இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 31 டிசம்பர், 2025

புதிய ஆண்டு – புதிய மனிதன்


 
ஒவ்வொரு புதிய ஆண்டும் மனிதனின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நிறுத்தமாக அமைகிறது.

கடந்த நாட்களை நினைவுபடுத்தி, எதிர்காலத்தை நோக்கி சிந்திக்க வைக்கும் ஒரு தருணம் அது. காலண்டரில் ஒரு வருடம் மாறுவது இயல்பான நிகழ்வு.
ஆனால் மனிதனின் சிந்தனை, பழக்கம், வாழ்க்கை நோக்கம் மாறவில்லை என்றால் அந்த “புதிய ஆண்டு” பெயரளவில் மட்டுமே புதியதாக இருக்கும்.

உலகம் புதிய ஆண்டை ஒன்றுகூடல், கொண்டாட்டம், கும்மாளம், இசை, மது அருந்துதல், பட்டாசு வெடித்தல், தீர்மானங்கள் என்ற அளவிலேயே பார்க்கிறது.
ஒரு இரவு உற்சாகம், ஒரு நாள் மகிழ்ச்சி— என எல்லாம் அன்றோடு முடிந்து விடுகிறது.
ஆனால் இஸ்லாம் புதிய ஆண்டை சுய பரிசீலனைக்கும் சீர்திருத்தத்திற்குமான வாய்ப்பாக பார்க்கிறது.
மனிதன் தன்னைத் தானே நேர்மையாகக் கேள்வி கேட்க வேண்டிய நேரமாக அதை மாற்றுகிறது.

திருக்குர்ஆன் மனிதனுக்கு மாற்றத்தின் அடிப்படை விதியை தெளிவாக அறிவிக்கிறது:

ஒரு சமூகத்தின் நிலையை அவர்கள் தாங்களே மாற்றாத வரை
இறைவன் அவர்களின் நிலையை மாற்றமாட்டான்.”
(திருக்குர்ஆன் 13:11)

இந்த வசனம் மாற்றம் வெளியில் இருந்து வராது, அது மனித உள்ளத்திலிருந்து தான் தொடங்க வேண்டும் என்பதை உறுதியாகச் சொல்கிறது.
சிந்தனை மாறாமல் செயல் மாறாது. செயல் மாறாமல் வாழ்க்கை மாறாது.
அதனால்தான் உண்மையான மாற்றம் வெளிப்புற சூழலில் அல்ல—
உள்ளம் சார்ந்த சீர்திருத்தத்தில் இருக்கிறது.

மனிதன் பெரும்பாலும் வேலை, வசதி, சூழல் மாறினால் வாழ்க்கை மாறிவிடும் என்று நினைக்கிறான். ஆனால் உள்ளம் மாறாத வரை அந்த மாற்றங்கள் தற்காலிகமாகவே இருக்கும்.

நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் இதை தெளிவாகச் சொன்னார்கள்:
கவனியுங்கள்! மனித உடலில் ஒரு சிறிய துண்டு உள்ளது. அது சீரானால் முழு உடலும் சீராகும். அது கெட்டுப் போனால் முழு உடலும் கெடும்.
கவனியுங்கள்! அதுதான் உள்ளம் (கல்பு).”  (புகாரி, முஸ்லிம்)

  • புதிய மனிதன்” என்பவன் பிழையில்லாத மனிதன் அல்ல.
  • -    ஆனால் பிழையை உணர்ந்து திருந்த முயலும் மனிதன்.
  • -    அவன் நேரத்தை மதிப்பவன்.
  • -    கோபம், ஆசை, அகந்தை ஆகியவற்றை கட்டுப்படுத்த முயல்பவன்.
  • -    தனக்கு மட்டுமல்ல— குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பொறுப்புடன் வாழும் மனிதன்.

இந்த புதிய ஆண்டு நம்மிடம் ஒரு முக்கியமான முடிவை எதிர்பார்க்கிறது:
நாம் காலண்டரை மட்டும் மாற்றிவிட்டு கடந்து போகிறோமா?
அல்லது உள்ளத்தை மாற்றி அதன்வழி ஒரு புதிய மனிதனாக உருவாகப் போகிறோமா?

உண்மையான புதிய ஆண்டு அந்த தீர்மானத்திலிருந்தே தொடங்குகிறது.

  • தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டவன் நிச்சயமாக வெற்றி பெற்றான்.” (திருக்குர்ஆன் 91:9)

  • அன்றியும், அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான்; அத்தகையோர்தாம் பெரும் பாவிகள் ஆவார்கள். (திருக்குர்ஆன் 59:19)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)

=================== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்
நாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_9390.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக