இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 24 ஜூலை, 2017

மக்கிப் போகும் வெட்க உணர்வு!


 ஒருகாலத்தில் ஆண்களை வசீகரிக்க விலைமாதர்கள் அணிந்து நடந்த அரைகுறை ஆடைகளை இன்று குடும்பப்பெண்கள் உட்பட பரவலாக அணிந்து எந்த ஒரு கூச்சமோ குற்ற உணர்வோ இன்றி பெண்கள் நடமாடுவது வெட்க உணர்வு அழிந்து வருகிறது என்பதை நமக்குத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. உடலின் எந்த பாகங்களை மணமுடித்த தங்கள் கணவனுக்கு மட்டும் காட்டினார்களோ அந்த பாகங்களை இன்று குடும்பப்பெண்கள் இலைமறைக்காயாகவோ இறுக்கமான உடை அணிந்தோ அல்லது திறந்தோ கூடப் பொதுமக்களுக்கு காட்சிப்பொருளாக வைப்பது திருமணம் என்ற புனித ஒப்பந்தத்தை மீறும் செயலாகும். விலைமாதர்கள் தங்கள் உடலைக் காட்சிப் பொருளாக்குவது வாடிக்கையாளர்களைக் கவருவதற்காகவே என்பதில் சந்தேகமில்லை. இனிப்புப் பண்டங்களை ஷோகேஸில் வைத்து எப்படி வெளிச்சம்போட்டுக் காட்டி வாடிக்கையாளர்களை ஈர்கிறார்களோ அவ்வாறு குடும்பப் பெண்கள் தங்களின் உடலின் பாகங்களை காட்சிப் பொருளாக்க வேண்டியதன் அவசியம் என்ன?
ஆண்களின் ஆடையும் பெண்களின் ஆடையும்
ஆண்களின் உடைகள் உடலை முழுமையாக மறைக்கும் வண்ணமும் உடலோடு ஒட்டாமல் காற்றோட்டம் உள்ளவையாகவும் ஆரோக்கியமானவையாகவும் காண்கிறோம். ஆனால் ஆண்களை விட பலவீனமானதும் மென்மையானதும் கவர்ச்சிகரமானதும் ஆன உடலமைப்பு கொண்ட பெண்கள் அணியும் ஆடைகள் பலவிதமான ஜன்னல்களோடும் உடலோடு இறுக்கமாக ஒட்டியவையாகவும் நீளம் குறைந்தவையாகவும் கைகால்கள் இல்லாதவை யாகவும் இருப்பதைக் காண்கிறோம். சிறுவயது குழந்தைகளின் உடையில் உட்படஏன் பள்ளிக்கூட சீருடைகளில் கூட இந்த ஆடைக்குறைப்பு  பின்பற்றப்படுவதைக் கண்டுவருகிறோம். குறிப்பாக சில ஆன்மீக அல்லது மத அமைப்புகள் நடத்துகின்ற கல்விக்கூடங்களில் பெண்களின் ஆடைகுறைப்பை சட்டம் போட்டு நடைமுறைப்படுத்தி வருகிறார்கள் என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று! இந்த வித்தியாசத்திற்கு என்ன காரணம்?

காற்றோட்டத்திற்கான ஜன்னல்களா?

  இவை உஷ்ணத்தைத் தாங்கமுடியாததால் காற்றோட்டத்திற்காக திறக்கப்பட்ட ஜன்னல்களா?  துணிப் பற்றாக்குறை காரணமாக அவ்வாறு தைக்கப்பட்டனவாஅல்லது வறுமை காரணமா? ...இப்படி இதற்கான பதிலை எப்படி சிந்தித்தாலும் இவை எதுவுமே அல்ல என்பதை நாம் அறிவோம். ஆனால் நாம் ஒரேயொரு காரணத்தை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.... அது என்ன?
  ஆம்பெண்ணின் கவர்ச்சிகரமான உடல் உறுப்புக்கள் பொது மக்களின் அதாவது அந்நிய ஆண்களின் பார்வைக்கு விருந்தாக வேண்டும் என்ற ஒரே நோக்கமே இதன் பின்னணியில் உள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை! பெண் என்பவள் பலவீனமானவள்அவளது உடலின் கவர்ச்சி கண்டு  ஏதாவது அந்நிய ஆண் ஈர்க்கப்பட்டால் அங்கு அவளது கற்பும் தொடர்ந்து உயிரும் பறிபோக வாய்ப்பு உண்டு என்பதை நாம் அனைவரும் அறிந்தே இருக்கிறோம். அதனால் இந்த விதமான ஆடைகள் பாதுகாப்பு அற்றவை என்பதை நிரூபிக்க சான்றுகள் தேவையில்லை. அன்றாடம் தொடர்ந்து அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களே இதை உறுதிப்படுத்துகின்றன.

ஸ்ரீ தேசிய குற்றவியல் பதிவகத்தின் (NCRB) தரும் புள்ளிவிவரப்படி நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் 95 பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள். அதாவது ஒவ்வொரு ஒரு மணிக்கு சுமார் நான்கு பெண்கள் வீதம் இதற்கு பலியாகிறார்கள். (இது காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கணக்குப்படி. பதிவுக்கு வராத கணக்கை நீங்களே ஊகிக்க முடியும்.) இந்த குற்றங்களுக்குப் பின்னால் பல காரணங்கள் இருந்தாலும் பெண்களின் ஆடைக்குறைப்பு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
பெண்ணுரிமைவாதிகள் மௌனம்
ஸ்ரீ நமது மகளோ அல்லது உடன்பிறந்த சகோதரியோ அல்லது பெற்றெடுத்த தாயோ அல்லது கட்டிய மனைவியோ மேற்கூறப்பட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகக் கூடாது என்பதில்  நாம்  குறியாக  இருக்கிறோம்.  நமது  குடும்ப அமைப்பு சீர்குலையக் கூடாது என்பது நம்மில் ஒவ்வொருவரதும் விருப்பம். நமது குடும்பத்து பெண்கள் யாரும் அந்நியரால் காதலிக்கப் படுவதையோ அவர்களோடு ஓடிப் போவதையோ கற்பழிக்கப்படுவதையோ அந்நியனின் கர்ப்பத்தை சுமப்பதையோ நம்மில் பொறுப்புணர்வு கொண்ட யாருமே விரும்பமாட்டோம். 'விருப்பம்போல் ஆடை அணிவது பெண்களின் உரிமை!என்று வாய்கிழியப் பேசும் பெண்ணுரிமை வாதிகளாக இருந்தாலும் மாதர் சங்கங்களின் பொறுப்புதாரிகளாக இருந்தாலும் தங்கள் குடும்பத்தினர் விடயத்தில் இதை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பதை நன்றாகவே நாம் அறிவோம். ஆகயாருமே இது நம் குடும்பத்தில் நடைபெறுவதை விரும்பாவிட்டாலும் இத்தீமைக்கு முக்கிய காரணமான ஆடைக்குறைப்பை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்?

ஸ்ரீ பொதுவாகவே நமக்கு சொந்தமான ஒரு விலைமதிப்புள்ள ஒரு பொருளையோ அல்லது பணத்தையோ வெளியே எடுத்துச் செல்லவேண்டி வந்தால் அதை பத்திரமாக பொதுமக்கள் பார்வையில் படாமல் இருக்க மறைத்துதான் எடுத்துச் செல்வோம். காரணம் அதைக் கவர்ந்தெடுக்க கள்வர்கள் வெளியே காத்திருக்கிறார்கள் என்பதை நாம் நன்கு உணர்ந்திருக்கிறோம். இங்கு நம் அன்புக்குரியவர்களின் உடலை காட்சிக்கு வைத்து காமுகர்களுக்கு அழைப்பு கொடுப்பதுபோலல்லவா அமைகிறது பெண்களின் ஆடைஇவ்வாறு நம் பணத்தை விட,செல்வத்தை விட  விலைமதிக்கமுடியாத நம்மவர்களின் கற்பையும் உயிரையும் துச்சமாகக் கருதச் செய்வது எது?

 இவ்வாறு நமக்கும் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் பெரும் ஆபத்தானது என்று அறிந்தும் பெண்களின் ஆடைக்குறைப்புக் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த ஏன் சமூக ஆர்வலர்கள் யாரும் முன்வருவதில்லைபொதுமக்களும் அரசாங்கமும் சரி யாருமே இதில் அக்கறை காட்டுவதில்லைதனிமனிதர்களும் ஆன்மீக தலைவர்களும்கூட மவுனம் சாதிக்கிறார்கள்

உண்மையில் பெண் என்பவள் ஆணைவிட பாதுகாப்பாக ஆடை அணியவேண்டியவள். ஆனால் புதுமைக் கலாச்சாரத்தின் பெயரிலும்கவர்ச்சி மாயை ஊட்டியும் போலியான 'பெண்ணுரிமைஎன்ற பெயரிலும் மூளைசலவை செய்து அவளை துகிலுரித்து காட்சிப்பொருளாக்கியும் கடைச்சரக்காக்கியும் மாற்றுகிறான்  ஷைத்தான்! அதற்கு ஏற்ப பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் சினிமாக்களும் பெண்ணின் ஆடைகளுக்கான இலக்கணங்களை வடித்துக் கொடுகின்றன. வெட்க உணர்வுகளும் நீதி நியாயங்களும் மழுங்கடிக்கப்பட்டு அவற்றை அப்படியே மறுகேள்வி கேட்காமல் மக்கள் பின்பற்ற குடும்பத்தின் புனிதம் காற்றில் பறக்கின்றது.... சமூகத்தில் கள்ளக்காதல்களும் கற்பழிப்புகளும் கொலைகளும் கருக்கொலைகளும் தந்தைகள் இல்லா தலைமுறைகள் வளர்வதும் சகஜமாகின்றன.  அவனது சதிவலையில் சமூகமும் தம்மையறியாமலே வீழ்ந்து மக்கள் தங்கள் இம்மை வாழ்வின் மகிமையையும் தொலைத்துவிட்டு மறுமை வாழ்வையும் கேள்விக்குறியாக்கி வருகிறார்கள்.


உலகின் விபரீதப் போக்கை மாற்றுவோம் வாரீர்!
 மக்களின் இந்த விபரீதமான போக்கை மாற்றி அமைக்கவேண்டிய பொறுப்பு இறைவிசுவாசிகளை சார்ந்தது. ஆம் அன்பர்களேஇது இறைவனுக்கு சொந்தமான உலகம். இதை ஒரு தற்காலிக பரீட்சைக் கூடமாக இறைவன் படைத்துள்ளான். இதில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் பதிவாகின்றன. அவற்றுக்கு இறுதித் தீர்ப்பு நாளன்று விசாரணையும் உண்டு. இவ்வுலகில் நாம் இறைவனுக்குக் கீழ்படிந்து வாழக் கடமைப்பட்டுள்ளோம். இதில் தான்தோன்றித்தனமாக வாழவோ சட்டங்கள் இயற்றவோ இறைவன் மனிதனுக்கு அதிகாரம் வழங்கவில்லை என்பதை நாம் அடிப்படையாக உணரவேண்டும். அவன் விதித்த கட்டளைகளை மீறி வாழ்ந்ததன் விளைவுகளே இன்று நாம் கண்டுவரும் கொடுமைகள். ஒருவேளை நாம் இவ்வுலகில் நம் அத்துமீறல்களுக்கான தண்டனையைப் பெறாவிட்டாலும்மறுமை வாழ்வில் அதைப் பெற்றேயாக வேண்டும்.

நாளை நரக வாசிகளின் ஆடையும் நிலையும் எப்படி இருக்கும் என்பதை சற்று நினைவு கூர்தல் இங்கு நலம்:
= .... எவர் (இறைவனை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பிலிருந்து ஆடைகள் தயாரிக்கப்படும்; கொதிக்கும் நீர் அவர்கள் தலைகளின் மேல் ஊற்றப்படும். அதைக் கொண்டு அவர்களுடைய வயிறுகளிலுள்ளவையும், தோல்களும் உருக்கப்படும். இன்னும் அவர்களுக்காக இரும்பினாலான தண்டங்களும் உண்டு.
(இந்த) துக்கத்தினால் அவர்கள் அ(ந் நரகத்)தை விட்டு வெளியேற விரும்பும் போதெல்லாம், அதனுள்ளே திருப்பப்பட்டு, “எரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்” (என்று சொல்லப்படும்). (திருக்குர்ஆன் 22:19- 22)
அதேவேளையில் இறைநம்பிக்கை கொண்டு இறைவனுக்காக தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட நன்மக்களின் நிலை நேர்மாறாக இருக்கும்:
22:23. இறைநம்பிக்கை கொண்டு யார் நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சுவனபதிகளிலே புகுத்துவான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டேயிருக்கும்; அங்கே பொன்னாலான கடகங்களிலிருந்தும், முத்திலிருந்தும் ஆபரணங்கள் அணிவிக்கப்படுவார்கள்; அங்கு அவர்களுடைய ஆடைகளும் பட்டாக இருக்கும்.

  இவ்வுலக வாழ்வு அமைதிமிக்கதாக அமைய வேண்டுமானால் இறைவன் நமக்கு பரிந்துரைக்கும் வாழ்க்கை நெறிப்படி நாம் வாழ முற்படவேண்டும். அதில் தனிமனித நல்லொழுக்கம்ஆண் பெண் உறவு வரம்புகள்திருமணம் உறவுகணவன் மனைவி,தாய்தந்தைகுழந்தைகள்உறவினர் போன்றோரின் கடமைகள் மற்றும் உரிமைகள் என அனைத்தும்  வரையறுக்கப்பட்டு வழங்கப் பட்டுள்ளன. இதுவே இஸ்லாம் என்று அரபு மொழியில் அறியப்படுகிறது. இறைவன் வழங்கும் இந்த நெறிமுறைகளை மீறினால் இவ்வுலக வாழ்வில் குழப்பங்களும் கலகங்களும் நிறையும் என்பது மட்டுமல்ல... இவற்றை மீறுவோருக்கு அவர்கள் இவ்வுலகில் விளைவித்த குழப்பங்களுக்கு தண்டனையாக நரக வேதனையும் கிடைக்கும்.
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html

திருக்குர்ஆன் நற்செய்திமலர் ஆகஸ்ட் 2017 இதழ் மின்வடிவம்

திருக்குர்ஆன் நற்செய்திமலர் ஆகஸ்ட் 2017 இதழ்
இந்த இதழை கீழ்கண்ட இணைப்பிலும் நீங்கள் படிக்கலாம்
https://drive.google.com/file/d/0B3OxgRe6lIuseVFpb2NDdzdoam8/view?usp=sharing

திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிச் செய்திகளை தூய தமிழில் தாங்கி வரும் மாத இதழ் 'திருக்குர்ஆன் நற்செய்தி மலர்' 
தனி இதழ் விலை ரூ. 5
அனைத்து மதத்தவருக்கும் நான்கு மாதம் இலவசம். 
விரும்புவோர் சந்தா செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம்.
இதை உங்கள் இல்லத்தில் பெற உங்கள் முகவரியை கீழ்கண்ட எண்ணுக்கு sms அனுப்பவும்: 
9886001357

செவ்வாய், 18 ஜூலை, 2017

உண்மைகளைப் பின்பற்றுவோரும் ஊகங்களைப் பின்பற்றுவோரும்

Related image
உண்மைகளைப் பின்பற்றுவோர் நிலை
மனிதர்களைப் பற்றி அவர்களையும் இப்பிரபஞ்சத்தையும் படைத்தவன் என்ன கூறுகிறானோ அதுவே முழுமையான உண்மை ஆகும். அவனுக்கு மட்டுமே மனிதனைப் பற்றிய முழுமையான அறிவும் மனித வாழ்வின் நோக்கமும் ஆரம்பமும் முடிவும் என அனைத்தும் பக்குவமாகத் தெரியும். எனவே அந்த இறைவனையும் அவனது வழிகாட்டுதலையும் பின்பற்றி வாழ முற்படுவோருக்கு வாழ்க்கை ஒரு உறுதியான அஸ்திவாரத்தின் மேல் அமைகிறது.
கலிமா தய்யிபா  என்றால் இஸ்லாத்தின் மூலமந்திரமான லா இலாஹ இல்லல்லாஹ்  என்பதைக் குறிக்கும். அந்த நல்வாக்கியத்தின் பொருள் வணக்கத்துக்கு உரியவன் படைத்த இறைவனைத்தவிர யாருமே இல்லைஎன்பது. இதன் சிறப்பைப் பற்றி இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:      
 (கலிமா தய்யிபா எனும்) நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை (நபியே!)  நீர் கவனிக்கவில்லையா? அது மணம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது; அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும் அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும்.
  அது தன்னுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு ஒவ்வொரு காலத்திலும் தன்னுடைய கனியைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது; மக்கள் நல்லுணர்வு பெரும் பொருட்டு அல்லாஹ் (இத்தகைய) உதாரணங்களைக் கூறுகிறான் (திருக்குர்ஆன் 14:24.-25)
அதாவது இந்த உறுதிமொழியை அடிப்படையாகக்கொண்ட உண்மையான இறைக்கோட்பாடும், முறையான மறுமை நம்பிக்கையும் மக்கள் உள்ளத்தில் விதைக்கப் படுமானால் அது சமூகத்திற்கு அள்ளி வரும் நன்மைகள் ஏராளம் ஏராளம்!  இந்தச் சொல் உறுதியாக இவ்வுலக மக்களால் பின்பற்றப் பட்டால்- அதாவது இந்த உறுதிமொழியை  மக்கள் மொழிந்து அதன்படி நடப்பார்களேயானால் அங்கு ஆக்கபூர்வமான சமூகப் புரட்சிகள் ஏற்படும். தனிநபர் நல்லொழுக்கம், மனித சமத்துவம், சகோதரத்துவம்,  மனித உரிமை மீட்புசுயமரியாதை மீட்பு, பெண்ணுரிமைகள் மீட்புபெண்சிசுக்கொலை ஒழிப்புவரதட்சணை ஒழிப்பு, பாலியல் கொடுமைகளில் இருந்து பாதுகாப்பு,  விபச்சார ஒழிப்பு, குடும்ப அமைப்பின் பாதுகாப்பு, வட்டி ஒழிப்பு, வறுமை ஒழிப்புஇடைத்தரகர் ஒழிப்பு மூடநம்பிக்கை ஒழிப்பு ஆன்மீகத்தின் பெயரால் ஆதிக்கம் ஒழிப்பு, ஆன்மீகத்தின் பெயரால் சுரண்டல் ஒழிப்பு போன்ற பற்பல நன்மைகள் சமூகத்தில் உண்டாகின்றன. அது மட்டுமல்லாமல் இதன் அடிப்படையில் இவ்வுலக வாழ்வைக் கழித்தவர்களுக்கு பரிசாக மறுமையில் சொர்க்கம் என்ற நிரந்தர இன்பங்கள் நிறைந்த வாழ்விடமும் கிடைக்கிறது.
ஊகங்களைப் பின்பற்றுவோர் நிலை
மாறாக இம்மாபெரும் பிரபஞ்சத்தில் உள்ள ஒரு அற்பக் கோளான பூமியின்மேல் ஆறடி உயரம் நின்றுகொண்டு அனைத்தையும் அறிந்தவர்களைப் போலப் பிதற்றும் சில அற்ப மனிதர்களின் ஊகங்களையும் பொய்களையும் அல்லது அவர்கள் வகுத்த இசங்களையும் கொள்கைகளையும் பின்பற்றுவோரால் ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடவோ மக்களிடையே பயனுள்ள சீர்திருத்தங்கள் மேற்கொள்ளவோ முடிவதில்லை. ஒரு உறுதியான நிலையான கொள்கை இல்லாமையால் அவர்களால் இனம், மொழி, இடம், நிறம் போன்றவற்றால் இயல்பாகவே பிரிந்து நிற்கும் மக்களிடையே பிணைப்பை ஏற்படுத்தவோ முடிவதில்லை. இறைவன் தன் தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் மனித குல நன்மைக்காக போதிக்கும் உண்மைகளை மறுத்து இவர்களாகவே உண்டாக்கிக்கொண்ட இசங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் பூமியில் நிலைத்து நிற்கும் தன்மை கிடையாது. அவை தற்காலிகமாக வெற்றி பெறுவதைப் போல ஒரு மாயையை உண்டாக்கினாலும் காலப்போக்கில் அழிந்து விடுவதையே நாம் காணமுடிகிறது.
14:26. (சத்தியத்தை மறுபோரின்) கெட்ட வாக்கியத்திற்கு உதாரணம் கெட்ட மரமாகும்; பூமியின் மேல் பாகத்திலிருந்தும் (அதன் வேர்) பிடுங்கப்பட்டிருக்கும்; அதற்கு நிலைத்து நிற்கும் தன்மையுமில்லை.
14:27. எவர்கள் இறைநம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களை இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதி படுத்துகின்றான் - இன்னும், அநியாயக் காரர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விடுகிறான்; மேலும் அல்லாஹ், தான் எதை நாடுகின்றானோ அதைச் செய்கின்றான்.  
 (அல்லாஹ் என்றால் ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்பது பொருள்.  
இவ்வுலகில் அவர்கள் தங்கள் இசங்களை நம்பி இறைமறுப்பைக் கைக்கொள்வதால் அவர்களுடைய மறுமை வாழ்க்கை மிகவும் பரிதாபத்துக்குரியதாக ஆகிவிடுகிறது. இவ்வுலகில் அவர்களுக்கு மறுமையைப் பற்றியும் அங்கு நடக்கவுள்ள நீதி விசாரணை பற்றியும் சொர்க்கம் மற்றும் நரகம் பற்றியும் அவர்களுக்கு நினைவூட்டப்பட்டால் அவற்றை அவர்கள் பரிகாசமாகவே எடுத்துக் கொள்கிறார்கள்.
இவ்வுலகைப் படைத்தவன் அவர்களைப் பற்றி தன் வேதத்தில் இவ்வாறு கூறுகிறான்:
45:7. (சத்தியத்தை புறக்கணித்துப்) பொய்க் கற்பனை செய்யும் பாவிகள் யாவருக்கும் கேடுதான்.
45:8. தன் மீது ஓதிக்காட்டப்படும் அல்லாஹ்வுடைய வசனங்களைக் கேட்கிறான்; பின்பு பெருமையடித்துக் கொண்டு அவன் அதைக் கேளாதது போல் (தன் நிராகரிப்பில்) பிடிவாதம் செய்கிறான்; அ(த்தகைய)வனுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயம் கூறுவீராக.
45:9. நம் வசனங்களிலிருந்து ஏதாவது ஒன்றை அவன் அறிந்து கொண்டால், அதைப் பரிகாசமாக எடுத்துக் கொள்கிறான்; அ(த்தகைய)வர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு.
45:10. அவர்களுக்கு முன்னால் நரகம் இருக்கிறது; அவர்கள் சம்பாதித்துக் கொண்டதில் எப்பொருளும் அவர்களுக்குப் பயன் தராது; அல்லாஹ்வையன்றி, எவற்றை அவர்கள் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்களோ அவையும் (அவர்களுக்குப் பயன் தராது); மேலும், அவர்களுக்கு மாபெரும் வேதனையுமுண்டு.
ஒவ்வொரு காலகட்டத்துக்கும் இறைவன் தனது வழிகாட்டுதலை தன் தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் அனுப்பி உள்ளான். இவற்றைப் பின்பற்றி அதனடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களுக்கு சொர்க்கமும் மறுப்போருக்கு நரகமும் மறுமையில் விதிக்கப்படுகின்றன. அந்தவகையில் இன்று வாழும் மக்களுக்காக அனுப்பப்பட்ட வேதமே இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மூலமாக அனுப்பப்பட்ட திருக்குர்ஆன்! அதையே உறுதியான மொழிகளில் சொல்கிறான்:

45:11. இது (குர்ஆன்)தான் நேர்வழிகாட்டியாகும். எவர்கள் தம்முடைய இறைவனின் வசனங்களை நிராகரித்து விட்டார்களோ, அவர்களுக்கு நோவினை மிகுந்த கடினமான வேதனையுண்டு.  

புதன், 12 ஜூலை, 2017

தடைகளை வெல்லும் மக்கள் இயக்கம்!

கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் ஒப்பற்ற உலகப் புரட்சி இது. யாராலும் மறுக்கமுடியாதது. மறைக்கவும் முடியாதது. திருக்குர்ஆன் மற்றும் முஹம்மது நபி அவர்களின் வரவும் இவ்வுலகில் நிகழ்த்திய மாற்றங்களும் சீர்திருத்தங்களும் கொஞ்சநஞ்சமல்ல! உலகெங்கும் கோடானுகோடி உள்ளங்கள் சீர்திருந்துவதற்கும் குடும்பங்கள் புதுவாழ்வு காண்பதற்கும் பல்லாயிரக்கணக்கான சமூகங்கள் தங்களைப் பீடித்திருந்த இன, நிற, ஜாதி, போன்ற அடிமைத்தளைகளிலிருந்து விடுதலை பெற்று சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்கும் காரணமாக அமைந்தன திருக்குர்ஆனின் போதனைகளும் அதைக் கொண்டுவந்த முஹம்மது நபிகளாரின் முன்மாதிரி வாழ்க்கை நடைமுறைகளும்!
மாற்றங்களை நோக்கி மக்கள் பயணித்தபோது ஆதிக்க சக்திகள் ஆட்டம் கண்டன. இஸ்லாத்தின் எழுச்சியைத் தடுக்க பல்வேறு தந்திரங்கள் கையாண்டார்கள். இஸ்லாத்தைப் பற்றி கட்டுக்கதைகளையும் பொய்களையும் கட்டவிழ்த்துவிட்டனர். இஸ்லாத்தைக் காட்டுமிராண்டி மார்க்கமாக சித்தரித்தனர். நபிகளாரைப் பற்றி அவதூறுகள் கற்பனை செய்து உருவாக்கிப் பரப்பினார்கள்.  இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோரை சித்திரவதைகளுக்கு உட்படுத்தினார்கள். கொன்று குவித்தார்கள். இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து பரப்புரைகள் மேற்கொண்டார்கள். எண்ணெய் வளங்கள் நிறைந்த இஸ்லாமிய நாடுகளை சதா போர்முனையில் நிறுத்த சதித்திட்டங்கள் மேற்கொண்டார்கள்.
ஆதிக்க சக்திகள் அனைத்துத் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும் கையாண்டபோதும் இந்த இறைமார்க்கத்தின் வளர்ச்சியை எள்ளளவும் அவர்களால் தடுத்திட முடியவில்லை என்பதே உண்மை! 
'தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை (ஊதி) அணைத்துவிட  அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் இறைமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவன் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.' (அல்-குர்ஆன் 9:32) 
 இவ்வாறு இஸ்லாம் என்ற மார்க்கம் இதுவரை உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அதிகமானோரை இன்று ஈர்த்து நிற்பதும் தொடர்ந்து அதிகமானோரை ஈர்த்து வருவதும் இம்மார்க்கம் இவ்வுலகைப் படைத்தவனால் அருளப்பட்ட ஒன்று என்பதற்குப் போதிய சான்றாக உள்ளது.
அவதூறுகளைத் துடைத்தெறிந்த நல்லோர்  
ஆதிக்க சக்திகளால் அவ்வப்போது  அவதூறுகள் பல அள்ளிவீசப்பட்டாலும் அவை கற்றறிந்த நடுநிலை பேணிய மேதைகளால் இவை துடைத்தெறியப் பட்டும் வந்துள்ளன. ஆங்கில தத்துவவாதியும் தனது "The Heroes" என்ற புத்தகத்திற்காக நோபெல் பரிசு பெற்றவருமான  தாமஸ் கார்லைல் (Thomas Carlyle) பின்வருமாறு எழுதுகிறார்:
"இஸ்லாம் ஒரு பொய்யான மார்க்கம் என்றும் முஹம்மது ஒரு பொய்யர் மற்றும் ஏமாற்றுக்காரர் என்றும் ஐரோப்பியர்கள் கூறி பரப்புரை செய்தது மிகப்பெரிய அவமானத்துக்குரிய ஒரு செயலாகும். அவர் தனது கொள்கைகளில் அசைக்கமுடியாத உறுதியோடு இருந்தார் என்பதையும், அன்பு, கருணை, பரிவு, பயபக்தி, நேர்மை, ஆண்மை, கடின உழைப்பு, நம்பகத்தன்மை இப்படிப்பட்ட நற்குணங்களோடு திகழ்ந்தார் என்பதையுமே நம்மால் காணமுடிகிறது. இந்த நற்பண்புகளோடு மற்றவர்களுடன் தாராள மனதோடும் விட்டுக்கொடுக்கும் குணத்துடனும் பெருந்தன்மையோடும் மகிழ்வோடும் நடந்து கொண்டுள்ளார். பெரும் தலைவராக  இருந்தும் மக்களோடு மக்களாக ஒன்று கலந்து வாழ்ந்துள்ளார். சிலவேளைகளில் தனது தோழர்களோடு நகைச்சுவை உணர்வோடு நடந்து கொண்டிருக்கிறார். அவர்களை கேலியும் செய்திருக்கிறார். அவர் வாய்மை, நீதி, துடிப்பு, தூய்மை, பெருந்தன்மை, காரிய முனைப்பு போன்றவற்றின் உறைவிடமாகத் திகழ்ந்துள்ளார்.  உள்ளுக்குள் ஒளிக்கிரணங்களை தாங்கி நின்றது போல காரிருள் சூழ்ந்த  இரவுகளிலும்   அவரது முகம் ஒளிமயமானதாக விளங்கியது. அவர் பள்ளிக்கூடம் செல்லவுமில்லை. எந்த ஆசிரியரும் அவருக்கு பாடம் கற்பிக்கவில்லை. அவருக்கு அதற்கான தேவையும் இருந்ததில்லை." 

Thomas Carlyle
“நம்மவர்கள் ரொம்ப உற்சாகமாக முஹம்மதைப் பற்றிச் சொன்ன பொய்களும் அவதூறுகளும் நம்மையே கேவலப்படுத்துவதாக உள்ளது”.
       – தாமஸ் கார்லைல் – (Heroes and Hero Worship and the Heroic in History, 1840)

“சண்டையும் சச்சரவும் நிறைந்த குலம் கோத்திரங்களையும், நாடோடிகளையும் தமது முயற்சியால் இணைத்து ஒரு இருபது ஆண்டுக்குள்ளேயே நாகரிகம் மிகுந்த - ஒரு பலம் பொருந்திய சமூகமாக எவ்வாறுதான் அவரால் உருவாக்க முடிந்ததோ!!”
        தாமஸ் கார்லைல் (Thomas_Carlyle), Heroes_and_Hero_Worship

நபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்குப் புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை. கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனேயாகும்.
       – தாமஸ் கார்லைல் – (Heroes and Hero Worship and the Heroic in History)

ஒரு வாழ்வியல் நெறியை அல்லது மார்கத்தைப் பற்றி அதை ஏற்றவர்கள் கூறும்போது உணர்ச்சிவசப்பட்டு கூறப்படும் கருத்துக்கள் இருக்க வாய்ப்புண்டு. அவ்வாறு இல்லாமல்  இருக்க நடுநிலை பேணிய நல்லோர்கள் நபிகளாரைப்  பற்றியும் இஸ்லாம் மற்றும்  திருக்குர்ஆன் குறித்து முன்வைத்த கருத்துக்களில் மேலும் சிலவற்றை கீழே காண்போம்:


Annie Besant
அரேபியாவின் இந்தத் தூதருடையவாழ்க்கையையும், ஒழுக்கப் பண்புகளையும், தூய நடத்தையையும் படிப்பவர்கள் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை அறிந்தவர்களுக்கு அவர்மீது மரியாதைத் தவிர வேறு எதுவும் ஏற்படாது. அந்த வல்லமை மிக்க மாபெரும் இறைத் தூதர்களில் ஒருவரான இறுதித் தூதரைக் குறித்து உயர்வான எண்ணமே ஏற்படும். எனது இந்த நூலில் நான் பலருக்கும் தெரிந்த பல விஷயங்களையே சொல்லி இருக்கிறேன் என்றாலும் நானே அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைத் திரும்பத் திரும்பப் படிக்கும் ஒவ்வொரு முறையும் ஆற்றல் மிக்க அந்த அரபு போதகரின் மீது புதிய ஒரு மதிப்பும், புதிய ஒரு மரியாதை உணர்வும் ஏற்படுவதை நான் உணர்கிறேன்.
       – அன்னி பெசன்ட் (Annie Besant) - The life and Teachings of Mohamed 1932, page 4

இந்த உலகம் சார்ந்த இருபது சாம்ராஜ்ஜியங்களையும் மறுமை சார்ந்த ஆன்மீக சாம்ராஜ்ஜியத்தையும் நிறுவிய ஒருவர் முஹம்மத் அவர்கள்!மனிதனுடைய பெருமையையும் புகழையும் அளக்கக்கூடிய எந்த அளவுகோலை வைத்துப் பார்த்தாலும், முஹம்மதைவிட சிறந்த ஒருவரை நாம் காட்டமுடியாது!
       – லா மார்ட்டின், ஹிஸ்டரி தெலா துர்கி (ஃப்ரெஞ்ச்), பாரிஸ்,1854, பாகம் 11, பக்கங்கள் 276-277.

தத்துவ போதகர், சொற்பொழிவாளர், இறைத்தூதர், சட்ட நிபுணர், மாபெரும் போர் வீரர், கருத்துக்களை வென்ற வரலாற்று வீரர், பகுத்தறிவுப் பூர்வமான கொள்கைகள் நம்பிக்கைகளை நிலை நாட்டியவர், மாயைகள்/கவர்ச்சிகள் இல்லாத பகுத்தறிவு ரீதியில் ஒரு கொள்கை வழி நாகரீகத்தை உருவாக்கி அளித்த மாமேதை, ஒரே ஆன்மீகத் தலைமையில் இருபது பூவுலகப் பேரரசுகளின் நிறுவனர்தாம் முஹம்மத் அவர்கள்.
       – லா மார்ட்டின்(Lamartine) – 

Alphonse Lamartine
“உயர்ந்த இலட்சியம், குறைவான வசதிகள், வியப்பூட்டும் வெற்றி ஆகிய இம்மூன்றும்தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் இந்த நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் "முஹம்மத்" உடன் ஒப்பிட எவருக்குத்தான் துணிச்சல் வரும்? புகழ் மிக்க மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள்; சட்டங்களை இயற்றினார்கள்; பேரரசுகளை நிறுவினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவைதாம்! பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்துவிட்ட உலகாதாயக் கோட்டைகளைத்தான் அவர்களால் நிறுவமுடிந்தது. ஆனால் முஹம்மத் போர்ப்படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள் ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டும் வெற்றி கொள்ளவில்லை; அவற்றுடன் அன்றைய உலகின் மூன்றிலொரு நிலப்பரப்பில் வசித்து வந்த கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களையும் ஈர்த்தார். வழிபாட்டுத் தலங்களையும், சமய நெறிகளையும், பல்வேறு கருத்துகளையும், கொள்கைகளையும், நம்பிக்கைகளையும் ஆன்மாக்களையும் ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களை பதித்தார். வெற்றியின்போது அவர் காட்டிய பொறுமை, பணிவு, சகிப்புத்தன்மை தாம் ஏற்றுக்கொண்ட ஒரு கருத்துக்காக தம்மையே முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட அவரது உயர் விருப்பம், அரசாட்சியை அடைந்திட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் இல்லாமல் உலகப் பற்றற்று வாழ்ந்து வந்த நிலை, அவரது முடிவில்லாத தொழுகைகள், பிரார்த்தனைகள், இறைவனுடனான மெய்ஞ்ஞான உரையாடல்கள், அவரது மரணம், மரணத்திற்கு பின்னரும் அவர் அடைந்த வெற்றி இவையனைத்துமே அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்றோ மோசடி குணம் உடையவர் என்றோ பறை சாற்றிடவில்லை. மாறாக, சமயக்கொள்கை ஒன்றை நிலைநாட்டிட அவருக்கிருந்த மனோ உறுதியைத்தான் பறைசாற்றுகின்றன.”
 அல்போன்சு லாமார்ட்டின் - (Alphonse Lamartine - Historie de la Turquie, Paris, 1854, Vol II,pp 276-277)

Diwan Chand Sharma
முஹம்மது இரக்கமே உருவானவர். அவரது இரக்கம் அவரைச் சுற்றியுள்ளவர்களைக் கவர்ந்திழுத்தது.
  – திவான் சந்த் ஷர்மா (D.C.Sharma – The Prophets of the East Calcutta 1935 pp 12)

அன்பின் ஆன்மாவாக முஹம்மத் இருந்தார். அவருடைய தாக்கம் உடன் இருந்தவர்களால் மறக்க முடியாததாக இருந்தது.
– திவான் சந்த் ஷர்மா, The Prophets of the East, கொல்கத்தா, 1935, பக்கம் 122.


= நபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முற்றுமுழுதும் ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும்! மனித குலம் முழுவதும் பின்பற்றத்தக்க உயரிய கோட்பாடுகளை உடையதுநபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாம். அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத் தன்மையை தெளிவாக்கியுள்ளது.
       – டாக்டர் ஜான்சன் 

ஆட்சி புரியும் அமைச்சர்கள் (முஹம்மது) நபிபெருமான் வகுத்த சீர்திருத்தங்களை பின்பற்றி நடக்கவேண்டும்.
       –  காந்திஜி 
  

Gandhiji
= “மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் ஒருவரின் மிகச்சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல்கொண்டேன். (அதை படித்தறியும்போது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தை பெற்றுத் தந்தது வாள் பலமல்ல என்று முன்னெப்போதையும் விட அதிகமாக நான் உணர்ந்தேன். முஹம்மது நபி நாயகத்தின்மாறாத எளிமை, தம்மை பெரிதாக கருதாமல் சாதாரணமானவராக நடந்துக் கொள்ளும் உயர்பண்பு, எந்நிலையிலும் வாக்குறுதியை பேணிக் காத்த தன்மை, தம் தோழர்கள் மீது அவர் கொண்டிருந்த ஆழிய அன்பு, அவரது அஞ்சாமை, இறைவன் மீதும் தமது பிரச்சார பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவைதாம் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலக சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டுவந்து குவித்தன. எல்லாத்தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவைதாம் காரணமே தவிர வாள் பலம் அல்ல. நபிகள் நாயகம் பற்றிய இரண்டாம் பாகத்தை நான் படித்து முடித்து மூடியபோது, அந்த மகாவாழ்க்கை பற்றிப் படிக்க மேலும் இல்லையே என்று எனக்கு வருத்தமாக இருந்தது!”
         மகாத்மா காந்தி – 'யங் இந்தியா’ (Young India) பத்திரிக்கையில் 1924ல் எழுதியது.

Michael H. Hart
= “உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலி முதன்மையானவராக, முகம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம். சமயஞ்சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே”
  – M.H.Hart, 'The 100! A ranking of the most influential persons in history' New York, 1978)

= சமய ரீதியாகவும், சமயம் சாராத லௌகீகம் சார்ந்த வகையிலும் வெற்றியடைந்த ஒரு மனிதரைக் காட்ட முடியுமென்றால் அது முஹம்மதுதான். அதனால்தான் இந்த உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 100 மாமனிதர்களில் முதலாமவராக நான் முஹம்மதைத் தேர்ந்தெடுத்தேன்.
       – மைக்கேல் ஹார்ட், த ஹண்ட்ரட், நியூயார்க், ஹார்ட் பப்ளிஷிங் கம்பனி, 1978, பக்கம் 33. 

Bosworth Smith
= போப்புக்கான பாசாங்குகளும், சீசருக்கான படையணியினரும், பாதுகாவலர்களும், அரண்மனையும், நிரந்தர வருமானவும் இல்லாமல், ஒரே சமயத்தில் சீசராகவும் போப்பாகவும் இருந்தவர்முஹம்மது. தெய்வீக கட்டளைக் கொண்டு ஆண்ட ஒரு மனிதன் உண்டென்றால் அது முஹம்மதுதான்.
       – பாஸ்வொர்த் ஸ்மித், Mohammad and Mohammadanism, லண்டன்,1874, பக்கம் 92.

Bernard Shaw
முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டுவிடும் என்று எதிர்பார்க்கிறேன்.
    ஜார்ஜ் பெர்னாட்ஷா –

முஹம்மதை நான் அலசி ஆராய்ந்து பார்த்து விட்டேன். அவர் மனிதகுலத்தைக் காக்க வந்தவர் (Saviour of Humanity)இந்த நவீன உலகின் சர்வாதிகாரியாக அவரைப் போன்ற ஒருவர் வருவாரேயானால், இன்றைக்கு மிகவும் அவசியமான தேவைகளாக இருக்கின்ற அமைதியையும் சந்தோஷத்தையும் கொண்டு வந்து பிரச்சனைகளைத் தீர்க்க அவரால் மட்டுமே முடியும். இன்று இருப்பதுபோல, வருங்காலத்திலும் முஹம்மதின் மார்க்கம் ஐரோப்பாவால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மார்க்கமாகவே இருக்கும் என்று நான் தீர்க்கதரிசனம் சொல்வேன். அடுத்த நூறு ஆண்டுகளில் இங்கிலாந்தை, ஏன் இங்கிலாந்தை, ஐரோப்பாவையே ஆளக்கூடிய வாய்ப்பு ஒரு மதத்துக்கு இருக்குமானால் அது இஸ்லாமாகத்தான் இருக்கமுடியும்.
       –  ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, த ஜெனியுன் இஸ்லாம்.The Genuine Islam, Singapore, Vol. 1, No. 8.1936).


ஐரோப்பியர்களாகிய நாம் நமது அனைத்து ஆற்றல்களையும் பயன்படுத்தி முஹம்மதின் சாதனைகளை முறியடிக்கவோ முந்தவோ முடியவில்லை என்பதே உண்மை. மானிட சரித்திரம் முழுவதையும் ஆராய்ந்ததில் இறுதியாக முஹம்மது அவர்களை மட்டுமே மானிடற்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகக் காண முடிந்தது. உண்மையில் முஹம்மது ஓரிறைக் கொள்கை மூலம் முழு உலகையும் கீழடக்கினார் என்றே சொல்லவேண்டும்.
ஜோன் வுல்ப்கங்க் (Johann Wolfgang von Goethe), என்ற ஜெர்மனி எழுத்தாளர்- 


இறைத்தூதர்களிலேயே அதிகமாக வெற்றியடைந்தவர்முஹம்மதுதான்.
       – என்சைக்ளோபீடியா ப்ரிட்டானிகா 

Napoleon
= திருக்குர்ஆனுக்கும் தூதர் முஹம்மது அவர்களுக்கும் என் விசுவாசத்தை வழங்குகிறேன். குர்ஆனின் கொள்கைக்கு இணங்க ஒரே விதமான ஆட்சியை உலகெங்கும் நிறுவக்கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை.
       – நெப்போலியன் 

= துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கிவிட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல்நாட்டு ஆசிரியர்கள், ‘முஹம்மது ஒரு சரித்திர நாயகர்’ என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக் கொள்கிறார்களே, அப்படியின்றி, அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம்அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள்.
       – எஸ். எச். லீடர்    

= முஹம்மது நபி, ஒரு மார்க்கத்தை உண்டாக்கியது மட்டுமல்ல, தவறான குருட்டு நம்பிக்கையிலே சிக்கிக் கிடந்தவர்களை விடுவித்துக் காப்பாற்றி, நல்லதொரு சமுதாயத்தையும் உருவாக்கினார். நபிகள் நாயகம் அவர்களுடைய காலத்தில் அவற்றிற்கு நெஞ்சுரம் அதிகம் தேவையாக இருந்தது! “பூமி உருண்டையானது; சூரியனை பூமி சுற்றி வருகிறது” என்கின்ற உண்மைகளையெல்லாம் அறியாத – விஞ்ஞானத் தெளிவு இல்லாத காலம் அது! மக்கள் பய உணர்ச்சியும் காட்டுமிராண்டித்தனமும் கொண்டிருந்த காலம்! இருட்டுக் காலத்தில் நல்ல ஒளியைத் தந்தார் முஹம்மது நபி. 

C. N. Annadurai
(Arignar Anna)

நபிகள் நாயகம் அவர்களுடைய வரலாறு வீரத்துக்கு ஒரு ஊற்று! சமுதாயத்துக்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு! நபிகள் நாயகம்சொன்னார். சொல்லியபடி நடக்கிறேன் என்று நடந்து காட்டினார்! அப்படி மற்றவர்களும் நடந்து காட்டினால்தான் உலகத்தில் சாந்தி, சமாதானம், சமரசம் எல்லாம் நிலவும்.

நபிகள் நாயகத்தின் போதனைகளில் ஒன்று, “ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது” என்பதாகும். இந்தப் போதனையை நான் நெஞ்சம் நெக்குருக எண்ணிப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.பெருமான் நபிகள் இஸ்லாத்தின் இனிய சங்க நாதத்தை உலகின் நாலா பக்கமும் ஒலிக்கச் செய்வதற்குப் பட்ட துயர்கள், தொட்ட தொல்லைகள், தியாகம் பலகண்ட தியாகத் தழும்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல. அண்ணல் நபிகள் நாயகத்தின் அறப்பணி, அகிலத்தை தரமுடையதாக்கவும், திறமுடையதாக்கவும் கிடைத்த திருப்பணி! இப்பணியை எண்ணி பூரிக்க நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டவர்களாவோம்.
       – அறிஞர் அண்ணா – 


=இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, 'ஒருவனே தேவன்' என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறை நம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமைக் கொண்டாடியமுஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவர் மறுக்க முடியும்?
       – வாஷிங்டன் இர்விங் –



Washington Irving
= ராணுவ வெற்றிகளின்போது, மற்றவர்களிடம் ஏற்படுவதைப்போல, பெருமையோ வீண் பேச்சோமுஹம்மதுவிடம் ஏற்படவில்லை. துன்பத்திலும் துயரத்திலும் உழன்றுக் கொண்டிருந்தபோது எப்படி எளிமையாகத் தோன்றினாரோ, நடந்து கொண்டாரோ, அப்படியே வெற்றியின் உச்சியில் இருந்தபோதும் இருந்தார். அநாவசியமாக தனக்கு மரியாதை தரப்படுவதை அவர் வெறுத்தார்.
       – வாஷிங்டன் இர்விங், Life of Muhammad, நியூயார்க், 1920.

Edward Gibbon
= அறம் செய்வது எப்படி என்பதைப் பற்றி தெளிவாக திட்டவட்டமாக வரையறுத்துக் கூறிய ஒரே ஒரு சட்டமேதையாக விளங்குபவர் முஹம்மது நபிஒருவரே.
       – எட்வர்டு கிப்பன் 

Sarojini Nayudu
= எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஓட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரச்சாரம் செய்யப்பட்டது. மேல்நாடுகள் எதையெல்லாம் புதிய கருத்துக்கள் என்றும் மகத்தான சாதனைகள் என்றும் கூறுகின்றனவோ, அவையெல்லாம் அந்த அரேபியாவின் பாலைவனச் சோலையிலே விதைக்கப்பெற்ற வித்துக்களின் விருட்சங்களேயன்றி அவற்றில் புதியது ஒன்றுமில்லை.
       – கவிக்குயில் சரோஜினி நாயுடு 

Dr. Ambedkar


= பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதன் மனிதனாக வாழ வழி செய்த முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தைகள்  கிடையாது.
 டாக்டர் அம்பேத்கார் 



Leo Tolstoy
நாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட மக்களைச் சீர்திருத்த முனைகிறவர்கள் படுகிற பாட்டைப் பார்க்கும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்துக் கொண்டிருந்த காலத்தில் முஹம்மது நபி அவர்கள் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும் முரடர்களுக்கும் சகிப்புத் தன்மையும் நேர்மையையும் வழங்கி, அவர்களை மெய்யான வாழ்க்கையின் பக்கம் இழுத்துவந்து வெற்றியை நிலைபெறச் செய்த பெருமை வெறும் நாவினால் புகழ்ந்து விடக்கூடியதல்ல.
       – டால்ஸ்டாய் 

William Moore
சர்வ சக்தியும் படைத்த இறைவன் தனக்குத் துணையாக நிற்கிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நபிகள் நாயகம் அவர்களுக்கு இல்லாதிருந்தால் இவ்வளவு பிரமாண்டமான சாதனைகளை அவர் சாதித்திருக்க முடியாது.
       – வில்லியம்மூர் 

இஸ்லாத்தின் நிறுவனர் (முஹம்மத் நபி) உடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது.
       – ஜி.ஜி. கெல்லட் –    

நன்றி: http://payanikkumpaathai.blogspot.in

படங்கள்: இணையம்

நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html


இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது? http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html