இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 23 டிசம்பர், 2023

மனிதனை நினைப்பதற்கு கடவுளை மறக்க வேண்டுமா?


 “கடவுளை மற! மனிதனை நினை!”

நாத்திகர்கள் ஆத்திகர்களிடம் அடிக்கடி கூறும் சொற்கள் இவை. இக்கூற்றை இன்று பொய்ப்பித்து நிற்கிறார்கள் முஸ்லிம்கள். கடவுளை சதா நினைக்கும் இஸ்லாமிய சமூகத்தால் எவ்வாறு மற்றெவரையும் விட அர்ப்பணிப்போடு மக்கள் சேவையில் ஈடுபட முடிகிறது?

கடவுள் நம்பிக்கையில் வேறுபாடு

ஆம், மனிதனை நினைப்பதற்கு கடவுளை மறக்கத் தேவையில்லை. கடவுளை இஸ்லாம் கூறுகிறபடி நினைத்தால் சக மனிதர்களும் நாடும் – குறிப்பாக ஏழைகள் -  அதிகமான நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். மற்றவர்களைப் போல இஸ்லாமியர்கள் படைப்பினங்களையோ கற்பனை உருவங்களையோ சிலைகளையோ கடவுள் என்று நம்புவதில்லை. அவர்கள் உண்மை இறைவனைப் பகுத்தறிந்து அவனது உள்ளமையையும் வல்லமையையும் அன்பையும் பாசத்தையும் மனமாற உணர்கிறார்கள். அவனோடு அனுதினமும் பேசுகிறார்கள். அவனது கூற்றுக்களை (வேதத்தையும் இறைத் தூதர் மொழிகளையும்) ஆய்வுக்குட்படுத்தி பகுத்தறிவின் அடிப்படையில் அவன் வாக்களிக்கும் மறுமை உலகை உண்மையென்று ஆணித்தரமாக நம்புகிறார்கள்.

இந்தத் தற்காலிக வாழ்க்கை என்பதை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான பரீட்சைக் கூடமாகவுமே அவர்கள் பார்க்கிறார்கள். இதில் இறைவனின் கட்டளைக் கேற்ப வாழ்ந்தால் இப்பரீட்சையில் வென்று மறுமையில் சொர்க்க வாழ்வை அடைய முடியும் என்றும் இறைவனுக்கு மாறு செய்தால் மறுமையில் இறைவனின் தண்டனையான நரக கிடைக்கும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

அதன் விளைவாக இவ்வுலகில் மற்றவர்களைப் போல சுயநலமாக இருக்க முடிவதில்லை அவர்களால். தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தும் இறைவனுக்கு சொந்தமானது என்று நம்புவதால் அவற்றை தாரளமாக பொதுநலனுக்காக செலவிடுகிறார்கள். மக்கள் சேவையில் எவ்வித ஆபத்தே வந்தாலும் அவர்களால் தியாகங்களை துணிந்து மேற்கொள்ள முடிகிறது. அந்த சேவைகளில் உயிரே போனாலும் மறுமையில் இறைவன் சொர்க்கத்தை வழங்குவான் என்று உறுதியாக நம்புகிறார்கள்.   

இஸ்லாமியர்களின் அற்பணிப்புக்குக் காரணம் என்ன?

இந்தப் பின்னணியைப் புரிந்து கொண்டு திருக்குர்ஆனின் கீழ்கண்ட சில வசனங்களை வாசியுங்கள்! முஸ்லிம்கள் அர்ப்பணிப்புடன் ஏன் பணியாற்றுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

= உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோமேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ்வையும்இறுதி நாளையும்வானவர்களையும்வேதங்களையும்இறைத்தூதர்களையும் நம்புவோரும் உறவினர்களுக்கும்அனாதைகளுக்கும்ஏழைகளுக்கும்நாடோடிகளுக்கும்யாசிப்போருக்கும்மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கும் (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும்தொழுகையை நிலைநாட்டுவோரும்ஸகாத்தை வழங்குவோரும்வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும்வறுமைநோய்மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள். (திருக்குர்ஆன் 2:177)
= அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவும்தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கைக்காகவும் தமது செல்வங்களை (நல்வழியில்) செலவிடுவோரின் உதாரணம்உயரமான இடத்தில் அமைந்த தோட்டம். பெருமழை விழுந்ததும் அத்தோட்டம் இருமடங்காக தன் உணவுப் பொருட்களை வழங்குகிறது. பெருமழை விழாவிட்டாலும் தூறல் (போதும்). நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (திருக்குர்ஆன் 2:265)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)

= “தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். "நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும்உறவினருக்காகவும்அனாதைகளுக்காகவும்ஏழைகளுக்காகவும்நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்'' எனக் கூறுவீராக! (திருக்குர்ஆன் 2:215)

= நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள். (திருக்குர்ஆன் 2:272)
(கடன் வாங்கிய) அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும் வரை அவகாசம் கொடுக்க வேண்டும். நீங்கள் அறிந்து கொள்வோராக இருந்தால் அதைத் தர்மமாக்கி விடுவது உங்களுக்குச் சிறந்தது. (திருக்குர்ஆன் 2:280)
அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும்உறவினர்களுக்கும்அனாதைகளுக்கும்ஏழைகளுக்கும்நெருங்கிய அண்டை வீட்டாருக்கும்தூரமான அண்டை வீட்டாருக்கும்பயணத் தோழருக்கும்நாடோடிகளுக்கும்உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்துகர்வம் கொள்பவரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (திருக்குர்ஆன் 4:36)

= நம்பிக்கை கொண்டோரே! மதகுருமார்களிலும்பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் வழியை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர். "அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும்வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு'' என்று எச்சரிப்பீராக! (திருக்குர்ஆன் 9:34)

= யாசிப்போருக்கும்ஏழைகளுக்கும்அதை வசூலிப்போருக்கும்உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும்அடிமை(களை விடுதலை செய்வதற்)கும்கடன்பட்டோருக்கும்அல்லாஹ்வின் பாதையிலும்நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவன்ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 9:60)

= உறவினருக்கும்ஏழைக்கும்நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரயம் செய்து விடாதீர்! (திருக்குர்ஆன் 17:26)


= தர்மம் செய்யும் ஆண்களுக்கும்பெண்களுக்கும்அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுத்தோருக்கும் பன்மடங்காகக் கொடுக்கப்படும். அவர்களுக்கு மதிப்புமிக்க கூலி உண்டு. (திருக்குர்ஆன் 57:18)

=============== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

வெள்ளி, 22 டிசம்பர், 2023

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 24


திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 24 

இஸ்லாமிய வரலாற்றில் பாலஸ்தீனம்-2

வாசகர் எண்ணம் -4, 12

இஸ்லாத்திற்கு ஈர்க்கப்படும் பெண்கள்-55

மேகன் ரைஸுக்கு எதிரொலிகள்!-8

மக்கள் சேவையில் பள்ளிவாசல்கள் -9

கருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை -11

சமூகப் பொறுப்புணர்வை வலியுறுத்தும் இஸ்லாம்! -13

மக்கள் நலனை மையமாகக் கொண்டது இஸ்லாம்  -15

மனிதனை நினைக்க  கடவுளை மறக்க வேண்டுமா?-17

வீரமங்கை சுபைதா!-20

மழை கொண்டுவந்த மடல்!-21

பேரிடர் கற்பிக்கும் பாடங்கள் -22

இரக்கம் அண்ணலாரின் வழிமுறை - 24