இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 30 ஜூலை, 2018

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் ஆகஸ்ட் 2018 இதழ் மின்பதிப்பு

பொருளடக்கம் 
அற்பஜீவிக்குள் அசரவைக்கும் அற்புதங்கள் -2
உண்மைக் கடவுளை அறிய உரைகல்! -5
நாயோடு பழகுதல் நல்லதல்ல! -7
மோட்சத்திற்கு வழி ஏகஇறைக் கொள்கை மட்டுமே! -8
வீடுவரை ரகு! (தொடர்ச்சி) -10
எச்சிலும் எரிச்சலும்! -12
தூய்மை பேணுதல் ஒரு ஆன்மீகக் கடமை -13
கத்னா எனும் விருத்தசேதனம் -15
பிணவறைக்குள் (Mortuary) படிப்பினைகள்! -16
வாசகர் எண்ணம் -18
வானவர்கள் பற்றிய சில தகவல்கள் -19
திருக்குர்ஆன் கற்றுத்தரும் பிரார்த்தனைகள் -21
வானவர்களின் செயல்பாடுகள் -22
இஸ்லாமிய சகோதரர்கள் கவனத்திற்கு -23

செவ்வாய், 24 ஜூலை, 2018

நற்செய்தி மலர்ச்சரம் 1- வேதம்

வேதம் தலைப்பில் கட்டுரைகள்

எல்லோருக்கும் பொருந்தும் வேதம்.

http://quranmalar.blogspot.com/2016/10/blog-post_7.html

இறைவனின் உள்ளமையை வெளிப்படுத்தும் இறைவசனங்கள் –வீடியோ

http://quranmalar.blogspot.com/2016/09/blog-post_25.html

அன்று பெய்தது தேன்மழை!

http://quranmalar.blogspot.com/2016/06/blog-post_10.html

திருக்குர்ஆனின் ஆசிரியருக்கும் வாசகருக்கும் உள்ள வேறுபாடுகள்

http://quranmalar.blogspot.com/2016/05/blog-post_30.html

திருக்குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதா?

http://quranmalar.blogspot.com/2016/03/blog-post_15.html

ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

http://quranmalar.blogspot.com/2015/07/blog-post_25.html

திருக்குர்ஆன் இறங்கிய வரலாறு

http://quranmalar.blogspot.com/2014/05/blog-post_2608.html

திருக்குர்ஆன் பூமி தட்டையானது என்று கூறுகிறதா?
http://quranmalar.blogspot.com/2013/04/blog-post_15.html

திருக்குர்ஆன் அருளப்பட்ட விதமும் பாதுகாக்கப்படும் முறையும்

http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_835.html

அற்புதங்களுக்கெல்லாம் அற்புதம் திருக்குர்ஆன்

http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_2054.html

திருக்குர்ஆன் எப்படி வந்தது?

http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_9.html

திருக்குர்ஆனின் முக்கிய போதனைகள் என்ன?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_7104.html

முந்தைய வேதங்களில் இறை ஏகத்துவம்
http://quranmalar.blogspot.com/2012/09/blog-post_6053.html

திருக்குர்ஆன் இந்திய மண்ணில் செய்யும் புரட்சிகள்!
http://quranmalar.blogspot.com/2012/09/blog-post_17.html

திருக்குர்ஆன் சொல்வது என்ன?
http://quranmalar.blogspot.com/2012/09/blog-post_8.html

திருக்குர்ஆனை மெய்ப்படுத்தும் அறிவியல் உண்மைகள்
http://quranmalar.blogspot.com/2012/09/blog-post_5810.html

சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட வேதம் திருக்குர்ஆன்

http://quranmalar.blogspot.com/2012/09/blog-post_7.html

100% பாதுகாக்கப்படும் இறைவேதம்

http://quranmalar.blogspot.in/2012/09/100_7.html

திருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறும் பின்னணியும்.

http://quranmalar.blogspot.in/2012/09/100.html

இருட்டடிப்பால் திரிக்கப்படும் நூல்கள்!

http://quranmalar.blogspot.com/2016/04/blog-post.html

இறைவனின் ஏற்பாட்டில் குறைகாண முடியுமா?

http://quranmalar.blogspot.com/2016/06/blog-post.html

திருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நிவாரணமும்

http://quranmalar.blogspot.com/2014/03/blog-post_4553.html

தேன் உற்பத்தி என்ற இறை அற்புதம்.
http://quranmalar.blogspot.com/2014/02/blog-post_7.html
செங்கடல் பிளந்த சம்பவம் – திருக்குர்ஆன் தரும் நிரூபணம்!

 http://quranmalar.blogspot.com/2013/02/blog-post_21.html

சிந்தனைப் புரட்சியைத் தூண்டிய திருக்குர்ஆன்

http://quranmalar.blogspot.com/2012/12/blog-post.html

சனி, 21 ஜூலை, 2018

அற்பஜீவிக்குள் அசரவைக்கும் அற்புதங்கள்



கொசு... நமது பார்வையில் மிகமிக ஒரு அற்பமான ஜீவி! விலையற்ற ஒன்று. அன்றாடம் நம்மைக் கடிக்கிறது. ஒரே அடியில் அடித்துச் சட்னியாக்கி விடுகிறோம். சாம்பிராணி, புகைபோடுதல், கொசுவத்திச்சுருள், கொசு விரட்டி மாட், கொசுவடிக்க பாட், கொசுவலை என இதன் தொல்லைகளை தவிர்க்கும் முயற்சியில் அன்றாடம் நம் அறிவியலும் தொழில் நுட்பமும் வர்த்தகமும் வளர்ச்சி கண்டு வருகின்றன. மட்டுமல்ல, இந்த கொசுத்தொல்லை காரணமாக நமது ஆரோக்கியம் மற்றும் சுற்றுப்புற சூழல் விழிப்புணர்வும் நடவடிக்கைகளும் எல்லாமே வளர்ச்சி கண்டு வருகின்றன என்பதும் உண்மை.

உங்கள் கைகளுக்கிடையில் எளிதாக நீங்கள் அடித்துக் கொல்லும் இந்த அற்ப ஜீவி எவ்வளவு அரிய அற்புதங்களை, அபாரமான தொழில் நுட்பங்களைத் தாங்கி நிற்கும் படைப்பினம் என்பதை எப்போதேனும் நீங்கள் சிந்தித்ததுண்டா? உங்களைப் படைத்தவனின் படைப்பாற்றலை உங்களுக்கு உணர்த்தத்தான் உங்களை நோக்கி அது வந்தது என்று நீங்கள் சிந்தித்ததுண்டா?
அற்பஜீவிக்குள் அற்புதங்கள்:- அதன் தும்பிக்கையில் ஒன்றல்ல... ஆறு ஊசிகள்!
- அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அலுவல்கள்..
- அவற்றில் ஒன்றின் வழியாகத்தான் இரத்தம் உறிஞ்சப்படுகிறது...
இரத்தத்தின் பிசுபிசுப்பு (viscosity) நாம் அறிந்ததே. அது எவ்வாறு அந்த ஊசியில் அமைந்துள்ள நுண் குழாயின் மூலம் உறிஞ்சப்படுகிறது? -
இதை சிந்தித்தாலே ஆச்சரியத்தின் விளிம்புக்கு சென்று விடுகிறோம்.
இவைமட்டுமா அந்த அற்பஜீவிக்குள் அமைந்துள்ள அற்புதங்கள்? மேலே படியுங்கள்...
- அதற்கு அதன் தலையில் 100 கண்கள்.
- அதன் வாயில் 48 பற்கள்.
- அதன் உடலில் மாறுபட்ட மூன்று இதயங்கள்.
- ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இறக்கைகள்.
- எக்ஸ்ரே கருவி போன்ற நுண்ணிய தர்மோமீட்டர் பொருத்தப்பட்ட சிவப்பு நிறத்தில் ஒரு நுண்ணிய கருவி அதனுள் படைக்கப்பட்டுள்ளது. அதன் வேலை அது மனித உடலில் இருளில் வந்து அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சும் போது யாரும் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு மனிதனுடைய நிறத்திற்கேற்றவாறு தன் நிறத்தை மாற்றிக்கொள்வது!.
- மனிதனின் இரத்த வாசனையை 60 கி.மீட்டர் தொலைவிற்கு அப்பாலிருந்து நுகர்ந்து தெரிந்து கொள்ளும் அற்புத ஆற்றலை அது பெற்றிருக்கிறது.
- மனித இரத்தம் குடித்த கொசு நமது கைகளில் அடிபடாமல் தப்பிப் பறக்கும் மர்மம்:
கொசு மனிதனின் இரத்தம் குடித்தபின் அதன் எடை இரண்டு அல்லது மூலம் மடங்கு அதிகமாகிவிடும்.இந்த அதிக எடையை தூக்கிகொண்டு பறப்பதற்கு பிற பூச்சி,மற்றும் ஈக்கள் தங்களின் கால்களால் உந்தித்தள்ளிய பிறகே சிறகை அடிக்க ஆரம்பிக்கும். ஆனால் கொசு, தன் நீண்ட கால்களால் தோல் பரப்பை அழுத்தாமல் தங்களின் சிறகுகளை அதி வேகத்தில் அடித்து ஹெலிகாப்டர் போன்று அலக்காக எழும்புகின்றன. ஆம், அது அதி நவீன தொழில் நுட்பம்... யாருக்கு? நமக்கு! ஆனால் கொசுவைப் பொறுத்தவை ஆதிகால தொழில் நுட்பம்!
பிளாஸ்மோடியம்” (Plasmodium)
- இவை எல்லாவற்றிற்கும் மேலாக அதன் முதுகின் மேல் கண்களால் பார்க்கமுடீயாத அளவுக்கு மிகச்சிறிய ஒரு செல் உயிரியாகிய “பிளாஸ்மோடியம்” (Plasmodium.) என்ற ஒட்டுண்ணி உள்ளது. மனிதர்களுக்கு நோயை பரப்புவது அற்பமான கொசுவும் அதைவிட அற்பமாக கொசுவிலேயே இருக்கும் பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணி என்ற உயிரியுமே!
அது இறைவனின் திருமறையின் அற்புதச்செய்தியை முன்னறிவிப்பதாக உள்ளது.
= நிச்சயமாக, அல்லாஹ் கொசுவையோ அதற்கு மீதுள்ளதையோ உவமானமாகக் காட்டுவதற்கு வெட்கப்படுவதில்லை. நம்பிக்கை கொண்டவர்களோ நிச்சயமாகத் தம் இறைவனிடமிருந்து வந்த சத்தியமே இது என்று புரிந்து கொள்வார்கள். ஆனால், நிராகரிப்போரோ “இத்தகைய (அற்ப) உதாரணங்களைக் கொண்டு அல்லாஹ் எதை நாடுகின்றான்?” எனக் கூறுவார்கள். "(திருக்குர்ஆன் 2:26)
 இந்த வசனத்தில் கூறப்பட்ட "ஃ பவ்கஹா" (மேலுள்ளது) என்ற பதம் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று. கொசுவை விட அற்பமானது இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு செல் உயிரியாகிய “பிளாஸ்மோடியம்” எனும் ஒட்டுண்ணி(parasite). மலேரியா, டெங்கு போன்ற கொடிய நோய்கள் கொசுவின் மூலமாகப் பரவுவதை நாம் அறிவோம். அற்பமான கொசுவுக்குள் அடங்கியுள்ள நுட்பங்களை எலேக்ட்ரோன் மைக்ரோஸ்கோப் போன்ற அதிநவீன கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்தான் நாம் அறிய வருகிறோம். அதேபோல காலம் செல்லசெல்லத்தான் இந்த ஒட்டுண்ணிகளின் படைப்பு ரகசியங்களை நாம் அறியவருவோம். நமது குறுகிய அறிவுக்கு இன்னும் அவை எட்டவில்லை என்பதற்காக அந்த படைப்பினங்களை உதாரணமாகக் கூற இறைவன் வெட்கப்பட வேண்டுமா என்கிறான். நீங்கள் அந்தப் படைப்பு இரகசியங்கள் இன்னும் அறியாமல் இருப்பது எனக்கு ஒரு பொருட்டல்ல என்பதைப்போல் உள்ளது இந்த வசனம்.

இந்த இறை வசனம் எப்போது அருளப்பட்டது தெரியுமா? இணைவைப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக இறைவன் 22:73-வது வசனத்தில் ஈயையும், 29:41-வது வசனத்தில் சிலந்தியையும் உவமையாகக் கூறுகிறான். இதைக் கேட்ட இணைவைப்பாளர்கள் ஈயும், சிலந்தியும் அல்லாஹ்வின் வேதத்தில் கூறப்படுகின்றனவா? என்று இளக்காரமாகக் கேட்டனர்.அப்போது தான் இறைவன் இவ்வசனங்களை அருளி இப்படிக் கூறினான்.
அதாவது ஈயானாலும் சிலந்தியானாலும் கொசுவானாலும் உங்களுக்கு அற்பமானவையாக இருக்கலாம். அவை தாங்கி நிற்கும் அற்புதங்களும் தொழில்நுட்பங்களும் அற்பமானவை அல்ல. மனிதகுலம் அனைத்தும் சேர்ந்து நூற்றாண்டுகள் செலவிட்டாலும் அவைபோன்ற அற்புதங்களை உங்களால் உண்டாக்க முடியாது. அவை தாங்கிநிற்கும் தொழில் நுட்பங்களின் அருகில் கூட நீங்கள் நெருங்கமுடியாது. உங்கள் இளக்காரம் அறியாமையின் அப்பட்டமான வெளிப்பாடு அல்லாமல் வேறு என்ன என்பதைப் போல் அமைந்துள்ளது என்கிறது இந்த சவுக்கடி வசனம்!
-------------

இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?

https://www.quranmalar.com/2012/10/blog-post_25.html
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?
https://www.quranmalar.com/2012/11/blog-post_6.html

புதன், 11 ஜூலை, 2018

திருக்குர்ஆன் மருத்துவம் - 10 உண்மைகள்


AAFP President: Prepare Your Office for Novel Coronavirus  நமக்கோ குழந்தைகளுக்கோ நமக்கு வேண்டியவர்களுக்கோ திடீரென நோய் வந்து விட்டால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. நிம்மதியை இழந்து விடுகிறோம். சில அடிப்படையான விஷயங்களைப் புரிந்து கொண்டு அவற்றை மனதில் இருத்தி அதன்படி செயல்பட்டால் நோயும் குணமாகும், அந்த நோய் கொண்டுவரும் உடல்ரீதியான, மனரீதியான, மற்றும் பொருள் ரீதியான இழப்புகளில் இருந்தும் நாம் நம்மை சுதாரித்துக் கொள்ளலாம்.
திருக்குர்ஆன் ஒளியில் நோய் நிவாரணம்: 
இறைவனின் இறுதிவேதமான திருக்குர்ஆன் நோயின்போது நாம் கட்டாயம் மனதில் கொள்ள வேண்டிய கீழ்கண்ட உண்மைகளை நினைவூட்டுகிறது:
1.      1. நோய் ஒரு எச்சரிக்கை
மனிதன் தனது அவசரமான வாழ்க்கை ஓட்டத்தின் இடையே அவனைப் படைத்து பரிபாலித்து வரும்  இறைவனைப் பற்றியும் மனித வாழ்க்கையின் உண்மை நோக்கத்தைப் பற்றியும் சிந்திக்க மறந்து விடுகிறான். அப்படிப்பட்ட மனிதனை நிதானப்படுத்த இறைவன் விடுக்கும் எச்சரிக்கையே நோய் என்பது!
2.  படைத்தவனை அறிவோம்:
நோய் வரும்போது நாம் மிகமிக முக்கியமாக நம்மைப் படைத்தவன் எப்படிப்பட்டவன் என்பதை அறிந்து அவன்பால் மீள வேண்டும். திருக்குர்ஆனில் இறைவன் தன்னைப் பற்றிக் கூறுகிறான் :
= நபியே நீர் கூறுவீராக!  அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.  (திருக்குர்ஆன் 112: 1-4)
(அல்லாஹ் என்ற வார்த்தையின் பொருள் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்என்பதாகும்.)
அதாவது இறைவன் அவனது படைப்பினங்களைப் போலல்லாது ஏகனாக தனித்தவனாக, எதையும் சார்ந்து இராதவனாக, பிறப்பு, இறப்பு, ஆதி, அந்தம், பிள்ளைப்பேறு போன்ற அனைத்துக்கும் அப்பாற்பட்டவனாக, ஈடிணையற்றவனாக, தனக்குவமை இல்லாதவனாக உள்ளான்.
3. இறைவனிடமே நேரடியாக பிரார்த்திக்க வேண்டும்
= (நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும் என்னையே விசுவாசம் கொள்ளட்டும். (திருக்குர்ஆன் 2:186)
இறைவனின் தன்மைகளை மேற்கண்டவாறு புரிந்துகொண்டு இடைத்தரகர்களுக்கோ மூடநம்பிக்கைகளுக்கோ வீண் சடங்கு சம்பிரதாயங்களுக்கோ இடம் கொடாமல்  அவனை நேரடியாக வணங்கவும் பிரார்த்திக்கவும் வேண்டும் என்று கற்பிக்கிறது திருக்குர்ஆன். நமக்கு வாய்த்துள்ள கஷ்டங்களையும் குறைகளையும் நீக்குமாறு அவனிடமே முறையிட வேண்டும். நோயிலிருந்து விரைவில் நிவாரணம் நல்குமாறு கோர வேண்டும்.
4. படைத்தவன் அல்லாதவை பயன் தராது
= 'அவனே என்னைப் படைத்தான்;. பின்னும் அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான். அவனே எனக்கு உணவளிக்கின்றான்; அவனே என் தாகம் தீர்க்கிறான். நான் நோயுற்ற காலத்தில் அவனே என்னைக் குணப்படுத்துகிறான். மேலும் அவனே என்னை மரிக்கச் செய்கிறான்.; பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான்.' (குர்ஆன் 26:78-81)

படைத்தவனைத்தவிர மற்றவை அனைத்தும் படைப்பினங்களே. ஒப்புவமை இல்லாத இறைவனை விட்டு விட்டு அற்பமான அவனது படைப்பிங்களை கடவுளாக பாவிப்பது அவனை சிறுமைப்படுத்துவதும் பாவமும் ஆகும். அவற்றை வணங்குவதும் அவைகளிடம் பிரார்த்திப்பதும் நமக்கு எந்த பயனையும் தராது. அதனால் நமது நோயும் குணமாகாது மாறாக இறைவனது கோபத்தையே அது பெற்றுத்தரும். எனவே நோய் நிவாரணம் பெற நம்மைப் படைத்தவனிடமே உதவி தேட வேண்டும்.
5. வாழ்க்கை ஒரு பரீட்சை என்ற உண்மை  
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான்உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;  எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;.இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
அதாவது இந்த தற்காலிக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகம் அதற்கான பரீட்சைக் கூடமாகவும் படைக்கப்பட்டுள்ளது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.  இவ்வுலகம் ஒருநாள் முழுமையாக அழிக்கப்பட்டு மீண்டும் இறைவனின் கட்டளை வரும்போது அனைத்து மனிதர்களும் இறுதி விசாரணைக்காக உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். புண்ணியவான்களுக்கு அளவிலா இன்பங்கள் நிறைந்த சொர்க்கமும் பாவிகளுக்கு கடும் வேதனைகள் நிறைந்த நரகமும் நிரந்தர இருப்பிடங்களாக வழங்கப்படும். தாயின் கருவறையில் அற்பமான இந்திரியத் துளியில் இருந்து உருவாக்கி நம்மை வடிவமைத்து பரிபாலித்து வரும் இறைவனே நம்மை மறுமையில் மீண்டும் உருவாக்கி நம் செயல்பாடுகளை விசாரிக்க இருக்கிறான் என்பதை சிந்திப்போர் அறியலாம். 

6. சொர்க்கமும் நரகமுமே நம் நிரந்தர இருப்பிடங்கள்
சொர்க்கம் என்பது ஓர் சாந்தியும் சமாதனமுமான இருப்பிடம். அங்கு கவலை, தீமை, பகை, சோர்வு, நோய், முதுமை, பஞ்சம், போன்ற எதற்குமே இடம் இல்லை. திகட்டாத இன்பங்களில் ஊறித் திளைக்கும் இடம் அது. தோட்டங்களும் பூங்காவனங்களும் மாசற்ற நீரூற்றுகளும் உயர் மாளிகைகளும் சுவைமிக்க கனிகளும் உணவுகளும் பானங்களும் அளவின்றி அனுபவிக்க இறைவன் ஏற்பாடு செய்த இடம் சொர்க்கம். அதேவேளையில் இறைவனின் அருட்கொடைகளுக்கு நன்றி மறந்து தான்தோன்றித்தனமாக வாழ்ந்தோருக்காக நரகமும் உள்ளது.  கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் நடுவே மரணமற்ற வாழ்வும் அகோர பசியும் தாகமும் அதைத் தீர்க்க உணவாக முட்செடிகளும் கொதிநிலை அடைந்த பானங்களும் நரகத்தில் உண்டு.
சொர்க்கம் மற்றும் நரகம் பற்றிய  பல வருணனைகள் திருக்குர்ஆனில் காணப்படுகின்றன.  உதாரணமாக:

= பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும்தன் சுவை மாறாத பாலாறுகளும்அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும்தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன. இன்னும்அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும்தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்து,கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா? (திருக்குர்ஆன் 47:15)
= நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.  வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக!  அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்!...... கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.! (திருக்குர்ஆன் 78:21) 


7. பரீட்சை  வாழ்க்கையின் பாகமே நோய்!
=   'நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது  'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்.  நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீதுதான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன. இன்னும் இவர்கள்தாம் நேர்வழியை அடைந்தவர்கள்(திருக்குர்ஆன்  2:155,156)
அதாவது வாழ்வில் நோய் உட்பட சோதனைகள் வருவது சகஜம் என்பதை அறியவேண்டும். அப்போதெல்லாம் நாம் பதற்றம் அடையாமல் மறுமையை நினைத்து பொறுமையை மேற்கொள்ள வேண்டும். நோய் வரும்போது நம் இரட்சகன் நம்மோடு உள்ளான் என்பதை நினைவு கூர்ந்து “நாம் இறைவனுக்கு உரியவர்கள், அவனிடமே திரும்பிச்செல்ல உள்ளவர்கள்” என்ற கூறுவது மாபெரும் ஆறுதல் அளிக்கும் செயலாகும். அது ஆரோக்கியம் முன்பிருந்ததைவிட செம்மைப் படவும் வழிவகை செய்கிறது! நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
=  சோதனைக்கு உள்ளான ஒருவர் இறைவன் இட்ட  கட்டளைப்படி இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நிச்சயமாக நாம் இறைவனுக்கு உரியவர்கள், அவனிடமே திரும்பிச்செல்ல உள்ளவர்கள்) என்று கூறியபின் இறைவா, நான் படும் துன்பத்திற்கு கூலி வழங்குவாயாக, நான் இழந்ததை விட மேலானதைக் கொண்டு இதற்கு பகரம் வழங்குவாயாக!என்று பிரார்த்தித்தால் அவருக்கு இறைவன் மேலானதை வழங்குவான்” (நூல்: முஸ்லிம்)


8. பாவநிவாரணம் பெறுதல்
நோய் நிவாரணத்துக்காக பிரார்த்திப்பதற்க்கு முன்பு நமது பாவங்களில் இருந்து மீளவேண்டும். இறைவனிடம் பாவமன்னிப்பு கோரவேண்டும். பிரார்த்தனைகள் ஏற்கப்படுவதற்கு  நமது உணவும் உடையும் உடைமைகளும் தூய்மையான முறையில் சம்பாதிக்கப் பட்டதாக இருக்க வேண்டும்.
9. மருத்துவம் மேற்கொள்ள வேண்டும்:
 மேற்கண்ட வாழ்வின் அடிப்படை உண்மைகளை நினைத்து மனதை உறுதிப்படுத்தி மேற்கொண்டு நோய்க்கான சிகிச்சைகளை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும். நோயை வாழ்வின் சோதனையாக ஏற்படுத்திய இறைவனே அதற்கு மருத்துவம் மேற்கொள்ளவும் பணிக்கிறான்.
= மருத்துவம் செய்யுங்கள்! ஏனெனில் மரணம் என்ற நோயைத் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் அல்லாஹ் மருந்தை உருவாக்கியுள்ளான் என்று நபி(ஸல்) கூறினார்கள். (நூல்: அபூதாவூத்)

10.   திருக்குர்ஆனும் நோய்நிவாரணியே 
நோயின்போது மருத்துவம் பார்ப்பதோடு திருக்குர்ஆன் வசனங்களையும் ஓதிப் பார்க்கலாம். அவற்றிலும் நிவாரணம் உண்டு.  அதை இறைவனே கூறுகிறான்:
இது (திருக்குர்ஆன்) நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியாகவும், நிவாரணியகவும் இருக்கும் என்று (நபியே!) நீர் கூறுவீராக…” (திருக்குர்ஆன் 41:44)
திருக்குர்ஆனின் ஆரம்ப அத்தியாயத்தை பொருளுணர்ந்து ஓதி நோய்வாய்ப்பட்டவர் மேல் ஓதி ஊதலாம். படைத்தவன் மட்டுமே வணக்கத்திற்கு உரியவன் என்ற நம்பிக்கையோடு ஒதுவோருக்கு இது பலனளிக்கும்:
1. (B)பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் 2. அல்ஹம்து லில்லாஹி ர(B)ப்பில் ஆலமீன்.3. அர்ரஹ்மானிர் ரஹீம்.4. மாலிகி யவ்மித் தீன் 5. இய்யாக்க நஉ(B)புது வஇய்யாக்க நஸ்தஈன். 6. இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்த்தகீம் 7. ஸிராத்தல்லதீன அன் அம்த அலைஹீம் அய்ரில் மக்லூ(B)பி அலைஹீம் வலழ்ழால்லீன் ஆமீன்
பொருள்: (1. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் (இதை ஒதுகிறேன் 2. அனைத்துப் புகழும் அனைத்து உலகையும் படைத்து பரிபாலித்து வரும்  அல்லாஹ்வுக்கே உரியது. 3. அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன். 4. இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதி. 5. உன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். 6. எங்களை நேரான வழியில் நடத்துவாயாக 7. நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்களின் வழியில் நடத்துவாயாக,. அது உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியும் அல்ல. ஆமீன் - எங்கள் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக)
மறைவான தீங்குகளில் இருந்து பாதுகாக்கும் வசனங்கள்
 (B)பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் 1. குல் அஊது (B)பி ர(B)ப்பில் (F)பலக். 2.மின் ஷர்ரி மா ஹலக் 3. வமின் ஷர்ரி ஆசிகின் இதா வகப். 4 வமின் ஷர்ரின் ன(F)பாசாத்தி (F)பில் உகத் 5. வமின் ஷர்ரி ஹாசிதின் இதா ஹசத். (திருக்குர்ஆன்  அத்தியாயம் 113
பொருள் :அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் (இதை ஒதுகிறேன்) 1. சொல்வீராக: “விடியலின் இறைவனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். 2. அவன் படைத்த வற்றின் தீங்குகளில் இருந்து. 3. இருள் பரவிய நேரத்தில் அந்த இருளின் தீங்கை விட்டு. 4. முடிச்சுக்களில் மந்திரித்து ஊதும பெண்களின் தீங்கை விட்டும். 5. பொறாமைக்காரன் பொறாமை கொண்ட நேரத்தில் அவனது தீங்கை விட்டும் (நான் காவல் தேடுகிறேன்)
    (B)பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் 1. குல் அஊது (B)பி ர(B)ப்பின் நாஸ். 2. மாலிக்கின் நாஸ். 3. இலாஹின் நாஸ். 4. மின் ஷர்ரில் வஸ்வாஸில் ஹன்னாஸ் 5. அல்லதீ யுவஸ்விஸு (F)பீ சுதூரின்னாஸ் 6. மினல் ஜின்னத்தி வன்னாஸ் (திருக்குர்ஆன்  அத்தியாயம் 114)
பொருள் : அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் (இதை ஒதுகிறேன்) 1. சொல்வீராக: மனிதர்களின் இறைவனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன், 2. அவன் மனிதர்களின் அரசன். 3. மனிதர்களின் வணக்கத்துக்கு உரியவன். 4. பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (நான் காவல் தேடுகிறேன்.) 5. அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். 6. (இத்தகையோர்) ஜின் மற்றும் மனித வர்க்கங்களில் இருக்கின்றனர்.

ஆக, படைத்தவன் மட்டுமே நாம் வணங்குவதற்குத் தகுதியான இறைவன் என்று உறுதிபூண்டு அவனை கலப்படமற்ற முறையில் பிரார்த்திப்போருக்கு நோய்நிவாரணம் எளிதாகிறது... மன உளைச்சல்களின் இருந்து பாதுகாப்பு பெறுகிறார்கள்... மறுமையில் சொர்க்கத்தையும் பரிசாகப் பெறுகிறார்கள்! சோதனைகளை சாதனைகளாக மாற்றுவது என்பது இதுதான்!
------------------------- 
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?


திங்கள், 9 ஜூலை, 2018

இருளில் நிலவாகப் பிறந்தார் நபி!

An artist impression of Masjid al-Nabawi during the Ottoman period ...


மக்கா நகரம் ... அறியாமை இருளில் தத்தளித்துக்கொண்டிருந்த வேளை அது...
- அங்கு வாழ்ந்த மக்கள் பலவிதமான  மூடநம்பிக்கைகளிலும் மூடப்பழக்கவழக்கங்களிலும் மூழ்கிக்கிடந்தார்கள்.
= அதிகாரம் படைத்தவர்களும் பலம் வாய்ந்தவர்களும் இடைத்தரகர்களும் சேர்ந்து கடவுளின் பெயரால் மக்களை அடிமைப் படுத்தியும் கொடுமைப் படுத்தியும் வந்தனர்.
= குலவேற்றுமையும் இனவேற்றுமையும் ஆழமாய் வேரூன்றியிருந்த காரணத்தால் அவர்களுக்குள்ளே சண்டைகளுக்கும் கலகங்களுக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது.  
= பெண்ணடிமைத்தனமும் மூடநம்பிக்கைகளும் காரணமாக அவர்கள் பெண்குழந்தைகள் பிறந்தாலே இழிவு என்று கருதி அவர்களை உயிரோடு புதைக்கவும் செய்து வந்தார்கள்.
= இன்னும் இவைபோன்ற பல மனிதஉரிமை மீறல்களும் அனாச்சாரங்களும் தலைவிரித்தாடிக் கொண்டிருந்தன.
---------------- 
அங்குதான் அறியாமை இருளகற்றி அறிவொளி வீசி - மக்கத்து மக்களை மட்டுமல்ல - முழு உலகையும் மீட்டெடுக்க வந்த இறை அருட்கொடையாம் அண்ணல் நபிகளார் பிறந்தார்கள். பிறக்கும் முன்னரே தந்தையையும் பிறந்த பின்பு ஆறாம் வயதில் தாயையும் இழந்து அனாதையாகவே வாழ்வைத் துவங்கினார்கள் முஹம்மது நபிகளார். 
தமது நாற்பது வயது வரை  சாதாரண மனிதராகவும்ஒருவியாபாரியாகவும்தான் இருந்தார்கள் ஆனால் தாம் வாழ்ந்த மக்களிடையே உண்மைக்கும் நேர்மைக்கும் நாணயத்திற்கும் பெயர்பெற்றவர்களாக இருந்தார்கள். மக்கள் அவரை அல் அமீன்’ (நம்பிக்கைக்கு உரியவர்)) என்ற பட்டப்பெயர் கொண்டு மதிப்போடு அழைத்தார்கள். 

 ஆனால் தன்னைச் சுற்றி மேற்கூறப்பட்ட அனாச்சாரங்களும் அடக்குமுறைகளும் அநியாயங்களும் நடந்துகொண்டிருக்க அவரால் அமைதிகாக்க முடியவில்லை.  இவற்றுக்குத் தீர்வு காண வேண்டும் என்று சதா ஏங்கிக்கொண்டிருந்தார். அப்படிப்பட்ட  வேளையில்தான் முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் நபிகளாருக்கு இறைவன் புறத்திலிருந்து வேதவசனங்களும் இறைகட்டளைகளும் வழிகாட்டுதல்களும் வரத் துவங்கின. 
சத்தியப் பிரச்சாரத்தின் துவக்கம்  
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாம் வயதில் தம்மை இறைவனின் தூதர் என்று மக்களிடையே பிரகடனம் செய்து இறைவன் புறத்திலிருந்து தான் பெறும் செய்திகளையும் எச்சரிக்கைகளையும் மக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள்.
= இந்த உலகம் இறைவனால் படைக்கப்பட்டது. இங்கு வாழும் மனிதர்கள் யாவரும் இறைவனுக்கு கீழ்படிந்து வாழக் கடமைப் பட்டுள்ளார்கள் . அவ்வாறு வாழ்ந்தால் மட்டுமே இவ்வுலகில் நீதியும் அமைதியும் ஏற்படும். மறுமையிலும் நீங்கள் மோட்சத்தை அடைய முடியும்.
= ஒருநாள் இவ்வுலகம் முற்றாக அழிக்கப்படும். மீண்டும் இறைவனிடமிருந்து கட்டளை பிறப்பிக்கப் படும்போது இவ்வுலகின் மீது வாழ்ந்து மறைந்த அனைத்து மனிதர்களும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவர். அன்று ஒவ்வொரு மனிதர்களும் இப்பூமியின் மேல் செய்த ஒவ்வொரு பாவமும் புண்ணியமும் எடுத்துக்காட்டப்பட்டு. விசாரிக்கப் படுவார்கள். விசாரணைக்குப் பிறகு புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் பாவிகளுக்கு நரகமும் விதிக்கப் படும். எனவே இறைவனின் கட்டளைகளை ஏற்று அவன் ஏவியவற்றைச் செய்யுங்கள். தடுத்தவற்றில் இருந்து விலகிக் கொள்ளுங்கள்.
= இறைவனின் கட்டளைகளில் முக்கியமானது அந்த ஏக இறைவன் மட்டுமே வணங்குவதற்குத் தகுதியானவன் என்று ஏற்றுக் கொள்வதாகும். அவனை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக வணங்க வேண்டும். அவன் அல்லாத எதையுமே கடவுள் என்று சொல்வதோ வணங்குவதோ அறவே கூடாது. அவனுக்கு பதிலாக சிலைகளையோ உருவங்களையோ வணங்குதல் பெரும் பாவமாகும்.
= மனிதர்கள் அனைவரும் சீப்பின் பற்களைப் போல் சமமானவார்களே. இனத்தாலோ,குலத்தாலோநிறத்தாலோமொழியாலோ யாரும் யாரையும் விட உயர்ந்தவர்கள் அல்ல.   
=மேலும் கொலைகொள்ளைவட்டிசிசுக்கொலைகள், சூதாட்டம்
விபச்சாரம்போதைப்பொருட்கள்பொய்பித்தலாட்டம்,  மோசடிஏமாற்றுதல்போன்ற   தீமைகள் இறைவனிடம் பாவங்களாக பதிவு செய்யப்படுகின்றன. இவற்றுக்கான விசாரணையும் தண்டனைகளும் இறைவனிடம் உண்டு. எனவே மனிதர்கள் இவற்றில் விலகி இருக்க வேண்டும்'
இன்னும் இவைபோன்று தான் இறைவனிடமிருந்து பெறும் செய்திகளை மக்கள் முன் எடுத்துரைத்து சத்தியப் பிரச்சாரத்தை துவங்கினார் நபிகள் நாயகம் (ஸல்).  
ஏற்றோரும் மறுத்தோரும் 
 ஆம், நபிகள் நாயகம் இந்த ஏக இறைக்கொள்கையைச் சொல்லச் சொல்ல ஆரம்பத்தில் ஒருசில பலவீனமானவர்களும் ஒடுக்கப்பட்டவர்களும்தான் இக்கொள்கையை ஏற்றுக் கொண்டார்கள். நாளடைவில் மற்றவர்களையும் கவர ஆரம்பித்தது. ஆனால் மூதாதையர்கள் வளர்த்த மூடப் பழக்கவழக்கங்களில் மூழ்கிப் போயிருந்த பெரும்பான்மை மக்களோ இக்கொள்கைக்கு எதிரிகளாக மாறினார்கள். இறைவனை நேரடியாக வணங்க முடியும் என்பதாலும் சக மனிதன் சமமே சகோதரனே என்பதாலும் இடைத்தரகர்களும் ஆதிக்க சக்தியினரும் சேர்ந்து இக்கொள்கை பரவாமல் தடுக்க முழுமூச்சோடு உழைத்தார்கள். 
அன்றுவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை உண்மையாளர், நம்பிக்கைக்கு உரியவர் (அல் அமீன்) என்றெல்லாம் பாராட்டிய மக்கள் அவருக்குப் பைத்தியம் என்று பட்டம் சூட்டினார்கள் அவர்களையும், அவர்களது கொள்கையை ஏற்றுக் கொண்ட வர்களையும் சொல்லொனாத துன்புறுத்தல்களுக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளாக்கினார்கள்.
சத்தியவான்கள் சந்தித்த சோதனைகள்
 உதாரணத்திற்காக ஓருசில சம்பவங்களை மட்டும் இங்கு காண்போம்:
= நபிகளார் பிரச்சாரம் செய்யும்போது அவரது முகத்தில் மண்ணை வாரித் தூவினார்கள். பைத்தியக்காரர்’ ‘சூனியக்காரர்” என்று வசை பாடினார்கள்.
= கஅபா ஆலயத்தின் அருகே அவர் தன் நெற்றியை தரையில் வைத்துத் தொழுது கொண்டு இருக்கும்போது அவரது தலைமீது அறுக்கப்பட்ட ஒட்டகத்தின் சாணத்தையும் இரத்தத்தையும் கழிவுப் பொருட்களையும் கொண்டுவந்து கொட்டி அவர் தம் தலையைத் தூக்க இயலாமல் தத்தளிப்பது கண்டு எள்ளி நகையாடினர்.
= அவர் நடக்கும் பாதையில் முட்களைப் பரப்பிவைத்தார்கள். வீட்டிற்கு முன் கழிவுப் பொருட்களையும் குப்பைகளையும் கொட்டி வைத்தார்கள்.
= தாயிஃப் என்ற இடத்தில் அவர் பிரச்சாரம் செய்யும் வேளை சிறுவர்களை ஏவிவிட்டு இரத்தம் சிந்த கல்லால் அடித்தார்கள்.
  இக்கொள்கையை ஏற்றுக் கொண்ட நலிந்தோர்களையும் அடிமைகளையும் கொன்று குவித்தார்கள். மூதாதையர்களின் மதங்களையும் கடவுளர்களையும் மதிக்காதவர்களுக்கு இதுதான் கதி என்று மக்களை அச்சுறுத்தினார்கள்.
= ஏக இறைவன் மட்டுமே வணக்கத்திற்கு உரியவன். அவனைத் தவிர எதுவும் வணக்கத்திற்கு உரியவை அல்ல (அரபியில் லா இலாஹ இல்லல்லாஹ்) என்று கூறியமைக்காக பகல் முழுக்க பாலைவனத்து சுடுமணலில் வெற்றுமேனியில் கிடத்தி பாறாங்கற்களை ஏற்றினார்கள்.
= தண்ணீர் தொட்டிமுன் முழங்காலிட வைத்து தலையை நீரில் அழுத்தி மூச்சு முட்ட வைத்து சிலைவழிபாட்டுக்குத் திரும்புமாறு பணித்தார்கள்.
= பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பிகளால் உடலில் சூடிட்டு தாய்மதம் திரும்ப வற்புறுத்தினார்கள்.
= இன்னும் இவைபோன்ற பல்வேறுவகையான சித்திரவதைகளும் ஊரெங்கும் அரங்கேறிக் கொண்டு இருந்தன.
மனமாற்றமும் குணமாற்றமுமே இலக்கு:  
மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மைபயக்கக் கூடிய இஸ்லாம் என்ற ஒரு அழகிய சீர்திருத்தக் கொள்கையை முன்வைத்து அதன்பால் அழைத்ததற்காகத்தான் நபிகளார் மீதும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோர் மீதும் பயங்கரவாத அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
ஆயினும் தன்னை மக்கள் தாக்கியபோதும் நபிகளார் பொறுமையுடன் தாங்கிக் கொண்டார்கள். தன் சகாக்கள் தாக்கப் பட்டபோதும் பொறுமையை மேற்கொள்ளுமாறு பணித்தார்கள். ஏனெனில் இங்கு தாக்குபவர்கள் நமக்கு எதிரிகளே அல்ல. அவர்களைப் பீடித்துள்ள ஷைத்தான் தான் நமக்கு எதிரி. பொறுமை மூலமும் விவேகத்தைக் கைக்கொள்வது மூலமும்தான்  இம்மக்களைத் திருத்தியெடுத்து நேர்வழிக்குக் கொண்டுவர முடியும் என்பதை நன்றாக உணர்ந்திருந்தார்கள் அண்ணல் நபிகளார். அதில் வெற்றியும் கண்டார்கள். உலகெங்கும் மக்களின் இதயங்களை வென்றார்கள்.. நில்லாமல் வென்றுகொண்டே இருக்கிறார்கள்..
 நன்மையும்தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும் உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார். (திருக்குர்ஆன் 41 : 34)


= “அவர்கள் சகித்துக் கொண்டதாலும்நன்மையின் மூலம் தீமையைத் தடுத்ததாலும்அவர்களுக்கு நாம் வழங்கியதை (நல்வழியில்) செலவிட்டதாலும் அவர்களுக்கு இரண்டு தடவை அவர்களின் கூலிகள் வழங்கப்படும்.  (திருக்குர்ஆன் 28 :54)
------------------- 
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
https://www.quranmalar.com/2015/06/blog-post_11.html
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?