இந்த சம்பவங்களை வரலாற்றின் பக்கங்களில் அல்லது இணைய தளங்களில் அல்லது பாட புத்தகங்களில் இடம்பெறாமல் ஆதிக்க சக்திகள் மறைத்துவிட்டு தங்களை மனிதநேயம் மிக்கவர்களாக காட்டிக் கொள்ளலாம். அதேவேளையில் அப்பாவிகளை தங்கள் கொத்தடிமை ஊடகங்கள் மூலம் பயங்கரவாதிகளாக சித்தரிக்கலாம். ஆனால் இறைவனின் பதிவேட்டில் இருந்து இவர்கள் செய்த அதிபயங்கரவாத செயல்களை ஒருபோதும் மறைக்கவே முடியாது...
#இறுதித்தீர்ப்பு_நாள் அன்று இவை தீவிரமாக விசாரிக்கப்படும். நீதியின் வேட்கை நிறைவேறும் என்பதும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் என்பதும் திண்ணம்!
இறைவன் கூறுகிறான்:
அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும். (திருக்குர்ஆன் 36:65) அப்படி ஒரு அதிபயங்கரவாத சம்பவம்தான் இது:
முதலைத் தூண்டில்களாக கறுப்பின மழலைகள்
ஆப்பிரிக்க கண்டத்தில் சுதந்திரமாக வாழ்ந்துகொண்டு இருந்த கறுப்பின மக்களை துப்பாக்கி முனையில் அடக்குமுறை செய்து அவர்களை அடிமைகளாகப் பிடித்துவந்து அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அடிமைகளாக விற்றார்கள் காலனி ஆதிக்கவாதிகள்.
அவ்வாறு அமெரிக்காவில் அடிமை வர்த்தக காலத்தில் கறுப்பின ஆண்களுக்கும் பெண்களுக்கும் பல பயங்கரமான மனித உரிமை மீறல்கள் நடந்தன. இவற்றில் ஒன்று முதலைகளைப் பிடிக்க கறுப்பினக் குழந்தைகளை தூண்டிலாக பயன்படுத்துவது. கறுப்பின அடிமைகளைத் தங்களைவிடத் தாழ்ந்த இனம். அவர்களை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற உணர்வு பொதுபுத்தியில் புகட்டப்பட்டு இருந்தது. சகமனிதன் சகோதரனே தனக்கு சரிசமமே என்ற உணர்வு அவர்களுக்குள் சற்றும் இருக்கவில்லை. அறிவியலில் அவர்கள் அன்று முன்னேறியிருந்தாலும் வெள்ளையின மக்களுக்குள் இந்த சகோதர உணர்வு சற்றும் எட்டிப்பார்க்கவில்லை.
முதலைத் தூண்டில் என்றும் அழைக்கப்படும் இந்த கொடூரமான நடைமுறை 1800 மற்றும் 1900 களில் புளோரிடா மற்றும் லூசியானா சதுப்பு நிலங்களில் பொதுவானதாக கூறப்படுகிறது. அப்போது முதலைகளை வேட்டையாடுதல் ஒரு இலாபகரமான தொழிலாக இருந்தது, அவற்றின் தோல்கள் காலணிகள், பெல்ட்கள், பைகள் மற்றும் பிற பொருட்கள் செய்ய பயன்பட்டன. அவற்றின் இறைச்சிக்காகவும் அவை வேட்டையாடப்பட்டன.
வேட்டையாடும் விதம்:
குழந்தைகளை குளத்தின் ஆழமற்ற இடத்தில் விளையாட விட்டுவிட்டு முதலை வேட்டைக்காரன் துப்பாக்கியோடு அருகில் உள்ள மறைவான இடத்தில் இருந்து கண்காணிப்பான். சில சமயங்களில், சதுப்பு நிலங்கள் மற்றும் ஆற்றங்கரைகளுக்கு அருகில் இந்தக் குழந்தைகள் ஓடிப்போகாமல் இருக்க அவர்களைக் கட்டியும் வைத்தனர். அக்குழந்தைகளை உண்ணப் பாய்ந்துவரும் முதலைகளை வேட்டைக்காரன் தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பின் குழந்தைகளைக் காப்பாற்றுவான்.
என்னதான் குழந்தைகளைக் கைப்பற்றினாலும் இக்காட்சியைக் காண நேர்ந்தால் அக்குழந்தையின் பெற்றோரின் மனம் எப்படிப் பதைபதைத்துப் போகும்!
... ஆனால் அதையெல்லாம் சிந்திக்க அந்தக் கல்மனதுகளில் எங்கே இடமிருந்தது?
குழந்தைகளை எவ்வாறு களவாடினார்கள்?
இந்த பயங்கரமான 'முதலை தூண்டில்களை' எவ்வாறு பெற்றார்கள் கயவர்கள் என்பதை வெவ்வேறு சம்பவங்கள் விவரிக்கின்றன. மியாமி நியூ டைம்ஸ் அறிக்கையின்படி, வேட்டையாடுபவர்கள் சில சமயங்களில் குழந்தைகளை-பெரும்பாலும் பச்சிளம் குழந்தைகளை-அவர்களின் தாய்மார்கள் கவனக்குறைவாக இருக்கும்போது அல்லது கவனம் சிதறி இருக்கும்போது அல்லது வயல்களில் வேலையில் ஈடுபட்டு இருக்கும்போது சென்று பிடித்துக் கொள்வார்கள். குழந்தைகள் உள்ள அடிமைப் பெண்கள் குறிப்பாக இவ்வாறு பலத்த துயரங்களுக்கு உள்ளானார்கள்.
சில தகவல்களின் படி தங்கள் குழந்தைகளை தூண்டில்களாக பயன்படுத்துவதற்கு சுமார் இரண்டு டாலர்கள் அந்தத் தாய்மார்களுக்கு கொடுக்கப்பட்டதாகக் கூறுகின்றன. குழந்தைகளை பத்திரமாக திருப்பிக் கொண்டு வருவோம் என்று வாக்குறுதியும் அளித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அத்தகைய கொடூரமான நோக்கத்திற்காக ஒரு தாய் தன் குழந்தையை விருப்பத்துடன் தருவார் என்று நம்புவது கடினம்.
உறுதியான ஆதாரங்களால் நிரூபிக்கப்பட்ட கொடுமை
ஃபேஸ் டூ ஃபேஸ் ஆப்ரிக்கா இணையதளம் (Phase Two Face Africa website), சில வெள்ளை வேட்டைக்காரர்கள் இருண்ட இரவில் முதலைகளை குளத்து நீரின் மேற்பரப்பில் ஈர்ப்பதற்கு கறுப்பினக் குழந்தைகளை தூண்டில்களாக பயன்படுத்தப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிடுகிறது.
அடிமை வர்த்தக காலத்தில், கறுப்புக் குழந்தைகள் உண்மையில் முதலை தூண்டில்களாக பயன்படுத்தப்பட்டனர் என்பதை உறுதிப்படுத்த போதுமான ஆவணங்கள் உள்ளன. இந்த பயங்கரமான சம்பவங்களின் யதார்த்தத்தை பல்வேறு செய்தித்தாள் கட்டுரைகள் உறுதிப்படுத்தியுள்ளன. எடுத்துக்காட்டாக, வாஷிங்டன் டைம்ஸ் 1908 இல் பச்சிளம் குழந்தைகளை "முதலைத் தூண்டில்களாக " பயன்படுத்துவதைப் பற்றி அறிக்கை செய்தது.
முதலைகள் தண்ணீரிலிருந்து வெளிவந்து தாக்கத் தொடங்கிய பின்னரே குழந்தைகள் காப்பாற்றப்பட்டனர் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன.
முதலைக் கூட்டுக்குள் மழலைகள்:
அந்த நேரத்தில், நியூயார்க் விலங்கியல் பூங்காவில் உள்ள உயிரியல் பூங்காக் காவலர் இரண்டு குழந்தைகளை சுமார் 25 முதலைகளுடன் ஒரு அடைப்புக்குள் அனுப்பினார், அங்கு பசியால் வாடிய முதலைகள் அவர்களைத் துரத்துவதை பார்வையாளர்கள் கண்டு களித்தனர். கறுப்பினக் குழந்தைகளைப் பயன்படுத்துவதற்கான முதன்மைக் காரணம், முதலைகள் கறுப்பின மக்களைப் பற்றி ஒரு வித்தியாசமான கவர்ச்சியைக் கொண்டிருப்பதாக உயிரியல் பூங்காக் காப்பாளர் நம்பினாரானம்!
முதலைத் தூண்டில் சம்பவத்தை மறைக்க ஆதிக்க சக்திகள் கடும் முயற்சிகள் மேற்கொள்கிறார்கள். ஆனால் அதன் இருப்பை உறுதிப்படுத்தும் பல வாய்வழி வரலாறுகள், வெளியீடுகள் மற்றும் ஆவணப்படங்கள் இன்றும் உள்ளன. அமெரிக்கப் பத்திரிக்கைகள் இதைப் பற்றி பரவலாக அறிக்கை செய்த போதிலும், Chipley Chamber of Commerce ஒருமுறை இந்தக் கதையை அபத்தமான, பொய்யான மற்றும் அபத்தமான பொய் என்று அழைத்தது.
இக்கொடுமையை கொண்டாடும் செயல்பாடு:
இந்த இருண்ட கொடூர நடைமுறையைக் கொண்டாடும் விதமாக படங்கள், அணிகலன்கள் மற்றும் அஞ்சல் அட்டைகளும் விற்கப்பட்டன. இனவாத நினைவுச் சின்னங்களின் ஜிம் க்ரோ அருங்காட்சியகம் (Jim Crow Museum of Racist Memorabilia) பெரும்பாலும் ஆவணங்களின் ஆதாரமாக குறிப்பிடப்படுகிறது, ஏனெனில் இது இந்த கொடூரமான செயல்களின் கலைப்பொருட்கள் மற்றும் ஆதாரங்களைக் கொண்டுள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, இந்த குழந்தைகளின் கொடூரமான விடயம் அஞ்சல் அட்டைகளிலும் சிலைகளிலும் கூட சித்தரிக்கப்பட்டது. அடிமை வர்த்தக காலத்தில் வெள்ளையர்களிடையே பல நகைச்சுவையான அஞ்சல் அட்டைகள் விநியோகிக்கப்பட்டன. உதாரணமாக, ஒரு சாக்லேட் நிறுவனம் பசியுடன் இருக்கும் முதலை ஒரு குழந்தையை அணுகுவதைக் காட்டும் அதிர்ச்சியூட்டும் விளம்பரத்தை வெளியிட்டது.
1899 ஆம் ஆண்டு ஹென்றி வைஸ் மற்றும் சிட்னி பெர்ரின் ஆகியோரால் "மம்மிஸ் லிட்டில் அலிகேட்டர் பைட்" போன்ற பிரபலமான பாடல்கள் மற்றும் ரைம்கள் குழந்தைகளை முதலைத் தூண்டிலாக பயன்படுத்தியதை ஒட்டியது. ஒரு கறுப்பின அமெரிக்கத் தந்தை, குழந்தைகளைப் பாதுகாக்கத் தாய் விரைந்து செல்லும் போது, நெருங்கி வரும் முதலையின் மீது கற்களை வீசுவதை அட்டைப் படம் காட்டுகிறது.
வரலாற்றில் இந்த இருண்ட அத்தியாயங்களில் இந்த முதலைத் தூண்டில் விவகாரம் துக்ககரமானது. அநீதி இழைத்தோர் யாரும் இதற்காக தண்டனைகளை அனுபவிக்கவில்லை. குறிப்பாக எந்த மிருகக்காட்சிசாலைக்காரர்களும் தங்கள் மோசமான செயல்களுக்காக தண்டனையை எதிர்கொண்டதாக எந்த பதிவும் இல்லை. இது நடக்கும் போது அதிகாரிகள் மவுனமாக இருந்தனர் என்பது இன்னும் கவலைதரும் விடயம்! ஆனால் எல்லாம்வல்ல இறைவன் இவற்றுக்கெல்லாம் நீதி வழங்கவுள்ளான் என்பதுதான் இறைவிசுவாசிகளுக்கு ஆறுதல் தரும் விடயமாகும்!
=====================
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்பு! பேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக