இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 28 நவம்பர், 2021

திருக்குர்ஆன் நற்செய்தி மலர்- டிசம்பர் 21 இதழ்

 திருக்குர்ஆன் நற்செய்தி மலர்- டிசம்பர் 21 இதழ்

இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு sms செய்யுங்கள் 

--------------------------------------

பொருளடக்கம்:

வீரியமாக வளரும் பாலியல் வன்கொடுமைகள் -2

தீர்வு இருந்தும் கண்டுகொள்ளாத அரசுகளும் மக்களும்! -3

உள்ளுக்குள்ளேயே புழுங்கித் தவிக்கும் பேதைகள் -4

காமுகனே கொஞ்சம் நில்! -6

பாலியலும் இறைவழிகாட்டலும் -10

வாசகர் எண்ணம் -11

பாலியல் ஆசைகளை எப்படித்தான் தணிப்பது? -12

பாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்? -14

விபச்சாரம் செய்ய அனுமதி கேட்ட வாலிபர் -17

பொறுப்புணர்வோடு பாலியல் -அதுவே திருமணம்! -19

பெண்ணை இழிவு படுத்தும் மடமையை ஒழிப்போம்! -21

பாலியல் கொடூரங்களில் இருந்து நாட்டைக் காப்போம்!-23

செவ்வாய், 23 நவம்பர், 2021

பாலியல் சட்டங்களை மனிதனே இயற்ற முடியுமா?


 பாலியல் வன்கொடுமைகள் நாட்டில் கொந்தளிப்பை உண்டாகும்போது மக்கள் குற்றவாளிகளை தயவு தாட்சண்யம் பாராமல் பொது இடங்களில் தூக்கில் இடவேண்டும், குற்றவாளியின் பிறப்புறுப்பை அறுத்தெறிய வேண்டும், அவனைக் கண்டம் துண்டமாக வெட்ட வேண்டும் என்றெல்லாம் குமுறுவதை நாம் காண்கிறோம். மெல்லமெல்ல இந்தக் குமுறல் அடங்குகிறது. சிறிதுகாலம் கடந்த பின் மீண்டும் எழுகிறது. மீண்டும் அடங்குகிறது... மீண்டும் எழுகிறது... அதாவது பிரச்சினை தீர்வு காணப்படாமல் தொடர்கிறது. இந்நிலைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று முறையான பாலியல் தொடர்பான விதிமுறைகளும் சட்டங்களும் இல்லாமையே!

பாலியல் தொடர்பான விதிமுறைகளை எங்கிருந்து பெறுவது? இவற்றை எவ்வாறு நிர்ணயிப்பது? யார் நிர்ணயிப்பது? இங்குதான் நாம் பகுத்தறிவு பூர்வமாக சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

உருவாக்கியவனைப் புறக்கணிக்கலாமா?

நாம் வாழ்வில் அன்றாடம் புழங்கும் தையல் மிஷின், வாஷிங் மிஷின்,  ஸ்கூட்டர் போன்ற பொருட்களை அவர்களின் தயாரிப்பாளர்கள் தரும் பயன்பாட்டு கையேட்டைப் (Instruction manual) புறக்கணித்துவிட்டு தான்தோன்றித்தனமாக நாமே நம் மனம்போன போக்கில் பயன்படுத்தினால் என்னென்ன விபரீதங்களும் விபத்துக்களும் ஏற்படும் என்பதை நாம் தெளிவாக உணர்ந்திருக்கிறோம். நாம் பயன்படுத்தும் இயந்திரங்களிலேயே அதிக சிக்கல்களும் நுட்பங்களும் கொண்டது (most complicated) நமது உடல் என்ற இயந்திரம். இதைத் தயாரித்தவனை நாம் புறக்கணித்து விட்டு நம் மனம்போன போக்கில் பயன்படுத்தினால் ஏற்படும் விபரீதங்களைத்தான் இன்று நாம் அனுபவித்து வருகிறோம்.

அற்ப அறிவும் ஆயுளும் கொண்ட ஒரு மனிதன் சக மனிதனுக்கான பாலியல் சட்டங்களை இயற்றவோ பரிந்துரைக்கவோ அறவே தகுதி இல்லாதவன் என்பதை நாம் முதற்கண் உணரவேண்டும். எந்த ஒரு தனிநபரும் சரி, மனிதர்களின் குழுக்களும் சங்கங்களும் சரி, ஊர் நிர்வாகமும் சரி, அரசியல் கட்சிகளும் அல்லது நாடாள்பவர்களும் சரி, இவர்களில் யாரும்  பாலியல் சட்டங்களை இயற்றவோ பரிந்துரைக்கவோ சற்றும் தகுதி இல்லாதவர்களே என்பதை நாம் உணரவேண்டும். சமூகத்தில் உண்டாகும் ஏதேனும்  ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக உருவாக்கப்பட்ட ஏதேனும் மக்கள் இயக்கங்களும் உதாரணமாக கம்யுனிச இயக்கம், மனித உரிமை இயக்கம், பெண்ணுரிமை இயக்கம் போன்றவைகளும் இதற்குத் தகுதி பெற்றவை அல்ல என்பது தெளிவு.

படைத்தவன் மட்டுமே தகுதிபெற்றவன்

ஆண் பெண்  உடற்கூறுகளையும் அவற்றின் இயற்கையையும் அவர்களின் பருவ மாற்றங்களையும் அவற்றுக்கேற்ற தேவைகளையும் உளவியலையும் அவர்களது வாழ்வின் நோக்கத்தையும் முழுமையாக அறிந்தவன் அவர்களின் படைப்பாளன் மட்டுமே. அவன் மட்டுமே பக்குவமான பாலியல் சட்டங்களை இயற்ற முடியும். அவன் மட்டுமே ஆணுக்கும் பெண்ணுக்கும் சமூகத்தில் அவர்களது பங்கு, கடமைகள், பொறுப்புக்கள், போன்றவற்றை முழுமையாக நிர்ணயிக்கக் கூடியவன். அந்த சர்வஞானமும் சர்வ வல்லமை கொண்டவனும் நுண்ணறிவாளனும் ஆன இறைவன் நமக்கு வழங்கும் வாழ்வியல் சட்டங்களே மிகமிகப் பக்குவமானவை. அனைத்து மனிதகுலத்துக்கும் பொருத்தமானவை. அனைத்து படைப்பினங்களோடும் இணக்கமானவை. அந்த இறைவன் ஒருவனே அனைத்துலகுக்கும்  சொந்தக்காரன்  என்பதால் அவன் மட்டுமே அனைத்து மனிதர்களின் உரிமைகளையும் மிருகங்களின் மற்றும் இன்ன பிற படைப்பினங்களின் உரிமைகளையும் பக்குவமான முறையில் பங்கீடு செய்து நிர்ணயிக்கவும் தகுதியானவன். அந்த இறைவன் வகுத்து வழங்கும் வாழ்வியல் சட்டங்களின் ஒரு பிரிவே பாலியல் தொடர்பான சட்டங்கள்.

சரி, இந்த வாழ்வியல் சட்டங்களை இறைவன் எதற்காக வழங்கியுள்ளான்?

இங்குதான் நாம் இந்த வாழ்க்கையின் நோக்கத்தையும் மறுமையையும் பற்றி சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். நாம் வாழும் இந்தக் குறுகிய வாழ்க்கையை இறைவன் ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான பரீட்சைக் கூடமாகவும் படைத்துள்ளான்.  இறைவன் நமக்கு வழங்கும் வாழ்வியல் சட்டங்கள் நமது இம்மை மற்றும் மறுமை வாழ்வை அடிப்படையாகக் கொண்டவை. அவற்றை உரிய முறையில் நிறைவேற்றும் பொழுது இவ்வுலக வாழ்க்கையும் அமைதியாக அமையும். மறுமையில் மோட்சமும் கிடைக்கும். 

பாலியலே வாழ்வியலின் ஆதாரம்:

மனித வாழ்வியலின் ஆதாரமாக உள்ளவை பாலியல் உணர்வுகளும் அதைத் தணிக்கும் வழிமுறைகளும். இவற்றை உரிய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நிறைவேற்றும் வரை மனித சமூகத்தில் அமைதி நீடிக்கும். அதற்கான வழிகாட்டுதலை இறைவன் தன் வேதங்களின் மூலமாகவும் தூதர்களின் மூலமாகவும் அவ்வப்போது வழங்கி வந்துள்ளான். அதன் விளைவாகவே திருமணங்களும் குடும்ப உறவுகளைப் பேணும் வழிமுறைகளும் மனித சமூகத்தில் உருவாயின.  அந்த இறைத் தூதர்களில் இறுதியாக வந்தவரே முஹம்மது நபி(ஸல்) அவர்கள். அவர் மூலமாக அருளப்பட்ட இறைவேதமே திருக்குர்ஆன். இறைவனின் ஏவல்- விலக்கல்களுக்கு கட்டுப்பட்டு வாழும் முறையே இன்று இஸ்லாம் என்று அரபுமொழியில் அறியப்படுகிறது.

ஆக, ஆண்- பெண் உறவுகள் விடயத்தில் மட்டுமல்ல, வாழ்வின் எல்லா விடயங்களிலும் அவன் கற்பிக்கும் ஏவல்-விலக்கல்களைப் பேணி வாழ்வதுதான் அறிவுடைமையாகும். அவற்றை பின்பற்றி நடைமுறைக்கு கொண்டுவந்தால் மட்டுமே இவ்வுலக வாழ்வு அமைதி மிக்கதாக அமையும்.

சரி, இவற்றை பின்பற்றாவிட்டால்......?

இவ்வுலக வாழ்வை மேற்கூறப்பட்ட விபரீதங்களுக்கு மத்தியில் அல்லல்பட்டு கழிக்க வேண்டியிருக்கும் என்பது மட்டுமல்ல. அந்த இறைவன் நமக்கு வழங்கிய வாழ்க்கைத் திட்டத்தை புறக்கணித்து வாழ்ந்ததன் காரணமாக மறுமை வாழ்வில் தண்டனையையும் அனுபவிக்க நேரும்.

= அவனே அல்லாஹ்! வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அனைத்துப் புகழும் அவனுக்கே. இம்மையிலும் மறுமையிலும் தீர்ப்பு கூறும் அதிகாரம் அவனுக்கே உரியதாகும். மேலும்அவனிடமே நீங்கள் அனைவரும் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 28:70)

(அல்லாஹ் என்றால்  வணக்கத்துக்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)

====================== 

தொடர்புடைய ஆக்கங்கள்:

 காமுகனே கொஞ்சம் நில்! (quranmalar.com)

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?

http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html

சனி, 20 நவம்பர், 2021

பெண்ணை இழிவு படுத்தும் மடமையை ஒழிப்போம்!


 பாலியல் குற்றங்களின் வளர்ச்சிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, இந்த சமூகம் பெண்களின் மீது கொண்டுள்ள தவறான பார்வை. நமது  சமூகம்  பெண்களை ஒரு போகப் பொருளாகவும்
அற்பமானவளாகவுமே  பார்க்கிறது கற்பழிப்பால் பாதிக்கப்பட்டவளை களங்கப்பட்டவளாகப் பார்க்கும் இந்த சமூகத்தின் பார்வை  மாறவேண்டும். தலைகுனிவும்குற்ற உணர்வும்அவமானமும்  எவன் இக்குற்றத்தைப் புரிந்தானோ  அவன்தான் பெற வேண்டுமே தவிர பாதிக்கப்பட்டவள் அல்ல. தொடர்ந்து அதிகரித்து வரும் பெண்களின் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்கநாம் முதலில் நமது சமூகம் பெண்களின் மீது கொண்டுள்ள தவறான  பார்வையை மாற்ற வேண்டும்.

பெருமதிப்புக்குரியது பெண்ணினம் என்ற உண்மையை சமூகம் உணரவேண்டும்.
குடும்பங்களே சமூக அமைப்பின் ஊற்றுக்கண்கள் எனபதையும் அதில் பெண்கள்தான் மனித இனத்தின் விளைநிலங்கள் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. அதில் உருவாகும் குழந்தைகள் எவ்வளவு நல்லோழுக்க்கத்தொடும் கட்டுப்பட்டோடும் வளர்கிறார்களோ அதைப் பொறுத்தே சமூகமும் ஒழுக்கமுள்ளதாக அமையும். சமூக வாழ்விலும் அமைதி நிலவும். தாய்மை என்ற புனிதமான பொறுப்பு பெண்கள் மீதுதான் சார்ந்திருப்பதால் அதைப் பாதுகாப்பதும் அவசியம் அதை மதிப்போடு நடத்துவதும் அவசியம்.
பெண்களுக்கு மதிப்பு அளிக்கவும் மரியாதை செய்யவும்  கற்றுக்கொடுக்கிறான் இறைவன்.  பெண்களுக்கு உரிமைகளையும்கண்ணியத்தையும் உரிய முறையில் வழங்க தனது வேதம் மூலமாகவும் தூதர் மூலமாகவும் நீங்கள் காணலாம்.
பெண்குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதம்
பெண் குழந்தை பிறந்தால் இழிவாகக் கருதும் பெற்றோர்களிடம்தான் பெண்ணை  இழிவு படுத்தும் செயல் முதன் முதலில் துவங்குகிறது. திருக்குர்ஆனில் இறைவன் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறான்.:
= இவர்களில் ஒருவருக்கு பெண் குழந்தை (பிறந்திருப்பது) பற்றி நற்செய்தி சொல்லப்பட்டால்அவரது முகத்தில் கருமை கவ்விக் கொள்கின்றது! துக்கத்தால் அவர் தொண்டை அடைத்துக் கொள்கிறது..இந்தக் ‘கேவலமான’ செய்தி கிடைத்துவிட்டதே என்பதற்காக இனி யார் முகத்திலும் விழிக்கக்கூடாது என்று மக்களைவிட்டு ஒதுங்கிச் செல்கின்றார். அவமானப்பட்டுக் கொண்டு அப்பெண் குழந்தையை வைத்திருப்பதா அல்லது அதனை மண்ணில் புதைத்து விடுவதா என்று சிந்திக்கின்றார் பாருங்கள்! இறைவனைப் பற்றி இவர்கள் எடுத்த முடிவு எத்துணைக் கெட்டது!"  - (திருக்குர்ஆன் 16:58,59).
பெண் குழந்தை என்றால் இழிவு எனக் கருதி அவர்களை உயிருடன் புதைக்கும் பழக்கம் அங்கு அராபியர்களிடம் இருந்து வந்தது. குழந்தைகளை கொலை செய்வதை குறிப்பாக பெண்குழந்தைகளை கொல்வதை கடுமையாக எச்சரித்து தடுத்தது.  அதனை மறுமை வாழ்வுடன் தொடர்புபடுத்தி அச்சமூட்டுகிறான் இறைவன்:
 'உயிருடன் புதைக்கப்பட்ட (பெண்குழந்தையான)வளும் வினவப்படும் போது. எக்குற்றத்திற்காக கொல்லப்பட்டாள் (என்று வினவப்படும் போது) (திருக்குர்ஆன் 82:8-9)
பெண்களுக்கு அனைத்திலும் உரிமை
ஆணுக்கும் பெண்ணுக்கும் அவரவர் இயற்கைக்கும் ஏற்றவாறு இறைவன் உரிமைகளும் கடமைகளும் வழங்கியிருப்பதை நீங்கள் காணமுடியும்: எந்த பெண்ணுரிமை அமைப்புகளும் போராடமலேயே கீழ்கண்ட உரிமைகளை இஸ்லாமிய பெண்கள் பதினான்கு நூற்றாண்டுகளாக அனுபவித்து வருவதை நீங்கள் காணலாம்:
படிப்பதற்கு உரிமை,
# பொருள் சேர்க்கும் உரிமை. தான் சம்பாதித்ததை தானே வைத்துக்கொள்ளும் உரிமை.
மணமகனை தேர்ந்தெடுக்கும் உரிமை
வரதட்சணைக்கு நேர்மாற்றமான மஹர் (வதுதட்சணை) பெறும் உரிமை, 
விவாக ரத்து உரிமை
பெற்றோர்கணவன்சகோதரன்மகன் இவர்களின் சொத்துகளில் இருந்து வாரிசுரிமை.
மட்டுமல்ல கற்பொழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோருக்கு கடுமையான தண்டனைகள், முதிய வயதில் பராமரிக்க மறுக்கும் பிள்ளைகளுக்கு கடுமையான எச்சரிகைகள் இவை போன்ற பல நடவடிக்கைகள் மூலம் பெண்ணினத்தின் கண்ணியத்தையும் தன்னம்பிக்கையையும் இஸ்லாம் பாதுகாப்பதை நாம்  காணலாம்.
இல்லறத்தில் சம உரிமை
= "அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும்நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்." – (திருக்குர்ஆன் 2:187)
= "உங்களில் எவருடைய நற்செயலையும் நான் வீணாக்கவே மாட்டேன் அவர் ஆணாயினும் சரிபெண்ணாயினும் சரி! நீங்கள் ஒருவர் மற்றவரிலிருந்து தோன்றிய (ஒரே இனத்த)வர்களே!" – (திருக்குர்ஆன் 3:195)
= "பெண்களைக் குறித்து இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்! உங்களுக்கு அவர்களின் மீது சில உரிமைகள் உள்ளனஅவ்வாறே அவர்களுக்கும் உங்களின் மீது சில உரிமைகள் உள்ளன" – நபிமொழி
"உங்களில் சிறந்தவர் உங்களின் மனைவியிடத்தில் சிறந்தவரே" – நபிமொழி

அதாவது யார் பெண்களிடத்தில் அழகிய முறையில் நடந்து கொள்கிறாரோ அவரே சிறந்தவராக இருக்க முடியும் என்பதை மிக அழகாக இங்கு போதிக்கிறார்.

காமுகனே கொஞ்சம் நில்!



பலவந்தமாக நடத்தப்படுவதோ அல்லது சூழல் காரணமாக நடப்பதோ எந்த வகை  கற்பழிப்பாகவோ இருக்கட்டும். ஒரு பெண்ணை முழுமையாக அடையும் வாய்ப்பு உங்களுக்கு வாய்த்துவிட்டது என வைத்துக் கொள்வோம். நீங்களும் அந்தப் பெண்ணும் மட்டும் தனிமையில் இருக்கிறீர்கள்.  அவளின் பெற்றோரோ உடன்பிறப்புக்களோ, உறவினர்களோ காவல் துறையோ அல்லது வேறு ஏதேனும் கண்காணிப்போ என எதுவுமே அங்கு இல்லை. உங்கள் இச்சையை நிறைவேற்ற எந்தத் தடையும் அங்கு இல்லை. இன்னும் அந்தப் பெண்ணே கூட உங்களுக்கு முழு சம்மதம் தெரிவிக்கிறாள் என்றே எடுத்துக் கொள்வோம். இன்னும் ஒருபடி மேலே போய் அந்தப் பெண்ணே உங்களை காமத்துக்குத் தூண்டுகிறாள் என்றே கூட வைத்துக் கொள்வோம்.

இப்படிப்பட்ட சூழலில் அப்பெண்ணை அனுபவிப்பதில் தவறேதும் இல்லை, தடையேதும் இல்லை என்று நினைக்கிறீர்களா? உங்களுக்குள் எழுந்துள்ள காமவெறி அல்லது காமுகன் என்ற ஷைத்தான் உங்களை அவ்வாறு எண்ணவைப்பான். முக்கியமான உண்மைகளை மறக்கடித்துவிடுவான்.

அவை யாவை? அவற்றை நீங்கள் நிதானத்தில் இருக்கும்போதே சிந்தித்து உணர்ந்தால் மேற்கொண்டு இக்குற்றச்செயலை செய்யத் துணியமாட்டீர்கள்!

உங்களை அறியுங்கள்:

1.முதலில் நீங்கள் யார்? உங்களது நிலை என்ன என்பன பற்றி அறியுங்கள்:

-    இம்மாபெரும் பிரபஞ்சத்தில் பரவிக்கிடக்கும் கோடானுகோடி பந்துகளில் ஒரு பந்தான பூமிப் பந்தின்மீது ஒட்டிக்கொண்டு இருக்கும் ஒரு அற்பத்திலும் அற்பமான துகள் போன்றவர் நீங்கள்.

-    இவற்றின் படைப்பிலோ இயக்கத்திலோ கட்டுப்பாட்டிலோ ஒரு துளியளவு கூட உங்களுக்கு பங்களிப்பு இல்லை.

-    மட்டுமல்ல நீங்கள் என்னுடையது என்று சொல்லிக்கொள்ளும் உங்கள் உடல் பொருள் ஆவி என இதில் எதுவுமே உங்களுடையது அல்ல, இவற்றின் கட்டுப்பாடும் முழுமையாக உங்கள் கைவசம் இல்லை.

-     நீங்கள் இங்கு வருவதும் போவதும் - அதாவது உங்கள் பிறப்பும் இறப்பும் உங்கள்  விருப்பப்படி நடப்பது அல்ல.

-    உங்களை மீறிய உங்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்திதான் இவற்றையெல்லாம் படைத்து பரிபாலித்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு வருகிறது என்பதை மறுக்க மாட்டீர்கள். அந்த சக்தியையே தமிழில் இறைவன் அல்லது கடவுள் என்கிறோம். அரபு மொழியில் அல்லாஹ் என்று கூறுகிறோம்.

இவ்வுலக வாழ்க்கையை அறியுங்கள்:

2. அந்த இறைவன் இந்தக் குறுகிய தற்காலிக வாழ்க்கையை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான பரீட்சைக் கூடமாகவும் படைத்துள்ளான். இதில் இறைவன் நம்மிடம் எவற்றை ஏவுகிறானோ அவை நமக்கும் மனித குலத்திற்கும் நன்மை பயப்பவை. அவற்றை செய்தால் அவை புண்ணியங்களாக இறைவனிடம் பதிவு செய்யப்படுகின்றன. எவற்றை செய்யக்கூடாது என்று நம்மைத் தடுக்கிறானோ அவை நமக்கும் மனிதகுலத்திற்கும் தீங்கு விளைவிப்பவை. அவையே பாவங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. எனவே இந்த வாழ்க்கைப் பரீட்சையில் வெல்பவர்கள் மறுமையில் சொர்க்கத்தை நிரந்தர வாழ்விடமாக அடைகிறார்கள்.  இதில் தோல்வி அடைபவர்கள் நரகத்தை அடைகிறார்கள்.

சாட்சிகளுக்குப் பஞ்சமில்லை

3. நீங்கள் செய்யவிருக்கும் செயலுக்கு உங்கள் இருவரைத்தவிர சாட்சிகள் ஏதும் இல்லையென்று நீங்கள் கருதலாம். ஆனால் அது தவறு.  இன்று எங்கும் கண்காணிப்புக்காக பொருத்தப்படும் CCTV கேமராக்கள் அவற்றின் பார்வையில் படும் நிகழ்வுகளை பதிவு செய்வதை நாம் அறிவோம். அதைப்போலவே நம் ஒவ்வொருவரது கண்களும் நமது நடவடிக்கைகளை இயற்கையாகவே பதிவு செய்து கொண்டிருக்கின்றன. அவை மட்டுமல்லநமது காதுகளும் தோல்களும் அதுபோலவே பதிவு செய்கின்றன என்றும் அவை மறுமையில் மனிதனுக்கெதிராக சாட்சி கூறும் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது:

= தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையாமேலும் நாவையும்இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)? (திருக்குர்ஆன் 90:7-9 )

=மேலும்இறைவனின்  பகைவர்கள் (நரகத்)தீயின்  பால்  ஒன்று  திரட்டப்படும்  நாளில்அவர்கள் ( தனித் தனியாகப்) பிரிக்கப்படுவார்கள்.   இறுதியில்அவர்கள் (அத்தீயை) அடையும்  போதுஅவர்களுக்கு எதிராக   அவர்களுடைய காதுகளும் அவர்களுடைய  கண்களும்அவர்களுடைய  தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை  பற்றி சாட்சி  கூறும். (திருக்குர்ஆன் 41:19,20)

ஏன் பாவம்?

4. இவ்வுலகின் சொந்தக்காரனான இறைவன் சமூக நலன் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பு கருதி இங்கு இப்படித்தான் வாழவேண்டும் என்று தனது  வரையறைகளை வேதங்கள் மூலமாகவும் தூதர்கள் மூலமாகவும் அவ்வப்போது அறிவித்துள்ளான். அந்த வரிசையில் இறுதியாக வந்த நபிகள் நாயகம் அவர்களின் மொழிகளும் அவர் மூலமாக அனுப்பப்பட்ட திருக்குர்ஆனும் அந்நிய ஆண்- பெண் உறவின் வரையறைகளை அறிவிக்கின்றன. அதன்படி 

= தாம்பத்தியம் அல்லது உடலுறவு  என்பதை  திருமணமான ஆணுக்கும் பெண்ணுக்கும் அதாவது கணவனுக்கும் மனைவிக்கும் இடையே மட்டுமே அனுமதிக்கப் பட்டுள்ளது.

.= ஒரு அந்நிய ஆணும் அந்நிய பெண்ணும் தனிமையில் சந்திப்பதோ பேசுவதோ அல்லது உறவாடுவதோ தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

=  ஒரு அந்நிய ஆணும் அன்னியப் பெண்ணும் உடலுறவு கொள்வது பெரும் பாவமாகும். கற்பழிப்பு அல்லது விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான கசையடிகள் மற்றும் சாகும் வரை கல்லால் எறிந்து கொல்லுதல் போன்ற தண்டனைகளை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமையாகும்.

அந்தப் பெண் யார்?

5. அடுத்ததாக நீங்கள் அனுபவிக்க உள்ள பெண்ணைப் பற்றி சிந்தித்துப்பாருங்கள்:

= அவள் யாருக்கேனும் மகளாக அல்லது சகோதரியாக அல்லது மனைவியாக அல்லது தாயாக இருக்கக்கூடும். உங்கள் மகளிடம் அல்லது சகோதரியிடம் அல்லது மனைவியிடம் அல்லது தாயிடம் நீங்கள் செய்ய நினைத்த காரியத்தை வேறு யாராவது அந்நியன் செய்வதை விரும்புவீர்களா?

 மீறினால் என்ன நடக்கும்?

இனி மேற்கூறப்பட்ட வரம்புகளையெல்லாம் மீறி விட்டு அதன் பாதிப்புகளைத் துடைத்து எறிந்துவிட்டு ஒன்றுமே நடவாத மாதிரி நீங்கள் நடந்து கொள்ளலாம். காவல்துறை அல்லது நீதிமன்றத்தை சரிக்கட்டி தண்டனையேதும் பெறாதவாறு தப்பிக்கவும் செய்யலாம்.  ஆனால் அவை அனைத்துமே இறைவனால் ஆங்காங்கே பதிவு செய்யப்படுகின்றன. உங்கள் மூளையிலும் அதன் பதிவைக் காணலாம்! இந்தப் பதிவுகள் அனைத்தும் இறுதித் தீர்ப்புநாள் அன்று உங்களுக்கு எதிரான சாட்சிகளாக நிற்கும்.

= அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்;அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும். (திருக்குர்ஆன் 36:65)

= எனவேஎவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும்எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும்அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். (திருக்குர்ஆன் 99:7,8)

விசாரணைக்குப் பிறகு பாவிகளுக்கு நரகமும் புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் விதிக்கப்படும். அதுதான் மனிதனின் நிரந்தரமான அழியாத இருப்பிடம் ஆகும்.

அந்த நரகம் எப்படிப்பட்டது என்பதை விளங்க திருக்குஆனைப் படியுங்கள். பல்வேறு இடங்களில் அதுபற்றி திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான் உதாரணத்திற்கு கீழ்கண்ட வசனகளைப் படியுங்கள்.

= நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது, வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோகுடிப்பையோ சுவைக்கமாட்டார்கள். கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும். (திருக்குர்ஆன் 78:21-30)

.....அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்¢ (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும். மிகக் கேடான பானமாகும் அது! இன்னும்இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும். ‘ (திருக்குர்ஆன் 18:29)  

எந்த உடலைக்கொண்டு அனைத்து அட்டூழியங்களையும் நிகழ்த்தினீர்களோ அதன் கதி நாளை இதுதான்! இது நூறு சதவீத உண்மை! இது வேண்டுமா? சிந்தியுங்கள்! இன்றே திருந்தி உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்பு கோருங்கள்! உங்கள் வாழ்க்கையை சீர்திருத்திக்கொள்ளுங்கள்!

= நபியே!) கூறுவீராக: தங்கள் ஆன்மாக்களுக்குக் கொடுமை இழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணை பற்றி நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். திண்ணமாக, அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப்பவனும், கருணையாளனும் ஆவான். (திருக்குர்ஆன் 39:53)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)

அவ்வாறு சீர்திருந்தி இறைவனுக்குப் பொருத்தமான வாழ்வை வாழ்ந்து செல்வோருக்கு மறுமையில் சொர்க்கச் சோலைகளும் காத்திருக்கின்றன.

================== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?

http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html