இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 26 நவம்பர், 2025

சொர்க்கமும் நரகமும் உண்மையா?

 


மறுமை வாழ்க்கையே உண்மையானது   

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது பரீட்சைக்காக கெடுதியையும் நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர் நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 21:35)
இங்கு இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்பவர்களுக்கு மறுமையில் சொர்க்கத்தைப் பரிசாக வழங்குகிறான். கட்டுப்படாமல் தான்தோன்றித் தனமாக வாழபவர்களுக்கு தண்டனையாக நரகத்தை வழங்குகிறான்.
·  நமது உண்மையான மற்றும் நிலையான முடிவில்லாத வாழ்க்கை என்பது மரணத்துக்குப் பிறகு உள்ள வாழ்க்கைதான். அது ஒன்று சொர்க்கத்தில் அமையும் அல்லது நரகத்தில் அமையும். இவை இரண்டும் அல்லாத வேறு ஒரு வாழ்க்கை கிடையாது.
·  இன்று நமக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கை என்ற வாய்ப்பு ஒரே ஒரு முறை கிடைப்பது. மீண்டும் மீண்டும் பிறப்பது என்பது கிடையாது. அதுவும் அவரவரது மரணம் வரை மட்டுமே இவ்வாய்ப்பு நீடிக்கும்.
 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும் அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான் உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்¢ எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
·  எனவே இவ்வாழ்க்கை என்ற பரீட்சையில் சஞ்சலங்களுக்கு இடம் கொடாமல் உன்னிப்பாக, கவனமாக  ஒழுங்குற செயல்பட்டால் நாம் நிரந்தர இன்பங்கள் நிறைந்த மற்றும் சொர்க்கத்தை சென்றடைவோம். ஆனால் இப்பரீட்சையை உதாசீனமாக எடுத்துக்கொண்டு தான்தோன்றித்தனமாக செலவிட்டால் நாம் சென்று வீழ்வது நரகப்படுகுழியில்தான் அதுவோ முடிவில்லாத நிரந்தரமான இருப்பிடமாகும்.
மறுமை சாத்தியமா?
·  சொர்க்கம் நரகம் என்பது கற்பனையோ மாயையோ அல்ல என்பதை  சற்று சிந்தித்தால் உணரலாம். சாதாரண ஒரு இந்திரியத் துளியில் இருந்து உருவாகி இன்று பூமியில் நடமாடிக்கொண்டிருக்கிறோம். இது எப்படி வாஸ்தவமோ அதைவிட வாஸ்தவம் அது, இதை நடத்திக்கொண்டிருக்கும் இறைவனுக்கு நம்மை மீண்டும் படைப்பது என்பது கடினமானது அல்ல.
''மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையாஅவ்வாறிருந்தும்அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.மேலும்அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டுஅவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; ''எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?'' என்று. (நபியே!) நீர் கூறுவீராக! ''முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்'' என்று(திருக்குர்ஆன் 36: 77-79)
·  இறுதித்தீர்ப்பு நாளின்போது ஒவ்வொரு மனிதனும் இப்பூமியின் மீது செய்த புண்ணியங்களும் பாவங்களும்  எடுத்துக்காட்டப் படும். புண்ணியங்களை அதிகமாக சம்பாதித்தவர்களுக்கு சொர்க்கம் விதிக்கப்படும் பாவங்களை அதிகமாக சம்பாதித்தவர்களுக்கு நரகம் விதிக்கப்படும்.

சொர்க்கம் என்பது எப்படி இருக்கும்?
·  அது ஓர் சாந்தியும் சமாதனமுமான இருப்பிடம். அங்கு கவலை, தீமை, பகை, சோர்வு, நோய், முதுமை, பஞ்சம், போன்ற எதற்குமே இடம் இல்லை. திகட்டாத இன்பங்களில் ஊறித் திளைக்கும் இடம் அது.. தோட்டங்களும் பூங்காவனங்களும் மாசற்ற நீரூற்றுகளும் உயர் மாளிகைகளும் சுவைமிக்க கனிகளும் உணவுகளும் பானங்களும் அளவின்றி அனுபவிக்க இறைவன் ஏற்பாடு செய்த இடம்! என்றும் இளமையோடு இருக்கும் இடம்! காரணம் மரணம் என்பது இனி இல்லையல்லவா?
இதோ தனது திருமறையில் இறைவன் கூறுகிறான்:
 நிச்சயமாக எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் இறைநம்பிக்கை கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான் இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும். (திருக்குர்ஆன் 10:9)
பொன் தட்டுகளும்கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும் இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும்கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன.  இன்னும், 'நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!' (என அவர்களிடம் சொல்லப்படும்.) (திருக்குர்ஆன் 43:71)

பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும்தன் சுவை மாறாத பாலாறுகளும்அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும்தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன. இன்னும்அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும்தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்துகொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா(திருக்குர்ஆன் 47:15)

எவர்கள் இறைநம்பிக்கைகொண்டுநற்காரியங்கள் செய்கிறார்களோ அவர்களைசதா கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில்நிச்சயமாக நாம் அமர்த்துவோம். அவற்றில் அவர்கள்நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள். (இவ்வாறாக நற்)செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது. (திருக்குர்ஆன் 29:58)


நரகமும் காத்திருக்கிறது
·  சொர்க்கத்தைப் போலவே நரகமும் மறுபுறம் காத்திருக்கிறது. அது இறைவனின் அருட்கொடைகளுக்கு நன்றி மறந்து தான்தோன்றித்தனமாக வாழ்ந்த கொடியோருக்காகவும் இறைவனையும் அவன் தூதர்களையும் வேதங்களையும் நிராகரித்தோருக்காகவும் காத்திருக்கிறது. கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் நடுவே மரணமற்ற வாழ்வும் அகோர பசியும் தாகமும் அதைத்தீர்க்க உணவாக முட்செடிகளும் கொதிநிலை அடைந்த பானங்களும் என்று தொடர் வேதனைகளின் இருப்பிடமாக இருக்கும். நரக வேதனைகள் பற்றி திருக்குர் ஆன் எச்சரிக்கிறது:
 நிச்சயமாக எவன் தன் இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோஅவனுக்கு நரகம் நிச்சயமாக இருக்கிறது¢ அதில் அவன் மரிக்கவும் மாட்டான் வாழவும் மாட்டான். (திருக்குர்ஆன் 20:74)
அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம். (திருக்குர்ஆன் 7:41) 
 யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்¢ அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களைஅவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:56)
 (நரக) நெருப்பு அவர்களுடைய முகங்களை கரிக்கும்¢ இன்னும் அதில் அவர்கள் உதடு சுருண்டு (முகம் விகாரமானவர்களாக) இருப்பார்கள். (திருக்குர்ஆன் 23:104)
 ஆனால் எவர்கள் (வரம்பு மீறிப்) பாவம் செய்தார்களோஅவர்கள் தங்குமிடம் (நரக) நெருப்புத்தான் - அவர்கள் அதை விட்டு வெளியேற நாடும் போதெல்லாம் அதிலேயே மீண்டும் தள்ளப்பட்டு: 'எதனை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களோ அந்த (நரக) நெருப்பின் வேதனையை அனுபவியுங்கள்'' என்று அவர்களுக்குச் சொல்லப்படும். (திருக்குர்ஆன் 32:20)
நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.  வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக!  அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்!...... கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.! (திருக்குர்ஆன் 78:21)
 (நபியே!) இன்னும் நீர் கூறுவீராக: 'இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது¢' ஆகவேவிரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம் (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்¢ அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்¢ மிகக் கேடான பானமாகும் அது! இன்னும் இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும். (திருக்குர்ஆன் 18:29)
ஆக, நரக வேதனை என்பது தாங்க முடியாதது. அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் நாம் மரணத்திற்கு முன்பாக இறைவனிடம் மன்னிப்பு கோரி திருந்திய வாழ்க்கை வாழவேண்டும். இறைவன் நம் அனைவரையும் நரகிலிருந்து காப்பானாக! சொர்க்கம் செல்லும் நன்மக்களில் நம்மை சேர்த்து வைப்பானாக!
=================== 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்
நாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_9390.html

புதன், 12 நவம்பர், 2025

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் -நவம்பர் 25 இதழ்

 

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் -நவம்பர் 25 இதழ்

பொருளடக்கம்

நாட்டின் பன்முகத்தன்மையும் பரஸ்பர புரிதலும்! -2

அடிப்படைச் சொற்கள் அறிமுகம் -3

பள்ளிவாசல் தொடர்பான அரபுச் சொற்கள் -5

இஸ்லாம் கற்பிக்கும் இறைவழிபாடும் பொறுப்புணர்வும் -7

இஸ்லாத்தின் தூண்களும் பள்ளிவாசல்களும் -10

பெண்களும் பள்ளிவாசல்களும் -12

தொழுகைக்கு முன் உடல்தூய்மை -13

ஐவேளைத் தொழுகை  நிகழ்த்தும் சமூகப் மாற்றங்கள்! -14

தொழுகைக்கான அழைப்பு - என்ன பொருள்?-16

கல்வி நிலையங்களின் தாய்மடி பள்ளிவாசல்! -18

அன்றொருநாள் நபிகளாரின் பள்ளிவாசலில்.. 19

திக்கற்றோர்க்கு ஒரு வாசல் பள்ளிவாசல் -22

---------------------- 


ஞாயிறு, 28 செப்டம்பர், 2025

சாட்ஜிபிடி: உலகம் தானாக உருவாக முடியுமா?

கேள்வி: உலகம் தானாக உருவாக முடியுமா?

ChatGPT பதில்: ஏதேனும் இல்லாமையில் இருந்து (from absolute nothingness) உருவாக வேண்டும்என்றால், அது மனித தர்க்கத்திற்கும் அறிவியல் விதிகளுக்கும் மிகப்பெரிய சவால். ஏனென்றால் இல்லை” என்றால் உண்மையில் எதுவும் இல்லைஇடம் கூட இல்லை, நேரம் கூட இல்லை, சட்டங்களே இல்லை.

அப்படியான நிலையில் “உருவாகுதல்” சாத்தியமாக வேண்டுமானால் சில அடிப்படைத் தேவைகள் இருக்க வேண்டும்:

உருவாகுதலுக்கான அடிப்படைத் தேவைகள்

  1. ஒரு காரணம் (Cause / Initiator)
    • எதுவும் இல்லாத நிலையிலிருந்து ஏதாவது உருவாக, ஒரு வெளிப்புற உந்துதல் (external cause) இருக்க வேண்டும்.
    • காரணமின்றி விளைவு வராது என்பது அடிப்படைத் தர்க்க விதி.
  2. ஆற்றல் அல்லது சக்தி (Energy / Power)
    • இல்லாமை” (nothingness) தானாகவே ஆற்றலை உற்பத்தி செய்ய முடியாது.
    • ஆகவே அதற்குப் புறம்பாக ஒரு சக்தி இருக்க வேண்டும்.
  3. சட்டங்கள்/ விதி  (Laws / Principles)
    • உருவாகும் செயலுக்குப் பின்பற்ற வேண்டிய விதிகள் தேவை.
    • உதாரணம்: குவாண்டம் விதிகள், இயற்பியல் சட்டங்கள்.
    • ஆனால் “இல்லாமையில்” சட்டங்களே இல்லை; எனவே அவற்றை யாரோ நிறுவ வேண்டும்.
  4. இடமும் காலமும் (Space & Time)
    • உருவாகும் நிகழ்வு நிகழ “எங்கே” என்பதற்கு இடம் வேண்டும்.
    • எப்போது” என்பதற்கு நேரம் வேண்டும்.
    • இல்லாமையில் இடமும் காலமும் இல்லை, எனவே அவற்றை உருவாக்க யாரோ சக்தி வேண்டும்.
  5. ஒழுங்கு (Order / Design)
    • தானாக உருவாகினாலும் சீரற்ற குழப்பமே வரும்.
    • ஒழுங்கான அமைப்பை (fine-tuned order) உருவாக்க அறிவும் நோக்கமும் தேவை.

6.     திட்டமிடுதல்/ வடிவமைத்தல் (Planning / Designing)

o   காரணம், சக்தி, சட்டங்கள் அனைத்தும் பயனுள்ள முறையில் செயல்பட, திட்டமிடுதல் அவசியம்.

o   திட்டமின்றி நடந்தால் அது சீரற்ற குழப்பமாகி விடும்.

இவை எதுவும் இல்லாமல் எதுவும் இல்லாமையில் இருந்து எதுவும் வர முடியாது  என்பதே தர்க்க ரீதியான முடிவு.

-----------------

கேள்வி 2: திருக்குர்ஆன் இதுபற்றி என்ன கூறுகிறது?

ChatGPT பதில்: திருக்குர்ஆன் இவற்றை அனைத்தையும் இறைவனின் பண்புகளாகக் கூறுகிறது:

1. காரணம்:

அவன்தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்; அவன் ஆகுக! என்று சொல்லும் நாளில், அது (உடனே) ஆகிவிடும். அவனுடைய வாக்கு உண்மையானது; .... அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான்; அவனே பூரண ஞானமுடையோன்; (யாவற்றையும்) நன்கறிந்தோன். (திருக்குர்ஆன் 6:73) 

2. ஆற்றல் / சக்தி:

எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; “குன் (ஆகுக!) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது (திருக்குர்ஆன்  36:82)

3. சட்டங்கள்:

அவன் எத்தகையவன் எனில், அவன்தான் படைத்தான்; பொருத்தமாகவும் அமைத்தான்; மேலும் விதியை நிர்ணயித்தான்; பிறகு வழிகாட்டினான். (திருக்குர்ஆன் 87:2, 3)

சூரியன், நிலவு, இரவும் பகலும் ஒவ்வொன்றும் தன் வழியில் இயங்குகின்றன. (திருக்குர்ஆன் 36:38–40)

4. இடமும் காலமும்:

அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான்; அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான்; இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்; சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது; (நபியே!) அறிந்து கொள்வீராக! அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்..” (திருக்குர்ஆன் 39:5)

5. ஒழுங்கு:

அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்; (மனிதனே) அருளாளனின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர்; பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! (அவ்வானங்களில்) ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா?  (திருக்குர்ஆன் 67:3)

6. திட்டமிடுதல்:

= நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே (திட்டப்படி)  படைத்திருக்கின்றோம். (திருக்குர்ஆன் 54:49)

= உங்கள் பார்வைக்குப் படக்கூடிய தூண்கள் எதுவுமின்றி அல்லாஹ்தான் வானங்களை உயர்த்தினான்; பிறகு தனது ஆட்சி பீடத்தில் அமர்ந்தான். மேலும் அவன் சூரியனையும், சந்திரனையும் ஒரு நியதிக்குக் கட்டுப்படும்படிச் செய்தான். இந்த முழு அமைப்பிலுள்ள ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை இயங்கிக் கொண்டிருக்கும். அல்லாஹ்தான் இவ்வனைத்துக் காரியங்களையும் நிர்வகித்து வருகிறான். அவன் சான்றுகளை மிகத் தெளிவாக விளக்குகின்றான்; உங்கள் இறைவனைச் சந்திக்க இருப்பதை நீங்கள் உறுதியாக நம்ப வேண்டும் என்பதற்காக! (திருக்குர்ஆன் 13:2)

------------------------------------ 

நாத்திகர்கள் யார் ?

https://www.quranmalar.com/2025/09/blog-post_22.html

நேரடி நாத்திகமும் மறைமுக நாத்திகமும் 

https://www.quranmalar.com/2025/09/blog-post_21.html

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

நாம் ஏன் பிறந்தோம்?

திங்கள், 22 செப்டம்பர், 2025

நாத்திகர்கள் யார்?

நாத்திகர்கள்_யார்?
நாம் அன்றாடம் புழங்கும் பொருட்களை சற்று சிந்தித்துப் பாருங்கள். இவை எதையுமே தானாக வந்தவை, தானாக உருவானவை என்று யாராவது கூறினால் அவரை உலகம் எப்படி அழைக்கும் என்பதைப் பாருங்கள்.. அறிவிலி, முட்டாள், புத்தி பேதலித்தவன், பைத்தியக்காரன் என்று பல வசை மொழிகளால் அழைப்பார்கள். ஆனால் இந்த சாதாரண பொருட்களை விட பன்மடங்கு சிக்கல்கள் கொண்ட மனித உடலோ அல்லது அதைவிடப் பன்மடங்கு சிக்கல்கள் கொண்ட இப்பிரபஞ்சமோ தானாக உருவானது என்றும் தன்னைத்தானே பரிபாலித்துக் கொள்கிறது என்றும் கூறுபவர்களை எப்படி அழைக்கலாம் கூறுங்கள். 

ஆம் அவர்களைத்தான் நாத்திகர்கள் என்று உலகம் அழைக்கிறது!

1. வீடு – கட்டிட வாதம்

  • ஒரு அழகான வீடு இருக்கிறது. அதை பார்த்தவுடன் யாரும் “இது காற்று, தூசி, மழை கலந்து தானாகவே ஆனது” என்று சொல்ல மாட்டார்கள்.

  • கல், சிமெண்ட், மரம், இரும்பு அனைத்தும் தானாக ஒன்றாகி வீடு ஆனது என யாரும் நம்பமாட்டார்கள்.
    👉 அதுபோல பிரபஞ்சம் — சூரியன், நிலா, நட்சத்திரங்கள், மலைகள், நதிகள் — அனைத்தும் சீரான முறையில் இருப்பது, படைப்பாளி இருக்கிறான் என்பதற்கே சான்று.

2. நூல் – எழுத்தாளர் வாதம்

  • ஒரு புத்தகத்தில் ஆயிரக்கணக்கான பக்கங்கள், ஒவ்வொரு பக்கத்திலும் ஒழுங்கான எழுத்துக்கள், அர்த்தமுள்ள வாக்கியங்கள் இருக்கின்றன.

  • “இது காகிதத்தில் மை சிந்தி தானாக எழுந்துவிட்டது” என்று சொன்னால், யாரும் ஏற்கமாட்டார்கள்.
    👉 அதேபோல், உயிரினங்களின் DNA, இயற்கை விதிகள் அனைத்தும் ஒரு அறிவார்ந்த திட்டம் என்பதைக் காட்டுகிறது.

3. கடிகாரம் – வடிவமைப்பாளர் வாதம்

  • ஒரு கடிகாரத்தில் நூற்றுக்கணக்கான சிறு பாகங்கள், ஒவ்வொன்றும் தன் இடத்தில் இருந்து நேரம் காட்டுகிறது.

  • “இந்தக் கடிகாரம் காடு ஒன்றில் இருந்த உலோகங்கள் தானாகவே இணைந்து உருவானது” என்று யாராவது சொன்னால், நாம் சிரித்துவிடுவோம்.
    👉 ஆனால் கடிகாரத்தை விட கோடிக்கணக்கான மடங்கு சிக்கலான மனித உடல் அல்லது பிரபஞ்சம் தானாகவே உருவானது என்று சொல்வது பொருள் இல்லாதது.

4. பயிர் – விவசாயி வாதம்

  • வயலில் தானியங்கள், காய்கறிகள், பழமரங்கள் வளர்கின்றன. ஆனால் அதை வளர்க்க விதை, நீர், பராமரிப்பு தேவை.

  • “விவசாயி இல்லாமல் வயல் தானாகவே விளைந்துவிட்டது” என்று சொல்ல முடியாது.
    👉 அதுபோல், பூமியில் உள்ள வாழ்வியல் சுழற்சிகள் — மழை, சூரிய ஒளி, மண், ஆக்சிஜன் — அனைத்தும் இறைவனின் பராமரிப்பு என்பதற்கே சான்று.

5. பிரபஞ்ச ஒழுங்கு – இயக்குநர் வாதம்

  • சூரியன் சரியான தூரத்தில் இருக்கிறான்; சிறிது அருகே வந்தால் எரிந்துவிடுவோம், சிறிது தள்ளிச் சென்றால் உறைந்துவிடுவோம்.

  • நிலா இல்லாமல் இருந்தால் அலைகள் ஒழுங்கு கெடும்.

  • பூமி சுழலும் வேகம் மாறினால் வாழ்வே முடியாது. 

  • இவ்வாறு நூற்றுக்கணக்கான அளவைகள் (parameters) சமநிலையில் நிறுத்தப்படுவதால்தான் உலகமே அழியாது நிலைநிற்கிறது. 'கரணம் தப்பினால் மரணம்' என்பதுபோல இந்த சமநிலை எப்போது தவறினாலும் உடனே உலகம் அழிந்துவிடும்!

  • 👉 இத்தனை ஒழுங்கும் சீரும் தானாக தோன்றியது அல்ல; ஒரு அறிவார்ந்த இயக்குநரின் திட்டமும் பராமரிப்பும்தான்!

ஆக, ஒரு வீடு, ஒரு புத்தகம், ஒரு கடிகாரம் கூட தானாக உருவாக முடியாது எனில், அனைத்தையும் விட சிக்கலான பிரபஞ்சம், உயிர்கள், ஒழுங்கு தானாக உருவாக வாய்ப்பே இல்லை என்பது மிகத் தெளிவானது!

👉 இதுவே உலகைப் படைத்தவனின் கேள்வி :

“அவர்கள் எதுவுமின்றி படைக்கப்பட்டவர்களா? அல்லது அவர்கள் தாமே தங்களை படைத்துக்கொண்டவர்களா? அல்லது, வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா?" (திருக்குர்ஆன்  52:35–36)

==================== 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

ஞாயிறு, 21 செப்டம்பர், 2025

நேரடி நாத்திகமும் மறைமுக நாத்திகமும்!


 மனித வாழ்வின் அடிப்படை உண்மை, ஒரு படைத்தவன் இருக்கிறான் என்பதே. உலகம் தோன்றிய நாள்முதல் அனைத்து சமூகங்களிலும் ஒரு படைப்பாளர் மீது நம்பிக்கை இருந்துள்ளது. அதனால்தான் இறை நம்பிக்கை மனிதனின் இயல்பான உணர்வாக (fitrah இயற்கை) கருதப்படுகிறது. ஆனால் காலப் போக்கில் சில சிந்தனைகள், தவறான தத்துவங்கள், அறிவை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் இந்த இயல்பான உண்மை மறுக்கப்பட்டது. இதுவே நாத்திகம் எனப்படும் எண்ணக் கோட்பாட்டிற்கு வழிவகுத்தது.

நாத்திகத்தின் இரண்டு வகைகள்

நாத்திகம் என்பது ஒரே மாதிரியான சிந்தனை அல்ல. அதனை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்:

நேரடி நாத்திகம்

இவ்வகை நாத்திகர்கள் இறைவன் என்ற யாரும் இல்லை என்று நேரடியாக மறுக்கின்றனர்.

அவர்கள் கூறுவதாவது, “இந்த உலகம் யாராலும் படைக்கப்படவில்லை; இயற்கை தானாகவே உருவாகி இயங்குகிறது என்பதே.

தங்களின் அறிவாற்றல், அறிவியல் முன்னேற்றம், பகுத்தறிவு போன்றவற்றை காரணம் காட்டி  இறைநம்பிக்கையை மறுக்கின்றனர். ஆனால் அவர்களின் தர்க்கங்களுக்கு உள்ளேயே பல முரண்பாடுகள் காணப்படுகின்றன.

மறைமுக நாத்திகம்

இவ்வகை நாத்திகர்கள் வெளிப்படையாக இறைவனின் உள்ளமையை மறுப்பதில்லை. ஆனால் உண்மையான படைத்த இறைவனை விட்டு விலகி, படைப்பினங்களையோ இயற்கை சக்திகளையோ அல்லது கற்பனை உருவங்களையோ வணங்குகின்றனர்.

உதாரணமாக, சூரியன், சந்திரன், நெருப்பு, கல், மரம் போன்றவற்றை தெய்வமாகக் கொண்டு வழிபடுவார்கள். சிலர் மனிதர்களையே அல்லது மிருகங்களையே தெய்வமாக்கிக் கொள்கிறார்கள்.

உண்மையில், படைப்பினங்களுக்கு இறைவனின் இடத்தை அளிப்பது, உண்மை இறைவனை மறுப்பதற்குச் சமமானது.

இவ்விரண்டு வகையான நாத்திகங்களும் மனிதனை உண்மையான இறைநம்பிக்கையிலிருந்து விலக்கி விடுகின்றன. ஒன்று நேரடியாக மறுப்பு செய்கிறது; மற்றொன்று தவறான வழியில் சிதறடிக்கிறது.

நாத்திகம் உருவாகும் காரணங்கள்

அறிவியல் முன்னேற்றத்தை தவறாகப் புரிந்துகொள்வதுஇயற்கை விதிகளை ஆய்வுசெய்து கண்டறியப்பட்டவுடன், சிலர் இது இயற்கைத் தன்மையே, படைத்தவன் தேவையில்லை என்று தவறாகக் கருதுகிறார்கள். ஆனால் அந்த விதிகளை அமைத்தவனின் தேவையை கண்மூடித்தனமாக மறுத்தும் மறந்தும் விடுகிறார்கள். உதாரணமாக ஒரு புத்தகத்தை கண்கூடாகக் கண்டும் இதை எழுதியது யாரும் இல்லை என்று கூறுவது போன்ற அப்பட்டமான மறுப்பு அது! 

பகுத்தறிவை மறுப்பது - நாத்திகர்கள் பலர் தங்களைப் 'பகுத்தறிவுவாதிகள்' என்று பெயர் சூட்டிக்கொண்டாலும் 'கண்ணால் கண்டால்தான் நம்புவேன்' என்று பகுத்தறிவு கூறும் உண்மைகளை வலுக்கட்டாயமாக மறுப்பதை நாம் காணலாம். உதாரணமாக ஒரு கட்டிடத்தை அல்லது பாலத்தைக் கண்டால் இதைக் கட்டியவன் யாரும் இல்லை என்பதுபோல இப்பிரபஞ்சம் அல்லது மனிதனின் உருவாக்கத்தின் பின்னால் யாரும் இல்லை என்று இவர்கள் கூறுவதை நாம் காணலாம். 

தனிப்பட்ட அகங்காரம் – “நான் அறிவேன்; எனக்கு யாரும் தேவையில்லை என்ற அகந்தை மனநிலையும் நாத்திகத்திற்கு இட்டுச்செல்லும் வழியாகிறது.

சமூக, அரசியல் காரணிகள்சில காலங்களில் மதத் தலைவர்கள் செய்த தவறுகள், மதத்தின் பெயரில் நடந்த அநீதிகள் ஆகியவை மனிதர்களை மதத்திலிருந்து விலக்கி, நாத்திகத்திற்குத் தள்ளுகின்றன.

ஆர்வமின்மை மற்றும் வாழ்க்கைச் சோர்வுஉலக வாழ்க்கையின் சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் சிலர் இறைவன் பற்றிய தேடலை புறக்கணித்து இறைவன் இல்லை என முடிவெடுத்து விடுகிறார்கள்.

நாத்திகத்தின் விளைவுகள்

உள்ளார்ந்த வெறுமை இறைவனை மறுக்கும் மனிதன், வாழ்வின் நோக்கத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளார்ந்த வெறுமையை அனுபவிக்கிறான்.

ஒழுக்கச் சிதைவு – “கண்கூடாக இல்லாதவன் இல்லை என்ற நம்பிக்கை உருவாகும்போது, எந்தத் தவறும் செய்யலாம் என்ற மனநிலை மனிதனை ஆள்கிறது.

சமூகப் பிரச்சனைகள்நாத்திக சிந்தனையின் அடிப்படையில் அமைக்கப்படும் சமூகங்களில் சுயநலம், வன்முறை, குடும்பச் சிதைவு போன்றவை அதிகரிக்கின்றன.

ஆரோக்கிய பாதிப்புகள்இறைநம்பிக்கையின்மையால் ஏற்படும் மனஅழுத்தம், பயம், மனச்சோர்வு போன்றவை உடல்நலத்திற்கும் தீங்கு விளைவிக்கின்றன.

மனிதகுலத்துக்குள் பிளவு - நாத்திகம் தான்தோன்றித்தனம் மூலம் மனிதர்களைப் பிரித்து விடுவதால் அவர்களிடையே பெரும் பிளவுகளை ஏற்படுத்துகிறது. அதனால் இனம், நிறம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் இயல்பாகவே பிரிந்து கிடக்கும் மக்களிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது கடினம். அதனால் தீமைகள் அல்லது அநீதிகளுக்கு எதிராகப் போராட மக்களை ஒன்றுதிரட்டுவதும் அல்லது இணைப்பதும் கடினமாகிறது. 

ஆக, நாத்திகம், எந்த வடிவிலேயே இருந்தாலும், மனிதனை உண்மையான இறைநம்பிக்கையிலிருந்து விலக்கி விடுகிறது. மனிதன் தன்னுடைய படைப்பாளரை உணர்ந்தால்தான் வாழ்க்கைக்கு அர்த்தம் உண்டு; நோக்கமும் திசையும் கிடைக்கும். எனவே நாத்திகம் என்பது மனித உள்ளத்தின் இயல்பான இறை உணர்வுக்கு மிகப்பெரிய தடையாகும்.

============= 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்