இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 8 ஏப்ரல், 2026

இளமையை எவ்வாறு கழித்தாய்?

https://www.facebook.com/reel/3831557226937264


ஒரு சமூகத்தின் அல்லது நாட்டின் ஜீவ நாடியாகவும் நிகரற்ற, மகத்தான வளமாகவும் அதன் உயிரோட்டமுள்ள ஓர் ஆக்க சக்தியாகவும் விளங்குபவர்கள்
  இளைஞர்கள் . அவர்களின் ஒழுக்கத் தரத்தைப் பொறுத்துதான் அந்த சமூகம் உயர்ந்த அல்லது உன்னத சமுதாயமாக வளர்ச்சி பெறுகிறது. 

இளமைப் பருவம் என்பது தனிமனித ஆளுமை வளர்ச்சிப் படியில் (Development of human personality) மிக முக்கிய பருவமாகவும், படித்தரமாகவும் அமைந்து காணப்படுகிறது. உடலாரோக்கியமும் உணர்ச்சி உத்வேகமும், துடிதுடிப்பும் அதிகமாக அமையப் பெறும் இப்பருவத்தில், ஒழுக்க ரீதியான பக்குவப்படுத்தப்படல் மிக அவசியமாகும். உடல் வலிமை மிக்க இப்பருவத்தில் இளைஞர்களின் ஆற்றல்களும், ஆவல்களும், வேட்கைகளும், உணர்வுகளும் சரியான முறையில் வழிநடத்தப்படல் வேண்டும். 
அதேவேளையில் இதில் கவனக்குறைவோ அலட்சியமோ நிகழ்ந்தால்  அந்த இளைஞர்களின் ஆற்றல்களும், திறமைகளும் அழிவு சக்திகளாக மாற்றப்படும். அவர்கள் மூளைச் சலவைக்கு உட்படுத்தப்பட்டு முழு சமூகத்திற்கும் நாட்டுக்கும் மட்டுமல்ல, அதுவே முழு மனித இனத்திற்கும் கூட அழிவையும், நாசத்தையும் விளைவித்து விடும்.
இன்று, உலகெங்கும் பரவலாகக் காணப்படும் ஒழுக்கக் கேடான நடவiடிக்கைகள், பாலியல் வன் கொடுமைகள், மது மற்றும் போதைபொருள் புழக்கங்கள், வன்முறை வெறியாட்டங்கள், கொலை, கொள்ளைச் சம்பவங்கள் போன்ற அனைத்தும் இளைஞர்களை மையமாகக் கொண்டே நிகழ்கின்றன. இவ்வாறு சமூகத்தின் ஆக்க சக்தியாக திகழ வேண்டிய இளைஞர்கள், அதன் அழிவு சக்தியாக மாறுவதற்குக் காரணம் அவர்களின் ஒழுக்கம் சார்ந்த விடயங்கள் பற்றிய அலட்சியமே. 

இறையச்சம் விதைப்போம்!
இந்த இளமைப்பருவம் பயனுள்ளதாக ஆக்கபூர்வமானதாக அமைய வேண்டுமானால் அதற்கு மனித மனங்களுக்குள் இறையச்சம் என்ற விதையை ஆழமாக விதைக்க வேண்டும். 
இறையச்சம் என்றால் என்ன?
1. இவ்வுலக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை போன்றது, இந்த உலகம் அதற்கான பரீட்சைக் கூடம் போன்றது.
2. இங்கு எனது செயல்கள் இறைவனால் கண்காணிக்கப் படுகின்றன. 
3. நான் செய்யும் நற்செயல்கள் புண்ணியங்களாகவும் தீய செயல்கள் பாவங்களாகவும்  பதிவாகின்றன. 
4.  ஒருநாள் இந்த பரீட்சைக் கூடம் இழுத்து மூடப்படும். அதற்குப் பிறகு இந்த பூமியில் (இந்த பரீட்சைக் கூடத்தில்) தோன்றி மறைந்த -முதல் மனிதனில் இருந்து இறுதி மனிதன் வரை- அனைவரும் உயிர்கொடுத்து எழுப்பப்பட்டு விசாரிக்கப் பட உள்ளார்கள்.
5. விசாரணைக்குப் பிறகு நம்முடைய நற்செயல் அல்லது தீய செயல்களின் எடையைப் பொறுத்து நமக்கு சொர்க்கமோ அல்லது நரகமோ விதிக்கப்பட உள்ளது. 
6. மறுமை வாழ்விடம் - சொர்க்கத்திலோ அல்லது நரகத்திலோ - அதுதான் மனிதனின்  நிரந்தர மற்றும் உண்மையான வாழ்விடம் ஆகும். 

மேற்கண்ட உண்மைகளை  கருத்தில்கொண்டு அதற்கேற்ப வாழும்போது உண்டாகும் பொறுப்புணர்வுக்கே இறையச்சம் என்று கூறப்படும். அதாவது பூமியில் மனிதன் ஒழுக்கம் பேணி வாழ்வதற்கான அடிப்படையே இறையச்சம்!
இளமைப்பருவம் கேள்விக்குரியது:
= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'உனக்கு, ஐந்து விடயங்கள் வருவதற்கு முன்னர், ஐந்து அருட்கொடைகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள் அவை:
1. மரணம் வரமுன் வாழ்க்கையையும்.
2. நோய் வரமுன் உடலாரோக்கியத்தையும்.
3. அதிக வேலை பழுக்கள் வரமுன் ஓய்வு நேரத்தையும்.
4. முதுமை வரமுன் இளமைப் பருவத்தையும்.
5. வறுமை வரமுன் செல்வநிலையையும்' 
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரழி)
நூல்  : நஸாயீ.

= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மறுமை நாளில் ஓர் அடியான் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கும் வரை அவனது கால்கள் இரண்டும் நகர முடியாது. அவை:
1. தனது (உலக) வாழ்வை எவ்வாறு கழித்தான்?
2. தனது வாலிபப் பருவத்தை எவ்வழிகளில் ஈடுபடுத்தினாய்?
3. செல்வத்தை எவ்வாறு சம்பாதித்தாய்? அதை எவ்வாறு செலவழித்தாய்?
4. பெற்ற அறிவின் மூலம் என்ன செய்தாய்?' என 
அறிவிப்பவர் : முஆத் இப்னு ஜபல் (ரழி)
நூல்  : தபரானி.

===============   
இளமைப் பருவம்:
மனித வாழ்வு பல பருவங்களைக் கடந்து செல்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்து சிறு பிராயத்தை அடைந்து, அதிலிருந்து வளர்ச்சியுறுகின்ற பருவமாக இளமைப் பருவம் உள்ளது. இப்பருவம் வாழ்வுக்கான பொறுப்புணர்ச்சியை வழங்க வேண்டியுள்ளது. வாழ்வின் திசை எது என்பதை தீர்மானிக்க வேண்டிய பருவமாகவும் உள்ளது. இக்காலப்பிரிவிலே இளைஞனது உடல், உள்ளம், புலன்கள், உணர்வுகள் என்பன மிகத்துடிப்புடன் செயற்படுகின்றமையால் வளப்படுத்தப்படல் வேண்டும்.
இளமையின் பண்பு:
இளைஞர்கள் உடல் வலிமைமிக்கவர்கள்; பெருமளவு உடல் ஆரோக்கியமானவர்கள்; உள்ளம் தெளிவானவர்கள்; உணர்வுகள் விறுவிறுப்பானவர்கள்; புலன்கள் துடிதுடிப்பாகச் செயற்படுகின்றவர்கள். எனவே, ஆவல்களும் வேட்கைகளும் அதிக ஆசைகளும் உடையவர்கள். எல்லா வகையிலும் உயிரோட்டமுடனும், துடிதுடிப்புடனும் செயற்படுகின்ற தன்மையுடையவர்கள். முpக இலகுவிலேயே உணர்ச்சி வசப்பட்டு, அதன்படியாய் செயற்பட முனைந்துவிடுவார்கள். இக்கால கட்டத்தில், இளைஞர்கள்; பெற்றோர், உறவினர்கள் போன்ற பிறரில் தங்கி நிற்பதில் இருந்து தன்னில் சுயமாக தங்கி நிற்க பிரயத்தனப்படுவர். இது, இளமையின் முக்கிய பண்பாக கானப்படுகிறது. 'ஒரு கொள்கைக்காக ஆயத்தப்படுத்துகின்ற, வாழ வைக்க முனைகின்ற, பக்குவப்படுத்துகின்ற பருவமாக உள்ளது' என உளவியலாளர்கள் கருதுகின்றனர்.
இலட்சியக் கனவு காணும் பருவம்:
இளமை பருவத்தின் இன்னொரு முக்கிய பண்பாக எதிர்காலத்தைப் பற்றிய இலட்சியக் கனவு காணல் அமைகிறது. இளமைக் காலத்திலே துடிப்போடும், கற்பனை வளமிக்க தன்மையுடனும் இருக்கின்ற இளைஞர்கள், தனிப்பட்ட தன் சுய முன்னேற்றம் பற்றியும், குடும்ப உயர்வு பற்றியும் இலட்சியக் கனவு காண்பார்கள். இப்பருவத்தில் தன்னுடைய முன்னேற்றம் பற்றி மட்டும் சிந்திப்பவர்கள் இருப்பார்கள். குடும்ப மேம்பாடு பற்றி மட்டும் சிந்திப்பவர்கள் இருப்பார்கள். பல்வேறு சிந்தனை வேறுபாடுடைய இளைஞர்கள் இருப்பார்கள். சுயநலத்தை மறந்து சமூக மேம்பாடு பற்றிச் சிந்திப்பவர்கள் மிகக் குறைவாகவே இன்றுள்ளனர்
பயனுள்ள பருவம்:
எதிர் காலத்தை பற்றிய சிந்தனை உருவாகும் இப்பருவத்தில், இளைஞர்களின் ஆளுமையை வளர்த்து, பண்புகளை பருவமடையச் செய்வது சமூகத்திற்கு பயனளிக்கும். உறங்கிக் கிடக்கும் உன்னத உணர்வுகளைத் தட்டி எழுப்பி, ஒரு கொள்கைக்காக வாழத் திருப்பிவிடுவது என்பது இப்பருவத்தில் இலேசான காரியம். எனவேதான், அரசியல்வாதிகள் இளைஞர்களை தமது சுயநலத்தின் கருவிகளாக, ஆயுதங்களாக பயன்படுத்திக் கொள்கின்றனர். துர்பாக்கியம் என்னவென்றால், இஸ்லாமிய இயக்கங்கள், அமைப்புக்கள் இளைஞர்களை பயன்படுத்தவும் அதிகளவு தவறிவிட்டன. சுpல இயக்கங்கள் இப்போது உணர்ந்து செயற்படத் தொடங்கியுள்ளன. ஆனால், பல அமைப்புகள் இன்னும் உணரவில்லை. இந்நிலை மாறுமானால், இஸ்லாமிய சமூகத்தில் மகத்தான மாற்றம் ஏற்படும் ; முஸ்லிம் உம்மத் உலகளாவிய அளவில் உயர்ச்சி பெறும்.
இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்:
இஸ்லாம் இளைஞர்களுக்கு மிக முக்கியமான இடத்தை வழங்கியுள்ளது; இஸ்லாமிய சமூகத்தின் மிக மகத்தான சொத்தாக மதிக்கிறது. உலகில் சத்தியம் நிலைக்கவும், அசத்தியம் அழியவும், அர்ப்பணிப்புடன் அயராது உழைத்தவர்கள் இஸ்லாமிய இளைஞர்களே! நபி (ஸல்) அவர்கள் தமது ஏகத்துவப் பிரசாரத்தை, ஜாஹிலிய்யத்துக்கு எதிராக மக்காவில் ஆரம்பித்த போது, முதலில் விளங்கி, அதிகளவு விரும்பி ஏற்று, செயற்பட்டு அதனைப் பிரசாரப்படுத்த துணை நின்றவர்களும் இளைஞர்களே! நபி (ஸல்) அவர்களுக்கு முன்னர் உலகில் அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட தூதர்களின் ஆதிமீக, பிரசார வரலாற்றிலும் இளைஞர்களின் பணி மகத்தானது.
அந்தஸ்தும் மகத்துவமும்:
இஸ்லாம் ஆற்றல் மிக்க இளைஞர்களை எந்நேரமும் வரவேற்றுக் கொண்டே இருக்கிறது; பண்பாடும், சீரிய சிந்தனையுமுள்ள வாலிபர்களை அன்போடு அரவணைத்துக் கொள்கிறது; அவர்களுக்கு உரிய இடத்தையும், அந்தஸ்தையும் வழங்கி மகிமைப் படுத்துகிறது. உலகிலுள்ள எந்தமதமும், சித்தாந்தமும், தலைவனும் வழங்காத இடத்தை, இஸ்லாம் இளைஞர்களுக்கு வழங்கிக் கௌரவித்துள்ளது மனித, வாழ்வின் பருவங்களைப் பற்றி அறிவுறுத்திய அண்ணல் நபியவர்கள் 'ஐந்து விடயங்களுக்கு முன்னர், நீங்கள் ஐந்தைத் தேடிக்கொள்ளுங்கள் என்று கூறி, முதுமைக்கு முன்னர் இளமையைப் பயன்படுத்திக்கொள்ள பணித்துள்ளார்கள். மனிதன் தனது வாழ்வின் வசந்த காலப் பருவமாக இருக்கும் இளமையை வீணாகிவிடாது, மிகக் கவனமாக, அவதானத்துடன் பாதுகாத்துப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விழுமிய கருத்தை வலியுறுத்தியுள்ளார்கள்.
'அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் இல்லாத (கியாமத்) நாளில் அல்லாஹ் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் வழங்குவான் என நபி (ஸல்) அவா;கள் கூறினார்கள்.
அவர்கள்:
01.  நீதமிகு தலைவர்
02. அல்லாஹ்தஆலாவின் வணக்கத்தில் வளர்ந்த ஒரு  வாலிபர்
03. மஸ்ஜித்களுடன் இதய புர்வத் தொடர்பு கொண்ட மனிதர்
04.   அல்லாஹ்வுக்காக நேசித்து, அவனுக்காகப் பிரியும் இரு மனிதா;கள்.
05. அழகும், கவா;ச்சியுமிக்க பெண் (விபச்சாரத்திற்காக)  அழைக்கும் போது, நான் அல்லாஹ்வை   அஞ்சுகின்றேன்  என்றுரைக்கும் மனிதன்.
06. தனது வலக்கரம் தா;மம் செய்வதை, இடக்கரம் அறியாதளவு இரகசியமாக செலவு செய்யும் மனிதன்.
07. தனிமையில் இறையச்சத்தில் ஈடுபடும் போது,  (அல்லாஹ்வின்) அச்சத்தால் அழும் மனிதன்.” அறிவிப்பவா;: அபு+ஹுரைறா (ரலி) நூல்: புகாரி 
=========== 
1. மரணத்திற்குப் பின் 

2. நோய் நிவாரணம்- 10 உண்மைகள் 

3. இதயங்களை வென்ற இறைத்தூதர் 

4. போதை ஒழிப்போம் பெண்ணினம் காப்போம்!
https://www.quranmalar.com/2022/09/blog-post_10.html

5. தொழுகை நடத்திவரும் அற்புதங்கள்
https://www.quranmalar.com/2024/09/blog-post_92.html

புதன், 1 ஏப்ரல், 2026

உலக ஊடகங்களின் நயவஞ்சகம்


உலக ஊடகங்களின் நயவஞ்சகம்

1970-களில் எட்வர்ட் சயீத் என்ற அறிஞர் Orientalism என்ற ஒரு முக்கியமான புத்தகத்தை எழுதினார். அதில் அவர் சொன்னது விஷயம்: மேற்கத்திய உலகம் இஸ்லாமைப் பற்றி சொல்லும் பல குற்றச்சாட்டுகள் உண்மை அல்ல. அவர்கள் தங்களுடைய தவறுகளை மறைக்க, அதையே முஸ்லிம்கள்மீது சுமத்துகிறார்கள்.

முஸ்லிம்கள் பகுத்தறிவற்றவர்கள், பிற்போக்கானவர்கள், பெண்கள் மீது அடக்குமுறை செய்பவர்கள், பாலியல் சீர்கேடு கொண்டவர்கள் என்று பல குற்றங்கள் சாட்டப்பட்டன. ஆனால் வரலாற்றை பார்த்தால், இந்த குற்றங்கள் எல்லாம் அதிக அளவில் மேற்கத்திய சமுதாயத்தில்தான் நடந்துள்ளன. இதுதான் எட்வர்ட் சயீத் நிரூபித்த உண்மை.

இன்று எப்ஸ்டீன் பைல்ஸ் மூலம் சமீப காலத்தில் வெளிவந்த பெரிய ஆவணங்கள் இதையே மீண்டும் வலுவாக நிரூபித்துள்ளன. உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள், அரசியல்வாதிகள், ஹாலிவுட் மற்றும் இசைத்துறை பிரபலங்கள் போன்ற அதிகாரம் உள்ளவர்களின் கூட்டணி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் ரீதியாக அதிபயங்கரமாக பலாத்காரம் செய்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மட்டுமல்ல அவர்கள் மீது நரபலி, மனித மாமிசம் உண்ணுதல் போன்ற கொடூர குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டு உள்ளன். எத்தனையோ ஆதாரங்கள் இருந்தும் அவர்களில் பலரும் இன்னும் தண்டிக்கப் படாமலே இருக்கிறார்கள்.

ஆனால் ஊடகங்கள் நாளும் பொழுதும் குற்றவாளிக் கூண்டில் யாரை நிறுத்துகிறார்கள்? – இஸ்லாமியர்களை!

முஸ்லிம்கள் பெண்கள் மீது அடக்குமுறை செய்கிறார்கள். இஸ்லாமிய பெண்களுக்கு உரிமைகளை மறுக்கிறார்கள், பர்தா அணிய நிர்பந்திக்கிறார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டுகளை முஸ்லிம்கள் மீது அடுக்குகிறார்கள். ஆனால் உண்மையில் பெண்களை மூளைச்சலவை செய்து, நாடு கடந்து கடத்தி, சந்தைப் பொருளாக்கி பணத்துக்காக பயன்படுத்தியதும் கொன்று குவித்ததும் யார் என்று இப்போது தெளிவாகிறது.  

இஸ்லாம் பெண்களை இத்தகைய கொடூரர்களிடம் இருந்து பாதுகாக்க கடுமையான விதிகளை வைத்திருக்கிறது. அந்த விதிகள் இல்லையென்றால், பெண்கள் இன்று எவ்வளவு பாதுகாப்பற்ற நிலையில் இருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

அன்றைய நடைமுறைப்படி பெண்குழந்தைகளின் பாதுகாப்பு கருதி இஸ்லாமியர் செய்த குழந்தைத் திருமணங்களை இக்கால நடைமுறையோடு ஒப்பிட்டு முஸ்லிம்களைத் தாக்குகிறார்கள். அதேவேளையில் இன்றைய உலகில் அதிகாரம் படைத்த கொடியவர்கள் சிறுவயது பெண்குழந்தைகளை பணம் கொடுத்து நாடுகடத்தி பாலியல் ரீதியாக சுரண்டி கொன்று குவித்ததும் அவர்களையே உணவாக உண்டதும் ஊடகங்களின் கண்களுக்கு தெரியவே இல்லை! என்ன ஆச்சரியம்?

தீவிரவாத/ பயங்கரவாதக் குற்றச்சாட்டு

இஸ்லாமியர்கள் மீது மிகப்பரவலாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு இது.

முஸ்லிம்கள் சதி செய்கிறார்கள், உலகைக் கட்டுப்படுத்த நினைக்கிறார்கள், தங்களது பயங்கரவாத நடவடிக்கைகளால் உலகை அச்சத்தில் ஆழ்த்துகிறார்கள், சதா போர்களில் தங்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள்.

ஆனால் உண்மையான இரகசிய சதி வலையங்கள் யாருடையவை? பல நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், பணக்காரர்கள், அதிகாரிகள் இணைத்து செயல்பட்டது யார்? என்பவை தெளிவாகி வருகின்றன.

உலக ஊடகங்களில் பெரும் தாக்கம் ஏற்படுத்த வல்ல அனைத்து நிறுவனங்களும் பேரழிவு ஆயுத விற்பனை நிறுவனங்களும் இக்கொடியோர்களால் நிர்வகிக்கப்பட்டு வருவதால் அவர்களுக்கு ஏற்ற வகையில் உலகில் நாடகங்கள் அரங்கேறுகின்றன. மக்களும் அவற்றை உண்மை என நம்பி வருகிறார்கள்! விளைவு?

இறையச்சம் கொண்டு ஒழுக்கவாழ்வு வாழும் இஸ்லாமியர்கள் பெருவாரியாக சிறைகளில் அடைக்கப் படுகிறார்கள். கொடூர பாலியல் மற்றும் கொலைக் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். உலகை ஆள்கிறார்கள்!

================= 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்
நாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_9390.html

வெள்ளி, 13 மார்ச், 2026

அநீதிக்கு எதிராக மனிதகுலம் ஒன்றிணைய வழி!


அநீதிக்கு எதிராக உலகம் ஒன்றிணைய.. 

இறைவன் நமக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளான மழை, காற்று, விளைச்சல்கள் போன்றவற்றை அனுபவிக்கும்போது நமது பேதங்கள் குறுக்கே நிற்பதில்லை. அதே போல இயற்கைச் சீற்றங்களும், ஆபத்துக்களும் நம்மைத் தாக்கும்போது நமது பேதங்கள் மறந்தே அவற்றை எதிர்கொள்ளவும் அவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் செய்கிறோம். அவ்வாறே இன்று உலகைக் கவ்வி நிற்கும் வஞ்சக வலையையும் எதிர்கொள்ளவேண்டிய முறையில் எதிர்கொண்டு ஆவன செய்யாவிட்டால் நாம் அனைவருமே அழிவுக்கு உள்ளாவோம் என்பது உறுதி. அந்த வகையில் உலகைப் பீடித்துள்ள இந்த அபாயத்தில் இருந்து காப்பாற்ற ஒரு அருமையான வழிமுறையை இஸ்லாம் முன்வைக்கிறது.

சீர்திருத்தத்தின் அடிப்படை

நாம் அன்றாட வாழ்வில் மிக்ஸி, துணி துவைக்கும் இயந்திரம், ஸ்கூட்டர் போன்ற பல கருவிகளையும் உபகரணங்களையும் வாகனங்களையும் பயன்படுத்துகிறோம். இவற்றை பக்குவமாக பழுதில்லாமல் நீண்ட காலம் பயன்படுத்த வேண்டுமானால் அவற்றை உண்டாக்கியவர்கள் நமக்கு வழங்கும் கையேட்டில் கூறியுள்ளபடியே பயன்படுத்த வேண்டும் என்பதையும் நன்றாக அறிவோம். பொருளை தயாரித்தவர்களுக்கே அவற்றின் நுணுக்கங்கள் நன்றாக தெரியும் என்பதாலேயே நாம் அவ்வாறு செய்கிறோம் அல்லவா? ஆனால் மிக்சி, ஸ்கூட்டர் இவற்றை விட பல்லாயிரம் மடங்கு நுணுக்கங்களை (complications) சுமந்து நடப்பவர்கள் நாம்! அவற்றை நாம் செய்யவும் இல்லை. உள்ளிருந்து கொண்டு இயக்குவதும் நாமல்ல! அப்படியிருக்க நம்மைப் படைத்தவனும் நம்மை பரிபாலித்து வருபவனும் ஆன இறைவன் இவற்றை எப்படி பயன்படுத்தவேண்டும் என்று கூறியிருக்க அப்படி பயன்படுத்துவதுதானே முறை?  

நாம் இவ்வுலகில் அமைதியாக வாழ நம்மைப் படைத்தவன் வழங்கிய வாழ்க்கைத் திட்டம்தான் இஸ்லாம் என்று அரபு மொழியில் அறியப்படுகிறது. இவ்வார்த்தைக்கு அமைதி என்றும் கீழ்படிதல் என்றும் இரண்டு பொருள்கள் உண்டு. இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதியைக் காண முடியும். மறுமையிலும் அமைதியை –மோட்சத்தை- அடைய முடியும் என்பது இஸ்லாம் முன்வைக்கும் தத்துவமாகும்.

இந்த சீரிய வாழ்க்கைத் திட்டம் தனிநபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் ஏற்படுத்தும் சீர்திருத்தங்களை  இதைப் பின்பற்றுவோர் நன்றாக அறியவும் அனுபவிக்கவும் செய்கிறார்கள். இது இவ்வுலகைப் படைத்து பரிபாலிப்பவனான நம் இறைவன் தரும் வாழ்க்கைத் திட்டம் என்பதால் இதில் மனிதன் சந்திக்கக்கூடிய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை நம்மால் காணமுடிகிறது.

திரண்டெழும் மக்கள் சக்தி

தனிமனிதனுக்குள் இஸ்லாம் ஏற்படுத்தும் மனமாற்றம் அவனை நல்லொழுக்கம் உள்ளவனாக ஆக்குவதோடு அவனை சமூகப் பொறுப்புள்ளவனாகவும் ஆக்குகிறது. அதன் காரணமாக நன்மைகளை ஏவவும் தீமைகளைத் தடுக்கவும் அவன் தயாராகிறான். சக மனிதன் சகோதரனே என்ற உணர்வும் இறையச்சமும் மறுமை மீது உள்ள நம்பிக்கையும் அவனை சமூகத்திற்காக தியாகங்கள் மேற்கொள்ளத் தூண்டுகின்றன. வெறும் நம்பிக்கையோடு நில்லாமல் ஐவேளைத் தொழுகைகளைக் கூட்டாக நிறைவேற்றுதல், ஜக்காத் என்ற ஏழைவரி போன்ற இஸ்லாமியக் கடமைகள் மனித சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலுவாக வளர்க்கின்றன. இவ்வாறு உருவெடுத்து வளரும் மக்கள் சக்திக்கு முன்னால் தீய சக்திகள் ஆட்டம்கண்டு அழிந்து போகின்றன. சமூகத்தில் மறுமலர்ச்சியும் உண்மையான சீர்திருத்தங்களும் உண்டாகின்றன. இனம், நிறம், மொழி, இடம் போன்ற தடைகளை மீறி உருவாகும் இந்த மனிதகுல ஒற்றுமை அகில உலகுக்கும் நன்மை பயக்கக்கூடிய ஒன்றாக மாறுகிறது.

அநீதிக்கு எதிரான போராட்டத்துக்கு முதன்மையாக இஸ்லாம் தனிமனித நல்லொழுக்கத்தை அடிப்படையாக்குகிறது. அதாவது ‘முதலில் உங்களை நீங்கள் சீர்திருத்திக் கொள்ளுங்கள். உலகம் தானே சீர்திருந்தும்!’ என்பது இஸ்லாம் மனிதகுலத்துக்கு கற்பிக்கும் முதல் பாடமாகும். இறைதூதர்களை அவ்வப்போது இறைவன் அனுப்பி வந்ததன் நோக்கமும் இதுவேயாகும். தர்மத்தை பூமியில் நிலைநாட்ட வந்த அனைத்து இறைதூதர்களும் கடைப்பிடித்த வழிமுறை இதுவேயாகும். அந்த தூதர்கள் வரிசையில் இந்த பூமிக்கு இறுதியாக வந்த முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தனது வாழ்நாளில் இவ்வாறுதான் கொடூரர்களாக வாழ்ந்துகொண்டு இருந்த அரபு நாட்டு மக்களை பண்படுத்தி ஒழுக்க சீலர்களாக ஆக்கியதோடு மட்டுமல்லாமல் அந்த நாட்டில் வறுமை முற்றிலும் ஒழிந்த ஒரு வளமான பேரரசையும் நிறுவிக் காட்டினார்கள். அதோடு நில்லாமல் இறைவனுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வு மிக்க ஜனாதிபதிகள் பிற்காலத்தில் உருவாக வழிவகை செய்தார்கள். 

=============== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்
நாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_9390.html
கடவுளைப் புரிந்து கொள்ளாமையால் மனித இனம் சந்திக்கும் இழப்புகள்

வியாழன், 12 மார்ச், 2026

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மார்ச் 26

 

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மார்ச் 26

பொருளடக்கம்

எப்ஸ்டீன் கோப்புகள் – அகோர குற்றங்களின் தொகுப்பு-2

உலக அதிகாரம் சில தவறான கைகளில் குவிந்தால்..- 4

அநீதிக்கு எதிராக உலகம் இணையவேண்டிய தருணம்!  -6

அநீதிக்கு எதிராக உலகம் ஒன்றிணைந்தால் உண்டு வாழ்வு! -8

தனிமனித நல்லொழுக்கம் எவ்வாறு?- 10

இஸ்லாம் உருவாக்கும் சமூகக் கட்டமைப்பு -13

அநீதியில்லா உலகு சாத்தியமா? -14

உலக  ஊடகங்களின்  நயவஞ்சகம் -16

பெண்ணினத்தை  வேட்டையாட  உதவிய 

ஊடக முதலைகள் -18

பெண்ணடிமைத்தனம் அல்ல -பெண்ணினப் பாதுகாப்பு -20

இஸ்லாம் கூறும் பாலியல் கட்டுப்பாடுகள் -22
========= 
திருக்குர்ஆன் நற்செய்திமலர் உங்கள் இல்லம்தேடி வர ₹180 சந்தா கட்டி  சந்தாதாரர் ஆகலாம் இன்ஷாஅல்லாஹ்  https://wa.me/p/33176695991945755/918867298998
============== 

செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

திருக்குர்ஆன் நற்செய்தி மலர்- பிப்ரவரி 2026

 


திருக்குர்ஆன் நற்செய்தி மலர்- பிப்ரவரி 2026

 திருக்குர்ஆன் நற்செய்தி மலர்- பிப்ரவரி 2026

உலக நடைமுறைகளை திருத்திய இஸ்லாமிய மன மாற்றம் -2
சமத்துவம் – உலக அமைதிக்கான அஸ்திவாரம் -6
அடிமைத்துவத்தை உடைத்தெறிந்த இறையச்சம் -8
சுயமரியாதையின் அடித்தளமும் இறையச்சமே! -10
பெண்ணை வாழவிடாமல் மனிதகுலம் தழைக்காது! -12
பாவங்களை மன்னிக்கக் காத்திருப்பவன்! -14
இன்றைய செய்திகளும் இறைவனின் வழிகாட்டலும் -15
கேள்விகள் பல – விடை தெரிந்ததே! -17
புதிய கேள்வி -பதில் பகுதி -20
ஆசிரியர் - வாசகர் நேரடி சந்திப்பு நிகழ்ச்சி.-21


ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

முடிவுக்கு வரும் குழந்தைகள் தினங்கள்


 கடந்து சென்றது இன்னொரு நவம்பர் 14. இந்த தினம் நம் நாட்டில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது என்பதை அறிவோம்.  விரைவில் இந்த தினம் கொண்டாடப்படாமல் போகலாம்.. ஆம் குழந்தைகள் இருந்தால்தானே கொண்டாடுவதற்கு! உலகெங்கும் நடைபெற்று வரும் மக்கள் தொகை வீழ்ச்சி அல்லது சுருக்கம் அதைத்தான் சுட்டிக்காட்டுகிறது.

இப்படிப்பட்ட அவல நிலை உருவாகுவதற்க்குக் காரணம் இவ்வுலகைப் பற்றிய நமது சுயநலக் கண்ணோட்டம்தான். ரயிலில் முதல் ஸ்டேஷனில் ஏறி இடம் பிடித்தவர்கள் ரயிலே அவர்களுக்குத்தான் சொந்தம் என்பது போல நடந்துகொள்வதை நாம் காணலாம். இடம் கிடைத்தவுடன் தங்களை அடுத்த காலி இருக்கைகளில் எல்லாம் தங்கள் உடமைகளைப் பரப்பியும் காலை நீட்டியும் அடைத்துக் கொள்வதை அன்றாடம் காணலாம். அடுத்தடுத்த ஸ்டேஷன்களில் யாரும் ஏறவும் கூடாது, ஏறுவோர் தங்கள் சுகங்களைக் கெடுத்துவிடவும் கூடாது!  - இந்த மோசமான மனோபாவம்தான் நம்மில் பெரும்பாலோருக்கும் உள்ளது. வரும் தலைமுறைகள் எக்கேடு கேட்டுப் போனால் என்ன, நாம் சுகமாக வாழ்ந்தால் போதும். என்ற கொடிய எண்ணம்தான் நம்மை நம் குழந்தைகளையே கொல்ல வைக்கிறது.

இன்று நடைபெறும் இயந்திரமய வாழ்க்கை நடுவே ஆணும் பெண்ணும் பொருளாதாரத்தை சேர்ப்பதில் மிகுந்த ஈடுபாடு காட்டுகிறார்கள் தங்கள் பாலியல் தேவைகளை காதல், கள்ளக்காதல், விபச்சாரம், டேட்டிங், லிவிங் டுகெதர் போன்ற சமூகப் பொறுப்பற்ற காரியங்கள் மூலம் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். தானுண்டு தன் சம்பாத்தியமுண்டு என்ற எண்ணத்தோடு சுயநல வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இன்று திருமணங்கள் அபூர்வ நிகழ்வாக மாறி உள்ளன. அப்படியே திருமணங்கள் ஆனாலும் அவர்களுக்கு குழந்தை பிறப்பில் ஆர்வம் இல்லை. மீறிப் பிறந்தாலும் குழந்தைகளை சுமையாகவே கருதுகிறார்கள், ஈடுபாடோடு வளர்ப்பதில்லை. கருக்கொலை சிசுக்கொலை குடும்ப கட்டுப்பாடு என எல்லா வகையிலும் குழந்தைகளின் எண்ணிக்கையை குறைக்க முற்படுகிறார்கள்.

சமூகப் பொறுப்பற்ற இந்த செயலில் பெரும்பாலான நாடுகள் விபரீதம் அறியாது கண்மூடித்தனமாக ஈடுபடுவதால் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து ஜப்பான் ஹாங்காங் போன்ற நாடுகள் அழியும் தருவாயில் உள்ளன. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளும் அந்த நிலை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றன.

இறைவனின் எச்சரிக்கை:

 ஆனால் இவ்வுலகின் உண்மையான சொந்தக்காரனான இறைவனோ இக்கொடிய செயல் தண்டனைக்குரியது என்கிறான். தனது இறுதி வேதமான திருக்குர்ஆனில் இச்செயலைத் தடுப்பதைப் பாருங்கள்:

“வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்”;   (திருக்குர்ஆன் 17:31)

பெண் குழந்தைகளின் முக்கியத்துவம்

குழந்தைகளை கொல்பவர்கள் கூட குறிப்பாக பெண் குழந்தைகளை அவர்கள் மகத்துவத்தை உணராது கொன்று வருகிறார்கள். மக்கள்தொகை பெருக விளைநிலங்களைப் போன்றவர்கள் பெண்கள். அவர்களை கருவிலேயே கத்திகள் பதம் பார்த்தால் வேறு கொடூரம் இருக்க முடியுமா? 

  • ஆய்வுகள் படி இந்தியாவில் 2000–2019 காலத்தில் தினமும் சுமார் 1,200–2,000 பெண் குழந்தைகள் கருக்கலைப்பு (sex-selective feticide) மூலம் “காணாமல் போயுள்ளனர்”.

உலகளவில்

  • முக்கிய ஆய்வுகள் படி ஒவ்வொரு நாளும் சுமார் 1,300க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் பாலினத் தெரிவுச் செயல் காரணமாக (sex-selective abortion / feticide) “missing” என்று கணக்கிடப்படுகின்றன.
  • மற்ற விரிவான மதிப்பீடுகள் இதை பல ஆயிரம் பேர் வரை உயர்த்திக் காட்டுகின்றன.

 இந்த தடையையும் மீறி யாராவது இப்பாவத்தைச் செய்தால் அவர்களுக்கு மறுமை நாளில் இவர்களால் கொல்லப்பட்ட குழந்தைகளே இவர்களுக்கு  தண்டனையை பெற்றுத் தருவார்கள் என்பதையும் இறைவன் கூறுகிறான்:

“உயிர்கள் மீண்டும் (உடல்களுடன்) சேர்க்கப்படும் போது, என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும்போது, (உங்கள் நிலையை எண்ணிப் பாருங்கள்! )” (திருக்குர்ஆன் 81:7-9)

எனவே திருத்த வேண்டியவற்றைத் திருத்திக் கொள்வோமாக!

================ 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

புதன், 4 பிப்ரவரி, 2026

எல்லா ஃபைல்களும் திறக்கப்படும் நாள்!


நீங்கள் எந்த மதத்தை, நாட்டை, இனத்தை, நிறத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இருந்தாலும் சரி.. உண்மை இதுதான்.. இதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

இது நம்மைப் படைத்த இறைவனுக்கு சொந்தமான உலகம். இங்கு நமது குறுகிய தற்காலிக வாழ்க்கை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகம் அதற்கான பரீட்சைக்கூடமாகவும் படைக்கப் பட்டுள்ளது. இதில் இறைவன் நம்மிடம் எவற்றை ஏவுகிறானோ அவை நமக்கும் மனித குலத்திற்கும் நன்மை பயப்பவை. அவற்றை செய்தால் அவை புண்ணியங்களாக இறைவனிடம் பதிவு செய்யப்படுகின்றன. எவற்றை செய்யக்கூடாது என்று நம்மைத் தடுக்கிறானோ அவை நமக்கும் மனிதகுலத்திற்கும் தீங்கு விளைவிப்பவை. அவையே பாவங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. எனவே இந்த வாழ்க்கைப் பரீட்சையில் வென்று மறுமையில் சொர்க்கத்தை நமது நிரந்தர வாழ்விடமாக அடையவேண்டுமானால் நாம் அவனது எவல்-விலக்கல்களை பேணியே ஆகவேண்டும்.
இந்த வாழ்க்கைப் பரீட்சையில் இறைவனால் தடை செய்யப்பட்ட  அந்நிய ஆண்பெண் உறவுகள்,  கள்ளக்காதல், திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகள், மது மற்றும் போதைப்பொருட்கள் பயன்பாடு  உள்ளிட்ட ஒழுக்ககேடுகள் அனைத்தும் தண்டனைக்கு உரியவை ஆகும்.  இவை மனிதனின் தனிநபர் வாழ்க்கைக்கும் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் அளப்பரிய தீங்கு விளைவிப்பவை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
அவனது தடையை மீறி அவற்றை செய்வதால்  மனிதனுக்கு இங்கு உண்டாகும் தீமைகளை விட மறுமையில் உண்டாகக்கூடிய வேதனைகளும் நரகத்து தண்டனைகளும் அதிபயங்கரமானவை. இறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆன் கூறுகிறது:

= 20:74 நிச்சயமாக எவன் தன் இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோ அவனுக்கு நரகம் நிச்சயமாக இருக்கிறது அதில் அவன் மரிக்கவும் மாட்டான் வாழவும் மாட்டான்.
= 7:41 அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும் (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
= 78:21 நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக! அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்!...... கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.!


அற்பமான தற்காலிக வாழ்க்கை

இன்று நாம் வாழும் தற்காலிகவாழ்கை என்பது மறுமையோடு ஒப்பிடும்போது மிகமிக அற்பமானதே.
= நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைவன் மீதாணையாக! மறுமையோடு ஒப்பிடும்போது இவ்வுலகின் நிலையானது, உங்களில் ஒருவர் தமது இந்த அதாவது சுட்டு விரலை கடலில் வைப்பதைப் போன்றுதான். அதில் எந்த அளவு தண்ணீர் ஒட்டிக்கொள்கிறது என்று அவர் பார்க்கட்டும். (நூல் :முஸ்லிம் 5490)

செயல்களின் பதிவேடு 
இறைவன் கூறுகிறான்:

தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா? அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா? மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)? (திருக்குர்ஆன் 90:7 -9)

இங்கு மனிதன் செய்யும் அத்துமீறல்கள் ஒவ்வொன்றும் தவறாமல் பலவகைகளில் பதிவாகின்றன. இன்று எங்கும் கண்காணிப்புக்காக பொருத்தப்படும் CCTV கேமராக்கள் பதிவு செய்கின்றனவோ அதைப்போலவே நம் ஒவ்வொருவரது கண்களும் காதுகளும் தோல்களும் நமது நடவடிக்கைகளை இயற்கையாகவே பதிவு செய்து கொண்டிருக்கின்றன. வேறு பலவகையிலும் நமது செயல்களின் பதிவுகள் நடந்து கொண்டிருந்தாலும் இவை ஒன்றே போதுமானவையாக இருக்கும் என்பதை நாம் அறியலாம்.

நமது வினைப் பதிவு இயந்திரங்கள்

இன்று நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் காது, கண், தோல் இவற்றை மறைத்துக்கொண்டு செய்ய முடியாது. நம் ஒவ்வொருவரது கண்களும் காதுகளும் தோல்களும் நமது நடவடிக்கைகளை இயற்கையாகவே பதிவு செய்து கொண்டிருக்கின்றன. இந்த உணர்வு நம்மில் எப்போதும் இருக்குமானால் நம்மைப் பாவங்கள் அண்ட வாய்ப்பில்லை.

மேலும், இறைவனின் பகைவர்கள் (நரகத்)தீயின் பால் ஒன்று திரட்டப்படும் நாளில், அவர்கள் (தனித் தனியாகப்) பிரிக்கப்படுவார்கள். இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும். (திருக்குர்ஆன் 41:19,20)

ஆம், மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருப்பவை அவனுடைய காதுகளும் கண்களும் தோல்களும். ஒலி அலைகள் காதுகளால் ஏற்கப்படுவதையும் ஒளி அலைகள் கண்களால் ஏற்கப்படுவதையும் அவற்றை உரிய இடங்களில் பதிவு செய்வதையும் இன்றைய அறிவியல் நமக்கு சொல்லித் தருகிறது. இவற்றோடு தோல்களும் நம் செயல்பாடுகளின் பதிவுகளைத் தாங்கி நிற்கின்றன என்பது மேற்படி வசனம் எச்சரிக்கிறது. இறுதித்தீர்ப்பு நாளன்று விசாரணையின்போது அவை மனிதனைக் காட்டிக்கொடுக்கும்போது அங்கு நடக்கும் உரையாடலைப் படம்பிடித்துக் கட்டுகிறான் இறைவன்:

41:21. அவர்கள் தம் தோல்களை நோக்கி, “எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று கேட்பார்கள்; அதற்கு அவை: “எல்லாப் பொருட்களையும் பேசும் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசும்படிச் செய்தான்;அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான்; பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்” என்று கூறும்.
41:22. “உங்கள் காதுகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும், உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லாமலிருக்கும் பொருட்டு, உ(ங்கள் பாவ)ங்களை நீங்கள் மறைத்துக் கொள்ளவில்லை; அன்றியும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிகுதமானதை நிச்சயமாக அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணிக்கொண்டீர்கள்.
41:23. ஆகவே, உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் எண்ணிய உங்களுடைய (தவறான) இந்த எண்ணம்தான் உங்களை அழித்து விட்டது; ஆகவே நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிட்டீர்கள் (என்றும் அவை கூறும்).

41:24. ஆகவே, அவர்கள் (வேதனையைச் சகித்துப்) பொறுமையாக இருந்த போதிலும், அவர்களுக்கு (நரக) நெருப்புத்தான் தங்குமிடம் ஆகும் - அன்றி (கூக்குரலிட்டு) அவர்கள் மன்னிப்புக்கேட்ட போதிலும், அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள்.
================= 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்