இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 22 அக்டோபர், 2016

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2016

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2016 இதழை கீழ்கண்ட இணைப்பிலும் படிக்கலாம் :
https://drive.google.com/file/d/0B3OxgRe6lIusZERhTmVWSzU3Y0E/view?usp=sharing

புதன், 19 அக்டோபர், 2016

அனைவருக்கும் நலம் பயக்கும் ஷரீஅத் சட்டம்

அனைத்து மனிதர்களுக்கும் ஜீவராசிகளுக்கும் அவரவர் உரிமைகளை நியாயமாகப் பங்கிட்டு வழங்கக்கூடிய ஒரு அமைப்பு (system) இருக்குமானால் அங்கு தொழிலாளர் உரிமை, பெண் உரிமை, குழந்தைகள் உரிமை, மிருகங்களின் உரிமை என்று தனித்தனியாகப்  போராடவேண்டிய அவசியம் எழுவதில்லை

ஒரு சமூகம் என்றால் அங்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் இளைஞர் எனவும்  தொழிலாளிகள், விவசாயிகள், வணிகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தொழில் முனைவோர் இன்னும் இதுபோன்ற பலரும் இருப்பார்கள்அங்கு பற்பல மொழிகள், நிறங்கள், இனங்கள், மதங்கள் மற்றும் கொள்கைகளைக் கொண்டவர்களும் இருப்பார்கள் 
அப்படிப்பட்ட பலர் கலந்து வாழும் சமூகத்தில் நல்லிணக்கம் உருவாக வேண்டுமானால் மனித உறவுகள் வலுப்படவேண்டும். அத்துடன் சக மனிதர்களின் உரிமைகள் மதிக்கப்படவும் மீட்கப்படவும் வழங்கப்படவும் வேண்டும். மனித உரிமை மீறல்கள் கட்டுப்படுத்தப்படவும் வேண்டும். மட்டுமல்ல, இங்கு நம்மோடு வாழும் எண்ணற்ற ஜீவராசிகளுக்கும் அவற்றுக்கே உரிய உரிமைகள் இருப்பதை நாம் மறுக்க முடியாது. அவற்றை தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரமும் கிடையாது என்பதே உண்மை!
இவை அனைத்தின் உரிமைகளும் நியாயமான முறையில் பங்கீடு செய்யப்பட வேண்டுமானால் அதற்குரிய நுண்ணறிவும் அதிகாரமும் தகுதியும் இவ்வுலகைப் படைத்தவனும் இதன் சொந்தக்காரனுமான இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு என்பதை பகுத்தறிவு கொண்டு ஆராயும் எவரும் நிச்சயமாகக் கண்டுகொள்ள இயலும்.

அந்த இறைவன் தொகுத்து வழங்கும் வாழ்வியல் திட்டமே இஸ்லாம். இவை ஏட்டளவில் இல்லாமல்  பேச்சளவில் நில்லாமல் இந்த வாழ்வியலை வாழ்க்கை நெறியாக ஏற்ற அனைவரிடமும் நடைமுறைக்குக் கொண்டுவருகிறது இஸ்லாம்.

திருக்குர்ஆனில் இறைவன் இதற்கான அடிப்படையை இவ்வாறு கற்பிக்கிறான்:
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
அதாவது அனைத்து மனிதகுலமும் ஆதித் தந்தை மற்றும் ஆதித் தாயின் சந்ததிகளே, நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்பதையும் நம் அனைவருக்கும் ஒரே இறைவனே என்பதையும் அடிப்படையாக வலியுறுத்தி  உலகளாவிய சகோதரத்தையும் சமத்துவத்தையும் நிறுவுகிறது திருக்குர்ஆன்.. தொடர்ந்து நாம் அனைவரும் அந்த இறைவனின் பரிபாலனத்திலும் கண்காணிப்பிலும் உள்ளோம் என்பதை உணர்த்தி நம் செயல்களுக்காக இறைவனால் மறுமை வாழ்வில் விசாரிக்கப்பட உள்ளோம் என்றும் எச்சரிக்கின்றது இந்த இறைவசனம். அதாவது இறைகட்டளைகளைப் பேணி வாழ்வோருக்கு சொர்க்கமும் பேணாதவர்களுக்கு நரகமும் வாய்க்க உள்ளன என்ற உண்மையையும் உள்ளடக்கி நிற்கிறது இவ்வசனம்.

ஷரீஅத் என்னும் இறைச் சட்டம்

ஆக அந்த இறைவன் எவற்றை நமக்கு நல்லது என்று பரிந்துரை செய்கிறானோ அவற்றை ஏற்பதும் எவற்றை நமக்குத் தீமை என்று சொல்லி அவற்றை செயயாதே என்று சொல்லி நம்மைத் தடுக்கிறானோ அவற்றிலிருந்து தவிர்ந்து கொள்வதும்தான் நமது இம்மைக்கும் மறுமை வாழ்வுக்கும் நன்மை பயப்பது. அந்த அடிப்படையில் இறைவன் நமக்கு தொகுத்து வழங்கும் சட்டங்களுக்கே இறை சட்டங்கள் அல்லது ஷரீஅத் என்று வழங்கப்படும்.

இறைவனின் வேதம் மற்றும் அவனது தூதரின் முன்மாதிரி செயல்முறை விளக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்படுவதே ஷரீஅத்.
ஷரீஅத்தின் நோக்கம் என்ன
  1. மனித வாழ்வில் நன்மைகளை - அதாவது மனித குலத்துக்கு தொன்று தொட்டு எவையெல்லாம் நன்மையானவையாகநலம் பயப்பவையாக இருந்து வந்துள்ளதோ அந்த நன்மைகள்சிறப்புகள்வளங்கள்நலங்கள் எல்லாவற்றையும் -  நிலை நிறுத்துவது
  2. மனித வாழ்விலிருந்து தீமைகளை – அதாவது  மனித குலத்துக்கு  தொன்றுதொட்டு எவையெல்லாம் தீமையானவையாகதீங்கிழைப்பவையாகக் இருந்து வந்துள்ளதோ அந்தத் தீமைகள்அவலங்கள்அழுக்குகள்கசடுகள் எல்லாவற்றையும் -அகற்றித் தூய்மைப்படுத்துவது.
ஷரீஅத் அளிக்கின்ற வரையறைகளும் சட்டங்களும் நமது தனிப்பட்ட வாழ்வையும்குடும்ப வாழ்வையும் வாழ்வின் எல்லாத் துறைகளையும் தழுவி இருக்கின்றன.
 வணக்கங்கள்தனிநபர் நடத்தைஒழுக்கம்பழக்க வழக்கம்நடையுடை பாவனை,குடும்ப வாழ்வுஉண்ணுதல்பருகுதல்சமூகத் தொடர்புகள்பொருளாதார நடைமுறைகள்,  குடிமக்களின் உரிமைகள்,  நீதித்துறை, அரசியல் என எல்லாத் துறைகளுக்கும் நெறிமுறைகளை வகுத்துத் தருகிறது ஷரீஅத்.

ஷரீஅத் தொடாத வாழ்வியல் துறையே இல்லை எனலாம். எல்லாத் துறைகளுக்குமே எது நன்மையானதுஎது தீமையானது என்பதையும்எது இலாபத்தை தரக் கூடியதுஎது இழப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதையும்எது தூய்மையானது எது தூய்மையற்றது என்பதையும் ஷரீஅத் தெள்ளத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் கோடிட்டுக் காட்டி விளக்கி இருக்கிறது. ஒரு தூய்மையான வாழ்வுக்கான வரைபடத்தை அது நமக்குத் தருகிறது.

இன்று நம் நாட்டை அலைக்கழிக்கும் சட்டங்கள் மனிதர்களால்  இயற்றப்பட்டவையும் பலமுறை திருத்தப்பட்டவையும் ஆகும். ஆனால் இறைவன் வழங்கும் சட்டங்கள் தொலைநோக்குள்ளவையும் மனிதகுலத்தின் அனைத்து அங்கங்களுக்கு மட்டுமல்ல அனைத்துப் படைப்பினங்களுக்கும் பொருத்தமானவையும் ஆகும். அவை நுண்ணறிவாளனும் நீதிமானுமான இறைவனால் வழங்கப்படும் சட்டங்கள் ஆகும்.

ஷரீஅத் நடைமுறைக்கு வந்தால் என்னாகும்?
உதாரணமாக இறைசட்டங்கள் நடைமுறைக்கு வந்தால்....
§  = சுரண்டலுக்கும் பதுக்கலுக்கும் இலஞ்சம் ஊழல் போன்றவற்றுக்கும் வாய்ப்பு அளிக்காத பொருளாதார திட்டங்கள் நடைமுறைக்கு வரும். நாட்டின் செல்வம் செல்வந்தர்களுக்கு இடையில் மட்டுமல்லாமல் அனைவரிடையேயும் புழங்கும் வண்ணம் பொருளாதாரம் சீரமைக்கப்படும்.

§  = செல்வந்தர்களிடம் நீதமான முறையில் ஜகாத்(ஏழைவரி) தவறாமல் வசூலிக்கப்படும். அது ஏழைகளைத் தேடிக் கண்டறிந்து அவர்களுக்கே விநியோகம் செய்யப்படும். இன்று நாட்டில் நிலவிலுள்ள 40% வருமான வரி விதிப்பின் விளைவாக உண்டாகும் கருப்புப்பணம், சுவிஸ் வங்கிகளில் பதுக்குதல் போன்றவை ஒழிந்து உள்நாட்டிலேயே அந்த பணம் புழங்க வழிவகை உண்டாகும். (செல்வந்தர்கள் இறைப் பொருத்ததிற்காக தானாகவே முன்வந்து ஜகாத்தை வழங்குவார்கள் என்பது வேறு விஷயம்)

§  .= வட்டியில்லா பொருளாதாரம் நடைமுறைக்கு வரும். வெற்றுப்பணம் குட்டிபோடுவதும் வங்கிகள் வெற்றுக்காகிதங்களை புழக்கத்தில் விட்டு லாபம் சம்பாதிப்பதும் நிற்கும். அதனால் பணத்துக்கு உண்மையான மதிப்பு உண்டாகி, பணவீக்கம், ஊக வாணிபம், மோசடிகள் ஒழிக்கப்படும். பணக்காரர்களை மேலும் பெரிய பணமுதலைகளாகவும் ஏழைகளை பரம ஏழைகளாகவும் மாற்றும் இன்றைய பொருளாதார அமைப்பு மாறி முனைவோர் அனைவருக்கும் தக்க வாய்ப்பளிக்கும் திட்டங்கள் அமுலுக்கு வரும்.
மேற்கூறப்பட்ட விடயங்கள் நடைமுறைக்கு வந்து விட்டாலே நாட்டின் வறுமை ஒழிந்து நாட்டின் பொருளாதாரம் சீரடைந்து விடும் என்பதை சிந்திப்போர் அறியலாம்.

§ =  நிலச்சுவான்தார்கள் தமது சொத்துக்களை முடக்கியபடி இருக்க அனுமதிக்கப் படாது. ஒரு நிலம் மூன்றுவருடத்திற்கு மேல் தரிசாக கிடக்க அனுமதிக்காது. குத்தகை முறை தடை செய்யப்படும்.  அவ்வாறு இருக்குமாயின்  அரசு அதனை  உள்வாங்கி பிரித்துக் கொடுக்கும்.

§  = சமூக நீதி நிலைநிறுத்தப்பட்டு மதம், ஜாதி, மொழி, இடம் அடிப்படையிலான பாகுபாடுகள் இல்லாமல்  மக்கள் எல்லாருக்கும் சமமான வேலை வாய்ப்பும்,தொழில் மற்றும் வணிக வாய்ப்பும்கல்வி உரிமையும் வழங்கப்படும். சட்டங்கள் மூலம் குறிப்பிட்ட பிரிவினரின் நலன்களை மட்டும் உறுதிப்படுத்தும் நிலை மாறி மக்கள் எல்லாருக்கும் எல்லாவித உரிமைகளும் வாய்ப்புகளும் பாரபட்சமின்றி வழங்கப்படும்.

§  = சமூகத்தில்ஏழைகள்முதியவர்கள்தேவையுள்ளவர்கள்அனாதைகள்விதவைகள்,நாதியற்றவர்கள் போன்ற நலிவுற்ற மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக பைத்துல்மால் - (அரசுக் கருவூலம்) அமைப்பு திறம்படச் செயல்படும். பஞ்சம், பட்டினி, இயற்க்கைச் சீற்றங்கள் போன்ற ஆபத்தான சூழலில் அனைத்து மாநிலங்களின் வளங்களும் உரிய முறையில் அதிகாரப்பூர்வமாக திருப்பப்படும்.

§  = பண்புள்ள குடிமக்களை உருவாக்க பயனுள்ள கல்வியும் ஆளுமையை வளர்க்கத் தேவையான பயிற்சிகளும் இளம் பருவத்தில் இருந்தே புகட்டப்படும். நன்மை - தீமை நியாயம் - அநியாயம் போன்றவை பற்றிய விழிப்புணர்வு கற்கும் கல்வியோடு இணைந்து ஊட்டப்படுவதால் மாணவர்கள் கற்கும் கல்வி ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படும். அவை அழிவுகளுக்கு பயன்படாது.

§  = கற்பனை பாத்திரங்களின் பெயராலும் மதங்களின் பெயராலும் நாட்டுவளங்களும் அரசு இயந்திரங்களும் வீணடிக்கப்படுவதும் மக்கள் அச்சுறுத்தப்படுவதும் முடிவுக்கு வரும்.

§  = தொழிலாளர்கள், விவசாயிகள் போன்றோருக்கு உரிய கூலி முறையாக தாமதமின்றி கொடுக்கப்படும். பொதுவாக இதுபோன்ற மனித உரிமைகள் அனைத்தும் முறைப்படி பேணப்படும். வரம்பு மீறல்கள் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

§  = குடும்ப உறவுகளையும்  அமைதியையும் சீர்கெடுக்கும் விபச்சாரம் மது போதைப்பொருட்கள், சூதாட்டம்  போன்றவை தடை செய்யப்படும்.

§  = கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற வன்குற்றங்களில் ஈடுபடுவோரை திருத்த முதற்கண் உரிய சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்கப்பாலும் மீறுவோர் கடுமையான தண்டனைகளுக்கு ஆளாக்கப்படுவார்கள்.

§  = பெண் இனத்தைப் பாதுகாக்க அவர்களுடைய கல்வி பெறும் உரிமை, மணமகனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, மஹர் என்னும் மணக்கொடை பெறும் உரிமை, சொத்துரிமை, போன்றவை சட்டரீதியாக வலுவாக்கப்படும். வரதட்சணை சட்டவிரோதமாகும்.

§ =  சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் அவதூறு மற்றும் வதந்திகளைப் பரப்பும் மனிதர்களும் ஊடகங்களும் தங்கள் குற்றங்களுக்கான தண்டனைகளில் இருந்து தப்ப முடியாது. ஊர்ஜிதம் செய்யாமல் பரபரப்புக்காக பரப்பபடும்  செய்திகளுக்கு பரப்பியவர்கள் மீது சட்டம் பாயும்.

இன்னும் இவை போன்ற பல புரட்சிகளும் அங்கு உடலெடுக்கும். ஷரீஅத் என்பது நீதிநியாயம் மட்டுமல்ல அதை நடைமுறைப்படுத்தும் போது நாட்டின் செழிப்புக்கான  வழிகள் அங்கு தானாகவே திறக்கின்றன. சட்டம் ஆளும் என்பதை விட மனித மனங்களின் ஒருமைப்பாடும் ஈடுபாடும் நாட்டு மக்களின் பொறுப்புணர்வும் அங்கு ஆட்சி செய்யும் என்பதே உண்மை! 
------------------------------------- 

அமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் மின் நூல்

புதன், 12 அக்டோபர், 2016

அழியாத தியாக வரலாற்றுச் சுவடுகள்


அழியாத தியாக வரலாற்றுச் சுவடுகள்
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் மக்காவில் வேரூன்றிய இஸ்லாம் என்ற இறைமார்க்கம் இன்று உலகின் கால்வாசிக்கும் அதிகமானோரை ஈர்த்து நிற்கிறது. தன் வெற்றிப்பயணத்தை பற்பல எதிர்ப்புகளுக்கு இடையேயும் அயராது தொடர்கிறது. தனது தெளிவான கடவுள் கொள்கை மூலமாகவும் அது வலியுறுத்தும் தனிநபர் நல்லொழுக்கம், மனித சமத்துவம், சகோதரத்துவம், பெண்ணுரிமைகள், குடும்பக் கட்டமைப்பு, மனித உரிமைகள், சமூகத் தீமைகளுக்கு தீர்வுகள் போன்றவற்றின் மூலமாகவும் உலகெங்கும் பெருவாரியான மக்களை கவர்ந்து வருகிறது. இஸ்லாம் என்ற பேரியக்கத்தில் உலகம் தொடர்ந்து இணைந்து வருகிறது. இந்த எழுச்சியை பரவவிடாமல் தடுக்க பல தந்திரங்கள் அவ்வப்போது கையாளப் பட்டபோதிலும் அது சளைக்காமல் முன்னேறுகிறது.
ஆனால் இம்மார்க்கம் இப்பூமியில் வேரூன்றுவதற்காக தொடக்க காலத்தில் உத்தம நபிகளாரும் அருமை நபித்தோழர்களும் மேற்கொண்ட தியாகங்கள் ஒப்பீடு செய்ய இயலாதவை. அவர்கள் அன்று மக்கா நகரின் மண்ணில் சிந்திய இரத்தமும் வியர்வையும் சதைத்துண்டுகளும் இஸ்லாம் என்ற மார்க்கம் உலகளாவிய நிலையில் வளர்வதற்கு உரமாக அமைந்தன. அவர்களின் தியாக வரலாறுகள் இம்மார்க்கத்தில் தொடர்ந்து இணைந்து வருவோருக்கு மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக நிற்கின்றன.

மக்காவில் தொடங்கிய தியாக வரலாறு
இறைவனின் தூதராக நபிகளார் தேர்வு செய்யப்பட்ட பின் இறைவனின் ஆணையின் பேரில் நபி ஸல்) அவர்கள் மக்கா நகர மக்களுக்கு பகிரங்கமாக இஸ்லாத்தின்பால் அழைப்பை விடுத்தார்கள். நபிகளாரின் பிரச்சாரத்தைக் கேட்டு மக்கள் இந்த இயக்கத்தில் இணைவதைத் தடுக்க அன்றைய ஆதிக்க சக்திகள் பற்பல உத்திகளைக் கையாண்ட போதிலும் அவை தோல்வியைத் தழுவின. தாங்கள் கையாண்ட வழிமுறைகளால் எவ்வித பயனுமில்லை என்று அவர்கள் உணர்ந்தபோது அடுத்த கட்ட நடவடிக்கையாக மாற்று வழியைக் கையாண்டனர். அதாவது, ஒவ்வொரு சமூகத்தலைவரும் எஜமானரும் தன்னுடைய ஆளுமையின் கீழுள்ளவர்கள், அடிமைகள்- இவர்களில் யாராவது இஸ்லாமைத் தழுவினால் அவர்களைத் துன்புறுத்த வேண்டும். அவர்களுக்கு இன்னல்கள் விளைவிக்க வேண்டும் என முடிவு செய்தனர்.
தலைவர்களுடன் அவர்களது எடுபிடிகளும் சேர்ந்துகொண்டு முஸ்லிம்களை வாட்டி வதைத்தனர். குறிப்பாக, சாதாரண எளிய முஸ்லிம்களுக்கு அவர்கள் தந்த நோவினைகளைக் கேட்கும்போதே உள்ளம் கசிந்துருகும். அவற்றை சொல்லி மாளாது.

= அப்பாவி முஸ்லிம்களை பேரீத்தங்கீற்றுப் பாயில் சுருட்டி வைத்து அதற்குக் கீழே புகை மூட்டி மூச்சு திணறடிப்பர்.

= தனது மகன் முஸ்லிமாகி விட்டதை அறிந்த முஸ்அப் இப்னு உமைர் (ரழி) அவர்களின் தாயார் அவருக்கு உணவு, தண்ணீர் கொடுக்காமல் வீட்டிலிருந்து விரட்டிவிட்டார்.

= பிலால் (ரழி) அவர்கள் உமய்யா இப்னு கலஃபுடைய அடிமையாக இருந்தார்கள். உமையா அவர்களது கழுத்தில் கயிற்றைக் கட்டி சிறுவர்களிடம் கொடுப்பான். சிறுவர்கள் அவரை மக்காவின் கரடு முரடான மலைப் பாதைகளில் இழுத்துச் செல்வார்கள். கயிற்றின் அடையாளம் அவர்களது கழுத்தில் பதிந்துவிடும். அவர்கள் “அஹத்! அஹத்!“” என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். சில வேளைகளில் உமையா பிலாலை மிக இறுக்கமாகக் கட்டி தடியால் கடுமையாகத் தாக்குவான். பிறகு சூரிய வெப்பத்திலும் போடுவான். உணவளிக்காமல் பசியால் துடிக்க வைப்பான். சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் பாலைவன மணலில் கிடத்தி அவர்களது நெஞ்சின்மீது பாறாங்கல்லைத் தூக்கி வைப்பான்.

= அம்மார் இப்னு யாஸிர் (ரழி), அவர்களது தகப்பனார் யாஸிர், தாயார் ஸுமய்யா ஆகிய மூவரும் மக்ஜூம் கிளையைச் சேர்ந்த அபூ ஹுதைஃபா இப்னு முகீரா என்பவனின் அடிமைகளாக இருந்தார்கள். மூவரும் இஸ்லாமைத் தழுவினர். இம்மூவரையும் அபூஜஹ்ல் தலைமையில் ஒரு கூட்டம் “அப்தஹ்’ என்ற இடத்துக்கு அழைத்துச் சென்று மதிய வேளையில் சுடு மணலில் கிடத்தி கடுமையாக சித்திரவதை செய்தனர்.

= நிராகரிப்பவர்களின் வேதனையாலேயே யாஸிர் (ரழி)  இறந்துவிட்டார்கள்.  வயது முதிர்ந்து இயலாதவராக இருந்த அம்மான் தாயாரான சுமைய்யா பின்த் கய்யாத் (ரழி) அவர்களை அபூ ஜஹ்ல் அவர்களது பெண்ணுறுப்பில் ஈட்டியால் குத்திக் கொலை செய்தான். இவரே இஸ்லாமிற்காக உயிர் நீத்த முதல் பெண்மணியாவார்.

= அவர்களது மகனாரான அம்மாரை பாலைவனச் சுடுமணலில் கிடத்தி நெஞ்சின் மீது பாறாங்கல்லை வைத்தும், நினைவிழக்கும் வரை தண்ணீல் மூழ்கடித்தும் சித்திரவதை செய்தனர்.

= அஃப்லஹ் அபூ ஃபுகைஹா (ரழி) அவர்கள் அப்து தார் கிளையைச் சார்ந்த ஒருவருடைய அடிமையாக இருந்தார். இவரது இரு கால்களையும் சங்கிலியால் பிணைத்து, ஆடைகளைக் கழற்றிவிட்டு சுடுமணலில் குப்புறக் கிடத்தி அசையாமலிருக்க பெரும் பாறையை முதுகின் மீது வைத்து, சுய நினைவை இழக்கும்வரை அவரை அதே நிலையில் விட்டுவிடுவார்கள்.

= கப்பாப் இப்னு அரத் (ரழி) அவர்கள் உம்மு அன்மார் என்ற பெண்ணின் அடிமையாகவும், கொல்லராகவும் இருந்தார்கள். அவர் இஸ்லாமைத் தழுவியதை அறிந்த எஜமானி பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்பால் அவர்களது தலையிலும் முதுகிலும் சூடிட்டு “முஹம்மதின் மார்க்கத்தை விட்டுவிடு” என்று கூறுவாள். ஆனால் இவ்வாறான வேதனைகளால் அவர்களது இறைநம்பிக்கையும் மன உறுதியுமே அதிகரித்தது. உம்மு அன்மார் மட்டுமின்றி ஏனைய சத்தியமறுப்பாளர்களும் அவரது முடியைப் பிடித்திழுப்பார்கள்; கழுத்தை நெறிப்பார்கள். நெருப்புக் கங்குகளின் மீது அவரைப் படுக்க வைப்பார்கள். அந்த நெருப்பு அவரது உடலைப் பொசுக்க, அப்போது இடுப்பிலிருந்து கொழுப்பு உருகி ஓடி, நெருப்பை அணைத்து விடும்.

= உம்மு உபைஸ் (ரழி) என்ற பெண்மணி அஸ்வத் இப்னு அப்து யகூஸ் என்பவனின் அடிமையாக இருந்தார். இவன் நபி (ஸல்) அவர்களின் கொடும் விரோதியாகவும் நபியவர்களை பரிகசிப்பவனாகவும் இருந்தான். அவன் உம்மு உபைஸை கொயூரமாக வேதனை செய்தான். (இஸாபா)
இஸ்லாமைத் தழுவிய எவரையும் அவர்கள் துன்புறுத்தாமல் விட்டதில்லை.எளிய முஸ்லிம்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்காகப் பழிவாங்கவும் எவருமில்லை என்பதால் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பது சத்தியமறுப்பாளர்களுக்கு மிக எளிதாக இருந்தது. அடிமைகளாக இருந்தவர்களை அவர்களது எஜமானர்களும் அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் கொடுமைப் படுத்தினர். இஸ்லாமைத் தழுவியவர் செல்வமும் செல்வாக்கும் உடையவராக இருந்தால், அவர்களுக்கு அவர்களது கூட்டத்தார் பாதுகாவலாக இருந்தனர். சில வேளைகளில் குரோதத்தின் காரணமாக அவர்களது கூட்டத்தினரே அவர்களை கொடுமை செய்தனர்.

வெள்ளி, 7 அக்டோபர், 2016

எல்லோருக்கும் பொருந்தும் வேதம்.

அல்குர்ஆன்!
இறைவன் தன்னைப்பற்றி அறிமுகப்படுத்தும் வேதம் !
இன்றுவரை அதுவிட்டுள்ள சவாலை முறியடிக்க முடியாத மனிதகுலம்!
உலகில் மனிதன் வாழ்வதற்கான அழகிய வழிகாட்டி!
நபி (ஸல்) அவர்களை இறைத்தூதராக உறுதிப்படுத்தும் இறைசான்று!
இன்றைய மனித சட்டங்களுக்கு சவால்விடும் இறைசட்டப்புத்தகம்!
முன்னய வேதங்களை உறுதிப்படுத்தும் இறைவேதம்!
இன்று உம்மத்தை இணைக்கும் பாலம்!
“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139)
'நாமே இந்த இந்த வேதத்தை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.'' - திருக்குர்ஆன் 15:9.
எல்லா காலத்திற்கும் ஏற்ற வேதம்
எல்லோருக்கும், எல்லா இடத்துக்கும் பொருந்தும் வகையில் அப்படி ஒரு வேதம் இருக்கிறதா என்று கேட்கும் மக்களுக்கு இதோ ஒரு நற்செய்தி!
ஆம்...! ஒரு வேதம் இருக்கிறது. அது இறைவனால் அருளப்பட்ட வேதம்தான் என்பதற்கு எல்லா வகையான சான்றுகளோடும் இருக்கிறது.அதுதான் சுமார் 1430 வருடங்களுக்கு முன்னர் இறைவனால் அருளப்பட்ட வேதமான திருக்குர்ஆன்.
"1430 வருடங்களுக்கு முன்னர் உள்ள வேதமாம்! இதுவரை ஒரு எழுத்து கூட கூட்டாமல் குறைக்காமல் அப்படியே திருத்தப்படாமல் உள்ளதாம்.!". நம்ப முடிகிறதா என்று நீங்கள் கேட்கலாம். இனி வரும் செய்திகளை முழுமையாகப் படித்து முடியுங்கள். இக்கேள்விக்கான பதில் தானாகவே கிடைக்கும்.
காலத்தால் மாறாத வேதம்
நாமே இந்த இந்த வேதத்தை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம். (திருக்குர்ஆன் 15:9)
திருக்குர்ஆனை அருளிய இறைவன் அத்துடன் நின்றுவிடாமல், அதைத் தானே பாதுகாப்பதாகவும் உறுதியளிக்கிறார். இறைப்பாதுகாப்பு எப்படிப்பட்டது என்பதை இனிவரும் செய்திகளை வைத்து முடிவு செய்து கொள்ளுங்கள்.
இது (திருக்குர்ஆன்) மனித குலத்துக்குச் சென்றடைய வேண்டியதாகும்.
இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படவும், வணக்கத்திற்கு உரியவன் ஒரே ஒருவனே இருக்கிறான் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், அறிவுடையோர் சிந்திப்பதற்காகவும் (இது அருளப்பட்டுள்ளது.) (திருக்குர்ஆன் 14:52)
மனித வாழ்வுக்குத் தேவையானவை அனைத்தும்
இது மனித குலத்துக்குரிய வேதம் என்பது சரி. அப்படியானால் அதில் மனித வாழ்வுக்குத் தேவையானவை என்னென்ன சொல்லப்படிருக்கும் என்று அறிய ஆவலாய் இருப்பீர்கள்.?
இதோ ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
மனிதன், காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை, எப்படியும் வாழலாம் என்று இல்லாமல், இப்படித்தான் வாழ வேண்டும் என்று திருக்குர்ஆனும் அதற்கு விளக்கமாக உள்ள இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறும் வலியுறுத்துகின்றன.
"அந்நாளில் ( மறு உலக நீதி விசாரணை நாளில் உங்களுக்கு வழங்கப்பட்ட) அருட்கொடைகள் பற்றி விசாரிக்கப்படுவீர்கள". (திருக்குர்ஆன் 102:8)
மேற்சொன்ன வசனம், மனிதன் என்ற வகையில் நமக்கு இறைவன் அளித்துள்ள உயிர், அறிவு, நேரம், பொருள் என அனைத்தைப் பற்றியும் இறந்த பின் எழுப்பப்பட்டு மறு உலகில் விசாரணை செய்து சரியான தீர்ப்பை கடவுள் வழங்குவார் என்பதைச் சொல்கிறது.
நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக் காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக் காகவும், திக்கற்றோருக்காகவும் (செலவிட வேண்டும்)ஸ (திருக்குர்ஆன் 2:215)
சுயநலத்தை மட்டுமே கவனத்தில் கொள்ளாமல் பொதுநலத்தையும் பேண வேண்டும் என்பதை மேற்சொன்ன வசனம் அழகாக வலியுறுத்துகிறது.
நாம் நாள்தோறும் வகைவகையாக உணவுகளை உட்கொள்கிறோம். எவையெல்லாம் உண்ணவேண்டும் எவையெல்லாம் உண்ணக் கூடாது என்று கூட ஒரு வேதம் கூறுமா?
ஆம், கூறுகிறது... இதோ பாருங்கள்:
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுத்துப்பலியிட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளனஸ (திருக்குர்ஆன் 5:3)
இதே வசனத்தின் தொடர்ச்சியாக இன்னும் பலவற்றையும் மனிதன் சாப்பிடக் கூடாது என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.
என்ன ஆச்சரியம்! இன்றைய நவீன அறிவியல் கூட நீண்ட ஆய்வுக்குப் பிறகு இந்த வசனம் சொல்வதைப் போன்று அப்படியே கூறுகிறது.
மதுவும் சூதும்:-
மதுவை நாடு முழுவதும் ஒழிக்கவேண்டும்" என்று கூறினார் தேசத்தந்தை காந்தியடிகள். ஆனால் அவர் பிறந்த குஜராத்திலேயே இன்று மது சில தடைகளுக்கு மத்தியிலும் சர்வ சாதாரணமாகவே பயன்படுத்தப்படுகிறது.
ஆனால், இஸ்லாம் தனது அருள்மறை குர்ஆன் மூலம் மதுவை முற்றிலுமாகத் தடை செய்கின்றது.
மது மற்றும் சூதாட்டம் பற்றி (தூதரே!) உம்மிடம் கேட்கின்றனர். அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு தான் இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது என்று நீர் கூறுவீராகஸ. (திருக்குர்ஆன் 2:219)
இன்று மனிதன் பெருள் ஈட்டுவதற்கு ஒரு வரைமுறையே கிடையாதோ என்று நினைக்கும் அளவுக்கு எண்ணற்ற குறுக்கு வழிகள் கையாளப் படுகின்றன. தவறுகளைச் செய்யாத மனிதர்கள் கூட எப்படியும் சம்பாதிக்கலாம் என்று மனம் போன போக்கில், மனித ரத்தத்தை உறிஞ்சும் வட்டியை வியாபாரமாகக் கொண்டு பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால், இறைவேதம் திருக்குர்ஆனோ வட்டியை கடுமையாகத் தடை செய்கிறது.
உடலை அழிக்கும் விபச்சாரம்:--
விபச்சாரம் மனித அழிக்கும் கொடிய செயல் எனக் கூறுகிறது இஸ்லாம்.
இதனால் தான் "விபச்சாரத்தின் பக்கமே நெருங்காதீர்கள்" என குர்ஆன் (17:32) மனித சமுதாயத்திற்குக் கட்டளையிடுகிறது.
இன்று உலகமக்களின் அழிவுக்கும் மேலைநாடுகளின் ஒழுக்க வீழ்ச்சிக்கும் இந்த பாலியல் குற்றங்களே காரணமாகும் என உலகின் புள்ளி விவரங்கள் பட்டியலிட்டுக் கூறுகின்றன.
வட்டி:--
வட்டியை உண்போர் (மறைமை நாளில்) சாத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். வியாபாரம் வட்டியைப் போன்றதே என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துவிட்டான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை தமக்கு வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (திருக்குர்ஆன் 2:275)
இன்று உலகில் லஞ்சம் வாங்குவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
லஞ்சம்:-
உலக நாடுகளில் அதிகமாக லஞ்சம் வாங்குவோர் கணக்கிடப்பட்டு சமீபத்தில் புள்ளிவிபரமாக ஊடகங்களில் வெளியிடப்பட்டது. அப்பட்டியலில்; நம் நாடு கூட இடம் பெற்றுள்ளது. இந்தக் கேவலமான லஞ்சத்தை ஒழிப்பதற்காக அந்தந்த அரசாங்கங்களும் பல்வேறு சட்டங்களை இயற்றி, பலதரப்பட்ட முயற்சிகளையும் மேற்கொள்ளத்தான் செய்கின்றன. எனினும், லஞ்சம் சிறிது கூட குறைந்த பாடில்லை.
உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! மக்களின் பொருட்களில் ஒரு பகுதியை தெரிந்துகொண்டே பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள். (திருக்குர்ஆன் 2:187)
மேற்சொன்ன படிப்பினைகளையெல்லாம் சிறிதும் வழுவாது தன் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தும் ஒருவன், இதன் காரணமாக சிரமப்படும்போது, அவனைப் பொறுமையுடனும், சகிப்புத்தன்மையுடனும் இருக்கச் சொல்கிறது இஸ்லாம். விரக்தியடைந்து தற்கொலைப் பக்கம் கண்டிப்பாகப் போகக்கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.
ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக்கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராகஸ! (திருக்குர்ஆன் 2:155)ஸஉங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்ஸ.(திருக்குர்ஆன் 4:29) -
பெற்றோரைப்பேணல்:--
இனி, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நம்மைப் பெற்று, பேணி வளர்த்து, ஆளாக்கும் பெற்றோர் இடத்திலும், மற்றவர்களிடத்திலும் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:
அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தொலைவாக உள்ள அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், திக்கற்றோருக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (திருக்குர்ஆன் 4:36).
பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள் என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்துவிட்டால் அவ்விருவரையும் நோக்கி சீஸ என்று கூட கூறாதீர்கள்! அவ்விருவரையும் விரட்டாதீர்கள்! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுங்கள்! (திருக்குர்ஆன் 17:23)
ஏழையின் துயர் துடைத்தல்:---
தர்மம் என்பது அவரவர் விருப்பத்துக்கேற்ப செய்யப்படும் ஒன்றாகவே உலகத்தில் கருதப்படுகிறது. உலகின் அனைத்துநாடுகளிலும் எதற்கெல்லாமோ வரி வசூலிக்கப்டுகிறது,
ஆனால், ஏழைகளில் துயரை நிரந்தரமாகத் துடைப்பதற்கென்றே ஏழைவரி என்ற பெயரில், வசதியுடையோரிடமிருந்து வரி வசூலித்துக் கொடுக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம் தான்.
இது பற்றி இறைவேதம் திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:--
(தூதரே!) அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக! அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி, பரிசுத்தமாக்குவீராக! (திருக்குர்ஆன் 9:103)
இப்படி வசூலிக்கப்படும் ஏழைவரி யார் யாருக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதையும் திருக்குர்ஆன் கூறுகிறது.
தர்மங்கள், யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்;பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், திக்கற்றோருக்கும் உரியனவாகும். இது அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவன். ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 9:60)
உயிர்களையும் உடைமைகளையும் காத்தல்:--
மனித உயிர்கள் உயர்வானவை. உயர்வாக மதிக்கப்படவேண்டும். ஆனால், இன்று உலகில் எங்கு பார்த்தாலும், சாதாரண சிறு கொலைகளிலிருந்து மிகப்பெரும் இனப்படுகொலைகள் வரை சிறிதும் தயக்கமின்றி கொலைபாதகம் நிகழ்த்தப்படுகிறது.
இக்கொலைகளைச் செய்வோர் சாரதாரண மனிதர்களாக இருந்தால், சில காலங்களை சிறையில் கழிக்கின்றனர். அங்கு அவர்களுக்கு உணவு, உறைவிடம் மருத்துவம் என அனைத்து வசதிகளும் கேட்டவுடன் கிடைக்கிறது. இதே கொலைகளை சற்று செல்வாக்கு மிக்கவர் செய்தால் அவருக்கு அதை விட இலகுவான தண்டனைகள் கொடுக்கப்படுகின்றன. அல்லது கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றனர். இது தான் பெரும்பாலும் செய்யப்படும் நடைமுறை.
இது போன்றவற்றால்;, பாதிக்கப்ட்டவனின் மனக்குமுறல் சிறிதும் துடைக்கப்படாது என்பதே உலகறிந்த உண்மை. ஆனால் இஸ்லாம் திருக்குர்ஆன் மூலம்,ஸஒருவர் மற்றொருவரைக் கொலை செய்தால், அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார். ஒரு மனிதரை அவர் வாழவைத்தால், எல்லா மனிதரையும் வாழ வைத்தவர் போலாவார்ஸ (திருக்குர்ஆன் 5:32) இவ்வாறு கூறுகிறது
குற்றவியல் தண்டனைகள்:---
அத்தோடு நிறுத்திவிடாமல் கொலைக்கு மரணதண்டனை விதிக்க கட்டளை இடுகிறது. இன்னபிற பெரும்பாவங்களுக்கும் கூட எல்லோருக்கும் எக்காலத்திலும் பொருந்தும் அற்புத சட்டங்களை முன்வைக்கிறது. விரிவாக அறிந்து கொள்ள வேண்டுமானால், திருக்குர்ஆனை விரிவாகப் புரட்டிப் பார்த்துக்கொள்ளலாம்.
அறிவியல் உண்மைகள்:--
வாழ்க்கைக்கு வழிகாட்டி..என்பது . சரி. இன்றைய அறிவியல் உண்மைகளை உறுதிப் படுத்தும் சான்றுகள் ஏதேனும திருக்குர்ஆனில் உள்ளனவா என நீங்கள் கேட்டால் அதற்கு பலப்பல சான்றுகளைக் கூறமுடியும். எனினும் விரிவை அஞ்சி சில சான்று களை மட்டும் தருகிறோம்..
உலகம் உருண்டை என்று சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆய்வு செய்து சொன்னவர் விஞ்ஞானி கலிலியோ! அவருக்கு அன்றைய மக்கள் கொடுத்த பரிசு என்ன தெரியுமா? மரண தண்டனை!.
ஆனால், அதையே கலிலியோவுக்கும் முன்னரே 1430 வருடங்களுக்கு முன் திருக்குர்ஆன் எவ்வளவு அழகாகக் கூறுகிறது பாருங்கள்:
(அவனே) இரண்டு கிழக்குத் திசைகளுக்கும் இறைவன். இரண்டு மேற்குத் திசைகளுக்கும் இறைவன். (திருக்குர்ஆன் 55:17)
பூமி தட்டையாக இருந்தால் ஒரு இடத்தில் மட்டும் உதித்து மறுஇடத்தில் மறைந்து விடும். பூமி உருண்டையாக இருந்தால் தான் பூமியின் ஒவ்வொரு பகுதியிலும்," உதிக்கும் பல திசைகளும் மறையும் பல திசைகளும்" உருவாகின்றன. (இந்தியா,அமெரிக்கா) "ஒன்றுக்கு மேற்பட்ட உதிக்கும் திசைகள், மறையும் திசைகள்" என்ற சொல் மூலம் பூமி உருண்டை வடிவமானது என்ற அறிவியல் உண்மையை இந்த இறைவேதம் குர்ஆன் ஒரு மாபெரும் அறிவியல் விறபன்னரைப் போல் பேசுகிறது.
இது மட்டுமா?
"அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான். அவனே இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்.(குர்ஆன் 39:5)
இதில் "யுகவ்விரு" எனப்பயன் படுத்தப்பட்டுள்ள சொல் "சுற்றுதல்" எனப் போருள் படுகிறது. அதாவது தலையில் சுற்றப்படும் தலைப்பாகைக்கு நிகரான ஒருசெயல்ாகும் இது. பூமி உருண்டையாக இருக்கும் போது தான் இரவும் பகலும் சுற்றி வரும் செயல் நிகழமுடியும்.
அது மட்டுமல்ல ஒரு படி மேலே சென்று சென்று பூமியின் வடிவத்தையும் தெளிவுபடுத்துவது இன்றைய ஆய்வாளர்களை வியப்பிலாழத்தியுள்ளது.
"பின்னர் அவனே பூமியை விரித்தான் (குர்ஆன்:79:30) கூறுகிறது.
இந்த இறைமறை வசனத்தில் வரும் "தஹாஹா" என்பது தீப்பறவையின் முட்டை வடிவம் என்பதைக் குறிக்கிறது. அதாவது தீப்பறவையின் ஓரப்பகுதி தட்டையாக இருக்கும். எனவே பூமி உருண்டையாகக் கூட இல்லாமல் முட்டை வடிவமாக இருக்கும் எனக்கூறுகிறது.
ஆம் விஞ்ஞானிகள் முழுமையான உருண்டை வடிவமாக இல்லாமல் முட்டைவடிவமானது எனக்கூறுகின்றனர். குர்ஆனின் உவமை விந்தையிலும் விந்தையல்லவா?
இதைப்போன்று விண்ணியியல், புவியியல், மண்ணியல், கடலியல், இயற்பியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், மருத்துவ இயல், உடலின் செல்லியல்,கருவியல போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிருபிக்கப்பட் வஞஞானக் கருத்துகளைக் கூறி உலகையே வியப்பிலாழ்த்துகிறது.
திருக்குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது என்பதை நிரூபிக்கும் மிகப்பெரும் சான்றாகும் இது.
பிற வேதங்கள்:-
இன்று உலகில் வேதங்கள் என்ற பெயரால் கற்பனைகளையும், கனவுகளையும், அறிவிற்கே பொருந்தாத கதைகளையும் கலந்து உலா வரும் பல வேதநூல்களைக் காணமுடிகிறது.
மனிதன் தான் விரும்பியவாறு தன் பொய்யே  கையாலே கலந்து எழுதிவிட்டு அதை இறைவன் அருளியதாக வாதிடுகிறான்.  அவ்வப்போது மனிதர்கள் தாம் விரும்பியதை எல்லாம் எழுதி வைத்துக்கொண்டு, பிற மதத்தவர் இது தான் வேதம் என்று மக்களை நம்பவைத்து, மூட நம்பிக்கைகளையும், சடங்கு சம்பிரதாயங்களையும் சாடி மக்களை எவ்வித அறிவும் இருந்திராத ஒரு கற்காலத்துக்கு அழைத்துச் செல்கின்றனர்., . .
பிற வேதங்களில் கற்பனைக் கதைகள்
இப்படிப்பட்ட வேதங்களில் அறிவியல் சார்ந்த கருத்துக்கள் எங்காவது இடம் பெற்றிருக்குமா என்றால், அதற்கு நேர்மாற்றமான ஜோதிடக் கருத்துக்களும், பேய் பிசாசு, பில்லி, சூனியம் போன்ற கருத்துக்களும் தான் நிறைந்து காணப்படுகின்றன.
இவை இவ்வாறிருக்க, இறைவனால் அருளப்பட்ட வேதங்கள் என்று கூறப்படும் சில வேதங்களோ, இறைவன் அருளிய வேத வசனங்களையெல்லாம் தன் விருப்பத்கேற்ப மாற்றியமைத்து, மக்கள் தங்கள் சுயவிருப்பத்திற்கேற்ப எழுதிவைத்திருப்பதையும் பார்க்க முடிகிறது.. இவற்றிலும், மூடநம்பிக்கைகளுக்கும், அறிவியலுக்கு முரண்படும் கருத்துக்களுக்கும் பஞ்சமே இல்லை.
ஆக, ஆன்மிகம் என்பது வெறுமனே கடவுளை வணங்குவதையும், ஏதோ மனிதனுக்குப் புரியாத ஒரு உலகத்தைப் பற்றி மட்டுமே சொல்லும் வேதங்களையும் கொண்டிருப்பதால் விரக்தியடைந்து போன ஒரு சாரார் "கடவுளே இல்லை" என்று சொல்லும் முடிவுக்கு வந்து நாத்திகர்களாகி விட்டனர்.
இந்த வேதங்களின் போலித்தனத்தின் விளைவாக அவர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் "மதம் ஒரு அபின்" போன்றது என்றே கூறிவிட்டனர்.
இது இறைவனின் வேதம் தான்
அது சரி, திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து வந்த வேதம்தான் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று நீங்கள் கேட்பதற்கு முன்னர் நாமே அதைத் தெளிவு படுத்துகிறோம்.
திருக்குர்ஆன் இறைவேதம்தான் என்பதை நிரூபிக்க எண்ணற்ற சான்றுகளை திருக்குர்ஆனிலிருந்தே காட்ட முடியும. என்றாலும், அவற்றிலிருந்து ஒரே ஒரு சான்றை மட்டும் பார்ப்போம்..
சுமார் 2000 வருடங்களுக்கு முன் எகிப்து நாட்டை கொடுங்கோல் அரசன் ஃபிர்அவ்ன் என்ற இரண்டாம் அலெக்சாண்டர் ஆண்டு வந்தான். அவனால் குடிமக்கள் பட்ட அவலங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அக்காலத்தில் வாழ்ந்த இறைத்தூதர் மூஸாவின் படையை ஃபிர்அவ்ன் தன் படையுடன் துரத்துகிறான். எதிரே கடல் குறுக்கிடுகிறது. தப்பிக்க வழியறியாது நின்ற மூஸாவின் படைகளுக்கு இறைவன் கடலின் குறுக்கே பாதையை ஏற்படுத்திக் கொடுக்கிறார்.மூஸாவும், அவரது படைகளும் அவ்வழியே தப்பிச் செல்வதைப் பார்த்த மன்னன் ஃபிர்அவ்ன் அவனது படைகளுடன் அதே பாதையில் துரத்திச்சென்ற போது, இறைவன் அம்மன்னனை அவனது படையுடன் கடலில் மூழ்கடித்து விடுகிறான்.
ஆனால் அம்மன்னனின் "உடலை மட்டும் பாதுகாப்போம" என்று கூறுகிறான். இச்சம்பவம் 1430 வருடங்களுக்கு முன்பே அருளப்பட்ட திருக்குர்ஆனில் அழகாகச் சொல்லப்பட்டிருப்பதைப் பாருங்கள்.
உனக்குப் பின்வரும் மக்களுக்கு நீ ஒரு சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம் (என்று கூறினோம்) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர். (திருக்குர்ஆன் 10:92)
இதில் ஆச்சரியம் என்னவென்றால், மூழ்கடிக்கப்பட்டது அம்மன்னனும் அவனது படைகளும் தான்! ஆனால் திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மன்னன் ஃபிர்அவ்னின் உடல் மட்டும் இன்று கண்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு, எகிப்து அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது நம்மை வியப்பிலாழ்த்துகிறது. இந்த உடலை உலகப்பயணிகள் அங்கே சென்று கண்கூடாகப் பார்த்துவருகின்றனர்..
இது ஒன்றே போதும் திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு!
கல்வி, பொருளாதாரம். அரசியல் உள்ளிட்ட வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் உள்ள பிரச்சினைகளுக்கும் அழகிய அற்புதத் தீர்வுகளைத் தந்து கொண்டிருக்கிறது திருக்குர்ஆன்.
1430 வருடங்களுக்கு முன்பே இந்த அருள்மறை திருக்குர்ஆன் அருளப்பட்ட போதிலும் இன்று நடப்பவை, இனி நடக்கப்போவது ஆகிய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக உள்ளதால் "என்றும் இவ்வேதம் புதிது" என்பதைச் சொல்வதற்காகத்தான் "வேதம் புதிது" என்று தலைப்பில் குறிப்பிட்டுள்ளோம்.
அவர்கள் இந்த குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் பூட்டப்படடுள்ளனவா? (திருக்குர்ஆன் 47:24)
மேற்கண்ட இறை வசனத்தை உங்கள் சிந்தனைக்கு வைக்கிறோம். இன்னும் பல அரிய செய்திகளை இறைவேதம் திருக்குர்ஆன் தன்னகத்தே பொதிந்துள்ளது. தெளிவான சிந்தனையுடன் அனைத்து மதத்தினரும் இவ்வேதத்தைப் படித்துப்பார்த்தால் இது இறைவனின் வேதம் தான் என்பதை புரிந்து கொள்வார்கள்.
குர்ஆனை படித்துப் பார்க்க உதவுங்கள். அவர்கள் நடுநிலையுடன் ஒரு முடிவுக்கு வருவார்கள்.