இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 16 அக்டோபர், 2023

பெண்ணினத்திற்கு எதிரான ஊடக முதலைகள்!

 

இஸ்லாம் என்றவுடனேயே அது பெண்களை அடிமைப்படுத்தும் மார்க்கம் என்கின்ற தவறான சித்தரிப்பை ஊடகங்கள் இன்றுவரை வஞ்சகமாகவும் தீவிரமாகவும் செய்து வருகின்றன. அறவே மனசாட்சியற்ற, அற்பமும் நீதி என்பதே இல்லாத ஒரு போக்கு இது என்பதை சுட்டிக் காட்டவே இப்பதிவு! ஆபாசங்களையும் திரையுலக கிசுகிசுக்களையும் பரபரப்பூட்டும் கட்டுக்கதைகளையும் மக்களிடையே பரப்பி அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட ஊடக முதலைகளிடம் நியாயம் நீதி இவற்றை எதிர்பார்ப்பது தகாத ஒன்றுதான். இருந்தாலும் நடுநிலையாக சிந்திக்கும் மக்களிடம் உண்மையை கொண்டு செல்லவேண்டிய கடமை நமக்கு உள்ளதல்லவா?

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைத் தூதராக அனுப்பப்பட்ட காலகட்டத்தில் - அதாவது கிபி 625 இல் - அரேபியாவில் பெண்ணடிமைத்தனமும், பெண்கள் போகப்பொருளாக நடத்தப்படும் அவலமும் இருந்து வந்தது. பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்கக்கூடிய கொடூரமான நடைமுறை கேட்பாரின்றி நடந்து கொண்டிருந்தது! மறுபுறம் உலகின் வேறு பல பாகங்களில் பல்வேறு வடிவில் பென்ணடிமைத்தனங்கள் அரங்கேறிக் கொண்டு இருந்தன.
= பெண்ணுக்கு ஆன்மா உண்டா என்ற சர்ச்சை நடத்தி பெண் இகழப்பட்டாள்!
= முதல் பாவத்துக்கு பெண்ணே மூலகாரணம் என்று தூற்றப்பட்டாள்!
= திருமணத்தில் பெண்ணின் சம்மதம் பற்றி யாரும் கவலைப்படவில்லை!
= கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று கட்டியவனால் கொடுமைப்படுத்தப்பட்டாலும் அவனோடு வாழ கட்டாயப்படுத்தப்பட்டாள் பெண்!
= அவள் பெற்றது பெண்ணென்றால் அதற்கும் அவளே சபிக்கப்பட்டாள்!
= மாதவிடாய் காலங்களில் ஒரு சிலரால் தீட்டு என்று ஒதுக்கி வைக்கப் பட்டாள்!
= விதவை மறுமணம் என்பது மறுக்கப்பட்டது, அவளைக் காண்பது கூட அபசகுனம் என்று அவமானப்படுத்தப்பட்டாள்!
= கணவன் அல்லது தந்தையரின் சூதாட்டங்களுக்கும் மதுபோதை வெறிக்கும் பெண்ணின் கற்பு விலைபோனது!
= கணவன் இறந்துபோனால் உடன்கட்டை ஏறும் நிர்பந்தத்துக்கு ஆளானாள் பெண்!
= இன்னும் பல வடிவங்களில் பெண்ணினத்துக்கு எதிரான கொடுமைகள் உலகெங்கும் நிகழ்ந்து கொண்டு இருந்தன.
உலகம் இவ்வாறு இருக்கையில்தான் இஸ்லாம் என்ற கண்ணியமான வாழ்வியல் கொள்கையை அரபு நாட்டு மக்களுக்கிடையே அறிமுகம் செய்து அதன் வாயிலாக பெண்களைப் பற்றிய இழிவான கண்ணோட்டத்தை சமூகத்திலிருந்து அகற்றி அவர்களை மரியாதைக்குரியவர்களாக மதிக்கும் நிலையை உருவாக்கினார்கள் நபிகளார்!
அதற்கான அடித்தளங்களை அன்றே பலமாக இட்டுச் சென்றார்கள் அவர்கள். ஆன்மீக உபதேசம் என்பதோடு நில்லாமல் பெண் விடுதலைக்கும் பெண்ணுரிமைகளுக்குமான உரிய சட்டங்களும் இயற்றி அவற்றை நடைமுறைப்படுத்தும் உயர்ந்த சமூகத்தையும் நிறுவிச் சென்றார்கள் அண்ணலார்! அதன் காரணமாக அன்று முதல் இன்றுவரை கோடிக்கணக்கான பெண்களை – தலைமுறை தலைமுறையாக இஸ்லாம் காப்பாற்றி வருகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை! உண்மையில் எந்த பெண்களைக் குறிப்பிட்டு இஸ்லாம் அடிமைப்படுத்துகிறது என்று ஊடக முதலைகள் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனவோ அந்த கோடிக்கணக்கான பெண்கள் உயிர் வாழ்வதே இஸ்லாத்தின் வரவால்தான் என்பதை அறிவார்களா அவர்கள்?
இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல.
புள்ளிவிவரங்களை கவனியுங்கள்:
சர்வசாதாரணமான பெண் கருக்கொலைகள்:
= 2020 வருட ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை 2013 முதல் 2017 வரை ஒவ்வொரு ஆண்டும் 4.6 லட்சம் சிறுமிகள் பிறக்கும்போது “காணவில்லை” (missing at birth) என்று கூறுகிறது. அதாவது அவை கருவிலேயே கொன்றொழிக்கப் படுகின்றன என்பது இதன் பொருள்! இதற்குக் காரணம் பாலியல் தேர்வின் விளைவாக ஆண் குழந்தையை பெறுவதை மக்கள் விரும்புவதும் பெண் குழந்தை பிறப்பதை வெறுப்பதுமே! கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் இவ்வாறு "காணாமல்" போயுள்ளார்கள் என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது. இத்தனைக்கும் இந்தியாவில் பாலியல் தேர்வு சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆயினும் இடையறாது நிகழ்கிறது இக்கொடுமை!
= உலக மக்கள் தொகை அறிக்கையில் 2020 ஆம் ஆண்டில் உலகளவில், "காணாமல் போன" பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 14.2 கோடி என்று ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (United Nations Population Fund) கூறியுள்ளது. (ஆதாரம்: UN’s World Population Report, 2020 says 4.6 crore women are ‘missing’ in India due to sex selection (scroll.in)
இவ்வாறு உலகெங்கும் பெண்சிசுக்களை அடையாளம் கண்டு இவ்வுலகிற்கு வரவிடாமல் தடை செய்யும் இக்கொடுமை இடையறாது தடுப்பாரின்றி நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. இதனால் சமூகத்தில் ஏற்பட இருக்கும் விபரீதங்கள் கடுமையானவை. ஆயினும் அரசுகள் எதையுமே கண்டுகொள்ளாமல் வெறும் கண்துடைப்பு அறிக்கைகள் விடுவதோடு நிறுத்திக் கொள்கின்றன. காரணம் அவர்களிடம் இப்பிரச்சினைக்கு நடைமுறை சாத்தியமான தீர்வுகளும் அவர்களிடம் இல்லை!
ஆனால் அதே உலகில் நான்கில் ஒரு பங்கு மக்கள் – அதாவது முஹம்மது நபிகளாரைப் பின்பற்றும் மக்களை – இக்கொடுமைலிருந்து அவர்கள் தடுத்து வருகிறார்கள் என்பது நிகரற்ற ஒரு வரலாற்று சாதனை அல்லவா? அதுவும் நூற்றாண்டுகளாகத் தொடரும் இந்த நடவடிக்கை மூலம் காப்பாற்றப்பட்ட மற்றும் தொடர்ந்து காப்பாற்றப்படுகின்ற பெண் சிசுக்களின் எண்ணிக்கையை எண்ணிப்பாருங்கள்!
இந்நிலையில் ஜனநாயகத்தின் நான்காம் தூண் என்று நம்பப்படும் ஊடகங்களின் பங்கு என்ன என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள். மேற்கூறப்பட்ட பெண்சிசுக்கொலைகள் மூலம் உண்டாகக்கூடிய ஆபத்துகள் பற்றியும் இவை நிகழாமல் தவிர்ப்பதற்கான வழிமுறைகளைப் பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது அவர்களின் தார்மீகக் கடமை அல்லவா? மறுபுறம் இஸ்லாம் இப்பிரச்சினைக்கு தரும் தீர்வைப் பற்றியும் நூற்றாண்டுகளாக இவ்விஷத்தில் அது நிகழ்த்திவரும் சாதனை பற்றியும் மக்களின் நலன் கருதி அவர்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டியது அவர்களின் தலையாய கடமை அல்லவா?
அவ்வாறு செய்தால் மேற்கண்ட தீமைகளில் இருந்து பெண்ணினமே காப்பாற்றப்பட்டு இருக்கும் அல்லவா? இது
மனித குலத்துக்கு- குறிப்பாக பெண்ணினத்துக்கு – எதிரான மாபெரும் வஞ்சகம் அல்லவா? இவ்வாறு சத்தியத்தை மக்களில் இருந்து மறைத்த குற்றத்திற்காக இறைவன் உங்களை கண்டிப்பாக தண்டிப்பான்!
= நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது. (திருக்குர்ஆன் 85:12)
=============
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

3 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. கருத்துக்கு நன்றி அண்ணா. உண்மை என்னான்னு கொஞ்சம் சொல்லுங்க. அப்படியே உங்க பெயரையும் போன் நம்பரையும் பதிவு செய்ங்க அண்ணா!

      நீக்கு
    2. என்ன பதில் சொல்ல மாட்டீங்களா அண்ணா?

      நீக்கு