இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

பயங்கரவாதிப் பட்டம்!

Related image
உங்களுக்குத் தெரியுமா?
= உலகத்தின் செல்வ வளங்களின் சரிபாதி வெறும் 62 கோடீஸ்வரர்களால் கையகப்படுத்தப் பட்டுள்ளது என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? இன்று நாம் வாழும் உலகின் 10 சதவீத மக்கள் உலக வளங்களின் 87.7 சதவீத வளங்களை அநியாயமாகக் கையகப்படுத்தி உள்ளதால் உலகின்  666 கோடி மக்கள் எஞ்சியுள்ள 12.3  சதவீத வளங்களைத் தங்களுக்கிடையே பங்கீடு செய்யவேண்டிய அவலத்திற்கு உள்ளாகியுள்ளனர். (Report by the Swiss bank Credit Suisse-). இந்த செல்வக் குவிப்பு ஏதோ தற்செயலாக நிகழ்ந்த ஒன்று என்று நீங்கள் தவறாகக் கணக்கிட்டு விடாதீர்கள். இது பெரும் திட்டமிட்டு நடத்தப்படும் அப்பட்டமான கொள்ளை!
= கோடிக்கணக்கான மக்கள் உணவுநீர்வீடு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் வறுமையில் வாடுவதற்கும் உண்ண உணவின்றி அன்றாடம் செத்து மடிவதற்கும் மூல காரணம் இந்தக் கொடியோர்களின் சுயநல வேட்கையே!
= சிறு நாடுகள் தங்கள் கைவசம் செல்வ வளங்கள் பல இருந்தும் இடைவிடாமல் போர்களுக்கு உள்ளாக்கப்படுவதற்கும் அப்பாவிகள் ஈவிரக்கமின்றி கொல்லப்படுவதற்கும் மூல காரணம் இக்கொடியோர்கள் தங்கள் வருமானங்களையும் ஆதிக்கத்தையும் அதிகரிப்பதற்காக மேற்கொள்ளும் வஞ்சகத் திட்டங்களே!
இக்கொடியோர்களின் பிடியில் இருந்து உலகை விடுவிக்கப் போராடும் ஒரே மக்கள் சக்தியாக இஸ்லாம் உருவெடுத்து வருவதால்தான் இன்று அது கடுமையான விமர்சனங்களுக்கும் எதிர்ப்புக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளாகிறது என்பதை ஆராய்வோர் உணரலாம்.

இக்கொடியோர்கள் யார்?
காலனி ஆதிக்கத்தைத் தொடர்ந்து இன்று உலகத்தின் பொருளாதாரத்தை தங்கள் வஞ்சகத் திட்டங்களின் மூலம் கையகப்படுத்தி உலகநாடுகளை தங்கள் கைப்பாவை அரசர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் மூலம் ஆண்டுவரும் இவர்கள் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 13 அல்லது 17 குடும்பத்தின் வம்சாவளியினரே என்று சொல்லப்படுகிறது. தங்கள் சூழ்ச்சிகரமான திட்டங்களுக்கு அமேரிக்காவை இவர்கள் தங்கள் ராணுவக் கரமாக பயன்படுத்துகிறார்கள்.
உலகநாடுகள் அனைத்தின் மேலும் ஆதிக்கம் செலுத்திவரும் இந்த இரகசிய சமுதாயத்தவர்கள் தங்கள் ஆயுத விற்பனையும் வருமானமும் ஆதிக்கமும் தடைபெறக் கூடாது என்பதற்காக ஒருபுறம் இராணுவ அடக்குமுறைகளையும் மறுபுறம் தங்கள் கைவசம் உள்ள பத்திரிகைடிவிரேடியோ போன்ற ஊடகங்களையும் தந்திரமான முறையில் கையாள்கிறார்கள். மக்களை மூளைச்சலவை செய்து தங்கள் அராஜகங்களை நியாயப்படுத்துகிறார்கள். தங்களை சமாதானப் பிரியர்களாகவும் இவர்களின் எதிரிகளை பயங்கர வாதிகளாகவும் சித்தரிக்கிறார்கள். 

இவர்கள் நடத்திவரும் உலகக் கொள்ளைகளில் இருந்தும் அநியாயங்களில் இருந்தும் தங்கள் நாடுகளைக் காப்பாற்ற முனையும் விடுதலைப் போராட்ட வீரர்களை பயங்கரவாதிகளாகவும் இவர்களுக்கு எதிராக நிற்கும் மதங்களையும் கொள்கைகளையும் பயங்கரமானவையாகவும் பிற்போக்கானவை அல்லது காட்டுமிராண்டித்தனமாவை என்றும் சித்தரிக்கிறார்கள்.
அவ்வாறுதான் உலக மக்களை தொடர்ந்து மூளைச்சலவை செய்து தங்கள் காரியங்களை சாதித்து வருகிறார்கள் என்பதை சிந்திப்போர் அறியலாம்.

சொல்வதற்குப் பல உதாரணங்கள் இருந்தாலும் மிகச் சுருக்கமாக ஒரு சிலவற்றை மட்டும் கவனியுங்கள்.... 

பயங்கரவாதம் என்பது என்ன?
கத்தி முனையில் அல்லது துப்பாக்கி முனையில் அப்பாவியை அல்லது அப்பாவிகளை மிரட்டி தனது காரியங்களை அநியாயமாக சாதித்துக் கொள்வது போன்ற நடவடிக்கையே பயங்கரவாதம் என்று அழைக்கப்படுகிறது.
ஆனால் இந்த விலைபோன ஊடகங்கள் மக்களை எவ்வாறு மூளைசலவை செய்கிறார்கள் என்பதைப் பாருங்கள்: 
=
ஆங்கிலேயர்கள் சுமார் 300 வருடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக தங்கள் வெள்ளை இனம் குடியேறுவதற்காக அமேரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா கண்டங்களில் அங்கு பூர்வகுடி மக்களை கொடூரமாக கூட்டம் கூட்டமாக இன அழிப்பு நடத்திய வன்கொடுமை இவர்களுக்கு பயங்கரவாதமாகப் படவில்லை!
=
வளங்கள் நிறைந்த நாடுகளுக்குள் வியாபாரிகளாக நுழைந்து அந்த நாட்டு அப்பாவிகளை ஆயுத முனையில் மிரட்டிக் கீழடக்கி அவற்றைத் தங்களின் காலனிகளாக்கி நூற்றாண்டுகளாக ஆதிக்கம் செய்தவர்களின் செயல்கள் இவர்களைப் பொறுத்தவரை பயங்கரவாதமே அல்ல! என்ன ஆச்சரியம் பாருங்கள்!
=
கைப்பற்றிய நாடுகளை பிற்காலத்தில் நிர்பந்தங்களுக்கு உள்ளாகி விட்டுச்செல்லும்போது பல தந்திரங்களைப் பிரயோகித்து தங்கள் வியாபார நிறுவனங்களை நிறுவி அந்நாடுகளின் வளங்களை தொடர்ந்து கொள்ளையடித்து வரும் செயலும்,
=
காலனிகளில் இருந்து விடுவித்த நாடுகளில் தங்களின் கைப்பாவை அரசர்களை அரியணையில் ஏற்றி அவர்களின் மூலமாக மறைமுகமாக ஆண்டுவருவதும் தங்களின் ஆயுத விற்பனை தொடர்வதற்காக அண்டைநாடுகளோடு போர்மூட்ட வைப்பதும் அப்பாவிகளை அநியாயமாக கொன்றோழிப்பதும், 

....
இவை எதுவுமே இவர்களின் பயங்கரவாதப்பட்டியலில் வருவதில்லை! 

=
ஹிரோஷிமா - நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி கோடிக்கணக்கான மக்களை அழிக்கவும் உடல் ஊனமுற்றவர்களாகவும் ஆக்கவும் செய்தது. அந்தக் கதிர்வீச்சின் பாதிப்பு இன்று பிறக்கும் தலைமுறைகள் வரைத் தொடர்கிறது. இதை மிஞ்சும் பயங்கரவாதத்தை உலகம் கண்டிருக்கிறதா? 

பயங்கரவாதத்தை மதத்தோடு இணைத்துப் பேசுதல் 

=
மேற்கூறிய கொடுமையாளர்களும் 

=
லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த ஹிட்லரும், 

=
போர் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலும் 
என இவர்கள் யாரும் செய்த கொடூரங்களை அவர்களின் மதத்தோடு இணைத்து இந்த ஊடகங்கள் பேசுவதில்லை என்பதை கவனியுங்கள்.
ஆனால் தங்கள் சொந்த நாட்டை ஆக்கிரமித்து மக்களைக் கொன்று குவிக்கும் அமெரிக்காவுக்கு எதிராகப் போராடும் ஆப்கானிய, ஈராக்கிய மக்களையும் இஸ்ரேலுக்கு எதிராகப் போராடும் பாலஸ்தீன மக்களையும் இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் கூறிவருவதைக் காண்கிறீர்கள். 

இது போக இன்று CIA மற்றும் MOSSAD கூட்டுமுயற்சியில் இவர்களின் கைக்கூலிகளைக் கொண்டு ISIS என்ற என்ற தீவிரவாத அமைப்பை உருவாக்கி பல கோரமான நிகழ்வுகளை நடத்தி அவற்றை இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமியர்களின் மீதும் உலகளாவிய வெறுப்பை உண்டாக்க அரும்பாடு படுகின்றனர்.

தீவிரவாதம் என்ற விஷயம் நாடு, இனம், மதம், மொழி என எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது' என மனித உரிமை ஆர்வலர்கள் பலமுறை சொன்னாலும் அது ஏன் பெரும்பாலானவர்கள் காதுகளில் விழுவதில்லை? இவ்வாறு உலகம் முழுக்க திரும்ப திரும்பக் கட்டவிழ்க்கப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான பொய்களுக்கு என்ன காரணம்? 
அப்படியொரு வெறுப்பு ஏன் உலகெங்கும் உண்டாக்கப்படுகிறது? 
அதற்கு முக்கியமான காரணம் உள்ளது.... அது என்ன?
இஸ்லாம் என்பது வெகுவேகமாக வளர்ந்துவரும் மக்கள் சக்தி! அது அநீதிகளுக்கும் அக்கிரமங்களுக்கும் எதிரானது என்பதேயாகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக