இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

தற்கொலை இறைவனின் முடிவுப் படியா?

இறைவனின் நாட்டமின்றி எதுவும் நடக்காது என்று சொல்லும்போது ஒரு சிலர் தற்கொலையும் இறைவனின் முடிவுபடிதான் நடக்கிறதா? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

இங்கு நாம் விதி பற்றிய ஓரு சிறு விளக்கத்தைத் தெரிந்து கொண்டால் நலம்.

உதாரணமாக ஒரு விதையையோ கடுகையோ எள்ளையோ எடுத்து நோட்டமிடுங்கள். அது பூமியில் விதைக்கப்பட்ட உடன் அது மண்ணோடும் நீரோடும் காற்றோடும் சேரும்போது அதற்கு மீண்டும் உயிரூட்டப்பட்டு அதில் இருந்து முளை, இலை, காம்புகள் தண்டுகள் என உருவாகி ஒரு முழு தாவரமாக உருவாகி அதிலிருந்து மீண்டும் தானியங்களோ பழங்களோ உருவாகும் அற்புதத்தை நீங்கள் காண்கிறீர்கள். இது நிகழவேண்டுமானால் என்னென்ன எல்லாம் அங்கு நடக்கவேண்டும் என்பதை இன்றைய அறிவியல் அறிவின் அடிப்படையில் சிந்தித்துப்பாருங்கள்.

இந்த நிகழ்வோடு தொடர்புடைய அனைத்து மூலக் கூறுகளுக்கும் அவற்றின் உட்கூறுகளுக்கும் உரிய இயல்புகளும் நடத்தையும் அவை இயங்குவதற்கான கட்டளைகளும் (உதாரணமாக மென்பொருள் போன்று) எழுதப்பட்டு இருக்க வேண்டும். அந்த தகவல்களின் அடிப்படையில்தான் அதிலிருந்து முளைக்கப் போகும் தாவரத்தின் இலை, தண்டு, காம்பு , காய், பழம் போன்றவற்றின் இயல்புகள், நிறங்கள், வடிவங்கள், மணம், சுவை போன்ற பலவும் அமையும்.

இது ஒரு மிகச்சிறு உதாரணம் மட்டுமே. இவை மட்டுமல்ல,  இன்னும் நம்மால் அறிய இயலாத ஏராளமான தகவல்களையும் கட்டளைகளையும்   - முன்கூட்டியே எழுதியதும் இயக்குவதும் கட்டுப்படுத்துவதும் யார்? சந்தேகமின்றி இவ்வுலகைப் படைத்து பரிபாலித்துவரும் இறைவனே என்பதை அறிவோம். நீங்கள் பௌதிக விதிகள், இயற்கை விதிகள், வேதியல் விதிகள் என்று அவற்றைப் பெயரிட்டு அழைத்தாலும் அவை அனைத்தும் எழுதியவன் இறைவனே. அவனையே திருக்குர்ஆன் அரபு மொழியில் அல்லாஹ் என்றழைக்கிறது.

(நபியே!) உயர்வான உம் இறைவனுடைய திருப் பெயரைத் துதிப்பீராக! அவன் எத்தகையவன் எனில், அவன்தான் படைத்தான்; பொருத்தமாகவும் பக்குவமாகவும் அமைத்தான்; மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கும் இயங்குவதற்கும்) வழிகாட்டினான். (திருக்குர்ஆன் 87:1-3)

பிரபஞ்ச உதாரணம்:
ஒரு விதையின் கதையே இது என்றால் இந்த மாபெரும் பிரபஞ்சத்தின் உருவாக்கம் பற்றி யோசித்துப்பாருங்கள். அதுவும் இல்லாமையில் இருந்து இதன் கரு உருவாகி இந்த மாபெரும் பிரபஞ்சம் உருவாக வேண்டுமென்றால் அதற்குள் எப்படிப்பட்ட தகவல்கள் , கட்டளைகள், மென்பொருள் போன்றவை எழுதப்பட்டு இருக்க வேண்டும்? நம் அற்பமான அனைத்துக் கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டவனாக வல்ல இறைவன் விளங்குகிறான். இதையே இஸ்லாமியர்கள் சுப்ஹானல்லாஹ் (அனைத்து மனித கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டு தூயவனாக அல்லாஹ் விளங்குகிறான்.)என்ற வார்த்தையால் வெளிப்படுத்துகின்றனர். 
இப்போது ஓரளவுக்கு நாம் விதி என்பதை ஓரளவுக்குப் புரிந்துகொள்ள இயலும். 
இந்தப் பிரபஞ்சம் உருவாகி அதன் அழிவை அடையும் வரையும் அதற்கு அப்பாலும் இங்கு நடக்கவுள்ள அனைத்தும் படைத்தவனுக்கு அத்துப்படி. 

படைப்புகளின் விதியை அல்லாஹ் வானங்களையும்பூமியையும் படைப்பதற்கு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவிட்டான் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
 அறிவிப்பு : அம்ரு இப்னு ஆஸ்(ரலி)முஸ்லிம்திர்மதி.

இப்போது இவ்வுலகின் நிகழ்வுகளைப் பற்றி சிந்தித்துப்பாருங்கள். இந்த தற்காலிக வாழ்க்கையை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான பரீட்சைக் கூடமாகவும் படைத்துள்ள இறைவன் அதற்கேற்றவாறு மனிதனுக்கு செயல்பாடுகளில் விருப்ப உரிமையை வழங்கியுள்ளான். 
அந்த வகையில் ஒரு மனிதன் எதைத் தேர்ந்தெடுப்பான் அவனது  செயல்பாடுகள் என்ன விளைவை ஏறடுத்தும் என்பதெல்லாம் இறைவனின் அறிவில் உள்ளவையே. விதியை இவ்வாறு புரிந்து கொள்ளும்போது நமக்கு குழப்பம் ஏற்படுவதில்லை. 
விதி பற்றி இறைவன் நமக்கு இவ்வாறு கற்றுத்தருகிறான்:
பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.
உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன் 57:22, 23)
விதி பற்றிய அறிவு நமது சிற்றறிவின்  எல்லைக்கு அப்பாற்பட்டது. அதில் எந்த அளவுக்குத் தேவையோ அதை மட்டுமே வல்ல இறைவன் தனது வேதம் மூலமாகவும் தூதர் மூலமாகவும் அறிவித்துள்ளான். 

இந்தப் பின்னணியில் இருந்து பார்க்கும் போது இவ்வுலகின் நிகழ்வுகள் எதுவானாலும் -தற்கொலையோ, கொலையோ, பிறப்போ இறப்போ  எதுவானாலும் -அவை விதிப் பதிவேடான 'லவ்ஹுல் மஹ்ஃபூள்' இல் பதிவான ஒன்றே என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். 

--------------- 
தொடர்புடைய ஆக்கங்கள் சில:

இறைவன் ஏன் பரீட்சிக்க வேண்டும்?

மனிதனோடு ஷைத்தான் ஏனிங்கு வந்தான்?
படைத்தவனுக்கே பரிந்துரையா?

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

திருக்குர்ஆனின் பாதுகாப்பு - ஆதாரங்கள் 2

Image may contain: ‎text that says "‎456 قهي مسعر ஹிஜ்ரி முதலாம் இரண்டாம் நூற்றாண்டு. அல் குர்ஆன் எழுத்துபிரதிகள்‎"‎


மேலே இருக்கும் கட்டுரையின் தொடர்ச்சி....
📜📜எழுத்து வடிவிலான பாதுகாப்பு:
📌📌இந்த பகுதிதான் கிறித்தவ மிசனரிகளுக்கு மிகவும் பிடித்த விமர்சன பகுதி. ஏனென்றால் அவர்களது வேதத்தின் மூலங்கள் வெறும் பிரதிகளை நம்பி இருப்பதால் அவர்கள் இந்த கோணத்திலான விமர்சனத்தையே பெரிதும் முன்வைப்பார்கள். ஆனால் இவர்கள் இவர்களது ஏடுகளின் வரலாறு குறித்து அறியாததுதான் இத்தகைய அறிவீனமான விமர்சனத்திற்கான காரணம் சரி இவர்களது ஒரு பதிவை இங்கு காண்போம்......
🎯🎯மேற்குறிபிட்ட பதிவில் 6 கையெழுத்து பிரதிகள் குறித்து பதிவிட்டுள்ளார். பதிவாளர் பதிவிட்டுள்ள 6 ல் மூன்று நபி(சல்) அவர்களுக்கு 100- 150 ஆண்டுகளுக்கு பிற்பட்டவை என்ற ரேடியோ கார்பன் டேட்டிங்க் குறித்து குறிபிட்டுள்ளார்.
🙄🙄அதனால் இந்த சுருள்கள் அனைத்தும் குர் ஆன் இறங்கிய அல்லது அதை ஓதிவந்த சகாபாக்களின் காலத்தில் இருந்து மாறுபட்டது என்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்க நினைக்கிறார் பதிவர்.
📚ஆனால் இந்த பம்மாத்து வேலை எல்லாம் கார்பன் டெட்டிங்க் என்றால் என்னவென்றே தெரியாத பாமரரிடம் செல்லும். அறிந்தவர்கள் இங்கு வழங்கப்பட்ட ரேடியோ கார்பன் குறிப்பே முழுமையானது அல்ல என்பதை அறிந்து கொள்வார்கள்.
✏️உதாரணமாக பிரமிங்காம் மூல பிரதி குறித்து கூறும் போது 568- 645 என்று கூறுகிறார். அது அந்த ஆட்டின் தோலின் வயதை காட்டும். அதாவது தோல் ஆனது எழுதுவதற்கு முன்பு பதப்படுதப்படும் என்ற முன் யூகத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட கால நிர்ணயம்தான். ஆனால் இந்த கால அளவிலும் ஒரு உத்தேச கணக்கு உண்டு.
📌📌அதன் வயது குறித்து இவ்வாறு கூறப்படுகிறது
# 95.4% confidence to the calendar years CE 568–645 when calibrated.
🧐🧐ஆக 1950ல் இந்த சுருள் ஆய்வுகுட்படுத்தப்படுகிறது அதன் உத்தேசமாக 1343 ஆண்டுகள் பழமையானது அதுவும் 95.4% அதை உறுதியாக கூறலாம் என்றால் அதன் ஆண்டுகள் +/- 61 இருக்கும் என்று பொருள் கொண்டால் இதில் எந்த சிக்கலும் வராது.
👉👉இதனால்தான் குர் ஆன் சுருள்கள் குறித்து ஆய்வு செய்த அறிஞரான புஇன் 100-200 வருடங்கள் மார்ஜினல் குறை ஏற்படும் என்று கூறுகிறார்.
இந்த சுருள் நபி(ஸல்) அவர்களது தோழர்களின் ஆட்சிக்காலத்தை சேர்ந்தது என்பதை புரிந்து கொள்ள இதுவே போதுமானது. இது குறித்த எந்த அறிவும் பதிவாளரிடம் இல்லை என்பது பட்டவர்த்தனமாய் தெரிகிறது.
♻️♻️️அடுத்ததாக இந்த சுருள்களில் மேல் எழுத்து கீழ் எழுத்து உள்ளது என்று உளறியுள்ளார். இது இன்று போல் எழுது உபகரணமான தோல் சுருள்கள் மலிந்த காலம் அல்ல. ஆக அவற்றை மறுபயன்பாடு செய்வது என்பதும், முன்பே பதியப்பட்ட ஆவணங்களில் அரிப்பு, சேதம் ஏற்படும் போது இதை செய்வார்கள் என்பது தோல் எழுத்துபிரதி குறித்த சிற்றறிவு இருப்பவரும் அறிந்திருப்பார் ஏனோ இதையும் ஒரு பெரும் குற்றச்சாட்டாக முன்வைக்கிறார் பதிவாளர்.
👉மேலும் இன்றிருக்கும் அறிவியல் முறைப்படி மைய்யின் வயதை எழுத்தை சிதைக்காமல் அறியும் முறைகள் ஏதும் நம்பகமாக இல்லாததால் அதை அறிய முடியாது.
👉👉இப்படிபட்ட ஒரு பதிவிற்கு யாரும் பதில் சொல்லவில்லை என்ற புலம்பல் வேறு....
❓️❓️நாம் இப்போது பதிவாளரின் மைய கேள்விக்கு வருவோம். அதாவது இன்றும் எழுத்து பூர்வமாக குர் ஆன் பாதுகாக்கப்பட வில்லை என்பது பதிவரின் வாதம்.
🤔🤔இப்போது பதிவிட்ட சில சுருள்களை தாண்டி 1முதல் 2 நூற்றாண்டு ஹிஜ்ரியை சார்ந்த ஏடுகளின் பட்டியலையும் அவை எந்தளவுக்கு இன்றிருக்கும் குர் ஆனின் சூராக்களை கொண்டிருக்கிறது என்பதையும் சுருக்கமாக காண்போம்.
📜தூனிஷியாவின் சுருள்கள்:
👉1) Ms. R 38,Ms. R 119
👉2) Ms. P 511
📜ஏமனின் சுருள்கள்:
👉1.DAM 01-28.1
👉2.DAM 01-18.3,
👉3.DAM 01-30.1
👉4.DAM 01-32.1,
👉5.DAM 01-29.2
👉6.DAM 01-32.2
📜துருக்கியின் டாப்காப்பி மூயூசியத்தில் இருக்கும் சுருள்கள்:
👉1. Topkapı Sarayı Medina 1a / TSM M1,
👉2.TIEM Env. 51, 53, Ms. 678,Sam Fogg IAGIC,Ghali Adi Fragment (ஒரே சுருள்),
👉3.TIEM ŞE 80,
👉4.TIEM ŞE 85,
👉5.TIEM ŞE 89,
👉6.TIEM ŞE 358,
👉7.TIEM ŞE 364,
👉8.TIEM ŞE 709
👉9.TIEM ŞE 12995.
👉இங்கு மேலும் பல உமையாக்கள் கால சுருள்களும் இருக்கின்றது.
📜ஆஸ்டிரியாவின் சுருள்கள்
👉1.A. Perg. 186,
👉2.A. Perg 202,
👉3.Mixt. 917
📜அமெரிக்காவின் சுருள்கள்
👉1.AL-17, `Ayn 444(ஒரே சுருள்),
👉2.1-85-154.101
👉3.P. Garrett Coll. 1139
📜எகிப்தின் சுருள்கள்
👉1.Arabic Palaeography Plates 39-40
👉2.Mss. Arab 21-25
👉3.Arabe 330d
👉4.KFQ42
👉5.KFQ62
📜பிரிட்டனின் சுருள்கள்
👉1.BL Add. 11737/1
👉மேலும் பல சுருள்கள் Nasser D. Khalili Collection of Islamic Artல் இருந்து
📜பிராண்ஸ் சுருள்கள்
👉1.Arabe 330a + Ms. 66(ஓரே சுருள்)
📜அயர்லாந்து சுருள்கள்
👉1.Is. 1404
👉2.Arabic Palaeography Plates 19-30
📜ரஸ்யாவின் நேசனல் நூலகம்
👉Codex Amrensis 1
🏬சோத்பேயில் ஏலம் விடப்பட்ட சுருள்கள்
👉1. 15 அக் 1984 அன்று ஏலம் விடப்பட்ட Lot 206
👉2.22மே 1986, அன்று ஏலம் விடப்பட்ட Lot 269
👉3. 30 ஏப்ரல் 1992, அன்று ஏலம் விடப்பட்ட Lots 318 & 319
👉4. 28 ஏப்ரல் 1993, அன்று ஏலம் விடப்பட்ட Lot 73
👉5.22அக் 1993, அன்று ஏலம் விடப்பட்ட Lot 11, 15, 28 & 29
👉6. 19அக்1994, அன்று ஏலம் விடப்பட்ட Lot 16
👉7. 24th April 1996, அன்று ஏலம் விடப்பட்ட Lot 1
👉8. 16அக் 1996, அன்று ஏலம் விடப்பட்ட Lot 1
👉9.5அக்1997, அன்று ஏலம் விடப்பட்ட Lot 12
👉10.13ஏப்ரல் 2000, அன்று ஏலம் விடப்பட்ட Lot 1,
👉11. 3மே 2001, அன்று ஏலம் விடப்பட்ட Lot 8
👉12. 5அக் 2011, அன்று ஏலம் விடப்பட்ட Lot 47
👉13. 3அக் 2012, அன்று ஏலம் விடப்பட்ட Lot 11
✍️மேலே குறிபிடபட்ட சுருள்களின் பெயரை கூகுளில் தேடிப்பார்க்க் ஏதுவாக இருக்க அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
📜மேற்குறிபிட்ட இந்த லிஸ்ட் அல்லாமல் பதிவாளர் குறிபிட்டதில் மூன்று சுருள்கள் பிரிமிங்காம், சமர்கண்ட் ,பெர்லின் மற்றும் சனாவில் இருக்கும் சுருள்களில் காணப்படும் ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டு சுருள்கள்
📜📜ஆக இப்படி கிடைத்திருக்கும் முதல்-இரண்டாம் ஹிஜ்ரிக்குள் ஆன சுருள்கள் பல ஏலத்தில் விடப்பட்டும் விற்கப்பட்டும் உள்ளது. இவ்வாறு இந்த தோல் சுருள்கள் பல மூயூசியத்திற்கு விற்கப்பட்டுள்ளது.
🧐🧐இந்த சுருள்கள் எந்த அளவிற்கு இன்றிருக்கும் குர் ஆன் உடன் ஒத்திருக்கிறது என்பது குறித்து இந்த லிங்கில் விளக்கியுள்ளோம்.
☑️☑️அதாவது இன்று கிடைத்திருக்கும் தோல் சுருள்களில் இருப்பவையும் , சில தட்டுகளில் பதிவு செய்யப்பட்டவை மட்டுமே மேலே குறிபிட்ட பட்டியலில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது இது வல்லாத கல்வெட்டுக்கள், நாணயங்கள் மற்றும் ஜெருசலேம் பள்ளி மினாராவில் இருக்கும் குர் ஆன் வசனங்கள் என்று அனைத்து எழுத்து ஏடுகளையும் ஒன்றினைத்தால் பெரும்பகுதி அதாவது 100% குர்ஆனும் வந்துவிடும்.ஆக மேற்குறிபிட்ட தோல் சுருள்கள் குறித்த கணக்கினை நோசிடா என்று ஆய்வாளரின் கணக்கின் அடிப்படையில் அமைந்ததாகும்.
✔️✔️ஆக இப்படி இருக்கையில் இரண்டாம் நூற்றாண்டு சுருள்களை கணக்கில் எடுத்தால் குர் ஆனின் முழு பகுதியும் சந்தேகமற அமைந்துவிடும். இதுதான் குர் ஆனின் எழுத்து வடிவிலான பாதுகாப்பின் நிலை.
🧐🧐இந்த சுருள்களில் இருக்கும் எழுத்துப்பிழைகளையும் முஸ்லிம்களின் மனதில் காணப்படும் ஓதல் முறைகளோடு ஒப்பிட்டு பிரதி எடுத்தவரின் பிழைகளை இன்றும் அறிந்து கொள்ளும் நிலையில் குர் ஆன் இரு அடுக்கு, இரு பிரதி பாதுகாப்பை கொண்டு அல்லாஹ்வின் கிருபையால் முழுவதுமாக பாதுக்காக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.
✡️✡️இதே மறு புறத்தில் இருக்கும் பைபிளின் பழைய ஏற்பாட்டின் நிலை என்ன....இன்றைக்கு கிடைத்திருக்கும் தோல் சுருள்களில் எத்துனை மோசேயின் காலத்தை சேர்ந்தது, அது போல மோசேவின் மறைவின் 100 ,200,....500 ஆண்டுக்கு பின்னானது என்றும், அது எத்துனை சதவீதம் வேதாகமத்தின் முதல் 5 புத்தகத்தைஉறுதி படுத்துகிறது என்பதை எந்த கிறித்தவருக்காவது துப்பு, திராணி இருந்தால் 1 துண்டு மூல கையெழுத்துப்பிரதியை கொண்டாவது நிரூவ வருமாறு அழைக்கிறன்......💪💪💪
குர் ஆன் மூலப்பிரதிகளின் தொகுப்புக்களுக்கான External links
References:
1.Radiocarbon (14C) Dating of Qurʾān Manuscripts by Michael Josef Marx and Tobias J. Jocham
2.Scientific Dating Methods edited by H. Y. Goksu, M. Oberhofer and D. Regulla

திருக்குர்ஆனின் பாதுகாப்பு - ஆதாரங்கள்


📢📢சென்ற சில காலங்களாக கிறித்தவ மிசனரிகள் சில பொய்யை பரப்பி திரிகிறார்கள். குர்ஆன் பாதுகாக்கபட்டது அல்ல என்ற பொய்தான் அது. குர் ஆனின் ஈரடுக்கு பாதுகாப்பு குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
📣📣ஒலி வடிவில் பாதுக்காக்கப்பட்ட குர்ஆன்:
🕋 இது குறித்து மிக விளக்கமாக பார்க்கவில்லை என்றாலும் இது குறித்த குர்ஆன் மற்றும் நபி மொழியின் அடிப்படையில் பார்ப்போம்.
💾அல்லாஹ் அல் குர்ஆனில் எப்படி தனது வேதத்தை பாதுகாக்கவுள்ளதாக கூறினானோ அதே போன்ற இன்றுவரை அது பாதுக்காக்கப்படுகிறது:
அல்லாஹ் பின்வருமாறு குறிபிடுகிறான்:
📖மாறாக,இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன.அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 29:49)
💾அதேபோல் நபி(ஸல்) அவர்களும் பின்வருமாரு குறிப்பிடுகிறார்கள்
இயாள் பின் ஹிமார் அல்முஜாஷிஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:
📣📣அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் உரையாற்றியபோது பின்வருமாறு கூறினார்கள்:
.................மேலும் (என்னிடம்) இறைவன், நான் உம்மைச் சோதிப்பதற்கும் உம்மைக் கொண்டு (பிறரைச்) சோதிப்பதற்குமே உம்மை நான் அனுப்பினேன். நீரில் அழிந்துபோய்விடாத வேதத்தையும் உமக்கு நான் அருளினேன். அதை உறங்கும்போதும் விழித்திருக்கும் நிலையிலும் நீர் ஓதுகின்றீர்" என்று கூறினான்.(நூல்: முஸ்லிம் 5498)
💾ஆக மேற்குறிபிட்டபடி குர் ஆன் ஆனது இன்றும் முஸ்லிம் மக்களின் உள்ளங்களில் பாதுகாக்கப்படுகிறது. சாதரணமாக அன்றாடம் தொழுகையை நிறைவேற்றுபவர் 100 ல் இருந்து 150 வசனங்களை மனனமிட்டுவிடுவார் தொழுகையில் ஓதப்படுவதை கேட்டே.
✍️மேலும் ஒவ்வொரு வருடமும் குர்ஆனை மனனமிட்ட ஹாபிழ்கள் லட்சகணக்கில் வெளிவருகிறார்கள். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த பட்சம் ஒரு ஹிப்ளு மதரஸா உண்டு. ஆக குர் ஆன் உள்ளங்களில் பாதுகாக்கப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது. இன்று இருக்கும் பெரும்பான்மை மக்களின் ஓதல்முறையை சரிகண்டு இஸ்லாமிய சமூகம் சென்று கொண்டே இருக்கும் என்பது தெளிவான விஷயமாக இருக்கிறது. அதனால்தான் இது குறித்து வில்லியம் கிரகாம் என்ற ஹார்வர்ட் பல்கலை ஆசிரியர் குறிபிடும் போது பின்வருமாறு கூறுகிறார்,
✍️ஒரு ஆங்கில அரபியே ஆய்வாளர் முன்பே குறிபிட்டது "குர் ஆனின் முதலில் இருந்து கடைசி வரை கேட்கப்படவேண்டிய புத்தகமே அன்றி வாசிக்கப்பட வேண்டிய புத்தகம் அல்ல. இஸ்லாமிய வரலாற்றின் 13 நூற்றாண்டுகளாய் எண்ணிலடங்கா மில்லியன் இஸ்லாமியர்களுக்கு அல் கிதாப் கற்கப்பட்டு, ஓதப்பட்டு பல தடவை ஓதல்களால் மணனமிடப்பட்டு வாய்வழியாக கடத்தப்பட்டிருக்கிறது
(P.No: 79-80, Beyond the Written Word: Oral Aspects of the Scriptures in History of Religion by William A.Graham )
மேற்குறிபிட்ட அறிஞரின் கூற்றே அறிவுள்ள மனிதனுக்கு போதுமானது எப்படி அல்லாஹ்வின் தீர்க்கதரிசனம் மெய்படுத்தப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள. மேலும் hifz என்ற சாதரண கூகுள் தேடல் ஆயிர கணக்கான ஆவணங்களை கொண்டுவந்து கொட்டிவிடும்....
👍👍👍 இன்று கிறித்தவ மிசனரிகள் ஒரு நூறு வசனத்தை தங்களது வேதாகமத்தின் மூல மொழியில் வரிசை மாறாமல் மனனமிட்டவரை காட்ட இயலுமா?????👍👍👍
இந்த கட்டுரையின் தொடர்ச்சி- குர்ஆனின் மூல எழுத்துப்பிரதிகள்

Image may contain: 3 people, text that says "120,000 Muslims who have memorized the entire Quran Hafiz graduated at one time in one of the biggest Hifdh graduation ceremonies in Indonesia It was held in a football stadium. This Qur'an is truly a living Miracle and this is just one example of that. f/TheDeenShowTV /TheDeenShow/TheeenShowT TheDeenShowTV TheDeenShow www.TheDeenShow.com WWW TheDeenShow com"