இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

கடவுளை வணங்கச் சொன்னவர்களையே கடவுளாக்கிய அவலம்!


 இறைத்தூதின் உயிர் மூச்சு ஏகத்துவம்!

தொன்று தொட்டு இப்பூமிக்கு வந்த இறைத்தூதர்கள் அனைவரும் ஏக இறைவன் ஒருவனையே வழிபட வேண்டும், அவனை விடுத்து மற்றவற்றை வணங்குவது மாபெரும் பாவம் என்பதை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி வந்துள்ளார்கள்
=  (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்; ''நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லைஎனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்'' என்று நாம் வஹீ  (இறை வெளிப்பாடு) அறிவிக்காமலில்லை.  (திருக்குர்ஆன் 21:25)

 கண்டிப்பாக இறைவன் எந்த முரண்பாடுகளையும் கற்பிக்க மாட்டான் என்பதையும் இறைத்தூதர்களும் ஒருவருக்கு ஒருவர் முரண்பட மாட்டார்கள் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இன்று முரண்பாடுகளாக ஏதாவது தென்பட்டால் அவை பிற்காலங்களில் ஒருசில குழப்பவாதிகளும்  இடைத்தரகர்களும் அரசியல் சக்திகளும் மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்ட நுழைத்தவை என்பதும் தெளிவு.
தர்மத்தை நிலைநாட்ட அடித்தளம்
இறைவனின் ஏகத்துவத்தை போதிப்பதே இறைத்தூதர்களின் அடிப்படைப் பணியாக இருந்ததுஏனெனில் இதுதான் பூமியில் தர்மத்தை நிலைப் நாட்டுவதற்கான அடித்தளம்மனிதன் பாவங்களில் இருந்து விலகி இருக்க வேண்டுமானால் கடவுளைப் பற்றிய முறையான எண்ணமும் நம்பிக்கையும் அவனுள் விதைக்கப்பட வேண்டும்அந்த எல்லாம் வல்ல இறைவன் என்னைக் கண்காணிக்கிறான்நான் குற்றம் செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற உணர்வு அவனுள் சதா இருக்க வேண்டும்.  ஆனால் உண்மை இறைவனை விட்டுவிட்டு அவன் அல்லாதவற்றை - மனிதர்களையும், உருவச்சிலைகளையும் இன்ன பிற படைப்பினங்களையும் - வணங்கும்போது இறைவனைப்பற்றிய மரியாதை உணர்வு அகன்று போவதால் இறையச்சமும் இல்லாமல் போய் விடுகிறது. 
அந்த அடிப்படையில் இந்த பூமிக்கு வந்த இறைத்தூதர்கள் அனைவரும் தத்தமது மக்களுக்கு கீழ்கண்டவாறு கடவுள் கொள்கையை போதித்தார்கள்:
·  இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் ஒரே ஒருவனே.  அவன் மட்டுமே உங்கள் வணக்கத்துக்கும் பிரார்த்தனைக்கும் உரியவன்.
·  அவனை நேரடியாக வணங்க வேண்டும்.  அவனுக்கு இடைத்தரகர்கள் தேவை இல்லைசடங்கு சம்பிரதாயங்களும் தேவை இல்லை.
·  அவனுக்கு ஓவியங்களோ உருவங்களோ சமைக்ககூடாது ஏனெனில் அவனைப்போல் எதுவுமே இல்லை. 
·  நாங்கள் அவனுடைய தூதர்கள் மட்டுமேஅவனுக்கு பதிலாக எங்களையோ எங்கள் சமாதிகளையோ உருவங்களையோ வணங்கக் கூடாது.
·   படைத்தவனுக்கு பதிலாக படைப்பினங்களையோ உருவங்களையோ நீங்கள் வணங்குவீர்களாயின் உங்களுக்குள் பிரிவினைகளும் குழப்பங்களும் ஏற்படும்.
என்றெல்லாம் போதித்தார்கள்.  திருக்குர்ஆனில் இருந்து முன்னாள் இறைத்தூதர்களில் சிலரது உதாரணங்களை கீழே காண்கிறோம்:
திண்ணமாகநாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்அவர் கூறினார்: “என்னுடைய சமுதாயத்தவரேஅல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கில்லைமகத்தானதொரு நாளின் வேதனை உங்கள் மீது வந்து விடுமோ என்று நான் அஞ்சுகின்றேன்.” (திருக்குர்ஆன் 7:59)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்) 
 மேலும்இப்ராஹீமை நாம் அனுப்பினோம்அப்போது அவர் தம்முடைய சமூகத்தாரிடம் கூறினார்: “அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்மேலும்அவனுக்கு அஞ்சுங்கள்நீங்கள் அறிந்துகொள்வீர்களாயின்இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்(திருக்குர்ஆன் 29:16)
மேலும்‘ஆத்’ கூட்டத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை நாம் அனுப்பினோம்அவர் கூறினார்: “என் சமுதாயத்தாரேஅல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை எனவேநீங்கள் தவறான நடத்தையிலிருந்து விலகிக்கொள்ள மாட்டீர்களா?” (திருக்குர்ஆன் 7:65) 
மேலும்ஸமூத் கூட்டத்தாரிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை நாம் அனுப்பினோம்அவர் கூறினார்: “என் சமுதாயத்தார்களேஅல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லைஉங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்று உங்களிடம் வந்துவிட்டதுஇது அல்லாஹ்வின் ஒட்டகம் இது உங்களுக்கு ஒரு சான்றாக உள்ளதுஎனவேஅல்லாஹ்வின் பூமியில் மேய்ந்து திரிய இதனை விட்டு விடுங்கள்இதற்கு எந்தத் தீங்கும் செய்யாதீர்கள்அவ்வாறு செய்வீர்களாயின் துன்புறுத்தும் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்(திருக்குர்ஆன் 7:73)

இவ்வாறு இறைவனை மட்டுமே வணங்கவேண்டும் என்பதை எடுத்துரைத்த  அவர்கள் அந்த மக்கள் செய்துகொண்டிருந்த தவறுகளைப் பற்றி எச்சரித்தார்கள். மக்களோடு மக்களாக வாழ்ந்து இறைவனின் போதனைகளின் படி பாவ - புண்ணியங்கள் எவை என்பவற்றை கற்பித்தது மட்டுமல்லாமல் முன்மாதிரி புருஷர்களாகவும் வாழ்ந்து காட்டினார்கள்நாளடைவில் தர்மத்தையும் நிலைநாட்டின்னார்கள்ஆனால் இறைத்தூதர்களின் மறைவுக்குப் பிறகு பிற்கால மக்கள் மெல்லமெல்ல இக்கட்டளைகளை மீறினார்கள்ஷைத்தானின் தூண்டுதலால் இறைத்தூதர்களின் நினைவுக்காக அவர்களுக்கு  உருவப் படங்களை வைக்க ஆரம்பித்தார்கள்நாளடைவில் அவற்றைச் சிலைகளாக வடித்து பின்னர் அவற்றை வழிபட ஆரம்பித்தார்கள்உண்மை இறைவனை மறந்தார்கள்அதன் விளைவு?.....இறையச்சம் மக்களில் இருந்து அகல அகலஇடைத்தரகர்களும் மூடநம்பிக்கைகளும் பெருகப் பெருக......  கடவுளின் பெயராலேயே சுரண்டல்களும் அக்கிரமங்களும் நடந்தேறினஇவ்வாறு பூமியில் அதர்மம் பரவிப் படர்ந்தது.. 
அற்புத குமாரன் இயேசு (ஈஸா) அவர்கள் 
இதே இறைத்தூதர்கள் வரிசையில் வந்தவர்தான் அன்னை மரியாளுக்கு அற்புதமான முறையில் பிறந்த இயேசுநாதர் என்றழைக்கப்படும் ஈசா நபி. அவரும் மக்களுக்கு ஏகத்துவத்தையே போதித்தார். 
“நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்” என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: “இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை. (திருக்குர்ஆன் 5:72)
மட்டுமல்ல, இறைவன் அல்லாதவற்றை வணங்கினால் ஏற்படும் இறைதண்டனையையும் எடுத்துரைத்தார். ஆயினும் அவரை இறைவன் அற்புதமான முறையில் கைப்பற்றிய பிறகு மக்கள் அவரை இறைவனின் குமாரன் என்றும் அவரையே இறைவன் என்றும் கூறி வழிபடத் தொடங்கினார்கள். 
இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் 
மேற்படி இறைத்தூதர்கள் வரிசையில் இறுதியாக -ஆனால் அனைத்துலகுக்கும் பொதுவாக அனுப்பப்பட்ட இறைத்தூதர்தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள். அவர்களை இறைவன் பின்வருமாறு ஏகத்துவக் கொள்கையை கற்பிக்கக் கட்டளையிடுகிறான்:
= (நபியே!) நீர் கூறுவீராக: “மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.” (திருக்குர்ஆன் 7:158)
உலகின் நான்கில் ஒரு பங்கு மக்களால் உயிருக்குயிராக நேசிக்கப்பட்டும் கூட இந்த பூமியில் அவருக்கு எங்குமே சிலைகளும் படங்களும் இல்லை என்பது உலகறிந்த உண்மை. இறுதித்தூதர் மறைந்து பதினான்கு நூற்றாண்டுகள் கடந்து விட்டன. ஆயினும்  அவர் மூலம் அருளப்பட்ட திருக்குர்ஆனும் அவரது போதனைகளும் சிதையாமல் இன்றும் உயிர்ப்புடன் உள்ளன என்பதற்கு இவ்வுண்மை சான்று பகர்கின்றது. 
--------------------------------- 
தொடர்புடைய ஆக்கங்கள்:
இறைவனை வணங்க இடைத்தரகர் எதற்கு?

உருவ வழிபாட்டால் நாடு சந்திக்கும் பேரிழப்புகள்

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?

அல்லாஹ் என்றால் யார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக