இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 27 ஏப்ரல், 2019

பாலியல் அத்துமீறல்களுக்கு வயது வரம்பும் காரணமே!


Related image
பசி எடுக்கும் போது சப்பிட வேண்டும்; தூக்கம் வரும் போது கட்டிலை நாட வேண்டும்; மலஜலம் கழிக்கத் தேவை ஏற்படும் போது, தாமதிக்காமல் கழிவறையை நாட வேண்டும். தாமதித்தால், அதுவே பல்வேறு பிரச்சினைகளைத் தோற்றுவித்து விடும் என்பது அனைவரும் அறிந்ததே!
நன்றாகப் பசியோடு உள்ள ஒருவனிடம் ‘நீ இப்போது சாப்பிடக்கூடாது இன்னும் ஐந்து நாள் கழித்துதான் சாப்பிட வேண்டும்’ என்று சட்டம் பேசுவது எவ்வளவு விபரீதமோ அதைப் போன்றதே திருமணத்திற்கு வயது வரம்பை நிர்ணயிப்பதும்! ஆம் பாலியல் அத்துமீறல்கள் நாட்டில் நடப்பதற்கான முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று!
வயதுக்கு வருதலே அறிகுறி
இஸ்லாம் என்பது இயற்கையான மார்க்கம். அதன் சட்டதிட்டங்கள் எல்லாமே மனித இயற்கைக்கு ஏற்ற விதத்திலேயே வடிவமைக்கப் பட்டிருக்கின்றன.
ஒருவர் திருமணம் செய்யும் ஆயத்த நிலையை  – அதாவது வயதுக்கு வருதல், இஸ்லாம் கற்பிக்கும் பெண்ணுக்கான மஹர் கொடுக்கும் சக்தி, இல்லறத்தில் ஈடுபடும் உடல்தகுதி போன்றவற்றை- அடைந்துவிட்டாலே அவர் திருமணம் செய்யத் தகுதி பெற்று விடுகிறார். மாறாக அரசாங்கங்கள் 18, 21, 30 என்று நிர்ணயிக்கும் திருமண வயது என்பது செயற்கையானது. பற்பல விபரீதங்களுக்கு வித்திடுவது.
ஒரு மனிதன் வயதுக்கு வருகிறான் என்பதன் அர்த்தமே அவனுக்கு அல்லது அவளுக்கு பாலியல் தேவைகள் ஏற்பட ஆரம்பித்து விட்டன என்பதுதான். மேலும், ஒரு பெண் வயதுக்கு வருகிறாள் என்பதன் அர்த்தமே, அவளது கருவறை குழந்தையைச் சுமக்கும் அளவுக்குப் பரிபூரண வளர்ச்சியை அடைந்து விட்டது என்பது தான்.
பசி ஏற்பட்டால், உணவுக்கான ஏற்பாடுகள் ஆயத்தம் செய்யப்படுவது எப்படி அறிவார்ந்த செயலோ, அதே போலத்தான், வயதுக்கு வந்து விட்டால் அனாவசியமாக காலதாமதம் செய்யாமல், அவருக்குரிய ஜோடியை ஏற்பாடு செய்ய ஆரம்பிப்பதுதான் அறிவார்ந்த செயல். இல்லாவிட்டால், அது சமூக சீர்கேடுகளுக்கே நாளடைவில் வழிவகுக்கும்.
இந்த உண்மைகளையெல்லாம் சரிவர உணர்ந்து தான் ஏற்கனவே இஸ்லாம் திருமண வயது குறித்து எல்லை வரையறுக்காமல், அவரவர் உடற்கூற்றுக்கு ஏற்ப தீர்மானிக்கப் பட வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது.
இளவயதுத் திருமணங்கள் ஆபத்தானவையா?
அப்படி ஒரு மாயை உண்டாக்கப்பட்டு உள்ளது என்பதே உண்மை. திருமணத்திற்கு வயதெல்லை போடும் அரசாங்கங்கள் காதலுக்கும், சல்லாபத்திற்கும் வயதெல்லையைப் போடுவதிவில்லை என்பதை அறிவீர்கள். 18 வயதுதான் திருமண வயது என்றால் 18க்கு முன்னர் காதலிப்பதையும் சட்டப்படி குற்றமாக்க வேண்டும்தானே? ஏன் செய்வதில்லை?
வயதுக்கு வந்து திருமணம் மூலம் இணைந்த ஒரு ஜோடியையும் வயதுக்கு வந்து திருமணமாகாமல் இணையும் ஒரு ஜோடியையும் நீங்கள் சற்று ஒப்பிட்டுப் பாருங்கள். யாரால் சமூகத்திற்கு கெடுதி? பெற்று வளர்த்த தாய் தந்தையரை ஏமாற்றுதல், அவர்களைக் கைவிட்டு ஓடிப்போகுதல், அந்நியனின் கருவை அநியாயமாகச் சுமந்து பின்னர் கைவிடப்படுதல், கருக்கொலை, சிசுக்கொலை, தற்கொலை, தந்தையற்ற பிள்ளைகளை வேண்டா வெறுப்போடு வளர்த்தல், ஒழுக்கமற்ற பிள்ளைகள் பெருக்கம், இவர்கள் மூலம் சமூகத்தில் உண்டாகும் குற்றங்கள் என பற்பல தொடர் தீமைகளின் காரணமாக இரண்டாம் வகையினர்  விளங்குகிறார்கள்.
மாறாக இளவயதில் திருமணம் மூலம் இணைந்த தம்பதிகள் ஒழுக்கம் வாய்ந்த சமூகத்தை உருவாக்கும் அடித்தளம் அமைக்கிறார்கள். இளவயதிலேயே குடும்பப் பொறுப்புணர்வு, பெற்றோருக்குக் கீழ்படிதல், அவர்களோடு இணக்கம், முறையான குழந்தை வளர்ப்பு என பற்பல நன்மைகள் அங்கு உண்டாகின்றன. இல்லறத்தைப் பொறுத்தவரையில் முதற்காதல் என்பதே தன் வாழ்க்கைத் துணையோடுதான் என்ற அடிப்படையில் அந்த உறவு ஆழமாக தம்பதியர் உள்ளத்தில் பதியும். அதில் உருவாகும் சந்ததிகள் மீது ஈடுபாடும் பாசமும் ஆரோக்கியமான முறையில் இருக்கும். மாறாக இளவயதை காதலிலும் காமத்திலும் கழித்து இறுதியில் சூழ்நிலைக் கைதிகளாக வேண்டா வெறுப்போடு திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளிடையே காதலுக்கு அந்தத் திருமணமே முடிவுரை எழுதி விடுகிறது.
=============
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html

வெள்ளி, 26 ஏப்ரல், 2019

அகதிகளுக்கு இறைவன் கூறும் அறிவுரை


Image result for desert caravan
இந்த பூமியில் அதர்மம் பெருகி தலைவிரித்து ஆடும்போது அதர்மத்தை அடக்கி அங்கு தர்மத்தை நிலைநாட்ட இறைவன் அவ்வப்போது தன் தூதர்களையும் வேதங்களையும் அனுப்பி அங்குள்ள மக்களை சீர்திருத்தி அவர்கள் மூலமாகவே தர்மத்தை நிலைநாட்டி வந்துள்ளான். அவ்வாறு மக்கள் சீர்திருத்தம் அடைவது அதர்மத்தை வைத்து வயிறு வளர்ப்பவர்களுக்கும் அதர்மமான முறையில் மக்கள் மீது ஆதிக்கம் செய்து அடக்கியாள்வோருக்கும் அறவே பிடிக்காது. எனவே அவர்கள் அந்த சீர்திருத்த இயக்கம் வளராமல் தடுக்க பலவகையான வழிமுறைகளையும் கையாள்வார்கள். ஒரு புறம் அந்த மக்கள் இயக்கத்தைப் பற்றி அவதூறுகள் பரப்பி பொது மக்களிடம் தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்துவார்கள். மறுபுறம் அந்த இயக்கத்தில் இணைந்த மக்களை அடக்குமுறைகளுக்கு உட்படுத்தித் துன்புறுத்துவார்கள். சித்திரவதைகளும் கொலைகளும் இன்ன பிற கொடூரங்களையும் நிகழ்த்துவார்கள். எந்த அளவுக்கென்றால் அவர்களால் அங்கே வாழவே முடியாத நிலைக்குத் தள்ளி அவர்களை விழிபிதுங்க வைப்பார்கள். இப்படிப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டால் சத்தியவான்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? இறைவனே அதற்கு வழிகாட்டுகிறான்.
நபிகளாருக்கும் தோழர்களுக்கும் நெருக்கடி
இறைவனின் இறுதித் தூதராக வந்த நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் மக்கா நகரில் மக்களுக்கு மேற்கூறப்பட்ட சீர்திருத்த இயக்கத்தை அறிமுகப்படுத்தி தனது சத்தியப் பிரச்சாரத்தைத் துவங்கினார்கள். அந்த இயக்கமே இஸ்லாம் என்று அறியப்படுகிறது. இதன் பொருள் இறைவனுக்குக் கீழ்படிந்து ஒழுக்க வாழ்வு வாழுதல் என்பது. ஒன்றே மனித குலம், மனிதர்கள் அனைவரும் சரி சமமே மற்றும் சகோதரர்களே, படைத்தவன் மட்டுமே இறைவன், படைப்பினங்கள் ஒரு போதும் இறைவனாக மாட்டா, இறைவனை இடைத்தரகர் இன்றி நேரடியாக வணங்கலாம், நன்மையை ஏவுவதும் தீமைகளைத் தடுப்பதும் விசுவாசிகள் மீது கடமை என்பவை இஸ்லாத்தின் முக்கிய கொள்கைகளாக அறிமுகப்படுத்தப் பட்டன. அந்நாட்டில் வாழ்ந்து வந்த எளியோரையும் ஒடுக்கப்பட்டோரையும் இது எளிதில் கவர்ந்தது. அவர்கள் மனமுவந்து தங்களை இதில் இணைத்துக் கொண்டார்கள். ஆனால் ஆதிக்க சக்தியினரும் கடவுளின் பெயரால் பாமரர்களை சுரண்டி வாழ்ந்த இடைத்தரகர்களும் இதை முழுமூச்சாக எதிர்த்தார்கள். இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரங்களையும் இஸ்லாத்தை ஏற்றவர்கள்  அடக்குமுறைகளையும் முடுக்கிவிட்டார்கள். கடுமையான சித்திரவதைகளும் கொலைகளும் தொடர்ந்தன. இதனால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட அந்த மக்கள் தங்கள் தாயகமான மக்காவை விட்டு அண்டைப் பிரதேசங்களுக்கு அகதிகளாக குடியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. நபித்தோழர்கள் சிலர் யத்ரிப் என்று அறியப்பட்ட எத்தியோப்பியாவை அடைந்த பொது அங்குள்ள அரசரால் அடைக்கலம் கொடுக்கப்பட்டனர். நபிகள்  நாயகமும் இன்ன பிற தோழர்களும் மதீனாவில் தஞ்சம் புகுந்தனர்.
இறைவனின் அறிவுரைகள்     
இந்த வாழ்க்கையை ஒரு பரீட்சையாக அமைத்துள்ள இறைவன் தன்னை நம்பி வாழ முற்பட்ட நன்மக்களுக்கு அறிவுரையும் ஆறுதலும் கூறும் வண்ணம் அமைந்துள்ளன கீழ்காணும் திருக்குர்ஆன் வசனங்கள். 
= 29:56. நம்பிக்கை கொண்ட என் அடியார்களே! நிச்சயமாக என் பூமி விசாலமானது; ஆகையால் நீங்கள் என்னையே வணங்குங்கள்.
ஆம், நீங்கள் வாழும் இடங்களில் என்னை வணங்கி எனக்குக் கட்டுப்பட்டு ஒழுக்கமாக வாழ்வதற்கு – அதாவது இஸ்லாத்தைப் பின்பற்றி வாழ்வதற்கு - அங்குள்ள அடக்குமுறையாளர்கள் தடை விதிக்கிறார்களா? உங்களை சித்திரவதைகள் செய்து ஒடுக்க நினைக்கிறார்களா? நீங்கள் கவலையே படவேண்டாம். எனது பூமி விசாலமானது. எனவே நீங்கள் என்மீது முழுமையான நம்பிக்கை கொண்டு உங்கள் ஊர்களை அல்லது நாடுகளைத் துறந்து பூமியெங்கும் பரவிச் சென்று எங்கு அமைதியோடு வாழ முடியுமோ அங்கு சென்று வாழுங்கள். எங்கும் நானே இறைவன். உங்களைப் பாதுகாப்பது எனது பொறுப்பு.

= 29:57. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகிக்கக் கூடியதே யாகும்; பின்னர் நீங்கள் நம்மிடமே மீள்விக்கப்படுவீர்கள்.

அதாவது, உயிருக்கு பயந்து நீங்கள் கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்காதீர்கள். அடக்குமுறையாளர்களுக்கு அடிபணியாதீர்கள். நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் என்பது விதிக்கப்பட்ட நேரத்தில் உங்களை அடைந்தே தீரும். என் பக்கமே மறுமையில் நீங்கள் விசாரணைக்காக மீள வேண்டியுள்ளது என்பதை மறந்து விடாதீர்கள் என்று நினைவூட்டுகிறான் இறைவன். தொடர்ந்து, ‘நீங்கள் உங்கள் இரட்சகன் காட்டிய பாதையில் உங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு நீங்கள் மேற்கொண்ட தியாகங்கள் வீண்போவதில்லை. அவற்றுக்குப் பரிசாக நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்கம் வழங்கப்பட உள்ளது’ என்ற நற்செய்தியையும் இறைவன் கூறுவதைப் பாருங்கள்:

= 29:58, 59 எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, நற்காரியங்களை செய்கிறார்களோ அவர்களை, சதா கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில், நிச்சயமாக நாம் அமர்த்துவோம்; அவற்றில் அவர்கள் நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள்; (இவ்வாறாக நற்) செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது. (ஏனெனில்) அவர்கள் பொறுமையைக் கொண்டார்கள்; மேலும் தங்கள் இறைவன் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

உணவுக்குப் பொறுப்பேற்றிருப்பவன் இறைவன்
சொந்த நாட்டைத் துறந்து அறிமுகமே இல்லாத அந்நிய நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்து செல்லும் யாரையும் வெகுவாக ஆட்கொள்வது உணவு மற்றும் வாழ்வாதாரம் பற்றிய கவலை. அந்தக் கவலையை எவ்வளவு அழகாக ஆனால் உறுதியான முறையில் நீக்கி அகதிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கிறான் பாருங்கள்:
= 29:60. அன்றியும் (பூமியிலுள்ள) எத்தனையோ பிராணிகள் தங்கள் உணவைச் சுமந்து கொண்டு திரிவதில்லை; அவற்றுக்கும் உங்களுக்கும் இறைவன்தான் உணவளிக்கின்றான் - இன்னும் அவன் (யாவற்றையும் செவிமடுப்பவனாகவும் (நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.
எந்த இறைவன் மீது நம்பிக்கை கொண்டு இஸ்லாத்தை ஏற்றீர்களோ அதே இறைவன் உங்கள் வாழ்வாதாரத்துக்கும் பொறுப்பேற்றுள்ளான். சிறுசிறு சோதனைகள் தலைக் காட்டினாலும் உங்களுக்கு விதிக்கப்பட்ட உணவு உங்களை வந்தடையும் என்பதாக இறைவன் மேற்படி வசனத்தின் மூலம் தெரிவிக்கிறான்.
= நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் : இறைவன் மீது எப்படி நம்பிக்கை வைக்க வேண்டுமோ, அத்தகைய உண்மையான நம்பிக்கையை வைப்பீர்களாயின் அவன் உங்களுக்கு பறவைகளுக்கு உணவளிப்பது போன்று உணவளிப்பான். பறவைகள் கூட்டை விட்டு காலியான வயிறோடு சென்று, கூட்டுக்குத் திரும்பும் போது வயிறு நிரம்பியவாறு திரும்புகின்றது”. (நூல்: அஹ்மது, திர்மிதீ)
============
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_6.html

புதன், 24 ஏப்ரல், 2019

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2019 இதழ்

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் 
இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் முகவரியை 9886001357  எண்ணுக்கு SMS செய்யவும். நான்கு மாத சந்தா இலவசம் 
பொருளடக்கம்
இருளில் புதையும் பாலியல் கொடூரங்கள் -2
பாலியல் கொடுமைகளுக்கான தீர்வைத் தேடி.. -8
கற்பழிப்பைத் தூண்டும் காரணிகள் -9
தீர்வின்றித் தத்தளிக்கும் நாடு! -12
பாலியல் கொடுமைகளுக்கு இஸ்லாம் கூறும் தீர்வுகள் -13
மனித மனமே தீர்வுக்கு மையக்கரு -15
இஸ்லாம் உண்டாக்கும் தனிநபர் நல்லொழுக்கம் -17
இறையச்சம் கற்பழிப்பைத் தடுக்குமா? -21

வலிய வந்து தண்டனை பெற்ற குற்றவாளி! -23

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

மனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா?


Image result for disturbed youth
பாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு உண்டாக்குவது?
-    படைத்தவனே இறைவன்,
-    வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை,
-    இதில் நம் அனைவரது செயல்களும் இறைவனது கண்காணிப்பில் உள்ளன.
-    இந்த வாழ்க்கையை முடித்துக் கொண்டு இறைவனிடம் மீள உள்ளோம்,
-    அங்கு இறுதி விசாரணை நடக்க உள்ளது.
-    நமது புண்ணியங்களுக்கு பரிசாக சொர்க்கம் கிடைக்கும்.
-    பாவங்களுக்கு தண்டனையாக நரகமும் கிடைக்க உள்ளது.
இந்த உண்மைகளை பகுத்தறிவு பூர்வமாக மனிதனுக்குள் விதைத்து உண்டாக்கப்படும் பொறுப்புணர்வுதான் இறையச்சம் என்று அறியப்படுகிறது.
இந்த உண்மைகளை வெறுமனே போதிப்பதோடு நில்லாமல் அவற்றை சதா நினைவூட்டும் வண்ணமாக ஐவேளைத் தொழுகை, திருக்குர்ஆன் ஓதுதல், வெள்ளிக்கிழமைகளில் சொற்பொழிவுகள், ரமளானில் விரதம் போன்ற இறையச்சம் வளர்ப்பதற்கான பல வழிமுறைகளையும் இஸ்லாம் கற்பித்து நடைமுறைப்படுத்துகிறது. இஸ்லாம் என்பது இறைவன் நமக்கு வழங்கும் ஒரு முழுமையான வாழ்வியல் வழிமுறைகளின் தொகுப்பு. இவற்றை ஏற்று வாழும்போது தனிநபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் கட்டுப்பாடுகளும் ஒழுக்கமும் பேணப்படும். அதன் காரணமாக ஒழுக்கம் நிறைந்த சமூகமும் உருவாகும். அவ்வாறு சமூகம் அமையும்போது அங்கு மக்களை குற்றங்கள் செய்வதில் இருந்து தடுப்பதும் எளிதே!
அப்படிப்பட்ட ஒரு சமூகத்தை நபிகள் நாயகம்(ஸல்) தன் வாழ்நாளில் உருவாக்கிக் காட்டினார்கள். இறையச்சம் கொண்ட ஒரு வாலிபரை எவ்வாறு நபிகள் நாயகம் திருத்தினார்கள் என்பதைக் கீழ்கண்ட நிகழ்வின் மூலம் அறியலாம்:
நபித்தோழர் அபூ உமாமா {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நாங்கள் அண்ணலாரோடு அமர்ந்திருந்த சபைக்கு ஓர் வாலிபர் வருகை தந்தார். வந்தவர் நேராக அண்ணலாரின் முன் வந்து நின்று இறைவனின் தூதரே! எனக்கு நீங்கள் விபச்சாரம் செய்ய அனுமதி தர வேண்டும்என்றார்.
அங்கிருந்த நபித்தோழர்கள் வெகுண்டெழுந்து அவரைத் தாக்கிட முனைந்தனர். ஆனால் நபிகள் நாயகம் {ஸல்} அவர்கள் அவரை ஒன்றும் செய்து விட வேண்டாம்என்பது போன்று சைகை செய்தார்கள்.
பின்பு தங்களின் பக்கம் வருமாறு அவ்வாலிபரை அழைத்தார்கள். அருகே வந்து அமர்ந்த அந்த வாலிபரிடம் உன் தாய் விபச்சாரம் செய்தால் அதை நீ விரும்புவாயா?” எனக் கேட்டார்கள்.
 இல்லை, இறைவனின் தூதரே! ஒரு போதும் நான் விரும்ப மாட்டேன்.என்றார் அவ்வாலிபர்.
 மீண்டும் நபிகள் நாயகம் {ஸல்} அவர்கள் உன் சகோதரி விபச்சாரம் செய்வதை நீ அங்கீகரிப்பாயா?” என்று கேட்டார்கள்.
பதறித்துடித்தவராக, “ஒரு போதும் எனது மனம் விரும்பிடாதுஎன்றார் அவ்வாலிபர்.
அப்போது நபிகளார் அப்படித்தான், நீ மட்டுமல்ல! உலகில் வேறெவரும் இதற்கு விரும்ப மாட்டார்கள்”. என்றார்கள்.
மீண்டும் அண்ணலார் அவ்வாலிபரிடத்தில் உனது தாயின் சகோதரி விபச்சாரம் செய்வதை நீ விரும்புவாயா? உனது தந்தையின் சகோதரி விபச்சாரம் செய்வதை நீ விரும்புவாயா?” எனக் கேட்டார்கள்.
அண்ணலாரின் இந்த கேள்விகள் ஒவ்வொன்றும் அவரை வெகுவாகவே தாம் எத்தகைய பார தூரமான கேள்வியை இறைத்தூதரிடம் கேட்டு விட்டோம்என்பதை உணர்த்தியிருக்க வேண்டும்.
அவர் வெட்கத்தால் தலைகுனிந்தவராக, “இல்லை, இல்லை, இறைத்தூதரே! ஒரு போதும் நான் விரும்ப மாட்டேன்என்றார்.
அதன் பின்னர், நபிகளார் அவரை நோக்கி சீர்திருத்தும் தொனியில் உமக்கு எதை நீ விரும்புகின்றாயோ, அதையே பிறருக்கும் நீ விரும்புவாயாக! உம் விஷயத்தில் எதை நீ வெறுப்பாயோ அதையே பிறரின் விஷயத்திலும் வெறுப்பாயாக!என்று கூறினார்கள்.
இதைக் கேட்டதும், அந்த வாலிபர் மிகவும் பணிவுடன் இறைவனின் தூதரே! எனது உள்ளம் தூய்மை பெற இறைவனிடம் இறைஞ்ச மாட்டீர்களா?” என ஏக்கத்துடன் கேட்டார்.
அவரை அருகில் அழைத்த நபிகளார், தமதருகே அமரவைத்து அவரின் நெஞ்சத்தின் மீது கை வைத்து, “இறைவா இவரின் இதயத்தை தூய்மை படுத்துவாயாக! இறைவா இவரின் பிழைகளைப் பொறுத்தருள்வாயாக! இறைவா இவரின் கற்பொழுக்கத்தை பாதுகாப்பாயாக!என்று பிரார்த்தித்தார்கள்.
இறுதியாக அந்த வாலிபர் நபிகளாரிடமிருந்து விடை பெற்றுச் செல்கிற போது…. “இந்தச் சபையில் நான் நுழைகிற போது, விபச்சாரம்தான் நான் அதிகம் நேசிக்கும் விஷயமாக இருந்தது. ஆனால், இப்போது நான் அதிகம் வெறுக்கும் விஷயமாக அந்த விபச்சாரமே மாறிவிட்டதுஎன்று சொல்லியவாறே சென்றார்.
இந்த சம்பவத்தை அறிவிக்கும் நபித்தோழர் அபூ உமாமா {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்: இதன் பின்பு அந்த வாலிபரின் வாழ்வினில் எந்த ஒரு தருணத்திலும் கற்பொழுக்கத்தை உரசிப்பார்க்கும் எந்த ஒரு செயலும் இடம் பெற வில்லை.” (நூல்: முஸ்னத் அஹ்மத்,)
இது நீதிபோதனை என்ற பெயரில் புனையப்பட்ட கதையல்ல. நிஜம்! மனிதகுலத்திற்கு அழகிய முன்மாதிரியாக அனுப்பப்பட்ட நபிகளார் நடத்திய கவுன்செலிங் இது. பாலியல் இச்சைகளைத் தவறான முறையில் தீர்க்க விரும்பும் இளைஞர்களை நபிகளார் நினைவூட்டிய அந்த உண்மைகளை நினைவூட்டி யாரும் திருத்த முயற்சி செய்யலாம்.
--------------------- 
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 


திங்கள், 1 ஏப்ரல், 2019

பாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்?


Image result for பாலியல் சட்டங்கள்
பசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே அவற்றை தணிப்பதற்கு உணவையும் பானங்களையும் அதை ஜீரணிப்பதற்கு உடல் உறுப்புக்களையும் படைத்துள்ளான். அதே போலவே எதிர் பாலினத்தின் மீது ஈர்ப்பு, காதல், காமம் போன்ற உணர்வுகளை மனிதனுக்குள் விதைத்த இறைவனே அவற்றை தணிப்பதற்குரிய அவையவங்களையும் மனித உடலில் அமைத்துள்ளான். எனவே இந்த உணர்வுகளை மனிதன் தான் விரும்பியவாறு தணித்துக்கொள்வதில் தவறுண்டா? ஆம், கண்டிப்பாகத் தவறு உண்டு என்பதைத்தான் பொள்ளாச்சி, சேலம் மற்றும் கோவை சம்பவங்கள் நாட்டில் உண்டாக்கி வரும் கொந்தளிப்புகள் உறுதிப் படுத்துகின்றன.
பசி, தாகம் இவற்றை தணிக்கும்போது உண்டாகும் விளைவுகள் அந்த மனிதனை மட்டும் பாதிக்கும். ஆனால் பாலியல் உணர்வுகளைத் தணிக்கும் போது உண்டாகும் விளைவுகள் அப்படிப்பட்டவை அல்ல. அவை முதலில் இன்னொரு நபரை மட்டுமல்ல, அவ்விருவர் சார்ந்த குடும்பத்தையும் சூழவுள்ள சமூகத்தையும் கண்டிப்பாக பாதிக்கும் என்பதை நாம் அறிவோம். அது சம்பந்தப்பட்ட இருவரின் இசைவோடு நடந்தேறியாலும் சரியே!
தனி மனிதனுக்கு நிச்சயமாக ஒரு சில செயல்பாடுகளில் – அதாவது பிறரை பாதிக்காதவற்றில் - தனி சுதந்திரம் இருப்பது உண்மையே. ஆனால் மனிதனின் பெரும்பாலான செயல்பாடுகள் மற்ற மனிதர்களையும் சமூகத்தையும் பாதிக்கக்கூடியதாகவும் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்த பாலியல் தொடர்புள்ள செயல்பாடுகளும்!
கட்டுப்பாடற்ற பாலியல் சுதந்திரம்
உதாரணமாக கட்டுப்பாடற்ற பாலியல் சுதந்திரம் வழங்கப் பட்டால் – அதாவது யாரும் யாரோடும் பாலியல் உறவு கொள்ளலாம், அதைத் தட்டிக்கேட்க யாருக்கும் உரிமையில்லை என்ற நிலை உண்டானால் என்ன நடக்கும் என்பதை சற்று யோசித்துப்பாருங்கள்.   
= சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு அறவே பாதுகாப்பற்ற சூழல் உண்டாகும். 
= குடும்ப அமைப்பு என்பது சின்னாபின்னமாக சீர்குலையும்.
= கணவன், மனைவி, தாய், தந்தை, மக்கள், சகோதரன், சகோதரி உறவுகள் அர்த்தமற்றவையாகிப் போகும்.
= பரஸ்பர நம்பிக்கை, பொறுப்புணர்வு, மரியாதை போன்றவை மறைந்து அங்கு நம்பிக்கை மோசடி, பொறுப்பின்மை, தான்தோன்றித்தனம், காட்டுமிராண்டித்தனம் போன்றவை உடலெடுக்கும்.
= அங்கு பெண்கள் அநியாயமாக அந்நியனின் கற்பத்தை சுமந்து பின்னர் கைவிடப் படுவார்கள். தொடர்ந்து கருக்கொலைகள், சிசுக்கொலைகள், தற்கொலைகள், அனாதைகள், தந்தைகள் இல்லாப் பிள்ளைகள், வேண்டா வெறுப்பாக வளர்க்கப்படும் பிள்ளைகள், பொறுப்பற்ற குழந்தை வளர்ப்பு போன்ற விபரீதங்கள் உருவாகும்.
= ஒழுக்க சீர்கேடு, சுயநலம், திருட்டு, கொள்ளை, கொலை என அனைத்து தீமைகளும் மலிந்து அறவே அபாயகரமான சமூக சூழல் அமையும. மக்கள் மனிதன் வாழவே வெறுத்துவிடும் நிலை ஏற்படும். பிறகு என்ன நிகழும்?.. தற்கொலைகள் மலிந்துவிடும்.
அதை நோக்கித்தானே நாம் இன்று சென்று கொண்டிருக்கிறோம்! இன்று இந்த  பாலியல் சுதந்திரம் ஓரளவுக்குக் கட்டுபடுத்தப்பட்ட நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம். ஆம், தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகத்தின் சமீபத்திய அறிக்கைப்படி இன்று நாளொன்றுக்கு 371 நம் நாட்டில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். காவல்துறையின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படாத தற்கொலை எண்ணிக்கையையும் கணக்கிலெடுத்தால், நம்நாட்டில் ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலைகள் ஒவ்வொரு நாளும் நிகழ்கின்றன என்பதே உண்மை!
அமைதியை மீட்ட சட்டங்களும் கட்டுப்பாடுகளும் தேவை
இன்று நாம் வாழும் சமூகத்தில் அமைதி உண்டாக வேண்டும் என்று விரும்புவோமேயானால் இங்கு பாலியல் தொடர்பான நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது தெளிவு. நமது குடும்பங்களிலும் அல்லது சமூகத்திலும் தீய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க தெளிவான விதிமுறைகளும் தேவைப்படுகின்றன, அவை முறையாக பின்பற்றப்படவும் வேண்டும்.
சரி, இந்த விதிமுறைகளை எங்கிருந்து பெறுவது? இவற்றை எவ்வாறு நிர்ணயிப்பது? யார் நிர்ணயிப்பது? இங்குதான் நாம் பகுத்தறிவு பூர்வமாக சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
நாம் வாழ்வில் அன்றாடம் புழங்கும் தையல் மிஷின், வாஷிங் மிஷின்,  ஸ்கூட்டர் போன்ற பொருட்களை அவர்களின் தயாரிப்பாளர்கள் தரும் பயன்பாட்டு கையேட்டைப் (Instruction manual) புறக்கணித்துவிட்டு தான்தோன்றித்தனமாக நாமே நம் மனம்போன போக்கில் பயன்படுத்தினால் என்னென்ன விபரீதங்களும் விபத்துக்களும் ஏற்படும் என்பதை நாம் தெளிவாக உணர்ந்திருக்கிறோம். நாம் பயன்படுத்தும் இயந்திரங்களிலேயே அதிக சிக்கல்களும் நுட்பங்களும் கொண்டது (most complicated) நமது உடல் என்ற இயந்திரம். இதைத் தயாரித்தவனை நாம் புறக்கணித்து விட்டு நம் மனம்போன போக்கில் பயன்படுத்தினால் ஏற்படும் விபரீதங்களைத்தான் இன்று நாம் அனுபவித்து வருகிறோம்.
அற்ப அறிவும் ஆயுளும் கொண்ட ஒரு மனிதன் சக மனிதனுக்கான பாலியல் சட்டங்களை இயற்றவோ பரிந்துரைக்கவோ அறவே தகுதி இல்லாதவன். எந்த ஒரு தனிநபரும் சரி, மனிதர்களின் குழுக்களும் சங்கங்களும் சரி, ஊர் நிர்வாகமும் சரி, அரசியல் கட்சிகளும் அல்லது நாடாள்பவர்களும் சரி, இவர்களில் யாரும்  பாலியல் சட்டங்களை இயற்றவோ பரிந்துரைக்கவோ சற்றும் தகுதி இல்லாதவர்களே என்பதை நாம் உணரவேண்டும்.
ஆண் பெண்  உடற்கூறுகளையும் அவற்றின் இயற்கையையும் அவர்களின் பருவ மாற்றங்களையும் அவற்றுக்கேற்ற தேவைகளையும் உளவியலையும் அவர்களது வாழ்வின் நோக்கத்தையும் முழுமையாக அறிந்த அவர்களின் படைப்பாளன் மட்டுமே பக்குவமான பாலியல் சட்டங்களைத் தரமுடியும். அவன் மட்டுமே இருபாலார்க்கும் சமூகத்தில் அவர்களது பங்கு, கடமைகள், பொறுப்புக்கள், போன்றவற்றை முழுமையாக நிர்ணயிக்கக் கூடியவன். அந்த சர்வஞானமும் சர்வ வல்லமையும் கொண்டவனும் நுண்ணறிவாளனும் ஆன இறைவன் நமக்கு வழங்கும் வாழ்வியல் சட்டங்களே மிகமிகப் பக்குவமானவை. அனைவருக்கும் பொருத்தமானவை. அந்த வாழ்வியல் சட்டங்களின் ஒரு முக்கிய பிரிவே பாலியல் சட்டங்களும். 

இந்த வாழ்வியல் சட்டங்களை இறைவன் எதற்காக வழங்கியுள்ளான் ?
இங்குதான் நாம் இந்த வாழ்க்கையின் நோக்கத்தையும் மறுமையையும் பற்றி சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். நாம் வாழும் இந்தக் குறுகிய வாழ்க்கையை இறைவன் ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான பரீட்சைக் கூடமாகவும் படைத்துள்ளான்.  இறைவன் நமக்கு வழங்கும் வாழ்வியல் சட்டங்கள் நமது இம்மை மற்றும் மறுமை வாழ்வை அடிப்படையாகக் கொண்டவை. அவற்றை உரிய முறையில் நிறைவேற்றும் பொழுது இவ்வுலக வாழ்க்கையும் அமைதியாக அமையும். மறுமையில் மோட்சமும் கிடைக்கும். 
பாலியலே வாழ்வியலின் ஆதாரம்:
மனித வாழ்வியலின் ஆதாரமாக உள்ளவை பாலியல் உணர்வுகளும் அதைத் தணிக்கும் வழிமுறைகளும். இவற்றை உரிய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நிறைவேற்றும் வரை மனித சமூகத்தில் அமைதி நீடிக்கும். அதற்கான வழிகாட்டுதலை இறைவன் தன் வேதங்களின் மூலமாகவும் தூதர்களின் மூலமாகவும் அவ்வப்போது வழங்கி வந்துள்ளான். அதன் விளைவாகவே திருமணங்களும் குடும்ப உறவுகளைப் பேணும் வழிமுறைகளும் மனித சமூகத்தில் உருவாயின.  அந்த இறைத் தூதர்களில் இறுதியாக வந்தவரே முஹம்மது நபி(ஸல்) அவர்கள். அவர் மூலமாக அருளப்பட்ட இறைவேதமே திருக்குர்ஆன்.
ஆக, ஆண்- பெண் உறவுகள் விடயத்தில் மட்டுமல்ல, வாழ்வின் எல்லா விடயங்களிலும் அவன் கற்பிக்கும் ஏவல்-விலக்கல்களைப் பேணி வாழ்வதுதான் அறிவுடைமையாகும். அவற்றை பின்பற்றி நடைமுறைக்கு கொண்டுவந்தால் மட்டுமே இவ்வுலக வாழ்வு அமைதி மிக்கதாக அமையும்.
சரி, இவற்றை பின்பற்றாவிட்டால்......?
இவ்வுலக வாழ்வை மேற்கூறப்பட்ட விபரீதங்களுக்கு மத்தியில் அல்லல்பட்டு கழிக்க வேண்டியிருக்கும் என்பது மட்டுமல்ல. அந்த இறைவன் நமக்கு வழங்கிய வாழ்க்கைத் திட்டத்தை புறக்கணித்து வாழ்ந்ததன் காரணமாக மறுமை வாழ்வில் தண்டனையையும் அனுபவிக்க நேரும்.
============
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html