புதன், 1 ஏப்ரல், 2026

உலக ஊடகங்களின் நயவஞ்சகம்


உலக ஊடகங்களின் நயவஞ்சகம்

1970-களில் எட்வர்ட் சயீத் என்ற அறிஞர் Orientalism என்ற ஒரு முக்கியமான புத்தகத்தை எழுதினார். அதில் அவர் சொன்னது விஷயம்: மேற்கத்திய உலகம் இஸ்லாமைப் பற்றி சொல்லும் பல குற்றச்சாட்டுகள் உண்மை அல்ல. அவர்கள் தங்களுடைய தவறுகளை மறைக்க, அதையே முஸ்லிம்கள்மீது சுமத்துகிறார்கள்.

முஸ்லிம்கள் பகுத்தறிவற்றவர்கள், பிற்போக்கானவர்கள், பெண்கள் மீது அடக்குமுறை செய்பவர்கள், பாலியல் சீர்கேடு கொண்டவர்கள் என்று பல குற்றங்கள் சாட்டப்பட்டன. ஆனால் வரலாற்றை பார்த்தால், இந்த குற்றங்கள் எல்லாம் அதிக அளவில் மேற்கத்திய சமுதாயத்தில்தான் நடந்துள்ளன. இதுதான் எட்வர்ட் சயீத் நிரூபித்த உண்மை.

இன்று எப்ஸ்டீன் பைல்ஸ் மூலம் சமீப காலத்தில் வெளிவந்த பெரிய ஆவணங்கள் இதையே மீண்டும் வலுவாக நிரூபித்துள்ளன. உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள், அரசியல்வாதிகள், ஹாலிவுட் மற்றும் இசைத்துறை பிரபலங்கள் போன்ற அதிகாரம் உள்ளவர்களின் கூட்டணி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் ரீதியாக அதிபயங்கரமாக பலாத்காரம் செய்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மட்டுமல்ல அவர்கள் மீது நரபலி, மனித மாமிசம் உண்ணுதல் போன்ற கொடூர குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டு உள்ளன். எத்தனையோ ஆதாரங்கள் இருந்தும் அவர்களில் பலரும் இன்னும் தண்டிக்கப் படாமலே இருக்கிறார்கள்.

ஆனால் ஊடகங்கள் நாளும் பொழுதும் குற்றவாளிக் கூண்டில் யாரை நிறுத்துகிறார்கள்? – இஸ்லாமியர்களை!

முஸ்லிம்கள் பெண்கள் மீது அடக்குமுறை செய்கிறார்கள். இஸ்லாமிய பெண்களுக்கு உரிமைகளை மறுக்கிறார்கள், பர்தா அணிய நிர்பந்திக்கிறார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டுகளை முஸ்லிம்கள் மீது அடுக்குகிறார்கள். ஆனால் உண்மையில் பெண்களை மூளைச்சலவை செய்து, நாடு கடந்து கடத்தி, சந்தைப் பொருளாக்கி பணத்துக்காக பயன்படுத்தியதும் கொன்று குவித்ததும் யார் என்று இப்போது தெளிவாகிறது.  

இஸ்லாம் பெண்களை இத்தகைய கொடூரர்களிடம் இருந்து பாதுகாக்க கடுமையான விதிகளை வைத்திருக்கிறது. அந்த விதிகள் இல்லையென்றால், பெண்கள் இன்று எவ்வளவு பாதுகாப்பற்ற நிலையில் இருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

அன்றைய நடைமுறைப்படி பெண்குழந்தைகளின் பாதுகாப்பு கருதி இஸ்லாமியர் செய்த குழந்தைத் திருமணங்களை இக்கால நடைமுறையோடு ஒப்பிட்டு முஸ்லிம்களைத் தாக்குகிறார்கள். அதேவேளையில் இன்றைய உலகில் அதிகாரம் படைத்த கொடியவர்கள் சிறுவயது பெண்குழந்தைகளை பணம் கொடுத்து நாடுகடத்தி பாலியல் ரீதியாக சுரண்டி கொன்று குவித்ததும் அவர்களையே உணவாக உண்டதும் ஊடகங்களின் கண்களுக்கு தெரியவே இல்லை! என்ன ஆச்சரியம்?

தீவிரவாத/ பயங்கரவாதக் குற்றச்சாட்டு

இஸ்லாமியர்கள் மீது மிகப்பரவலாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு இது.

முஸ்லிம்கள் சதி செய்கிறார்கள், உலகைக் கட்டுப்படுத்த நினைக்கிறார்கள், தங்களது பயங்கரவாத நடவடிக்கைகளால் உலகை அச்சத்தில் ஆழ்த்துகிறார்கள், சதா போர்களில் தங்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள்.

ஆனால் உண்மையான இரகசிய சதி வலையங்கள் யாருடையவை? பல நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், பணக்காரர்கள், அதிகாரிகள் இணைத்து செயல்பட்டது யார்? என்பவை தெளிவாகி வருகின்றன.

உலக ஊடகங்களில் பெரும் தாக்கம் ஏற்படுத்த வல்ல அனைத்து நிறுவனங்களும் பேரழிவு ஆயுத விற்பனை நிறுவனங்களும் இக்கொடியோர்களால் நிர்வகிக்கப்பட்டு வருவதால் அவர்களுக்கு ஏற்ற வகையில் உலகில் நாடகங்கள் அரங்கேறுகின்றன. மக்களும் அவற்றை உண்மை என நம்பி வருகிறார்கள்! விளைவு?

இறையச்சம் கொண்டு ஒழுக்கவாழ்வு வாழும் இஸ்லாமியர்கள் பெருவாரியாக சிறைகளில் அடைக்கப் படுகிறார்கள். கொடூர பாலியல் மற்றும் கொலைக் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். உலகை ஆள்கிறார்கள்!

================= 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்
நாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_9390.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக