஆர்டுகிட் வம்சத்திலிருந்து ஒரு அறிஞர், கண்டுபிடிப்பாளர், இயந்திர பொறியாளர், கைவினைஞர், மற்றும் கணிதவியலாளர். இஸ்மாயில் அல்-ஜசாரி 12 ஆம் நூற்றாண்டில் எழுதிய இடைக்கால அரபு நூலாகும் ‘The Book of Ingenious Mechanical Devices’ கடிகாரங்கள், தண்ணீர் வளர்க்கும் இயந்திரங்கள், இசை தானியங்கி மற்றும் ஹுமனாய்ட் ரோபோக்கள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட இயந்திர சாதனங்கள் மற்றும் ஆட்டோமேட்டா விவ அல்-ஜசாரி ஒவ்வொரு சாதனத்தையும் கட்டுவதற்கு விரிவான வழிமுறைகளை வழங்குகிறது. மேலும் அன்க்டோட்டுகள் மற்றும் வரலாற்று குறிப்புகள் உள்ளடக்கியது இந்த புத்தகம் ஐரோப்பிய கடிகார தயாரிப்பு மற்றும் தானியங்கி வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருந்தது, இடைக்கால காலத்தில் இஸ்லாமிய உலகில் தினசரி வாழ்க்கை மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் பற்றிய நுண்ணறிவு வழங்குகிறது. நவீன கால ரோபோட்டிக்ஸ் பற்றிய முக்கிய கருத்துகளை இவரது புத்தகம் தான் பாதித்தது


செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் – ஆகஸ்ட் 23 இதழ்

 


திருக்குர்ஆன் நற்செய்தி மலர் – ஆகஸ்ட் 23 இதழ்

பொருளடக்கம்:

நபிகளார் மனிதகுலத்துக்கு விடும் அழைப்பு என்ன?-2

அண்ணல் நபிகளார் பற்றி அன்னி பெசன்ட் ! -3

சத்தியத்துக்கு எதிரான பரிகாசங்கள் அன்றும் இன்றும்! -4

நூற்றாண்டுகள் கடந்த  விமர்சனங்களின் பின்னணி  -6

நபிகளார் பற்றி தாமஸ் கார்லைல் -9

அதர்மவாதிகளின் தொடரும் பயம் -10

நபிகளார் மீது அவதூறு - அவர் வாழந்தபோது... -12

நற்குண நாயகர் நபிகளார் ! -14

விமர்சனங்களை எதிர்கொள்வது பற்றி.. 17

சரி எது? தவறு எது? – பிரித்தறியும் அளவுகோல்! -19

நபிகளாரின் மணவாழ்க்கை -குற்றச்சாட்டுகள் -22

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

இந்தக் குத்துச்சண்டை வீரர் ஏன் அப்படி செய்தார் ?

முகமது அலியின் சுயமரியாதை.
பெரும்பாலும் அலி தன் வெற்றிக்கு தேவையான அளவை விட ஒரு அடியும் எதிராளி மேல் விழக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பவர்.

எதிராளி மயங்கி விழும்போது அடிக்க மாட்டார், விழுந்து எழும் வரை சீண்ட மாட்டார். எதிராளிக்கு முடியாத நிலை வரும்போது அவரே நடுவரிடம் போட்டியை முடிக்க வேண்டுகோள் வைப்பார். அதனாலயே அலியிடம் தோல்வியுற்றவர்கள் கூட அவரை பெரிதும் நேசித்தனர்.

உலக பிரசித்தி பெற்ற George foreman என்னும் ஜாம்பவான் உடனான சண்டையில் தோல்வியுற்ற foreman "the greatest of all his punch was the one not landed, when i was falling" என்பார்.அதாவது ஃபோர்மேன் நாக்அவுட் ஆகி நிலைதடுமாறி கீழே விழுகின்ற நேரத்தில் அலி முழு வேகத்தில் கையை ஓங்கி குத்த செல்வார்,ஒரு விநாடி சுதாரித்து ஃபோர்மேனின் நிலை கண்டு ஓங்கிய கையை அப்படியே நிறுத்தி விடுவார். அதை தான் ஃபோர்மேன் சிலாகித்து கூறுவார்.

இப்படியாகபட்ட அலி ஒரே ஒரு போட்டியில் மட்டும் எதிராளியை அவரின் நிலைக்கும் மீறி கடுமையாக தண்டித்தார்.நினைத்தால் நாக்அவுட் செய்து போட்டியை முடித்திருக்க முடியும்,ஆனால் அலி அதை செய்யவில்லை,என முகம் சுழித்தவாறே பத்திரிக்கைகள் கூட எழுதின.

போட்டிக்கு முன் நடத்தபடும் பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே"உன்னை நான் கடுமையாக தண்டிப்பேன்"என்ற சூளுரைத்தார்.

ஏன் அப்படி செய்தார் ?

ஒரே ஒரு காரணம் மட்டும் தான்.Terell,அலியை "முஹம்மது அலி"என்று தற்போதைய பெயரை சொல்லி அழைக்காமல் அவருடைய பழைய பெயரான Cassius clay என்று அழைத்தார்.பல தடவை அலி தன்னுடைய தற்போதைய பெயரை கூறுமாறு வற்புறுத்தியும் Terrell மறுத்துவிடுவார்.அது மட்டும் தான் காரணம்.

போட்டி நடைபெற்றது.அந்த போட்டியில் ஒவ்வொரு அடியின்போதும்"say my name","What is my name" என்று ஆக்ரோசமாக தான் சண்டையிட்டார்.அந்த சண்டையே "whats my name fight” என்றே அடையாளப்பட்டு போனது.

அப்படி என்ன பழைய பெயரின் மீது அலிக்கு இவ்வளவு கோபம் ?

அந்த காலக்கட்டத்தில் ஒரு வழக்கம் கடைபிடிக்கபட்டு வந்தது.கருப்பினத்தவர்கள் பண்ணை அடிமையாக பயன்படுத்தபட்டு வந்தனர்,அப்படி எஜமானர்களுக்கு விசுவாசமான அடிமையாக வாழ்ந்த கருப்பர்களை விருப்பத்தின் பெயரில் விடுதலை செய்வார்கள் முதலாளி வெள்ளையர்கள்.

அப்படியாக விடுதலை பெற்ற கருப்பர்கள் தன் பெயருக்கு பின்னால் அந்த வெள்ளை எஜமானரின் பெயரை சேர்த்துக்கொள்ள வேண்டும்.அந்த பெயரே அவரது சந்ததியினருக்கு குடும்ப பெயராகவும் தொடரும்.அப்படி விடுதலை பெற்ற குடும்பம் தான் அலியின் குடும்பமும்,விடுதலையளித்த எஜமான வெள்ளையரின் பெயர் தான் "Clay".

அந்த பெயரை அடிமை சின்னத்தின் அடையாளமாக பார்த்தார் அலி.உண்மையில் அது அடிமைச்சின்னம் தான்.அதனாலயே தன்னுடைய பெயரை முதலில் Cassius X என்று மாற்றினார்.இது Malcom X உடன் ஏற்பட்ட நெருங்கிய நட்பால் மாற்றிய பெயர்.பின்னர் இஸ்லாமிய மதம் மாறிய பின் தன் பெயரை முஹம்மது அலி என்று மாற்றிக்கொண்டார்.

இந்த பெயரை கூற மறுத்து,அடிமை பெயரை கூறிய Terrell ஐ தான் அலி தண்டித்தார்.வெறும் பெயருக்கு கூட அலி அத்தனை போராட வேண்டியிருந்தது.

வெள்ளையர்களுக்கு எதிராக செயல்படுவதாக அவரை கைது செய்ய FBI திட்டம் தீட்டியது,அவரை பல நாட்களாக கண்காணித்தும் வந்தது.இத்தனையும் தனி ஆளாக எதிர்கொண்டார்.அலி அடிமைத்தனங்களை உடைத்தெறிந்தவர்.அவர் ஒரு கலகக்காரன், புரட்சியாளன்..

Ali is not just a sportsperson, 
he is a rebellion...
பலரைப் புரட்டிப் போட்ட முகமது அலியை முற்றிலும் புரட்டிப் போட்டது இஸ்லாம். அவர் ஒரு சாதனையாளனாக மிளிர இஸ்லாம் மிகப்பெரிய காரணமாக அமைந்தது. இன்றும் பலருடைய உள்ளங்களிலும் ஆட்சி செய்யும் இஸ்லாம் ஆட்சிக் கட்டில் அமர்ந்தால் சுத்தமாக சாதியை இல்லாமல் ஆக்கிவிடும்.
இதனால்தானோ என்னவோ இஸ்லாத்தை கடுமையாக மனித குல விரோதிகள் எதிர்க்கிறார்கள்.

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?

இஸ்லாத்திலும் ஜாதிகள் உள்ளனவா?
ஜாதிகள் எவ்வாறு உருவாகின?
சாதிகள் ஒழித்திடடி பாப்பா!
ஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்!
கலப்புத்திருமணம் கூடுமா?
குற்றவாளிகள் யார்? – கழுகுப்படை ஆய்வு!

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

இயற்கையில் உணவுச் சமநிலை

 Mohamed Ashik






பல நேஷனல் ஜியாகிராஃபி வீடியோக்களில்...
ஊன்உண்ணி மிருகம் ஒன்று . தாவரஉண்ணி மிருகத்தை துரத்தி துரத்தி வேட்டையாடி கடித்து குதறி உண்ணும் வீடியோவில்... பலரும் அந்த அந்த ஊன் உண்ணி மிருகத்தை கமென்டில் திட்டித் தீர்ப்பதை கண்டுள்ளேன்.
அப்புறம்.... சிலமுறை...
வேகமாய் ஓடக்கூடிய ஒரு தாவர உண்ணி மிருகம்... ஊன் உண்ணி மிருகத்திடம் சிக்காமல் நைச்சியமாக தாவி ஓடி தப்பித்து விட்டால்... மிகவும் மகிழ்ச்சி அடைந்து அந்த தாவர உண்ணி விலங்கை கமென்டில் பாராட்டுவதையும்... அத்தோடு நில்லாமல்... என்னமோ அந்த ஊன் உண்ணி மிருகத்தை இவரே தோற்கடித்து வென்றது போல... அப்பதிவை மகிழ்ச்சியோடு பகிர்வதையும்... அதில் அவரின் நண்பர்கள் அந்த தாவர உண்ணி விலங்குக்கு
congratulations
சொல்வதையும் நான் பலமுறை கண்டுள்ளேன்.
இங்கேதான் எனது .மற்றும் இவர்களின் மனோநிலையை ஒப்பிட்டு பார்க்கிறேன்.
தாவர உண்ணிக்கான உணவை... துரத்தி வேட்டையாடி பிடிக்க வேண்டிய அவசியம் இன்றி ஒரே இடத்தில் முளைக்கச்செய்து அவற்றுக்கு உதவி இருக்கிறார் கடவுள்.
ஆனால்...
ஊன்உண்ணிக்கு தாவரம் உண்டால் செரிக்காத செரிமான மண்டலத்தை தந்துள்ள கடவுள் வேகமாக ஓடி துரத்தி தன் உணவை பிடித்து கடித்து குதறி உண்ணும்படியான திறமையுடன் படைத்துள்ளார்.
இங்கேயுள்ள அந்த உணவுச்சமநிலை நமக்கு ஊட்டும் ஆச்சரியம் என்னவென்றால்... இவ்வுலகில் தாவர உண்ணிகள்தான் மிக அதிகம். அவற்றை வேட்டையாடி உண்ணும் ஊன்உண்ணிகள் மிகவும் குறைவு. இதுதான் இவ்வுலகில் நிலவுகின்ற இயற்கைச் சமநிலை.
ஆனால், துவக்கப்பள்ளி முதலே... தாவரமும் உயிர்களே... என்று படித்து இருந்தும்... பட்டங்கள் பெற்றும்... Dr என்கிற அடைமொழி எல்லாம் இருந்தும்... தாவரஉண்ணியை வேட்டையாடி உண்ணும் புலியை சிங்கத்தை சிறுத்தையை திட்டி கமெண்ட் போடுவதும்.... அவற்றிடம் இருந்து தப்பிக்கும் புள்ளிமானை வாழ்த்தி பதிவு ஷேர் செய்வதும்... அதன் பின்னாடி உள்ள மனோநிலை என்ன மாதிரியானது எனபதை கண்டு உள்ளம் துவள்கிறேன்.
