இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

இறை வழிகாட்டுதலின்றி வாழ்க்கை சாத்தியமா?


Related image1. இறை வழிகாட்டலின்றி மனித வாழ்க்கை அமையாது: 

 ஏதேனும் ஒரு பெரிய நகரத்தில் இரண்டு மணி நேரத்திற்கு சாலை விதிகளை யாரும் பேண வேண்டியதில்லைஎவ்வளவு பெரிய ஆக்சிடென்டை நீங்கள் அந்த இரண்டு மணி நேரத்தில் செய்தாலும் உங்கள் மீது எந்த வழக்கும் போடப்படமாட்டாது என்ற அறிவிப்பு செய்யப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம்...... என்ன நடக்கும்?
விளைவை நாம் அனைவரும் அறிவோம்பலரும் பயம் காரணமாக வாகனத்தையே வெளியில் எடுக்க மாட்டோம்சாலையில் நடமாட மாட்டோம்எவ்வளவுதான் அவசர வேலை இருந்தாலும் அந்த இரண்டு மணி நேரம் முடியக் காத்திருந்து விட்டே புறப்படுவோம்ஆம்புலன்ஸ் உட்பட எதுவும் வீதியில் ஓடாதுஅனைத்துமே ஸ்தம்பித்துவிடும்இது எதை நமக்கு உணர்த்துகிறது?
சட்டம்ஒழுங்குபரஸ்பர புரிதல் போன்றவை இல்லையென்றால் ஒரு சமூகம் மட்டுமல்ல ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் ஒன்றிணைந்து வாழ்வதும் அந்த வாழ்க்கை நீடிப்பதும் சாத்தியமில்லை என்பதைத்தானே அறிகிறோம்எனவே முதல் மனித ஜோடி இங்கு வாழத் துவங்கிய நாள்  முதலே அவர்களுக்கு ஒழுங்கும் வாழ்க்கை வழிகாட்டுதல்களும் அவற்றை பின்பற்ற வேண்டியதன் அவசியமும் கற்பிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பது திண்ணம்மாறாக சட்டம் ஒழுங்கு வரையறைகள் என்பவை செயல்களின் விளைவுகளைக் கண்டு பாடம் படித்தல் (trial and error) செய்தபின் உருவானவை அல்ல என நாம் புரிந்து கொள்ளலாம்ஆக ஆதி முதலே மனிதர்களைப் படைத்தவன் அவர்களுக்கு இவற்றைக் கற்றுக் கொடுத்ததனால்தான் உலகம் உயிர்வாழ்கிறது!
ஒரு மனிதன் கடவுளை ஏற்பதையும் மறுப்பதையும் பொறுத்து அவனது நடத்தையும் செயல்பாடுகளும் குணங்களும் அமைகிறதுஅதாவது தன் வினைகளுக்கு மறுமையில் கேள்விக் கணக்கும் விசாரணையும் உள்ளது என்ற உணர்வு வளர்க்கப்பட்டால் அங்கு ஒழுங்கும் (order)  கட்டுப்பாடும்(discipline) உண்டாகும்இறையச்சம் குறையும்போது அல்லது அறவே இல்லாமல் ஆகும்போது அங்கு தான்தோன்றித்தனமும் குழப்பமும் மட்டுமே பெருகும்இப்படிப்பட்ட கட்டுப்பாடற்ற போக்கு ஆரம்பத்தில் இருந்தே இருந்திருக்குமானால் உலகம் என்றோ அழிந்துபோயிருக்கும்.

2. படைத்தவனே பயன்பாடு அறிவான்: 
இன்று உலகில் நாம் காணும் அல்லது புழங்கி வரும் இயந்திரங்களோடு ஒப்பிட்டால் மனித உடலே அனைத்திலும் அதி நவீனமான தொழில் நுட்பமும் சிக்கல்களும் கொண்ட இயந்திரம்  என்பதை மறுக்க மாட்டோம். ஏனைய இயந்திரங்களுக்கு இல்லாத அறிவாற்றலும், உணர்ச்சிகளும் மனிதனுக்கு உள்ளன. அந்த இயந்திரங்களின் விடயத்தில் அவற்றின் தயாரிப்பாளர் கூறுவதை அப்படியே பின்பற்றுவது இன்றியமையாதது என்பதை அறிவோம். உதாரணமாக நாம் பயன்படுத்தும் ஸ்கூட்டர் அல்லது காரின்  டயருக்கு காற்றடிக்கும் போது, அந்த வாகனத்தை தயாரித்தவர் எவ்வளவு காற்றழுத்தம் இருக்க வேண்டும்  என்று சொல்கிறாரோ அந்த அளவிற்குத்தான் நாம் காற்றடிப்போம். மாறாக, நம் வாகனம் என்பதற்காக, நம் இஷ்டம் போல காற்றடிப்பதில்லை. இப்படி ஒரு சாதாரணமான விடயத்திற்கே வாகனத்தை தயாரித்தவரின் வழிகாட்டல் தேவைப்படுகிறது என்றால், எண்ணற்ற சிக்கல்களும் நுட்பமும் நிறைந்த மனிதன் என்ற இந்த  இயந்திரத்திற்கு அதை உண்டாக்கியவனின்  வழிகாட்டல் தேவையில்லை என்று எண்ணுவது பகுத்தறிவாகுமா? நாம் சொந்தம் கொண்டாடும் ஒரு பொருளையே நம் விருப்பப்படி உபயோகிப்பது சரியல்ல எனும்போது நமக்கு இரவலாகத் தரப்பட்ட பொருளை அவ்வாறு பயன்படுத்த முடியுமா? சிந்தியுங்கள்.
3. சட்டம் ஒழுங்கு உருவாக இறைவழிகாட்டுதல் அவசியம்:
மனிதர்களிடையே நிறம், இனம், நாடு, மொழி போன்ற பல்வேறு வேற்றுமைகள் இயல்பானவை. ஒருவருக்குப் பாவமாகப்படுவது மற்றவர்களுக்குப் பாவமாகப் படுவதில்லை. அதுபோலவே ஒரு சாராருக்குப் புண்ணியமாகப் படுவது மற்றவர்களால் பாவமாகவோ அருவருக்கத்தக்கச் செயலாகவோ எண்ணப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு சமூகமாக வாழ்வதற்கு அங்கு சட்டங்களும் ஒழுங்குகளும் நிலைநாட்டப்படவேண்டும். அதற்கு சரி எது தவறு எது, நியாயம் எது அநியாயம் எது, பாவம் எது புண்ணியம் எது என்பதைப் பிரித்தறிவிக்கும் ஒரு பொதுவான அளவுகோல் இருந்தால்தான் சட்டங்களை இயற்ற முடியும். இப்பிரபஞ்சத்தில் மிகவும் அற்பமான அறிவும் ஆயுளும் கொண்ட மனிதர்கள் சொந்த அறிவை அல்லது அனுபவத்த்தை வைத்துக்கொண்டு இயற்றும் சட்டங்கள் ஒருதலைப்பட்சமானதாகவும் குறைகள் உள்ளவையாகவும் இருக்கும்.

மாறாக இவ்வுலகையும் அதில் உள்ளவற்றையும் படைத்து பரிபாலித்து வரும் இறைவனுக்கு மட்டுமே தனது படைப்பினங்கள் பற்றிய முழுமையான அறிவு உள்ளது. மனிதனுக்கும் மனித குலத்துக்கும் மட்டுமல்ல மற்ற அனைத்து ஜீவாராசிகளுக்கும் படைப்பினங்களுக்கும் எது நல்லது எது கெட்டது என்பதை மிக மிகப் பக்குவமாக அறிபவன் அந்த இறைவன் மட்டுமே. அவன் வழங்கும் அளவுகோல் அல்லது சட்டங்கள் மட்டுமே மிகவும் உன்னதமானவை. எனவே இந்த விடயத்திலும் இறைவழிகாட்டுதல் மிகவும் அவசியமானது என்பதை அறியலாம்
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அறிவுரை உங்களிடம் திண்ணமாக வந்திருக்கிறது. இது இதயங்களில் உள்ள நோய்களைக் குணப்படுத்தக்கூடியதாகவும், தன்னை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களுக்கு வழி காட்டக்கூடிய தாகவும், ஓர் அருட்கொடையாகவும் திகழ்கின்றது. (திருக்குர்ஆன் 10:57)

============= 
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.in/2015/06/blog-post_11.html
அல்லாஹ் என்றால் யார் ?

http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் 2019 இதழ்

இந்த மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்
பொருளடக்கம் 
படைத்தவனன்றி இறைவன் யாருமில்லை 2
இலக்கற்ற பயணியா நான்? -4
வழிகாட்டுதலின்றி வாழ்க்கை சாத்தியமா? -7
படைத்தவன் வழங்கும் கையேடுகள்!-9
வாசகர் எண்ணம் -10
வான்மறை வந்திறங்கிய வரலாற்றுச் சூழல்  -11
வந்த நாள் முதல் வான்மறையின் பாதுகாப்பு -14
மனித மனங்களே பாதுகாப்புப் பெட்டகங்கள்  -16
இன்றைய இறைத்தூதர் யார்?-18
இன்றைய இறைத்தூதரே முஹம்மது (ஸல்) -19
பாதுகாக்கப்படும் இறைவேதம் மற்றொரு சான்று -20
வணங்கப்படாத இறைத்தூதர் - இதும் ஒரு சான்று!-21
அகிலத்தாருக்கு அழகிய முன்மாதிரி-22

நபிமொழிகள் கூறும் நற்பண்புகள் -23

வியாழன், 15 ஆகஸ்ட், 2019

நாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை!


 
#நாட்டுப்பற்று_என்பது_என்ன?
பொதுமக்கள் காணும்படியாக நிலத்தை முத்தமிடுவதும், சில கவிஞர்கள் இயற்றிய பாடல்களை உருவிடுவதும், தேசத்தின் கொடியை பலர் காண வணங்குவதும் எல்லாம் ஊடகங்களில் நாட்டுப்பற்றாக சித்தரிக்கப் படுகிறது. இவற்றில் எந்த அளவுக்கு ஆத்மார்த்தம் உள்ளது என்பதையும் இவற்றில் பெரும்பாலானவை  புறக்கவர்ச்சிக்காக செய்யப்படுபவையே என்பதையும் நாம் அறிவோம்.
உண்மை நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பதைவிட அதிகமாக அந்நாட்டைச் சேர்ந்த மக்களை நேசிப்பதுதான். நாட்டு மக்களின் நலன் கருதி அவர்களுக்கு தன்னால் முடிந்த சேவைகளை ஆத்மார்த்தமாக செய்வதும் அவர்களோடு இணக்கமாக வாழ்வதும் அவர்களுக்காக உழைப்பதும்தான் உண்மையான தேசப்பற்று. நாட்டில் ஆரோக்கியம், கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றின் வளர்ச்சிக்கு தன்னலம் கருதாது உழைப்பதும் அவர்களை ஒரு பண்பாடு மிக்க குடிமக்களாக வார்த்தெடுக்க தன்னால் ஆன ஒத்தாசைகளை செய்வதும் நாட்டுப் பற்றின் உண்மை அடையாளங்களாகும்.
#உச்சகட்ட_நாட்டுப்பற்று  
 நாடு ஆபத்துக்கோ வறுமைக்கோ பஞ்சத்துக்கோ அநியாயத்துக்கோ அல்லது கொரோனா போன்ற கொள்ளை நோய்க்கோ இயற்க்கை சீற்றங்களுக்கோ உள்ளாகும்போது உயிரை துச்சமாகக் கருதி நாட்டை விட்டு ஓடாமல் அங்கேயே நிலைத்து நின்று நாட்டின் இடுக்கண்ணை விடுவிக்கப் பாடுபடுவது  என்பது உண்மை நாட்டுப்பற்றின் உச்சகட்டம் எனலாம்!
இப்படிப்பட்ட ஆத்மார்த்தமான நாட்டுப்பற்று மனித உள்ளத்தில் வரவேண்டுமானால் அங்கு சகமனித நேசமும் இறைநம்பிக்கையும் இறையச்சமும் அடிப்படைத்  தேவைகளாகும். இதையே இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை நமக்குக் கற்றுத்தருகிறது.
 இஸ்லாம் என்றால் ‘இறைவனுக்கு கீழ்படிந்து வாழுதல்' என்று பொருள். அதை வாழ்க்கை நெறியாக ஏற்றவர்கள் அவர்கள் வாழும் நாட்டை அதாவது நாட்டு மக்களை நேசிக்காமல் இருக்கமுடியாது.
இன, மொழி, நிற, மத வேற்றுமைகளை மறந்து மனிதகுலம் அனைத்தையும் தங்களுக்கு சரி சமமாக மற்றும் சகோதரர்களாக பாவிக்கவேண்டும் என்பது இங்கு இறைவன் கற்பிக்கும் அடிப்படைப் பாடமாகும்.
மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்  கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்தாம்.” (திருக்குர்ஆன் 49: 13)

நாட்டுமக்களை நேசிப்பதும் இறைவழிபாடே: 
மேலும் நாட்டு மக்களை நேசிப்பதை வழிபாடாகக் கற்பிக்கிறது இஸ்லாம்.
 “மண்ணிலுள்ள மனிதர்களை நேசித்தால் விண்ணில் உள்ள இறைவன் உங்களை நேசிப்பான்” என்பதும் “மனிதர்கள் மீது கருணை காட்டாதவர் இறைவனால் கருணை காட்டப்பட மாட்டார்” என்பதும் நபிமொழிகள்.
இஸ்லாம் முன்வைக்கும் மறுமை நம்பிக்கை – அதாவது இறைவனின் கட்டளைகளை பூமியில் நடப்பாக்க செய்யப்படும் எந்த ஒரு செயலும் வீண்போவதில்லை. அவற்றிற்கு இறைவனிடம் மறுமையில் அதாவது சொர்க்க வாழ்வில் நற்கூலி உண்டு என்ற உறுதியான நம்பிக்கை – இஸ்லாத்தைப் பின்பற்றி வாழ்பவர்களுக்கு அலாதியான துணிச்சலையும் வீரத்தையும் தருகிறது. நாட்டு மக்களை அநியாயத்தில் இருந்தும் அக்கிரமங்களில் இருந்தும் அந்நியர்களின் தாக்குதல்களில் இருந்தும் பாதுகாக்க சொந்த உயிரையும் உடமைகளையும் அர்பணிக்க மாபெரும் உந்துசக்தியாக இந்த நம்பிக்கை செயல்படுகிறது. வெள்ளையர்களை எதிர்த்துப் போராடி உயிர்துறந்த திப்புசுல்தான், குஞ்சாலி மரைக்காயர் போன்ற தியாகிகளை இதற்கு சில உதாரணங்களாகக் கூறலாம். 

தீமைகளில் இருந்து நாட்டைக் காப்பதும் கடமை  

தாய் நாட்டை வெளியில் இருந்து வரும் ஆபத்துக்களை விட்டும் காப்பது எவ்வாறு முக்கியமோ அதைப் போலவே முக்கியமானது நாட்டுக்குள் நடக்கும் அக்கிரமங்களில் இருந்தும் அநியாயங்களில் இருந்தும் சமூகக் கொடுமைகளில் இருந்தும் நாட்டுமக்களைப் பாதுகாப்பது என்பது. அப்போதுதான் நாடு என்பது அமைதியான வாழுமிடமாக இருக்கும். ஆனால் நாடு இன்று மக்கள் வாழ்வதற்கே வெறுக்கத்தக்க இடமாக மாறிவரும் நிலையில் உள்ளதை நமது தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகம் (NCRB) அளிக்கும் தகவல்கள் எச்சரிக்கின்றன. 
இன்று நாளொன்றுக்கு 371 தற்கொலைகளும் 106 கற்பழிப்புகளும் 8136 பொதுவான குற்றங்களும் நம் நாட்டின் காவல் நிலையங்களில் பதிவாகின்றன. காவல் நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்படாத குற்றங்கள் இவற்றைவிட ஐந்து மடங்கு அதிகம் என வேறு ஒரு கணக்கெடுப்பு நிறுவனம் தெரிவிக்கிறது. குற்றவிகிதங்கள் நாளுக்கு நாள் ஏறுமுகத்தில் உள்ளன என்பதை நாம் அனைவரும் அறிந்தும் அனுபவித்தும் வருகிறோம். 
நாட்டைக் காப்பது நம் கடமை 
இஸ்லாம் என்பது வெறும் தொழுகை, தியானம், தானம், விரதம் மற்றும் இன்னபிற சடங்குகளுக்குப் பெயரல்ல. மாறாக நம்மைச்சுற்றி நன்மைகளை வளர்க்க வேண்டும். நடக்கும் தீமைகளைத் தடுக்கவும் ஆவன வேண்டும்.
இறைத்தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

உங்களில் எவரேனும் தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும். இதுதான் இறைநம்பிக்கையின் இறுதிநிலையாகும். (நூல்: முஸ்லிம் 78)

ஆக, ஒரு இறைநம்பிக்கையாளனைப் பொறுத்தவரை அவன் தீமைகளை எதிர்த்து எவ்வாறெல்லாம் முடியுமோ அவ்வாறு எதிர்ப்பைக் காட்ட கடமைப்பட்டிருக்கிறான். எனவே  இன்று நாம் உள்ள நிலையில் எந்தத் தீமைகளை நாம் கையினால் நேரடியாகத் தடுக்க முடியமோ அந்தத் தீமைகளை நேரடியாகத் தடுக்கவேண்டும். நமது நாடு இன்று ஜனநாயக நாடாக உள்ளது. அரசியல் சாசனங்களுக்கு உட்பட்டு நாம் காணும் தீமைகளுக்கு எதிராகக் களம் இறங்க வேண்டும். ஆனால் போராட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் அல்லது  பொதுசொத்துக்களைப்  பாழ்ப்படுத்தும் செயல்களை இறைவன் ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்பதையும் அவ்வாறு செய்தால் அது நமக்கு பாவமாகப் பதிவு செய்யப்படும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
எவ்வாறு தீமைகளைக் களைவது?
தீமைகளை எவ்வாறு சமூகத்தில் இருந்து களைவது என்பதையும் அதை மீறி அந்தத் தீமைகள் சமூகத்தில் உடலெடுத்து தலைவிரித்து ஆடும்போது அவற்றை எவ்வாறு கட்டுக்குக் கொண்டுவருவது என்பதையும் எல்லாம் வல்ல இறைவனே நமக்குக் கற்றுத் தருகிறான்.

ஒழுக்கம் விதைப்பது முதல் படி!
தட்டிக் கேட்க யாரும் இல்லை என்ற உணர்வு மக்களிடையே மேலோங்கி இருப்பதால் நாட்டில் ஒழுக்க சீர்கேடுகளும் குற்றங்களும் கட்டுக்கடங்காமல் பெருகி வருகின்றன. இலஞ்சம், ஊழல், மோசடி, கொள்ளை, பாலியல் வன்முறைகள், சிசுக்கொலைகள், முதியோர் கருணைக் கொலைகள், நம்பிக்கை துரோகம்,  போன்ற அனைத்து தீமைகளையும் ஒழிக்க தனிமனிதன் திருந்தினால்தான் முடியும். தனிமனிதன் திருந்தவேண்டும் என்றால் மனிதனுக்குள் உண்மையான இறைநம்பிக்கை விதைக்கப்பட வேண்டும். படைத்த இறைவனைப் பற்றிய உண்மையான நம்பிக்கையை பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளும் விதத்தில் விதைக்க வேண்டும்.
 அதாவது இவ்வுலகத்தைப் படைத்து பரிபாலித்து வரும் அந்த சர்வவல்லமை கொண்ட அந்த இறைவன் ஒரே ஒருவனே. அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன். அவன் இவ்வுலகை ஒரு பரீட்சைக் கூடமாக ஆக்கியுள்ளான் இந்த தற்காலிக வாழ்வில் மனிதர்கள் செய்யும் பாவங்களுக்கு தண்டனையாக நரகமும் புண்ணியங்களுக்குப் பரிசாக சொர்க்கமும் மறுமையில் கிடைக்கும் என்ற உண்மையை மக்களுக்கு சிறுவயது முதலே ஊட்டி வளர்க்க வேண்டும்.   அப்போதுதான் உண்மையான இறையச்சம் உருவாகும்.
இறையச்சம் உண்டாக இறைவனை அறிவோம்
 படைத்த இறைவனைத் தவிர மற்றவை அனைத்தும் படைப்பினங்களே. இறைவன் அல்லாதவற்றைக் காட்டி அவற்றைக் கடவுள் என்று கற்பித்தால் இறைவனைப் பற்றிய மரியாதை உணர்வு மனித மனங்களில் இருந்து போய்விடுகிறது. தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற உணர்வு மேலிடுவதற்கு இது முக்கியமான காரணம் ஆகும். இதனால் குற்றங்கள் செய்ய அஞ்சாத தலைமுறைகள்தான் உருவாகின்றன. இந்நிலை மாற படைத்த இறைவனின் உண்மைப் பண்புகளைக் கற்றுக் கொடுத்து அவனை நேரடியாக வணங்க கற்றுக்கொடுக்க வேண்டும்.
= சொல்வீராக: இறைவன் ஒருவனேஅவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)
இறைவனின் தன்மைகளை இவ்வாறு புரிந்துகொண்டு இடைத்தரகர்களுக்கோ மூடநம்பிக்கைகளுக்கோ வீண் சடங்கு சம்பிரதாயங்களுக்கோ இடம் கொடாமல்  அவனை நேரடியாக வணங்க வேண்டும் என்று கற்பிக்கிறது இஸ்லாம். படைத்த இறைவன் நம்மை சதா கண்காணிக்கிறான் என்ற உணர்வு மனிதனுக்குள் விதைக்கப்படுமானால் அவன் வெளிப்படையான மற்றும் மறைவான பாவங்களில் இருந்து விலகி நிற்பான். குறைந்த பட்சம் அவற்றை செய்வதற்குத் தயங்குவான். உதாரணமாக இந்த உணர்வு நம் இளைஞர்களிடம் வந்து விட்டால் இரவில் இருளில் தனிமையில் ஆபாச வீடியோக்களை  பார்க்க மாட்டார்கள். 

இறைவனின் பரிந்துரைகளை அமுல்படுத்துவோம்!

தீமைகள் பெருகுவதற்கு அடுத்த காரணம் படைத்த இறைவன் வகுத்துத் தரும் வாழ்க்கைத் திட்டங்களையும் சட்டங்களையும் புறக்கணித்துவிட்டு மனிதன் மனம்போன போக்கில் உருவாக்கியவற்றை செயல்படுத்துவதுதான். மனிதனின் இயற்கையை நன்கறிந்தவன் இறைவன் மட்டுமே. அவன் நமக்கு வகுத்தளித்துள்ள வாழ்வியல் சட்டங்களையும் குற்றவியல் சட்டங்களையும் அமுல்படுத்தினாலே நாட்டில் குற்றங்கள் வெகுவாகக் குறைந்துவிடும். உதாரணமாக, இலஞ்ச ஊழல் மற்றும் விபச்சாரம் தொடர்பான இரு சட்டங்களை மட்டும் இங்கு காண்போம்.
நமது  நாட்டில் இலஞ்சம், மோசடி, திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் போன்றவை கட்டுக்கடங்காது பெருகுவதற்கு நமது நாட்டின் குற்றவியல் சட்டங்கள் மிகவும் துணை போகின்றன. திருடனுக்கும் மோசடிக்காரர்களுக்கும் காமுகர்களுக்கும் கருணை காட்டும்விதம் அவை அமைந்துள்ளதால் திருடர்கள் மீண்டும் மீண்டும் திருடுகிறார்கள், கற்பழிப்போர் அச்சமின்றி நடமாடுகிறார்கள் என்பது மட்டுமல்ல சிறைச்சாலைகளில் இருந்து வெளியே வரும்போது புதுப்புது கலைகளையும் கற்றுக்கொண்டு வருகிறார்கள். ஆனால் இறைவன் வழங்கும் குற்றவியல் சட்டம் திருடனின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனது முன்கையை வெட்டிவிடச் சொல்கிறது. அதே போல் விபச்சாரக் குற்றவாளிகளை சாட்டையடி அல்லது மரணதண்டனைக்கு உட்படுத்தச் சொல்கிறது. இந்த தண்டனைகளை பொதுமக்கள் சாட்சியாக நிறைவேற்றச் சொல்கிறது!
இவற்றை நடைமுறைப்படுத்தி  இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் என்ன நடக்கும்?..... சற்று யோசித்துப் பாருங்கள்! திருடர்களும் காமவெறியர்களும் உண்மையாக தண்டிக்கப்படுவார்கள் என்பது மட்டுமல்ல நாட்டுமக்களுக்கும் ஒரு பாடமாக அமையும். இச்சட்டம் அமலுக்கு வந்தால் இன்று நீங்கள் காண்பதுபோல் குற்றங்கள் மலிந்து தலைவிரித்தாடும் நிலையையோ குற்றவாளிகளும் ஊழல்களில் ஊறித்திளைத்தவர்களும் நாட்டு மக்களை மிரட்டி வாழும் நிலையையோ காணமுடியாது.

ஆக, இஸ்லாம் என்பது நம்மைப்படைத்த இறைவன் இந்த பூமியில் நாம் அமைதியாக வாழவேண்டும் என்பதற்காக அவனே வகுத்தளிக்கும் வாழ்வியல் கொள்கை. தனி நபர் ஒழுக்கத்தை இது அடிப்படையாகக் கொண்டது. இந்த மண்ணில் அமைதியையும் தர்மத்தையும் மக்கள் தாங்களாகவே நிலைநாட்ட உதவும் அருமையான அற்புதமான பரிந்துரைகளை இறைவன் அவனது இறுதி வேதம் திருக்குர்ஆன் மூலமும் அவனது தூதர் முஹம்மது நபி அவர்களின் வாழ்க்கை நடைமுறை மூலமும் உலகோருக்கு வழங்கியுள்ளான் என்பதை ஆராய்வோர் அறியலாம்! நம்மை அடக்கி ஆண்ட அந்நியர்களிடம் இருந்து நாடு சுதந்திரம் அடைந்த நன்னாளில் ஒழுக்க வீழ்ச்சியில் இருந்து பாரதத்தைக் காத்து உண்மையாகவே நன்மை வாய்ந்த நாடாக மாற்ற சபதம் ஏற்போம். 
===============
#படைத்தவனை_அறிவதற்கே_பகுத்தறிவு
http://quranmalar.blogspot.com/2016/09/blog-post_12.html
#இஸ்லாம்_என்றால்_என்ன? #முஸ்லிம்_என்றால்_யார்?
#அல்லாஹ்_என்றால்_யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html

வியாழன், 1 ஆகஸ்ட், 2019

நாம் பிறந்த காரணத்தை அறிவோமா?

Image result for purpose of lifeநாம் பிறந்த இடத்தையோ, நாம் பிறந்த நாளையோ, ஏன் நம் பெற்றோர்களையோ  கூட  நாம் தேர்ந்தெடுத்து இங்கு வரவில்லை என்பது உறுதி.  நாமாக விருப்பப்பட்டு நாமே பிறந்து இங்கு வந்தோமா என்றால் அதுவும் இல்லை.
பிறகு எதற்காக நாம் இங்கு வந்தோம்? நம் வாழ்வும் மரணமும் எதற்காக? இதை பற்றி சற்று சிந்தித்துப் பார்க்கலாமே, வாருங்கள்..
நோக்கமின்றி எதுவுமில்லை!
நம்மை சுற்றிப்  பரவிக்கிடக்கும் எண்ணற்ற பொருட்களை சற்று பாருங்கள். நாம் காணும் இயற்கைப் பொருட்களிலோ அல்லது நம்மால்  தயாரிக்கப்பட்ட பொருட்களிலோ நோக்கம் இல்லாத ஒரு பொருளையும்  நம்மால் காணமுடிகிறதா?  சரி,  நம் உடல் உறுப்புகளையே  எடுத்துக் கொள்ளுங்களேன்! நோக்கம் இல்லாத ஏதாவது ஒரு உறுப்பை  காட்டுங்கள் பார்ப்போம்!
நாம் தயாரித்த பொருட்கள் அனைத்திற்கும் பின்னால் நோக்கம் இருக்கும்போது, நம் உடல் உறுப்புகள் அனைத்திற்கும் பின்னால் நோக்கம் இருக்கும்போது, இயற்கை வளங்கள் அனைத்திற்கும் பின்னால் நோக்கம் இருக்கும்போது, உலகெங்கும் பரவிக்கிடக்கும் இவ்வளவு பெரிய மனிதகுலம் மட்டும் எந்த ஒரு நோக்கமும் இல்லாமல் வாழ்கிறது என்று எண்ணினால், அது  சரியாக இருக்க முடியுமா?

நாம் வாழ்கின்ற இந்த வாழ்க்கையின் நோக்கம்தான் என்ன?...
பெயரும் புகழும் பெறுவதற்கா?  உல்லாசமாக இருப்பதற்கா?..  செல்வந்தனாக வாழ்வதற்கா?..  இவை மட்டும்தான் வாழ்க்கையின் நோக்கம் என்றால், ஐந்தறிவு உள்ள மிருகங்களுக்கும் ஆறறிவு பெற்ற மனிதனுக்கும் என்ன வேறுபாடு?  இவற்றுக்கெல்லாம் அப்பால் நம் வாழ்விற்கு பின்னால் ஒரு உன்னத நோக்கம் இருக்க வேண்டும் என்றல்லவா நம் பகுத்தறிவு கூறுகிறது.. சற்று சிந்திப்போமே!
எனது வாழ்வின் நோக்கத்தை தீர்மானிப்பது யார்?
'நான்தான் என் வாழ்வின் நோக்கத்தை தீர்மானிப்பேன்!' என்று நீங்கள் கூறலாம். உதாரணமாக ஒரு பேனாவை எடுத்துக்கொள்வோம். அது தயாரிக்கப்பட்டதன் உண்மையான நோக்கம் என்ன? நாம் சில சமயம் பேனாவை நம் காது குடைவதற்காக பயன்படுத்துவதுண்டு. அதற்காக பேனா காது குடைவதற்காக தயாரிக்கப்பட்டது என்று நாம் கூறமாட்டோம். பேனா எழுதுவதற்காகத்தான்  தயாரிக்கப்பட்டது என்பதை உறுதியாக அறிவோம். ஆனால் அதைத் தீர்மானித்தது யார்?
அதை பயன்படுத்துபவரா? அல்லது அதனை விற்பனை செய்பவரா? அல்லது அதனைத் தயாரித்தவரா?
கண்டிப்பாக அதனை யார் முதன்முதலில் தயாரித்தாரோ அவர்தானே அதன் உண்மையான நோக்கத்தை தீர்மானிப்பவராக இருக்க முடியும்?   இந்த விஷயத்தை நமக்கும் பொருத்திப் பார்ப்போமே!

நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்க்கையின் நோக்கமாக வெவ்வேறு  காரணங்களை கூறலாம்.  ஆனால் அவையெதுவும் ஒருபோதும் நம் வாழ்க்கையின் உண்மையான நோக்கமாகாது.  மாறாக, யார் நம்மை படைத்தானோ, யார் நமக்கு இந்த வாழ்வைக் கொடுத்தானோ அவன்தான் நம் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை தீர்மானிக்க முடியும் என்பது தெளிவு!
நம்மை படைத்தவன் ஒருவன் உண்டா?
நாம் ஒரு பொருளை, ஒரு வாகனத்தை அல்லது ஒரு கட்டிடத்தை பார்க்கும்பொழுது அதை தயாரித்த ஒரு தனி மனிதனோ அல்லது நிறுவனமோ அதற்குப் பின்னால் இருப்பதை நம்மால் மறுக்க முடியாது. இந்த பிரபஞ்சம்  சீராக ஒழுங்குடன் ஒரு அழகிய கட்டமைப்புடன் இயங்குவதை நாம் காணலாம். உதாரணமாக இன்றிலிருந்து அடுத்த நூறு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவுள்ள சூரிய சந்திர கிரகணத்தின் நேரத்தையும் சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் நேரத்தையும் மிக துல்லியமாக இன்றே நம்மால் கணிக்க முடிகிறது என்பதை அறிவோம். இது பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்களும் கோள்களும் ஒரு ஒழுங்கான கட்டமைப்பில் இயங்கினால் மட்டுமே இது சாத்தியமாகும். இந்த ஒழுங்கும் கட்டமைப்பும் தானாகத் தோன்ற இயலுமா என்று சிந்தித்துப்பாருங்கள்.

ஒரு சுவற்றின் மீது நாம் பல வண்ணத் திரவங்களை வேகமாக வீசினால் அது ஓர் பறவையை போன்றோ அல்லது ஓர் மலரை போன்றோ தோற்றம் அளிக்க வாய்ப்புண்டு. ஆனால் மிக பிரபலமான மோனாலிசா  ஓவியம் அங்கு தோன்ற வாய்ப்பே இல்லை.  ஒரு தலைசிறந்த ஓவியன்தான் அந்த ஒவியத்தை வரைந்திருக்க  முடியும் என்று ஒத்துக் கொள்ளும் நாம் மோனாலிசா ஓவியத்தை விட மிக நுட்பமான இந்த பிரபஞ்சம் மட்டும் தானாக தோன்றியது என்று கூறுவது எவ்வாறு பகுத்தறிவாகும்? நிச்சயமாக இந்த பிரபஞ்சத்தை படைத்த ஒரு மாபெரும் சக்தி இருக்க வேண்டும் என்பதுதானே பகுத்தறிவு நமக்கு கூறும் உண்மை!
நம் உடல் என்ற அற்புதமும் அது வசிக்கும் இந்தப் பிரபஞ்சம் என்ற மாபரும் அற்புதங்களின் தொகுப்பும் தானாகவோ தற்செயலாகவோ உருவாகவோ தொடர்ந்து இயங்கவோ முடியாது என்பது திண்ணம்! இதற்குப் பின்னால் ஒரு அளப்பரிய தன்னிகரற்ற சக்தியும் நுண்ணறிவும் அதிபக்குவமான திட்டமிடலும் அவற்றை அயராது இயக்குதலும் அவசியம் என்பதை பகுத்தறிவு நமக்கு எடுத்துரைக்கிறது. அந்த தன்னிகரற்ற சக்தி என்பது நம்மைப்போல் பலவீனமான ஒரு மனிதனைப் போலவோ அல்லது நம்மைவிடத் தாழ்ந்த ஒரு ஜீவியாகவோ அல்லது ஒரு வெறும் உணர்வற்ற ஒருஜடப்போருளாகவோ இருக்க முடியாது என்பதும் அதே பகுத்தறிவு நமக்குச்சொல்லும் பாடமாகும். அந்த தன்னிகரற்ற சக்தியையே நாம் தமிழில் கடவுள் அல்லது இறைவன் என்றும் ஆங்கிலத்தில் காட் என்றும் அரபு மொழியில்அல்லாஹ் என்றும் நாம் அழைக்கிறோம்.
மனிதனுக்கு இறை வழிகாட்டல் அவசியமா?
மனிதனை ஒரு இயந்திரம் என்று அழைப்போமேயானால், உலகிலேயே மிகவும் அதிநவீனமான, சிக்கலான இயந்திரம் மனிதன்தான். ஏனெனில், ஏனைய இயந்திரங்களுக்கு இல்லாத அறிவாற்றலும், உணர்ச்சிகளும் மனிதனுக்கு உள்ளன.
நாம் பயன்படுத்தும் ஸ்கூட்டர் அல்லது காரின்  டயருக்கு காற்றடிக்கும் போது, அந்த வாகனத்தை தயாரித்தவர் எவ்வளவு காற்றழுத்தம் இருக்க வேண்டும்  என்று சொல்கிறாரோ அந்த அளவிற்குத்தான் நாம் காற்றடிப்போம். மாறாக, நம் வாகனம் என்பதற்காக, நம் இஷ்டம் போல காற்றடிப்பதில்லை. இப்படி ஒரு சாதாரணமான விடயத்திற்கே வாகனத்தை தயாரித்தவரின் வழிகாட்டல் தேவைப்படுகிறது என்றால், எண்ணற்ற சிக்கல்களும் நுட்பமும் நிறைந்த மனிதன் என்ற இந்த  இயந்திரத்திற்கு அதை உண்டாக்கியவனின்  வழிகாட்டல் அவசியமில்லை என்று சொல்வது பகுத்தறிவாகுமா?
மனிதனுக்கான  படைத்தவனின் வழிகாட்டல் எங்கே கிடைக்கும்?
ஏதேனும் ஒரு அதிநவீன இயந்திரத்தை பெரும் விலைகொடுத்து வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த இயந்திரத்திலிருந்து உரிய முறையில் நாம் பயனடைய வேண்டுமானால் அதற்கு அதன் பயன்பாடு பற்றிய நல்ல செயல்முறை விளக்கமும் (demo), தொடர்ந்து அந்த  இயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைக் கற்று தரும் கையேடும் (Instruction Manual) இன்றியமையாதவை என்பதை நாம் அறிவோம். அந்த வகையில் நம்மில் ஒவ்வொருவருக்கும் வாய்த்துள்ள விலை மதிக்க முடியாத பொக்கிஷமாக அமைந்திருப்பவை நம் உடலும் உள்ளமும். இவ்வுலகையும் அதில் உள்ள்ளவற்றையும் அதிபக்குவமாகப் படைத்தவன் நமகென்று ஒரு வழிகாட்டுதலைத் தராமல் 'அம்போ' என்று விட்டுவிடுவானா?
ஆம் அன்புக்குரியவர்களே,  இந்த மாபெரும் பிரபஞ்சத்தையும் அதில் உள்ளவற்றையும் மனிதனுக்கு பயனளிப்பதற்கென்றே படைத்து பரிபாலித்து வரும் அந்த அளவற்ற அருளாளன் அவனுக்கு நேரிய முறையில்
வழிகாட்டுவதற்காக மிகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ளான். நமது படைப்பின் நோக்கம், நாம் இங்கு எவ்வாறு வாழவேண்டும், இந்த வாழ்க்கைக்குப் பின் நாம் எங்கே போகிறோம் என்பன போன்ற விடயங்களைக் கற்றுத்தரவும் நமக்கு வாழ்க்கை முன்மாதிரிகளாக விளங்கவும் வேண்டி மனிதர்களில் புனிதர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைத் தன் தூதர்களாக நியமித்து அனுப்பியுள்ளான்.
அந்த சிறந்த மனிதர்களே இறைதூதர்கள் என்று அறியப்படுகின்றனர். இந்த இறைதூதர்கள் மூலமாக நேர்வழியை கற்று தரும் கையேடுகளை வழங்கினான். இந்த கையேடுகளே இறை வேதங்கள்.

நோவா (Noah), ஆபிரகாம் (Abraham), தாவுது (David), சாலமன் (Solomon), மோசஸ் (Moses) மற்றும் இயேசுகிறிஸ்து (Jesus Christ) போன்றோர் இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களில் சிலர்.  அந்த வரிசையில் இறுதியாக இவ்வுலகுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்தான் முஹம்மது நபி அவர்கள். அவர்கள் மூலமாக இறைவன் அருளிய  வேதம்தான் திருக்குர்ஆன். திருக்குர்ஆன் ஒரு குறிப்பிட்ட நாட்டினருக்கோ மொழியினருக்கோ சமூகத்துக்கோ அல்லது முஸ்லிம்களுக்கு  மாத்திரமோ அருளப்பட்டது அல்ல. மாறாக அகில உலக மக்களுக்கும் பொதுவாக அவர்களைப் படைத்தவனால் அருளப்பட்ட வழிகாட்டி நூலாகும்.

நம் வாழ்க்கையின் நோக்கத்தை நமக்கு கற்று தருவது மட்டுமல்லாமல், இந்த உலகில் நிம்மதியாக, சந்தோஷமாக வாழ, திருக்குர்ஆன் ஒரு அற்புதமான வாழ்க்கை திட்டத்தை முன்வைக்கிறது. வறுமை, பெருகி வரும் குற்றங்கள், வன்முறை, ஊழல் இப்படி எத்தனையோ பிரச்சினைகள்  மனித சமுதாயத்தை அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றன. இந்த சமுதாய பிரச்சனைகளுக்கும், தனி மனித பிரச்சனைகளுக்கும் இறைவன் தரும் தீர்வுகளைத் தாங்கி நிற்கிறது திருக்குர்ஆன் என்பதை நீங்கள் அறிவீர்களா?
ஆராய்ச்சிக்கு அழைப்பு
எதையும் கண்மூடித்தனமாக நம்பாமல், திருக்குர்ஆனை ஆராய்ந்து படித்து, சிந்திக்க இறைவன் முழு மனித சமுதாயத்திற்கும் அறைகூவல் விடுக்கிறான்.
"அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) இறைவன் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்." (திருக்குர்ஆன் 4:82)

திருக்குர்ஆனில் விசேஷமாக அப்படி என்னதான் உள்ளது? படித்துதான் பாருங்களேன்!
===========
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html