இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 20 ஏப்ரல், 2026

ரமலான் விரதமும் தன்விழுங்கலும் (Autophagy)

இறைவனின் படைப்பாற்றல் அற்புதங்கள்


ரமலான் விரதமும் தன்விழுங்கலும்

2016-ல் ஜப்பானிய உயிரியலாளர் யோஷினோரி ஓஸுமி அவர்கள் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வாங்கினார். அவர் என்ன கண்டுபிடித்தார்? 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உண்ணாவிரதம் (நோன்பு) செய்பவர்கள் அனுபவத்தால் தெரிந்த ஒரு ரகசியத்தை அவர் அறிவியலால் நிரூபித்தார்! 

 அந்த ரகசியத்தின் பெயர் ஆட்டோஃபேஜி (Autophagy) — அதாவது "தன்னைத்தானே உண்ணுதல்". உங்கள் உடல் செல்களே தங்களுக்குள் இருக்கும் சேதமான, பழுதான, தேவையில்லாத பாகங்களைப் பார்த்து, அவற்றைச் சுத்தம் செய்து, மறுபயன்பாட்டுக்கு கொண்டு வரும் அற்புத அமைப்பு இது!   

 செல்கள் உள்ளே இருக்கும் குப்பை, சேதமான மைட்டோகாண்ட்ரியா (எனர்ஜி ஃபேக்டரி), மூளையில் அடைக்கும் கெட்ட புரதங்கள் (அல்சைமர் வரும் பிளேக்ஸ்), "ஜோம்பி செல்கள்" (வேலை செய்யாத ஆனால் அழற்சியை உண்டாக்கும் செல்கள்) — எல்லாத்தையும் கண்டுபிடித்து, ஒரு சிறிய பைக்குள் (ஆட்டோஃபகோசோம்) போட்டு, உடைத்து, அவற்றின் நல்ல பொருட்களை மறுசுழற்சி செய்து புதிய செல்களுக்கு பயன்படுத்தும்! 

 இது உங்கள் உடலின் உள்ளார்ந்த பராமரிப்பு சிஸ்டம். எந்த லேபரட்டரியாலும் இப்படி ஒரு அற்புதமான சுத்திகரிப்பை இன்னும் செய்ய முடியவில்லை. 

 ஆன்-ஆஃப் ஸ்விட்ச்

இந்த ஆட்டோஃபேஜிக்கு ஒரு எளிய ஆன்-ஆஃப் ஸ்விட்ச் உள்ளது. அதுதான் இன்சுலின் இல்லாத நிலை! 

 நீங்கள் சாப்பிடும் போது — குறிப்பாக அரிசி, ரொட்டி, இனிப்பு, கார்போஹைட்ரேட் அதிகம் இருந்தால் — உங்கள் பேன்க்ரியாஸ் இன்சுலினை வெளியிடும். இன்சுலின் *mTOR* என்கிற சென்சரை ஆன் செய்யும். mTOR உங்கள் செல்களுக்கு “ஏராளமா உணவு இருக்கு... வளரு! கட்டு!” என்று சொல்லும். அப்போது உடல் Growth mode (வளர்ச்சி நிலையில்) இருக்கும். சுத்தம் செய்யும் ஆட்டோஃபேஜி முழுக்க ஆஃப் ஆகிவிடும். 

நம் நாட்டு மக்களில் பெரும்பாலானோர் காலையில் எழுந்ததில் இருந்து இரவு வரை 16-18 மணி நேரம் இந்த கிரோத் மோட்-லேயே இருக்கிறோம். சுத்தம் செய்யும் நேரமே இல்லை! 

 ஆனால் 12-14 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தால்? இன்சுலின் குறையும். mTOR ஆஃப் ஆகும். ஆட்டோஃபேஜி ஆன் ஆகும்!  அதனால் என்ன நடக்கிறது?

செல்கள் உள்ளே இருக்கும் சேதமான மைட்டோகாண்ட்ரியாவை சுத்தம் செய்யும் (மைட்டோஃபேஜி). மூளையில் அடைக்கும் கெட்ட புரதங்களை அகற்றும். வயதான ஜோம்பி செல்களை அழித்து அழற்சியை குறைக்கும். மூளையில் BDNF என்ற நல்ல ஹார்மோன் அதிகரிக்கும் — நினைவாற்றல், மன அழுத்தம் குறையும்!  

இது உங்கள் உடலின் பழைய இயற்கை ரிதம்!

 நம் முன்னோர்களுக்கு ஃபிரிட்ஜ் இல்லை. உணவு எப்போதும் கிடைக்காது. சீசன் படி உணவு வரும். அதனால் உடல் தானாகவே சுத்தம் செய்யும் நேரம் கிடைத்தது. இப்போ நாம் 24 மணி நேரமும் உணவு கிடைக்கிறது என்பதால் உடல் அந்த சுத்தம் செய்யும் மோட்-க்கே போகவில்லை. 

இறைநம்பிக்கையாளர்களுக்கு நன்மை

இருந்தாலும் கவலை வேண்டாம்.. அதைத்தான் வருடத்தில் ஒருமுறை ரமலான் மாத நோன்பு இறைவிசுவாசிகளுக்கு நிறைவு செய்கிறது.

இறைவிசுவாசிகளே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம். (திருக்குர்ஆன் 2:183)

திருக்குர்ஆன் என்ற ஒரு அருள்மறை நமக்கு அருளப்பட்ட காரணத்தால் அதற்கான நன்றிக்கடன் செலுத்தும் முகமாக நாம் ரமளானில் நாம் நோன்பு நோற்கிறோம். ஆனால் அதுவும் இறைநம்பிக்கையாளர்களுக்கு நன்மை பயப்பதாக ஆக்கியுள்ளான் கருணையுள்ள இறைவன்!  

ஆட்டோஃபேஜி ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பலன்: 

  • இன்சுலின் சக்தி அதிகரித்தல் (சர்க்கரை நோய் கட்டுப்பாடு) 
  • உடல் அழற்சி குறைதல் 
  • மூளை ஆரோக்கியம் அதிகரித்தல் 
  • விலங்குகளில் ஆயுள் கணிசமாக அதிகரித்தல்! 

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (திருக்குர்ஆன் 55:13)

================= 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக