இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மார்ச் 2022 இதழ்

 


திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மார்ச் 2022 இதழ் 

இதழ் உங்கள் இல்லம்தேடி வர உங்கள் முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள் 

பொருளடக்கம்: 

அரைகுறை ஆடை- பாலியல் விருந்துக்கான அழைப்பு -2

யாருக்காக? ... இது யாருக்காக?-4

ஹிஜாபிற்கு மீள்வோம் சொர்க்கம் செல்வோம்! -6

ஏம்மா, எதுக்கு முதுகில ஜன்னல்?-7

பாதுகாப்புக் கவசமே ஹிஜாப் -9

ஹிஜாபைப் பேணுவது சமூகக் கடமை! -11

யுவான் ரிட்லி - ஹிஜாபுக்குள் விரும்பி நுழைந்த புரட்சிப் பெண்மணி! -13

சமூக ஒழுக்கத்திற்கு இறைகூறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் -16

அறிவு வளர்ச்சியின் அடையாளமே ஆடை!-18

கூகுள் நினைவுகூர்ந்த கமலா சுரையா!-19

வாசகர் எண்ணம் -20

நாணமும் அடக்கமும் பெண்களுக்கு அழகு -21

இறைவிசுவாசிகளுக்கான ஆடை ஒழுக்கம் -23

சாராபோக்கர் - ஹிஜாபுக்குள் முழுமையாக நுழைந்த மாடல் அழகி! -24 


திங்கள், 14 பிப்ரவரி, 2022

ஒழுக்கமாக வாழ வழிவிடுங்கள்!


அவளது பிள்ளைகள் கேட்ட கேள்விகள் ஆஷாவை அன்றிரவு தூங்கவிடாமல் அலைகழித்துக் கொண்டிருந்தன... அன்று ஆபீசில் இருந்து களைப்போடு வீடு திரும்பி உடைமாற்றிக் கொண்டு இருக்கும்போதுதான் அந்தக் கேள்விகளைக் கேட்டார்கள் பிள்ளைகள்..

"எம்மாவீட்டுக்குள்ளாற மட்டும் மாக்சி போட்டுட்டு சுத்தறே... வெளிலே போகும்போது உடம்பெல்லாம் தெரியற மாதிரி ஓட்டை ஓட்டையா இருக்கிற டிரெஸ்ஸெல்லாம் போட்டுட்டுப் போறே?"
எதிர்பார்க்காத கேள்வி... கேட்டது ஆஷாவின் ஆறுவயது மகன்.
என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை ஆஷாவுக்கு... 
"
ஆபீசிலே மாக்சி போட்டுட்டுப் போனா உடமாட்டாங்கடா கண்ணு" 
பக்கத்து ரூமில் இருந்த மூத்தமகன் ராஜாவிடம் இருந்து வந்தது அடுத்த கேள்வி..
"
சரிம்மாஅதுக்கு எதுக்கு ஆபீஸ் போகும்போது கழுத்துகிட்ட ஜன்னல்முதுகுல ஜன்னல்லெக்கிங்க்ஸ்லிப்ஸ்டிக்.. ? இப்படித்தான் போட்டுட்டு வரணும்னு ஆபீசிலே சொன்னாங்களா?"
ஏன் இந்த திடீர் கேள்விகள்?... திக்குமுக்காடிப் போனாள் ஆஷா... 
"
இதுதான் ஊர் வழக்கம் ராஜா.. இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேக்கக்கூடாது" 
"
சரிம்மாஎன்னையும்தான் தண்ணியடிக்கறது ஊர் வழக்கம்னு பிரெண்ட்ஸ் கூப்பிட்டாங்கபோகட்டுமா?"
பதில் சொல்ல முடியவில்லை ஆஷாவால்...
"
காலேஜ்லே சில பொண்ணுங்க பசங்கள சுண்டி இழுக்கறதுக்காக கவர்ச்சியா ட்ரெஸ் போட்டுட்டு வர்றாங்க.. நீ எதுக்கும்மா அப்படிப் போடணும்?" 

மீண்டும் பதில் இல்லாமல் வாயடைத்து நின்றாள் ஆஷா.

ஏம்மாநாளைக்கு நம்ம சுதா கொஞ்சம் பெருசாகி உன்ன மாதிரி ட்ரெஸ் போட்டு போயி எவனாவது கொண்டுபோய் கற்பழிச்சா என்ன செய்வேஇல்லஉன்னையே கூட நாலு பேரு கடத்திட்டுப் போயி கற்பழிக்க மாட்டாங்கன்னு ரொம்ப தைரியமா இருக்கியா?”

ஏண்டா இப்படி ரொம்ப விபரீதமா கற்பனை பண்றேஅப்படியெல்லாம் நடக்காதுடா கண்ணு...” ராஜாவை தேற்ற நினைத்தாள் ஆஷா...

அடங்குவதாக இல்லை ராஜா..

ஏம்மா இந்த உலகத்துலதான் இருக்கியாநியுஸ்டிவி எல்லாம் பாக்கறதில்லையா நீஊரு பூரா நடக்கறது ஒண்ணும் உன் கண்ணுக்குத் தெரீலையா?

--------------------------

ஒழுக்கமாக வாழ நினைக்கும் உள்ளங்களில் குறிப்பாக இளைஞர்கள் உள்ளங்களில் குமுறிக்கொண்டிருக்கும் கேள்விகள் இவை. ஆஷாவைப் போல பெரும்பாலான பெண்கள் ஊர் வழக்கம்தானே என்று சொல்லி தாங்கள் அணியும் அரைகுறை ஆடையால் தவறில்லை என்று நினைகின்றனர். தங்களின் உடலின் அழகு அந்நிய ஆண்களின் கழுகுக் கண்களுக்கு விருந்தானாலும் அதனால் ஒன்றும் இல்லை என்று நினைக்கின்றனர். இலவசமாகக் கிடைக்கும் இன்பம் என்று இந்த காட்சிகளை அனுபவிப்பவர்களும் இதைப் பற்றி ஏதும் பேசுவதில்லை. பெண்களின் ஆடைக்குறைப்பு என்பது ஒரு தீமை என்பதையும் சமூகத்தில் அது உண்டாக்கும் குழப்பங்களையும் மறுமையில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்ற உண்மைகளை அறிந்த சில நல்லவர்களும் இதைப் பற்றி வாய் திறக்காமல் செல்கிறார்கள். மற்ற மக்கள் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்று பயந்து இத்தீமையை கண்டிக்காமல் செல்கின்றனர். அவ்வாறு செய்யும்போது இத்தீமைகளில் மூழ்கியுள்ளவர்களைப் பொறுத்தவரை  தங்கள் செயலில் தவறு இல்லை என்பதாக உணர்கின்றனர்.

இப்படிப்பட்ட சமூகப் போக்கு ஆபத்தானது.

இறைவிசுவாசிகள் களமிறங்க வேண்டும்

இறைநம்பிக்கை கொண்டவர்கள் நாட்டையும் மக்களையும் நேசிக்காமல் இருக்க முடியாது! அவர்களால் நாட்டில் நடக்கும் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் கண்டு அலட்சியமாக இருக்க முடியாது. இந்த பூமியில் தர்மத்தை நிலை நாட்டவேண்டிய பொறுப்பை நம் மீது இறைவன் சுமத்தியுள்ளான்,  நாளை மறுமையில் இறைவனால் இதுபற்றி நாம் விசாரிக்கப் படுவோம்  என்ற பொறுப்புணர்வு நமக்கு இருக்கவேண்டும். அது இறைநம்பிக்கையின் ஒரு பாகமாகும்.

இறைமார்க்கம் அல்லது இஸ்லாம் என்பது வெறும் தொழுகைதியானம்தானம்விரதம் மற்றும் இன்னபிற சடங்குகளுக்குப் பெயரல்ல. மாறாக நம்மைச்சுற்றி நன்மைகளை வளர்க்க வேண்டும். நடக்கும் தீமைகளைத் தடுக்கவும் வேண்டும். இதோ தனது இறுதிவேதம் மூலம் நாம் எப்படிப்பட்டவர்கள் என்று இறைவன் கூறுகிறான்

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்......” (திருக்குர்ஆன் 3:110)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்கு உரிய ஒரே இறைவன் என்று பொருள்)

மேலும் இறைத்தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

= உங்களில் எவரேனும் தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும். இதுதான் இறைநம்பிக்கையின் இறுதிநிலையாகும். (நூல்: முஸ்லிம்)

ஆகஒரு இறைநம்பிக்கையாளனைப் பொறுத்தவரை அவன் தீமைகளை எதிர்த்து எவ்வாறெல்லாம் முடியுமோ அவ்வாறு போராடக் கடமைப்பட்டிருக்கிறான். எனவே இன்று நாம் உள்ள நிலையில் எந்தத் தீமைகளை நாம் கையினால் நேரடியாகத் தடுக்க முடியமோ அந்தத் தீமைகளை நேரடியாகத் தடுக்கவேண்டும். உதாரணமாக நம் அதிகாரத்திற்கு உட்பட்ட வட்டங்களில் ஆடைக்குறைப்பு என்ற தீமை நேராடியாகவோ அல்லது ஊடகங்கள் மூலமாகவோ ஊடுருவும்போது நேரடியான நடவடிக்கைகள் மூலம் தடுக்க முயற்சிக்க வேண்டும். நம் அதிகாரத்திற்கு உட்படாத வட்டங்களில் இத்தீமையின் விபரீதம் பற்றியும் மறுமை வாழ்வின் விளைவுகள் குறித்தும் நாவின் மூலமாக அல்லது எழுத்தின் மூலமாக மக்களை எச்சரிக்கை செய்வதன் மூலம் போராடலாம்.

--------------------- 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?

இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?

http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html 

திங்கள், 7 பிப்ரவரி, 2022

மரம் நடுவது ஒரு முஸ்லிமின் பொறுப்பு

மரம் நடுவதை, இஸ்லாம் நன்மையாக கணக்கீடு செய்து, தர்மமாக ஊக்குவிக்கின்றது

"முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 2320, அனஸ் இப்னு மாலிக் (ரலி).
"இறுதித் தீர்ப்பு நாள் வருகையில் கூட, ஒரு மரக்கன்றை ஒருவர் கையில் வைத்திருந்தால் அவர் விரைந்து அதனை மண்ணில் ஊன்றட்டும்" என்று இறைதூதர் (ஸல்) கூறினார்கள்.
இந்த நபிமொழியின் பொருள் குறித்து விளக்கம் தரும் அறிஞர் தாரிக் ரமழான் “இறுதி நாளில் கூட இறை நம்பிக்கை கொண்டவர் வாழ்க்கையையும் அதன் சுழற்சிகளையும் புதுப்பித்துக் கொள்ளும் வண்ணம் இயற்கையை மதித்து அதனுடன் உறவு கொள்ள வேண்டும்” என்கிறார்.
மேகண்ட இரண்டு நபிமொழிகளும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இயற்கை சமநிலையை பேணவும் சொல்லப்பட்டவை.
மரம் நடுவதும், இயற்கை வளங்களை பராமரிப்பதும், பாதுகாப்பதும் ஒரு மனிதனின் கடமை குறிப்பாக இறைவனை ஏற்றுக்கொண்ட இறைநம்பிக்கையாளனின் பொறுப்பு என்பதை மேற்காணும் நபிமொழிகள் உணர்த்துகின்றன.
இறுதித் தீர்ப்பு நாள் வந்துவிட்டால் அதற்குப் பின் பூமி ஏது? பூமியில் வாழ்க்கை ஏது? அந்த நேரத்திலும் கூட கையில் இருக்கும் மரத்தை நட்டுவிட வேண்டும் என்று மனிதர்களின் வழிகாட்டி முஹம்மது (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
இது மனிதர்களுக்கு இயற்கை வளங்கள் மேல் உள்ள பொறுப்பையும், மனிதர்களுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவையும் சுட்டிக் காட்டுகிறது. உலகம் அழிவது போன்ற பேரிடர்கள் ஏற்பட்டாலும் மனிதர்கள் தங்கள் பொறுப்பில் கவனமற்று இருந்து விடக்கூடாது என்பதை தெளிவுபடுத்துகிறது.
மேலும் மரம் நடுவது ஒரு அறச் செயல். பணமாக, பொருளாக பிறருக்கு கொடுப்பதையே தர்மம் என்று நினைக்கும் மனிதர்களுக்கு, மனிதன் இன்னொரு மனிதனைப் புன்னகையுடன் எதிர்கொள்வதையும் தர்மம் என்கிறது இஸ்லாம்.
அந்த தொடரில் மரம் நடுவது தர்மம். ஒரு மனிதன் நடும் விதை வளர்ந்து மரமாகி பூவாக, காயாக, பலமாக, நிழலகாக மனிதர்கள் உள்ளிட்ட உயிர்களுக்கு பயன் தருகிற போது விதைத்தவனுக்கு தர்மமாக பலனளிக்கிறது என்கிறது இஸ்லாம்.
இஸ்லாம் மதமல்ல வாழ்க்கை நெறி என்று உபதேசிப்பதல்ல ஒரு முஸ்லிமின் கடமை. இஸ்லாம் மனிதர்களின் இயல்புகளோடு இயைந்த வாழ்க்கை என்பதை வாழ்ந்துதான் காட்ட வேண்டும். பக்தி என்பதும், ஆன்மீகம் என்பதும் பிற உயிர்களுக்கு பயன் தந்து வாழ்வதில் இருக்கிறது என்பதே இஸ்லாத்தின் முழக்கம்