இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 19 ஜனவரி, 2026

துறவியைக் கண்டு ஏன் அழுதார் அந்த கலீபா?


= சூழ்ந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்ட வையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.(திருக்குர்ஆன் 88:1-3)
= கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.  கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும். அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை. அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது; அன்றியும் பசியையும் தணிக்காது.(திருக்குர்ஆன் 88:4-7)

ஹாஃபிழ் அபூ பக்ர் அல்-புர்கானி அவர்கள் அபூ இம்ரான் அல்-ஜவ்னி அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்: "உமர் பின் அல்-கத்தாப் (ரழி) அவர்கள் ஒரு துறவியின் மடாலயத்தைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள், 'ஓ துறவியே!' என்று அழைத்தார்கள். பின்னர் அந்த துறவி வெளியே வந்தார். உமர் (ரழி) அவர்கள் அவரைப் பார்த்து அழத் தொடங்கினார்கள். பின்னர் அவர்களிடம், 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! ஏன் அழுகிறீர்கள்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'அல்லாஹ் தனது வேதத்தில் கூறியுள்ள இந்த வசனத்தை நான் நினைவு கூர்ந்தேன்:
அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும். (திருக்குர்ஆன் 88:2-3)

எந்த உமரின் பெயரைக் கேட்டால் உலக அரசர்கள் அஞ்சி  நடுங்கினார்களோ அதே உமர் (ரலி) தனது பேரரசின் ஒரு குடிமகனின் நிலை கண்டு அழுகிறார்.  22,51,030 சதுர மைல்களில் பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தை அவரது ஆட்சியில் மக்கள் தன்னிறைவோடு வாழ்ந்தார்கள் என்கிறது வரலாறு. அவர்களின் அழுகைக்குக் காரணம் அந்த துறவியின் உணவு, உடை, உறைவிடத்தைப்  பற்றியதாக இருக்கவில்லை. மாறாக அத்துறவியின் மறுமை இருப்பிடத்தைப் பற்றியதாக இருந்திருக்கிறது என்பதை மேற்படி நிகழ்வில் இருந்து அறிகிறோம். உமரைப் பொறுத்தவரை இறைவாக்குகள் ஒருபோதும் பொய்யாகுவதில்லை என்று அவர் உறுதியாக  அறிந்திருந்தார்.  அதில் கூறப்படும் விஷயங்கள் உறுதியாக நடந்தேறும் என்றும் உணர்ந்திருந்தார்.  
இறைவனிடம் நற்கூலி கிடைக்கும் என்ற நோக்கில் தங்கள் உடல்சுகங்களை துறந்து வாழ்பவர்கள் இந்தத் துறவிகள். தங்கள் ஆசைகளையும் உடல் இச்சைகளையும் அடக்கி சாதாரண மனிதர்கள் உண்ணும் உணவு, உடை, உறைவிடங்களை எல்லாம் தியாகம் செய்து இறைப்பொருத்தம் தேட முனைபவர்கள் அவர்கள்.  ஆனால் அவர்களின் தியாகம் அனைத்தும் வீணாவது மட்டுமல்ல, அவை அனைத்தும் இறைவனின் கோபத்தை மூட்டி  இறுதியில் அவர்களுக்கு நரக தண்டனையைப் பெற்றுத்தந்தால் எப்படி இருக்கும்? அதை நினைத்துதான் அந்த மகா வல்லரசர் அழுதார். 
இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.  (திருக்குர்ஆன் 3:85)
என்றல்லவா இறைவன் திருக்குர்ஆனில் கூறுகிறான்!
இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் இறைவனின் மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது. அவரது 

சரி, அரசராக இருந்து அந்தக் குடிமகனை - அந்தத் துறவியை - அப்போதே தடுத்து இருக்கக் கூடாதா? அந்தத் துறவியின்  மடத்தை கட்டாயமாக மூடி இருக்கக் கூடாதா? என்ற கேள்வி இங்கு எழும். 
இதற்கு என்ன பதில்?
எந்த இறைவன் மேற்படி திருக்குர்ஆன் வசனங்களை  அருளினானோ அதே இறைவன் இறைமார்க்கத்தை  பிறர் மீது திணிப்பதையும் தடுத்துள்ளான்.
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.

 உமர் எப்படிப்பட்ட வல்லரசர் ஆனாலும் அவருக்கு அநீதிகளையும் அக்கிரமங்களையும் கையாளும் அரசர்களை வென்று அங்கு தர்மத்தை நிலைநாட்டும் அதிகாரத்தை ஒரு கலீபா என்ற முறையில் வழங்கப்பட்டு இருந்தது. ஆனாலும் எந்த ஒரு தனிநபரையும் நிர்பந்தித்து இஸ்லாத்தில் சேர்க்கும் அதிகாரம் அவருக்கு இல்லை என்பதே இதற்கான காரணம்! 
=============
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்
நாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_9390.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக