இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 3 டிசம்பர், 2012

ஐரோப்பிய விஞ்ஞான வளர்ச்சியின் முன்னோடிகள்:-

MARQUIS OF DUFFERIN : "It is to Musalman science, Musalman art and Musalman literature that Europe has been in a great measure indebted for its extrication of darkness in the middle ages". (Speeches delivered in India and London, 1980 Marquis of Dufferin & Ava)
அறிஞர் 'Marguis'  தனது சொற்பொழிவுகளில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 'ஐரோப்பா இடைக்காலத்தில் அறியாமை எனும் இருளை விட்டு வெளிவரக் காரணமாக இருந்ததற்கு முஸ்லிம்களின் கலை, முஸ்லிம்களின் விஞ்ஞானம், முஸ்லிம்களின் இலக்கியம் ஆகியவற்றிற்கு அது (ஐரோப்பா) பெருமளவில் நன்றிக் கடன் பட்டிருக்கிறது.' 

ஏனென்றால், 8-12ம் நூற்றாண்டு காலப்பகுதியானது ஐரோப்பா அறியாமை எனும் இருட்டில் தத்தளித்துக் கொண்டிருந்த காலப்பகுதியாகும் இக்காலப்பகுதியில் முஸ்லீம்களின் கண்டுபிடிப்புக்கள் அசாத்தியமானவைகளாகும். இந்த நான்கு நூற்றாண்டுகளிலும் வரலாறு சான்று பகரும் அளவுக்கு முஸ்லீம்கள் வளர்ச்சியடைந்திருந்தார்கள் என்ற உண்மை சிலுவை யுத்தங்களுக்குப் பிறகு மேற்கத்திய உலகால் இருட்டடிப்பு செய்யப்பட்டது.
Maurice Bucaille :
'
அந்த நூற்றாண்டில் வாழ்ந்த மனிதன் கற்பனை செய்தும் பார்த்திராத - இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் மகத்தான கண்டு பிடிப்புக்களின் யதார்த்த நிலையை அன்றைக்கே அவரால் எப்படி துல்லியமாகத் தெரிவிக்க முடிந்தது?' - The Bible, The Quran and Science 1978,p.125

Sir. William Muir  கூறுகிறார்:
'
குர்ஆன் இஸ்லாத்தின் மாபெரும் சாதனையாகும். அதன் ஆதிக்கம் சமயம், ஒழுக்கம், விஞ்ஞானம் போன்ற அனைத்துத் துறைகளிலும் படர்ந்து நிற்கிறது. குர்ஆன் அனைத்திற்கும் மேலானது என்று ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறுவழியில்லை.' - The life of Mohammed, London 1903, ch. The Coran p.vii.
. சாதனைகள் பல கண்ட இஸ்லாமிய அறிஞர்கள் பலரது வரலாறுகளை உலகின் கண்களை விட்டும் மறைத்த பெருமையும் மேற்கத்திய உலகையே சாரும். 

இந்த சிந்தனைப் புரட்சி துளிர்விடக் காரணம் அந்தப் பாலைவன மணலில் திருக்குர்ஆன்தூவிய விதைகளேஆம்அந்தப் பாலைவன வாசிகளைத் திருக்குர்ஆன் வானத்தையும்,பூமியையும் மலைகளையும் விலங்கினங்களையும் பற்றி சிந்திக்கத் தூண்டியதுநம்பமுடியவில்லையாஇதோ நீங்களே படித்துப் பாருங்கள்:

88:17 .(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமாஅது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-
88:18 .மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறதுஎன்றும்,
88:19 .இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றனஎன்றும்,
88:20. இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)

3:190 நிச்சயமாகவானங்கள்பூமி ஆகியவற்றின் படைப்பிலும்இரவும்பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.

10:5. அவன்தான் சூரியனைச் (சடர்விடும்) பிரகாசமாகவும்சந்திரணை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும்,காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான் அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவிரிக்கின்றான்.

16:10. அவனே வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்கிறான்அதிலிருந்து உங்களுக்கு அருந்தும் நீரும் இருக்கிறதுஅதிலிருந்து (உங்கள் கால்நடைகளை) மேய்ப்பதற்கான மரங்கள் (மற்றும் புற்பூண்டுகளும் உண்டாகி) அதில் இருக்கின்றன.
16:11 அதனைக் கொண்டே, (விவசாயப்) பயிர்களையும்ஒலிவன்(ஜைத்தூன்) மரத்தையும்பேரீத்த மரங்களையும்திராட்சைக் கொடிகளையும்இன்னும் எல்லாவகைக் கனிவர்க்கங்களிலிருந்தும் அவன் உங்களுக்காக விளைவிக்கிறான் - நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சி இருக்கிறது.
16:12 .இன்னும் அவனே இரவையும்பகலையும்சூரியனையும்சந்திரனையும் உங்க(ள் நலன்க)ளுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப் படியே வசப்படுத்தப்பட்டுள்ளன - நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக் கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.
16:13 இன்னும்பூமியில் அவன் படைத்திருப்பன பல விதமான நிறங்களையுடைய (செடி கொடிகள்பிராணிகள்பறவைகள்போன்ற)வையுமாகும்நிச்சயமாக இதில் (அல்லாஹ்வின் அருள் கொடைகளை நன்றியுடன்) நினைவு கூரும் மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சியுள்ளது.
16:14. நீங்கள் கடலிலிருந்து நய(மும்சவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும்நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்;இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும்நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான்.
16:15 உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான்இன்னும் நீங்கள் சரியான வழியை அறி(ந்து செல்)வதற்காக அவன் ஆறுகளையும் பாதைகளையும் (அமைத்தான்).

இவைபோன்ற இயற்கையை ஆராயத் தூண்டும் வசனங்களே பாலைவனத்துப் பாமரனையும்அறிவியலின் முன்னோடிகளாக ஆக்கினஅவர்கள் வகுத்த அடிப்படைகளே பிற்காலத்தில்உலகெங்கும் பரந்து பயன்பாடுகளை  ஈந்தனஎல்லாப்புகழும் இறைவனுக்கே!

வியக்கத்தகு சாதனைகள் படைத்த முஸ்லிம் விஞ்ஞானிகள் சிலர்:
இல
 பெயர்
காலகட்டம்(கி.பி)
துறை
1
அல்குவாரிஸ்மி (அல்காரிஸ்ம்)
780-850
கணிதம், வானவியல்
2
அல்ராஜி (ரேஜஸ்)
 844-946
மருத்துவம்
3
அல்ஹைதம் (அல்ஹேஜன்)
 965-1039
கணிதம், ஒளியியல்
4
அல்பிரூணி
973-1048
கணிதம், தத்துவம், வரலாறு
5
இப்னுசீனா (அவிசென்னா)
980-1037
மருத்துவம்
6
அல்இத்ரீஸி (டிரேஸஸ்)
1100
புவியியல்
7
இப்னுருஸ்து (அவிர்ரோஸ்)
1126-1198
மருத்துவம், தத்துவம்
8
ஜாபிர் இப்னு ஹையான் (ஜிபர்)
803
பெளதீகம்
9
அல்தபரி
838
மருத்துவம்
10
அல்பத்தானி (அல்பதக்னியஸ்)
 858
தாவரவியல்
11
அல்மசூதி
957
புவியியல்
12
அல்ஸஹ்ராவி (அல்புகேஸிஸ்)
936
அறுவைசிகிச்சை
13
இப்னுஹல்தூன்
1332
வரலாறு
14
இப்னு ஹுஜ்ர் (அவன்ஜோர்)

அறுவை சிகிச்சை
15
இப்னு இஷாக் அல்கிந்தி
800-873
தத்துவம், பெளதீகம், ஒளியியல்
16
முஹம்மது ஷாகிர் ஹஸன்
(
Angel of red sea)


17
முஹம்மது சகரிய்யா யாஸீன்

மருத்துவம்
18
அலி இப்னு அப்பான்

மருத்துவம்
(அலி இப்னு அப்பான் எனும் மருத்துவ மேதை அக்காலத்திலேயே 20 பாகங்களைக் கொண்ட ஒரு மருத்துவ நூலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்).


Algebra, Al-Chemy (Chemistry). Alcohol, Alkali, Algorithm இன்னும் இவைபோன்ற விஞ்ஞானப் பெயர்கள் அரபு வார்த்தைகளே என்பதிலிருந்தே இவை அரபுலகில் இருந்துதான் உருவாயின என்பதை நாம் அறியலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக