இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 17 ஜனவரி, 2026

சிறைச்சாலைகளை ஏன் சீர்திருத்த வேண்டும்?

 குற்றங்களின் அதிகரிப்பு

NCRB வெளியிடும் Crime in India அறிக்கைகளின்படிஇந்தியாவில் அறிவிக்கப்படும் குற்றங்கள் கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனகுறிப்பாக IPC cognizable crimes (கொலைகொள்ளைபாலியல் குற்றங்கள்வன்முறை குற்றங்கள்) எண்ணிக்கையில் உயர்வு காணப்படுகிறது.

அதிலும் சைபர் குற்றங்கள் மிக வேகமாக உயர்ந்துள்ளனஆன்லைன் மோசடிஅடையாள திருட்டுடிஜிட்டல் பண மோசடிகள் ஆண்டுதோறும் கணிசமாக அதிகரிப்பதாக NCRB பதிவு செய்கிறது. நகரமயமாக்கல்தொழில்நுட்ப பயன்பாடுவேலைவாய்ப்பு அழுத்தம் போன்றவை இதற்குக் காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன.

மேலும்பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்புடைய குற்றங்கள் பல மாநிலங்களில் அதிகரித்துள்ளதாகவும் தரவுகள் காட்டுகின்றன. அதே நேரத்தில்பல குற்றங்களில் குற்றவாளிகள் மீண்டும் மீண்டும் குற்றம் செய்யும் (recidivism) போக்கு இருப்பதும் ஒரு முக்கிய சிக்கலாக பதிவாகிறது.

சிறைகளின் மற்றும் சிறைவாசிகளின் அவலநிலை

NCRB புள்ளிவிவரங்களின் அடிப்படையில்

தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் (NCRB) புள்ளிவிவரங்கள்இந்திய சிறைச்சாலைகள் தண்டனை மையங்களாக மட்டுமே செயல்படுவது போதாது என்பதை தெளிவாக காட்டுகின்றன. Prison Statistics India அறிக்கைகளின்படிஇந்திய சிறைகளில் உள்ள கைதிகளில் சுமார் 70–75% பேர் விசாரணைக்கைதிகள்குற்றம் நிரூபிக்கப்படாத நிலையிலேயே நீண்ட காலம் சிறையில் இருப்பதுமனஅழுத்தம் மற்றும் விரக்தியை அதிகரித்துதிருந்தும் வாய்ப்பை குறைக்கிறது.

மேலும்பெரும்பாலான சிறைகள் கொள்ளளவை விட அதிகமாக நிரம்பியுள்ளன. Overcrowding காரணமாக அடிப்படை வசதிகள்கல்விமனநல ஆலோசனை போன்ற சீர்திருத்த முயற்சிகள் சரியாக வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் சிறைவாசம் என்பது குற்றச் சிந்தனைகள் வளரக் கூடிய சூழலாக மாறுகிறது.

NCRB தரவுகள் சிறைகளில் மனநலப் பிரச்சினைகள்தற்கொலை முயற்சிகள் மற்றும் இயற்கையற்ற மரணங்கள் இடம்பெறுவதை சுட்டிக்காட்டுகின்றன. இது சிறைவாசிகள் எதிர்கொள்ளும் ஆழமான மன அழுத்தத்தை வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில்பெரும்பாலான கைதிகள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகங்களிலிருந்து வருவதுகுற்றம் ஒரு சமூகப் பிரச்சினை என்பதையும் உணர்த்துகிறது.

ஆகவே, NCRB புள்ளிவிவரங்கள் கூறும் உண்மை இதுதான்:
சிறைச்சாலைகள் தண்டனை இடங்களாக அல்லமனிதனை மாற்றும் சீர்திருத்த மையங்களாக மாற வேண்டும்.


குற்றங்களின் அபாயகரமான அதிகரிப்பு

ஒவ்வொரு காவல் நிலையத்திலும்குற்றங்களின் அபாயகரமான அதிகரிப்பு தொடர்பான புள்ளிவிவரங்களைக் காட்டும் அட்டவணைகளையும் வரைபடங்களையும் நாம் காணலாம். இவை காவல் நிலையங்களில் பதிவானவை மட்டுமே. பதிவு செய்யப்படாதவை இன்னும் எவ்வளவு அதிகம் என்பது பற்றி நம்மால் ஊகிக்க  முடியும். மக்கள் இந்தச் சூழ்நிலையால் விரக்தியடைந்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே! நாளுக்கு நாள் நிலைமை  மோசமாகி வருகிறது. இப்போது நம்மில் ஏறக்குறைய அனைவரும் இந்தச் சூழ்நிலையை மாற்ற ஏதாவது செய்ய விரும்புகிறோம்ஆனால் அதை எப்படிச் செய்வது என்று தெரியாமல் தவிக்கிறோம்.

சீர்கெடுக்கும் சிறைச்சூழல்

இன்றைய சிறை அமைப்பு பெரும்பாலான இடங்களில் குற்றவாளியை சீர்திருத்துவதற்குப் பதிலாக அவனை மேலும் சீர்கெடுக்கும் சூழலாக மாறியுள்ளது. இதற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:

1. சிறைச் சூழல் ஒரு குற்றம் கற்கும் பள்ளியாக மாறுதல்: சிறையில் சிறிய குற்றம் செய்தவர்கள் பெரும் குற்றவாளிகளுடன் கலப்பதால், புதிய குற்ற யுக்திகள், வன்முறை சிந்தனைகள் அவர்களுக்குள் வளர்கின்றன.

2. மனநல அழுத்தமும் கோபமும்- நீண்ட தனிமை, மரியாதையற்ற நடத்தல்,
எதிர்காலம் குறித்த அச்சம் போன்றவை மனதை கடுமையாக்கி திருந்தும் எண்ணத்தையே முற்றாக அழிக்கிறது.

3. அவமதிப்பு மற்றும் மனிதத் தன்மை இழப்புகுற்றவாளி” என்ற அடையாளம் மனித மதிப்பை சிதைக்கிறது. அவன் தன்னை சமூகத்தின் பகுதியென உணர முடியாமல் போகிறான்.

4, சீர்திருத்த வாய்ப்புகளின் பற்றாக்குறை- கல்விதொழில் பயிற்சி, மனநல ஆலோசனை போதிய அளவில் இல்லாததால், உள்ளார்ந்த மாற்றம் நிகழ்வதில்லை.

5. வெளியே வந்த பின் சமூக நிராகரிப்பு-  வேலைமரியாதை, புதிய தொடக்கம் கிடைக்காததால், மீண்டும் குற்றம் செய்வதே வாழ்வாதாரமாக மாறுகிறது.

 இதனால் இன்றைய சிறைச் சூழல் மீள் குற்ற உற்பத்தி நிலையமாக மாறி வருகிறது. சிறிய குற்றவாளிகளை பெரிய குற்றவாளிகளாக மாற்றுகிறது.

சிறைகளை சீர்திருத்த முடியுமா?

முடியும் என்கிறது நபிகளாரின் நடைமுறை! இந்த முயற்சியில் பொருள் ரீதியாகவோ அல்லது வேறு விதமாகவோ நமக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. குறைந்தபட்சம் பின்வரும் நன்மைகளையாவது பெறலாம்:

 சிறிய குற்றவாளிகளைப் பெரிய குற்றவாளிகளாக உருவாக்கும் சிறைச்சாலைகளின் தற்போதைய போக்கு முடிவுக்கு வரும். அதற்குப் பதிலாகநாட்டில் அமைதி மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்குப் பங்களிக்கக்கூடிய  திருந்திய குடிமக்கள் சிறைகளிலிருந்து வெளியே வருவார்கள். அவர்களை மேலும் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுத்தலாம்.

 சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதற்கும்காவல் நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகளையும்அவற்றில் உள்ள கைதிகள் மற்றும் ஊழியர்களையும் பராமரிப்பதற்கும் செலவிடப்படும் பணத்தை அரசாங்கங்கள் சேமிக்க முடியும்.

=============== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்
=============    
திருக்குர்ஆன் நற்செய்திமலர் உங்கள் இல்லம்தேடி வர ₹180 சந்தா கட்டி  சந்தாதாரர் ஆகலாம் இன்ஷாஅல்லாஹ்  https://wa.me/p/33176695991945755/918867298998

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக