இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 27 மார்ச், 2024

வணக்கத்துக்குரியவன் இறைவன்றி வேறு யார்?

இஸ்லாம் என்ற இறைதரும் வாழ்வியல் கொள்கையின் முக்கிய அடிப்படை இதுதான். மக்கள் படைத்தவனை மட்டுமே வணங்க வேண்டும். அவனது படைப்பினங்களையோ அல்லது மனிதர்களாகவே உருவாகிக் கொண்ட கற்பனை உருவங்களையோ வணங்கக் கூடாது. அவ்வாறு வணங்கும்போது ஏற்படும் குழப்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல..
- இறைவனைப் பற்றிய மரியாதை உணர்வு அகன்று விடுவதால் இறையச்சம் என்ற பொறுப்புணர்வு மனித மனங்களில் இல்லாமல் ஆகி விடுகிறது. சமூகத்தில் பாவங்கள் அதிகரிக்க இது முக்கிய காரணியாகி விடுகிறது. 
- பல்வேறு கடவுளர்கள் கற்பிக்கப்படுவதால் அதைப் பொறுத்து ஒரே மனித குலத்தில் பிளவுகள் உண்டாகுதல், ஜாதிகள் மற்றும் தீண்டாமை போன்றவை உருவாகுதல். 
- கடவுளின் பெயரால் மூட நம்பிக்கைகள், சுரண்டல்கள் போன்றவை உருவாகுதல். 

ஆனால் உண்மைக் கடவுளை எவ்வாறு அறிவது? 

அதற்கு இறைவேதம் திருக்குர்ஆன் படைப்பினங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும், நாம் அன்றாடம் அனுபவிக்கும் அத்தியாவசியமான அருட்கொடைகளையும்  பகுத்தறிவு கொண்டு சிந்தித்து படைத்தவனை அறிந்து அவனுக்கு நன்றி கூறும் முகமாக அவனை வணங்குமாறு கற்பிக்கிறது. அப்படிப்பட்ட ஏராளமான வசனங்களை நீங்கள் திருக்குர்ஆனில் காணலாம். உதாரணமாக கீழ்கண்ட வசனங்களை நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்: 

 வானங்கள், பூமி, மழை, மரங்கள், தோட்டங்கள்:
27:60. அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள்.
பூமி, ஆறுகள், மலைகள், கடல்கள்,தடுப்பு 
27:61. இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்.
பிரார்த்தனைக்கு பதில், துன்பம் நீக்குதல்
27:62. கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும்.
இருள்களில் வழிகாட்டல், மழைக்கு முன் நற்செய்தி கூறும் காற்று: 
27:63. கரையிலும் கடலிலுமுள்ள இருள்களில் உங்களை நேரான வழியில் செலுத்துபவன் யார்? மேலும், தன்னுடைய “ரஹ்மத்” என்னும் அருள் மாரிக்கு முன்னே நன்மாராயம் (கூறுவன) ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? - அவர்கள் இணை வைப்பவற்றைவிட அல்லாஹ் மிகவும் உயர்வானவன்.
இல்லாமையில் இருந்து படைபைத் துவங்குதல், இனப்பெருக்கம், படைப்பினங்களுக்கு உணவளித்தல்,  
27:64. முதன் முதலில் படைப்பைத் துவங்குபவனும், பின்னர் அதனை மீண்டும் உண்டாக்கி வைப்பவனும் யார்? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (நபியே!) நீர் கூறுவீராக: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்.”

பகுத்தறிவு கொண்டு நேர்மையாக சிந்திக்கும் போது இவ்வுலகைப் படைத்த அந்த ஏக இறைவனைத் தவிர வேறு யாரும் எந்த சக்தியும் இவற்றை நிகழ்த்தவில்லை என்பதை அறியலாம். உண்மை இப்படி இருக்க படைத்தவன் அல்லாதவற்றை இறைவன் என்று சொல்வதும் அவற்றை வணங்குவதும் முற்றிலும் அறியாமையே! இது படைத்தவனுக்கு செய்யும் மாபெரும் நன்றிகேடாகும். 
"நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” (திருக்குர்ஆன் 31:13)
இந்த நன்றிகேட்டிற்கு இறைவனிடம் கடுமையான தண்டனை உண்டு என்கிறது திருக்குர்ஆன். 
இறைமறுப்பாளர்களின் அறிவற்ற வாதம் 
ஆனால் இந்த அப்பட்டமான உண்மையை பகுத்தறிவு என்ற பெயரில் மறுக்கும் செயல்தான் ஆச்சரியமானது. 
சில "பகுத்தறியா வாதிகள்" இயற்கைதான் இதைச் செய்கிறது என்று காரணம் கூறுவதை நீங்கள் காணலாம். ஆனால் இயற்கை என்ற கற்பனைப் புனைவுக்கு சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் பகுத்தறிவோ ஆற்றலோ கூட எதுவும் கிடையாது என்பதை சிந்தித்தாலே இது ஒரு பொய்யான வாதம் என்று உணரலாம். இவர்களைப் பார்த்து இறைவன் கேட்கும் கேள்விகள் இவை: 
52:35. அல்லதுஅவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனராஅல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா?
52:36. அல்லதுவானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? ......
--------------------------------------------------
56:57. நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா?
56:58. (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?
56:59. அதை நீங்கள் படைக்கிறீர்களாஅல்லது நாம் படைக்கின்றோமா?
56:60. உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்எனவே நம்மை எவரும் மிகைக் முடியாது.
56:61. (அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல).
================= 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக