இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 29 செப்டம்பர், 2021

இன்றைய மக்களுக்கு மோட்சத்திற்கு வழிகாட்டி !


 படைத்தவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன்
படைப்பினங்கள் வணக்கத்துக்கு உரியவை அல்ல என்ற ஏக இறைக்கொள்கையை பூமியில் நிலைநாட்ட இறைவனால் இறுதியாக அனுப்பப்பட்டவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். முந்தைய இறைத்தூதர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட மக்களுக்காக அனுபப்பட்டார்கள். ஆனால் அவர்களைப் போலல்லாமல் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அனைத்து உலக மக்களுக்காகவும் பொதுவாக அனுப்பபட்டவர் ஆவார்கள். இந்த உண்மையை பலவழிகளிலும் நாம் உறுதியாக அறிந்து கொள்ள முடியும்.

1.   இறுதி இறைத்தூதராக வந்திருப்பது.

2.   அவர் மூலம் அருளப்பட்ட வேதம் மூல மொழியிலேயே எந்தவிட சிதைவுக்கும் உட்படாமல் பாதுகாக்கப்படுவது. #ஒப்பிலா_இறைமறை_திருக்குர்ஆன் 

3.   இவரது போதனைகளும் நடைமுறை வாழ்க்கையும் அட்சரம்பிசகாமல் பாதுகாக்கப்பட்டு வருவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு முன்மாதிரியாக இருந்து வருவது. #அண்ணல்_நபி_அழகிய_முன்மாதிரி 

4.   முந்தைய இறைத்தூதர்கள் கடவுளாக்கப் பட்டதைப் போல் இவரை யாரும் வணங்காமல் இருப்பது.

என பல உண்மைகளும் அவர்தான் இன்று வாழும் மக்களுக்கான மோட்சத்துக்குரிய வழி என்பதை உணர்த்துகின்றன.

வணங்கப்படாத ஒரே தலைவர்

நபிகளார் உயிரோடு இருந்தபோது மக்கள் தன்னை வணங்குவதற்கோ தன்  காலில் விழுவதற்கோ சற்றும் அனுமதிக்கவில்லை. ஏன், தனக்காக எழுந்து நிற்பதையும் தன்னை அளவுக்குமீறி மக்கள் புகழ்வதையும் கூட தடைசெய்தார்கள்.

  சரி, தான் இறந்தபின்னர் மக்களை எப்படிக் கட்டுப்படுத்துவது? ஆம், அதையும் செய்துவிட்டுத்தான் சென்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்). இறந்தபின்னர் தான் வழிபாட்டுப் பொருள் ஆகிவிடக்கூடாது என்பதற்காக அதற்கான வாசல்கள் அனைத்தையும் இறுக அடைத்துவிட்டு மரணித்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே! இன்று அதற்கு நீங்களே சாட்சியாக இருந்துக்கொண்டு இருக்கிறீர்கள்! உலகில் இன்று கோடிக்கணக்கான மக்களால் உயிருக்குயிராக நேசிக்கப் படுபவர் நபிகள் நாயகம். ஆனாலும் இந்த பூமியின் மேற்பரப்பில் எங்குமே அவரது சிலையோ உருவப் படமோ காணக் கிடைப்பதில்லை! மிகப்பெரிய ஆச்சரியம் அல்லவா இது?

தனது மரணத் தருவாயிலும் மக்களை இதுகுறித்து எச்சரித்தார்கள்.

 நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன், "அறிந்து கொள்ளுங்கள்உங்களுக்கு முன்னிருந்த (சமுதாயத்த)வர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் சான்றோர்களின் அடக்கத்தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்எச்சரிக்கைநீங்கள் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கி விடாதீர்கள்அவ்வாறு செய்ய வேண்டாம் என்று உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்'' என்று கூறுவதை நான் கேட்டேன்.

அறிவிப்பவர்ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) நூல்முஸ்லிம்

 உயிரோடு இருக்கும்போது ஏகத்துவம் முழங்கிய முன்னாள் இறைத் தூதர்களையும் பிற்கால மக்கள் தெய்வங்களாக்கி வழிபடுவதை உலகம் கண்டது. புகழாசை காரணமாக உயிரோடிருக்கும்போதே தங்களுக்காக சிலைகளும் நினைவுச் சின்னங்களும் நிறுவிவிட்டுச் செல்லும் அரசியல் மற்றும் ஆன்மீகத் தலைவர்களையும் உலகம் கண்டது. ஆனால் உலகளாவிய மற்றும்  காலங்களைக் கடந்து மக்கள் உள்ளங்களில் ஆட்சி செலுத்திவரும் இத்தலைவர் தனித்துவம் மிக்கவரே.

இன்று வாழும் மக்களுக்கு மோட்சத்திற்கு உரிய வழியும் இவரே என்பதை இறைவன் கூறுவதைக் காணுங்கள்:

(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் நம்பிக்கை கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.” (திருக்குர்ஆன் 7:158)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)

#இதயங்களை_வென்ற_இறைத்தூதர்
இறைத்தூதரோடு நமக்கென்ன தொடர்பு?

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் அக்டோபர் 2021 இதழ்

#திருக்குர்ஆன்_நற்செய்தி_மலர் அக்டோபர் 2021 இதழ்  



பொருளடக்கம்:

இருட்டடிப்புக்கு உள்ளான இஸ்லாமியர் அறிவியல் பங்களிப்பு -2

கணிதத்துறையில் அரபு முஸ்லிம்களின் பங்களிப்பு -4

கடவுளை வணங்கச் சொன்னவர்களையே கடவுளாக்கிய அவலம்! -9

இன்று வாழும் மக்களுக்கு மோட்சத்திற்கு வழிகாட்டி! -10

சிஃபர் (ளகைச) வடிவத்தை ஒரு எண்ணாக கணக்கிட்டது யார்? -14

எரிப்பதா? புதைப்பதா? படைத்தவன் என்ன சொல்கிறான்? -15

தற்கொலை முடிவு அல்ல, துன்ப வாழ்வின் துவக்கம்!! -20

'நீட்'டோடு நிற்பதல்ல வாழ்க்கை! -21

திங்கள், 27 செப்டம்பர், 2021

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் செப்டம்பர் 2021


 #திருக்குர்ஆன்_நற்செய்தி_மலர் செப்டம்பர் 2021 இதழ் வாசிக்க விரும்புவோர் கீழ்கண்ட லிங்கில் மின்பதிப்பை வாசிக்கலாம்..

பொருளடக்கம்:
பறவையைக் கண்டு விமானம் படைத்த முதல் மனிதர்!-2
இஸ்லாத்தின் வருகையால் தூண்டப்பட்ட அறிவியல் வளர்ச்சி -5
ஏரொடைனமிக் விதிகளும் பறவை என்ற அற்புதமும் -6
அண்ணல் நபியிடம் முறையிட்ட தாய்ப் பறவை -7
வானத்தை வசப்படுத்தும் பறவைகள்! -8
பறவைகள் திசையறியும் அற்புதம் -11
மனித நேயம் கற்பிக்கும் மரங்கொத்தி -13
பிணம் தூக்கும் பறவைகள் -15
மணக்கொடை கொடுத்து மணமுடிக்கும் தூக்கணாங்குருவி -16
தன்னம்பிக்கையின் முன்மாதிரிகள் பறவைகள் -17
மனிதனுக்கு வகுப்பு எடுத்த காகம்!-18
இறந்த பின்னும் பறந்து வந்த பறவைகள் -19
யானைப் படையை வீழ்த்திய அபாபீல் பறவைக் கூட்டம் -21
களிமண்ணில் இருந்து பறவை செய்து அசத்திய இயேசுநாதர்! -23
வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு -24

சனி, 25 செப்டம்பர், 2021

'நீட்'டோடு நிற்பதல்ல வாழ்க்கை!


= "விடிய விடியப்  படிச்சான். இரண்டு முறை தோல்வி அடைந்த அச்சத்தில் இப்படி செய்து கொண்டான். பரீட்சைக்கு போக டிரஸ் எல்லாம் தேச்சி வெச்சிருந்தோம். ஊரெல்லாம் நடந்தது, இப்ப என் வீட்லேயும் நடக்கும்னு கனவுலயும் நினைக்கல" என கண்ணீர் விடுகிறார் தற்கொலை செய்து கொண்ட தனுஷின் தந்தை சிவக்குமார்.

= “எங்கள் அப்பா உணவகத்தில் பாத்திரம் கழுவும் வேலை செய்கிறார். அம்மா 100 நாள் வேலை திட்டத்திற்கு செல்கிறார். இப்படி தினக்கூலி சம்பளத்திற்கு வேலைக்கு சென்று கடுமையான சூழலில்தான் தங்கையை பெற்றோர் படிக்க வைத்தனர்" என்று அழுகிறார் தற்கொலை செய்து கொண்ட சௌந்தர்யாவின் இரண்டாவது அக்கா கோடீஸ்வரி.

 தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு காரணமாக தற்கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அனிதா தற்கொலை தொடங்கி வரிசையாக ஒவ்வோர் ஆண்டும் மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தில் பலியாகி வருவது தொடர்கதையாகி வருகிறது. நீட் தேர்வு நடைபெறும்போதும், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும்போதும் தோல்வி பயம் மற்றும் குறைந்த மதிப்பெண்கள் காரணமாக இந்த தற்கொலைகள் நிகழ்கின்றன. (ஆதாரம்: சமீபத்திய BBC தமிழ் செய்திகள்)

= இவைபோக இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சுமார் 28 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.
மாணவர்களின் தற்கொலைகளுக்கு என்ன காரணம்?


கஷ்டப்பட்டு இரவு பகலாக உழைத்து சம்பாதிக்கிறார்கள் பெற்றோர்கள். தங்கள் பிள்ளைகளை வளர்க்க படாதபாடு படுகிறார்கள். தங்கள் பிள்ளைகள் முன்னேறவேண்டும் என்பதற்காக கடன் வாங்கியாவது பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டணங்களைக் கட்டி  அவர்களைப் படிக்க வைக்கிறார்கள். ஆனால் இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது .... இடிபோன்ற நிகழ்வுகள்! ... யாரால்தான் தாங்கிக்கொள்ள முடியும்? அதுவரை வளர்த்த ஆசைகளில் எதிர்பார்ப்புகளில் மண்ணை வாரிப்போட்டது போன்று பிள்ளைகளின் தற்கொலைகள்! .... என்ன காரணம்? .... சிலருக்கு தேர்வில் தோல்வியால் அவமானம், சிலருக்கு வகுப்பில் மற்ற மாணவனைவிட மதிப்பெண் குறைந்ததால் அவமானம்! சிலருக்கு ஒரு பாடத்தில் ஒரு மதிப்பெண் குறைந்ததால் அவமானம்! ... இப்படி பல காரணங்கள்! வாழ்வென்றால் அவ்வளவுதானா? அவ்வளவு அலட்சியம்!! அவ்வளவு காலம் இராப்பகலாக படித்ததும் பாடுபட்டதும் இந்த ஒரு முடிவிற்காகவா? படித்தும் அவர்களுக்கு அறிவு என்பது ஏன் வளராமல் போயிற்று? என்ன காரணம்?

இங்கு அடிப்படைக் காரணம் இதுதான்..

வாழ்க்கை என்றால் என்ன என்பதைப்பற்றிய அடிப்படைப் பாடத்தை அவர்களுக்கு யாரும் கற்பிக்கவில்லை என்பதுதான்!

பிள்ளைகளுக்கும் சரி, பெற்றோருக்கும் சரி, ஏன் வாழ்கிறோம் எதற்காக வாழ்கிறோம் என்ற உணர்வே இல்லை. அதை அறிய அவர்கள் முற்பட்டதும் இல்லை. கல்விக்கூடங்களுக்கும் அரசாங்கங்களுக்கும் அதுபற்றிய கவலைகள் சிறிதும் இல்லை! ... தங்கள் வருமானம் பாதிக்கப் படாதவரை.... தங்கள் ஆட்சிக் கட்டில் ஆட்டம் காணாதவரை ... அவர்கள் கவலைப்படப் போவதும் இல்லை!

இனியாவது திருந்த முயற்சிப்போம்!

 உங்கள் பிள்ளைகள் அல்லது வேண்டியவர்களுக்கு இது போன்றவை நேராமல் இருக்கவேண்டுமானால் வாருங்கள் இதைத் தொடர்ந்து படியுங்கள். இங்கு சொல்லப்படும் கருத்துக்கள் இறைவன் அனுப்பிய இறுதி வேதம் திருக்குர்ஆன் மற்றும் இறுதி இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் கூற்றுக்களை ஆதாரமாகக்கொண்டு சொல்லப்படுபவை. இவற்றை அனைத்து மதத்தைச் சார்ந்த அன்பர்களும் தங்கள் பிள்ளைகளை நெறிப்படுத்த கையாளலாம். இவற்றுக்குப் பகரமான மாற்றுத் திட்டம் கைவசம் இல்லாத பட்சத்தில் தங்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொண்ட நாத்திகர்களும் இன்ன பிற கொள்கைவாதிகளும் இதைப் பற்றி ஆராயலாம்!

 கல்வி கற்பிப்பதோடு நாம் அடிப்படையாக இவ்வுலகைப் பற்றிய உண்மைகளையும் குழந்தைகளுக்கு உரிய பருவத்தில் உணர்த்தவேண்டும். தவறினால் மேற்கூறப்பட்ட விளைவுகள் ஏற்படுவது இயல்பே! மேலும் கல்வி கற்பிப்பதன் முக்கிய நோக்கம் அவர்களை விஞ்ஞானிகளாக ஆக்குவது என்பதை விட பண்புள்ள மனிதர்களாக ஆக்குவதுதான் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

= மனித வாழ்வின் உண்மை நிலை

 மனித வாழ்வு இன்பம்துன்பம் என்ற இரு பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. இரு பகுதிகளும் மாறி மாறி வருவது பிரபஞ்ச விதியும் கூட. மனிதன் இயல்பிலேயே  இன்பத்தை விரும்புகிறான். துன்பம் கஷ்டம் பிரச்சினைகளை  வெறுக்கிறான். எனினும் பிரபஞ்ச விதிக்கு அவன் உட்பட்டே வாழவேண்டியிருக்கிறது.

 இன்று வாழும் வாழ்வு மட்டுமே வாழ்வு, இதுதான் எல்லாமே, இதற்குப் பிறகு ஒன்றும் இல்லை மனித வாழ்க்கைக்குப் பின்னால் எந்த நோக்கமும் இல்லை என்ற குறுகிய மனப்பான்மையில் வாழ்வோருக்கு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் துணிவு இருப்பதில்லை. அப்படிப்பட்டவர்கள் பிரச்சினைகளும் துன்பங்களும் தன்னை சூழ்ந்து கொள்கின்றபோது மனமுடைந்து போகிறார்கள். தற்கொலைகளில் தஞ்சம் புகுகிறார்கள்.

 ஆனால் இன்று நாம் வாழும் பூமி என்பது பரந்துவிரிந்த பிரபஞ்சத்தில் ஒரு சிறு துகள் போன்றது. இதன்மேல் ஒரு உயர்ந்த நோக்கத்துக்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறோம் என்று விரிவாக சிந்திப்பவர்கள் இறைவன் கூறும் உண்மைகளைக் கண்டறிகிறார்கள். சோதனைகளும் துன்பங்களும் இவ்வாழ்வின் இன்றியமையாத பகுதிகளே என்பதை உணர்கிறார்கள் அதனால் தன்னம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்கிறார்கள்.

 = வாழ்வது எதற்காக?

இவ்விஷயத்தில் பலரும் பல கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் பலவாறு ஊகித்தாலும் இவ்வுலகத்தைப் படைத்த இறைவன் என்ன கூறுகிறானோ அதுமட்டுமே உண்மை, மற்றவை அனைத்தும் ஊகங்களே! அவன் கூறுவது என்னவென்றால், மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல, மாறாக ஒரு புதிய வாழ்வின் துவக்கமே என்பதே! தக்க காரணத்துடனேயே அன்றி இவ்வுலகைப் படைக்கவில்லை என்கிறான் இறைவன்.

 = “நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?”  (திருக்குர்ஆன்23:115) 

= ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர்,நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 21:35)

அதாவது மறுமை என்ற முடிவில்லாத வாழ்க்கையில் நமது இருப்பிடம் சொர்க்கமா அல்லது நரகமா என்பதைத் தீர்மானிக்கும் ஒரு பரீட்சைக் கூடமே இந்த தற்காலிக இவ்வுலகம் என்பதை நாம் முதன்மையாக அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாழ்வில் இறைவன் அளித்த அருட்கொடைகளுக்கு நன்றிகூறும் முகமாக அவனுக்குக் கீழ்படிகிறோமா இல்லையா என்பதே இங்கு பரீட்சிக்கப்படுகின்றது. இப்பரீட்சையில் கீழ்படிபவர்களுக்குப் பரிசாக சொர்க்கமும் கீழ்ப்படியாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்தோருக்கு நரகமும் மறுமை வாழ்வில் வழங்கப்பட உள்ளன. 

 மறுமை என்ற நிரந்தர வாழ்க்கை: 

இவ்வுலகம் ஒருநாள் முழுக்க முழுக்க அழிக்கப்பட்டு பிறகு அனைத்து மனிதர்களும் இறுதித் தீர்ப்புநாள் அன்று மீணடும் உயிர்கொடுத்து எழுப்பப்பட்டு விசாரிக்கப்படுவர். அன்று முதல்தான் நமது நிரந்தர வாழ்வு ஆரம்பமாகிறது. பாவிகளுக்கு நரகவாழ்வும்  புண்ணியவான்களுக்கு சொர்க்க வாழ்வும் ஆரம்பிக்க உள்ளன.

= ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)

இந்த தற்காலிக உலகம் என்பது ஒரு பரீட்சைக் கூடம் என்பதால் இங்கு இன்பமும் துன்பமும் மாறிமாறி வரும், சோதனைகள் இங்கு சகஜமே என்று கூறுகிறான் இறைவன்:

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும்,  பசியாலும்,  பொருள்கள்,  உயிர்கள்,விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (திருக்குர்ஆன்   2:155)

ஆம், இங்கு சந்திக்கும் சோதனைகளுக்குப் பகரமாக இறைவனிடம் வெகுமதி காத்திருக்கிறது என்ற உணர்வும் பொறுமை மீறி இறைவன் தடுத்த காரியங்களில் ஈடுபாட்டால் இறைவனின் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்ற உணர்வும் மனித மனங்களில் விதைக்கப்பட்டால் அந்த மனங்கள் தோல்விகளைக் கண்டோ துன்ப துயரங்களைக் கண்டோ சோர்ந்து போவதும் இல்லை, தற்கொலை போன்ற இறைவன் தடுத்த வழிகளை நாடுவதும் இல்லை. மாறாக இந்தப் பரீட்சையை முடித்துக்கொண்டு நம் இறைவனிடம் திரும்ப இருக்கிறோம் என்ற உணர்வில் அவற்றை பொறுமையோடு எதிர்கொள்வார்கள். தன்னம்பிக்கையோடு வாழ்வைத் தொடர்வார்கள்.

 = (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் இறைவனுக்கே உரியவர்கள்;  நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்'என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும்நற்கிருபையும் உண்டாகின்றனஇன்னும் இவர்கள் தாம் நேர்வழியை அடைந்தவர்கள். (திருக்குர்ஆன்  2:156,157)

இவ்வுலக இன்பங்களைவிட பன்மடங்கு மதிப்புள்ள சொர்க்கச் சோலைகளும் பூங்காவனங்களும் தெவிட்டாத உணவும் பானங்களும் தேனாறும் பாலாறும் அங்கே காத்திருக்கின்றன. பிணியும் மூப்பும் சோர்வும் இல்லாத இளமை வாய்ந்த உடலோடும் நல்லோரின் சகவாசத்தொடும் அமைதி மாறா சூழலோடும் அனுபவிக்க இருக்கின்ற சொர்கத்து இன்பங்கள் ஏராளம் ஏராளம்! இவையெல்லாம் வெறும் கற்பனைகள் அல்ல, மாறாக இவற்றை பகுத்தறிவு பூர்வமாக எடுத்துரைத்து நம்பிக்கை ஊட்டுகிறது இறைவனின் திருமறை.

மறுமையில் மீண்டும் உயிர்பிக்கப்பட்டு மனிதன் சொர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ அனுப்பப் படுவான் எனும் உண்மையை மறுப்போரைப் பார்த்து இறைவன் திருக்குர்ஆனில் பின்வருமாறு கேட்கிறான்:

வானங்களையும், பூமியையும் படைத்து அவற்றின் படைப்பால் எவ்வித சோர்வுமின்றி இருக்கின்றானே அல்லாஹ் அவன் நிச்சயமாக மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றலுடையவன்; ஆம்! நிச்சயமாக அவன் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (திருக்குர்ஆன்  46:33) 

================ 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

எரிப்பதா? புதைப்பதா? படைத்தவன் என்ன சொல்கிறான்?


மனித உடல் என்பது அனைத்து மனிதகுலத்துக்கும் ஒரே மாதிரியானது . ஒரே இயற்கையைக் கொண்டது.  மதங்களைப் பொறுத்தோ, நம்பிக்கைகளைப் பொறுத்தோ நாட்டைப் பொறுத்தோ அதன் இயற்கை மாறுபடுவதில்லை. 
மரணத்திற்குப் பின் மனித சடலத்தை எரித்தாலும் புதைத்தாலும் என்ன நடக்கும்? எது மனிதனுக்குப் பாதுகாப்பானது? என்பது அடிக்கடி விவாதப்பொருள் ஆவதை நாம் கண்டு வருகிறோம்.
இக்கேள்விகளை ஒட்டி  சுற்றுப்புறச் சூழல் மாசுபாடு கண்ணோட்டத்தில் பலரும் விவாதிப்பதை நாம் கண்டுள்ளோம். ஆனால் மரணித்த மனிதனுக்கு உயிர் போவதோடு உணர்வுகளும் போய்விடுகின்றன என்பது உண்மையானால் புதைத்தாலும் சரி, எரித்தாலும் சரி என்று நாம் அச்சமற்று இருக்கலாம். மாறாக உயிர் போவதோடு உணர்வுகளும் போவது இல்லை என்பது உண்மையானால் நாம் அச்சமற்று இருக்க முடியுமா? 

உதாரணமாக இங்கு தகன மேடையில் எரிக்கப்படும் உடல் உங்களுக்கு மிகமிக நெருங்கிய ஒருவருடையது என்றால் தைரியமாக எரிப்பீர்களா?

இக்கட்டான கேள்வி 


புதைப்பதா எரிப்பதா எது பாதுகாப்பானது என்ற கேள்விக்கு மரணம் அடைந்தவர்கள் யாரும் வந்து பதில் சொல்ல மாட்டார்கள் என்பது தெளிவு. ஆனால் நாம் ஒவ்வொருவரும் மரணத்தை சந்திக்க இருக்கிறோம் என்ற காரணத்தால் இதைப் பற்றி அறிந்து கொள்வது நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் கண்டிப்பாக நன்மை பயக்கும்.  

இந்தக் கேள்விகளுக்கு விடை காணும் முன்னர் மனிதர்களாகிய நம்மைப் பற்றிய சில உண்மைகளை நினைவு கூருதல் நலம். 

சில மறுக்க முடியாத உண்மைகள்:

= நாம் அல்லது மனிதன் என்பது வெற்று உடலோ அல்லது ஏதேனும் உறுப்போ அல்லது முகமோ அல்ல. மாறாக உடலும் உயிரும் இன்னும் நமக்குப் புரியாத சிலவும் சேர்ந்ததே நாம் அல்லது மனிதன் என்பது. உடல் என்பது நமது ஐம்புலன்களுக்கு தட்டுப்படுவது (sensible) ஆனால் உயிர் அப்படியல்ல. ஐம்புலன்களுக்கு தட்டுப்படும் தகவல்களை வைத்துக்கொண்டு பகுத்து அறியப்படுவது. 

= இம்மாபெரும் பிரபஞ்சத்தில் நாம் பரவிக்கிடக்கும் கோடானுகோடி பந்துகளில் ஒரு பந்தான பூமிப் பந்தின்மீது ஒட்டிக்கொண்டு இருக்கும் ஒரு நுண்ணிய துகள் போன்றவர்கள் நாம். நம்மில் ஓவ்வொருவரது ஆயுளும் நீர்க்குமிழி போல மிகமிக அற்பமானதே.

= இவற்றின் படைப்பிலோ இயக்கத்திலோ கட்டுப்பாட்டிலோ ஒரு துளியளவு கூட நம் பங்களிப்பு என்பது இல்லை.
= மட்டுமல்ல, நாம் நமது என்று சொல்லிக்கொள்ளும் நம் உடல் பொருள் ஆவி என இதில் எதுவுமே நமது அல்ல, இவற்றின் கட்டுப்பாடும் முழுமையாக நம் கைவசம் இல்லை.
= நாம் இங்கு வருவதும் போவதும் - அதாவது நம் பிறப்பும் இறப்பும் – நம் விருப்பப்படியோ திட்டப்படியோ  நடப்பது அல்ல. அனைத்தும் நம்மைப் படைத்துப் பரிபாலித்து வருபவனின் இயக்கத்திலேயே உள்ளன. 
= இனி மரணம் என்பது எவ்வாறு நிச்சயமான ஒன்றோ அதைப் போலவே அதைத் தொடரும் வாஸ்தவத்தை மனிதன் அனுபவிக்கப்போவதும் நிச்சயம் என்றே நாம் புரிய முடிகிறது. 
அந்த வகையில் மேற்படி கேள்விகளுக்கு மனித ஊகங்களைப் பின்பற்றுவதை விட நம்மைப் படைத்தவன் ஏதாவது இவ்விடயத்தில் வழிகாட்டி உள்ளானா என்று ஆராய்ந்து அதன்படி நடந்து கொள்வதே அறிவுடைமை!
அவன் நமக்கு எதைச் சொல்கிறானோ அதைப் பின்பற்றுவதே நல்லது என்று பகுத்தறிவு நமக்கு சொல்கிறது.  

இறைவேதமும் இறுதி இறைத் தூதரின் கூற்றுக்களும் 

மரணித்த மனிதர் உணர்வுடனேயே இருப்பார் என்பதை  இஸ்லாமிய ஆதாரங்களில் இருந்து அறிய முடிகிறது. மரணம் முடிவல்ல, மாறாக உண்மை வாழ்கையின் தொடக்கமே என்கிறது இஸ்லாம். 

1 . இக்குறுகிய வாழ்வு ஒரு பரீட்சையே!

 = உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன்மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்மேலும்அவன் (யாவரையும்) மிகைத்தவன்மிக மன்னிப்பவன்.(திருக்குர்ஆன்  67:2) 

2 . ஒவ்வொரு உயிரும் மரணத்தை சுவைத்தே தீரும் என்பதும்  மறுமையில் உயிர்த்தெழுதலும் விசாரணையும் சொர்க்கமும் நரகமும் உண்டு என்பது இறைவன் விதித்த விதியில் உள்ளது. 

= ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில்தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)

“நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்; பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்” (என்று) (நபியே!) நீர் கூறுவீராக. (திருக்குர்ஆன் 62:8.)

3. மனிதன் மரணிக்கும் தருவாயில் நடக்கும் நிகழ்வுகள்  பற்றி திருக்குர்ஆன் :

= அவன் தன் அடியார்களை அடக்கியாளுபவனாக இருக்கிறான்; அன்றியும், உங்கள் மீது பாதுகாப்பாளர்களையும் அனுப்புகிறான்; உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், நம் வானவர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள் - அவர்கள் (தம் கடமையில்) தவறுவதில்லை. (திருக்குர்ஆன் 6:61)

= நிச்சயமாக எவர்கள் ‘எங்கள் இறைவன் அல்லாஹ்தான்’ என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, அவர்கள்பால் மலக்குகள் இறங்கி, ‘நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் – உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்’ (எனக் கூறுவார்கள்)’
(அல் குர்ஆன் 41:30)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)

 = வானவர்கள் சத்திய மறுப்பாளர்களின்  உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், வானவர்கள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள்: “எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்” என்று (திருக்குர்ஆன் 8:50)

4. மரணித்த உடலில் உணர்வுகள் இருக்கும் என்பதை கீழ்கண்ட நபிவழி செய்திகள் மூலமாக அறிகிறோம்:

“ஓர் அடியானது உடலைக் கப்ரில் (சமாதியில்) அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை அந்த மய்யித் (மரணித்த நபர்)  செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, ‘முஹம்மத் என்பவரைப் பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ எனக் கேட்பர். அதற்கவன், ‘அவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்’ என்பான். பிறகு ‘(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் அதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்’ என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். மரணித்தவன் சத்திய மறுப்பாளனாகவோ  நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், ‘எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்’ என்பான். அப்போது அவனிடம் ‘நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி(விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்ளையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கதறுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் – அறிவிப்பவர் அனஸ் (ரலி) (நூல்கள் – புகாரி 1338, 1374. முஸ்லிம் 5505. நஸயீ, அபூதாவூத், அஹ்மத்)

= இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இறந்தவரின் உடல் (எடுத்து செல்ல தயாராக) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும் போது, அந்த பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால் என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்: என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்: என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால் கை சேதமே! என்னை எங்கு கொண்டு செல்கின்றீhகள்! என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதர்களைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான் ‘.
(அபூ ஸயிதுல் குத்ரி (ரலி) புகாரி: 1380)

5. மரணித்த சடலத்தை மற்றவர்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பதைக் குறித்த இஸ்லாமிய அறிவுறுத்தல்களில் இருந்தும் மரணித்த பின் உணர்வுகள் தொடர்கின்றன என்பதை அறியலாம். உயிருடன் இருப்பவர்களின் அங்கங்களை சிதைப்பதை இஸ்லாம் தடுப்பது போன்று மரணித்தவர்களின் உடல்களை சிதைப்பதை இஸ்லாம் தடுக்கிறது. பிரேத உடலை பிறர் அருவருப்பாகவும் கண்ணியக் குறைவுடனும் பாவிப்பது போலல்லாமல் முஸ்லிம்கள் அதை கண்ணியமாகவும் அமானிதமாகவும் கையாள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.

= மரணித்தவர்களை உயிருடன் உள்ளவர்களை குளிப்பாட்டி சுத்தம் செய்வது போல சுத்தம் செய்த பின்னரே அடக்கம் செய்யவேண்டும் என்பதை இஸ்லாம் கடமையாக்கி உள்ளது.

= மரணித்த உடலை தாமதியாமல் விரைவாக அடக்கம் செய்ய வேண்டும் என்பதையும் இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது.

= குளிப்பாட்டும் போதும் ஜனாஸா தொடர்பான எல்லா செயற்பாடுகளிலும் நிதானமும் மென்மைப் போக்கும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

=  'உங்களில் ஒருவர் ஜனாஸாவை(மரணித்த உடலை)க் கண்டால் அதனுடன் அவர் நடப்பவராக இல்லையென்றால் அது கடக்கும் வரை எழுந்து நிற்க வேண்டும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1308 

= ‘மரணித்தவரின் எலும்பை முறிப்பது உயிருடன் இருப்பவரின் எலும்பை முறிப்பது போன்றதாகும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: இப்னுமாஜா: 1616, அபூதாவூத்: 3207, அஹ்மத்: 25356)

= "உங்களில் ஒருவர், ஒரு நெருப்புக்கங்கின் மீது அமர்ந்து அது அவரது ஆடையைக் கரித்து அவரது சருமம்வரை சென்றடைதல் என்பது, சமாதி மீது அவர் உட்காருவதைவிட அவருக்குச் சிறந்ததாகும்" என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரலி), முஸ்லிம்)

= சமாதியின் மீது அமர்ந்திருந்தவரைப்பார்த்து நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"கபுரிலிருந்து (சமாதி மேல் இருந்து) இறங்குங்கள்; கபுருவாசிக்கு தீங்கு செய்யாதீர்கள்." (அஹ்மத்)
= (போரில் கொல்லப்பட்ட உடல்களில்) கொள்ளையடிப்பதையும், ஒருவரின் அங்கங்களைச் சிதைப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
(அப்துல்லாஹ் இப்னு யஸீத்(ரலி), புகாரி)

புதைப்பதே  இறைவனின் பரிந்துரை:

உலகில் நடந்த முதல் கொலையை விவரிக்கும் அதே வேளையில், ஒருவர் இறந்து விட்டால் அவரைப் புதைக்க வேண்டும் என்ற முன் மாதிரியை  திருக்குர்ஆன் மனித குலத்திற்குக் கற்றுக் கொடுப்பதைக் காணலாம்.  அதாவது முதல் மனிதர் ஆதம் அவர்களின் புதல்வர்களில் ஒருவர் மற்றவரைக்  கொலை செய்தபின் கொலையுண்ட உடலை என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாமல் தவித்தபோது இறைவன் காகங்களை அனுப்பி சடலங்களை புதைக்கும் வழிமுறையைக் கற்றுக் கொடுத்ததை திருக்குர்ஆன் கூறுகிறது: 

தனது சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்று அவனுக்குக் காட்ட அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியைத் தோண்டியது. “அந்தோ! இந்தக் காகத்தைப் போல் இருப்பதற்குக் கூட என்னால் இயலவில்லையே! அவ்வாறு இருந்திருந்தால் என் சகோதரரின் உடலை மறைத்திருப்பேனே” எனக் கூறினான். கவலைப்பட்டவனாக ஆனான்.(அல்குர்ஆன் 5:31)