இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 19 ஜூன், 2026

மனித படைப்பும் அவனது துணைவியும்!

 


மேலும், அவன் உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பதும், பின்பு நீங்கள் மனிதர்களாக (பூமியின் பல பாகங்களில்) பரவியதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (திருக்குர்ஆன் 30: 20-21)

விளக்கம்:
மனிதனின் படைப்பும் இனப்பெருக்கமும் இறைவனது வல்லமையையும் ஆற்றலையும் உணர்த்தும் சான்றுகளாகும்
மனிதனின் ஆரம்பம் மண்ணில் உள்ளது; பின்னர் ஒரு அற்பமான துளி (இந்திரியம்), பிறகு அது ஒரு கருக்கட்டியாக மாறுகிறது, பிறகு ஒரு தசைப்பிண்டமாக, பின்னர் மனித உருவில் எலும்புகளாக மாறுகிறது. பிறகு இறைவன் அந்த எலும்புகளுக்குச் சதையை அணிவிக்கிறான். பின்னர் அந்த உருவத்திற்குள் உயிர் ஊதப்படுகிறது; அப்போது மனிதக் கருவாக அவன் கேட்கவும் பார்க்கவும் செய்கிறான். பின்னர் அவன் தன் தாயின் கருவறையிலிருந்து சிறு குழந்தையாகவும் பலவீனமானவனாகவும் வெளிவருகிறான். அவன் வளர வளர அவனது பலமும் அதிகரிக்கிறது; அவன் நகரங்களையும் கோட்டைகளையும் கட்டும் வயதை அடைகிறான். அவன் பல்வேறு தேசங்களுக்கும் கடல்களுக்கும் பயணம் செய்து, வாழ்வாதாரத்தைத் தேடிச் செல்வத்தைச் சேர்க்கிறான். அவன் புத்திசாலித்தனமும், அறிவும், தந்திரமும் மிக்கவனாகவும், சுய சிந்தனை மற்றும் கருத்துக்களைக் கொண்டவனாகவும் இருக்கிறான். இவை அனைத்துக்கும் பின்னால் இருப்பது இறைவனின் ஆற்றலும் அருளுமே!

 பின்னர் ஒவ்வொரு மனிதரும் தத்தமது தனிப்பட்ட திறமைக்கு ஏற்ப, இம்மையிலும் மறுமையிலும் மகத்தான காரியங்களைச் சாதிக்கின்றனர். அவர்களுக்கு வாழ்வாதாரத்தைத் தேடுவதற்கான பல்வேறு கலைகளையும் திறமைகளையும் கற்றுக்கொள்கின்றனர். அவற்றை செயல்படுத்துகின்றனர். ஆனால் அவை அனைத்தையும்  அவர்களுக்கு எளிதாக்கியவன் இறைவன் மட்டுமே! அவன் தூய்மையானவன். அவர்களின் அறிவுத்திறன், தோற்றம், செல்வம், பாக்கியம் மற்றும் துரதிர்ஷ்டம் ஆகியவற்றில் அவர்களுக்கு இடையே வேறுபாடுகளை ஏற்படுத்தியவனும் அவனே.

அதைத்தான் இறைவன் மேலே கூறுகிறான்:
அவன் உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பதும், பின்னர் நீங்கள் மனிதர்களாகப் பூமியில் பரவி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும்!” என்று.

இன்னும் வேறொரு வசனத்தில் அவன் பின்வருமாறு கூறுகிறான்:

அவன்தான் உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பின் இந்திரியத்திலிருந்தும் பின் அலக் என்னும் நிலையிலிருந்தும் (உருவாக்கி) உங்களைக் குழந்தையாக வெளியாக்குகிறான்; பின் நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைந்து, பின்னர் முதியோராகுகிறீர்கள்; இதற்கு முன்னர் இறந்து விடுவோரும் உங்களில் இருக்கின்றனர் - இன்னும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணையை அடைவீர்கள்; (இதிலிருந்து) நீங்கள் உணர்வு பெறும் பொருட்டு (இதை அறிந்து கொள்ளுங்கள்). (திருக்குர்ஆன் 40:67)

வேற்றுமைகள் எவ்வாறு?

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நிச்சயமாக இறைவன், ஆதம் (அலை) அவர்களைப் பூமி முழுவதிலிருந்தும் எடுக்கப்பட்ட ஒரு கைப்பிடி மண்ணிலிருந்து படைத்தான். எனவே, ஆதமின் மக்கள் பூமியின் தன்மைகளுக்கு ஏற்பப் பிறந்தனர்; அவர்களில் வெள்ளையர்களும், சிவப்பர்களும், கருப்பர்களும், அவர்களுக்கு இடைப்பட்ட நிறத்தவர்களும், அதேபோல் தீயவர்களும், நல்லவர்களும், மென்மையானவர்களும், கடினமானவர்களும் — அல்லது இவர்களுக்கு இடைப்பட்ட குணமுடையவர்களும் இருக்கிறார்கள்.” (நூல்: அபூதாவூத் மற்றும் திர்மிதீ)

மனிதனுக்குத் துணைவி

 தொடர்ந்து இறைவன் கூறுகிறான்: அவன் உங்களுக்காக உங்களிலிருந்தே மனைவியரைப் படைத்திருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளதாகும். (வசனம் 21)  

அதாவது, ‘உங்களுக்கு மனைவியராக இருப்பதற்காக உங்கள் இனத்திலிருந்தே பெண்களை அவன் படைத்தான்.’

(நீங்கள் அவர்களிடம் அமைதி பெறுவதற்காக.) இது பின்வரும் வசனத்தைப் போன்றது:
அவனே உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான்; அவர் அவரிடம் அமைதி பெறுவதற்காக அவரிடமிருந்தே அவரது ஜோடியைப் படைத்தான் (திருக்குர்ஆன் 7:189).

இது ஆதித்தாய் ஹவ்வா அவர்களைக் குறிக்கிறது. இறைவன் அவர்களை ஆதம் (அலை) அவர்களின் இடது பக்க விலா எலும்பிலிருந்து படைத்தான்.
இறைவனின் பூரணமான கருணையால், அவன் அவர்களது மனைவியரை அவர்களது சொந்த இனத்திலிருந்தே படைத்து, அவர்களுக்கு இடையே அன்பையும் இரக்கத்தையும் உண்டாக்கினான். அவர்களுக்கு இடையே பரஸ்பர கவர்ச்சியும் நேசமும் நெருக்கமும் உருவாவதும், தொடர்ந்து இனப்பெருக்கத்தில் உருவாகும் குழந்தை செல்வங்களும், அவை அவர்களின் பந்தத்தை உறுதிப்படுத்துவதும் குடும்பக் கட்டமைப்பை வலுப்படுத்துவதும், பிற்காலத்தில் அக்குழந்தைகள் முதுமையடைந்த பெற்றோருக்கு கைத்தாங்கலாக ஆவதும் என அனைத்தும் அந்த இறைவனின் அளவிலாக் கருணையின் வெளிப்பாடுகளே!
“நிச்சயமாக, சிந்திக்கும் மக்களுக்கு இதில் பல அத்தாட்சிகள் உள்ளன” என அந்த வசனம் நிறைவடைகிறது.

(விளக்கம் மூலம்: தப்சீர் இப்னு கஸீர்)

============

இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்பு! பேரிழப்பு!

நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்
நாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_9390.html

வியாழன், 28 மே, 2026

திருக்குர்ஆன் நற்செய்தி மலர்- ஜூன் 26


திருக்குர்ஆன் நற்செய்தி மலர்-  ஜூன் 26

தியாகத் திருநாள் சிறப்பிதழ் 

பொருளடக்கம் 

தியாகமில்லாமல் உயர்வு இல்லை!-2

 கேள்வி -பதில் பகுதி -3

மனித வரலாற்றை உலுக்கிய இறைநம்பிக்கையின் உச்சம் -4

உலக இளைஞர்களுக்கான மறக்க முடியாத முன்மாதிரி-7

இன்றைய இளைஞர்களை திருத்துவது எப்படி? -10

உலக பெண்களுக்கு ஒரு உயர்ந்த முன்மாதிரி- ஹாஜரா (அலை) -12

பகுத்தறிவுத் தந்தை இப்ராஹீம் (அலை)-14

ஆணவக்கார அரசனை வாயடைக்கச் செய்த இப்ராஹீம் -17

இப்ராஹீம் வழியில் இறுதித் தூதரின் தியாகங்கள் -19

ஹஜ்ஜில் இப்ராஹீம் குடும்பத்தின் தியாக நினைவுகள் -21

குறைந்து வரும் தியாகம்.. பெருகும் சுயநலம்!-23

=============== 


செவ்வாய், 19 மே, 2026

நபிகளாரின் எதிரி முன்வைத்த கேள்வி


நபிகளாரின் எதிரி முன்வைத்த கேள்வி 

நபிகள் நாயகம் அவர்கள் தங்கள் வாழ்நாளின் போது மக்கா நகரில் சத்தியப் பிரச்சாரம் செய்து மக்களை நேர்வழிக்கு அழைத்துக் கொண்டிருந்தார்கள். சிலை வழிபாட்டைக் கைவிட்டுவிட்டு படைத்தவனை நேரடியாக வணங்குங்கள், சக மனிதனை சமமாகவும் சகோதரனாகவும் பாவியுங்கள், மனித உரிமை மீறலையும் பெண்களை அடிமைகளாக நடத்துவதையும் கைவிடுங்கள், பெற்றோரையும் உற்றாரையும் பேணுங்கள், ஒழுக்கம் பேணி வாழுங்கள் என்பனவே அவரது அழைப்பின் சாரம்.

அவ்வாறு ஒழுக்கம் பேணாமல் தான்தோன்றித்தனமாக வாழ்வோருக்கு மறுமையில் நரக தண்டனை காத்திருக்கிறது என்றும் எச்சரித்தார்கள். மூதாதையரின் மூடப் பழக்க வழக்கங்களுக்கு அடிமைகளாயிருந்த மக்களில் பெரும்பாலோர் நபிகளாரது பிரச்சாரத்திற்கு எதிராக நின்றார்கள். நபிகளாரின் பிரச்சாரத்தைக் கேட்டு மக்கள் ஒழுக்க வாழ்வு வாழ ஆரம்பித்தால் தங்கள் ஆதிக்கமும் சுரண்டலும் தொடர முடியாது என்பதை உணர்ந்த மக்காவின் ஆதிக்க வர்க்கமும் இடைத் தரகர்களும் அவரை முழு மூச்சாக எதிர்த்தார்கள். நபிகளாரையும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்களையும் துன்புறுத்தினார்கள். அடக்கு முறைகளையும்  சித்திரவதைகளையும் ஏவினார்கள்.

எதிரியை எதிர்கொண்ட நபிகளார்

ஒருநாள் நபிகளாரின் பிரச்சாரத்திற்கு பெரும் எதிரியாக விளங்கிய உபை பின் கலஃப் என்பான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தான். அவன் கையில் மக்கிப்போனதோர் எலும்பு இருந்தது அதை அவன் நொறுக்கி , காற்றில் தூற்றியவாறு, “முஹம்மதே அல்லாஹ் இதை மறுபடியும் உயிர் கொடுத்து எழுப்புவான் என்று கருதுகிறீரா? " எனக் கேட்டான்.

 நபி (ஸல்) அவர்கள், " ஆம் உயர்ந்தோன் அல்லாஹ் உன் உயிரைக் கைப்பற்றுவான் . பின்னர் மறுபடியும் உயிர்கொடுத்து உன்னை எழுப்புவான் , பின்னர் உன்னை நாகத்திற்குக் கொண்டுசெல்வான்" என்று உறுதியான மொழிகளில்  பதிலளித்தார்கள் .

அப்போது இறைவன் புறத்திலிருந்து நபிகளாருக்கு இறங்கிய வசனங்களே கீழ்கன்டவை:

= மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்கவாதியாகி விடுகிறான். மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று. முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்என்று (நபியே!) நீர் கூறுவீராக! (திருக்குர்ஆன் 36:77-79)

அதாவது மறுபடியும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவதை மறுப்பவன், தொடக்கத்தில் படைக்கப்பட்டதைச் சான்றாகக் கொள்ளமாட்டானா?

ஏனெனில் , அல்லாஹ் மனிதனைப் படைத்தது . ஓர் அற்பமான (விந்து) நீரின் சத்திலிருந்துதான்-. அதாவது அற்பமான பலவீனமான ஒன்றிலிருந்தே-  மனிதனைப் படைத்தான் .

வேறு வசனங்களில் இறைவன் குறிப்பிடுகின்றான்:

= “நாம் உங்களை அற்பமான நீரிலிருந்து படைக்கவில்லையா? (திருக்குர்ஆன்  77:20)

= “நாம் மனிதனை ( இரு உயிர்மூலக் கூறுகளின் ) கலவையான விந்திலிருந்து -அதாவது பல்வேறு நீரியல் தாதுக்கள் கொண்ட விந்திலிருந்து - படைத்தோம் (திருக்குர்ஆன் 7:62)

ஆக, இத்தகைய பலவீனமான விந்துத் துளியிலிருந்து மனிதனைப் படைத்த இறைவனுக்கு . மனிதன் இறந்த பின் அவனை மறுபடியும் படைக்க இயலாதா? என்று சிந்திக்கச் சொல்கிறான் இறைவன்.

படைப்பினங்களைக் கண்டு படைத்தவனின் வல்லமை அறிவாய்

இறைவனின் வல்லமையை ஆராய்ந்து அறிவோருக்கு மீண்டும் படைக்கப் படுதல் சாத்தியமே என்பதை கண்டிப்பாக உணர முடியும். நாம் மூட்டும் நெருப்பும் எல்லை அறியப்படாத வான மண்டலங்களும் நாம் வசிக்கும் பூமியும் எல்லாம் அந்த இறைவனின் வல்லமையை எடுத்துரைக்கும் சான்றுகளாக நிற்கின்றன.

= அவன் எத்தகையவனென்றால், உங்களுக்காக பசுமையான மரத்திலிருந்து நெருப்பை உண்டாக்கினான், அப்போது அதிலிருந்து நீங்கள் (நெருப்பை) மூட்டுகிறீர்கள்.

வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்களைப் படைக்கச் சக்தியற்றவனா? ஆம் (சக்தியுள்ளவனே!) மெய்யாகவே, அவனே (பல வகைகளையும்) படைப்பவன்; யாவற்றையும் நன்கறிந்தவன். அவன் ஏதாவது ஒருபொருளைப் படைக்க நாடினால், அவன் செய்வது ஆகுக!என்று அதற்கு ஆணை இடுவதுதான்; உடனே அது ஆகிவிடுகின்றது! (திருக்குர்ஆன் 36:80- 82)

 அதாவது சிறிதும் பெரிதுமான அனைத்தையும் அவற்றின் நுணுக்கங்களோடு அதிபக்குவமான முறையில் படைத்து அவற்றை நித்தம் பரிபாலித்து வருபவனுக்கு அற்ப மனிதனை மீண்டும் படைப்பது என்பது எவ்வளவு எளிதானது? நீங்கள் சிந்திக்க வேண்டாமா என்கிறது இறைமறை. ஒரு மனிதனுக்கு அல்லது மனித குலத்திற்கு ஒரு பொருளை அல்லது இயந்திரத்தை உருவாக்குவது என்பது பல்லாண்டுகால அனுபவமும் ஆராய்ச்சியும் அவற்றின் ஒருங்கிணைத்தலும் அவற்றின் மூலக்கூறுகளை சேகரித்தலும் ஒன்று சேர்த்தலும் என பலவும் தேவைப்படுகிறது. ஆனால் அறவே இல்லாமையில் இருந்து அதிபக்குவமான பிரபஞ்சத்தையும் அவற்றில் உள்ளடங்கி உள்ளவற்றையும் படைப்பவனுக்கு மனிதனை மட்டுமல்ல, எப்பொருளையும் படைப்பதற்கு அவனது சிறு கட்டளை போதுமானது. மனிதர்கள் கற்பனை செய்யும் பலவீனங்களுக்கு எல்லாம் அவன் அப்பாற்பட்டவன். அவற்றில் இருந்தெல்லாம் தூய்மையானவன் அந்த சர்வவல்லமை வாய்ந்த இறைவன். மரித்தபின் அவன்பாலே நாம் இறுதி விசாரணைக்காகவும் மீள இருக்கிறோம்.   தொடர்ந்து நம் வினைகளுக்கேற்ப சொர்கத்திலோ அல்லது நரகத்திலோ நுழைய இருக்கிறோம்!

= சகலவற்றின் அதிகாரமும் எவனுடைய கையில் இருக்கின்றதோ அவன் மிகப் பரிசுத்தமானவன். அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (திருக்குர்ஆன்  36:83) 

================ 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்
நாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_9390.html


திங்கள், 20 ஏப்ரல், 2026

ரமலான் விரதமும் தன்விழுங்கலும் (Autophagy)

இறைவனின் படைப்பாற்றல் அற்புதங்கள்


ரமலான் விரதமும் தன்விழுங்கலும்

2016-ல் ஜப்பானிய உயிரியலாளர் யோஷினோரி ஓஸுமி அவர்கள் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வாங்கினார். அவர் என்ன கண்டுபிடித்தார்? 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உண்ணாவிரதம் (நோன்பு) செய்பவர்கள் அனுபவத்தால் தெரிந்த ஒரு ரகசியத்தை அவர் அறிவியலால் நிரூபித்தார்! 

 அந்த ரகசியத்தின் பெயர் ஆட்டோஃபேஜி (Autophagy) — அதாவது "தன்னைத்தானே உண்ணுதல்". உங்கள் உடல் செல்களே தங்களுக்குள் இருக்கும் சேதமான, பழுதான, தேவையில்லாத பாகங்களைப் பார்த்து, அவற்றைச் சுத்தம் செய்து, மறுபயன்பாட்டுக்கு கொண்டு வரும் அற்புத அமைப்பு இது!   

 செல்கள் உள்ளே இருக்கும் குப்பை, சேதமான மைட்டோகாண்ட்ரியா (எனர்ஜி ஃபேக்டரி), மூளையில் அடைக்கும் கெட்ட புரதங்கள் (அல்சைமர் வரும் பிளேக்ஸ்), "ஜோம்பி செல்கள்" (வேலை செய்யாத ஆனால் அழற்சியை உண்டாக்கும் செல்கள்) — எல்லாத்தையும் கண்டுபிடித்து, ஒரு சிறிய பைக்குள் (ஆட்டோஃபகோசோம்) போட்டு, உடைத்து, அவற்றின் நல்ல பொருட்களை மறுசுழற்சி செய்து புதிய செல்களுக்கு பயன்படுத்தும்! 

 இது உங்கள் உடலின் உள்ளார்ந்த பராமரிப்பு சிஸ்டம். எந்த லேபரட்டரியாலும் இப்படி ஒரு அற்புதமான சுத்திகரிப்பை இன்னும் செய்ய முடியவில்லை. 

 ஆன்-ஆஃப் ஸ்விட்ச்

இந்த ஆட்டோஃபேஜிக்கு ஒரு எளிய ஆன்-ஆஃப் ஸ்விட்ச் உள்ளது. அதுதான் இன்சுலின் இல்லாத நிலை! 

 நீங்கள் சாப்பிடும் போது — குறிப்பாக அரிசி, ரொட்டி, இனிப்பு, கார்போஹைட்ரேட் அதிகம் இருந்தால் — உங்கள் பேன்க்ரியாஸ் இன்சுலினை வெளியிடும். இன்சுலின் *mTOR* என்கிற சென்சரை ஆன் செய்யும். mTOR உங்கள் செல்களுக்கு “ஏராளமா உணவு இருக்கு... வளரு! கட்டு!” என்று சொல்லும். அப்போது உடல் Growth mode (வளர்ச்சி நிலையில்) இருக்கும். சுத்தம் செய்யும் ஆட்டோஃபேஜி முழுக்க ஆஃப் ஆகிவிடும். 

நம் நாட்டு மக்களில் பெரும்பாலானோர் காலையில் எழுந்ததில் இருந்து இரவு வரை 16-18 மணி நேரம் இந்த கிரோத் மோட்-லேயே இருக்கிறோம். சுத்தம் செய்யும் நேரமே இல்லை! 

 ஆனால் 12-14 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தால்? இன்சுலின் குறையும். mTOR ஆஃப் ஆகும். ஆட்டோஃபேஜி ஆன் ஆகும்!  அதனால் என்ன நடக்கிறது?

செல்கள் உள்ளே இருக்கும் சேதமான மைட்டோகாண்ட்ரியாவை சுத்தம் செய்யும் (மைட்டோஃபேஜி). மூளையில் அடைக்கும் கெட்ட புரதங்களை அகற்றும். வயதான ஜோம்பி செல்களை அழித்து அழற்சியை குறைக்கும். மூளையில் BDNF என்ற நல்ல ஹார்மோன் அதிகரிக்கும் — நினைவாற்றல், மன அழுத்தம் குறையும்!  

இது உங்கள் உடலின் பழைய இயற்கை ரிதம்!

 நம் முன்னோர்களுக்கு ஃபிரிட்ஜ் இல்லை. உணவு எப்போதும் கிடைக்காது. சீசன் படி உணவு வரும். அதனால் உடல் தானாகவே சுத்தம் செய்யும் நேரம் கிடைத்தது. இப்போ நாம் 24 மணி நேரமும் உணவு கிடைக்கிறது என்பதால் உடல் அந்த சுத்தம் செய்யும் மோட்-க்கே போகவில்லை. 

இறைநம்பிக்கையாளர்களுக்கு நன்மை

இருந்தாலும் கவலை வேண்டாம்.. அதைத்தான் வருடத்தில் ஒருமுறை ரமலான் மாத நோன்பு இறைவிசுவாசிகளுக்கு நிறைவு செய்கிறது.

இறைவிசுவாசிகளே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம். (திருக்குர்ஆன் 2:183)

திருக்குர்ஆன் என்ற ஒரு அருள்மறை நமக்கு அருளப்பட்ட காரணத்தால் அதற்கான நன்றிக்கடன் செலுத்தும் முகமாக நாம் ரமளானில் நாம் நோன்பு நோற்கிறோம். ஆனால் அதுவும் இறைநம்பிக்கையாளர்களுக்கு நன்மை பயப்பதாக ஆக்கியுள்ளான் கருணையுள்ள இறைவன்!  

ஆட்டோஃபேஜி ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பலன்: 

  • இன்சுலின் சக்தி அதிகரித்தல் (சர்க்கரை நோய் கட்டுப்பாடு) 
  • உடல் அழற்சி குறைதல் 
  • மூளை ஆரோக்கியம் அதிகரித்தல் 
  • விலங்குகளில் ஆயுள் கணிசமாக அதிகரித்தல்! 

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (திருக்குர்ஆன் 55:13)

================= 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

புதன், 8 ஏப்ரல், 2026

இளமையை எவ்வாறு கழித்தாய்?

https://www.facebook.com/reel/3831557226937264


ஒரு சமூகத்தின் அல்லது நாட்டின் ஜீவ நாடியாகவும் நிகரற்ற, மகத்தான வளமாகவும் அதன் உயிரோட்டமுள்ள ஓர் ஆக்க சக்தியாகவும் விளங்குபவர்கள்
  இளைஞர்கள் . அவர்களின் ஒழுக்கத் தரத்தைப் பொறுத்துதான் அந்த சமூகம் உயர்ந்த அல்லது உன்னத சமுதாயமாக வளர்ச்சி பெறுகிறது. 

இளமைப் பருவம் என்பது தனிமனித ஆளுமை வளர்ச்சிப் படியில் (Development of human personality) மிக முக்கிய பருவமாகவும், படித்தரமாகவும் அமைந்து காணப்படுகிறது. உடலாரோக்கியமும் உணர்ச்சி உத்வேகமும், துடிதுடிப்பும் அதிகமாக அமையப் பெறும் இப்பருவத்தில், ஒழுக்க ரீதியான பக்குவப்படுத்தப்படல் மிக அவசியமாகும். உடல் வலிமை மிக்க இப்பருவத்தில் இளைஞர்களின் ஆற்றல்களும், ஆவல்களும், வேட்கைகளும், உணர்வுகளும் சரியான முறையில் வழிநடத்தப்படல் வேண்டும். 
அதேவேளையில் இதில் கவனக்குறைவோ அலட்சியமோ நிகழ்ந்தால்  அந்த இளைஞர்களின் ஆற்றல்களும், திறமைகளும் அழிவு சக்திகளாக மாற்றப்படும். அவர்கள் மூளைச் சலவைக்கு உட்படுத்தப்பட்டு முழு சமூகத்திற்கும் நாட்டுக்கும் மட்டுமல்ல, அதுவே முழு மனித இனத்திற்கும் கூட அழிவையும், நாசத்தையும் விளைவித்து விடும்.
இன்று, உலகெங்கும் பரவலாகக் காணப்படும் ஒழுக்கக் கேடான நடவiடிக்கைகள், பாலியல் வன் கொடுமைகள், மது மற்றும் போதைபொருள் புழக்கங்கள், வன்முறை வெறியாட்டங்கள், கொலை, கொள்ளைச் சம்பவங்கள் போன்ற அனைத்தும் இளைஞர்களை மையமாகக் கொண்டே நிகழ்கின்றன. இவ்வாறு சமூகத்தின் ஆக்க சக்தியாக திகழ வேண்டிய இளைஞர்கள், அதன் அழிவு சக்தியாக மாறுவதற்குக் காரணம் அவர்களின் ஒழுக்கம் சார்ந்த விடயங்கள் பற்றிய அலட்சியமே. 

இறையச்சம் விதைப்போம்!
இந்த இளமைப்பருவம் பயனுள்ளதாக ஆக்கபூர்வமானதாக அமைய வேண்டுமானால் அதற்கு மனித மனங்களுக்குள் இறையச்சம் என்ற விதையை ஆழமாக விதைக்க வேண்டும். 
இறையச்சம் என்றால் என்ன?
1. இவ்வுலக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை போன்றது, இந்த உலகம் அதற்கான பரீட்சைக் கூடம் போன்றது.
2. இங்கு எனது செயல்கள் இறைவனால் கண்காணிக்கப் படுகின்றன. 
3. நான் செய்யும் நற்செயல்கள் புண்ணியங்களாகவும் தீய செயல்கள் பாவங்களாகவும்  பதிவாகின்றன. 
4.  ஒருநாள் இந்த பரீட்சைக் கூடம் இழுத்து மூடப்படும். அதற்குப் பிறகு இந்த பூமியில் (இந்த பரீட்சைக் கூடத்தில்) தோன்றி மறைந்த -முதல் மனிதனில் இருந்து இறுதி மனிதன் வரை- அனைவரும் உயிர்கொடுத்து எழுப்பப்பட்டு விசாரிக்கப் பட உள்ளார்கள்.
5. விசாரணைக்குப் பிறகு நம்முடைய நற்செயல் அல்லது தீய செயல்களின் எடையைப் பொறுத்து நமக்கு சொர்க்கமோ அல்லது நரகமோ விதிக்கப்பட உள்ளது. 
6. மறுமை வாழ்விடம் - சொர்க்கத்திலோ அல்லது நரகத்திலோ - அதுதான் மனிதனின்  நிரந்தர மற்றும் உண்மையான வாழ்விடம் ஆகும். 

மேற்கண்ட உண்மைகளை  கருத்தில்கொண்டு அதற்கேற்ப வாழும்போது உண்டாகும் பொறுப்புணர்வுக்கே இறையச்சம் என்று கூறப்படும். அதாவது பூமியில் மனிதன் ஒழுக்கம் பேணி வாழ்வதற்கான அடிப்படையே இறையச்சம்!
இளமைப்பருவம் கேள்விக்குரியது:
= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'உனக்கு, ஐந்து விடயங்கள் வருவதற்கு முன்னர், ஐந்து அருட்கொடைகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள் அவை:
1. மரணம் வரமுன் வாழ்க்கையையும்.
2. நோய் வரமுன் உடலாரோக்கியத்தையும்.
3. அதிக வேலை பழுக்கள் வரமுன் ஓய்வு நேரத்தையும்.
4. முதுமை வரமுன் இளமைப் பருவத்தையும்.
5. வறுமை வரமுன் செல்வநிலையையும்' 
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரழி)
நூல்  : நஸாயீ.

= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மறுமை நாளில் ஓர் அடியான் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கும் வரை அவனது கால்கள் இரண்டும் நகர முடியாது. அவை:
1. தனது (உலக) வாழ்வை எவ்வாறு கழித்தான்?
2. தனது வாலிபப் பருவத்தை எவ்வழிகளில் ஈடுபடுத்தினாய்?
3. செல்வத்தை எவ்வாறு சம்பாதித்தாய்? அதை எவ்வாறு செலவழித்தாய்?
4. பெற்ற அறிவின் மூலம் என்ன செய்தாய்?' என 
அறிவிப்பவர் : முஆத் இப்னு ஜபல் (ரழி)
நூல்  : தபரானி.

===============   
இளமைப் பருவம்:
மனித வாழ்வு பல பருவங்களைக் கடந்து செல்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்து சிறு பிராயத்தை அடைந்து, அதிலிருந்து வளர்ச்சியுறுகின்ற பருவமாக இளமைப் பருவம் உள்ளது. இப்பருவம் வாழ்வுக்கான பொறுப்புணர்ச்சியை வழங்க வேண்டியுள்ளது. வாழ்வின் திசை எது என்பதை தீர்மானிக்க வேண்டிய பருவமாகவும் உள்ளது. இக்காலப்பிரிவிலே இளைஞனது உடல், உள்ளம், புலன்கள், உணர்வுகள் என்பன மிகத்துடிப்புடன் செயற்படுகின்றமையால் வளப்படுத்தப்படல் வேண்டும்.
இளமையின் பண்பு:
இளைஞர்கள் உடல் வலிமைமிக்கவர்கள்; பெருமளவு உடல் ஆரோக்கியமானவர்கள்; உள்ளம் தெளிவானவர்கள்; உணர்வுகள் விறுவிறுப்பானவர்கள்; புலன்கள் துடிதுடிப்பாகச் செயற்படுகின்றவர்கள். எனவே, ஆவல்களும் வேட்கைகளும் அதிக ஆசைகளும் உடையவர்கள். எல்லா வகையிலும் உயிரோட்டமுடனும், துடிதுடிப்புடனும் செயற்படுகின்ற தன்மையுடையவர்கள். முpக இலகுவிலேயே உணர்ச்சி வசப்பட்டு, அதன்படியாய் செயற்பட முனைந்துவிடுவார்கள். இக்கால கட்டத்தில், இளைஞர்கள்; பெற்றோர், உறவினர்கள் போன்ற பிறரில் தங்கி நிற்பதில் இருந்து தன்னில் சுயமாக தங்கி நிற்க பிரயத்தனப்படுவர். இது, இளமையின் முக்கிய பண்பாக கானப்படுகிறது. 'ஒரு கொள்கைக்காக ஆயத்தப்படுத்துகின்ற, வாழ வைக்க முனைகின்ற, பக்குவப்படுத்துகின்ற பருவமாக உள்ளது' என உளவியலாளர்கள் கருதுகின்றனர்.
இலட்சியக் கனவு காணும் பருவம்:
இளமை பருவத்தின் இன்னொரு முக்கிய பண்பாக எதிர்காலத்தைப் பற்றிய இலட்சியக் கனவு காணல் அமைகிறது. இளமைக் காலத்திலே துடிப்போடும், கற்பனை வளமிக்க தன்மையுடனும் இருக்கின்ற இளைஞர்கள், தனிப்பட்ட தன் சுய முன்னேற்றம் பற்றியும், குடும்ப உயர்வு பற்றியும் இலட்சியக் கனவு காண்பார்கள். இப்பருவத்தில் தன்னுடைய முன்னேற்றம் பற்றி மட்டும் சிந்திப்பவர்கள் இருப்பார்கள். குடும்ப மேம்பாடு பற்றி மட்டும் சிந்திப்பவர்கள் இருப்பார்கள். பல்வேறு சிந்தனை வேறுபாடுடைய இளைஞர்கள் இருப்பார்கள். சுயநலத்தை மறந்து சமூக மேம்பாடு பற்றிச் சிந்திப்பவர்கள் மிகக் குறைவாகவே இன்றுள்ளனர்
பயனுள்ள பருவம்:
எதிர் காலத்தை பற்றிய சிந்தனை உருவாகும் இப்பருவத்தில், இளைஞர்களின் ஆளுமையை வளர்த்து, பண்புகளை பருவமடையச் செய்வது சமூகத்திற்கு பயனளிக்கும். உறங்கிக் கிடக்கும் உன்னத உணர்வுகளைத் தட்டி எழுப்பி, ஒரு கொள்கைக்காக வாழத் திருப்பிவிடுவது என்பது இப்பருவத்தில் இலேசான காரியம். எனவேதான், அரசியல்வாதிகள் இளைஞர்களை தமது சுயநலத்தின் கருவிகளாக, ஆயுதங்களாக பயன்படுத்திக் கொள்கின்றனர். துர்பாக்கியம் என்னவென்றால், இஸ்லாமிய இயக்கங்கள், அமைப்புக்கள் இளைஞர்களை பயன்படுத்தவும் அதிகளவு தவறிவிட்டன. சுpல இயக்கங்கள் இப்போது உணர்ந்து செயற்படத் தொடங்கியுள்ளன. ஆனால், பல அமைப்புகள் இன்னும் உணரவில்லை. இந்நிலை மாறுமானால், இஸ்லாமிய சமூகத்தில் மகத்தான மாற்றம் ஏற்படும் ; முஸ்லிம் உம்மத் உலகளாவிய அளவில் உயர்ச்சி பெறும்.
இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்:
இஸ்லாம் இளைஞர்களுக்கு மிக முக்கியமான இடத்தை வழங்கியுள்ளது; இஸ்லாமிய சமூகத்தின் மிக மகத்தான சொத்தாக மதிக்கிறது. உலகில் சத்தியம் நிலைக்கவும், அசத்தியம் அழியவும், அர்ப்பணிப்புடன் அயராது உழைத்தவர்கள் இஸ்லாமிய இளைஞர்களே! நபி (ஸல்) அவர்கள் தமது ஏகத்துவப் பிரசாரத்தை, ஜாஹிலிய்யத்துக்கு எதிராக மக்காவில் ஆரம்பித்த போது, முதலில் விளங்கி, அதிகளவு விரும்பி ஏற்று, செயற்பட்டு அதனைப் பிரசாரப்படுத்த துணை நின்றவர்களும் இளைஞர்களே! நபி (ஸல்) அவர்களுக்கு முன்னர் உலகில் அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட தூதர்களின் ஆதிமீக, பிரசார வரலாற்றிலும் இளைஞர்களின் பணி மகத்தானது.
அந்தஸ்தும் மகத்துவமும்:
இஸ்லாம் ஆற்றல் மிக்க இளைஞர்களை எந்நேரமும் வரவேற்றுக் கொண்டே இருக்கிறது; பண்பாடும், சீரிய சிந்தனையுமுள்ள வாலிபர்களை அன்போடு அரவணைத்துக் கொள்கிறது; அவர்களுக்கு உரிய இடத்தையும், அந்தஸ்தையும் வழங்கி மகிமைப் படுத்துகிறது. உலகிலுள்ள எந்தமதமும், சித்தாந்தமும், தலைவனும் வழங்காத இடத்தை, இஸ்லாம் இளைஞர்களுக்கு வழங்கிக் கௌரவித்துள்ளது மனித, வாழ்வின் பருவங்களைப் பற்றி அறிவுறுத்திய அண்ணல் நபியவர்கள் 'ஐந்து விடயங்களுக்கு முன்னர், நீங்கள் ஐந்தைத் தேடிக்கொள்ளுங்கள் என்று கூறி, முதுமைக்கு முன்னர் இளமையைப் பயன்படுத்திக்கொள்ள பணித்துள்ளார்கள். மனிதன் தனது வாழ்வின் வசந்த காலப் பருவமாக இருக்கும் இளமையை வீணாகிவிடாது, மிகக் கவனமாக, அவதானத்துடன் பாதுகாத்துப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விழுமிய கருத்தை வலியுறுத்தியுள்ளார்கள்.
'அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் இல்லாத (கியாமத்) நாளில் அல்லாஹ் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் வழங்குவான் என நபி (ஸல்) அவா;கள் கூறினார்கள்.
அவர்கள்:
01.  நீதமிகு தலைவர்
02. அல்லாஹ்தஆலாவின் வணக்கத்தில் வளர்ந்த ஒரு  வாலிபர்
03. மஸ்ஜித்களுடன் இதய புர்வத் தொடர்பு கொண்ட மனிதர்
04.   அல்லாஹ்வுக்காக நேசித்து, அவனுக்காகப் பிரியும் இரு மனிதா;கள்.
05. அழகும், கவா;ச்சியுமிக்க பெண் (விபச்சாரத்திற்காக)  அழைக்கும் போது, நான் அல்லாஹ்வை   அஞ்சுகின்றேன்  என்றுரைக்கும் மனிதன்.
06. தனது வலக்கரம் தா;மம் செய்வதை, இடக்கரம் அறியாதளவு இரகசியமாக செலவு செய்யும் மனிதன்.
07. தனிமையில் இறையச்சத்தில் ஈடுபடும் போது,  (அல்லாஹ்வின்) அச்சத்தால் அழும் மனிதன்.” அறிவிப்பவா;: அபு+ஹுரைறா (ரலி) நூல்: புகாரி 
=========== 
1. மரணத்திற்குப் பின் 

2. நோய் நிவாரணம்- 10 உண்மைகள் 

3. இதயங்களை வென்ற இறைத்தூதர் 

4. போதை ஒழிப்போம் பெண்ணினம் காப்போம்!
https://www.quranmalar.com/2022/09/blog-post_10.html

5. தொழுகை நடத்திவரும் அற்புதங்கள்
https://www.quranmalar.com/2024/09/blog-post_92.html