இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

பயங்கரவாதிகள் எதைக்கண்டு அஞ்சுகிறார்கள்?

Related image
பாம்புப்பண்ணை ஒன்றில் ஒரு காட்சி......

அதோ அங்கே நிறைய ஆட்டுக்குட்டிகளும் முயல்களும் கோழிகளும் ஆனந்தமாகத் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கின்றன.
அவைகளுக்கு இனி என்ன வேண்டும்?
தேவைக்கு மிஞ்சிய உணவு ....
ஓய்வெடுக்க மரநிழல்கள்....
எழுந்தால் விளையாட்டு...
இப்படியே சந்தோஷமாக  இருக்கும்போது திடீரென அருகே புதரில் இருந்து சலசலப்பு... விளையாட்டுகள் ஸ்தம்பித்தன.... சூழ்ந்தது பயம்... பீதி!
அதோ கிளம்பி வருகிறது அந்த மலைப்பாம்பு! ..... ஆம், அதற்குப் பசி எடுக்க ஆரம்பித்து விட்டது... இன்று அதற்கு பலியாகப் போவது யார்?
ஆடா? முயலா? கோழியா? ..... எந்த ஆடு? எந்த முயல்? எந்தக் கோழி?

அனைவரும் திடீரென ஒரே பய பீதியில்...
இன்றைக்கு பாம்பிற்கு பலியாகப் போவது யார்? அது நானா?
அனைவரும் திகிலில்...!
அங்கிருந்து தப்பி ஓட வழியில்லை... குறுக்கே நிற்கிறது தடுப்பு சுவர்!
இறுதியாக மலைப்பாம்பு தான் விரும்பிய இரையை தேர்வு செய்து முழுங்கிக் கொண்டு தன் இருப்பிடத்திற்கு திரும்பியது.
இது அன்றாடக் காட்சி அங்கே!

சரி, பாம்புப் பண்ணையை விட்டு வெளியே வருவோம்...
  இன்று நாம் வாழும் உலகிலும் இதே நிலைதான். உலகின் ஒரு சாரார் பெரும் சதிகள் செய்து வல்லமையைத் திரட்டி வைத்துக்கொண்டு உலகையே அச்சுறுத்தி ஆண்டுவரும் காட்சிதான் இங்கே! உலகின் 17% மக்கள் உலகின் 80% சதவீத வளங்களுக்கு சொந்தக்காரர்களாக திகழ்வதும் இதனால்தான்! மீதி உள்ள 20% சதவீத வளங்களை 500 கோடி மக்கள் பங்கிட்டு உண்ண வேண்டிய அவலமும் இதனால்தான்! கோடிக்கணக்கான மக்கள் உணவுநீர்வீடு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் வாடுவதும் பலர் செத்து மடிவதும் இதனால்தான்! அங்கே மலைப்பாம்பு பசியடங்கியதும் ஒதுங்கிவிடும். ஆனால் இங்கு இவர்களின் பசியோ  அடங்குவதேயில்லை!
சற்று சிந்தித்துப்பாருங்கள்....
  உலகின் ஒரு பெரிய கண்டத்தின் (continent)  பழங்குடிகளை ஈவிரக்கமின்றி கொன்றுகுவித்து அங்கே பிழைத்தவர்களை அடிமைப்படுத்தி அக்கண்டத்தின்  வளங்களை கையகப்படுத்தி அங்கு ஓர் வல்லரசை நிறுவிய கொடியோர்கள் எப்படி சமாதானப் பிரியர்கள் ஆக முடியும்?ஆயுதபலம் அவர்களிடம் மிகைத்திருக்கிறது என்பதற்காக அவர்கள் சொல்வதே நீதி என்று ஏற்கமுடியுமா?
 ஆம்அதுதான் இன்று நடந்துகொண்டிருக்கிறது. பயங்கரவாதத்தின் ஆணிவேராக விளங்கும் அமெரிக்காவும் அவர்களின் கூட்டாளிகளும் யாரை தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துகிறதோ அதை அப்படியே ஏற்கிறது உலகம்!  ஹிரோஷpமா நகரம் மீது அணுகுண்டை வீசி தலைமுறைகளை நாசம் செய்த கொடுமைக்கு நிகரான பயங்கரவாத செயலை இதுவரை உலகம் கண்டதில்லை. ஆனால் அதை நிகழ்த்தியவர்களை உலகம் பயங்கரவாதிகள் என்று அழைப்பதில்லை..... காரணம் அவர்களின் ஆதிக்க வலிமை! ஊடக வலிமை!
உலகை ஆண்டுவரும் மறைமுக காலனி ஆதிக்கம்!
ஸ்ரீ காலனி ஆதிக்கம் மூலம் நாடுகளை கொள்ளையடித்து  ஆதிக்கம் செய்தவர்கள் இன்றும் அந்த நாடுகளை தங்கள் கையாட்களையும் கைப்பாவை அரசர்களையும் வைத்துக்கொண்டு உலகை ஆண்டு வருகிறார்கள் என்பதே உண்மை! அந்நாட்டு வளங்களை தொடர்ந்து கொள்ளையடிக்கும் விதமாக வணிக ஒப்பந்தங்களை தந்திரமாக வகுத்து நிறைவேற்றி வருகின்றனர்.
 அமெரிக்க உளவு நிறுவனமான CBI -யில் முக்கிய அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற துழாn Pநசமiளெ தான் எழுதிய “Confessions of an economic hit man” என்ற புத்தகத்தில் அவர் தன்னுடைய பணிகாலத்தில் எப்படி தன்னுடைய மனசாட்சிக்கு விரோதமான காரியங்களில் உலக அளவில் செய்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார். நலிந்த நாடுகளின் கட்டுமானப் பணிகளுக்கு பெருமளவில் கடன் வழங்கி அவைகளை கொத்தடிமைகள் போல் ஆக்கி அவர்களின் எண்ணெய் வளங்களை அமெரிக்காவுக்கு அடிமாட்டு விலைக்கு தாரைவார்த்தல்,அமெரிக்காவின் இராணுவதளம் அமைத்தல்ஐநாவில் அமெரிக்காவுக்கு ஆதரவாக ஓட்டு போட வைத்தல்நிர்பந்தத்திற்கு வழங்காத ஆட்சியாளர்களை இராணுவப் புரட்சி மூலம் அகற்றுதல் அல்லது தீர்த்துக் கட்டுதல் போன்ற சதி நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாக ஜான் கூறுகிறார்.
அகிலத்தை அச்சுறுத்தும் ஆயுத ஆதிக்கம்
 உலகிலேயே அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த விமானங்கள்,  ஏவுகணைகள்நீர்மூழ்கிக்  கப்பல்கள். அணுவாயுதங்கள் மற்றும் இன்னபிற இராணுவத் தளவாடங்கள் இவர்களின் கைவசம் இருப்பதால்தான் உலகநாடுகள் அனைத்தையும் இவர்களால் அச்சுறுத்தி தங்களின் அடிமைகளாக அடக்கிவைக்க முடிகிறது.  ஆயுதங்களை உலக சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக சிறு சிறு நாடுகளுக்கு இடையே பகைமையை மூட்டி ஒருவருக்கொருவரை அடித்துக் கொள்ள வைப்பது அல்லது நாடுகளுக்குள்ளேயே சிறுசிறு குழுக்களைத் தூண்டி அந்நாட்டு அரசுகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டுதல் போன்றவை இவர்களுக்கு வாடிக்கை. ஆயுதங்களின் செயல்திறனை உலகுக்கு முன் காட்டியாக வேண்டும் என்பதற்காக ஐந்து வருடங்களுக்கு இடையே குறைந்தபட்சம் ஒருமுறை பெரிய அளவிலான போரை எப்படியாவது நிகழ்த்துகிறார்கள். இலட்சக்கணக்கில் மனித உயிர்கள் மாய்வது இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. தங்கள் ஆயுத விற்பனையும் வருமானமும் ஆதிக்கமும் தடைபெறக் கூடாது என்பதற்காக ஒருபுறம் இராணுவ அடக்குமுறைகளையும் மறுபுறம் தங்கள் கைவசம் உள்ள பத்திரிகைடிவிரேடியோ போன்ற ஊடகங்களையும் தந்திரமான முறையில் கையாள்கிறார்கள். மக்களை மூளைச்சலவை செய்து தங்கள் அராஜகங்களை நியாயப்படுத்துகிறார்கள். தங்களை சமாதானப் பிரியர்களாகவும் இவர்களின் எதிரிகளை பயங்கர வாதிகளாகவும் சித்தரிக்கிறார்கள். மக்கள் அதை நம்பவும் செய்கிறார்கள்! காரணம்... ஊடக வலிமை!
தோற்றுப் போகும் எதிர் சக்திகள்!
தட்டிக்கேட்கவும் தடுக்கவும் முன்வந்த அனைத்து மக்கள் சக்திகளும் இந்த வஞ்சகர்களால் நிர்மூலம் செய்யப்பட்டன அல்லது கலைக்கப்பட்டன அல்லது பிரித்தாளப்பட்டன! (உதாரணம்: ரஷ;யாவின் தலைமையில் ஆன கம்யூனிச நாடுகளின் கூட்டமைப்பு)
ஆனால் ஒரே ஒரு சக்தி மட்டும் இக்கொள்ளையர்களுக்கு கட்டுக்கடங்காத சவாலாக இருந்து வருகிறது. சக்திவாய்ந்த சதிவலைகளுக்கும் மிரட்டல்களுக்கும் பிரித்தாளும் சூழ்சிகளுக்கும் அடிபணியாமல் தன் வெற்றிப்பயணத்தை சளைக்காமல் தொடர்கிறது அது! உலகில் அநியாயங்களை அழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது! அது இனம் சார்ந்ததல்லமாறாக மனம் சார்ந்தது! மனித மனங்களை சீர்திருத்தி அவர்களைக் கொண்டே அநியாயங்களுக்கு முடிவுரை எழுத உள்ளது! ஆம்அதுதான் இஸ்லாம்!
இஸ்லாம் என்றால் என்ன?
  இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி பெறலாம் மறுமை வாழ்க்கையிலும் அமைதி பெறலாம் என்பது இம்மார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும். அதாவது இறைவன் கற்பிக்கும் ஏவல் விலக்கல்களை பேணி வாழும்போது உண்டாகும் அமைதியின் பெயரே இஸ்லாம்!
 உதாரணமாக கொலைகொள்ளைவிபச்சாரம்மதுசூதாட்டம்மூடநம்பிக்கைகள்தீண்டாமை,மனித உரிமை மீறல்கள் போன்ற கொடுமைகளை விலக்கி அங்கு தனி மனித ஒழுக்கமும் சமூக ஒழுக்கமும் பேணக்கூடியதீமைகளில் இருந்து விலகி வாழக்கூடியஇனநிறமொழி,நாடு போன்ற வேற்றுமைகளைக் கடந்து  மனித சமத்துவம்சகோதரத்துவம் பேணக்கூடிய,பரஸ்பர அன்புதியாகம் கூட்டுறவு போன்ற அழகிய பண்புகள் அமைந்த சமூகம் உருவானால் இவ்வுலகமே அமைதிப் பூங்காவாகாதா?  ஒன்றே மனித குலம்ஒருவனே இறைவன்அவனது கண்காணிப்பின் கீழ் உள்ளோம்நம் வினைகளுக்கு மறுமையில் விசாரணையும் அதற்கேற்ப சொர்க்கமும் நரகமும் வாய்க்க உள்ளது என்ற அடிப்படை உண்மைகளை மனித மனங்களில் விதைத்து அவர்களை சீர்திருத்தி ஒழுக்கம் நிறைந்த ஓர் உலகை கட்டியெழுப்பவே இஸ்லாம் விழைகிறது.
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள்அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான்அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான் பின்னர் இவ்விரு வரிலிருந்துஅநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ..... நிச்சயமாக இறைவன் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:1) 
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஸ்ரீ இஸ்லாம் உலகளாவிய மனித சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்துவது இனத்தின்நிறத்தின்குலத்தின் மேன்மைகளைக் கூறி மக்களைப் பிரித்து சுரண்டி வாழ்வோரால் சகித்துக்கொள்ள முடிவதில்லை!
ஸ்ரீ படைத்த இறைவனை இடைத்தரகர்கள் இன்றி வீண் சடங்கு சம்பிரதாயங்கள் இன்றி நேரடியாக வணங்க இஸ்லாம் சொல்லும்போது கடவுளின் பெயரால் மக்களை ஏய்த்துப் பிழைக்கும் இடைத்தரகர்களையும் ஆதிக்க சக்திகளையும் அது அமைதி இழக்கச் செய்கிறது!
ஸ்ரீ உலகில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டுமானால் அநியாயங்களும் மனித உரிமை மீறல்களும் தடுக்கப்படவேண்டும். ஏட்டளவில் பேச்சளவில் என்று இல்லாமல் இஸ்லாம் நடைமுறையில் மக்களை அதற்கு வழிநடத்துகிறது.
ஸ்ரீ நன்மையை எவுவதையும் தீமையைத் தடுப்பதையும் இறைநம்பிக்கையின் ஒரு பாகமாகவே கற்பிக்கிறது இஸ்லாம்.
 மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (எனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;இன்னும் இறைவன் மேல் நம்பிக்கை கொள்கிறீர்கள்; (திருக்குர்ஆன் 3:110)
 இதன் காரணமாக மக்கள் அநியாயங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் அவற்றைக் கொண்டு பிழைப்பு நடத்தும் ஏகாதிபத்திய சக்திகளுக்கும் எதிராகத் திரும்புகிறார்கள்.   இவ்வாதிக்க சக்திகளின் அடிமைத்தளையில் இருந்து தங்கள் நாடுகளை விடுவிப்பதற்காக அவர்களின் கையாட்களுக்கும் கைப்பாவை அரசுகளுக்கும் எதிராகப் போர்க்கொடி தூக்குகிறார்கள்.
இஸ்லாத்தின் அபார வளர்ச்சி!
 இன்று உலகில் இஸ்லாம் தனது தெளிவான கடவுள் கொள்கை மூலமாகவும் அது வலியுறுத்தும் தனிநபர் நல்லொழுக்கம்மனித சமத்துவம்சகோதரத்துவம்பெண்ணுரிமைகள்,குடும்ப கட்டமைப்புமனித உரிமைகள்சமூகத் தீமைகளுக்கு தீர்வுகள் போன்றவற்றின் மூலமாகவும் அமேரிக்காஐரோப்பா உட்பட  உலகெங்கும் பெருவாரியான மக்களை கவர்ந்து வருகிறது. இஸ்லாம் என்ற பேரியக்கத்தில் உலகம் தொடர்ந்து இணைந்து வருகிறது.
இந்த எழுச்சியை பரவவிடாமல் தடுக்க பல தந்திரங்கள் கையாளப் படுகின்றன.
ஸ்ரீ தங்களின் சக்திவாய்ந்த ஊடகங்களைக் கொண்டு தங்கள் நாட்டின் விடுதலைக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் போராடுவோரை கிளர்ச்சி யாளர்கள் என்றும் தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் முத்திரை குத்தி சிறை களுக்குள் வைத்து சித்திரவதை செய்து அச்சுறுத்துதல்.
ஸ்ரீ இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள நாடுகளில் கிளர்ச்சியாளர்களை உருவாக்கி அவர்களுக்கு ஆயுத பலமளித்து அவர்களைக் கொண்டே கலவரங்கள் மூட்டியும் பயங்கரவாத தாக்குதல்கள்,குண்டு வெடிப்புகள் போன்றவை நடத்தியும்  இஸ்லாமி யர்களைக் கொல்வதுஅதன்மூலம் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும்  பற்றி தப்பெண்ணம் உருவாக்குவது.
ஸ்ரீ தன் கையாட்களைக் கொண்டு இஸ்லாத்தை தவறான ஒளியில் சித்தரிப்பதற்காக திரைப்படங்கள்கதைகள் புனைந்து அவற்றை ஊடகங்கள்சமூக வலைதளங்கள் மூலம் பரப்பி இஸ்லாத்தின் மீது வெறுப்பை உருவாக்குதல்.
  இன்னும் இவைபோன்ற பலதும் செய்யப்பட்டாலும் இந்த இறைவனின் மார்க்கம்  தடைபடாமல் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. (www.pewresearch.org)
 ஆனால் உண்மையில் இஸ்லாம் எந்த ஒரு உயிரையும் அநியாயமாகக் கொல்வதோ துன்புறுத்துவதோ கூடாது என்று வன்மையாகத் தடுக்கிறது. அப்பாவிகளைக் கொல்வதும் துன்புறுத்துவதும் பெரும் பாவம் அதை ஒரு முஸ்லிம் செய்தாலும் முஸ்லிம் அல்லாதவர் செய்தாலும் மறுமையில் அதற்கு நரக தண்டனை உண்டென்று எச்சரிக்கிறது குர்ஆன்:
 எனவேஎவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும்எவர் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும்அ(தற்குரிய பல)னையும் அவர் கண்டு கொள்வார். (திருக்குர்ஆன் 99:7,8)

 மனிதனை மனிதனுக்கு எதிரியாக்கி ஏதேனும் ஒரு நாட்டையோ இனத்தையோ உயர்த்தவோ அழிக்கவோ வந்ததல்ல இஸ்லாம். மாறாக மனித மனங்களை பண்படுத்தி  அதன்வழி உலகெங்கும் தர்மத்தையும் நீதியையும் அமைதியையும் நிலைநாட்டும் சுயசீர்திருத்த இயக்கமே இஸ்லாம் என்பதை விளங்கும்போது இன்றைய எதிரிகள் நாளை இதன் சேவகர்களாகவும் காவலர்களாகவும்  மாறுவார்கள் என்கிறது வரலாறு!

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

நஜ்ஜாஷி மன்னரைக் கவர்ந்த குர்ஆன் வசனங்கள்

நஜ்ஜாஷி யார் என்பதை அறிய கீழ்கண்ட லின்கில் உள்ளதைப் படித்துவிட்டு இதைத் தொடருங்கள்:
நபித்தோழர்களை அரவணைத்த நஜ்ஜாஷி மன்னர்
அபிசீனிய மன்னர் நஜ்ஜாஷியின் வேண்டுகோளுக்கு இணங்க நபித்தோழர் ஜஃபர் பின் அபீதாலிப் ஓதிக்காட்டிய திருக்குர்ஆன் வசனங்கள் இவையே:

19:16. (நபியே!) இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக; அவர் தம் குடும்பத்தினரை விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது,
19:17. அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.
19:18. (அப்படி அவரைக் கண்டதும்,) “நிச்சயமாக நாம் உம்மை விட்டும் அருளாளனிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)என்றார்.
19:19. நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்”) என்று கூறினார்.
19:20. அதற்கு அவர் (மர்யம்), “எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?” என்று கூறினார்.
19:21. அவ்வாறேயாகும்; “இது எனக்கு மிகவும் சுலபமானதே; மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு அருட்கொடையாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்என்று உம் இறைவன் கூறுகிறான்எனக் கூறினார்.
19:22. அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.
19:23. பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது: இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதாஎன்று கூறி (அரற்றி)னார்.
19:24. (அப்போது ஜிப்ரீல்) அவருக்குக் கீழிருந்து: “(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சிறு ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்என்று அழைத்து கூறினார்.
19:25. இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.
19:26. ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், “மெய்யாகவே அருளாளனுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்என்று கூறும்.

19:27. பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார்; அவர்கள் கூறினார்கள்: மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!
19:28. ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை; உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை” (என்று பழித்துக் கூறினார்கள்).
19:29. (ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார்; “நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?” என்று கூறினார்கள்.
19:30. நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.
19:31. இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை நற்பாக்கியமுடையவனாக ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் நிறை வேற்ற எனக்கு செய்து கட்டளையிட்டு இருக்கின்றான்.
19:32. என் தாயாருக்கு நன்றி செய்பவனாக என்னை ஏவியிருக்கின்றான்; நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.
19:33. இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்என்று (அக்குழந்தை) கூறியது.
19:34. இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்); எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்).

19:35. அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை; அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், “ஆகுக!என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது.

நபித்தோழர்களை அரவணைத்த கிருஸ்துவ மன்னர்!

மக்கா நகரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சத்தியப் பிரச்சாரத்தை மேற்கொண்டு மக்களை இறைமார்க்கத்தின் பால் அழைத்துக்கொண்டு இருந்தார்கள். சத்தியத்தை ஏற்ற நலிந்தவர்களும் ஏழைகளும் ஆதிக்க வர்க்கத்தின் பயங்கரமான தாக்குதலுக்கு ஆளானார்கள். சித்திரவதைகளும் கொலைகளும் தொடர்ந்து நடக்க நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் நஜ்ஜாஷி என்ற கிருஸ்துவ மன்னர் ஆண்டு கொண்டிருந்த அபிசீனியா என்ற ஊரில் அடைக்கலம் தேடும் பொருட்டு ஒரு குழுவை ஜஃபர் பின் அபீதாலிபு என்ற நபித்தோழரின் தலைமையில் அனுப்பி வைத்தார்கள்.

  அபீசீனியாவிற்கு நபித்தோழர்கள் அடைக்கலம் சென்றதும், மக்கத்து சத்தியமறுப்பாளர்கள் அபீசீனியாவிற்கும் அப்துல்லாஹ் பின் அபீ ரபீஆ இப்னுல் முகீரா அல்மக்ஸும்மிய்யி என்பவரையும், அம்ருப்னுல் ஆஸ் இப்னு வாயில் அஸ்ஸஹ்மிய்யி என்பவரையும் தூதுக்குழுவாக அனுப்பி வைக்கிறார்கள். மக்காவில் அவர்களைத் துன்புறுத்தியது மட்டுமல்லாமல் அபிசீனியா வரை சென்று அங்கும்  தொந்தரவு கொடுக்கத் துணிந்தனர் இந்த சத்தியமறுப்பாளர்கள்.

தங்களுக்கு சாதகமாக அரசவையில் மன்னரிடம் பேச கீழுள்ள அதிகாரிகளுக்கு காணிக்கைகளை கொடுத்து சரிக்கட்டி வைத்துக் கொண்டனர் மக்கத்து சத்தியமறுப்பாளர்கள்.

பிறகு நஜ்ஜாஷி மன்னரிடம் பேசினார்கள் :  “மன்னரே! எங்களது ஊரிலிருந்து சில முட்டாள் சிறுவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் எங்களது சமூக மார்க்கத்தையும் விட்டு விட்டார்கள். உங்களது மார்க்கத்திலும் சேராமல் இருக்கிறார்கள். இதுபோன்ற ஒரு பிரிவினர் உங்களது ஊருக்கு வந்திருக்கிறார்கள்”
  “இவர்கள் புதிதாக ஒரு மார்க்கத்தைக் கொண்டு வந்துள்ளார்கள். அதனை நாங்களும் அறியவில்லை. உங்களுக்கும் அது தெரியாது. இவர்கள் நம்மைக் கெடுக்க வந்திருக்கிறார்கள்”
  “அரசே! நாங்கள் இவர்களின் சித்தப்பாக்களும் பெரியப்பாக்களும் குடும்பத்தைச் சார்ந்தவர்களும்தான் எங்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள். மற்றபடி அந்நியர்கள் அல்ல. வெறுத்துப் போய் நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்” என்று கூறி முடித்தனர்.

அங்கு சபையிலிருந்த அதிகாரிகளும் அப்படியே மொழிந்தனர். 

 மன்னர்  நபித்தோழர்களை அழைத்து  விசாரித்தார்.
 ஜஃபர் பின் அபீதாலிபு கூறினார்:
 மன்னரே! நாங்கள் எதையும் அறியாத மக்களாக இருந்தோம். சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தோம். செத்த பிணங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம், அசிங்கமான மானக்கேடான காரியங்களைச் செய்துகொண்டிருந்தோம்.  சொந்த பந்தங்களான உறவுகளைப் பகைத்துக் கொண்டிருந்தோம், அண்டை வீட்டார்களுக்குத் தொந்தரவு செய்து வந்தோம், பலமானவர்கள் பலவீனமானவர்களைச் சுரண்டி வாழ்ந்து வந்தோம். இந்நிலையில் எங்களுக்கு ஒரு தூதரை இறைவன் அனுப்பினான். அவரது பாரம்பரியத்தை நாங்கள் அறிவோம். அவரது உண்மையையும் நாங்கள் அறிவோம். அவரது நேர்மையும் பரிசுத்தமான வாழ்க்கையும் எங்களுக்குத் தெரியும். அவர் ஏக இறைவனை மட்டும் வணங்க வேண்டும் என எங்களுக்குச் சொன்னார். மற்றவைகளை விடச் சொன்னார். மரம் செடி கொடிகள் சிலைகள் போன்ற எதையும் வணங்கக் கூடாது என்று சொன்னார். உண்மையை மட்டும் பேச வேண்டும் என்று ஏவினார்.
அவர் அமானிதத்தைக் காப்பாற்றச் சொன்னார். சொந்தபந்தகளைச் சேர்த்து வாழவேண்டும் என்றார். அண்டை வீட்டாருடன் நெருக்கத்தை ஏற்படுத்த ஏவினார். இறைவனால் தடை செய்யப்பட்டதைத் தவிர்க்கச் சொன்னார். உயிரைக் கொலை செய்யக் கூடாது என்றார். அசிங்கமான காரியத்தைத் தடுத்தார். பொய் சொல்லக் கூடாது என்றார். அனாதையின் சொத்தைச் சாப்பிடக் கூடாது என்றார். பெண்கள் மீது அவதூறு சொல்லக் கூடாது என்று எங்களுக்கு ஏவினார். தொழச் சொன்னார். ஜகாத் கொடுக்கச் சொன்னார். நோன்பு வைக்கச் சொன்னார்......” என்று அப்படியே பட்டியல் போட்டு பேசினார்.
தொடர்ந்தார் நபித்தோழர், “இதையெல்லாம் நாங்கள் நம்பியதாலும், செயல்படுத்தியதாலும் எங்களை இந்த சத்தியமறுப்பாளர்கள் கடும் துன்பத்திற்கு ஆளாக்கி விட்டனர். அதனால்தான் நாங்கள் எங்கள் ஊரிலிருந்து உங்கள் நாட்டுக்கு வந்துவிட்டோம். உங்களைத் தேர்ந்தெடுத்து விட்டோம். உங்களது அடைக்கலத்திற்குத்தான் நாங்கள் ஆசைப்படுகிறோம். மன்னரே! உங்களது ஆட்சியில் எங்களுக்கு அநீதியிழைக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் உங்களிடம் வந்திருக்கிறோம்” என்று கூறினார்கள்.
அனைத்தையும் செவியுற்ற  நஜ்ஜாஷி, “மக்காவிலிருந்து வந்தவர்களிடம் நான் விசாரித்து விட்டுத்தான் நான் எதையும் சொல்ல முடியும்” என்றார்.
சத்திய மறுப்பாளர்களுக்கு செய்தி எட்டியது. மறுநாள் மன்னரிடம் வந்தார்கள்.
 நீங்கள் நம்பும் ஈஸா(ஏசு)வைப் பற்றி இவர்களிடம் விசாரியுங்கள் அரசே!” என்று கேட்டுக் கொள்கிறார்கள்.
 “ஈஸாவைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்று மன்னர் நஜ்ஜாஷி நபித்தோழர்களிடம் கேட்டார்.
 ஈஸா என்பவர் இறைவனின் தூதர், இறைவனின் மகனாக அவர் இல்லை, இறைவன் வார்த்தையினால் உருவானவர், அவர் இறைவனின் மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துச் சொன்னார். இன்றைக்கு நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் அன்றும் அவர் சொன்னார்” என்று பதில் கூறினார்கள்.
நஜ்ஜாஷி மன்னர், உங்கள் நபி முஹம்மதுக்கு இறைவனிடமிருந்து வேதம் வருவதாகச் சொன்னீர்களே, அதை வாசித்துக் காட்ட முடியுமா? என்று கேட்கிறார்.
அப்போது, திருக்குர்ஆனின் ‘மர்யம்’ என்ற அத்தியாயத்தின் வசனங்களை  ஓதிக் காட்டினார் ஜஃபர் பின் அபீதாலிப்.
அதைக் கேட்டதும் மன்னர் நஜ்ஜாஷி உண்மையைப் புரிந்து கொண்டார்.
“இது மூஸா(மோசே) நபிக்கு யாரிடமிருந்து வந்ததோ அவரிடமிருந்தே இவருக்கும் வந்ததைப் போன்றுள்ளது என்று” கூறிவிடுகிறார்.
“மேலும் நீங்கள் எங்களது நாட்டில் அடைக்கலம் பெற்று விட்டீர்கள். உங்களது மார்க்கத்தின் பிரகாரம் இங்கே நடந்து கொள்ளலாம்” என்று அனுமதியளித்து விடுகிறார் மன்னர் நஜ்ஜாஷி!
எல்லாப்புகழும் இறைவனுக்கே!.     (ஆதாரம்: முஸ்னத் அஹமத்)
நஜ்ஜாஷி மன்னரைக் கவர்ந்த குர்ஆன் வசனங்கள்

தீமைகளைத் தடுக்காமல் அமைதி மீளாது!


= கருக்கொலை, சிசுக்கொலை, பெண்சிசுக்கொலை என்று தாம் பெற்ற பிள்ளைகளைக் சகஜமாக தாமாகவே கொன்றொழிக்கும் பெற்றோர்கள்,
= பெற்றோரை மதிக்காத பிள்ளைகள், பெருகிவரும் முதியோர் இல்லங்கள், கருணைக் கொலை என்ற பெயரில் நடக்கும் முதியோர் கொலைகள்,
= காதலர்களைக் கைப்பிடித்து போற்றி வளர்த்த பெற்றோரை தூக்கி எறிந்து செல்லும் பிள்ளைகள்.
= காதல் என்ற பெயரில் காமப்பசி தீர்த்துவிட்டு கர்ப்பம் தரித்தபின் கைவிட்டு ஓடும் காமுகர்கள்.
= திருமண ஒப்பந்தத்தை மீறி நடக்கும் கள்ளக்காதல் உறவுகள், இவ்வாறு குடும்பத்துக்கு செய்யப்படும் வஞ்சகங்கள், கபட நாடகங்கள், 
= திருமணம் இல்லாமலே ஆணும் பெண்ணும் தகாத உறவு கொண்டு பெற்றெடுக்கும் பிள்ளைகள்.
= அந்நிய ஆண்களும் அன்னிய பெண்களும் தடைகளின்றி கலந்து படிக்கும், பணியாற்றும் ஏற்பாடுகளும் அங்கு நடைபெறும் பாலியல் உறவுகளும், வல்லுறவுகளும்!
என இவற்றின் நடுவே எந்தவித குற்ற உணர்வும் வெட்க உணர்வும் இன்றி சஞ்சரித்துக் கொண்டு வாழ்கிறது சமூகம்!

= மறுபுறம் இலஞ்சம் ஊழல், கொலைகள், கொள்ளைகள், அடக்குமுறைகள், வன்முறைகள் போன்றவற்றை இவற்றைத் தடுக்க முடியாது என்று முடிவுகட்டி ஒதுங்கியும் பதுங்கியும் பயந்தும் பணிந்தும் வாழ்க்கையைக் கழித்துக்கொண்டு வாழ்கிறது சமூகம்!

= அதிக மகசூல் மூலம் கொள்ளை லாபம் காணலாம் என்று ஆசைகாட்டி  ஆட்கொல்லி இரசாயனங்களை எருவாக விற்கும் பன்னாட்டு நிறுவனங்கள்!
= அவற்றை பயன்படுத்தி பழங்களும் காய்கறிகளும் தானியங்களும் உற்பத்தி செய்து அவற்றை பரவலாக பயிரிட்டு விற்கும் பாமர விவசாயிகள்!
= படைத்த இறைவனை நேரடியாக எளிமையாக வணங்குவதற்கு பதிலாக மூடநம்பிக்கைகளைப்  பரப்பி அவர்களை அடிமைப்படுத்தி வாழும் இடைத்தரகர்களும் அவர்களை பயன்படுத்தி நாட்டைக் கொள்ளையடிக்கும்  அரசியல் வாதிகளும்!
= இனம், மொழி, நிறம், இடம் இவற்றின் பெயரால் மக்களைப் பிரித்தாளும் தலைவர்களும் அரசியல்வாதிகளும்!

