இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 13 மார்ச், 2026

அநீதிக்கு எதிராக மனிதகுலம் ஒன்றிணைய வழி!


அநீதிக்கு எதிராக உலகம் ஒன்றிணைய.. 

இறைவன் நமக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளான மழை, காற்று, விளைச்சல்கள் போன்றவற்றை அனுபவிக்கும்போது நமது பேதங்கள் குறுக்கே நிற்பதில்லை. அதே போல இயற்கைச் சீற்றங்களும், ஆபத்துக்களும் நம்மைத் தாக்கும்போது நமது பேதங்கள் மறந்தே அவற்றை எதிர்கொள்ளவும் அவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் செய்கிறோம். அவ்வாறே இன்று உலகைக் கவ்வி நிற்கும் வஞ்சக வலையையும் எதிர்கொள்ளவேண்டிய முறையில் எதிர்கொண்டு ஆவன செய்யாவிட்டால் நாம் அனைவருமே அழிவுக்கு உள்ளாவோம் என்பது உறுதி. அந்த வகையில் உலகைப் பீடித்துள்ள இந்த அபாயத்தில் இருந்து காப்பாற்ற ஒரு அருமையான வழிமுறையை இஸ்லாம் முன்வைக்கிறது.

சீர்திருத்தத்தின் அடிப்படை

நாம் அன்றாட வாழ்வில் மிக்ஸி, துணி துவைக்கும் இயந்திரம், ஸ்கூட்டர் போன்ற பல கருவிகளையும் உபகரணங்களையும் வாகனங்களையும் பயன்படுத்துகிறோம். இவற்றை பக்குவமாக பழுதில்லாமல் நீண்ட காலம் பயன்படுத்த வேண்டுமானால் அவற்றை உண்டாக்கியவர்கள் நமக்கு வழங்கும் கையேட்டில் கூறியுள்ளபடியே பயன்படுத்த வேண்டும் என்பதையும் நன்றாக அறிவோம். பொருளை தயாரித்தவர்களுக்கே அவற்றின் நுணுக்கங்கள் நன்றாக தெரியும் என்பதாலேயே நாம் அவ்வாறு செய்கிறோம் அல்லவா? ஆனால் மிக்சி, ஸ்கூட்டர் இவற்றை விட பல்லாயிரம் மடங்கு நுணுக்கங்களை (complications) சுமந்து நடப்பவர்கள் நாம்! அவற்றை நாம் செய்யவும் இல்லை. உள்ளிருந்து கொண்டு இயக்குவதும் நாமல்ல! அப்படியிருக்க நம்மைப் படைத்தவனும் நம்மை பரிபாலித்து வருபவனும் ஆன இறைவன் இவற்றை எப்படி பயன்படுத்தவேண்டும் என்று கூறியிருக்க அப்படி பயன்படுத்துவதுதானே முறை?  

நாம் இவ்வுலகில் அமைதியாக வாழ நம்மைப் படைத்தவன் வழங்கிய வாழ்க்கைத் திட்டம்தான் இஸ்லாம் என்று அரபு மொழியில் அறியப்படுகிறது. இவ்வார்த்தைக்கு அமைதி என்றும் கீழ்படிதல் என்றும் இரண்டு பொருள்கள் உண்டு. இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதியைக் காண முடியும். மறுமையிலும் அமைதியை –மோட்சத்தை- அடைய முடியும் என்பது இஸ்லாம் முன்வைக்கும் தத்துவமாகும்.

இந்த சீரிய வாழ்க்கைத் திட்டம் தனிநபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் ஏற்படுத்தும் சீர்திருத்தங்களை  இதைப் பின்பற்றுவோர் நன்றாக அறியவும் அனுபவிக்கவும் செய்கிறார்கள். இது இவ்வுலகைப் படைத்து பரிபாலிப்பவனான நம் இறைவன் தரும் வாழ்க்கைத் திட்டம் என்பதால் இதில் மனிதன் சந்திக்கக்கூடிய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை நம்மால் காணமுடிகிறது.

திரண்டெழும் மக்கள் சக்தி

தனிமனிதனுக்குள் இஸ்லாம் ஏற்படுத்தும் மனமாற்றம் அவனை நல்லொழுக்கம் உள்ளவனாக ஆக்குவதோடு அவனை சமூகப் பொறுப்புள்ளவனாகவும் ஆக்குகிறது. அதன் காரணமாக நன்மைகளை ஏவவும் தீமைகளைத் தடுக்கவும் அவன் தயாராகிறான். சக மனிதன் சகோதரனே என்ற உணர்வும் இறையச்சமும் மறுமை மீது உள்ள நம்பிக்கையும் அவனை சமூகத்திற்காக தியாகங்கள் மேற்கொள்ளத் தூண்டுகின்றன. வெறும் நம்பிக்கையோடு நில்லாமல் ஐவேளைத் தொழுகைகளைக் கூட்டாக நிறைவேற்றுதல், ஜக்காத் என்ற ஏழைவரி போன்ற இஸ்லாமியக் கடமைகள் மனித சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலுவாக வளர்க்கின்றன. இவ்வாறு உருவெடுத்து வளரும் மக்கள் சக்திக்கு முன்னால் தீய சக்திகள் ஆட்டம்கண்டு அழிந்து போகின்றன. சமூகத்தில் மறுமலர்ச்சியும் உண்மையான சீர்திருத்தங்களும் உண்டாகின்றன. இனம், நிறம், மொழி, இடம் போன்ற தடைகளை மீறி உருவாகும் இந்த மனிதகுல ஒற்றுமை அகில உலகுக்கும் நன்மை பயக்கக்கூடிய ஒன்றாக மாறுகிறது.

அநீதிக்கு எதிரான போராட்டத்துக்கு முதன்மையாக இஸ்லாம் தனிமனித நல்லொழுக்கத்தை அடிப்படையாக்குகிறது. அதாவது ‘முதலில் உங்களை நீங்கள் சீர்திருத்திக் கொள்ளுங்கள். உலகம் தானே சீர்திருந்தும்!’ என்பது இஸ்லாம் மனிதகுலத்துக்கு கற்பிக்கும் முதல் பாடமாகும். இறைதூதர்களை அவ்வப்போது இறைவன் அனுப்பி வந்ததன் நோக்கமும் இதுவேயாகும். தர்மத்தை பூமியில் நிலைநாட்ட வந்த அனைத்து இறைதூதர்களும் கடைப்பிடித்த வழிமுறை இதுவேயாகும். அந்த தூதர்கள் வரிசையில் இந்த பூமிக்கு இறுதியாக வந்த முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தனது வாழ்நாளில் இவ்வாறுதான் கொடூரர்களாக வாழ்ந்துகொண்டு இருந்த அரபு நாட்டு மக்களை பண்படுத்தி ஒழுக்க சீலர்களாக ஆக்கியதோடு மட்டுமல்லாமல் அந்த நாட்டில் வறுமை முற்றிலும் ஒழிந்த ஒரு வளமான பேரரசையும் நிறுவிக் காட்டினார்கள். அதோடு நில்லாமல் இறைவனுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வு மிக்க ஜனாதிபதிகள் பிற்காலத்தில் உருவாக வழிவகை செய்தார்கள். 

=============== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்
நாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_9390.html
கடவுளைப் புரிந்து கொள்ளாமையால் மனித இனம் சந்திக்கும் இழப்புகள்

வியாழன், 12 மார்ச், 2026

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மார்ச் 26

 

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மார்ச் 26

பொருளடக்கம்

எப்ஸ்டீன் கோப்புகள் – அகோர குற்றங்களின் தொகுப்பு-2

உலக அதிகாரம் சில தவறான கைகளில் குவிந்தால்..- 4

அநீதிக்கு எதிராக உலகம் இணையவேண்டிய தருணம்!  -6

அநீதிக்கு எதிராக உலகம் ஒன்றிணைந்தால் உண்டு வாழ்வு! -8

தனிமனித நல்லொழுக்கம் எவ்வாறு?- 10

இஸ்லாம் உருவாக்கும் சமூகக் கட்டமைப்பு -13

அநீதியில்லா உலகு சாத்தியமா? -14

உலக  ஊடகங்களின்  நயவஞ்சகம் -16

பெண்ணினத்தை  வேட்டையாட  உதவிய 

ஊடக முதலைகள் -18

பெண்ணடிமைத்தனம் அல்ல -பெண்ணினப் பாதுகாப்பு -20

இஸ்லாம் கூறும் பாலியல் கட்டுப்பாடுகள் -22
========= 
திருக்குர்ஆன் நற்செய்திமலர் உங்கள் இல்லம்தேடி வர ₹180 சந்தா கட்டி  சந்தாதாரர் ஆகலாம் இன்ஷாஅல்லாஹ்  https://wa.me/p/33176695991945755/918867298998
============== 

செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

திருக்குர்ஆன் நற்செய்தி மலர்- பிப்ரவரி 2026

 


திருக்குர்ஆன் நற்செய்தி மலர்- பிப்ரவரி 2026

 திருக்குர்ஆன் நற்செய்தி மலர்- பிப்ரவரி 2026

உலக நடைமுறைகளை திருத்திய இஸ்லாமிய மன மாற்றம் -2
சமத்துவம் – உலக அமைதிக்கான அஸ்திவாரம் -6
அடிமைத்துவத்தை உடைத்தெறிந்த இறையச்சம் -8
சுயமரியாதையின் அடித்தளமும் இறையச்சமே! -10
பெண்ணை வாழவிடாமல் மனிதகுலம் தழைக்காது! -12
பாவங்களை மன்னிக்கக் காத்திருப்பவன்! -14
இன்றைய செய்திகளும் இறைவனின் வழிகாட்டலும் -15
கேள்விகள் பல – விடை தெரிந்ததே! -17
புதிய கேள்வி -பதில் பகுதி -20
ஆசிரியர் - வாசகர் நேரடி சந்திப்பு நிகழ்ச்சி.-21


ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

முடிவுக்கு வரும் குழந்தைகள் தினங்கள்


 கடந்து சென்றது இன்னொரு நவம்பர் 14. இந்த தினம் நம் நாட்டில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது என்பதை அறிவோம்.  விரைவில் இந்த தினம் கொண்டாடப்படாமல் போகலாம்.. ஆம் குழந்தைகள் இருந்தால்தானே கொண்டாடுவதற்கு! உலகெங்கும் நடைபெற்று வரும் மக்கள் தொகை வீழ்ச்சி அல்லது சுருக்கம் அதைத்தான் சுட்டிக்காட்டுகிறது.

இப்படிப்பட்ட அவல நிலை உருவாகுவதற்க்குக் காரணம் இவ்வுலகைப் பற்றிய நமது சுயநலக் கண்ணோட்டம்தான். ரயிலில் முதல் ஸ்டேஷனில் ஏறி இடம் பிடித்தவர்கள் ரயிலே அவர்களுக்குத்தான் சொந்தம் என்பது போல நடந்துகொள்வதை நாம் காணலாம். இடம் கிடைத்தவுடன் தங்களை அடுத்த காலி இருக்கைகளில் எல்லாம் தங்கள் உடமைகளைப் பரப்பியும் காலை நீட்டியும் அடைத்துக் கொள்வதை அன்றாடம் காணலாம். அடுத்தடுத்த ஸ்டேஷன்களில் யாரும் ஏறவும் கூடாது, ஏறுவோர் தங்கள் சுகங்களைக் கெடுத்துவிடவும் கூடாது!  - இந்த மோசமான மனோபாவம்தான் நம்மில் பெரும்பாலோருக்கும் உள்ளது. வரும் தலைமுறைகள் எக்கேடு கேட்டுப் போனால் என்ன, நாம் சுகமாக வாழ்ந்தால் போதும். என்ற கொடிய எண்ணம்தான் நம்மை நம் குழந்தைகளையே கொல்ல வைக்கிறது.

இன்று நடைபெறும் இயந்திரமய வாழ்க்கை நடுவே ஆணும் பெண்ணும் பொருளாதாரத்தை சேர்ப்பதில் மிகுந்த ஈடுபாடு காட்டுகிறார்கள் தங்கள் பாலியல் தேவைகளை காதல், கள்ளக்காதல், விபச்சாரம், டேட்டிங், லிவிங் டுகெதர் போன்ற சமூகப் பொறுப்பற்ற காரியங்கள் மூலம் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். தானுண்டு தன் சம்பாத்தியமுண்டு என்ற எண்ணத்தோடு சுயநல வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இன்று திருமணங்கள் அபூர்வ நிகழ்வாக மாறி உள்ளன. அப்படியே திருமணங்கள் ஆனாலும் அவர்களுக்கு குழந்தை பிறப்பில் ஆர்வம் இல்லை. மீறிப் பிறந்தாலும் குழந்தைகளை சுமையாகவே கருதுகிறார்கள், ஈடுபாடோடு வளர்ப்பதில்லை. கருக்கொலை சிசுக்கொலை குடும்ப கட்டுப்பாடு என எல்லா வகையிலும் குழந்தைகளின் எண்ணிக்கையை குறைக்க முற்படுகிறார்கள்.

சமூகப் பொறுப்பற்ற இந்த செயலில் பெரும்பாலான நாடுகள் விபரீதம் அறியாது கண்மூடித்தனமாக ஈடுபடுவதால் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து ஜப்பான் ஹாங்காங் போன்ற நாடுகள் அழியும் தருவாயில் உள்ளன. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளும் அந்த நிலை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றன.

இறைவனின் எச்சரிக்கை:

 ஆனால் இவ்வுலகின் உண்மையான சொந்தக்காரனான இறைவனோ இக்கொடிய செயல் தண்டனைக்குரியது என்கிறான். தனது இறுதி வேதமான திருக்குர்ஆனில் இச்செயலைத் தடுப்பதைப் பாருங்கள்:

“வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்”;   (திருக்குர்ஆன் 17:31)

பெண் குழந்தைகளின் முக்கியத்துவம்

குழந்தைகளை கொல்பவர்கள் கூட குறிப்பாக பெண் குழந்தைகளை அவர்கள் மகத்துவத்தை உணராது கொன்று வருகிறார்கள். மக்கள்தொகை பெருக விளைநிலங்களைப் போன்றவர்கள் பெண்கள். அவர்களை கருவிலேயே கத்திகள் பதம் பார்த்தால் வேறு கொடூரம் இருக்க முடியுமா? 

  • ஆய்வுகள் படி இந்தியாவில் 2000–2019 காலத்தில் தினமும் சுமார் 1,200–2,000 பெண் குழந்தைகள் கருக்கலைப்பு (sex-selective feticide) மூலம் “காணாமல் போயுள்ளனர்”.

உலகளவில்

  • முக்கிய ஆய்வுகள் படி ஒவ்வொரு நாளும் சுமார் 1,300க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் பாலினத் தெரிவுச் செயல் காரணமாக (sex-selective abortion / feticide) “missing” என்று கணக்கிடப்படுகின்றன.
  • மற்ற விரிவான மதிப்பீடுகள் இதை பல ஆயிரம் பேர் வரை உயர்த்திக் காட்டுகின்றன.

 இந்த தடையையும் மீறி யாராவது இப்பாவத்தைச் செய்தால் அவர்களுக்கு மறுமை நாளில் இவர்களால் கொல்லப்பட்ட குழந்தைகளே இவர்களுக்கு  தண்டனையை பெற்றுத் தருவார்கள் என்பதையும் இறைவன் கூறுகிறான்:

“உயிர்கள் மீண்டும் (உடல்களுடன்) சேர்க்கப்படும் போது, என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும்போது, (உங்கள் நிலையை எண்ணிப் பாருங்கள்! )” (திருக்குர்ஆன் 81:7-9)

எனவே திருத்த வேண்டியவற்றைத் திருத்திக் கொள்வோமாக!

================ 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

புதன், 4 பிப்ரவரி, 2026

எல்லா ஃபைல்களும் திறக்கப்படும் நாள்!


நீங்கள் எந்த மதத்தை, நாட்டை, இனத்தை, நிறத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இருந்தாலும் சரி.. உண்மை இதுதான்.. இதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

இது நம்மைப் படைத்த இறைவனுக்கு சொந்தமான உலகம். இங்கு நமது குறுகிய தற்காலிக வாழ்க்கை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகம் அதற்கான பரீட்சைக்கூடமாகவும் படைக்கப் பட்டுள்ளது. இதில் இறைவன் நம்மிடம் எவற்றை ஏவுகிறானோ அவை நமக்கும் மனித குலத்திற்கும் நன்மை பயப்பவை. அவற்றை செய்தால் அவை புண்ணியங்களாக இறைவனிடம் பதிவு செய்யப்படுகின்றன. எவற்றை செய்யக்கூடாது என்று நம்மைத் தடுக்கிறானோ அவை நமக்கும் மனிதகுலத்திற்கும் தீங்கு விளைவிப்பவை. அவையே பாவங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. எனவே இந்த வாழ்க்கைப் பரீட்சையில் வென்று மறுமையில் சொர்க்கத்தை நமது நிரந்தர வாழ்விடமாக அடையவேண்டுமானால் நாம் அவனது எவல்-விலக்கல்களை பேணியே ஆகவேண்டும்.
இந்த வாழ்க்கைப் பரீட்சையில் இறைவனால் தடை செய்யப்பட்ட  அந்நிய ஆண்பெண் உறவுகள்,  கள்ளக்காதல், திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகள், மது மற்றும் போதைப்பொருட்கள் பயன்பாடு  உள்ளிட்ட ஒழுக்ககேடுகள் அனைத்தும் தண்டனைக்கு உரியவை ஆகும்.  இவை மனிதனின் தனிநபர் வாழ்க்கைக்கும் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் அளப்பரிய தீங்கு விளைவிப்பவை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
அவனது தடையை மீறி அவற்றை செய்வதால்  மனிதனுக்கு இங்கு உண்டாகும் தீமைகளை விட மறுமையில் உண்டாகக்கூடிய வேதனைகளும் நரகத்து தண்டனைகளும் அதிபயங்கரமானவை. இறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆன் கூறுகிறது:

= 20:74 நிச்சயமாக எவன் தன் இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோ அவனுக்கு நரகம் நிச்சயமாக இருக்கிறது அதில் அவன் மரிக்கவும் மாட்டான் வாழவும் மாட்டான்.
= 7:41 அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும் (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
= 78:21 நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக! அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்!...... கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.!


அற்பமான தற்காலிக வாழ்க்கை

இன்று நாம் வாழும் தற்காலிகவாழ்கை என்பது மறுமையோடு ஒப்பிடும்போது மிகமிக அற்பமானதே.
= நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைவன் மீதாணையாக! மறுமையோடு ஒப்பிடும்போது இவ்வுலகின் நிலையானது, உங்களில் ஒருவர் தமது இந்த அதாவது சுட்டு விரலை கடலில் வைப்பதைப் போன்றுதான். அதில் எந்த அளவு தண்ணீர் ஒட்டிக்கொள்கிறது என்று அவர் பார்க்கட்டும். (நூல் :முஸ்லிம் 5490)

செயல்களின் பதிவேடு 
இறைவன் கூறுகிறான்:

தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா? அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா? மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)? (திருக்குர்ஆன் 90:7 -9)

இங்கு மனிதன் செய்யும் அத்துமீறல்கள் ஒவ்வொன்றும் தவறாமல் பலவகைகளில் பதிவாகின்றன. இன்று எங்கும் கண்காணிப்புக்காக பொருத்தப்படும் CCTV கேமராக்கள் பதிவு செய்கின்றனவோ அதைப்போலவே நம் ஒவ்வொருவரது கண்களும் காதுகளும் தோல்களும் நமது நடவடிக்கைகளை இயற்கையாகவே பதிவு செய்து கொண்டிருக்கின்றன. வேறு பலவகையிலும் நமது செயல்களின் பதிவுகள் நடந்து கொண்டிருந்தாலும் இவை ஒன்றே போதுமானவையாக இருக்கும் என்பதை நாம் அறியலாம்.

நமது வினைப் பதிவு இயந்திரங்கள்

இன்று நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் காது, கண், தோல் இவற்றை மறைத்துக்கொண்டு செய்ய முடியாது. நம் ஒவ்வொருவரது கண்களும் காதுகளும் தோல்களும் நமது நடவடிக்கைகளை இயற்கையாகவே பதிவு செய்து கொண்டிருக்கின்றன. இந்த உணர்வு நம்மில் எப்போதும் இருக்குமானால் நம்மைப் பாவங்கள் அண்ட வாய்ப்பில்லை.

மேலும், இறைவனின் பகைவர்கள் (நரகத்)தீயின் பால் ஒன்று திரட்டப்படும் நாளில், அவர்கள் (தனித் தனியாகப்) பிரிக்கப்படுவார்கள். இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும். (திருக்குர்ஆன் 41:19,20)

ஆம், மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருப்பவை அவனுடைய காதுகளும் கண்களும் தோல்களும். ஒலி அலைகள் காதுகளால் ஏற்கப்படுவதையும் ஒளி அலைகள் கண்களால் ஏற்கப்படுவதையும் அவற்றை உரிய இடங்களில் பதிவு செய்வதையும் இன்றைய அறிவியல் நமக்கு சொல்லித் தருகிறது. இவற்றோடு தோல்களும் நம் செயல்பாடுகளின் பதிவுகளைத் தாங்கி நிற்கின்றன என்பது மேற்படி வசனம் எச்சரிக்கிறது. இறுதித்தீர்ப்பு நாளன்று விசாரணையின்போது அவை மனிதனைக் காட்டிக்கொடுக்கும்போது அங்கு நடக்கும் உரையாடலைப் படம்பிடித்துக் கட்டுகிறான் இறைவன்:

41:21. அவர்கள் தம் தோல்களை நோக்கி, “எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று கேட்பார்கள்; அதற்கு அவை: “எல்லாப் பொருட்களையும் பேசும் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசும்படிச் செய்தான்;அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான்; பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்” என்று கூறும்.
41:22. “உங்கள் காதுகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும், உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லாமலிருக்கும் பொருட்டு, உ(ங்கள் பாவ)ங்களை நீங்கள் மறைத்துக் கொள்ளவில்லை; அன்றியும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிகுதமானதை நிச்சயமாக அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணிக்கொண்டீர்கள்.
41:23. ஆகவே, உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் எண்ணிய உங்களுடைய (தவறான) இந்த எண்ணம்தான் உங்களை அழித்து விட்டது; ஆகவே நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிட்டீர்கள் (என்றும் அவை கூறும்).

41:24. ஆகவே, அவர்கள் (வேதனையைச் சகித்துப்) பொறுமையாக இருந்த போதிலும், அவர்களுக்கு (நரக) நெருப்புத்தான் தங்குமிடம் ஆகும் - அன்றி (கூக்குரலிட்டு) அவர்கள் மன்னிப்புக்கேட்ட போதிலும், அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள்.
================= 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

செவ்வாய், 27 ஜனவரி, 2026

நபிகளாரைக் கொல்ல தீட்டப்பட்ட தீய சதி!


 நபிகளாரைக் கொல்ல தீட்டப்பட்ட தீய சதித் திட்டம்

அர்பத் பின் கைஸ் (Arbad bin Qays) மற்றும் ஆமிர் பின் அதுஃபைல் (Amir bin al-Tufayl) ஆகிய இருவரும் இஸ்லாமிய வரலாற்றில், குறிப்பாக முஹம்மது நபியவர்கள் காலத்தில் வாழ்ந்த முக்கிய நபர்கள் ஆவர். இவர்கள் இருவரும் பனூ ஆமிர் (Banu Amir) பழங்குடியினத்தைச் சேர்ந்த தலைவர்கள். ஹிஜ்ரி 9 அல்லது 10-ஆம் ஆண்டில் (கி.பி. 631), இவர்கள் மதீனாவிற்குச் சென்று நபியவர்களைச் சந்தித்தனர்.

அது இஸ்லாம் வளர்ச்சி பெற்று ஆட்சி அதிகாரம் கைகூடும் காலம்.

இஸ்லாத்தை ஏற்க பேரம் பேசுதல்!

மதீனாவில் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்தார்கள். இஸ்லாம் என்பது ஒரு சுயசீர்த்திருத்தக் கொள்கை என்பதைக் கூட அறியாமல் இறைத் தூதருக்கு ஏதோ நல்லது செய்வதைப் போல பேரம் பேச ஆரம்பித்தார்கள். ஆமிர் பின் அதுஃபைல், "ஓ முஹம்மதே! நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் எனக்கு என்ன தருவீர்கள்?" என்று கேட்டார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,  “எல்லா முஸ்லிம்களுக்கும் உள்ள உரிமைகளும் கடமைகளும் உங்களுக்கும் உண்டு.”

ஆமிர் பின் அதுஃபைல், "நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் என்னை உங்கள் வாரிசாக ஆக்குவீர்களா?" என்று கேட்டார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “அது உங்களுக்கோ உங்கள் மக்களுக்கோ உரிய உரிமை இல்லை. எனினும், நான் உங்களைக் குதிரைப் படையின் தளபதியாக (அதாவது, போருக்கு) நியமிக்க முடியும்.”

 ஆமிர், "நான் ஏற்கனவே நஜ்த் (அரேபியாவின் வடக்கில்) பகுதியின் குதிரைப் படைத் தளபதியாக இருக்கிறேன். எனக்குப் பாலைவனத்தின் கட்டுப்பாட்டைக் கொடுங்கள், நீங்கள் நகரங்களை வைத்துக்கொள்ளுங்கள்" என்றார்.

நபி (ஸல்) அவர்கள் மறுத்துவிட்டார்கள். இஸ்லாத்தை ஏற்பதற்கு யாரும் யாரையும் நிர்பந்திக்கவும் முடியாது. அதை ஏற்பதற்கு பேரம் பேசுவதும் தவறு.

அமீர் இப்னு துஃபைல் மற்றும் அர்பித் இப்னு கைஸ் ஆகியோரின் அனைத்து முயற்சிகளும், நபி (ஸல்) அவர்களிடமிருந்து அதிகாரத்தையும் ஆட்சியையும் பெறுவதில் தோல்வியடைந்தபோது, ​​அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பதுங்கியிருந்து தாக்க ஒரு தீய திட்டத்தைத் தீட்டினர்.

அமீர் இப்னு துஃபைல், அர்பித் இப்னு கைஸிடம், “நான் அவரைப் பேச்சில் ஈடுபடுத்தி வைத்திருப்பேன், நீ பின்னால் இருந்து காத்திரு. அவர் என்னுடன் பேசுவதில் முழுமையாக மூழ்கியிருப்பதை நீ காணும்போது, ​​அவருக்குப் பின்னால் பதுங்கிச் சென்று உன் வாளால் அவரைத் தாக்கு!” என்று கூறினான்.

இந்த இரண்டு தீய மனிதர்களும் இதைத்தான் செய்ய முடிவு செய்தனர். அமீர் இப்னு துஃபைல், நபி (ஸல்) அவர்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக அவர்களுடன் வாதிடத் தொடங்கினான். அர்பித், நபி (ஸல்) அவர்களைத் தற்காப்பற்ற நிலையில் பிடிப்பதற்காகப் பின்னால் காத்திருந்தான்.

நபி (ஸல்) அவர்கள் துஃபைலுடன் பேசுவதில் முழுமையாக மூழ்கியிருப்பதையும், தன்னை அவர்கள் கவனிக்க மாட்டார்கள் என்பதையும் அர்பித் கண்டபோது, ​​அவன் மெதுவாக நபி (ஸல்) அவர்களின் முதுகுக்குப் பின்னால் பதுங்கிச் சென்று தாக்குவதற்குத் தயாரானான். அமீர், அவன் அங்கே நிற்பதைக் கண்டு, திட்டத்தைச் செயல்படுத்துமாறு சைகை காட்டினான். ஆனால் அர்பித் அசைவற்று நின்றான். அவனால் ஒரு தசையைக் கூட அசைக்க முடியவில்லை. தனக்கு என்ன நடக்கிறது என்று அவனுக்குத் தெரியவில்லை. அவன் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தான். அவனது கை வாளுடன் ஒட்டிக்கொண்டு உறைந்து போயிருந்தது.

அமீர் இப்னு துஃபைல், அர்பித் எதுவும் செய்யாததைக் கண்டபோது, ​​அவன் விரைவாகப் பேச்சை மாற்றி, அந்த விஷயத்தை இரகசியமாக விவாதிப்பதற்காகத் தனக்குச் சிறிது தனிப்பட்ட நேரம் தருமாறு நபி (ஸல்) அவர்களிடம் கூறினான்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அவர்கள் தமக்கு எதிராகச் சதி செய்ய முயற்சிக்கிறார்கள் என்பதை உணர்ந்து, அதை முற்றிலும் மறுத்து, “நீங்கள் அல்லாஹ்வை, அவன் ஒருவன் என்றும் அவனுக்கு எந்தக் கூட்டாளிகளும் இல்லை என்றும் நம்பும் வரை, நான் உங்களுக்கு மேலதிக நேரம் தரமாட்டேன்” என்று கூறினார்கள்.

தோல்வியுடன் திரும்புதல்

தூதருக்கு (ஸல்) தீங்கு விளைவிப்பதற்காகத் தீட்டிய தங்கள் தீய சதித் திட்டத்தில் தாங்கள் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டோம் என்பதை அமீரும் அர்பிதும் உணர்ந்தபோது, ​​அமீர் தூதரை அச்சுறுத்தத் தொடங்கினான்:

“அல்லாஹ்வின் மீது ஆணையாக, குதிரைப்படை வீரர்கள் மற்றும் காலாட்படை வீரர்கள் உட்பட எனது படைகள் அனைவரையும் உங்களுக்கு எதிராகத் திரட்டுவேன்!”

நபிகளார் அமைதியாகக் கூறினார், “உயர்ந்தோன் அல்லாஹ் உன்னை எனக்குத் தீங்கு செய்ய அனுமதிக்க மாட்டான். அன்சாரிகளின் இளைஞர்கள் என்னைப் பாதுகாக்க இங்கே இருக்கிறார்கள்.”

அமீர் இப்னு துஃபைலும் அர்பித் இப்னு கைஸும் ஆணவத்துடனும் வெறுப்புடனும் திரும்பிச் சென்றபோது, ​​நபி (ஸல்) இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்,  யா அல்லாஹ், அமீர் இப்னு துஃபைலின் காரியத்தை நீயே கவனித்துக்கொள்.”

அந்த இரண்டு தீயோர்களும் மதீனாவை விட்டு வெளியேறிச் சென்றுகொண்டிருந்தபோது, ​​அமீர் அர்பிதிடம் கூறினான், “நீ ஏன் எதுவும் செய்யவில்லை?  நீ அவருக்குப் பின்னால் நின்றுக்கொண்டு எதுவும் செய்யாமல் இருந்தாய். இதற்கு முன்பு, பூமியின் மீது எனக்கு மிகவும் அஞ்சத்தக்க மனிதனாக நீ இருந்தாய், இப்போது நான் உன்னைக் கண்டு ஒருபோதும் அஞ்ச மாட்டேன்!”

அர்பித் கோபத்துடன் பதிலளித்தான், “என்னை அவசரமாக மதிப்பிடத் துணியாதே! நான் சொல்வதைக் கேள். நீ சொன்னபடியே நான் செய்தேன், ஆனால் நான் அவருக்குப் பின்னால் சென்றபோது, ​​என் கை என் வாளுடன் ஒட்டிக்கொண்டது, நான் முற்றிலும் முடங்கிப் போனேன்!”

அமீர் இப்னு துஃபைலின் கொடிய முடிவு

அவர்கள் தங்கள் வீட்டிற்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தபோது, ​​அமீர் இப்னு துஃபைலுக்கு ஒரு கொடிய நோய் தாக்கியது. அவனது கழுத்தில் ஒரு பெரிய கட்டி வளரத் தொடங்கியது, அதனால் அவன் ஓய்வெடுக்க அருகிலுள்ள ஒரு இடத்தைத் தேடினான். ஒரு வயதான நாடோடிப் பெண்ணுக்குச் சொந்தமான ஒரு கூடாரத்தைக் கண்டு, அதில் ஓய்வெடுத்தான். அவன் வலியால் அழுதுகொண்டே, “ஐயோ, என் நிலைமை எவ்வளவு பரிதாபமானது! ஒரு வயதான நாடோடிப் பெண்ணின் வீட்டில், ஒட்டகத்தின் மரணத்தை நான் மரிக்கிறேன்! என் குதிரையைக் கொண்டு வாருங்கள்!” என்று கூறினான்.

அவனுடைய குதிரை கொண்டுவரப்பட்டபோது, ​​அவன் அதில் ஏறப் போராடி, தன் ஈட்டியைப் பிடித்துக்கொண்டு, “முஹம்மதையோ அல்லது அவருடைய தோழர்களில் யாரையாவது நான் கண்டால், நிச்சயமாக இந்த ஈட்டியால் அவர்களைத் தாக்குவேன்!” என்று கூறினான். பின்னர் இறைவன் அமீர் இப்னு துஃபைல் மீது ஒரு வானவரை அனுப்பினார். அந்த வானவர் அவரை அவரது குதிரையிலிருந்து கீழே தள்ளினார், அவர் பின்னால் தரையில் விழுந்து உடனடியாக இறந்து போனார்.

அவனது தோழரான அர்பித் இப்னு கைஸின் முடிவும் இறைதண்டனையாகவே இருந்தது. இவர் தனது ஊருக்குத் திரும்பும் வழியில் திடீரென மின்னல் தாக்கி, அவரும் அவரது ஒட்டகமும் கருகிச் சாம்பலாயினர். (ஹதீஸ் ஆதாரம்: தபரானி)

ஆம், இறைவனின் தூதரின் பிரார்த்தனைகள் வலுவானவை. அவற்றை இறைவன் அப்படியே ஏற்றுக்கொண்டான்!

மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றனர். இன்னும் அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான்; (இவ்வாறிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கிக்கின்றனர், அவனோ மிகுந்த வல்லமையுடையவனாக இருக்கின்றான். (திருக்குர்ஆன் 13:13)

------------------------ 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

வியாழன், 22 ஜனவரி, 2026

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் – ஜனவரி 26 இதழ் PDF

 


திருக்குர்ஆன் நற்செய்தி மலர் – ஜனவரி 26 இதழ்

பொருளடக்கம்:

புதிய ஆண்டு – புதிய மனிதன் -2

இஸ்லாம் நபித்தோழர்களில் ஏற்படுத்திய அதிசய மாற்றங்கள் -4

நபிகளார்  – மனமாற்றத்திற்கான  சிறந்த  ஆசான் -6

மனமாற்றமும் குணமாற்றமுமே இலக்கு  -8

கண்டிக்கக் கற்றுத்தரும் அழகிய ஆசான் நபிகளார் -9

தவறைத் திருத்தும் நபிவழி

விபச்சாரத்தில் இருந்து விடுபட்ட இளைஞன்! -11

பள்ளிவாசலில் சிறைக்கைதியின்  தலைகீழ் மனமாற்றம்  - 14

சிறைச்சாலைகளை ஏன் சீர்திருத்த வேண்டும்?-18

சிறைவாசிகளை சீர்திருத்திடும் இறைநம்பிக்கை! -21

மால்கம் எக்ஸ் – சிறையிலிருந்து  சிந்தனைப் புரட்சிவரை.. -23

--------------------