மனிதனான தன்னை அனைத்துண்ணி என்பதையே மறந்து... இயற்கைக்கு மாறாக... தாவரஉண்ணி ஆகவே வளர்ந்ததாலும்... தன்னை தாவர உண்ணி ஆகவே நினைப்பதுவும்தான்.... இந்த ஒரு சார்பு மனப்பான்மை ஏற்பட காரணமாக இருக்கமுடியும். ஆகவே, மேலே சொன்ன அவ்விரு வேட்டை காணொலிகளில் நடுநிலை பேணாமல்... தாவர உண்ணியின் பக்கம் இன உணர்வு கொண்டு ஜால்றா அடித்து சாய்கிறார்கள் போலும். அதனால்தான்... ஊன் உண்ணி தன் பசிக்கு வேட்டையாடி இறை தேடுவதை... ஓர் இயற்கை நிகழ்வையே... ஒரு குற்றமாக பார்க்கிறார்கள்.
தாவர உண்ணி தன் பசியாற்ற... தாவரங்கள் எனும் உயிர்களை திண்ண கட்டற்ற சுதந்திரம் தரும் இவர்கள்.....
ஊன் உண்ணிக்கு அதே சுதந்திரத்தை தர மறுக்கிறார்கள். வெளிப்படையாக நடுநிலை தவறுகிறார்கள். ஊன் உண்ணி வேட்டையாடும் தாவர உண்ணியை தன் இனமாக பார்க்கும் மனப்பான்மைக்கு காரணம், அவர்களின் இயற்கைக்கு மாறான உணவுப்பழகவழக்க வளர்ப்புமுறையும் அறிவியலுக்கு எதிரான கலாச்சார பண்பாட்டு உணவுப் புரிதலும் தான்..!
இதுதான்... மெத்தப்படித்த புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் கூட மிருகத்தனமாக இப்படியொரு சட்டவிரோத போஸ்டர் ஒட்டி கேவலமாக நடந்துகொள்ள வைக்கிறது.
அதன்மூலம்... தாவரம் மாமிசம் இரண்டுமே செறிக்கின்ற ஜீரண மண்டலத்தை கொண்ட மனிதன்... ஒரு மனிதனாக அனைத்துண்ணியாக உணவு உட்கொள்ளும் போது ஏன் தூற்றப்படுகிறான் என்று என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
வேண்டுமானால்...
மனிதன் போல நடக்காமல்... தாவரஉண்ணி விலங்கு போல மாமிசம் சாப்பிடாமல் உள்ள மனிதமற்ற மனிதர்கள் மீது அபராதம் போட்டால் கூட... அதில் கொஞ்சோண்டு நியாயம் இருப்பதாக கூறலாம். ஆனால்... Sun News Tamil செய்தியில்... இந்த அபராதம் விதிப்பது எல்லாம் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது. போஸ்டர் ஒட்டியவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
வேரோடு கேரட்டை பிடுங்கி உண்ணும் முயல் போன்ற... தாவரங்களை கொன்று உணவு உண்ணும் தாவர உண்ணிக்கு நல்லவர் பட்டமும்... சாது எனும் புகழ் அடை மொழியும் தரப்படுகிறது..!
ஆனால்,
அதே இயற்கை சமநிலையில்... மானை கொன்று உணவு உண்ணும் புலிக்கு வில்லன் பட்டம் தரப்படுகிறது. கொடூரம் எனவும் தூற்றப்படுகிறது.
இதை... இனியும் நம்மால் சகித்துக்கொண்டு ஒதுங்கிச் செல்ல முடியாது. அப்படி சென்றதன் விளைவுதான்... Theekkathir செய்தி.
மிகவும் வன்மையான கண்டனங்கள்.