= மனிதனுக்கு நோய்களை உருவாக்கும் வைரஸ்களைப் பரப்பி அவற்றை எதிர்கொள்ளும் மருந்துகளையும் உற்பத்தி செய்து உலகளாவிய கொள்ளை நடத்தும் மேற்கத்திய கொடுரங்கள்!
= தங்கள் ஆயுதங்களின் விற்பனை நடக்க வேண்டும் என்பதற்காக நாடுகளுக்கு இடையே குழப்பங்கள் உண்டாக்கி சண்டைகள் மூட்டி
அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கும் வல்லரசு பயங்கரவாதம்!
சிறியது முதல் பெரியது வரை இன்று சரளமாக நடக்கும் அநியாயங்களையும் தீமைகளையும் பட்டியல் அவ்வளவு எளிதாக போட்டுவிட முடியாது.

இந்த தீமைகளும் பாவங்களும் அநியாயங்களும் தட்டிக்கேட்கப் படாமலும் தடுக்கப் படாமலும் தொடருமானால் மனித வாழ்க்கை என்பது கேள்விக்குறியாகவே இருக்கும். 
இவற்றின் முற்றிய நிலையில் இன்று நாம் வாழ்ந்து வருகிறோம்.

இத்தீமைகள் கட்டுகடங்காமல் பெருகுவதற்கு முக்கிய காரணங்களாக கீழ்கண்டவற்றை நாம் கூறலாம்:

அ) மனிதனுக்கும் சக மனிதனுக்கும் இடையே உள்ள உறவு உணரப்படாதது அல்லது அதுபற்றி கற்பிக்கப் படாதது.
ஆ) தன்னைத் தட்டிக் கேட்கவோ தண்டிக்கவோ யாரும் இல்லை என்ற தைரியம் 

உலகில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டுமானால் மனித மனங்களை சீர்திருத்த வேண்டும். முக்கியமான உண்மைகளை உணர்த்தியே ஆகவேண்டும்: 

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ..... நிச்சயமாக இறைவன் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:1)

அதாவது அனைத்து மனித குலமும் ஒரே குடும்பமே, நம் அனைவருக்கும் ஒரே இறைவனே என்று உலகளாவிய சகோதரத்தையும் சமத்துவத்தையும் வலியுறுத்துவதோடு அந்த இறைவனின் பரிபாலனத்திலும் கண்காணிப்பிலும் அனைவரும் உள்ளோம் என்பதை மனித மனங்களில் அடிப்படையாக விதைப்பதுதான் மேற்கூறிய தீமைகளை தடுப்பதற்கான முதல் படி. அப்போதுதான் மக்களை சீர்திருத்தி ஒழுக்கம் நிறைந்த ஓர் உலகை மறுபடியும் சமைக்க முடியும்.

தனிநபர் ஒழுக்க சீர்கேடுகள், குடும்பங்கள் சீரழிப்பு, சமூகத் தீமைகள் தொடங்கி வல்லரசு பயங்கரவாதக் கொடுமைகள் வரை அனைத்து தீமைகளையும் ஒழித்துக் கட்ட வேண்டுமானால் இஸ்லாம் பரிந்துரைக்கும் இது ஒன்று மட்டுமே வழியாக உள்ளது.  

முறையான இறைநம்பிக்கையும் வாழ்க்கையைப் பற்றிய தெளிவான கண்ணோட்டத்தையும் மறுமை வாழ்வையும் கற்பிப்பதன்வழி இக்கொள்கையை ஏற்பவர்களை சீர்திருத்துவதோடு அவர்களை இனம், குலம், நிறம், மொழி, இடம் போன்ற வேற்றுமைகளைக் கடந்து ஒருங்கிணைக்கிறது இஸ்லாம். அவ்வாறு மேற்படி தீமைகளுக்கு எதிரான உலகளாவிய வலுவான சக்தியாக உருவாக்குகிறது. 

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (எனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்இன்னும் இறைவன் மேல் நம்பிக்கை கொள்கிறீர்கள்; (திருக்குர்ஆன் 3:110)

 நன்மையை எவுவதையும் தீமையைத் தடுப்பதையும் இறைநம்பிக்கையின் ஒரு பாகமாகவே கற்பிக்கிறது இஸ்லாம்:
= இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

உங்களில் எவரேனும் தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும். இதுதான் இறைநம்பிக்கையின் இறுதிநிலையாகும். (நூல்: முஸ்லிம் 78)

= பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்டபின் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! அச்சத்துடனும், நம்பிக்கையுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது.      (திருக்குர்ஆன் 7:56)
= நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.    (திருக்குர்ஆன் 9:71)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)