இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 3 ஜூன், 2017

ஏழையாகவே வாழந்ததேனோ எங்கள் நபியே?

Related image
நபிகளாரின் வறுமை நேசம்:
அகிலத்துக்கெல்லாம் அருட்கொடையாக அனுப்பப்பட்ட நபிகளாரின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் ஆச்சரியம் மிக்கவை. அப்படிப்பட்ட ஆச்சரியங்களில் ஒன்று செல்வ செழிப்பின் போதும் அவர் வறுமை மீது கொண்ட நேசம். இவ்வுலகில் ஏழைகளாக வாழ்ந்தவர்கள் மறுமை வாழ்வில் அடைய இருக்கும் அளப்பரிய பாக்கியங்களை மிஃராஜ் என்ற விண்ணேற்ற நிகழ்வின்போது நேரடியாகக் கண்டார் நபிகளார். மட்டுமல்ல ஏழைகளின் உன்னத மறுமை நிலைபற்றிய செய்திகளை அவ்வப்போது இறைவனிடம் இருந்து கிடைக்கப்பெற்றார். அவற்றை மக்களுக்கு அறிவிக்கவும் செய்தார். நம்மில் யாருக்குத்தான் கீழ்கண்டவாறு பிரார்த்திக்க மனமோ தைரியமோ வரும்?
= இறைவா, என்னை ஏழைகளின் சுபாவத்தில் வாழவைப்பாயாக! ஏழ்மையான நிலையில் உலகிலிருந்து என்னை மரணிக்கச் செய்வாயாக! ஏழைகளின் கூட்டத்தில் மறுமையில் என்னை எழுப்புவாயாக!என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூஸஈது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
ஏழைகளுக்கு எளிமையான சொர்க்கப் பிரவேசம்:
= இறுதித்தீர்ப்பு நாளில், நீங்கள் அனைவரும் ஒன்று கூடியிருக்கும் போது, “இந்தச் சமுதாயத்தின் ஏழை, எளியோர்கள் எங்கே?” என்று அறிவிப்புச் செய்யப்படும், (அறிவிப்பைக் கேட்டதும்) ஏழை, எளியோர்கள் எழுவார்கள்.நீங்கள் என்ன நற்காரியங்களைச் செய்தீர்கள்?” என அவர்களிடம் வினவப்படும். எங்கள் இரட்சகனே! நீ எங்களைச் சோதித்தாய், நாங்கள் பொறுமையாக இருந்தோம். நீ மற்றவர்களுக்கு செல்வத்தையும் , ஆட்சியையும், கொடுத்தாய்!என்று அவர்கள் கூறுவார்கள். நீங்கள் உண்மையே கூறினீர்கள்என்று இறைவன் கூறுவான். எனவே, மற்ற பொது மக்களுக்கு முன்னதாக அவர்கள் சுவனத்தில் நுழைவார்கள். செல்வந்தர்களிடமும், ஆட்சியாளர்களிடமும் கடினமான கேள்வி கணக்குக் கேட்கப்படும்என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹிப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(
இப்னு ஹிப்பான்)
= செல்வந்தர்களான முஸ்லிம்களைவிட ஏழை முஸ்லிம்கள் நாற்பது வருடங்கள் முன்னதாக சுவர்க்கத்தில் நுழைவார்கள்என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(
திர்மிதீ)
ஏழைகளின் பொருட்டால் உதவி
= .”பலவீனர்களில் என்னைத் தேடுங்கள், ஏனேனில், உங்களில் பலவீனர்களின் பொருட்டால்தான் உங்களுடைய தேவைகள் நிறைவேற்றப் படுகின்றன. உங்களுக்கு உதவி செய்யப்படுகிறதுஎன்று நபி(ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(
அபூதாவூத்)
ஏழைகளோடு நளின நடத்தை:
மூன்று நற்பண்புகள் யாரிடம் உள்ளனவோ அவருக்கு அல்லாஹுதஆலா (கியாமத் நாளன்று) தன் அருள் என்னும் நிழலில் இடமளிப்பான். மேலும், அவரைச் சுவர்க்கத்தில் நுழையச் செய்வான். அவை, பலவீனர்களுடன் நளினமாக நடந்து கொள்ளுதல், பெற்றோருடன் கருணை காட்டுதல், அடிமைக்கு (வேலையாட்களுக்கு) உபகாரம் செய்தல்என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(
திர்மிதீ)
பணக்காரர்கள் பொறாமைப்படும் நாள்
= இறுதித்தீர்ப்பு நாளன்று (உயிர் தியாகம் செய்த) ஷஹீதை கொண்டு வரப்பட்டு, விசாரணைக்காக நிறுத்திவைக்கப்படும். பிறகு தான தர்மம் செய்தவரை கொண்டுவரப்பட்டு அவரையும் விசாரணைக்காக நிறுத்தி வைக்கப்படும். பிறகு உலகில் பல்வேறு சோதனைகள், சிரமங்களில் சிக்குண்டவர்கள் கொண்டு வரப்படுவர், அவர்களுக்காக மீஸான் (தராசு) வைக்கப்பட மாட்டாது, நீதிமன்றமும் அமைக்கப்படமாட்டாது. அவர்கள் மீது வெகுமதியும், கூலியும் மழையைப் போன்று பொழியப்படும், உலகில் சுகமாக வாழ்ந்தவர்கள் (இந்தச் சிறப்பான வெகுமதிகளைக் கண்டு) தங்கள் உடல்கள் (உலகில்) கத்தரிகளால் வெட்டப்பட்டிருந்தால் அதைப் பொறுமையுடன் தாங்கிக் கொண்டிருந்திருப்போமே!என ஆசைப்படுவர்என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(
தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
சோதனைகளும் பாவமன்னிப்பும்

= உண்மை விசுவாசிகளான ஆண்
பெண்களில் சிலர் மீது இறைவன் புறத்திலிருந்து சோதனைகளும் விபத்துகளும் வந்து கொண்டே இருக்கும். சில சமயம் உயிர் மீது, சில சமயம் பிள்ளைகள் மீது, சில சமயம் செல்வத்தின் மீதும் சோதனைகள் வந்து கொண்டே இருக்கும் அதன் காரணமாக அவருடைய பாவங்கள் உதிர்ந்து கொண்டே இருக்கும். இறுதியில் அவர் மரணித்த பிறகு ஒரு பாவம் கூட இல்லாத நிலையில் இறைவனைச் சந்திப்பார்” என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(
திர்மிதீ)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக