இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 12 மே, 2022

மீண்டும் கஷ்டங்களை அனுபவிக்கத் தயார்!


from the group AMERICAN MUSLIMS a Muslim Sister writes

அமெரிக்க முஸ்லிம்கள் என்ற குழுவிலிருந்து ஒரு முஸ்லிம் சகோதரி எழுதுகிறார்...
நான் ஸ்வீடனைச் சேர்ந்தவள்... நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்
இஸ்லாமை நோக்கிய எனது பயணம் எளியது அல்ல. அது வலியும் வேதனையும் நிரம்பியது. பல தடைகளைக் கடந்து இஸ்லாத்திற்கு வந்துள்ளேன். ஆனால், நான் இத்தடைகளை மீண்டும் கடக்க வேண்டி வருமென்றால் மீண்டும் அனைத்தையும் கடக்கத் தயார் என்பதை தயக்கமில்லாமல் சொல்வேன்! அந்த அளவுக்கு நான் இஸ்லாத்தை நான் உறுதியாக நம்புகிறேன். இந்தப் பொக்கிஷத்தை நான் இழப்பதற்கு தயார் இல்லை!
என் வளர்ப்பும் குழந்தைப் பருவமும்:
நான் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்ந்தேன். அவர்கள் மிகவும் இனவெறியர்களாக இருந்தார்கள். அந்நிய இனத்தவர்களின் எதையும், எவரையும் அவர்கள் வெறுத்தார்கள். குறிப்பாக முஸ்லிம்களைக் கண்டாலே ஆகாது. நான் குழந்தையாக இருந்தபோது டிவியில் ஏதேனும் முஸ்லீம் தோன்றும் போதெல்லாம் டிவியை நோக்கி என் தந்தை காறி துப்பியது எனக்கு ஞாபகம் இருக்கிறது.
என் பெற்றோர்கள் என்னையும் என்னையும் என் சகோதரிகளையும் வெறுப்புடனேயே வரத்தார்கள். மது மற்றும் போதை வெறியில் வெளிப்படும் கோபத்தை எல்லாம் எங்கள் மீதே காட்டி தீர்த்துக் கொள்வார்கள். பெண்குழந்தைகளையும் வெறுத்தே வந்தார்கள் போலும். வளரும் பருவத்தில் அன்பு பாசம் என்றால் என்ன என்றே தெரியாமல் வளர்ந்தோம். ஒரு பெற்றோரின் அன்பையும் அக்கறையும் என்றும் உணர்ந்ததே இல்லை. எனக்கு தெரிந்ததெல்லாம் பயம் மற்றும் வலிகள் மட்டுமே.
தேவாலய சேர்க்கை:
நான் 14 வயதில் தேவாலயத்தில் சேர்க்கைக்காக நடத்தப்படும் கிறிஸ்தவ உறுதிப்படுத்தல் - Christian confirmation at church- ( சடங்குக்கான என் முறை வந்தது. அதற்காக நான் நிறைய படிக்கவும் ஆராயவும் வேண்டியிருந்தது. அப்போதுதான் எனக்குள் பல கேள்விகள் எழுந்தன. கடவுள் எப்படி மூன்றாக இருக்க முடியும்? எப்படி ஒருவருள் கடவுளும், குமாரனும், பரிசுத்த ஆவியும் இருக்க முடியும்?

அதில் எந்த அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. நான் பாதிரியார்களிடம் கேட்டேன், யாராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க விளக்கத்தை அளிக்க முடியவில்லை. அதனால் நானே உண்மையை தேட ஆரம்பித்தேன். நூலகத்தில் நான் நிறைய புத்தகங்கள் வாசித்தேன். சுயமாக ஆராய்ச்சிகள் மேற்கொண்டேன்.
கிறிஸ்தவம் பற்றிய புரிதல்கள்:
இன்றைய துருக்கியில் உள்ள நிகேயாவில ஒரு தேவாலயக் கூட்டத்தில் முதல் சபை, முழு வேதத்தையும் பைபிளையும் மாற்றிவிட்ட விஷயத்தை நான் அறிந்துகொண்டேன். அது மனிதர்களின் கைகளால் அவர்களுடைய சொந்த ஆசைகள் மற்றும் நம்பிக்கைகளின்படி ஒன்று சேர்க்கப்பட்ட ஒன்று என்ற விவரம் எனக்கு கிடைத்தது.
பேரரசர் கான்ஸ்டன்டைனால் (emperor Constantine) நடத்தப்பட்ட அந்த கூட்டத்தில் இயேசு தீர்க்கதரிசி அல்ல, அவர் கடவுளின் குமாரன் என்றும் பரிசுத்த ஆவி என்றும் முடிவு செய்யப்பட்டது. இயேசுவை தீர்க்கதரிசி என்றும் ஒரு மனிதன் என்றும் விவரித்த ஒவ்வொரு வேதநூலும் அழிக்கப்பட்டது.

எனவே இதைக் கண்டறிந்த பிறகு நான் என் மனதில் உறுதி கொண்டேன். நான் இனி ஒரு கிறிஸ்தவப் பெண்ணாக இருக்கப்போவதில்லை என்று முடிவு செய்தேன். மனிதர்களால் உருவாக்கப்பட்ட மதத்தை நான் நம்ப மறுத்தேன். ஒரு பேரரசரை திருப்திப்படுத்த ஒன்று சேர்க்கப்பட்ட ஒன்றை நான் எப்படி நம்புவது?
உண்மையைத் தேடுதல்:
எனவே பிறகு நான் உண்மையைத் தேட ஆரம்பித்தேன். கடவுள் கண்டிப்பாக இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும், எங்கோ இருக்க வேண்டும் என்பதை என் மனம் உறுதியாக நம்பியது.
அப்போது முதல் நான் வெவ்வேறு மதங்களைப் பற்றிய ஆய்வை மேற்கொண்டேன். பின்னர் நான் ஸ்வீடிஷ் மொழிபெயர்ப்பில் திருக்குர்ஆனைக் கண்டேன். அதை நான் முழுமையாகப் படித்தேன். அது என் கேள்விகள் அனைத்திற்கும் பதிலளித்தது மற்றும் அதைவிட அதிகமாக. திருக்குர்ஆனில் உள்ள அறிவும் அற்புதங்களும் என்னை அழ வைத்தன. நான் படித்து முடித்த பிறகு கடவுளின் முன் என் "ஷஹாதா"வை (கொள்கைப் பிரகடனம்) மொழிந்தேன். அப்போது எனக்கு வயது 17. ஆனால் அது பலத்த சோதனைகளைக் கொண்டுவரும் என்பதை நான் அறிந்திருக்கவில்லை!
சத்திய சோதனைகள்:
நான் முஸ்லிம் ஆகிவிட்ட தகவல் அறிந்ததும் என் குடும்பத்தார் பைத்தியம் பிடித்ததைப் போல் ஆகிவிட்டார்கள். என்னை மிக மோசமாக அடித்து துன்புறுத்தினார்கள். என் குடும்ப வீட்டை விட்டு என்னை வெளியேற்றினார்கள் அன்றிலிருந்து நானாகவே என்னை கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது. பத்து வருடமாக என் குடும்பமும் நண்பர்களும் என்னிடம் பேசவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் நான் இறந்து விட்டேன். அவர்கள் பார்வையில் நான் ஒரு துரோகி!

நான் இப்போது என் உடல் முழுவதும் உள்ள வடுக்களையும் நிரந்தர காயங்களையும் பார்க்கும்போது, நான் புன்னகைக்கிறேன், ஏனெனில் அவை மதிப்பு மிக்கவை. அனுபவித்த கஷ்டங்கள் எதற்காகவும் நான் வருத்தப்படவில்லை. மீண்டும் நான் அவற்றைக் கடந்து செல்ல வேண்டும் என்ற ஒரு நிலை வந்தால், மீண்டும் அனைத்தையும் செய்வேன்.
ஆம், நான் சத்தியத்தை அறிந்து கொண்டேன். இறைவன் என்னோடு இருக்கிறான். எனக்கு எப்போதும் தேவை அதுதானே!
------------------
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக