புதன், 22 பிப்ரவரி, 2017

திருக்குர்ஆனில் எறும்புகள் பள்ளத்தாக்கு

Related imageRelated image

இயற்கைச் சான்றுகளை எவ்வாறு ஆராய ஆராய அவற்றில் புதைந்துள்ள உண்மைகள் வெளிப்பட்டு அறிவியல் வளர்கிறதோ அவ்வாறே திருக்குர்ஆனின் வசனங்களும் ஆராய ஆராய தன்னுள் அடங்கியுள்ள பிரபஞ்ச இரகசியங்களை வெளிப்படுத்தும் சான்றுகளாகத் திகழ்கின்றன. இரண்டையுமே திருக்குர்ஆன் ஆயத்(சான்று)கள் என்று குறிப்பிடுகிறது. இந்த வசனங்கள் அன்று பாலைவனத்தில் ஒட்டகங்களை மேய்த்துக்கொண்டிருந்த பாமரர்களையும்  இறைவனைப்பற்றி  சிந்தித்துணர வைத்தன. அறிவியல் முன்னேற்றம் கண்டுள்ள இன்று வாழும் மனிதனையும் அதற்கேற்ப சிந்திக்க வைப்பதை ஆராய்வோர் அறியலாம்.
உண்மையில் நவீன விஞ்ஞானம் கண்டுபிடிக்கும் இறைவனின் படைப்பினங்கள் பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவரும்போதுதான் திருக்குர்ஆன் உள்ளடக்கி வைத்திருக்கும் அறிவின் புதையல்களும் பிரபஞ்ச  இரகசியங்களும் நமக்குப் புலப்படுகின்றன. அதற்கான ஒரு உதாரணமே எறும்புகள் பற்றிய திருக்குர்ஆன் வசனங்கள்.
= அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்த போது "எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்திடக் கூடாது'' என்று ஓர் எறும்பு கூறியது. 
= அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார். "என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களில் என்னையும் சேர்ப்பாயாக!'' என்றார்.  (திருக்குர்ஆன் 27:18-19)
மேற்குறிபிட்ட வசனம் எறும்புகளின் உலகம் குறித்த சில அறிவியல் உண்மைகளை உணர்த்துகிறது. 

எறும்புகளின் பள்ளத்தாக்கு
மேற்படி வசனத்தில் இறைவன் எறும்புகளின் இருப்பிடத்தை குறிக்க  ‘வாதில் நம்ல்’ – (எறும்புகளின் பள்ளத்தாக்கு) என்ற சொல்லை பயன்படுத்துகிறான். எறும்புகள் குறித்து இந்நூற்றாண்டில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் பூமியின் மேற்பரப்பில் காணப்படும் எறும்புகளின் புற்றுகளின் அடியில் ஒரு நகரமே அமைந்திருப்பதாக கூறுகின்றன. மேலும் அந்த நகரத்தில் தோட்டங்கள், சாலைகள், உணவு கிடங்குகள் என்று பல பகுதியாக பிரிக்கப்பட்டு திறம்பட பயன்டுத்துவதற்கு எதுவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து தெளிவான வீடியோ ஆவணப்படம் பெர்ட் ஹால்டாப்லர் (Prof. Bert Holldobler) என்ற அறிவியலாளர் வழங்கியுள்ளார்.




லூயிஸ் ஃபோர்ஜ் என்பவரின் தலைமையில் எறும்பின் இருப்பிடம் குறித்த அகழ்வாராய்ச்சி குறித்த அவணப்படத்தின் பகுதிதான் அது. தரையின் அடியில் உள்ள இருப்பிடத்தின் வார்ப்பை பாதுகாக்க கிட்டத்தட்ட 10டண் சிமெண்ட் எறும்பின் புற்றினில் ஊற்றப்பட்டது. ஒருமாதத்திற்கு பிறகு அந்த பகுதி அகழப்பட்டது. அந்த அகழ்வாராய்ச்சியின் முடிவில் எறும்பின் பள்ளத்தாக்கு வெளிப்பட்டது.  
அதில் பூன்சை தோட்டங்களும், சேமிப்பு கிடங்குகளும், நெடுஞ்சாலைகளும்  என அனைத்து விதமான வசதிகளும் அமையப்பெற்றதாக இருந்தது என்று அந்த ஆராய்ச்சி குறிப்பிடுகிறது. இந்த நகரமானது 50 சதுர மீட்டர்  பரப்பளவும், 8 மீட்டர் ஆழம் கொண்டதாகவும், அதாவது ஒரு சிறிய பள்ளதாக்காக இருப்பதை அந்த ஆவணத்தில் காணமுடிகிறது. கிட்டத்தட்ட 40 டன் மண்ணை அந்த எறும்புக்கூட்டம் வெளியே எடுத்துள்ளது.


நன்றி: http://scienceprovesquran.blogspot.in 
================= 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக