இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 3 ஜூலை, 2019

காலனி ஆதிக்கம் என்ற ரவுடி சாம்ராஜ்ஜியம்


#உலக_பயங்கரவாதமும்_உண்மைகளும்_4
Related image


 கட்டை ராஜாவின் சாம்ராஜ்ஜியம்
கட்டை ராஜா... இவன் ஒரு வலுவான பேட்டை ரவுடி... அவனையும் அவனது அடியாட்களின் கும்பலையும் தட்டிக்கேட்க அவ்வூரில் யாரும் இல்லை. பெயரால் மட்டுமல்ல அவன்தான் அந்தப் பேட்டைக்கு ராஜாவைப் போல. காவல்துறையும் கூட அவன் ஏவலுக்குக் கட்டுப்பட்ட நிலை. தனது கையாட்களைக் கொண்டு ஆயுத பலத்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் ஆற்றல் கொண்டவன். அவன் நினைத்த சொத்துக்களை அவ்வூர் மக்களிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு விலை பேசி தனது கைவசமாக்குகிறான். அவ்வூரில் தான் விரும்பிய பெண்களை அனுபவிக்கவும் செய்கிறான்.
அவனது தொல்லைகளில் இருந்து தப்பிக்க அவனுக்கு தவறாமல் அவ்வூர் மக்கள் தங்கள் உழைத்து சம்பாதிப்பவற்றில் இருந்தும் தங்கள் பெண்களின் கற்பை அடகு வைத்தும் கப்பம் கட்டிக் கொண்டு வாழ்கிறார்கள். அவர்களது கண்ணீரும் கவலைகளும் அவனுக்கும் அவனது கும்பலுக்கும் ஒரு பொருட்டேயல்ல. காவல்துறை உட்படயாரும் அவனது செயல்பாடுகளில் குறுக்கிட முடியாத அளவுக்கு வலுவான ஆதிக்கம் அவனுடையது. 
இவ்வாறிருக்கும்போது கட்டை ராஜாவுக்கு ஒரு தவிர்க்கமுடியாத சூழ்நிலை அங்கே உருவானது. அதனால் அவன் அவ்வூரை விட்டு விலகி வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஆனாலும் அவனுக்கு சேரவேண்டிய வசூலைச் சேர்ப்பிக்க அடியாட்களின் கும்பல் வலுவாக உள்ளது.  அதற்கான ஒரு பலமான நெட்வொர்க்கை அமைத்த பின்னர் அவ்வூரை விட்டு தலைமறைவானான்.

இப்போது சிந்தித்துப் பாருங்கள்.... இப்படிப்பட்ட அந்த ரவுடி அவ்வூரை விட்டு விலகிச் செல்லும்போது 'மக்களே இன்று முதல் நீங்கள் சுதந்திரமாக இருக்கலாம். இனி நீங்கள் எனக்கு கப்பம் கட்டத் தேவையில்லை!' என்று அறிவித்து விட்டா செல்வான்? .....அப்படி ஒன்றைக் கற்பனை செய்துகூட
பார்க்க முடியாதல்லவா?
ஒரு சிறு பேட்டை ரவுடியின் நிலையே இது என்றால் ஆசிய, ஆப்ரிக்க, ஐரோப்பிய  கண்டங்களின் பெரும் நிலப்பரப்புகளையும் நாட்டு வளங்களையும் தவறாமல் கொள்ளை அடித்து அனுபவித்து வாழ்ந்த காலனி ஆதிக்க சக்திகள் தங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்ட நாடுகளை முற்றிலும் துறந்துவிட்டா செல்வார்கள்?  அதுவும் தங்களைத் தட்டிக்கேட்க உலகில் யாரும் இல்லை என்ற அளவுக்கு பொருளாதாரம் ஆயுத பலம், ஊடக பலம் போன்ற வலுவான நிலையில் இருக்கும் ஆதிக்க சக்திகளிடம் இதை சற்றேனும் எதிர்பார்க்க முடியுமா?
உலக மகா ரவுடிகள் யார்?
இதைப் புரிந்துகொண்டால் இன்று உலகில் நடக்கும் பயங்கரவாத செயல்களுக்குப்  பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். சரித்திரத்தையும் இன்று நடக்கும் நிகழ்வுகளையும் நடுநிலையோடு ஆராயும்போது  உலக பயங்கரவாதம் பற்றிய உண்மைகள் உங்களுக்குப் புரியவரும்.
========================
காலனி ஆதிக்கம் என்ற ரவுடி சாம்ராஜ்ஜியம்
·  ஐரோப்பிய நாடுகளில் வங்கிகளை அமைத்து அதன் மூலம் அந்நாடுகளின் பொருளாதாரத்தையும் பணப்புழக்கத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டுவந்த ஒரு தனியார் கம்பெனிதான் காலனி ஆதிக்கத்தைத் துவங்கியது. இங்கிலாந்து அல்லது ஆங்கிலேயர் என்று இவர்களைக் குறிப்பிட்டாலும் இவர்கள் பின்னால் ஒளிந்திருப்பது ஒருதனியார் வியாபாரக் கம்பெனி என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும். இவர்களின் தலையாய நோக்கம் பூமியின் பொருளாதாரத்தை  சுரண்டுவது அல்லது கொள்ளை அடிப்பது மட்டுமே.
கொள்ளையும் சுரண்டலுமே நோக்கம் 
·  வியாபாரிகள் என்ற பெயரில்தான் நம் நாட்டில் இவர்கள் நுழைந்தார்கள். தங்கள் ஆயுத பலத்தால் அனைத்து மன்னர்களையும் கீழடக்கிய கிழக்கிந்திய கம்பெனியின் (East India Company) முக்கிய நோக்கம் நாட்டின் நிலத்தடி வளங்களையும் விவசாய வளங்களையும் இயற்கை வளங்களையும் கொள்ளையடிப்பது மட்டுமல்ல, நாட்டின் வருமானம் வரும் அனைத்து துறைகளையும் கீழடக்கி அவற்றை சுரண்டுவது என்பதே.
ஈவிரக்கமற்ற படுகொலைகள் 
·  நம் நாட்டைப் போலவே ஆப்ரிக்கா, அமேரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களும் ஆயுத முனையில் இவர்களால் கைப்பற்றப்பட்டு தங்கள் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவரப்பட்டன. இந்தக் கண்டங்களில் வாழ்ந்து வந்த அப்பாவிப் பழங்குடியின மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்தார்கள். கறுப்பின மக்களை அடிமைகளாகப் பிடித்து கடல்வழியாகக் கடத்தி ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் விற்று பொருளீட்டினார்கள். (Atlantic slave trade என்று கூகுளில் தேடிப்பாருங்கள்.)
விடுதலைக்குப் பின்னும் தொடரும் சுரண்டல்கள்
·  மேலே உதாரணத்தில் கட்டை ராஜா தனது ஊரைவிட்டு வெளியேறும்போது ஊரில் தான் நடத்திவந்த வசூலை தொடர்ந்து பெறுவதற்காக தன் கையாட்களின் நெட்வொர்க்கை எப்படி பலமாக அமைத்துவிட்டுச்  சென்றானோ அதைப்போலத்தான் இவர்கள் தாங்களின் ஆக்கிரமிப்பு  நாடுகளுக்கு பெயரளவில் வழங்கியுள்ள சுதந்திரத்தில் நிலையும் உள்ளது. இந்த நாடுகளில் தங்கள் கைப்பாவைகளை  ஆட்சிப் பொறுப்பில் இருத்தி தங்கள் கொள்ளைகளைத் தொடருகிறார்கள் என்பதே உண்மை.  நமது இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) கிழக்கிந்திய கம்பெனியால் உருவாக்கப்பட்டது என்பதையும் இன்றும் அவர்களாலேயே கட்டுப்படுத்தப் படுகிறது என்ற உண்மையை சற்று சிந்தியுங்கள்.
உலகளாவிய பொருளாதார அடிமைத்துவம்
·  இன்று உலகவங்கி, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் தலைமை வங்கிகளும் இதன் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.  இணையத்தில் இதற்கான ஆதாரங்களை நீங்கள் காணலாம் (The Rothschild-Owned Central Banks of the World...  https://shar.es/1IU7u4 ). கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கியதுதான் நமது இந்திய ரிசர்வ் வங்கி என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? இன்று உலகின் அனைத்துப் பணப்புழக்கமும் இவர்கள் மூலமாகத்தான் நடைபெறுகிறது என்பதை அறியும்போது இவர்களின் சுரண்டல்கள் எவ்வளவு பூதாகரமானவை என்பதை நீங்கள் உணரலாம்.
·  இன்று உலகின் எண்ணெய்க் கிணறுகள், பெட்ரோலிய வளங்கள், நிலத்தடி வளங்கள்,  விளைபொருட்கள், இயற்கைவளங்கள், உலகக் கனிம வளங்களை தோண்டி எடுக்கும் நிறுவனங்கள், நுகர்வுப்பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள், அவற்றை விற்கும் வாங்கும் பெரும்பெரும் வணிக அமைப்புகள், உலகை அச்சுறுத்தும்  பேரழிவு ஆயுதங்கள், இராணுவத் தளவாடங்கள், விமானங்கள், கப்பல்கள் போன்றவற்றை தயாரிக்கும் தொழிற்சாலைகள், மருந்துக் கம்பெனிகள், பத்திரிகைகள், டிவிக்கள், ஊடகங்கள், பொழுதுபோக்கு நிறுவனங்கள் என உலகில் எங்கெல்லாம் எதிலெல்லாம் கொழுத்த வருமானம் வருமோ அவற்றில் பெரும்பாலானவற்றை அந்த நிறுவனங்களின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்குவதன் மூலம் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துள்ளார்கள்
கொள்ளைக் கூட்டத்தின் இராணுவக்கரம் அமெரிக்கா
·   பணம், ஆயுதம், அரசாங்கம், ஊடகம், மாஃபியாக்கள்  இவை அனைத்தும் ஒரே கைகளில் ஒன்று சேருமானால் அதை மிஞ்சும் சக்தி எதுவும் உலகில் இருக்க முடியுமா? உலகத்தின் மொத்தப் பொருளாதாரத்தையும் வளங்களையும் நிறுவனங்களையும் பணம் கொழிக்கும் துறைகளையும் ஊடகங்களையும் தங்களின் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்துள்ள இந்த கொள்ளைக் கூட்டம் தங்களின் அடங்காத பொருளாசையை நிறைவேற்றும் பொருட்டு எதையும் செய்யத் துணிகிறார்கள். உலக அரசியலை தம் விருப்பப்படி நடத்துகிறார்கள்.  அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டே இவர்கள் செயல்பாடுகள் அமைந்திருப்பதைக் காணமுடியும். அமெரிக்காவை இராணுவக் கரமாக பயன்படுத்தி தங்களின் வஞ்சகத் திட்டங்களை செயல்படுத்துகிறார்கள்.
·   அமெரிக்க உளவு நிறுவனமான CIA -யில் முக்கிய அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற John Perkins தான் எழுதிய Confessions of an economic hit man” என்ற புத்தகத்தில் அவர் தன்னுடைய பணிகாலத்தில் எப்படி தன்னுடைய மனசாட்சிக்கு விரோதமான காரியங்களில் உலக அளவில் செய்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார். நலிந்த நாடுகளின் கட்டுமானப் பணிகளுக்கு பெருமளவில் கடன் வழங்கி அவைகளை கொத்தடிமைகள் போல் ஆக்கி அவர்களின் எண்ணெய் வளங்களை அமெரிக்காவுக்கு அடிமாட்டு விலைக்கு தாரைவார்த்தல், அமெரிக்காவின் இராணுவதளம் அமைத்தல், ஐநாவில் அமெரிக்காவுக்கு ஆதரவாக ஓட்டு போட வைத்தல், நிர்பந்தத்திற்கு வழங்காத ஆட்சியாளர்களை இராணுவப் புரட்சி மூலம் அகற்றுதல் அல்லது தீர்த்துக் கட்டுதல் போன்ற சதி நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாக ஜான் கூறுகிறார்.
---------------------
பணம் வந்த கதை
http://www.quranmalar.com/2019/06/blog-post.html 

வங்கி என்ற பேரழிவு ஆயுதம்!

https://www.quranmalar.com/2019/07/blog-post_2.html
உலகளாவிய வங்கி ஆதிக்கக் கொடுமை!
www.quranmalar.com/2019/07/blog-post_71.html
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக