இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 20 அக்டோபர், 2024

மனித சமத்துவம் பற்றிய குர்ஆன் செய்தியின் தனித்தன்மை.


மனித சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் பற்றிய குர்ஆன் செய்தியின் தனித்தன்மை.

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றும் அடிக்கடி மேடைகளிலும் இலக்கியங்களிலும் முழங்கப்படுவதை நாம் கண்டு வருகிறோம். அனைத்து மனிதகுலமும் ஒன்றே ஒன்றுதான் என்ற உண்மை நிறுவப்பட்டால் மட்டுமே மனித உரிமை மீறல்களையும் இனவெறியையும் ஜாதிவெறியையும் மொழிவெறியையும் தீண்டாமையையும் இன்ன பிற வேற்றுமை பாராட்டுதல்களையும் சமூகத்தில் தடுக்க முடியும். மனித சமத்துவத்தையும் உலகளாவிய சகோதரத்துவத்தையும் வலியுறுத்த முடியும். இதை மறுக்கும் எந்த  சித்தாந்தங்களாலும் மதங்களாலும் இசங்களாலும் மனித சமத்துவத்தைப் பற்றி அழகான முழக்கங்களையும் கருத்துக்களையும்  கூறலாமே தவிர மேற்படி தீமைகளுக்கு எதிரான நடைமுறை சாத்தியமான எந்த ஒரு தீர்வையும் கொண்டுவர முடியாது!

ஆனால் இஸ்லாம் மட்டுமே தீண்டாமை, இனவெறி, மொழிவெறி, நிறவெறி இவற்றின் தீமைகளில் இருந்து உலகளாவ மக்களைக் காக்கும் கேடயமாக பாதுகாத்து வருகிறது.. தனது இறுதிவேதம் திருக்குர்ஆனில் இறைவன் மனிதகுல ஒற்றுமைக்கும், மனித சமத்துவத்துக்கும் சகோதரத்துவத்துக்குமான அடிப்படையை கீழ்கண்ட வசனங்கள் மூலம் எடுத்துரைப்பதைக் காணுங்கள்: 
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:1) 

 மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (திருக்குர்ஆன் 49:13)
மேற்படி வசனங்களில் கீழ்கண்ட கருத்துக்கள் தெளிவுற சொல்லப்படுவதை நீங்கள் காணலாம்:
 1. அனைத்து மனித குலத்திற்கும் ஆதாம் மற்றும் ஏவாள் ஜோடிதான் மூலம்..  
2. அனைத்தும் மனித குலமும் ஒரே குடும்பமே - எனவே சகோதர சகோதரிகளே
3.  அவர்கள் அனைவரும் இனம், நிறம், மொழி, இடம் என அனைத்து வேற்றுமைகளையும் தாண்டி சமமானவர்களே 
4. அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கண்ணியம் தந்து மதித்து வாழ வேண்டியவர்களே.  
5.  இவ்வுலகில் நமது செயல்கள் மீது இறைவனின் கண்காணிப்பு உள்ளது 
6. மறுமையில் இறுதித்தீர்ப்பு நாள் அன்று இறைவனால் விசாரணைக்கு உட்படுத்தப் படுவோம் 
என்பதையும் இந்த வசனங்கள் தெளிவுற எடுத்துரைப்பதை நாம் இங்கு காணலாம்.  
பிற ஆப்ரகாமிய மதங்களில் மனிதகுலத்தின் மூலம்

யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் உள்ளிட்ட அனைத்து ஆப்ரஹாமிய மதங்களிலும் அனைத்து மனிதகுலமும் ஆதாம் ஏவாளின் வம்சாவளியினரே என்பது ஆழமான அடிப்படை நம்பிக்கையாகும். எனவே இதுபோன்ற இறைவசனங்கள் யூத கிறிஸ்தவ மூல வேதங்களிலும் இருந்திருக்க வேண்டும். ஆனால் இன்று அவை மறைக்கப்பட்ட நிலையிலேயே அவற்றை நாம் காண முடிகிறது. மனிதகுலத்தின் மூலம் ஒரே ஒரு ஆண்-பெண் ஜோடிதான் என்று திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுவதைப்போல மற்ற வேதங்களில் நாம் அவற்றைக் காண முடிவதில்லை என்பதை ஆராய்வோர் அறியலாம். 

மனிதர்கள் அனைவருக்கும் சம உரிமையை வலியுறுத்தும் வசனங்களை யூத மற்றும் கிறிஸ்தவ வேதங்களில் நீங்கள் இவ்வாறு காணமுடியும் 

லேவியர் 19:18: "உம் உறவினரை உம் உள்ளத்தால் காதலியுங்கள்." (தமிழ் பைபிள், பதிப்பு 1963)

உபாகமம் 32:4: " அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்." (தமிழ் பைபிள், பதிப்பு 1963)

இன்னும் கிறிஸ்தவ வேதத்தில் .. 

கலாத்தியர் 3:28: "யூதரும் அல்லாதவரும் ஒன்றே; அடிமையும் அடிமையல்லாதவரும் ஒன்றே; ஆணும் பெண்ணும் ஒன்றே; என்றால் ஏனெனில் நீங்கள் அனைவரும் ஒருவராகிறீர்கள் கிறிஸ்துவில்." (தமிழ் பைபிள், பதிப்பு 1963)

யாக்கோபு 2:9: "நீங்கள் இனத்தால் பாகுபாடு செய்யும்போது, நீங்கள் பாவம் செய்கிறீர்கள்; சட்டத்தில் இருந்து முறையில்லை என்று வழக்கைச் சார்ந்து விடுகிறீர்கள்." (தமிழ் பைபிள், பதிப்பு 1963)

ஆனால் மேலே குறிப்பிட்ட திருக்குர்ஆன் வசனங்களுக்கு இணையான எதையும் நாம் இவ்வேதங்களில் காண முடிவதில்லை. வேண்டுமானால் சாட் ஜிபிடியிடம்  இது தொடர்பாக விசாரித்துப்பாருங்கள் 

சாட் ஜிபிடி : மற்ற புனித நூல்களிலிருந்து  மேற்கோள் காட்டிய வசனங்கள், சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் ஊக்குவிக்கும் அதே வேளையில், மனிதகுலத்தின் பொதுவான தோற்றம்  ஒரே ஒரு ஜோடி பெற்றோரிடமிருந்துதான் என்பதை  வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை.

மனித சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் சூழலில் இந்த விடயம்  குறிப்பாக கவனிக்கப்பட வேண்டியதாகும். . எல்லா மனிதர்களும் ஒரே ஜோடி பெற்றோரிடமிருந்து வந்தவர்கள் என்பதை வலியுறுத்துவதன் மூலம், குர்ஆன் வசனங்கள் (4:1 மற்றும் 49:13) புவியியல், கலாச்சார மற்றும் சமூக வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மனிதர்களிடையேயும் ஒரு உயிரியல் மற்றும் குடும்ப ரீதியான ஒற்றுமையை ஏற்படுத்துகின்றன. திருக்குர்ஆன் கூறும் இந்த பொதுவான வம்சாவளி என்பது  மக்களிடையே ஒற்றுமை மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான வலுவான அடித்தளமாக செயல்படுகிறது.

இதற்கு நேர்மாறாக, மற்ற வேதங்களிலிருந்து  மேற்கோள் காட்டப்பட்ட  வசனங்கள் மனிதகுலத்தின் பொதுவான தோற்றத்தை வலியுறுத்தாமல், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் ஆன்மீக மற்றும் தார்மீக அம்சங்களில் அதிக கவனம் செலுத்துகின்றன. ஆனால் இது அனைத்து மனிதர்களின் பொதுவான உயிரியல் தோற்றத்தைக் குறிக்கவில்லை.

ஒரே ஜோடி பெற்றோரிடமிருந்து (ஆதாம் மற்றும் ஏவாள்) மனிதகுலத்தின் பொதுவான வம்சாவளியை குர்ஆன் வலியுறுத்துவது உண்மையில் ஒரு தனித்துவமான அம்சமாகும், இது மற்ற வேதங்களிலிருந்து தனித்து நிற்கிறது. இந்த விடயம்  மனிதகுல ஒற்றுமை மற்றும் சமத்துவத்தின் சக்திவாய்ந்த அடையாளமாக செயல்படுகிறது. வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர்கள் அனைவரும் ஒரே மனித குடும்பத்தின் அங்கத்தினர் என்பதை நினைவூட்டுகிறது.

============= 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக