இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 31 டிசம்பர், 2017

அன்னை மரியாளிடமிருந்து மனிதகுலம் பெறும் பாடங்கள்

Image result for fruits
இயேசுவிடமிருந்து முஸ்லிம்கள் கற்கும் பாடங்கள் - 2
உள்ளத் தூய்மையோடும் உயர்ந்த நோக்கத்திற்காகவும் இறைவனிடம் செய்யும் முறையீடுகள் (பிரார்த்தனைகள்) எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை இயேசுவின் பாட்டியின் மூலம் நாம் கற்றுக்கொண்டோம்.
3:37 அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான். அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், ''மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?'' என்று அவர் கேட்டார். ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்'' என்று அவள்(பதில்) கூறினாள்
மேற்படி வசனத்தில் இருந்து குழந்தையை அதாவது மரியாளை வளர்க்கும் பொறுப்பை ஒரு இறைத்தூதரே ஏற்றுக் கொள்ளும்படி செய்கிறான் கருணையாளன் இறைவன் என்பதையும் அறிகிறோம். அது மட்டுமா ஒரு பிரார்த்தனையின் விளைவாக மேலும் என்ன நடக்கிறது பாருங்கள். வரர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா அவர்கள் ஏற்றாலும் மரியாளுக்கு உணவளிக்கும் பொறுப்பை வல்ல இறைவனே முன்வந்து ஏற்றுக் கொள்கிறான்.
ஜகரிய்யா பொறுப்புதாரியாக்கப்பட்டார் என்பதிலிருந்து மரியாளின் தாயார் மரியாளை பெற்றவுடன் மரணித்து இருக்கக் கூடும் என்பதை யூகிக்கலாம். தாயாரின் மறைவுக்கு பிறகு அவரை வளர்ப்பது யார் என்ற பிரச்சனையும் அவர் குறித்த சர்ச்சையும் கிளம்பியதாக இறைவன் 3:44 வசனத்தில் குறிப்பிடுகிறான். இதிலிருந்து அவர் தனித்துவம் வாய்ந்த பெண்ணாக வளர்ந்துள்ளார் என்பதை விளங்கலாம்.

பிற்காலத்தில் இறைவனால் ஏற்படப்போகும் ஒரு மகத்தான சோதனைக்கு அவரை மனோவியல் ரீதியில் தயார் படுத்துவதற்காக அவரை வளர்க்கும் பொறுப்பை இறைவன் இறைத்தூதர் ஜகரிய்யா அவர்களிடம் ஒப்படைக்கிறான். மரியாளை பொறுப்பேற்று வளர்க்கும் போது ஜகரிய்யா அவர்களுக்கு குழந்தை இல்லை. வயதானாலும் குழந்தைக்காக ஏங்கும் இதயம் மட்டும் அவர்களுக்கு ஓயவில்லை. மரியாளை குழந்தைக்கு குழந்தையாக வளர்த்து வணக்க வழிபாட்டின் மூலம் அவர்களை பக்குவப்படுத்திக் கொண்டிக்கும் வேளையில் தான் மரியாளுக்கு இறைவன் புறத்திலிருந்து உணவுகள் வழங்கப்படுவதை ஜகரிய்யா அவர்கள் பார்க்கிறார்கள்.
இது எப்படி உனக்கு கிடைத்தது? என்ற கேள்விக்கு கணக்கின்றி கொடுக்கும் ஆற்றல் உள்ள இறைவன் தான் இதை எனக்கு கொடுக்கிறான் என்று மரியாளிடமிருந்து பதில் வருகிறது. இதுதான் மனிதகுலம் மரியாளிடமிருந்து பெரும் மிகப்பெரிய பாடமாகும். எல்லாப் படைப்பினங்களுக்கும் உணவளிப்பவன் இறைவனே என்ற நம்பிக்கையும்  இயற்கை விதிகளைக் கடந்து தான் நாடுவதை நிறைவேற்றக் கூடியவனே இறைவன் என்ற நம்பிகையும்  பொதுவாக சாதாரண மனிதர்களால் உள்வாங்கிக்கொள்ள முடியாதவை. இதை மரியாள் (அலை) மூலம் மனித குலத்துக்கு போதிக்கிறான் வல்ல இறைவன். ஏன், ஒரு பெரும் இறைத்தூதர் கூட இதிலிருந்தல்லவா பாடம் பெறுகிறார்கள்! 
எதற்கும் ஆற்றல் உள்ள இறைவன் தனக்கு ஏன் ஒரு வாரிசை - மகனை கொடுக்க மாட்டான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில், 'இறைவா உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையை கொடுத்தருள்' என்று பிரார்த்திக்கிறார்கள்.

  இறைவன் அதை ஒப்புக் கொள்கிறான். இறைவன் ஒப்புக் கொண்டாலும் ஜகரிய்யா அவர்களால் இதை நம்ப முடியவில்லை ஏனெனில் அவர் தள்ளாத முதுமையை அடைந்து விட்டார்கள். அவர்களின் மனைவியும் குழந்தைப்பேறைப் பெறும் மாதவிடாய் தகுதிகளையெல்லாம் இழந்து மலடு தட்டி விடுகிறார்கள். குழந்தை உருவாவதற்கான இயற்கை விதிகள் கடந்து போயிருந்தாலும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கின்றது. யஹ்யா என்ற மகனை 'இறைத்தூதரை'ப் பெற்று எடுக்கிறார்கள். 

செவ்வாய், 26 டிசம்பர், 2017

இயேசுவின் பாட்டியிடமிருந்து முஸ்லிம்கள் பெறும் பாடங்கள்

Related image
திருக்குர்ஆன் இயேசுவைப் பற்றி விரிவான வாழ்க்கை வராலாற்றைக் கூறவில்லை. எனினும் அவர் பிறப்பு மேன்மை, அவரது இறைச் செய்தி, அவரது விண்ணேற்றம்அவரைப் பற்றிய கிறிஸ்தவ நம்பிக்கைகள் மீதான தீர்ப்புகள் ஆகியவை பற்றிய முக்கிய விபரங்களை எடுத்துக் கூறுகிறது. வரலாற்றைக் கற்றுத்தருவது திருக்குர்ஆனின் நோக்கமல்ல. மாறாக இயேசுவின் வாழ்விலிருந்தும் அவரோடு தொடர்புடையவர்களின் வாழ்விலிருந்தும் மனிதகுலம் பெறவேண்டிய பாடங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறான் இறைவன். இறைவேதத்தின் நோக்கமே அதுவல்லவா
இயேசுவின் பாட்டி
இயேசு பற்றிய குறிப்பு திருக்குர்ஆனில் அவரது பாட்டியின் பிரார்த்தனையில் இருந்து தொடங்குகிறது. அன்னை மரியாளை அவர் கர்ப்பம் தரித்தபோது இறைவனுக்கு அவரை நேர்ச்சை அவர் செய்த விதத்தை மனித குலத்துக்குப் பாடமாக போதிக்கிறான் கருணையுள்ள இறைவன்.   
3:35 இம்ரானின் மனைவி ''என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்'' என்று கூறியதையும்-
3:36  (பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும். ''என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கிறேன்'' எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள். அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான். ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்.) ''அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.
 எவ்வளவு அழகிய பாடம்! குழந்தைப்பேறு என்பது இறைவனின் அருட்கொடை. அக்குழந்தை நல்லவனாக அல்லது நல்லவளாக வளர ஒரு தாய் இடும் நல்ல உரமே அவளது பிரார்த்தனை! கர்ப்பத்தில் குழந்தை உருவாகும்போதே குழந்தையை இறைப்பணிக்காக நேர்ந்து அதன் வளர்ப்பையும் அவ்விறைவனிடமே ஒப்படைக்கும் ஒரு முன்மாதிரித் தாயை நாம் இயேசுவின் பாட்டியிடம் காண்கிறோம். அவ்வாறு யாராவது ஆத்மார்த்தமாகப் பிரார்த்தித்து இறைவனிடம் ஒப்படைத்தால் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறான் என்பதை அடுத்த வசனங்கள் மூலம் கற்றுதருகிறான் இறைவன்:
3:37 அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான். அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், ''மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?'' என்று அவர் கேட்டார். ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்'' என்று அவள்(பதில்) கூறினாள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிறக்கக்கூடிய ஒவ்வொரு குழந்தையையும் அது பிறக்கும்போதே ஷைத்தான் தீண்டி விடுகிறான். ஷைத்தான் தீண்டுவதாலேயே அது சப்தமிட்டு அழுதுக்கொண்டு பிறக்கிறது. (ஆனால்) மரியமையும் அவரது புதல்வரை(இயேசுவை)யும் தவிரஅறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்:புகாரி
பாருங்கள், ஒரு தாயின் பிரார்த்தனை அவளது மக்களுக்கு எப்படிப் பயனுள்ளதாக அமைகிறது! அவளது மகள் மட்டுமல்ல தொடர்ந்துவரும் சந்ததிகளுக்கும் ஷைத்தானின் தீங்குகளிலிருந்து பாதுகாப்பு! இறைவனிடம் ஒப்படைத்ததால் அந்த மகளின் வளர்ப்பு, உணவு என முழு பொறுப்பையும் இறைவனே ஏற்றுக்கொள்ளவும் செய்கிறான்.
நாமும் இதிலிருந்து பாடம் பெறுவோமா?

அடுத்ததாக அன்னை மரியாளிடமிருந்து நாம் பெரும் பாடங்கள் என்ன?.
(தொடரும் இன்ஷாஅல்லாஹ்)

இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?

http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்காதது ஏன்?

Image result for jasmine
நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் உலகு......... நம்மில் யாருக்குமே இங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் காட்டு தர்பாரிலோ, அக்கிரமங்களும் அட்டூழியங்களும் அநியாயங்களும் அதர்மமும் நாளுக்கு நாள் பெருகி வருவதிலோ உடன்பாடு இருக்காது என்பது திண்ணம். ஆனால் நாம் அனைவருமே இந்நிலை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வர நம்மை அறியாமலேயே நீர் பாய்ச்சி உரமூட்டி நமது  பங்களிப்பைச் செய்துகொண்டிருக்கிறோம்.  எப்படி?
= தீமைகள் நம் முன் புயலாய் வீசும்போதும் கண்டும் காணாதவர்களாக ஒதுங்கிவிடும் குணம் நம்மில் பெரும்பாலானோருக்கு உண்டு. நமக்கு ஏன் வம்பு? என்று ஒதுங்கிவிடும் மனப்போக்கு.
= நமக்குள்  இயற்கையாகவே ஊறியிருக்கும் இன வெறி! நம் குடும்பம், நம் ஜாதி, நம் மொழி, நம் ஊர், நமது மாநிலம், நமது நாடு...... என நம்மவர்களை மட்டும் நியாயப் படுத்தும் மனப்போக்கு.
மேற்கண்ட இரண்டு மனப்போக்குகளுமே மிக மிக ஆபத்தானவை. இவை இரண்டும் நம்மிடையே தொடரும் வரை இவ்வுலகிலும் நாம் அமைதியைக் காண முடியாது என்பது மட்டுமல்ல, மறுமை வாழ்வில் நம்மை அவை நரகத்திற்கு இட்டுச் செல்லும் என்பது உறுதி!
நம் தோட்டத்து மல்லிகை மட்டுமே மணமுள்ளது, மாற்றான் தோட்டத்து மல்லிகை அது ஊர் முழுக்க மணத்தைப் பரப்பினாலும் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனோபாவம் மிக மிகக் கொடியது! ஆனால் இறைவனைப் பற்றியோ அல்லது நம் வாழ்வின் அடிப்படை உண்மைகளைப் பற்றியோ மரணத்தைப் பற்றியோ மரணத்திற்குப் பின் வரவுள்ள வாழ்வு பற்றியோ சொர்க்கம் பற்றியோ நரகம் பற்றியோ நமக்கு எச்சரிக்கைகள் வரும்போது அவற்றை இந்த மனோபாவதோடு  அலட்சியம் செய்வது மிகப் பெரிய அறியாமை என்றே சொல்லவேண்டும்.
உதாரணமாக, புற்று நோயால் பாதிக்கப்பட்ட மராட்டியர் ஒருவர் அதற்கான சரியான மருந்தை  நீண்ட அலைச்சல்களுக்குப் பிறகு பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம் . அதை  குடிக்கப் போகும்போது அது கர்நாடகத்தில் தயாரானது என்று அறிய வருகிறார். ஆ, இது கர்நாடகத்தில் தயாரானதா? என் உயிர் போனாலும் அதை குடிக்க மாட்டேன்! என்று அவர் அடம் பிடிப்பாரானால்  அவரை என்னவென்று சொல்வீர்கள்?
அதைப் போலவே கடல் கடந்து வாழும் உங்கள் தந்தை அல்லது தாய் உங்களுக்காக ஒரு முக்கியமான செய்தியைக் கொண்ட ஒரு கடிதத்தையோ அல்லது  ஒரு விலை உயர்ந்த ஒரு பொருளையோ தனது கன்னட நண்பர் ஒருவர் மூலம்  கொடுத்தனுப்புகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். காவிரி நீரை தடுத்த கன்னடர்கள் நமது விரோதிகள் என்று சொல்லி உங்கள் பொருளை பெற்றுக் கொள்ளாமல் புறக்கணித்து விடுவீர்களா?
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு!
என்று சரியாகச் சொன்னானே வள்ளுவன், அப்படியல்லவா நாம் உண்மைகளை அணுகவேண்டும்?  
ஆம் அன்பர்களே, நமது மொழியில் அல்லது நமது மதத்தவருக்கு அல்லது நமது நாட்டவருக்கு அல்லது நமது  முன்னோருக்கு வந்த வேதத்தை அல்லது தூதரை மட்டுமே பின்பற்றுவோம் என்று இறுமாந்திருப்பது இறைவனுக்கு எதிராக நாம் தூக்கும் போர்க்கொடி என்பதை என்பதை நாம் உணரவேண்டும். உங்களைப் படைத்துப் பரிபாலித்து வரும் இறைவனுக்கு நீங்கள் உங்கள் மொழியின் மீது, நாட்டின் மீது நீங்கள் கொண்டிருக்கும் பற்றோ அல்லது வெறியோ ஒரு பொருட்டல்ல. அனைத்துலக மக்களும் அவன் பார்வையில் சமமே. இப்பரந்த உலகில் அவன் நாடுவோரைத் தேர்ந்தெடுத்து அவர்களைத் தன்  தூதர்களாக்கி அனுப்புவது அவன் விருப்பம். அதை ஆராய்ந்து ஏற்றுக்கொள்வது நமக்கு நன்மை. புறக்கணிப்பது தீமை மட்டுமல்ல பேராபத்து!  வானம், சூரியன், மழை, காற்று போன்றவை அனைத்து மக்களுக்கும் எப்படி போதுவானவையோ அதைப் போலவே அவனது வழிகாட்டுதலும் பொதுவானது!
நமது நிறம். மொழி, குலம், நாடு, இனம் இவையெல்லாம் அவன் நமக்கு தற்காலிகமாக  இவ்வாழ்க்கை எனும் பரீட்சையில் வழங்கியுள்ள ஏற்பாடுகளே. அவை பெருமை அடிப்பதற்க்காகவோ பிறரை சிறுமைப் படுத்துவதவற்க்காகவோ உள்ளவை அல்ல. அவன் நாடியிருந்தால் நம்மை ஆப்ரிக்கவிலோ அமெரிக்காவிலோ கருப்பு இன மக்களாகவோ காட்டு வாசிகளாகவோ படைத்திருக்க முடியும். எனவே நமக்காக அருளப்பட்ட திருக்குர்ஆனை  அரபு நாட்டு வேதம் என்றோ முஸ்லிம்களின் வேதம் என்றோ சொல்லி நாம் புறக்கணித்தால் இழப்பு நமக்குத்தான்.
இவ்வாறு சத்தியாத்தை சத்தியமாகக் கண்டும் ஏற்க மறுக்கும் இனம் பபுரியாத இனவெறி நமக்குள் எங்கிருந்து வருகிறது? அது வேறு ஒன்றுமல்ல, நமது முன்னோர்களைப்பற்றி நமக்கு இருக்கக் கூடிய கண்மூடித்தனமான மதிப்பீடுதான்! அவர்கள் மேல் அன்பும் மரியாதையும் நாம் காட்டவேண்டும்தான். ஆனால் அவர்கள் அனைவருமே நல்லவர்கள் அல்லது அவர்கள் செய்து போனதல்லாம் சரி என்ற மனப்போக்கு ஆபத்தானது!
இப்படிப்பட்டவர்களைப் பார்த்து இறைவன் தனது திருமறையில் கேட்கிறான்:
2:170      .மேலும், ''அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்"" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் ''அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்"" என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?
கீழ்காணும் வசனத்தில் இன்னும் வனமையாகக் கண்டிக்கிறான் பாருங்கள்:
31:21 'அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்" என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் '(அப்படியல்ல)! நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்" என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்?)     

(அல்லாஹ் என்றால் வணக்க்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)



வியாழன், 14 டிசம்பர், 2017

இறைவேதத்தை மறுப்போரும் ஏற்போரும்

Image result for hell and heaven
இன்று வாழ்வோர் அனைவருக்கும் தெள்ளத்தெளிவாக விளங்கும் உண்மைகள் சில உள்ளன. அவற்றை யாரும் மறுக்கவோ மாற்றவோ முடியாது...
-    நாமாக நாம் இங்கு வரவில்லை.
-    நமது உடல் பொருள் ஆவி இவற்றின் உரிமையாளர் நாமல்ல.
-    இமாபெரும் பிரபஞ்சத்தில் மிகவும் அற்பமான பூமி என்ற ஒரு துகளின் மேல் ஒட்டிக்கொண்டிருக்கும் மற்றொரு நுண்துகள் போன்றவர்கள் நாம்.
-    நம்மை மீறிய ஒரு அதிபக்குவமான நுண்ணறிவும் அளவிலா வல்லமையும் கொண்ட சக்திதான் இந்த மாபெரும் பிரபஞ்சத்தையும் நம்மையும் நமது உடலின் உட்கூறுகளையும் அதிபக்குவமான முறையில் உருவாக்கி இடையறாது இயக்கி பரிபாலித்து வருகிறது.
-    ஆறடி உயரம் நிற்கும் அற்ப மனிதராகிய நமது ஆயுளும் நீர்க்குமிழி போல மின்னி மறைவதே.
நம்மைப்பற்றிய உண்மைகள் இவ்வாறிருக்கும்போது நம்மை மீறிய அந்த மறைவான சக்தி நம்மோடு உரையாட முற்பட்டால் அதை செவிகொடுத்துக் கேட்டு சொல்லப்படுபவை உண்மையா பொய்யா ஆய்வு செய்வதே உண்மையான பகுத்தறிவு. மாறாக அவற்றுக்கு செவிசாய்க்காமல் மனோஇச்சைக்கு வழங்கி கண்மூடித்தனமாக மறுப்பது என்பது அறிவீனமான ஒரு நடவடிக்கை என்றுதானே சொல்லமுடியும்?
= அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது, இவர்களுடைய உள்ளங்கள் மீது தாளிடப் பட்டு விட்டதா? (திருக்குர்ஆன் 47:24)

=  (நபியே!) இவ்வேதத்தை நாமே உங்கள்மீது இறக்கி வைத்தோம். இது மிக பாக்கியமுள்ளது. அறிவுடையவர்கள் இதன் வசனங்களை கவனித்து ஆராய்ந்து நல்லுணர்ச்சி பெறுவார்களாக! (திருக்குர்ஆன் 38:29)

இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் தனது இறுதிவேதமான திருக்குர்ஆன் மூலம் இன்று இவ்வுலகில் வாழும் மக்களோடு பேசுகிறான். இதை பகுத்தறிவோடு ஆராய்ந்து அதன் வழிகாட்டுதல்களை ஏற்று வாழ்வோர் இந்த வாழ்க்கையின் நோக்கம் பற்றிய தெளிவு பெறுகிறார்கள். ஆக்கபூர்வமான முறையில் இவ்வுலக வாழ்வை வாழ்கிறார்கள். மறுமையில் நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்கம் என்ற வாழ்விடத்தைப் பரிசாகப் பெறுகிறார்கள். மாறாக இவ்வேதத்தைக் கண்மூடித்தனமாக மறுப்ப்போர் வாழ்க்கையின் நோக்கம் பற்றிய தெளிவின்மையால் குழப்பம் நிறைந்த வாழ்வு வாழ்கிறார்கள். படைத்தவனின் கட்டளைகளை மீறிய குற்றத்திற்காக மறுமையில் வேதனைகள் நிறைந்த நரகம் என்ற வாழ்விடத்தை தண்டனையாகப் பெறுகிறார்கள்.

முன்னோர்களின் வழக்கங்களின் மீதுள்ள கண்மூடித்தனமான நம்பிக்கைகள், நாட்டுவழக்கம், தாங்களாக ஏற்படுத்திக்கொண்ட கடவுளர்கள் மீதுள்ள பக்தி, இயக்க சார்பு, அகங்காரம் போன்ற பல காரணங்களின் பொருட்டாலும்  தங்கள் இதயத்திற்குத் தாளிட்டு இவ்வேதத்தைப் புறக்கணிப்போரைப் பற்றியும் அவர்களால் வழிகெடுக்கப்பட்ட மக்களைப்பற்றியும் திருக்குர்ஆனில் இறைவன் இவ்வாறு கூறுகிறான்:
= 16:24உங்கள் இறைவன் எதை இறக்கியருளியுள்ளான்?” என்று எவரேனும் அவர்களிடம் கேட்டால், “இவையெல்லாம் முற்காலத்தவர்களின் கட்டுக்கதைகள்என்றே அவர்கள் கூறுகின்றார்கள்.
= 16:25இவ்வாறு அவர்கள் கூறுவதன் விளைவாக, மறுமைநாளில் தங்களுடைய பாவங்களை முழுமையாகச் சுமப்பதுடன், அறியாமையினால் யார் யாரை இவர்கள் வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய பாவங்களையும் சுமப்பார்கள். பாருங்கள்! எப்படிப்பட்ட மோசமான சுமையை இவர்கள் சுமந்து கொண்டிருக்கின்றார்கள்!
தொடர்கதை
இன்று எவ்வாறு இறுதிவேதம் உள்ளதோ அதைப்போலவே இறைவன் இதற்கு முன்னரும் பல்வேறு காலகட்டங்களில் தன் தூதுச் செய்தியை பல்வேறு இறைத்தூதர்கள் மூலம் அனுப்பி வந்துள்ளான். அவற்றையும் மறுப்பவர்கள் இருந்தே வந்துள்ளார்கள். படைத்தவனை மட்டுமே வணங்கி வாழவேண்டும் படைப்பினங்களையும் மனிதர்களையும் வணங்குவது பாவம் என்ற இறைச் செய்தியைப் புறக்கணித்து தாங்களாக உருவாக்கியவற்றை கடவுளர்களாக பாவித்து வணங்கினார்கள். படைத்த இறைவனுக்கு முன்னால் மறுமையில் விசாரணை உண்டு, சொர்க்கமும் நரகமும் உண்டு என்று தூதர்கள் எடுத்துரைத்தபோது அவர்களை ஏளனம் செய்தார்கள். அந்தப் புனிதர்களையும் சத்தியத்தைப் பின்பற்றியோரையும் வேதனைகளும் சித்திரவதைகளும் செய்தார்கள்.  பூமியில் அட்டூழியங்கள் செய்தார்கள். குழப்பங்கள் விளைவித்தார்கள். அதர்மத்தை வளர்த்தார்கள். அவர்களின் கொடுங்கோன்மை முற்றிய நிலையை அடையும்போது இறைவன் அவர்களை அழிக்கவும் செய்துள்ளான். ஆனால் அவர்கள் செய்த பாவங்களுக்கான உண்மையான தண்டனை மறுமையில் காத்திருக்கிறது. அவர்களைப்பற்றியும் அவர்களின் மறுமை நிலை பற்றியும் இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:  
= 16:26இவர்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்களில் பலரும் (சத்தியத்தை வீழ்த்துவதற்காக இவ்வாறே) சூழ்ச்சிகளைச் செய்திருக்கின்றார்கள். ஆனால்,  இறைவன்  அவர்களின் (சூழ்ச்சிக்) கட்டிடத்தை அடியோடு பெயர்த்துவிட்டான்! மேலிருந்து அதனுடைய முகடு, அவர்களின் தலைமீது விழுந்தது. மேலும், அவர்கள் சற்றும் எண்ணிப்பாராத திசையிலிருந்து வேதனை அவர்களை வந்தடைந்தது. பிறகு மறுமைநாளில் அல்லாஹ் அவர்களை இழிவுபடுத்துவான்!
=16:27மேலும், அவர்களிடம் கேட்பான்: இப்பொழுது எனக்கு இணையாக்கப்பட்டவர்கள் எங்கே? அவர்களுக்காகத்தானே நீங்கள் சத்திய சீலர்களுடன் மோதிக் கொண்டிருந்தீர்கள்?” அறிவு வழங்கப்பட்டிருந்தவர்கள் கூறுவார்கள்: இன்று இழிவும், துர்பாக்கியமும் சத்திய மறுப்பாளர்களுக்கே!

உயிர் கைப்பற்றும்போது சரணடைதல்
= 16:28அவர்கள் எத்தகையவர்களென்றால், தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது (வரம்பு மீறும் போக்கை விட்டுவிட்டு) சரணடைந்து நாங்கள் எந்தக் குற்றமும் செய்து கொண்டிருக்கவில்லையே?” என்று கூறுவார்கள். அதற்கு (வானவர்கள்) பதில் கூறுவார்கள்: செய்து கொண்டிருக்கவில்லையா...? அல்லாஹ் உங்களுடைய இழிசெயல்களை நன்கறிந்திருக்கின்றான்.

மோசமான தங்குமிடம்
= 16:29இப்பொழுது நரக வாயில்களிலே நுழையுங்கள்! அங்கே நீங்கள் என்றென்றும் வீழ்ந்துகிடக்க வேண்டும்.உண்மையில் ஆணவம் கொண்டவர்களின் தங்குமிடம் மிகவும் மோசமானதாகும்.

சத்திய சீலர்களின் உன்னத நிலை
வேதத்தை கண்மூடித்தனமாக மறுத்தோரின் மேற்கூறப்பட்ட நிலைக்கு நேர் எதிரானது வேதத்தை ஏற்று அதன்படி வாழ்ந்தோரின் நிலை.  
= 16:30(மற்றொரு புறம்) இறையச்சமுடையோரை நோக்கி வினவப்படும்: உங்கள் இறைவன் இறக்கியருளியது என்ன?” அதற்கு அவர்கள், “மிகச் சிறந்ததை (இறக்கியருளினான்)என்று மறுமொழி கூறுவார்கள். இவ்வாறு நற்செயல் புரிந்தவர்களுக்கு இவ்வுலகிலும் நன்மை இருக்கிறது. மறு உலகமோ திண்ணமாக அவர்களுக்கு மிகச் சிறப்புடையதாகவே இருக்கும். மேலும், இறையச்சமுடையவர்களின் இல்லம் மிகவும் சிறப்புடையதாகும்.
= 16:31அது நிலைத்திருக்கும் சுவனங்களாகும். அவற்றில் அவர்கள் நுழைவார்கள்; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அங்கு அவர்களின் விருப்பத்திற்கேற்ப அனைத்தும் கிடைக்கும். இறையச்சமுடையவர்களுக்கு இறைவன்  இவ்வாறே கூலி வழங்குகின்றான்.
உயிர் கைப்பற்றப் படும்போது சாந்தி!

= 16:32அவர்கள் எத்தகையவர்களென்றால், தூய்மையான நிலையில், அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றுவார்கள். அப்போது வானவர்கள் கூறுவார்கள்: உங்கள் மீது சாந்தி நிலவட்டும்; நீங்கள் செய்து கொண்டிருந்த நற்செயல்களின் பலனாக சுவனத்தில் நுழையுங்கள்!

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

கூடுவிட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?

Related image

(முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சோ ராமசாமியை சந்தித்து நலம் விசாரிக்கும் வீடியோ !)
ஆடிய ஆட்டமென்ன?
பேசிய வார்த்தை என்ன?
திரண்டதோர் செல்வம் என்ன?
கூடுவிட்டு ஆவி போனால்
கூடவே வருவதென்ன?
வாழ்க்கையின் உண்மைகளைப் பிரதிபலிக்கின்ற இந்த வரிகள் இந்த வீடியோவில் நாம் காணும் முக்கிய புள்ளிகளுக்கு  மட்டுமல்ல, இதை இன்று பார்த்துக்கொண்டிருக்கும் நம் அனைவருக்கும் பொருத்தமானவை ஆகும்.
நாம் அனைவரும் முக்கியமாக சிந்திக்க வேண்டிய விடயங்களை இவை சிந்திக்க வைக்கின்றன...
கூடுவிட்டு போகும் ஆவியோடு கூடப் போவது என்ன?
ஆம், மேற்கண்ட அனைத்தும் ஏற்படுத்திய விளைவுகளும் தாக்கங்களும் பாவங்களாகவும் புண்ணியங்களாகவும் பதிவாகி அந்த பதிவேடுதான் கூடவே வரும். இவற்றுக்கான தண்டனைகளோ பரிசுகளோ இந்தத் தற்காலிக உலகு என்பது ஒரு பரீட்சைக் கூடம் என்பதால் இங்கு காண்பிக்கப் படுவதில்லை. அவற்றை வாழ்வின் அடுத்த கட்டமான மறுமை உலகில்தான் காண உள்ளோம். நாம் தாயின் கருவறையில் இருந்த போது எவ்வாறு இவ்வுலகைக் காண முடியாமல் இருந்தோமோ அதே போல மறுமை உலகின் நடப்புகளை அங்கு செல்லும்போது அறிந்து கொள்வோம். திருக்குர்ஆன் கூறுகிறது:
3:185. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை இவர்களைப் பற்றி பேசப்பட்டு வரும் அரசியல் ஒருபுறம் இருக்கட்டும். இவர்கள் இன்று மறைந்ததைப் போல அவையும் ஒருநாள் மறைந்து விடும்.
ஆக நமது உடல்கள் இன்று மறைந்தாலும் மறையாமல் இருப்பவை நாம் இந்த பூமியில் வாழ்ந்தபோது பதிவான பாவங்களும் புண்ணியங்களும். அதாவது இறைவனின் எவல்விலக்கல்களை எந்த அளவுக்குப் பேணி வாழ்ந்தார்கள் என்பது இறைவனிடம் பதிவாகி உள்ளன. அவை அனைத்தும் மறுமையில் இறுதித்தீர்ப்பு நாளன்று வெளியாகும். இது நம்மைப் படைத்து பரிபாலித்து வருபவனின் வாக்குறுதி:
36:12. நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.

செவ்வாய், 5 டிசம்பர், 2017

நபிகளும் ஏசுவும் இறைத்தூதர்கள்தான் என்பதற்கு என்ன ஆதாரம்?

முகநூலில் கேள்விகள்... 
Kastro Chinna "நபிகள் நாயகம் , இயேசு போன்றவர்களை நல்ல மனிதராக நல்ல தலைவராக ஏற்றுகொள்ளலாம். ஆனால் இறைவனின் தூதராக எப்படி கருத முடியும். எந்த இறைவன் வந்து சொன்னது இவர்தான் என்னுடைய தூதரென்று..?"
Ponraj Göld  நல்லா கேளுங்க பாஸ். இதைத்தான் நானும் கேட்டேன். என்னை நாத்திகவாதின்னு சொல்றாங்க
----------------------- 
பதில் : "மிக நேர்மையான சந்தேகம். பகுத்தறிவு பூர்வமான கேள்வி. அதே பகுத்தறிவுப் பார்வையோடு உங்கள் ஆய்வு தொடரட்டும். இதற்கு பதிலாக முன்வைக்கப்படும் விளக்கங்களையும் ஆதாரங்களையும் சற்று பொறுமை காத்து படித்துவிட்டு கருத்துரை இடுங்கள். முஸ்லிம்களைப் பொறுத்தவரை மேற்படி திருக்குர்ஆனின் அடிப்படையில் இருவரையுமே இறைவனின் தூதர்கள் என்றுதான் நம்புகிறோம். திருக்குர்ஆன் இவ்வுலகைப் படைத்த இறைவனின் வாக்குகளே என்பதற்கான ஆதாரங்களை அலசும் முன்பு இதை கொண்டுவந்த நபிகள் நாயகத்தின் சுருக்கமான வரலாறை அறிவோம்.
 http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_19.html" திருக்குர்ஆன் மலர்கள்: நபிகள் நாயகத்தின் மிகச் சுருக்கமான வரலாறு
தொடர்ந்து திருக்குர்ஆனின் நம்பகத்தன்மையை உணர கீழ்காணும் பதிவுகளையும் படியுங்கள். நாங்கள் இதை இறைவேதமென்று நம்புவதற்கு இவையும் சில காரணங்கள்.

இறைவன் அல்லாதவற்றை வணங்குவோரின் நிலை

Related image
உடல், பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து இவ்வுலகுக்கு அனுப்பியுள்ள உண்மை இறைவனை - இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவனை- கண்டுகொள்ளாமல் தான்தோன்றித்தனமாக அவன் அல்லாதவர்களையும் அல்லாதவற்றையும் கடவுளாக பாவித்து வணங்கும் செயல் பூமியில் பல குழப்பங்களுக்கும் தீய விளைவுகளுக்கும் பாவங்கள் பெருகுவதற்கும் காரணமாகிறது. இவ்வாறு படைத்த இறைவனை விட்டுவிட்டு அவன் அல்லாதவர்களை வணங்கும் செயல் இணைவைத்தல் எனப்படும். 
= உண்மை இறைவனைப்பற்றிய மரியாதை உணர்வு (seriousness) மனித உள்ளங்களில் இருந்து அகன்றுபோவதால் இறையச்சம் –அதாவது இறைவனுக்கு நான் பதில் சொல்லியாகவேண்டும் என்ற பொறுப்புணர்வு மறைந்து போகிறது. அதனால் பாவங்களில் மக்கள் துணிந்து ஈடுபடுகிறார்கள். சமூகத்தில் பாவங்கள் பெருகவும் அதர்மம் ஆளவும் இது முக்கிய காரணம் ஆகிறது.
= படைத்த இறைவனை நேரடியாக வணங்குவது என்பது எளிதானது, பொருட்செலவு இல்லாதது. ஆனால் அவன் அல்லாதவற்றை மக்கள் வணங்க முற்படும்போது இடைத்தரகர்கள் எளிதாக அங்கு நுழைந்து விடுகிறார்கள். அவரவர் கற்பனையில் உருவானவற்றைக் காட்டி இதுவே கடவுள் என்று கற்பித்து அதன்மூலம் மக்களை சுரண்ட இச்செயல் காரணமாகிறது..
= பல்வேறு மக்கள் அவரவர் கற்பனைக்கேற்ப கடவுளை சித்தரித்து வணங்கும்போது அதற்கேற்ப அவற்றை வழிபடுவோரும் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து ஒருவருக்கொருவர் ஏற்றதாழ்வு பாராட்டுவதற்கும் அடித்துக் கொள்வதற்கும் காரணமாகிறது.
= இன்னும் அகிலங்களின் அதிபதியும் சர்வவல்லமை கொண்டவனுமாகிய இறைவனை சிறுமைப்படுத்தும் செயலும் அவனுக்கு செய்நன்றி கொல்லும் செயலும் பொய்யுரைத்தலும் ஆகும்.
இதை மிகப்பெரிய பாவம் என்று கூறுகிறது குர்ஆன். மேலும்,
= அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” (திருக்குர்ஆன் 5:72)
(அல்லாஹ் என்றால் வணங்குவதற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
= நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் அவனை சந்திக்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார். யார் இணை கற்பித்தவராக சந்திக்கிறாரோ அவர் நரகம்புகுவார்.
அறிவிப்பு : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
இப்பாவத்தை செய்வோரின் நிலை மறுமையில் எவ்வாறு இருக்கும்?
மறுமையில் இறுதித்தீர்ப்பு நாளன்று இந்த பூமியில் வாழ்ந்து மறைந்த அனைத்து மனிதர்களும் விசாரணைக்காக மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். அதில் இணைவைத்து வணங்கியவர்களும் இருப்பார்கள். யாரை இவர்கள் கடவுளாக பாவித்து அவர்களின் உருவச்சிலைகளை வைத்து வணங்கினார்களோ அவர்களும் அங்கு இருப்பார்கள். இன்னும் சிலர் இறந்துபோன நல்லடியார்களின் சமாதிகள் (உதாரணமாக தர்கா) அருகே நின்று அவர்களை அழைத்துப் பிரார்த்தித்து இருக்கலாம்  அவர்கள் யாவரும் அன்று விசாரணையின்போது வருவார்கள். இன்ன பிற இணைவைக்கப்பட்ட மற்ற அனைத்தும் விசாரணையின்போது ஆஜர். அப்போது என்ன நடக்கும் என்பதை இறைவன் தன் திருமறையில் கீழ்கண்டவாறு தெரிவிக்கிறான்:
10:28. (இன்னும் - விசாரணைக்காக) நாம் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாளில் இணைவைத்தவர்களை நோக்கி: “நீங்களும், நீங்கள் இணைவைத்து வணங்கியவையும் உங்கள் இடத்திலேயே (சிறிது தாமதித்து) இருங்கள்” என்று சொல்வோம்; பின்பு அவர்களிடையேயிருந்த தொடர்பை நீக்கிவிடுவோம் - அப்போது அவர்களால் இணைவைக்கப்பட்டவைகள் ”நீங்கள் எங்களை வணங்கவேயில்லை” என்று கூறிவிடும்.
10:29. நமக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக அல்லாஹ் போதுமானவன்; நீங்கள் எங்களை வணங்கியதைப் பற்றி நாங்கள் எதுவும் அறியோம்” (என்றும் அவை கூறும்).
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குரிய ஒரே இறைவன் என்பது பொருள்)
இவ்வுலகில் வாழ்ந்திருந்தபோது கண்மூடித்தனமாக நம்பியிருந்த கடவுளர்களின் உண்மை நிலை அவர்களுக்குப் புரியவரும். இவ்வுலக வாழ்க்கை தற்காலிகமானது என்பதும் மறுமை என்பதே உண்மையானது நிலையானது என்பதும் தெளிவாகப் புரியவரும். இனி மீதமிருப்பது பாவிகளுக்கு விதிக்கப்படும் நரகமோ அல்லது புண்ணியவான்களுக்கு விதிக்கப்படும் சொர்க்கமோ மட்டும்தான் என்பதும் புரியவரும். ஆனால் அப்போது புரிந்துகொள்வது காலம்கடந்த பயனளிக்காத செயலாக இருக்கும். இவ்வுலகில் மக்கள் உண்மை இறைவனது வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப செய்த தங்கள் செயல்கள் நன்மைகளாகவும் அதற்கு மாறாக செய்த செயல்கள் தீமைகளாகவும் பதிவு செய்யப்பட்டு இருப்பதைக் காண்பார்கள்.
= 10:30. அங்கு ஒவ்வொரு ஆத்மாவும் தான் செய்த செயலைச் சோதித்து (அது நன்மையா? தீமையா? என்பதை) அறிந்து கொள்ளும். பின்னர், அவர்கள் தங்களுடைய உண்மையான எஜமானாகிய அல்லாஹ்வின் பக்கமே கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டிருந்த தெய்வங்கள் அனைத்தும் அவர்களை விட்டு மறைந்துவிடும்.
இவ்வுலகிலேயே திருந்துவோம்
= நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக! மறுமையோடு ஒப்பிடும்போது இவ்வுலகின் நிலையானது, உங்களில் ஒருவர் தமது சுட்டு விரலைக் கடலில் வைப்பதைப் போன்றுதான். அதில் எந்த அளவு தண்ணீர் ஒட்டிக்கொள்கிறது என்று அவர் பார்க்கட்டும். (அந்த அளவு அற்பமானதேயாகும்.) அறிவிப்பு : முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் (ரலி நூல் :முஸ்லிம் (5490)

அதாவது மறுமை என்பது முடிவில்லாதது அதனோடு இவ்வுலக வாழ்வை ஒப்பிடும்போது இம்மை வாழ்வு என்பது மிக மிக மிக அற்பமானது என்பதைத்தான் மேற்படி நபிமொழி நமக்கு எடுத்துரைக்கிறது. படைப்பினங்களைப் பற்றி சிந்தித்து அவனது வல்லமையையும் உள்ளமையையும் உணரச் சொல்கிறது குர்ஆன். மேலும் அன்றாடம் மனிதன் அனுபவிக்கும் அருட்கொடைகளைப் பற்றி நினைவூட்டி படைத்தவன்பால் மனம்திருந்தியவர்களாக திரும்பச் சொல்கிறான் இறைவன்:

= 10:31. உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் “அல்லாஹ்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.

10:32. உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்; இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?