இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மார்ச் 2022 இதழ்

 


திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மார்ச் 2022 இதழ் 

இதழ் உங்கள் இல்லம்தேடி வர உங்கள் முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள் 

பொருளடக்கம்: 

அரைகுறை ஆடை- பாலியல் விருந்துக்கான அழைப்பு -2

யாருக்காக? ... இது யாருக்காக?-4

ஹிஜாபிற்கு மீள்வோம் சொர்க்கம் செல்வோம்! -6

ஏம்மா, எதுக்கு முதுகில ஜன்னல்?-7

பாதுகாப்புக் கவசமே ஹிஜாப் -9

ஹிஜாபைப் பேணுவது சமூகக் கடமை! -11

யுவான் ரிட்லி - ஹிஜாபுக்குள் விரும்பி நுழைந்த புரட்சிப் பெண்மணி! -13

சமூக ஒழுக்கத்திற்கு இறைகூறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் -16

அறிவு வளர்ச்சியின் அடையாளமே ஆடை!-18

கூகுள் நினைவுகூர்ந்த கமலா சுரையா!-19

வாசகர் எண்ணம் -20

நாணமும் அடக்கமும் பெண்களுக்கு அழகு -21

இறைவிசுவாசிகளுக்கான ஆடை ஒழுக்கம் -23

சாராபோக்கர் - ஹிஜாபுக்குள் முழுமையாக நுழைந்த மாடல் அழகி! -24 


திங்கள், 14 பிப்ரவரி, 2022

ஒழுக்கமாக வாழ வழிவிடுங்கள்!


அவளது பிள்ளைகள் கேட்ட கேள்விகள் ஆஷாவை அன்றிரவு தூங்கவிடாமல் அலைகழித்துக் கொண்டிருந்தன... அன்று ஆபீசில் இருந்து களைப்போடு வீடு திரும்பி உடைமாற்றிக் கொண்டு இருக்கும்போதுதான் அந்தக் கேள்விகளைக் கேட்டார்கள் பிள்ளைகள்..

"எம்மாவீட்டுக்குள்ளாற மட்டும் மாக்சி போட்டுட்டு சுத்தறே... வெளிலே போகும்போது உடம்பெல்லாம் தெரியற மாதிரி ஓட்டை ஓட்டையா இருக்கிற டிரெஸ்ஸெல்லாம் போட்டுட்டுப் போறே?"
எதிர்பார்க்காத கேள்வி... கேட்டது ஆஷாவின் ஆறுவயது மகன்.
என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை ஆஷாவுக்கு... 
"
ஆபீசிலே மாக்சி போட்டுட்டுப் போனா உடமாட்டாங்கடா கண்ணு" 
பக்கத்து ரூமில் இருந்த மூத்தமகன் ராஜாவிடம் இருந்து வந்தது அடுத்த கேள்வி..
"
சரிம்மாஅதுக்கு எதுக்கு ஆபீஸ் போகும்போது கழுத்துகிட்ட ஜன்னல்முதுகுல ஜன்னல்லெக்கிங்க்ஸ்லிப்ஸ்டிக்.. ? இப்படித்தான் போட்டுட்டு வரணும்னு ஆபீசிலே சொன்னாங்களா?"
ஏன் இந்த திடீர் கேள்விகள்?... திக்குமுக்காடிப் போனாள் ஆஷா... 
"
இதுதான் ஊர் வழக்கம் ராஜா.. இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேக்கக்கூடாது" 
"
சரிம்மாஎன்னையும்தான் தண்ணியடிக்கறது ஊர் வழக்கம்னு பிரெண்ட்ஸ் கூப்பிட்டாங்கபோகட்டுமா?"
பதில் சொல்ல முடியவில்லை ஆஷாவால்...
"
காலேஜ்லே சில பொண்ணுங்க பசங்கள சுண்டி இழுக்கறதுக்காக கவர்ச்சியா ட்ரெஸ் போட்டுட்டு வர்றாங்க.. நீ எதுக்கும்மா அப்படிப் போடணும்?" 

மீண்டும் பதில் இல்லாமல் வாயடைத்து நின்றாள் ஆஷா.

ஏம்மாநாளைக்கு நம்ம சுதா கொஞ்சம் பெருசாகி உன்ன மாதிரி ட்ரெஸ் போட்டு போயி எவனாவது கொண்டுபோய் கற்பழிச்சா என்ன செய்வேஇல்லஉன்னையே கூட நாலு பேரு கடத்திட்டுப் போயி கற்பழிக்க மாட்டாங்கன்னு ரொம்ப தைரியமா இருக்கியா?”

ஏண்டா இப்படி ரொம்ப விபரீதமா கற்பனை பண்றேஅப்படியெல்லாம் நடக்காதுடா கண்ணு...” ராஜாவை தேற்ற நினைத்தாள் ஆஷா...

அடங்குவதாக இல்லை ராஜா..

ஏம்மா இந்த உலகத்துலதான் இருக்கியாநியுஸ்டிவி எல்லாம் பாக்கறதில்லையா நீஊரு பூரா நடக்கறது ஒண்ணும் உன் கண்ணுக்குத் தெரீலையா?

--------------------------

ஒழுக்கமாக வாழ நினைக்கும் உள்ளங்களில் குறிப்பாக இளைஞர்கள் உள்ளங்களில் குமுறிக்கொண்டிருக்கும் கேள்விகள் இவை. ஆஷாவைப் போல பெரும்பாலான பெண்கள் ஊர் வழக்கம்தானே என்று சொல்லி தாங்கள் அணியும் அரைகுறை ஆடையால் தவறில்லை என்று நினைகின்றனர். தங்களின் உடலின் அழகு அந்நிய ஆண்களின் கழுகுக் கண்களுக்கு விருந்தானாலும் அதனால் ஒன்றும் இல்லை என்று நினைக்கின்றனர். இலவசமாகக் கிடைக்கும் இன்பம் என்று இந்த காட்சிகளை அனுபவிப்பவர்களும் இதைப் பற்றி ஏதும் பேசுவதில்லை. பெண்களின் ஆடைக்குறைப்பு என்பது ஒரு தீமை என்பதையும் சமூகத்தில் அது உண்டாக்கும் குழப்பங்களையும் மறுமையில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்ற உண்மைகளை அறிந்த சில நல்லவர்களும் இதைப் பற்றி வாய் திறக்காமல் செல்கிறார்கள். மற்ற மக்கள் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்று பயந்து இத்தீமையை கண்டிக்காமல் செல்கின்றனர். அவ்வாறு செய்யும்போது இத்தீமைகளில் மூழ்கியுள்ளவர்களைப் பொறுத்தவரை  தங்கள் செயலில் தவறு இல்லை என்பதாக உணர்கின்றனர்.

இப்படிப்பட்ட சமூகப் போக்கு ஆபத்தானது.

இறைவிசுவாசிகள் களமிறங்க வேண்டும்

இறைநம்பிக்கை கொண்டவர்கள் நாட்டையும் மக்களையும் நேசிக்காமல் இருக்க முடியாது! அவர்களால் நாட்டில் நடக்கும் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் கண்டு அலட்சியமாக இருக்க முடியாது. இந்த பூமியில் தர்மத்தை நிலை நாட்டவேண்டிய பொறுப்பை நம் மீது இறைவன் சுமத்தியுள்ளான்,  நாளை மறுமையில் இறைவனால் இதுபற்றி நாம் விசாரிக்கப் படுவோம்  என்ற பொறுப்புணர்வு நமக்கு இருக்கவேண்டும். அது இறைநம்பிக்கையின் ஒரு பாகமாகும்.

இறைமார்க்கம் அல்லது இஸ்லாம் என்பது வெறும் தொழுகைதியானம்தானம்விரதம் மற்றும் இன்னபிற சடங்குகளுக்குப் பெயரல்ல. மாறாக நம்மைச்சுற்றி நன்மைகளை வளர்க்க வேண்டும். நடக்கும் தீமைகளைத் தடுக்கவும் வேண்டும். இதோ தனது இறுதிவேதம் மூலம் நாம் எப்படிப்பட்டவர்கள் என்று இறைவன் கூறுகிறான்

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்......” (திருக்குர்ஆன் 3:110)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்கு உரிய ஒரே இறைவன் என்று பொருள்)

மேலும் இறைத்தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

= உங்களில் எவரேனும் தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும். இதுதான் இறைநம்பிக்கையின் இறுதிநிலையாகும். (நூல்: முஸ்லிம்)

ஆகஒரு இறைநம்பிக்கையாளனைப் பொறுத்தவரை அவன் தீமைகளை எதிர்த்து எவ்வாறெல்லாம் முடியுமோ அவ்வாறு போராடக் கடமைப்பட்டிருக்கிறான். எனவே இன்று நாம் உள்ள நிலையில் எந்தத் தீமைகளை நாம் கையினால் நேரடியாகத் தடுக்க முடியமோ அந்தத் தீமைகளை நேரடியாகத் தடுக்கவேண்டும். உதாரணமாக நம் அதிகாரத்திற்கு உட்பட்ட வட்டங்களில் ஆடைக்குறைப்பு என்ற தீமை நேராடியாகவோ அல்லது ஊடகங்கள் மூலமாகவோ ஊடுருவும்போது நேரடியான நடவடிக்கைகள் மூலம் தடுக்க முயற்சிக்க வேண்டும். நம் அதிகாரத்திற்கு உட்படாத வட்டங்களில் இத்தீமையின் விபரீதம் பற்றியும் மறுமை வாழ்வின் விளைவுகள் குறித்தும் நாவின் மூலமாக அல்லது எழுத்தின் மூலமாக மக்களை எச்சரிக்கை செய்வதன் மூலம் போராடலாம்.

--------------------- 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?

இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?

http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html 

திங்கள், 7 பிப்ரவரி, 2022

மரம் நடுவது ஒரு முஸ்லிமின் பொறுப்பு

மரம் நடுவதை, இஸ்லாம் நன்மையாக கணக்கீடு செய்து, தர்மமாக ஊக்குவிக்கின்றது

"முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 2320, அனஸ் இப்னு மாலிக் (ரலி).
"இறுதித் தீர்ப்பு நாள் வருகையில் கூட, ஒரு மரக்கன்றை ஒருவர் கையில் வைத்திருந்தால் அவர் விரைந்து அதனை மண்ணில் ஊன்றட்டும்" என்று இறைதூதர் (ஸல்) கூறினார்கள்.
இந்த நபிமொழியின் பொருள் குறித்து விளக்கம் தரும் அறிஞர் தாரிக் ரமழான் “இறுதி நாளில் கூட இறை நம்பிக்கை கொண்டவர் வாழ்க்கையையும் அதன் சுழற்சிகளையும் புதுப்பித்துக் கொள்ளும் வண்ணம் இயற்கையை மதித்து அதனுடன் உறவு கொள்ள வேண்டும்” என்கிறார்.
மேகண்ட இரண்டு நபிமொழிகளும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இயற்கை சமநிலையை பேணவும் சொல்லப்பட்டவை.
மரம் நடுவதும், இயற்கை வளங்களை பராமரிப்பதும், பாதுகாப்பதும் ஒரு மனிதனின் கடமை குறிப்பாக இறைவனை ஏற்றுக்கொண்ட இறைநம்பிக்கையாளனின் பொறுப்பு என்பதை மேற்காணும் நபிமொழிகள் உணர்த்துகின்றன.
இறுதித் தீர்ப்பு நாள் வந்துவிட்டால் அதற்குப் பின் பூமி ஏது? பூமியில் வாழ்க்கை ஏது? அந்த நேரத்திலும் கூட கையில் இருக்கும் மரத்தை நட்டுவிட வேண்டும் என்று மனிதர்களின் வழிகாட்டி முஹம்மது (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
இது மனிதர்களுக்கு இயற்கை வளங்கள் மேல் உள்ள பொறுப்பையும், மனிதர்களுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவையும் சுட்டிக் காட்டுகிறது. உலகம் அழிவது போன்ற பேரிடர்கள் ஏற்பட்டாலும் மனிதர்கள் தங்கள் பொறுப்பில் கவனமற்று இருந்து விடக்கூடாது என்பதை தெளிவுபடுத்துகிறது.
மேலும் மரம் நடுவது ஒரு அறச் செயல். பணமாக, பொருளாக பிறருக்கு கொடுப்பதையே தர்மம் என்று நினைக்கும் மனிதர்களுக்கு, மனிதன் இன்னொரு மனிதனைப் புன்னகையுடன் எதிர்கொள்வதையும் தர்மம் என்கிறது இஸ்லாம்.
அந்த தொடரில் மரம் நடுவது தர்மம். ஒரு மனிதன் நடும் விதை வளர்ந்து மரமாகி பூவாக, காயாக, பலமாக, நிழலகாக மனிதர்கள் உள்ளிட்ட உயிர்களுக்கு பயன் தருகிற போது விதைத்தவனுக்கு தர்மமாக பலனளிக்கிறது என்கிறது இஸ்லாம்.
இஸ்லாம் மதமல்ல வாழ்க்கை நெறி என்று உபதேசிப்பதல்ல ஒரு முஸ்லிமின் கடமை. இஸ்லாம் மனிதர்களின் இயல்புகளோடு இயைந்த வாழ்க்கை என்பதை வாழ்ந்துதான் காட்ட வேண்டும். பக்தி என்பதும், ஆன்மீகம் என்பதும் பிற உயிர்களுக்கு பயன் தந்து வாழ்வதில் இருக்கிறது என்பதே இஸ்லாத்தின் முழக்கம்

சனி, 22 ஜனவரி, 2022

ஒரு குழந்தைக் கொள்கையால் சீரழிக்கப்பட்ட சீனா!


பெரும்பெரும் இயற்கை வளங்களும் பெரும் நிலப்பரப்பும் கொண்ட ஒரு நாடு அதைப் படைத்தவனுக்கு எவ்வளவு நன்றிக் கடன் பட்டதாக இருக்கவேண்டும்? ஆனால் அதைப் பற்றி சிறிதளவும் சிந்திக்காமல் படைத்தவனையே மறுக்கும் ஒரு சித்தாந்தத்தைக் கொள்கையாகக் கொண்டு அந்நாடு ஆளப்பட்டால் அது சீரழிவை சந்திக்காமல் இருக்குமா? அதைத்தான் இன்று சீனா என்ற கம்யுனிச நாட்டின் உதாரணத்தில் காண்கிறோம்.

இன்று சீனா ஒரு தொழில் முன்னேற்றம் கொண்ட வல்லரசு நாடாக உலகுக்குக் காட்சியளிக்கலாம். ஆனால் அது நிலைக்காது என்பதை அதன் உள்நாட்டு நிலைமையை ஆராய்பவர்களுக்கு புரிய வரும். என்ன வளம் இருந்தும் என்ன ஆதிக்கம் இருந்தும் அதன் பலனை அனுபவிப்பதற்கு ஆள் இல்லையென்றால் என்ன பயன்?

ஒரு குழந்தை கொள்கை என்ற கொடூரம்!

பரவலாக அறியப்பட்டது போல, கம்யூனிச சீனா, 1980ம் ஆண்டு ஒரு குழந்தைக் கொள்கையை அறிவித்தது. மணமான தம்பதியர் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும், மீறினால் அபராதம், சலுகைகள் இரத்து என்றபடி நடைமுறைக்கு வந்தது இக்கொள்கை.

டெங் ஜியோபிங் (Deng Xiaoping ) அதிபராக இருந்த போது, இந்த கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. சீனாவின் மக்கள் தொகை 100 கோடியை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில், மக்கள் தொகை பெருக்கம் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக அமையலாம் எனும் அச்சத்தில் இக்கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது.

நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம். அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்’ (அல்-குர்ஆன் 17:31)

என்ற இறைவனின் கட்டளை அப்பட்டமாக ஒரு நாட்டை  ஆள்பவர்களால் மீறப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது

கடும் கட்டுப்பாடுகள்.

தொடர்ந்து வந்த ஆண்டுகளில், குடும்பத்திற்கு ஒரு குழந்தை எனும் கட்டுப்பாட்டை சீன அரசு கடுமையாக செயல்படுத்தியது. குறிப்பாக நகர்புறங்களில் இந்த கட்டுப்பாடு தீவிரமாக இருந்தது. ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொண்ட தம்பதியருக்கு அபாராதம் விதிக்கப்பட்டதோடு, கட்டாய கருக்கலைப்புக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். குறிப்பாக ஏழைகளுக்கு பாதிப்பு மோசமாக இருந்தது.

அதே நேரத்தில் ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்பவர்களுக்கு பொருளாதார நோக்கில் சலுகைகளும் அளிக்கப்பட்டன. சீன மக்கள் இந்த கட்டுப்பாட்டை வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்ட நிலையில், அரசு தரப்பில் இந்த கொள்கை வெற்றிபெற்றதாக தெரிவிக்கப்பட்டது. ஒரு குழந்தை கொள்கை மூலம் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த முடிந்ததோடு, உணவு மற்றும் குடிநீர் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க முடிந்ததாகவும் சீன அரசு தரப்பில் பெருமிதத்தோடு தெரிவித்து வந்தது.

உச்சகட்ட கொடூரங்கள்

ஆனால் இதன் பின்னால் நடந்த கொடூரங்கள் உலகத்தின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டன.

= பிறப்பது பெண் குழந்தை என்றால் –அதை ஸ்கேன் மூலம் அறிந்து கொண்டால் – உடனே கருவிலேயே கொல்லப்பட்டாள்.

= தப்பித்தவறி பிறந்துவிட்டால் பெற்றோர்களாலேயே உயிரோடு கொல்லப்பட்டாள்.

= பெற்றவர்களுக்கு கொல்ல மனம் வரவில்லை என்றால் அவளை அரசு காப்பகங்களில் சேர்த்தார்கள். பெற்றோர் உயிருடன் இருந்தும் அனாதையாகவே வளர்ந்தது அந்தப் பெண் குழந்தை. ஏனெனில் ஒரு பெற்றோருக்கு ஒரு குழந்தையை மட்டும் வைத்துக்கொள்ளத்தானே அனுமதி உள்ளது.

= அதுவும் ஆண்குழந்தைதானே வேண்டும் அனைவருக்கும்! அதனால் தொடர்ந்து பிறந்த பெண்குழந்தைகள் காப்பகங்களுக்குச் சென்றன.

= என்ன ஒரு கொடுமை! எத்தனை கருக்கொலைகள்? சிசுக்கொலைகள்? கருக்கலைப்புகள்? எவ்வளவு மன உளைச்சல்களை இவர்கள் சந்தித்திருக்க வேண்டும்.. மனித மனம் கொண்டவர்களே சிந்தித்துப்பாருங்கள்.

40 வருடங்களாக நடந்த கொடுமைகள்

இக்கொடுமைகள் ஏதோ ஊரில் ஏதோ மூலையில் ஏதோ ஒரு குடும்பத்தில் எங்கோ நடந்தவை அல்ல.. சீனா என்ற பெரும் நிலப்பரப்பில் கோடிக்கணக்கான குடும்பங்களில் 40 வருடங்களாக இக் கொடூரங்கள் தொடர்ந்து அரங்கேறின. தட்டிக்கேட்க யாரும் இன்றி, எதிர்க்கட்சிகள் ஏதும் இன்றி,  இக்கொடுமைகள் கம்யூனிஸம் என்ற இரும்பு கரத்தின் ஒடுக்குமுறைகளுக்கு கீழ் ஈவிரக்கமின்றி நடந்தன. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் மனித உணர்வுகள் இவ்வாறு மழுங்கடிக்கப்பட்டன.

தாய், தந்தை, சகோதரன், சகோதரி, குடும்பம், அன்பு, பாசம், நேசம், சொந்தம் பந்தம், என அனைத்து உறவுகளையும் உணர்வுகளையும் கம்யுனிசவாதிகள் கால்களுக்குக் கீழ் போட்டு நசுக்கினார்கள். இவர்களைப் பொறுத்தவரை மனிதன் இன்னொரு குரங்குதானே?

கொடூரங்களின் முடிவில்..

= மக்கள்தொகைக் குறைப்பை வெற்றிகரமாக அடைந்தார்கள்.

ஆனால்...

= ஒரு குழந்தைக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையில், சீன சமூகத்தில் பெண்கள் விகிதத்தை விட ஆண்கள் விகிதம் அதிகமானது.

= மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது சீன மக்கள் தொகை மிகவும் வேகமாக வயோதிகத்தை அடையவும் இது வழிவகுத்து. அதாவது மக்கள் தொகையில் இளம் வயதினரைவிட வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உண்டானது.

= மக்கள் தொகையில் இளம் வயதினர் குறைவாக இருப்பது, பொருளாதார நோக்கிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. உழைப்பதற்கு ஏற்ற மனிதவளம் குறைந்து போயுள்ளது. வயோதிகர்களை கவனிக்க ஆளில்லா நிலை உருவானது.

இதன் விளைவாக கடந்த 2016ம் ஆண்டு சீன அரசு ஒரு குழந்தைக் கொள்கையை தளர்த்தி இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தது. ஆயினும் எதிர்பார்த்த மாற்றங்களைக் காணமுடியவில்லை.

அதைத் தொடர்ந்து தற்போது மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி அளித்துள்ளது சீன அரசு. இனி முழு கட்டுப்பாட்டையும் தளர்த்தி மக்களே இனி எவ்வளவு வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளுங்கள் என்று சீன அரசு அறிவித்தாலும் பிறப்பு விகிதம் 1.12 என்ற நிலையை அடைந்துள்ள நிலையில் இன அழிப்பிலிருந்து சீனா மீண்டு வர வாய்ப்பே இல்லை எனலாம். இன்னும் ஒரு காரணமும் இருக்கிறது..

ஆம், மனித உணர்வுகளை இரும்புக் கரம் கொண்டு இவர்கள் அடக்கி ஒடுக்கியதால் இதயங்கள் கல்லாகிவிட்ட நிலையில் இவர்களின் பெண்கள் கேட்கிறார்கள்..

நாங்கள் என்ன உங்களுக்கு பிள்ளைபெறும் இயந்திரங்களா?

இறை எச்சரிக்கை

எது எப்படியானாலும் இது இறைவனுக்கு சொந்தமான உலகம். அவனை கண்டுகொள்ளாது தான்தோன்றித்தனமாக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அழிவையே தரும். மறுமையில் அவனது தண்டனையையும் பெற்றுத்தரும். கீழ்கண்ட இறைவசனத்தில் கூறப்படும் விஷயங்கள் இவர்களுக்கும் பொருந்திப்போவதை நாம் காணலாம்:

= (நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டுவிடும். எனினும் அவர்களுக்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத்தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை; (தாங்கள் செய்த பாவத்திற்கு) ஈடாக (தங்களால் இயன்ற) அத்தனையும் கொடுத்தாலும், அது அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப் பட மாட்டாது; இவர்கள் தாங்கள் செய்த செய்கைகளாலேயே தங்களை நாசமாக்கிக் கொண்டார்கள்; இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த  காரணத்தால்  இவர்களுக்குக் கொதிக்கும் நீரும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. (திருக்குர்ஆன் 6:70)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)

------------------------------------------------- 

நாம் ஏன் பிறந்தோம்?
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?

வியாழன், 23 டிசம்பர், 2021

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் – ஜனவரி 2022 இதழ்

 திருக்குர்ஆன் நற்செய்தி மலர் – ஜனவரி 2022 இதழ் 

பொருளடக்கம்:

இல்லாமையில் இருந்து உருவாகும் இயந்திரங்கள் -2

வாசகர் எண்ணம் -3

இனப்பெருக்கம் என்ற அற்புதம் -4

உங்கள் முதல் அறை கருவறை  -6

இனப்பெருக்க உறுப்புக்களின் அற்புதம்! -10

பெண் உறுப்புகள் எனும் பேரதிசயம்! --10

கரு உருவாகும் அற்புதம் -12

அலக் எனும் அற்புதம் -14

பூமியின் மீது நாம் எப்படி வந்தோம்?

அறிவியலும் ஆய்வுகளும் பதில் சொல்லுமா? -18

படைத்தவனே சொல்லித்தரும் வரலாறு! -20

பின்னணி அறியுமுன் நம் நிலை அறிவோம் -21

இப்பதங்களை அறிவது நலம் -22

மனிதப் படைப்புக்கு முன் நடந்தவை -23

------------- 

இந்த இதழ் உங்கள் இல்லம்தேடி வர உங்கள் முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள். நான்கு மாத சந்தா இலவசம் 


வியாழன், 9 டிசம்பர், 2021

நபிகளாரே இறுதித்தூதர் - ஏன்?


வெவ்வேறு காலகட்டங்களில் இப்ப்பூமியின் வெவ்வேறு பாகங்களுக்கு வந்து சென்ற அனைத்து இறைத்தூதர்களும் ஒரே இறைவனால் ஒரே கொள்கையைப் போதிப்பதற்காக அனுப்பப்பட்ட செம்மல்களே! அவர்கள் அனைவரையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். யாரையும் நிராகரிக்கக் கூடாது. அவர்கள் வேற்று நாட்டவர் அல்லது வேற்று மொழியினர் வேற்று காலத்தவர்கள் என்று கூறி புறக்கணிக்கவோ தரம்
  தாழ்த்தவோ இறைவிசுவாசிகளுக்கு அனுமதியில்லை, ஏனெனில் நம் மனிதகுலம் என்பது ஒரே தாய் மற்றும் ஒரே தந்தையில் இருந்து உருவாகி உலகெங்கும் பல்கிப் பெருகியவர்களால் ஆனதே. அனைத்து இறைத்தூதர்களும்  நம்மவரே, அனைவரும் நமது மனித குடும்பத்துக்காக, நமது சகோதர சகோதரிகளை நேர்வழிப் படுத்த நமது இறைவனால் அனுப்பப்பட்ட சான்றோர் பெருமக்களே என்ற மனப்பாங்கோடு அவர்கள் அனைவரையும் மதிக்க வேண்டும்.

ஆனால் யாரை நாம் பின்பற்ற வேண்டும் என்பதை எப்படி தீர்மானிப்பது?
இறைத்தூதர்களின் வரிசையில் நம் மூதாதையருக்கு அனுப்பப் பட்டவர்களும் அடங்குவர், நம் நாட்டினருக்கு, நம் மொழியினருக்கு அனுப்பப்பட்டவர்களும் அடங்குவர். வேற்று நாட்டினருக்கு, வேற்று மொழியினருக்கு அனுப்பப்பட்டவர்களும் அடங்குவர்.  ஒரே கொள்கையையே அவர்கள் போதித்து இருந்தாலும் அந்தந்த காலகட்டங்களில் மக்களின் மனமுதிர்ச்சிக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு நடைமுறைச் சட்டங்களும் வணக்க வழிபாட்டு முறைகளும் அந்தந்த இறைத்தூதர்களால் போதிக்கப் பட்டன. இன்று வாழும் நாம் மறுமையில் வெற்றி அடைய வேண்டுமானால் அல்லது மோட்சம் பெற வேண்டுமானால் இறைவன் யாரை நமக்காக அனுப்பியிருக்கிறானோ அவரையே நாம் பின்பற்றியாக வேண்டும். அதை விடுத்து நாம் நம் இனத்துக்கு அல்லது நம் நாட்டுக்கு அல்லது நம் மொழிக்கு அனுப்பப்பட்ட தூதரையோ அல்லது வேதத்தையோ மட்டுமே பின்பற்றுவோம் என்று பிரிவினை வாதம் பேசினால் நஷ்டம் நமக்குத்தான். அதுவும் சாதாரண நஷ்டம் அல்ல  நிரந்தர நரகம் அது!
இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி!
அந்த வகையில் இன்று நமக்காக அனுப்பப்பட்ட இறைத்தூதர் முஹம்மது நபி அவர்கள்தான் என்பதற்கு ஆதாரமாக ஒரு சில தகவல்களை முன் உங்கள் பகுத்தறிவு கொண்டு ஆராய்வதற்காக முன்வைக்கிறோம்:

முஹம்மது நபி அவர்களுக்கும் அவருக்கு முன் வந்து சென்ற இறைத்தூதர்களுக்கும் இடையே நாம் கண்கூடாக காணக்கூடிய ஒரு சில வேறுபாடுகளை நாம் சற்று ஆராய்ந்தாலே இன்றைய காலகட்டத்துக்காக அனுப்பப்பட்டவர் இவர்தான் என்ற முடிவுக்கு வந்து விடுவோம்:

1. அகில உலகுக்கும் பொதுவான மற்றும் இறுதி இறைத்தூதராக முஹம்மது நபி அவர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள்.
முந்தைய இறைத்தூதர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மற்றும் ஒரு குறிப்பிட்ட நாடுகளுக்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயங்களுக்காகவோ அனுப்பட்டிருந்தார்கள். உதாரணமாக ஹூத், ஷுஹைப் போன்ற இறைத்தூதர்கள் 7:65 7:85 குர்ஆன் வசனங்கள்)
 இயேசுநாதர் பற்றி: 
இறைத்தூதர்கள் வரிசையில் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன் வந்து சென்றவர் ஏசு என்றழைக்கப் படும் ஈஸா (அலை) அவர்கள்அவரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை நோக்கித்தான் அனுப்பப் பட்டு இருந்தார்.
43:59 mtH (<]h ek;Kila) mbahNu md;wp Ntwpy;iy. mtUf;F ehk;
mUl;nfhiliar; nrhhpe;J ,];uhaPypd; re;jjpahUf;F mtiu ey;Yjhuzkhf Mf;fpNdhk;.
ஏசுநாதரின் முன்னறிவிப்பு:
ஏசுவும் இஸ்ராயீலின்  மக்களை நோக்கி தனக்குப் பிறகு வரவிருக்கும் முஹம்மது நபியைப் பற்றி முன்னறிவிப்பும் செய்தார்கள்:
61:6 NkYk;> kHakpd; FkhuH <]h: ',];uhaPy; kf;fNs! vdf;F Kd;Ds;s jt;uhj;ij nka;g;gpg;gtdhfTk; vdf;Fg; gpd;dH tutpUf;Fk; 'm`kJ" vd;Dk; ngaUila J}jiug; gw;wp ed;khuhak; $WgtdhfTk; ,Uf;Fk; epiyapy; my;yh`;tpd; J}jdhf cq;fsplk; te;Js;Nsd;" vd;W $wpa Ntisia (egpNa! ePH epidT $HtPuhf!)......

