
எல்லா வகை இயந்திரங்களுக்கும் Engine அல்லது Motor என்பது இதயம் போன்ற பாகம். இந்த இதயம் இல்லையென்றால் இயந்திரங்கள் வெறும் இரும்பு கூடுகள்தான்.

அரசியலுக்கு புது இலக்கணம்
நாடும் மக்களும் நாட்டு வளங்களும் அனைத்தும் மன்னனுக்கே சொந்தம் என்ற எழுதப்படாத விதியையும் ‘மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி!’ என்ற மரபுகளையும் மாற்றி அமைத்தது இஸ்லாத்தின் வரவு! நாடும் மக்களும் மட்டுமல்ல, உலகமும் அதிலுள்ளவை அனைத்தும் இறைவனுக்கே சொந்தம் என்றும் மனிதனிடம் தற்காலிகமாக வழங்கப்படுவதே ஆட்சியதிகாரம் என்று அரசியலுக்கு புது இலக்கணம் வகுத்தது இஸ்லாம். அரசனாயினும் ஆண்டியாயினும் அவரவர்க்கு இவ்வுலகில் இறைவனால் வழங்கப்பட்ட பொறுப்புக்கள் குறித்து மறுமையில் விசாரிக்கப்பட உள்ளார்கள் என்ற உண்மையை நினைவூட்டி அதை அரசியலுக்கு அடிப்படையாக்கியது இஸ்லாம்!
நபிகளார் நிறுவிய சமத்துவ அரசாங்கம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆன்மீகத் தலைமையும் ஆட்சித் தலைமையும் அன்னாரது இறுதிக் காலத்தில் கைவந்தது. அன்றுவரை இருந்து வந்த அரசர்களின் அல்லது ஆட்சியாளர்களின் நடைமுறைகளை இஸ்லாமிய நடைமுறை மூலம் மாற்றிக் காண்பித்தார் நபிகளார்.
= பொதுவாக உலகில் முடியாட்சிகள் எப்படி இருக்குமோ அவ்வாறே அரபு நாட்டு அரசாங்கங்கள் செயற்பட்டுவந்தன. அரசாங்க அலங்காரங்களோடு உயர்ந்த அரண்மனை மாட மாளிகைகளில் சகல வசதிகளோடு தாங்கிய சௌந்தர்ய சிம்மாசனங்களில் பெருமைமிகு பட்டாடைகளை உடுத்திக் கொண்டு உடல் முழுக்க பொன் நகைகளைப் போர்த்திக் கொண்டு பொன்னாலும், வெள்ளியாலும் இழைக்கப்பட்ட இருக்கைகளில் சுற்றி நிற்கும் இளநங்கையர் வீசும் சாமரத்திலிருந்து வெளிப்படும் காற்றை அனுபவித்துக் கொண்டு உல்லாச வாழ்க்கையில் திளைத்துக் கொண்டிருந்த ஆட்சியாளர்கள், அரசவை பிரபுக்களுக்கு செலுத்தப்பட்டு வந்த மரியாதை இஸ்லாம் ஆட்சிக் கட்டில் ஏறியபின் தடுத்து நிறுத்தப் பட்டது.
= அரசவைக்கே அணிகலன்களாக திகழ்ந்த பொன் ஆசனங்களும், வெள்ளி இருக்கைகளும் இல்லாது போயின.
= ஆட்சியாளர்களின் வருகையை கட்டியம் கூறி அறிவிக்கும் நடைமுறையும் பராக், பராக் ஒலி ஓசைகளும் ஒழிந்து போயின.
= ஆட்சியாளரை சந்திக்க வந்துள்ளோரை வடிகட்டுவதற்காக நியமிக்கப் பட்டிருந்த தனி அதிகாரிகள் காணாமல் போயினர்.
= அரசன் விதிப்பதே சட்டம் என்ற நிலைமாறி இறைவன் விதிப்பதே சட்டம் என்ற நிலை அமுலுக்கு வந்தது.
= கோத்திரத்துத் தலைவர்கள் பெரும்பாலும் மக்களுடைய விருப்பத்திற்கேற்ப, அல்லது அவர்களிடம் இருந்த வீரமறம், வள்ளல் குணம் போன்றவற்றை முன்வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்கள். ஆயினும்கூட, மற்ற மக்களுக்கு இல்லாத ஏராளமான சிறப்புரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. கோத்திரத்துத் தலைவர்களின் கால்நடைகளுக்கென்று தனி மேய்ச்சல் நிலங்கள் ஒதுக்கப்பட்டன. மற்றவர்கள் யாரும் அதில் காலைக்கூட வைக்க முடியாது. இந்த சடங்கையும், தவறான மரபையும் அடியோடு ஒழிப்பதற்காகத்தான் இறைத்தூதர் (ஸல்) கீழ்வருமாறு அறிவித்தார்கள். “இறைவனையும் இறைத்தூதரையும் தவிர மேய்ச்சல் நிலங்களை ஒதுக்கீடு செய்யும் உரிமை வேறு யாருக்கும் இல்லை!”
= போரில் கிடைத்த வெற்றிப் பொருட்களில் மற்ற மக்களுக்கு இல்லாத வகையில் தலைவர்களுக்கென்று சிறப்புப்பங்கு இருந்தது. அவை அனைத்தையும் இல்லாதொழித்து ஐந்தில் ஒரு பங்கு என்ற நடைமுறையை இஸ்லாம் கடமையாக்கியது.
= பொது அவைகளில் தலைவர்களுக்கு முன்னால் வெளிப்படையாக மக்கள் பேசுவதற்குக்கூட சுதந்திரம் இல்லாமல் இருந்தது. ஆனால் இக்குறையைப் போக்க ஆட்சித் தலைவரும் அவருடைய அதிகாரிகளும் பொதுமக்கள் எளிதாகச் சந்தித்துக் கொள்ளும் பள்ளி வாசல்களையே தங்களுடைய செயலகங்களாக ஆக்கிக் கொண்டனர்.
சட்டத்திற்கு முன் சமநிலை:
அந்த காலகட்டத்தில் ஆட்சியாளர்களும், மன்னர்களும் அரசவையை சார்ந்தவர்களும் பொதுமக்களுக்கு மட்டுமல்ல எந்த சட்டத்திற்கும் எட்டாத தூரத்தில் இருந்தார்கள். சட்ட நெறிமுறைகள் அவர்களை ஒரு போதும் கட்டுப்படுத்தாது. ஆனால், இங்கு பார்த்தால் இறைத்தூதர் இடத்திலும் அவருடைய வீட்டார்களிடத்திலும் தான் முதன் முதலில் சட்டம் செயல்படத் தொடங்கும். இறைத்தூதரின் வீட்டைச் சார்ந்தவர்கள் ஏதேனும் ஒரு தவறை செய்து விட்டால் அவர்களுக்கு இரட்டிப்பு தண்டனை கிடைக்கும் என்று இறைவன் கட்டளையே பிறப்பித்திருந்தான்.
உதாரணமாக, வட்டி வியாபாரம் முற்றிலுமாக தடை செய்யப்பட்ட போது தன்னுடைய சிறிய தந்தை அப்பாஸ் அவர்களுக்கு வரவேண்டிய வட்டி நிலுவைத் தொகை அனைத்தையும் இறைத்தூதர் தள்ளுபடி செய்து விட்டார்கள். அறியாமைக் காலத்தில் இருந்து தொடரும் மோதல்களுக்காக இனிமேல் யாரும் பழிதீர்க்கக் கூடாது என்கின்ற ஆணை அமுல்படுத்தப் பட்டபோது தம்முடைய சொந்த கோத்திரத்தின் சார்பில் எல்லா வகையான வழக்குகளிலும் பழி வாங்குதலை கைவிடுவதாக இறைத்தூதர் அறிவித்தார்கள்.
"என் மகள் பாத்திமாவே திருடி இருந்தாலும் அவளது கையையும் வெட்டுவேன்" என்று சூளுரை பகர்ந்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்).
------------------------
இந்த இதழ் உங்கள் இல்லம் தேடிவர உங்கள் முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யவும்
பொருளடக்கம்
ஆழ்கடலுக்கு உள்ளேயும் அலைகளா? - 2மனிதனை மனிதன் வணங்கத் தடை!
இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும்
ஏக இறைவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் என்று கற்பிக்கும் இஸ்லாம் அவன்
அல்லாதவற்றுக்கு தலைவணங்குவதையோ பூஜைகள் செய்வதையோ அறவே கூடாது என்கிறது. எல்லாக்
காலங்களிலும் இப்பூமிக்கு வந்த இறைத்தூதர்கள் இக்கொள்கையையே தத்தமது மக்களுக்கு
போதித்தார்கள். ஆனால் பிற்கால மக்கள் ஷைத்தானின் தூண்டுதலால் அந்த இறைத்தூதர்களின்
மறைவுக்குப் பின் அவர்களுக்கு உருவப்படங்களும் சிலைகளும் உருவாக்கி அவற்றையே
கடவுளாக வணங்க ஆரம்பித்தார்கள். நபிகளாருக்கு முன்னர் வந்த இயேசு (அலை) அவர்களும்
இதற்கு விலக்கல்ல! ஆனால் இறுதி இறைத்தூதராக இப்பூமிக்கு வந்த நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களுக்கு பதினான்கு நூற்றாண்டுகள் ஆகியும் உலகில் எங்குமே உருவப் படமும் சிலையும் கிடையாது
என்பதை நீங்கள் கவனிக்கலாம். அவரே இறுதித் தூதர் என்பதால் தன்னை மக்கள் ஆராதிக்கக்
கூடாது என்பதற்காகக் அதற்குண்டான எல்லா வாசல்களையும் தன் வாழ்நாளிலேயே
அடைத்துவிட்டுச் சென்றார்.
காலில் விழத் தடை
கைஸ் இப்னு ஸஅத் என்றொரு நபித்தோழர், வெளிநாடு ஒன்றிற்கு
விஜயம்
செய்திருந்தார். தங்களுடைய தலைவருக்கு முன்னால் அந்நாட்டு மக்கள் சிரம் தாழ்த்தி மரியாதை செலுத்துவதைக் கண்டு அவர்
மிகவும் ஆச்சரியப்பட்டார்.
இப்படி கூட மரியாதை செலுத்தலாம் என்றிருந்தால் அதற்கு மிகவும் தகுதியானவர் இறைத்தூதர் மட்டும்தான் என்று அவர்
மனதிற்குள்ளாக நினைத்துக் கொண்டார். ஊர் திரும்பியவுடன் இறைத்தூதரை சந்தித்து தன்னுடைய எண்ணத்தை
வெளிப்படுத்தினார்.
“ஒரு போதும் அவ்வாறு
செய்யலாகாது.
ஒரு வேளை, யாருக்காவது சிரம் தாழ்த்தி ஸஜ்தா செய்யுமாறு நான் ஆணையிடுவதாக
இருந்தால்
பெண்களிடம் தங்கள் கணவர்களுக்கு ஸஜ்தா செய்யுமாறு
ஆணையிடுவேன்!” என்று இறைத்தூதர் கூறினார்.
இன்னோர் அறிவிப்பின் படி, “என்னுடைய அடக்கஸ்தலத்தின் வழியாக நீங்கள் சென்றால் என் கல்லறைக்கு
ஸஜ்தா செய்வீர்களா?
என்று இறைத்தூதர் கேட்டார்கள். இல்லை,
மாட்டோம் என்று அவர் பதிலளித்தார். அப்படியென்றால் இப்போதும் நீங்கள் அவ்வாறு செய்யக்கூடாது ”என்று இறைத்தூதர் கூறினார்கள்.
இன்னுமொரு சம்பவம்
இன்னொரு நபித்தோழர் மஆத் சிரியா நாட்டுக்குச் சென்று திரும்பிய
போது இறைத்தூருக்கு முன்னால் சிரவணக்கம் செய்தார்கள். இறைத்தூதர் திகைப் போடு மஆதே என்ன இது? என்று கேட்டார்கள்.
ரோம தேசத்து மக்கள்
தங்கள் தலைவர்களுக்கும், வழிகாட்டிகளுக்கும்
முன்னால் இவ்வாறு சிரம் தாழ்த்திப் பணிவதை நான் கண்டு வந்துள்ளேன். ஆகையால்,
அது போன்றே தங்களுக்கும் நான் ஸஜ்தா
செய்ய ஆசைப்பட்டேன்
என்று அவர் கூறினார். அதற்கு அண்ணலார் “இறைவனுக்குத் தவிர
வேறு யாருக்கும் ஸஜ்தா செய்யக் கூடாது. அப்படி செய்ய அனுமதி இருந்திருந்தால் தங்களுடைய கணவர்களுக்கு
மனைவிகள் சிரம் பணியட்டும் என்று நான் ஆணையிட்டிருப்பேன்” எனக் கூறினார்கள்.
அவர் தனது மரணப் படுக்கையில் இருக்கும் போதும் மக்களை நோக்கி, “மக்களே ! எனது மரணத்துக்குப் பின் எனது சமாதியை விழா நடக்கும் இடமாக மாற்றி விடாதீர்கள். ஏனெனில் முந்தைய இறைத்தூதர்கள் விஷயத்தில் மக்கள் அவ்வாறு செய்து அவர்களை கடவுள்களாக்கி விட்டது போல் என்னைக் கடவுளாக்கி விடாதீர்கள்” என்று எச்சரித்தார்.
இன்றும் அவரது சமாதி சவுதி அராபியாவில் மதீனா நகரில் உள்ளதை அறிவீர்கள். ஆனால் யாரும் அங்கு சென்று “நபிகள் நாயகமே, எனக்கு இதைக் கொடுங்கள் அல்லது அதைக் கொடுங்கள்” என்று பிரார்த்திப்பதை நீங்கள் பார்க்க முடியாது.
அவரது வாழ்நாளில் கூட அவருக்கு
மரியாதை செய்யும் நிமித்தமாக காலில் விழப் போனவர்களை மட்டுமல்ல, தனக்காக பிறர் எழுந்து நிற்பதைக்
கூட அவர்கள் தடை செய்தார்கள்.
"எவனொருவன்
தனக்காக மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டுமென விரும்புகிறானோ, அவன் தனது இருப்பிடத்தை நரகத்தில் தேடிக்
கொள்ளட்டும்' என்று
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:
அஹ்மத் (ஸஹீஹ்)
---------------------------