இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 18 அக்டோபர், 2018

சமத்துவம் இதன் தனித்துவம்

Related image
லகில் நாம் காணும் மதங்கள் அவற்றை நிறுவியவரின் பெயரை அல்லது உருவான இடங்களின் பெயரை அல்லது இனத்தின் பெயரைத் தாங்கி நிற்பதைக் காணலாம். ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்தவரை அது ஒரு வெற்று மதம் அல்ல, மாறாக அகில உலக மக்களுக்கும் பொதுவான ஒரு கொள்கை சார்ந்த வாழ்க்கை நெறி. அதனால்தான் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மனிதருடனோ, ஒரு இனத்துடனோ, ஒரு சமுதாயத்துடனோ அல்லது ஒரு தனிப்பட்ட நாட்டுடனோ தொடர்பு கொண்டதாக இல்லை. ஆம், இஸ்லாம் என்ற வார்த்தையின் பொருள் அமைதி என்பதாகும். இதன் இன்னொரு பொருள் கீழ்படிதல் அல்லது ஒழுங்கு என்பதாகும். அதாவது இவ்வுலகைப் படைத்தவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து வாழும் போது உண்டாகும் அமைதியே இஸ்லாம் என்று அறியப்படுகிறது. மழை, காற்று, நீர் போன்ற அருட்கொடைகளைப் போன்று இந்த மார்க்கம் எல்லா மொழியினருக்கும் எல்லா சமுதாயத்திற்கும் எல்லா காலத்தவருக்கும் பொருத்தமானது மற்றும் பொதுவானது.
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
இறைவேதம் திருக்குர்ஆன் அனைத்து மனிதகுலமும் ஒரே ஒரு ஆன்மாவில் இருந்து தோன்றியதே என்பதை மிகத்தெளிவாக அறிவித்து உலகளாவிய சகோதரத்துவத்தையும் மனித சமத்துவத்தையும் வலியுறுத்துகிறது. அத்துடன் நில்லாமல் அவற்றை வலுக்கட்டாயமாக இஸ்லாத்தை ஏற்றோரிடையே நடைமுறைப்படுத்திக் காட்டுவதை உலகம் அறியும்.
உலக அமைதிக்கான அஸ்திவாரம்
இஸ்லாத்தை ஒரு மதம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் ஒரு கொள்கை சார்ந்த வாழ்வியல் என்று பார்க்கும்போதுதான் இன்று பரவலாக மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள காழ்ப்புணர்வுகள் அகலும். இதன் அருமை பெருமைகளும் இதன் தேவையும் புரியும். இன்று மனிதகுலத்திற்கு பெரிதும் தேவைப்படும் அமைதி என்பது இறைவன் வழங்கும் இந்த வாழ்வியலை மக்கள் ஏற்று வாழ முற்படும்போதுதான் ஏற்பட வழியுள்ளது. ஏனெனில் மனிதர்களுக்கிடையே சகோதரத்துவமும் சமத்துவமும் நிலைநாட்டப் படாதவரை அமைதி என்பது எட்டாக்கனியே!
‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதும் வெற்று முழக்கங்களாக இல்லாமல் நடைமுறைக்கு வரவேண்டுமானால் அதற்கான அஸ்திவாரம் ஏக இறைக் கொள்கையே! இறைவன் ஒருவன் மட்டுமே என்பதை உறுதியாக மக்கள் ஏற்றால் மட்டுமே மனித குல சமத்துவமும் சகோதரத்துவமும் சாத்தியப்படும். அதனால்தான்  இஸ்லாத்தின் தூண்கள் என்று அறியப்படும் ஐம்பெரும் கடமைகளில் முதல் கடமையாக இதை ஆக்கியுள்ளது.
       1. சமத்துவம் பேணுவேன் என்பதற்கான உறுதிமொழி
 ஒருவர் இஸ்லாத்தை ஏற்க வேண்டுமானால் லா இலாஹ இல்லல்லாஹ், முகம்மதுர் ரசூலுல்லாஹ்” என்ற உறுதிமொழியை மனதார ஏற்று வாயால் மொழிய வேண்டும், அவ்வாறு மொழிந்த பின்னர்தான்  அவர் “முஸ்லிம் என்று அறியப்படுகிறார். இந்த உறுதிமொழியின் பொருள் “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை மற்றும் முகமது நபி அவனுடைய திருத்தூதர்” என்பதாகும்.  இந்த வாசகத்தை மொழிவதன் மூலம் இனம், நிறம், இடம், மொழி போன்ற வேற்றுமைகளைக் கடந்து அனைத்துலகுக்கும் இரட்சகனான ஏக இறைவனை மட்டுமே வணக்கத்துக்குரியவனாகவும் அவனது தூதரை என் வாழ்க்கை வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொள்கிறேன் என்பதை அவர் உறுதிபட ஏற்கிறார்.
இதை ஏற்ற மாத்திரத்திலேயே அவர் பலதெய்வ வழிபாடு, ஆள் தெய்வ வழிபாடு, உருவ வழிபாடு போன்ற அனைத்துக் வித வழிபாடுகளில் இருந்தும் அவற்றோடு இணைந்த மூட நம்பிக்கைகளில் இருந்தும் சடங்குகளில் இருந்தும் இடைத்தரகர்களின் பிடியில் இருந்தும் பிரிவினை வாதங்களில் இருந்தும் விலகி பரிசுத்தமாகி விடுகிறார்.
கலிமா என்ற இந்த உறுதிமொழிக்கு அடுத்ததாக ஐவேளைத் தொழுகை நிறைவேற்றல் இஸ்லாமிய மார்க்கத்தில் அடுத்த கடமையாகும்.
2. சமத்துவத்தில் சகோதரத்துவத்தில் தொழுகையின் பங்கு  
இந்த உலக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை. இதில் மனிதன் தன் ஆசாபாசங்களுக்கும் மனோ இச்சைக்கும் உட்பட்டு காலப்போக்கில் கொண்ட கொள்கையில் இருந்து விலகிவிட வாய்ப்புகள் தாராளம் உள்ளன. எனவே இஸ்லாம் என்ற கொள்கையில் நிலைத்து நிற்க இறைவனால் ஏவப்பட்ட கடமையே தொழுகை என்பதை ஆராய்வோர் அறியலாம். அன்றாடம் ஐவேளை இறைவனின் தொடர்பையும்  நினைவையும் புதுப்பிக்கும் நடவடிக்கை தொழுகை. உடல்தூய்மை பேணி தொழுகைகளை வேளாவேளை நிறைவேற்றுவதன் மூலம்  இறை உணர்வும் இறைவனுக்கு பதில் சொல்லவேண்டும் என்ற பொறுப்புணர்வும் உண்டாவதால் அது மனிதனை பாவங்களில் இருந்து விலக்கி வைக்கிறது. இந்தத் தொழுகைகளைக் கூட்டாக நிறைவேற்றும் போது சமூகத்தில் சமத்துவமும் சகோதரத்துவமும் வலுவடைகிறது.   தோளோடு தோள் சேர்ந்து வரிசைகளில் நெருக்கமாக அன்றாடம் தொழுகைக்காக நிற்கும்போது தீண்டாமை, தாழ்வு மனப்பான்மை, உயர்வு மனப்பான்மை, செருக்கு போன்ற தீய பண்புகள் மனித உள்ளங்களில் இருந்து களையப்படுகின்றன.

3. நோன்பின் மாண்பு
நோன்பின் மூலம் ஆன்மீகப் பரிசுத்தமும் சுயக் கட்டுப்பாடும் சமூகத்தின் தேவை உணரும் பண்பும் உருவாகின்றன. சக நோன்பாளிக்கு உணவளிப்பது அந்த நோன்பாளி பெறும் நற்கூலிக்கு சமமான கூலியைப் பெற்றுத்தரும் என்பது நபிமொழி. இதன் காரணமாக ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் செல்வந்தர்கள் முன்வந்து ஏற்பாடு செய்யும் நோன்புக் கஞ்சி விருந்தும் இப்தார் உணவுவிருந்துகளும் சகஜமாக நடைபெறுவதைக் காணலாம். இந்த விருந்துகளில் ஏழை பணக்காரன், மொழி வேற்றுமை போன்றவை மறந்து அனைவரும் சமபந்திகளில் அமர்ந்து உணவுண்பதும் நடைபெறுகின்றன.

4. வறுமை ஒழிப்பில் ஜகாத்

செல்வம் என்பது இறைவனுக்கு சொந்தமானது, அது தற்காலிகமாக தன்னிடம் தரப்பட்டுள்ளது என்ற உணர்வை தனிமனிதனிடம் உண்டாக்கி அதை ஏழைகளோடு பங்கிட்டு உண்ணச் செய்கிறது ஜகாத் என்ற கட்டாய தர்மம். இதை இஸ்லாமியர்கள் கூட்டுமுறையில் ஆங்காங்கே நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். உண்மையில் சமூகத்தில் குற்றங்கள் பெருகக் காரணங்களில் ஒன்று வறுமை. ஜகாத் விநியோகம் நிறைய ஏழைகளின் வறுமை நீங்க ஏதுவாகிறது. செல்வந்தர்கள் தமக்கு வாய்த்த செல்வத்தின் மூலம் சக மனிதனின் துயர் துடைக்கும் நடவடிக்கையே ஜகாத்!
5. ஹஜ்ஜ் என்ற உலக முஸ்லிம்கள் சங்கமம்!

போதிய பொருள் வசதியும் ஆரோக்கியமும் கொண்ட முஸ்லிம்கள் மீது வாழ்வில் ஒரு முறையேனும் ஹஜ்ஜ் என்ற புனித யாத்திரை மேற்கொள்வது கடமையாக்கப்பட்டுள்ளது. உலக முஸ்லிம்கள் இனம், நிறம், மொழி, இடம் போன்ற வேற்றுமைகள் மறந்து சகோதரர்களாக சங்கமிக்கும் நிகழ்வே வருடாவருடம் மக்காவில் நடைபெறும் ஹஜ்ஜ்.  இஹ்ராம் என்ற வெள்ளை சீருடை அணிந்து மக்காவில் அமைந்துள்ள கஅபா என்ற புனித ஆலயத்தை வலம் வருதல், சஃபா மற்றும் மர்வா என்ற குன்றுகளுக்கு இடையே ஓடுதல், மினா என்ற பள்ளத் தாக்கில் தங்குதல், அரபா பெருவெளியில் ஒன்று கூடுதல், தொழுகைகள் மற்றும் பிரார்த்தனைகள் நிறைவேற்றுதல் போன்ற பல சடங்குகள் ஹஜ்ஜ் என்ற கடமையின் அம்சங்களாகும். ஒன்றே மனிதகுலம் ஒருவனே இறைவன் என்ற கொள்கை முழக்கத்தை நடைமுறை வடிவில் உலகறியச் செய்து உலகளாவிய சகோதரத்துவத்தை பறைசாற்றுகிறது ஹஜ்ஜ் என்ற கடமை!
============ 
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
படைத்தவனை அறிவதற்கே பகுத்தறிவு 

சனி, 13 அக்டோபர், 2018

சமத்துவத்தை மறுத்தவர்கள் நிகழ்த்திய கொடுமைகள்


மனிதகுல விரோதியான ஷைத்தானின் தாக்கத்தால் சக மனிதன் தனக்கு சகோதரனே மற்றும் சமமானவனே என்ற உண்மையை மக்கள் மறந்தார்கள். சகோதரன் என்பதை ஏற்றுக்கொண்டால் சமமானவன் என்பதை மறுக்கமுடியாதல்லவா? யார் மறுத்தாலும் மறைத்தாலும் உண்மை உண்மையே. அதை தன் இறுதிவேதம் மூலமாக மீண்டும் நினைவூட்டுகிறான்:
 மனிதர்களேநாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில்உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம். திண்ணமாகஅல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும்தெரிந்தவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 49:13)
மக்களை சுரண்டப் புறப்பட்ட ஆதிக்க சக்திகளும் இடைத்தரகர்களும்  இனம், நிறம், மொழி போன்றவற்றைக் காரணம் காட்டி அவர்களுக்குள் ஏற்ற தாழ்வுகளும் தீண்டாமையும் கற்பித்தார்கள். சிலர் தங்களையே கடவுள் என்று கூறிக்கொண்டார்கள். சிலர் தங்கள் இனமே உயர்ந்தது, தங்கள் இனத்தவர்களே கடவுளுக்கு மிக நெருங்கியவர்கள் என்றார்கள். சிலர் தங்கள் நிறத்தை, மொழியைக் காரணம் காட்டினார்கள். இவ்வாறு தன் சகோதர மனிதர்களை சுரண்டினார்கள், அடக்குமுறைகள் கையாண்டு கொடுமைப் படுத்தினார்கள். சுயநலத்துக்காக சக மனிதர்களின் உரிமைகளை மறுத்தார்கள். ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கவும் செய்தார்கள்.

சரித்திரம் முழுக்க அதுபோன்ற பற்பல நிகழ்வுகளால் நிறைந்திருந்தாலும் ஒருசில உதாரணங்களை மட்டும் சுருக்கமாக இங்கு காண்போம்.
ஏன் இவற்றை நினைவு கூருகிறோம்?
இன்று உலகெங்கும் ஏறக்குறைய நான்கில் ஒரு பங்கு மக்கள் இஸ்லாம் எனும் வாழ்வியல் கொள்கையை ஏற்று வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இவர்களும் இவர்களுக்குப் பிறக்கும் தலைமுறையினரும் மிக எளிதாக மனித சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் எனும் மாபெரும் அருட்கொடைகளை அனுபவித்துக்கொண்டு வாழ்கின்றனர். அந்த அருட்கொடைகள்  மறுக்கப்பட்டதனால் அல்லது மறைக்கப்பட்டதனால் பிற மக்கள் அனுபவித்த கொடுமைகளை நினைவு கூரும்போதுதான் அவற்றின் அருமை பெருமைகளை நாம் உணர முடியும். இன்னும் சகமனிதர்கள் சகோதரர்களே என்ற அடிப்படையில் அநீதி இழைத்தோருக்கு இறைவனிடம் விசாரணை காத்திருக்கிறது என்பதை எச்சரிப்பதும் நம் கடமையாக இருக்கிறது.
காலனி ஆதிக்க சக்திகள் இழைத்த கொடுமைகள்:
மனித சரித்திரத்தில் சக மனிதன் தன் சகோதரனுக்கு இழைத்த கொடுமைகளில் மிகவும் ஈவிரக்கமில்லாதவை ஐரோப்பிய நாடுகள் நிகழ்த்திய காலனி ஆதிக்கத்தின்போது நிகழ்ந்துள்ளன. ஆயுத மேன்மை அடைந்தபோது அவர்களின் எண்ணமெல்லாம் எவ்வாறு இருந்தது தெரியுமா? ‘நாம் புதுப்புது நாடுகளை கைப்பற்றி நம் காலனிகளாக மாற்றவேண்டும் அங்குள்ள இயற்கை வளங்களைக் கைப்பற்ற  வேண்டும், அவ்வளங்களை செப்பனிட்டு விற்று காசாக்கவேண்டும்.  நம் தொழிற்சாலைகளில் உருவாகும் அளவுக்கதிகமான பொருட்களை நம் காலனிகளில் விற்க வேண்டும். கழிவுகளை கொட்டும் இடமாகவும் அவற்றை நாம் பயன்படுத்த வேண்டும்’ என்பதாக இருந்தது. தீவிரமாக கடல்மார்க்கமாக வெவ்வேறு கண்டங்களுக்கும் நாடுகளுக்கும் தீவுகளுக்கும்  பாதைகள் கண்டறிந்தார்கள். ஆயுத முனையில் அவ்விடங்களில் இயல்பு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருந்த அப்பாவி மனிதர்களை துப்பாக்கி முனையில் அடிமைகளாக்கினார்கள். அடங்க மறுத்தோரை கொன்று குவித்தார்கள். நூற்றாண்டுகளாக இவர்கள் நிகழ்த்திய மனித உரிமை மீறல்களும் கொடுமைகளும் ஏராளம், ஏராளம். ஆயினும் எடுத்துக்காட்டாக சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.

அமேரிக்க குடியேற்றம்
அமெரிக்கா கண்டங்களுக்கு கடல்வழி மார்க்கம் கண்டுபிடித்த கொலம்பஸ் குழுவினரும் அவரைப் பின்தொடர்ந்தவர்களும் அங்கிருந்த பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை அடக்குமுறைகளைக் கையாண்டு அடிமைப்படுத்தினார்கள். அவர்களை அடிமைகளாகப் பிடித்து  ஸ்பெயினுக்கு ஏற்றுமதி செய்தனர். அவர்களது தங்க வயல்களைக் கபளீகரம் செய்தனர்.
 கொலம்பசும்  அவருக்குப் பின் அது போன்று வந்தவர்களும் வெறும் ஆண்டுகளில் மட்டும்தூக்கிலிட்ட கொலை செய்தஎரித்தசிதைத்ததற்கொலைக்குத் தள்ளிய செவ்விந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 2,50,000 என்று கணக்கிடப்படுகிறது. இத்தகைய ஆக்கிரமிப்புகள்அமெரிக்கக் கண்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. அமெரிக்க கண்டத்தின் பல பகுதிகளில் பல நூறாண்டுகளாக வாழ்ந்த மக்களை இனப் படுகொலை செய்து  ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்து வெள்ளை இனத்தவர்கள் குடியேற்றப்பட்டனர்.
அட்லாண்டிக் சமுத்திரத்தின் கடலோரம் துவங்கிபசிபிக் சமுத்திரக் கரை வரை, அத்தனை பூர்வ குடியினரையும் அழித்தொழித்துஅமெரிக்க சாம்ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது. இதற்கு சுமார் 300 ஆண்டுகள் பிடித்தன. இந்த 300 ஆண்டுகளும் உலகமே அதிர்ந்து போகிற அளவுக்கான கொடுமைகள் மனித குலத்தின் மீது தொடுக்கப்பட்டன. 
தங்களின் கட்டுமானப்பணிகளுக்காக ஏற்கனவே அடிமைப்படுத்தி வைத்திருந்த தென்னாப்பிரிக்காவின் கருப்பு இனத்தவரை இறக்குமதி செய்து ஆடு மாடுகளை விற்பதை போல விற்றார்கள். இந்த வெள்ளை தேசத்தின்’ விரிவாக்கத்திற்காக உள்ளூர் மக்கள் மீது படுகொலைகள்உயிருடன் எரிப்புஏமாற்று வேலை,மோசடிபெண்கள் மீது சொல்ல முடியாத பாலியல் வன்கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.  10 கோடி பழங்குடிகளான  செவ்விந்தியர்களைக் காவு கொடுத்து அவர்களின் அதன்பின் உருவானதே இன்று நீங்கள் காணும் வெள்ளை தேசம் அமெரிக்கா! அந்த அமரிக்காதான் இன்று உலகெங்கும் தீவிரவாதத்தை ஒழிப்போம் என்று “சமாதானம்” பேசிக்கொண்டிருக்கிறது என்பதை கவனிக்கலாம்.
ஆனால் ஒவ்வொரு மனித உரிமை மீறல்களும் முழுமையாக விசாரிப்புக்கு உள்ளாக இருக்கின்றன. ஆம், மறுமையில் இறுதித்தீர்ப்பு நாளன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான முறையில் நீதி வழங்குவான் இறைவன்:

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - அக்டோபர் 2018 இதழ்

பொருளடக்கம்:
ஓரிறைக் கொள்கையின்றி ஒருமைப்பாடு சாத்தியமில்லை -3
சமத்துவத்தை மறுத்தவர்கள் நிகழ்த்திய கொடுமைகள்  -6
அடிமை வாணிபக் கொடுமைகள் -9
இறைவனின் பெயர் சொல்லி மறுக்கப்பட்ட
மனித சமத்துவம் -13
இனப்பெருமை பாராட்டுவோருக்கு
இறைவன் விடுக்கும் சவால் -16
சமத்துவத்துக்கு தடை நிற்கும் நாத்திகம் -19
திருடர்கள் காத்திருக்கிறார்கள்! -21

திங்கள், 8 அக்டோபர், 2018

ஓரிறைக் கொள்கையின்றி சமத்துவம் சாத்தியமில்லை!

ஒரே மூலத்தில் இருந்து ஒரே விதமான உடலமைப்போடு படைக்கப்பட்டுப் பல்கிப் பெருகிய  மனிதர்களுக்குள் ஒருவருக்கொருவர் ஏற்றத்தாழ்வுகளும் தீண்டாமையும் கற்பிப்பதற்கு முக்கியமான காரணமாக இருப்பது படைத்த இறைவனைப்பற்றிய தவறான புரிதல்களே! படைத்த இறைவன் ஒருவனுக்கே தெய்வீகத் தன்மை உள்ளது என்பதை மக்கள் ஏற்காதவரை மனித சமத்துவமும் சகோதரத்துவமும் சாத்தியமில்லை. அவ்வாறே படைத்தவனை மறுக்கும் நாத்திக மனப்பான்மையும் மனித சமத்துவத்துக்கு எதிரானதே 
என்பதை ஆராய்வோர் அறிய முடியும். !

வரலாற்றை ஆராயும்போது கீழ்கண்டவை நமக்கு புலனாகும்:
= மக்களின் அறியாமையை பயன்படுத்தி சில ஆட்சியாளர்கள் தங்களை தாங்களே கடவுளாக அறிவித்துக்கொண்டார்கள். இடைத்தரகர்களை ஏவிவிட்டு குடிமக்களின் உள்ளங்களிலும்,உணர்வுகளிலும் அதை உறையச் செய்தார்கள். இதன் விளைவாக அந்த மக்கள் தங்கள் ஆட்சியாளர்களைக் கடவுளர்களாகப் பார்த்தனர். அவர்களுக்கு வணக்கமும் செலுத்தினார்கள்.
= இன்னும் சிலர் தாங்களே கடவுளுக்கு நெருக்கமான இனம் என்றும் தாங்கள் மூலமே இறைவனை அணுக முடியும் என்றும் கூறி தங்களை சாதாரண மக்களை விட மேன்மையானவர்கள் என்று  நம்ப வைத்தார்கள். ஆள்வோரையும் குடிமக்களையும் தங்களுக்குப் பணிய வைத்தார்கள்.
இஸ்லாம் வழங்கும் தீர்வுகள்
முதலில் மனிதன் மனிதனைக் கடவுளாக்கும் மடமையை இஸ்லாம் குறுக்கிட்டு மக்களைத் திருத்துகிறது. இறைவனைப் பற்றிய தவறான புரிதலைக் களைகிறது.
சொல்வீராக: இறைவன் ஒருவனேஅவன் தேவைகள் அற்றவன். அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)
அதாவது ஏகனாகிய இறைவன் ஏகன், தனித்தவன், தேவைகள் ஏதும் இல்லாதவன். ஒப்பில்லாதவன். அவனது படைப்பினங்களைப் போல் மற்றவர்களை சார்ந்து இராதவன். தாய் தந்தைமனைவிமக்கள் என எந்த உறவுகளும் இல்லாதவன். தன்னிகரற்றவன். இவையே நாம் வணங்குவதற்குத் தகுதி வாய்ந்த இறைவனின் உண்மை இலக்கணங்கள் என்பதை மனித மனங்களில் விதைக்கிறது.
அதே போல படைத்தவனைத்தவிர மற்றவை அனைத்தும் படைப்பினங்களே. எனவே அந்த இறைவனுக்கு பதிலாக படைப்பினங்களை - அவை உயிருள்ளவை ஆயினும் சரி உயிரும் உணர்வுமற்ற உருவங்களாயினும் சரி – அவற்றை வணங்குவதோ அல்லது கடவுள் என்று கற்பிப்பதோ மோசடியும் பாவமும் ஆகும் என்கிறது இஸ்லாம். இறைவன் அல்லாதவற்றை இறைவனுக்கு ஒப்பாக்கி வழிபடும் செயல் இணைவைத்தல் என்று அறியப்படுகிறது. சமூகத்தில் பல குழப்பங்களுக்கு இட்டுச்செல்லும் இந்தப் பாவத்தில் ஈடுபடுவோருக்கு மறுமையில் கடுமையான தண்டனை காத்திருக்கின்றது என்று திருக்குர்ஆன் எச்சரிக்கிறது:
. = அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கிவிட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” (திருக்குர்ஆன் 5:72)
(அல்லாஹ் என்றால் 'வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்என்று பொருள்)
இடைத்தரகர் தேவை இல்லை
அடுத்ததாக இறைவனுக்கு இடைத்தரகர்கள் தேவை இல்லை என்பதையும் தெளிவாகக் கூறுகிறது இஸ்லாம்.
=  (நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும்என்னையே விசுவாசம் கொள்ளட்டும். (திருக்குர்ஆன் 2:186)

இடைத்தரகர்களுக்கு இடம்கொடாமல் படைத்த இறைவனை நேரடியாக வணங்கும்போது இனம், நிறம், இடம், மொழி இவற்றால் பிரிந்து கிடக்கும் மனிதர்களுக்கு இடையே பிணைப்பும் ஒருமைப்பாடும் சமத்துவமும் சகோதரத்துவமும் இயற்கையாகவே வளர ஆரம்பிக்கும்.

இனமேன்மை பாராட்டுவோருக்கு மறுப்பு:
தொடர்ந்து பிறப்பினால் மேன்மை பாராட்டுவோரின் வாதத்தையும் தவிடுபொடியாக்கி விடுகிறது இஸ்லாம்:
 மனிதர்களேநாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில்உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம். திண்ணமாகஅல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும்தெரிந்தவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 49:13)
இறைவனுக்கு தன் செயல்களுக்கு பதில் சொல்லியாகவேண்டும் என்ற பொறுப்புணர்வே இறையச்சம் என்று அறியப்படுகிறது. அதாவது அனைவரின் மூலமும் ஒன்றே என்பதையும் இறையச்சம் யாருக்கு அதிகமாக இருக்கிறதோ அவரே இறைவனுக்கு நெருங்கியவர் என்று இறைவன் தெளிவுறக் கூறுகிறான்.
அத்துமீறல்களுக்கு தண்டனை
தொடர்ந்து தெளிவான மறுமைக் கோட்பாட்டைக் கற்பித்து நம் வினைகளுக்கு விசாரணை உண்டு என்ற உண்மையையும் கற்பித்து சக மனிதர்களின் உரிமைகளை ஏன் பேணவேண்டும் என்பதற்கான காரணத்தையும் கற்பிக்கிறது:
= ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான்உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;.இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
அதாவதுஇவ்வுலகில் நாம் செய்யும் பாவங்களுக்கும் அத்துமீறல்களுக்கும் தண்டனையாக நரகமும் புண்ணியங்களுக்கும் தியாகங்களுக்கும் பரிசாக சொர்க்கமும் கிடைக்கும்.

ஓரிறைக் கொள்கையால் நடைமுறைக்கு வரும் ஒருமைப்பாடு
Image result for muslim congregational prayerபடைத்தவனான ஏக இறைவனை விட்டு படைப்பினங்களை வணங்கத் தலைப்படும் போது மனித குலமும் அவரவர்களின் கடவுள் கொள்கையைப் பொறுத்து கூறுபோடப் படுகிறது. இந்தக் கொடுமைக்கு பலியான நாடுகள் பல. அவற்றில் சிறந்த உதாரணம் நமது நாடுதான். நமது நாட்டின் ஜாதி அமைப்புக்களைப் பாருங்கள். எந்த ஜாதியைச் சேர்ந்தோரானாலும் நாம் அனைவரும் மனிதர்களே. ஒரே இரத்தம்ஒரே மாமிசம் ஒரே உடலமைப்பு  என எல்லாம் ஒன்றாக இருந்தும் ஒரு ஜாதி மக்கள் இன்னொரு ஜாதி மக்களோடு கலப்பதில்லை. இதில் உயர்ந்த ஜாதிதாழ்ந்த ஜாதி,தாழ்த்தப்பட்டோர்தீண்டத்தகாதவர்கள் என பல கூறுகள்! என்ன காரணம்ஒவ்வொரு ஜாதியும் தங்களுக்கு வெவ்வேறு தெய்வங்கள் இருக்கின்றன என்று நம்புகிறார்கள். அவற்றை குலதெய்வம் என்று சிறப்பு செய்கிறார்கள். இவை மட்டுமல்லஊர்களையும் எல்லைகளையும் பிரிக்கும் காவல் தெய்வங்களும் எல்லைச்சாமிகளும் மனிதர்களுக்கிடையே மேலும் பிளவை வலுப்படுத்துகின்றன. இஸ்லாம் என்ன சொல்கிறது என்றால்இந்த கற்பனை தெய்வங்களை எல்லாம் விலக்கி வைத்து அனைவரும் உங்களைப் படைத்து பரிபாலித்து வரும் அந்த ஒரே இறைவன் பக்கம் மீளுங்கள் என்கிறது.
 இன்று இந்தியாவில் வாழும் முஸ்லிம்களை எடுத்துக் கொள்ளுங்கள்இவர்கள் யாருமே அரபு நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்களோ நபிகள் நாயகத்தின் வாரிசுகளோ அல்ல. இவர்கள் இதற்கு முன் இந்துக்களாகவோ கிறிஸ்துவர்களாகவோ இருந்து இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்றுக்கொண்டவர்களின் தலைமுறையினர்தான். இவர்கள் இந்த ஏக இறைகொள்கையை ஏற்றுக் கொண்டபின் என்னென்ன புரட்சிகள் நடந்துள்ளது பாருங்கள். இன்று இவர்களுக்கு ஜாதிகள் இல்லை. இவர்களிடையே தீண்டாமை இல்லை. ஒரு காலத்தில் தீண்டாமையால் மேல்ஜாதிகீழ்ஜாதி என்று சிதறுண்டு கிடந்தார்கள். இம்மக்களை இன்று பள்ளிவாசல்களில் தொழுகைக்காக ஒரே அணியில் தோளோடு தோள் நிற்க வைப்பதும் ஒரே தட்டில் பாகுபாடின்றி உண்ண வைப்பதும் இந்த ஓரிறைக்கொள்கை நிகழ்த்தி வரும் அற்புதங்களே!

நாத்திகம் எவ்வாறு சமத்துவத்துக்கு எதிரானது?
இறைவனின் பெயரால் கற்பிக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமைகளுக்கு  எதிராகப் போராடியவர்கள் பலர் இவற்றுக்கான தீர்வு தேடி நாத்திக இயக்கங்களின் பால் புகலிடம் தேடினார்கள். ஆனால் அங்கும் தீண்டாமைக்குத் தீர்வு கிடையாது என்பதை கீழ்கண்ட உண்மைகளை ஆராய்வோர் உணரமுடியும்: 
1. நாத்திகம் இறைவனின் உள்ளமையையும் வல்லமையையும் மறுமைக் கொள்கையையும் மறுப்பதால் மக்கள் தங்கள் செயல்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வை இல்லாமல் ஆக்குகிறது. எனவே தீண்டாமை அல்லது பாகுபாடு கற்பித்தல் மூலம் ஆதாயம் அடைபவர்களைத் திருத்த வழியில்லை.
2. அனைத்து மனிதகுலமும் ஒரே ஆண்-பெண் ஜோடியில் இருந்து உருவானதே என்ற கூற்றை நாத்திகம் மறுகிறது. மாறாக வெவ்வேறு குரங்குகளில் இருந்து பரிணமித்தவர்களே மனிதர்கள் என்ற கருத்தைக் கற்பிப்பதால் இனம் நிறம் இடம் போன்ற பாகுபாடுகளுக்கும் தீண்டாமைக்கும் துணை போகிறது.

3. நாத்திகர்களிடம் ஒருங்கிணைந்த கொள்கை என்பது கிடையாது.   காரணம் ஒவ்வொரு தனிமனிதனும் என்ன நினைக்கிறானோ அதுதான் நாத்திகத்தின் அடிப்படை. ஏன் சமத்துவம் பேணவேண்டும் என்ற கேள்விக்கு நாத்திகத்திடம் பதில் கிடையாது. 
 4. தான்தோன்றித்தனம் ஒருபோதும் தனிநபர் நல்லோழுக்கத்திற்கான அடிப்படையோ சித்தாந்தமோ தரமுடியாது என்பது தெளிவு. மனிதன் ஒழுக்கம் பேணவேண்டும் அல்லது கொண்ட கொள்கையில் பிடிப்போடு இருக்கவேண்டும் அல்லது செயல்பட வேண்டும் என்பதற்கான ஊக்குவிக்கும் காரணி இயல்பிலேயே நாத்திகத்திடம் இல்லை!

--------------------------- 
ஒன்றே குலம் ஒருவனே இறைவன் நாம் ஏன் பிரிந்தோம்?
இஸ்லாம் என்றால் என்ன?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html
இனவெறிக்கு வித்திட்ட ஆத்திகமும் நாத்திகமும் 
http://www.quranmalar.com/2018/09/blog-post.html