இறுதி காலகட்டம் இறுதித் தூதர் 
ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதராகவும் உலகம் முழுமைக்கும் பொதுவானவராகவும் அனுப்பப்பட்டார்கள்.  நாம் இன்று இவ்வுலகின் இறுதி காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

7:158 (egpNa!) ePH $WtPuhf: 'kdpjHfNs! nka;ahf ehd; cq;fs; midtUf;Fk; my;yh`;tpd; J}juhf ,Uf;fpNwd;> thdq;fs;> G+kp Mfpatw;wpd; Ml;rp mtDf;Nf chpaJ> mtidj;jtpu (tzf;fj;jpw;Fhpa) ehad; NtWahUkpy;iy -
அன்றும் இன்றும் உள்ள தகவல் தொடர்பு வசதிகளை ஒப்பிட்டுப் பார்த்தாலே இந்த உண்மையை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அன்று ஊர்களுக்கும் நாடுகளுக்கும் இடையே தகவல் தொடர்பு இல்லாத நிலையில் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு தூதர்கள் அனுப்பபட்டிருந்தனர். இன்றைய காலகட்டம் தகவல் தொடர்பு மிக விரிவடைந்த கால கட்டம். இங்கு பேசினால் உடனுக்குடன் உலகின் மறு மூலையில் கேட்கக் கூடிய அளவுக்கு முன்னேறியிருக்கிறோம். இப்படிப்பட்ட சூழலில் இறுதி இறைத்தூதர் உலகம் முழுமைக்கும் பொதுவானவராக அனுப்பப் பட்டார்கள்..இவருக்குப் பிறகு எந்த இறைத்தூதரும் வரப்போவதில்லை. இனி உலகம் அழியும் நாள் வரையும் இவர்தான் இறைவனின் தூதர்.

2. முந்தைய இறைத்தூதர்களைப் போல் அல்லாமல் இவர் மூலமாக அனுப்பப்பட்ட வேதம் அழியாமல் பாதுகாக்கப் படுகிறது.
முந்தைய இறைத்தூதர்கள் மூலம் அனுப்பப்பட்ட வேதங்கள் பிற்கால மக்களால் கூட்டப்படவோ குறைக்கப்படவோ செய்யப்பட்டுள்ளன. அருளப்பட்ட காலத்தில்  கலப்படமின்றி தூய்மையான நிலையில் இருந்த அவ்வேதங்கள் இன்று மனித கரங்களால் மாசுபடுத்தப்பட்ட நிலையில் காணப் படுகின்றன. அதுவும் அவற்றின் மொழிபெயர்ப்புகளைத்தான் நாம் காண முடிகிறதே தவிர அவற்றின் மூல மொழி வசனங்களை நாம் எங்கும் காண முடிவதில்லை. அதுமட்டுமல்ல, அவை அருளப்பட்ட மொழிகளே இன்று பேச்சுவழக்கில் இல்லை என்பதெல்லாம் நிதர்சனமான உண்மைகள்.

ஆனால் இறுதித் தூதர் மூலமாக அனுப்பப்பட்ட திருக்குர்ஆன் பதினான்கு நூற்றாண்டுகள் கடந்தும் எந்த விதமான மாற்றங்களுக்கும் இரையாகாமல் அருளப்பட்ட மொழியிலேயே அட்சரம் பிசகாமல் அப்படியே உலகின் எல்லா மூலைகளிலும் கிடைக்கிறது என்பது யாவரும் அறிந்த உண்மை. இதைப் பரிசோதிக்க உங்களுக்கு அருகாமையில் உள்ள பொது நூலகத்தில் உள்ள பல்வேறு மொழிகளில் கிடைக்கும் மொழிபெயர்ப்புகளை எடுத்து பாருங்கள். எல்லாவற்றிலும் மூல(அரபு) மொழி வசனங்கள் அப்படியே இருப்பதைக்  காண்பீர்கள்.
இதுபற்றிய விவரங்களை நீங்கள் இங்கே காணலாம் :
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

திருக்குர்ஆனுக்கு முன்னர் வந்த இறைவேதங்களின் இன்றைய நிலையை சற்று ஆராய்ந்தால் உங்களுக்கு உண்மை விளங்கிவிடும். அவற்றிலும் திண்ணமாக இறைவசனங்கள் உள்ளன. ஆனால் அவற்றுடன் இறைத்தூதர்களின் வார்த்தைகளும் அவர்களுக்கு பின்னர் வந்த மனிதர்களின் கூற்றுக்களும் இறைத்தூதர்கள் பற்றிய சரித்திர பதிவுகளும் கலந்து காணப்படுகின்றன. அதனால் அவற்றை 100 சதவிகிதம் இறைவாக்குகள் என்று சொல்ல முடிவதில்லை. ஆனால் திருக்குர்ஆனின் நிலை இவ்விஷயத்தில் தனித்து விளங்குகிறது. அதில் பதிவாகியள்ளவை 100 சதவிகிதமும் இறைவாக்குகளே. (திருக்குர் ஆன் அருளப்பட்ட விதமும் பாதுகாக்கப் படும் முறையும் என்ற குறிப்பைப் படிக்கவும்) .இந்த வேதத்தில் நபிகள் நாயகத்தின் வார்த்தைகளோ மற்ற மனிதர்களின் வார்த்தைகளோ கலக்கவில்லையா? இல்லை, நிச்சயமாக இல்லை. எவ்வாறு எனில் நபிகள் நாயகம் அவர்களின் கூற்று மற்றும் அவர் செய்த செயல்கள் பற்றிய செய்திகள் ஹதீஸ் எனப்படும் நூல்களாக தனித்து தொகுக்கப் பட்டுள்ளன. இவை இறைவாக்குகளோடு கலக்கவில்லை. அரபி இலக்கியத்தில் திருக்குர்ஆனும் ஹதீஸும் வெவ்வேறு இலக்கியத்தரத்தைச் சேர்ந்தவையாக உள்ளன. இரண்டும் ஒன்றோடு ஒன்று கலவாமல் தனித்தனியாகவே விளங்குகின்றன.

3. முந்தைய இறைத்தூதர்களை மக்கள் கடவுள்களாக ஆக்கி வழிபட்டார்கள்.
இறுதித் தூதருக்கு முன்னர் வந்த இறைத்தூதர்களை அவர்களது மறைவுக்குப் பின்னர் அவர்களுக்காக நினைவுச் சின்னங்கள் என்ற பெயரில் உருவப்படங்களையும்  சிலைகளையும் உருவாக்கி பின்னர் அவற்றையே கடவுளாக பாவித்து மக்கள் வழிபாடு செய்யத் துவங்கினர். இதற்கு இறுதித் தூதருக்கு முன் வந்த ஏசு நாதரும் விலக்கல்ல. அவருக்கும் இன்று மக்கள்  படம் வைத்து சிலை வைத்து வழிபடுவதை நாம் காண்கிறோம். ஆனால் இறுதித் தூதர் முஹம்மது நபி அவர்கள் வந்து சென்ற பின் 14 நூற்றாண்டுகள் ஆகியும் இப்பூமியின் மேற்பரப்பின் மீது எங்காவது அவருடைய உருவப்படத்தையோ சிலையையோ  பார்த்திருக்கிறீர்களா? இன்று அவரை உயிருக்குயிராக நேசித்து அவரை முன்மாதிரியாக பின்பற்றுவோர் கோடிக்கணக்கில் உலகெங்கும் இருந்தும் எங்குமே அவரது  உருவப்படத்தைக் காணமுடியவில்லை என்றால் என்ன பொருள்.? அவர் போதித்த ஓரிறைக் கொள்கை மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது என்பதைத்தானே அது காட்டுகிறது? படைத்தவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் என்ற அவரது  கொள்கை முழக்கம் இன்றும் ஓங்கி ஒலிக்கிறது என்பதைத் தானே காட்டுகிறது!
அவர் தனது மரணப் படுக்கையில் இருக்கும் போதும் மக்களை நோக்கி, மக்களே ! எனது மரணத்துக்குப் பின் எனது சமாதியை விழா நடக்கும் இடமாக மாற்றி விடாதீர்கள். ஏனெனில் முந்தைய இறைத்தூதர்கள் விஷயத்தில் மக்கள் அவ்வாறு செய்து அவர்களை கடவுள்களாக்கி விட்டது போல் என்னைக் கடவுளாக்கி விடாதீர்கள் என்று எச்சரித்தார். 

இன்றும் அவரது சமாதி சவுதி அராபியாவில் மதீனா நகரில் உள்ளதை அறிவீர்கள். ஆனால் யாரும் அங்கு சென்று நபிகள் நாயகமே, எனக்கு இதைக் கொடுங்கள் அல்லது அதைக் கொடுங்கள் என்று பிரார்த்திப்பதை நீங்கள் பார்க்க முடியாது.

அவரது வாழ்நாளில் கூட அவருக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக காலில் விழப் போனவர்களை மட்டுமல்ல, தனக்காக பிறர்  எழுந்து நிற்பதைக் கூட அவர்கள் தடை செய்தார்கள். யாருக்கேனும் தனக்காக பிறர் எழுந்து நின்று மரியாத செய்வது சந்தோஷத்தை அளிக்குமானால் அவர் செல்லுமிடம் நரகம் என்பதை அறிந்து கொள்ளட்டும் என்று மக்களுக்கு உபதேசித்து சுயமரியாதைக்கு இலக்கணம் வகுத்துச் சென்றார்.

4. முந்தைய இறைத்தூதர்களின் வாழ்க்கை முன்மாதிரி இன்று நமக்கு கிடைப்பதில்லை.
இறைத்தூதர்கள் அனைவரும் எந்த மக்களுக்காக அனுப்பப்பட்டார்களோ அந்த மக்களுக்கு வாழ்க்கை முன்மாதிரிகளாகத் திகழ்ந்தார்கள். முந்தைய இறைத்தூதர்களின் வாழ்க்கை வரலாறுகள் அல்லது வாழ்க்கை முன்மாதிரிகள் முறைப்படி பதிவு செய்யப்படாத நிலையை நாம் இன்று காண்கிறோம். இறுதித்தூதர் முஹம்மது நபியவர்கள் இறுதி நாள் வரை இப்பூமியில் வாழப் போகும் அனைத்து மனிதர்களுக்கும் முன்மாதிரியாக அனுப்பப்பட்டவர்கள். அதற்கேற்றவாறு அவருடைய நபித்துவ வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களும் அவரது தோழர்களாலும் அன்னாரது துணைவியர்களாலும் அறிவிக்கப் பட்டு அவை பரிசோதிக்கப் பட்டு மிக நேர்த்தியாக பதிவு செய்யப் பட்டிருப்பதைக் காண்கிறோம்.  இப்பதிவுகளுக்கு ஹதீஸ்கள் என்று கூறப்படும். இவ்வுலகில் வாழ்ந்த எந்த தலைவருடையதும் அல்லது எந்த மதகுருமார்களுடையதும் அல்லது வரலாற்று நாயகர்களுடையதும் வரலாறு இவ்வளவு நுணுக்கமாக மற்றும் ஆதார பூர்வமாக பதிவுசெய்யப் பட்டதில்லை. மனித வாழ்வோடு சம்பந்தப் பட்ட எல்லா துறைகளுக்கும் அவருடைய வாழ்விலிருந்து அழகிய முன்மாதிரியைக் காணமுடிகிறது. உதாரணமாக அவரை பணியாளாக, எஜமானனாக, வியாபாரியாக சாதாரண குடிமகனாக, போர் வீரராக, படைத்தளபதியாக, ஜனாதிபதியாக, ஆன்மீகத் தலைவராக, கணவராக, தந்தையாக, அவரது வாழ்நாளில் கண்டவர்கள் எடுத்துக் கூறும் செய்திகளின் தொகுப்புதான் ஹதீஸ்கள் என்பவை. அவரது வீட்டுக்கு உள்ளே வாழ்ந்த வாழ்க்கையும் வெளியே வாழ்ந்த வாழ்க்கையும் என அனைத்துமே அங்கு பதிவாகின்றன. அவர் கூ.றிய வார்த்தைகள், அவர் செய்த செயல்கள் , பிறர் செய்யக் கண்டு அவர் அங்கீகரித்த செயல்கள்  என அனைத்தும் இன்று இஸ்லாமிய சட்டங்களுக்கு அடிப்படையாகின்றன.

அன்னாரது வரலாற்றின் இன்னொரு அற்புதம் அவரது வாழ்க்கை வரலாறு ஏடுகளில் மட்டுமல்ல, எண்ணங்களில் மட்டுமல்ல, அவரைப் பின்பற்றி வாழ்ந்த மற்றும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிப்பதைக் காண முடிகிறது என்பது! அன்று அவரிட்ட கட்டளைகள் இன்றும் மீறப் படாமல் பின்பற்றப் படுகின்றன என்பது மட்டுமல்ல. அவரது அன்றாடப் பழக்க வழக்கங்களை அறிந்து அதைப் போலவே தம் வாழ்வை அமைக்கத் துடிக்கும் மக்கள் கோடி, கோடி! உதாரணமாக அவர் தொழுகையில் எவ்வாறு நின்றார், அமர்ந்தார், எவ்வாறு உணவு உண்டார், என்பதை அறிந்து அதைப் போலவே வாழையடி வாழையாக கடைப் பிடிப்பவர்கள் முஸ்லிம்கள். அன்று அவர் தாடி வைத்திருந்தார், இன்று கோடிக்கணக்கான மக்கள் முகத்தில் அதைக் காணமுடிகிறது! ஏனெனில் இறைவனே அவரைப் பற்றி கூறுகிறான் இவ்வாறு:

33:21 அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. 
-------------------------------------- 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?


வெள்ளி, 3 டிசம்பர், 2021

பாலியல் விஷயத்தில் இறைவழிகாட்டுதல்

 


மனிதகுல இனப்பெருக்கத்தின் ஒரு முக்கியமான காரணியாக விளங்குபவை மனிதனுக்குள் அமைந்துள்ள பாலியல் உணர்வுகள். இந்த பாலியல் உணர்வுகளை எவ்வாறு மக்கள் தணிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே மனித வாழ்வில் அமைதியும் அமைதியின்மையும் உண்டாகின்றன. இவற்றைத் தான்தோன்றித்தனமாக தணிக்கும்போது அங்கு குழப்பங்களும் கலகங்களும் உருவாகின்றன. அதேவேளையில் கட்டுப்பாட்டோடும் நல்லோழுக்கத்தொடும் இந்த இயற்கையான உணர்வுகளைத் தணிக்கும்போது அங்கு அமைதியான கட்டுக்கோப்பான சமூகம் உருவாகிறது. எனவே பாலியல் கொடூரங்கள் திடீரென நிகழும்பொழுது சமூகம் ஒட்டுமொத்தமாக விழித்தெழுந்து குற்றவாளிகளை சபிப்பதாலோ அரசையும் காவல்துறையையும் நீதித்துறையையும் திட்டித் தீர்ப்பதாலோ பிரச்சினை தீரப்போவதில்லை. உண்மையான தீர்வு சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் ஒருங்கிணைந்து இறைவன் விதிக்கும் கட்டுப்பாடுகளை நடைமுறைப் படுத்துவதில்தான் உள்ளது.

அதற்காக மனித மனங்களைப் பண்படுத்தி நம்மைப் படைத்த இறைவன் விதிக்கும் கட்டுப்பாடுகளைப் பேணி வாழ்வதில் சில சிரமங்கள் இருந்தாலும் அவை வீண்போவதில்லை என்ற நம்பிக்கையை விதைத்து தனி மனித நல்லொழுக்கத்திற்கு அடிப்படையாக்குகிறது இஸ்லாம். இறைவனின் வேதமாகிய திருக்குர்ஆனும் நபிகளாரின் போதனைகளும் அப்படிப்பட்ட நம்பிக்கையை ஆழமாக விதைக்கின்றன.

= பெண்கள்ஆண் மக்கள்பொன்னிலும்வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடுமாடுஒட்டகை போன்ற) கால் நடைகள்சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறதுஇவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்இறைவனிடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.

(நபியே!) நீர் கூறும்: “அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமாதக்வா - பயபக்தி - உடையவர்களுக்குஅவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டுஅவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றனஅவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டுஇன்னும் இறைவனின்  திருப் பொருத்தமும் உண்டு. இறைவன் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான். (திருக்குர்ஆன்  3:14,15)

அதாவது இந்தக் குறுகிய வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை. இதில் நம் இச்சைகளைக் கட்டுப்படுத்தி நெறியோடு வாழ்ந்தால் அவற்றுக்காக அளவிலா இன்பங்கள் நிறைந்த சுவனப்பதியில் அமர வாழ்வு வாழும் வாய்ப்பை இறைவன் வழங்க உள்ளான். மாறாக நிலையற்ற இந்தத் தற்காலிக வாழ்வில் இறைவனையும் மறுமையையும் மறுத்து தான்தோன்றித்தனமாக வாழ்பவர்களுக்கு இப்பூவுலகிலும் அமைதியின்மையே. மறுமையில் நரக தண்டனையும் காத்திருக்கிறது.

மனித வாழ்வின் இந்த அடிப்படை உண்மையைப் புரிந்துக்கொண்டு அனைவரும் பேணுதலோடு வாழ்ந்தால் இந்த பூமியில் ஆரோக்கியமான சமூகம் அமையும். சுயகட்டுப்பாடு, பொறுப்புணர்வு, சகிப்புத்தன்மை, தியாகம் போன்ற அரிய பண்புகள் தனிநபர்களில் உருவாகும். பரஸ்பர அன்பு, உரிமை மற்றும் கடமை பேணுதல், விட்டுகொடுத்தல், கூட்டுறவு போன்றவற்றால் சமூக உறவுகள் செழிக்கும். அப்போதுதான் அங்கு பெற்றோரை மதிக்கும் பிள்ளைகளும், பொறுப்புணர்வு உள்ள பெற்றோர்களும், கணவனை மதிக்கும் மனைவிகளும் மனைவியை மதிக்கும் கணவன்மார்களும் சகோதரத்துவமும் சமத்துவமும் பேணும் சமூகம் உருவாகும். பூமியே சிறந்த ஒரு வாழ்விடமாக மாறும் என்பதில் ஐயமில்லை.

அவ்வாறு ஒரு ஆரோக்கியமான சமூகம் அமைய வேண்டுமானால் நாம் காலதாமதமின்றி மக்களின் சீர்திருத்தத்திற்கான வழிகளைக் கைகொள்ளவேண்டும். அதற்கு ஒன்றே மனித குலம் என்ற சகோதர உணர்வு, படைத்தவனே அனைவருக்கும் இறைவன், அவனது கண்காணிப்பில் உள்ளோம்,  அவனிடமே நம் மீழுதல், மறுமையில் இறைவனது விசாரணையும் சொர்க்கமும் நரகமும் உண்டு என்ற உறுதியான நம்பிக்கைகளை மனித மனங்களில் விதைத்து இறைவன் கற்பிக்கும் ஏவல் விலக்கல்களை பேணி வாழும் பண்பை சிறுவயது முதலே மக்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

=============== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?

http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html