ரீல் அல்ல ரியல்!
நரகம் பற்றிய வர்ணனைகள்
நரகம் என்பது இவ்வுலக வாழ்க்கையில் இறைவனுக்குக் கீழ்ப்படியாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்துவரும் தீயோர் மறுமையில் தண்டனை அனுபவிக்கப் போகும் இடம். அங்கு ஒரு நிருபர் நின்று கொண்டு அங்கு காணும் காட்சிகளை வர்ணித்தால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட வருணனைகளைத்தான் திருக்குர்ஆனில் பல இடங்களில் காண்கிறோம். இறைவன் என்பவன் காலத்திற்கு அப்பாற்பட்டவன்.
நம் புரிதலுக்கு சொல்வதென்றால் இறைவன் முக்காலத்தையும் உணர்பவனும்
காண்பவனும் ஆவான். நம்மைப் பொறுத்தவரை இவை நாளை நடப்பவை. ஆனால் இறைவனோ அவற்றை
நேரடியாகக் காண்கிறான். அதனால்தான்
திருமறையின் சில வசனங்கள் எதிர்காலத்தில் நடக்கப் போவதை அறிவிப்பது போலவும்
மற்றும் சில நடந்துகொண்டு இருப்பதை அறிவிப்பது போலவும் இருப்பதை நீங்கள் காணலாம்.
உதாரணமாகக் கீழ்கண்ட வசனங்களைப் பாருங்கள்:
78:21-30. வரம்பு மீறியோரின்
தங்குமிடமாக நரகம் காத்துக் கொண்டிருக்கிறது.
23. அதில் யுகம் யுகமாகத்
தங்குவார்கள்.
24. அங்கே குளிர்ச்சியையும்,
(குளிர்) பானத்தையும் சுவைக்க மாட்டார்கள்.
25. கொதி நீரையும், சீழையும் தவிர.
26. இது செயலுக்கேற்ற கூலி!
27. அவர்கள் விசாரணையை
நம்பாதிருந்தனர்.
28. நமது வசனங்களை
ஒரேயடியாகப் பொய்யெனக் கருதினர்.
29. ஒவ்வொரு பொருளையும்
எழுத்தில் வரையறுத்துள்ளோம்.
30. சுவைத்துப் பாருங்கள்!
உங்களுக்கு வேதனையைத் தவிர வேறு எதையும் அதிகமாக்க மாட்டோம்.
56: 42-55 அவர்கள் (தீயோர்) அனல்
காற்றிலும், கொதி நீரிலும், அடர்ந்த புகை நிழலிலும் இருப்பார்கள்.
44. அதில் குளிர்ச்சியும்
இல்லை. இனிமையும் இல்லை.
45. இதற்கு முன் அவர்கள்
சொகுசாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.
46. பெரும் பாவத்தில்
பிடிவாதமாக இருந்தனர்.
47, 48. ''நாங்களும் முந்தைய
எங்களின் முன்னோர்களும் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும் போது உயிர்ப்பிக்கப்படுவோமா?'' என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.
49, 50. ''முந்தையவர்களும்,
பிந்தையவர்களும் அறியப்பட்ட ஒரு நாளின் குறிப்பிட்ட
நேரத்தில் ஒன்று திரட்டப்படுவார்கள்'' என்று
கூறுவீராக!
51, 52. பொய்யெனக் கருதிக்
கொண்டு வழி கேட்டில் இருந்த நீங்கள் பின்னர், ஸக்கூம் எனும் மரத்திலிருந்து உண்பீர்கள்.
53. அதனால் வயிறுகளை
நிரப்புவீர்கள்.
54. அதற்கு மேல் கொதி
நீரைக் குடிப்பீர்கள்.
55. தாகம் கொண்ட ஒட்டகம்
குடிப்பது போல் குடிப்பீர்கள்.
இறைவன் நம் அனைவரையும்
நரக வேதனையில் இருந்து காப்பாற்றுவானாக!
=================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக